கிடைப்பதறிந்தே தேவைகள் அதிகரிக்கிறது. பத்தையூராளை விரும்புகிற யாரையும், அவள் கவனத்தில் கொள்வதில்லை. யார் தேவை என்பதை அவளே முடிவுசெய்பவளாக இருந்தாள். இப்படியொரு பெரும் மனம் அவளிடமிருந்ததை, முக்கு கடைகளில் பேசிக்கொண்டிருப்பார்கள். அவள் செயல்பாடுகள் எப்படியிருந்தாலும் அவளைத் தொடரும் நடவடிகைக்களை, மீசையை திருக்கும் கீழ, மேல தெரு ஆண்கள் விடவில்லை. என்றாவது ஒரு நாள் இரங்கிவர மாட்டாளா என்பதாக அது தொடர்ந்தது.
வாய்க்காலில் துணி துவைக்கும்போதோ, ஒரு கிலோமீட்டர் நடந்து அவள் தனியாக ஆற்றுக்கு செல்லும்போதோ, அவளிடம் பேச வேண்டும் என்றே ஒரு கூட்டம் அலைந்தது.
'என்னா ஆத்துக்கா'
'பின்ன எப்படி தெரியுது'
'இல்ல கேட்டேன்'
அவ்வளவுதான், அதோடு பேச்சை முடித்துவிடுவாள். யாரிடம் தொடர வேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும். கார்சாண்டில் கடைவைத்திருக்கும் ஊழைக்காதன், அவளை கெஞ்சி, கால் கையில் விழுந்து அனுபவித்ததாகச் சொல்லியிருக்கிறான். ஊரில் அவன் இதை தம்பட்டம் அடித்ததில் இருந்து, இன்னும் பலருக்கு ஏக்கம் ஏக்கமாகவே இருந்தது.
இப்போது அவள் தன்னை மாற்றியிருக்கிறாள். மகன் வளர்ந்துவிட்டான். நான்கைந்து பசுக்கள், ஏழெட்டு செம்மறியோடு அவள் வாழ்க்கைச் சென்றுகொண்டிருக்கிறது.
கூட்டாஞ்சோறும் காண துவையலும் வயிற்றை அடைத்தாலும், இன்னும் வேண்டுமாய் இருந்தது ருசி. இங்கேயே இரவை கழித்துவிட்டு செல்ல முடிவு செய்தார்கள். இருட்டு மெல்ல சூழத் தொடங்கியது. உ.மகாளியும் கேசரியும் தீப்பந்தங்களை நான்கு பக்கம் சொருகி வைத்துவிட்டு, மணலில் படுத்தார்கள். மூன்று பேர் முதலில் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் என்பதும் பிறகு அவர்கள் முழித்துக்கொள்ள, இவர்கள் தூங்க வேண்டும் என்றும் முடிவானது.
உ.மகாளியும் கந்தையாவும் முழித்துக்கொண்டிருந்தார்கள். காட்டின் இருட்டு பயத்துக்குப் பதிலாக, ரசிக்கச் சொன்னது அவர்களை. எங்கிருந்தோ வரும் புரியாத சத்தம் இதமாக இருந்தது. கூடவே, உய்ய்ய் என்ற வண்டுகளின் ஒலியும். அருவியில் தண்ணீர் குறைவுதான் என்றாலும் சர்ர்ர் சத்தம் வந்துகொண்டிருந்தது.
இவர்கள் இருக்கும் இடத்துக்கு மேல் பக்கம், ஓநாய்களின் இரைச்சல் கேட்டது. அல்லது ஏதோ ஒன்று ஏதோ ஒன்றை அடித்து முடித்திருக்கலாம். சிறிது நேரத்தில் சத்தம் மெது மெதுவாக அடங்கி முடிந்தது. ஓநாய் இறந்திருக்கலாம். அதை எந்த மிருகம் அடித்திருக்கும் என்கிற ஆவல் உ.மகாளிக்கு. சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்தான். செடி, செத்தைகள் அசைவது கேட்டது.
'போய் பாக்குமா' என்றான்.
'பாக்குமாவா? செந்நாய் மாதிரி எதுவும் நின்னா, கொட்டைய கவ்விரும்ல, தெரிஞ்சுக்கோ'
'இன்னா, அறுவா எதுக்கிருக்கு கையில'
'ஆங்... கிழிச்சே... அது வந்து பாய்ஞ்ச பெறவு, அரிவாளை எங்க போய் எடுக்க'
'என்னண்ணே செந்நாய்க்கு இந்தாப் பயப்படு பயப்படுத'
'நீ பெரிய வீரன்தாண்டே... இந்த காட்டுக்கு ஒண்ணு ரெண்டு தடவ இல்லல, நாலு வருஷமா வந்திட்டிருக்கேன். எனக்கு தெரியாதோல... பொத்திட்டு இருப்பியா...'
'நீ ஒரு வெலங்காதவன், செரி, எவ்வளவு நேரந்தான் இப்படியே இருக்க. அவங்க தூங்குததை பாத்தா எனக்கும் தூக்கம் வந்துரும்'
'இந்தா தாயத்தை போடுவோம்'
மணலில் தாயக்கட்டத்தை வரைந்தான் கந்தையா. காய்களுக்குப் பதிலாக, வெவ்வேறு வண்ணங்களிலான கூழாங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
வீட்டில் பீடி சுற்றும் பெண்கள், வளவில் பெரிய வீடான, வீரமணி வீட்டு திண்ணையில் இருந்துதான் சுற்றுவார்கள். கீழ், மேல், வட சுவர் ஓரங்களில் அவர்கள் உட்கார்ந்துகொள்வார்கள். தொடையில் பீடி தட்டு. இரவு ஒன்பது மணிவாக்கில் கரண்ட் அணைந்து எரியும். அதுவரைதான் பீடி சுற்றல். பிறகு தாயம் விளையாட ஆரம்பிப்பாகள்.
உ.மகாளி நேரம் போகாத நாட்களில் இவர்களோடு வந்து அரட்டையடிப்பான்.
'ஏல உச்சி, உனக்கு செக்க செவேல்னு ஒரு பொணு பாத்திரும்ல' என்பாள் சுந்தரி அத்தை.
'செவப்பு சேலை உடுத்துனவளையா?' என்று ஆரம்பிப்பாள் முத்தம்மா பாட்டி.
இவன் என்ன சொன்னாலும் ஏதாவது ஒரு கொக்கியை போட்டு வம்படிப்பார்கள். இந்த வம்படித்தலில்தான் இந்த விளையாட்டை கற்றான்.
இரண்டு மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு, வாய் பிளக்க கொட்டாவி வந்து இம்சித்தது. கந்தையா, பீடியை பற்ற வைத்துக்கொண்டான். இப்போது குளிர் அதிகமாகியிருந்தது. தீப்பந்தம் காற்றில் அலைந்துகொண்டிருந்தது. பின்பக்கம் வைத்திருந்த பந்தம் அணைந்துவிட்டது. மீண்டும் அதை பற்ற வைக்க சோம்பல்.
கண்ணை கசக்கி விட்டு, சாக்கில் இருந்த மாங்காயை எடுக்கப்போனான் உ.மகாளி. சாக்கின் மேல் கருநிற பாம்பு ஒன்று விஷுக்கென்று சீறி நின்றது.
தொடர்கிறேன்.
Thursday, February 25, 2010
Saturday, February 20, 2010
காடு - 10
சோறு, சாம்பார், ரசம் என்றில்லாமல் காய்கறி குழம்பு கலந்த கூட்டாஞ்சோறும் காண துவையலும் ரெடியானது.
ஈயப்பாத்திரைத்தை விட மண்பானையில் செய்யப்படும் சோறுக்கு ருசி ஜாஸ்தி. பயணத்தின் பொருட்டு மண் பானையை கொண்டு வருவது சாத்யமில்லாததால், ஈயப்பாத்திரம் சோறாக்கப் பயன்படுத்தப்பட்டது.
கூட்டாஞ்சோறின் வாசம் மூக்கைத் துளைத்தது. உ.மகாளி இன்னொரு ஈயப்பாத்திரத்தில் ஆற்றிலிருந்து குடிக்க தண்ணீரும், சாப்பிடுவதற்கு தேக்கு இலைகளையும் பறித்து வந்தான்.
நொடிஞ்சான், அடுப்பிலிருந்து பானையை இறக்கும் முன், மூடியை அகற்றிப் பார்த்துவிட்டு, 'அரிசிக்கு யாருல தண்ணி ஊத்துனா?" என்று கேட்டான்.
'நாந்தான்' என்றான் உ.மகாளி.
'கூறுகெட்டவன... இவ்வளவு தண்ணியால ஊத்துவாவோ'
'நெறய ஊத்திட்டனோ... அப்ப செத்த நேரம் அடுப்புல கெடக்கட்டும்'
பசி, வாயின் வழியாக ஏப்பத்தைக்கொண்டு வந்திருந்தது. ஆனால், இன்னும் கொஞ்சம் அடுப்பில் கிடந்தால்தான் தண்ணீர் உறியப்பட்டு சோறு நன்றாக இருக்கும் என்பதால், மீண்டும் ஆளுக்கொரு பீடியை எடுத்து பற்ற வைத்தார்கள்.
உ.மகாளி சாப்பிட கொண்டு வந்திருந்த இலைகளை கழுவிகொண்டு வைத்தான். பாறையில் அரைக்கப்பட்ட காணத்துவையலை அள்ளி, ஒரு தேக்கிலையில் வைத்தான்.
குப்பென்று மணம். நொடிஞ்சான், அப்படியே துவையலில் ஒரு குத்து அள்ளி வாயில் போட்டான். கேசரிக்கும், கந்தையாவுக்கும் எடுக்கலாம் போலிருந்தது. இப்போதே துவையலை சாப்பிட்டுவிட்டால் சோறு இறங்காது என்பதால் மனதை நிறுத்தி வைத்தனர்.
பொதுவாகவே, வயக்காடுகள், தோப்புகள், காடு போன்ற இடங்களில் சாப்பிடும் போது, வழக்கத்தைவிட அதிகமான சாப்பாடு இறங்கும் என்பதால் அதிகப்படியாகச் சோறாக்கப்பட்டிருந்தது.
நொடிஞ்சானும் கேசரியும் சாப்பாட்டுப் பிரியர்கள். பிரியர்கள் என்பதற்கு ருசி தேடிச் சாப்பிடுபவர்கள் என்பதான அர்த்தமல்ல. இருவரும் சொள்ள மாடன் சாமிக்கு வைக்கும் படப்பு சோறு போல, ரவுண்ட் கட்டி சாப்பிடுபவர்கள்.
அதுவும் கெடைச்சோறு என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம். இதற்காகவே ஊரில் எந்த வயக்காடாக இருந்தாலும் யாராவது பக்கத்தூர்க்காரர்கள் கெடை போட்டிருந்தால் சாப்பிட கிளம்பிவிடுவார்கள்.
நொடிஞ்சானின் சித்தப்பா வயல், ஆற்றோரமாக இருக்கிறது. அருகிலேயே ஏழெட்டு தென்னை மரங்கள், நான்கு மா மரங்களை கொண்ட சின்ன தோப்பும். அதில் இரண்டும் தென்னைகள் ஆற்றுத்தண்ணீர் அரித்து அரித்து கருப்பு வேர்கள் வெளியில் தெரியுமாறு எப்போது விழுவேனோ என்கிற நிலமையில் இருந்தன.
போனமுறை கல்லிடைக்குறிச்சானும் அவனது தம்பியும் இங்கு கெடைப்போட்டிருந்தார்கள். 25 வெள்ளாடுகள். இரவு 7 மணி வாக்கில் தோப்பு மணலில் அடுப்பு மூட்டி சோறாக்குவார்கள். தண்ணீரோடு சேர்த்து ஆக்கும் சோறு. கூடவே அனைத்து காய்கறிகளையும் போட்டு கூட்டு மாதிரி தொட்டுக்குள்ள. இல்லையென்றால் ஈராய்ங்க துவையல்.
அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சமையல் நடக்கும். காத்து தீயை அங்குமிங்கும் அலைகழித்து செல்வதை தடுக்க, அடுப்பை சுற்றி மூன்றுபுரமும் பனை தட்டிகளை மறைப்புக்காக வைத்திருப்பார்கள்.
அடுப்பிலிருந்து சோறை இறக்கி கொஞ்சம் ஆற வைப்பார்கள். கல்லிடைக்குறிச்சானுக்கு சுட சுட தின்றுதான் பழக்கம். ஆனால், பனையோலையை மடக்கி கூம்பு மாதிரி செய்யப்பட்ட தட்டு, சூடு தாங்காது என்பதால் காத்திருப்பான்.
வெறும் சோறும் தண்ணி, துவையல்தான். ஆனால், கெடைக்காரர்கள் பொங்கும்போதுமட்டும் அவ்வளவு ருசு. ஏனென்பது தெரியவில்லை. இருட்டு வயக்காடும் காற்றும், பனையோலை வாசமும் நாக்கை இழுக்க வைக்குமோ என்னமோ?
அதே போல ஆவலில் இருந்தார்கள் இப்போது இவர்கள்.
இதற்கு மேல் பசி தாங்காது என்று சோறு பரிமாறப்பட்டது. உ.மகாளிக்கு சோற்றில் போடப்பட்டு வெந்த மாங்காய் துண்டுகள் மீது தனி ப்ரியம். அவனுக்கு மட்டும் ஒவ்வொன்றாய் பொறுக்கி இலையில் வைத்தான்.
'ஏல நாங்கலாம் மனுசம் இல்லையால... நீயே பொடையில போடுத'
'இரிண்ணே... எல்லாத்துக்குந்தான் சேர்த்து எடுக்கேன்'
தூரத்தில் நரி ஊளையிடும் சத்தம் கேட்டது. மாடு கெடையில் கிடந்த இடத்தில் இருந்து ரெண்டு மாடுகள் முட்டிக்கொள்வது போலவும் சத்தம்.
'ஏல அங்கென்னன்னு பாரு'
'நீயும் வாயேன்'
சாப்பாட்டை முடிக்காமல், பாதி சாப்பிட்டவாறே சென்றார்கள். கப்பை கொம்பு பசுவும், நீட்டிக்கொம்பு எருமையும் முட்டிக்கொண்டு நின்றன.
'இதென்னல கூத்தா இருக்கு...'
உச்சி மகாளி அருகில் சென்றதும் பசு, திரும்பி அவனைப் பார்த்தது. முதுகில் ஒரு குத்து விட்டான். எருமை, துள்ளிக்கொண்டு அருகில் ஓடியது.
'இது யாரு எருமை... பத்தையூரா(ள்) மாடுதான'
'ஆமா'
'ராத்திரியானா அவளை மாதிரிதான் துள்ளிட்டு அலையுது பாரேன்'
எல்லாரும் சிரித்தார்கள்.
'ஏம், நீ, அவா வீட்டுக்கு போலயோல'
'ச்சீ... அவ, வா வான்னு தாங்குனாலும் நா போமாட்டேன்'
'ஏண்டே'
'ஒண்ணா, ரெண்டா... ஒரு ஊரே நின்னு மேய்ஞ்சிருக்கு... அதை போயி'
'த்தூ... மூஞ்சியில வக்கு'
பத்தையூரா கட்டுப்பட்டியான ஊரில் வித்தியாசமானவள். அவள் திருமணம் முடிந்து வந்த 7 மாதத்தில், அவள் கணவனாகப்பட்ட கருப்ப நம்பி, வாழைத்தோப்பில் மருந்தடித்து தற்கொலை செய்துகொண்டான். அவர்ன் இறந்ததற்கான காரணங்கள் பலவாறு ஊரில் சொல்லப்பட்டன. அதில் ஒன்று:
'அவா, ஏழு மாசமா இருக்காளாம். இந்த பய்லுக்கு அதுக்கான வழி கிடையாதமே... பின்ன எப்படி வயித்துல உண்டான்னான்னு மனசொடிஞ்சு போயி, இப்படி பண்ணிட்டானாம்".
உண்மை வெளியில் வரும் வரை உலகம் போடும் கதைகள் ஆயிரம்.
பிறகு, சில காலம் தனது அப்பா ஊரில் வசித்தாள் பத்தையூரா... அவளது பெயர் செங்கமலம் என்பது யாருக்கும் தெரியாதது.
மகன் பிறந்ததும் கணவன் ஊர்க்கு வந்துவிட்டாள். கருப்பநம்பிக்கு சொத்துகள் அதிகம்.
முதலில் அரசல் புரசலாக அவள் பற்றி வரும் செய்திகளை அதிகம் நம்ப முடியாமல் இருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற இவளும், மாடுமேய்த்துக்கொண்டிருந்த கொடுக்கு ராசுவும் ஆற்றில் உள்ள பாழ் மண்டபத்தில் இருந்து அலங்கோலமாக வருவதை சுப்பு மைனி பார்த்ததில் இருந்து அவள் பற்றிய பேச்சு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
ஊரில் ஒரு மாதிரி பேசுவார்களே என்கிற கவலையெல்லாம் அவளுக்கு இல்லை. உடல் தேவை, உள்ளத்தை மீறுவது இயல்பு.
பிறகு, அவள் ஊரில் பல பேருடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருந்தாள். இவ்வளவுக்கும் அவள் உ.மகாளிக்கு சித்தி முறை. நொடிஞ்சான், கந்தையா, கேசர் போன்றோருக்கும் ஏதோ ஒரு வகையில் உறவு. முதலில் சொந்தக் கார பயல்களுடன் 'வாழ்ந்து' கொண்டிருந்த அவள், தெரு தாண்டி தன் எல்லையை விரித்தபோது, ஊர் பஞ்சாயத்து வரைக்கும் விஷயம் வந்துவிட்டது.
பஞ்சாயத்து தலைவர், மற்றும் செயலாளரின் மனைவிகள், அவளிடம் பேசினார்கள்.
'இதெல்லாம் நல்லதுக்கில்ல... கேவலமாலா இருக்கு'
'எது கேவலம், எது கேவலமில்லைன்னு எனக்கு தெரியும். உங்க வீடுவோள்ல வந்து நான் நிக்கலை. என் பேச்சை யாரும் பேசாண்டாம்'
இன்னும் பேசினால் பெரும் பிரச்னையாக வாய்ப்பிருப்ப்பதாலும், அது சொந்தங்களுக்குள் சிக்கலை உருவாக்கும் என்பதாலும் அந்த ப்ஞ்சாயத்து அதோடு நிறுத்தப்பட்டது.
பின்னர் அவள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் தேவையாக இருந்தாள்.
ஈயப்பாத்திரைத்தை விட மண்பானையில் செய்யப்படும் சோறுக்கு ருசி ஜாஸ்தி. பயணத்தின் பொருட்டு மண் பானையை கொண்டு வருவது சாத்யமில்லாததால், ஈயப்பாத்திரம் சோறாக்கப் பயன்படுத்தப்பட்டது.
கூட்டாஞ்சோறின் வாசம் மூக்கைத் துளைத்தது. உ.மகாளி இன்னொரு ஈயப்பாத்திரத்தில் ஆற்றிலிருந்து குடிக்க தண்ணீரும், சாப்பிடுவதற்கு தேக்கு இலைகளையும் பறித்து வந்தான்.
நொடிஞ்சான், அடுப்பிலிருந்து பானையை இறக்கும் முன், மூடியை அகற்றிப் பார்த்துவிட்டு, 'அரிசிக்கு யாருல தண்ணி ஊத்துனா?" என்று கேட்டான்.
'நாந்தான்' என்றான் உ.மகாளி.
'கூறுகெட்டவன... இவ்வளவு தண்ணியால ஊத்துவாவோ'
'நெறய ஊத்திட்டனோ... அப்ப செத்த நேரம் அடுப்புல கெடக்கட்டும்'
பசி, வாயின் வழியாக ஏப்பத்தைக்கொண்டு வந்திருந்தது. ஆனால், இன்னும் கொஞ்சம் அடுப்பில் கிடந்தால்தான் தண்ணீர் உறியப்பட்டு சோறு நன்றாக இருக்கும் என்பதால், மீண்டும் ஆளுக்கொரு பீடியை எடுத்து பற்ற வைத்தார்கள்.
உ.மகாளி சாப்பிட கொண்டு வந்திருந்த இலைகளை கழுவிகொண்டு வைத்தான். பாறையில் அரைக்கப்பட்ட காணத்துவையலை அள்ளி, ஒரு தேக்கிலையில் வைத்தான்.
குப்பென்று மணம். நொடிஞ்சான், அப்படியே துவையலில் ஒரு குத்து அள்ளி வாயில் போட்டான். கேசரிக்கும், கந்தையாவுக்கும் எடுக்கலாம் போலிருந்தது. இப்போதே துவையலை சாப்பிட்டுவிட்டால் சோறு இறங்காது என்பதால் மனதை நிறுத்தி வைத்தனர்.
பொதுவாகவே, வயக்காடுகள், தோப்புகள், காடு போன்ற இடங்களில் சாப்பிடும் போது, வழக்கத்தைவிட அதிகமான சாப்பாடு இறங்கும் என்பதால் அதிகப்படியாகச் சோறாக்கப்பட்டிருந்தது.
நொடிஞ்சானும் கேசரியும் சாப்பாட்டுப் பிரியர்கள். பிரியர்கள் என்பதற்கு ருசி தேடிச் சாப்பிடுபவர்கள் என்பதான அர்த்தமல்ல. இருவரும் சொள்ள மாடன் சாமிக்கு வைக்கும் படப்பு சோறு போல, ரவுண்ட் கட்டி சாப்பிடுபவர்கள்.
அதுவும் கெடைச்சோறு என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம். இதற்காகவே ஊரில் எந்த வயக்காடாக இருந்தாலும் யாராவது பக்கத்தூர்க்காரர்கள் கெடை போட்டிருந்தால் சாப்பிட கிளம்பிவிடுவார்கள்.
நொடிஞ்சானின் சித்தப்பா வயல், ஆற்றோரமாக இருக்கிறது. அருகிலேயே ஏழெட்டு தென்னை மரங்கள், நான்கு மா மரங்களை கொண்ட சின்ன தோப்பும். அதில் இரண்டும் தென்னைகள் ஆற்றுத்தண்ணீர் அரித்து அரித்து கருப்பு வேர்கள் வெளியில் தெரியுமாறு எப்போது விழுவேனோ என்கிற நிலமையில் இருந்தன.
போனமுறை கல்லிடைக்குறிச்சானும் அவனது தம்பியும் இங்கு கெடைப்போட்டிருந்தார்கள். 25 வெள்ளாடுகள். இரவு 7 மணி வாக்கில் தோப்பு மணலில் அடுப்பு மூட்டி சோறாக்குவார்கள். தண்ணீரோடு சேர்த்து ஆக்கும் சோறு. கூடவே அனைத்து காய்கறிகளையும் போட்டு கூட்டு மாதிரி தொட்டுக்குள்ள. இல்லையென்றால் ஈராய்ங்க துவையல்.
அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சமையல் நடக்கும். காத்து தீயை அங்குமிங்கும் அலைகழித்து செல்வதை தடுக்க, அடுப்பை சுற்றி மூன்றுபுரமும் பனை தட்டிகளை மறைப்புக்காக வைத்திருப்பார்கள்.
அடுப்பிலிருந்து சோறை இறக்கி கொஞ்சம் ஆற வைப்பார்கள். கல்லிடைக்குறிச்சானுக்கு சுட சுட தின்றுதான் பழக்கம். ஆனால், பனையோலையை மடக்கி கூம்பு மாதிரி செய்யப்பட்ட தட்டு, சூடு தாங்காது என்பதால் காத்திருப்பான்.
வெறும் சோறும் தண்ணி, துவையல்தான். ஆனால், கெடைக்காரர்கள் பொங்கும்போதுமட்டும் அவ்வளவு ருசு. ஏனென்பது தெரியவில்லை. இருட்டு வயக்காடும் காற்றும், பனையோலை வாசமும் நாக்கை இழுக்க வைக்குமோ என்னமோ?
அதே போல ஆவலில் இருந்தார்கள் இப்போது இவர்கள்.
இதற்கு மேல் பசி தாங்காது என்று சோறு பரிமாறப்பட்டது. உ.மகாளிக்கு சோற்றில் போடப்பட்டு வெந்த மாங்காய் துண்டுகள் மீது தனி ப்ரியம். அவனுக்கு மட்டும் ஒவ்வொன்றாய் பொறுக்கி இலையில் வைத்தான்.
'ஏல நாங்கலாம் மனுசம் இல்லையால... நீயே பொடையில போடுத'
'இரிண்ணே... எல்லாத்துக்குந்தான் சேர்த்து எடுக்கேன்'
தூரத்தில் நரி ஊளையிடும் சத்தம் கேட்டது. மாடு கெடையில் கிடந்த இடத்தில் இருந்து ரெண்டு மாடுகள் முட்டிக்கொள்வது போலவும் சத்தம்.
'ஏல அங்கென்னன்னு பாரு'
'நீயும் வாயேன்'
சாப்பாட்டை முடிக்காமல், பாதி சாப்பிட்டவாறே சென்றார்கள். கப்பை கொம்பு பசுவும், நீட்டிக்கொம்பு எருமையும் முட்டிக்கொண்டு நின்றன.
'இதென்னல கூத்தா இருக்கு...'
உச்சி மகாளி அருகில் சென்றதும் பசு, திரும்பி அவனைப் பார்த்தது. முதுகில் ஒரு குத்து விட்டான். எருமை, துள்ளிக்கொண்டு அருகில் ஓடியது.
'இது யாரு எருமை... பத்தையூரா(ள்) மாடுதான'
'ஆமா'
'ராத்திரியானா அவளை மாதிரிதான் துள்ளிட்டு அலையுது பாரேன்'
எல்லாரும் சிரித்தார்கள்.
'ஏம், நீ, அவா வீட்டுக்கு போலயோல'
'ச்சீ... அவ, வா வான்னு தாங்குனாலும் நா போமாட்டேன்'
'ஏண்டே'
'ஒண்ணா, ரெண்டா... ஒரு ஊரே நின்னு மேய்ஞ்சிருக்கு... அதை போயி'
'த்தூ... மூஞ்சியில வக்கு'
பத்தையூரா கட்டுப்பட்டியான ஊரில் வித்தியாசமானவள். அவள் திருமணம் முடிந்து வந்த 7 மாதத்தில், அவள் கணவனாகப்பட்ட கருப்ப நம்பி, வாழைத்தோப்பில் மருந்தடித்து தற்கொலை செய்துகொண்டான். அவர்ன் இறந்ததற்கான காரணங்கள் பலவாறு ஊரில் சொல்லப்பட்டன. அதில் ஒன்று:
'அவா, ஏழு மாசமா இருக்காளாம். இந்த பய்லுக்கு அதுக்கான வழி கிடையாதமே... பின்ன எப்படி வயித்துல உண்டான்னான்னு மனசொடிஞ்சு போயி, இப்படி பண்ணிட்டானாம்".
உண்மை வெளியில் வரும் வரை உலகம் போடும் கதைகள் ஆயிரம்.
பிறகு, சில காலம் தனது அப்பா ஊரில் வசித்தாள் பத்தையூரா... அவளது பெயர் செங்கமலம் என்பது யாருக்கும் தெரியாதது.
மகன் பிறந்ததும் கணவன் ஊர்க்கு வந்துவிட்டாள். கருப்பநம்பிக்கு சொத்துகள் அதிகம்.
முதலில் அரசல் புரசலாக அவள் பற்றி வரும் செய்திகளை அதிகம் நம்ப முடியாமல் இருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற இவளும், மாடுமேய்த்துக்கொண்டிருந்த கொடுக்கு ராசுவும் ஆற்றில் உள்ள பாழ் மண்டபத்தில் இருந்து அலங்கோலமாக வருவதை சுப்பு மைனி பார்த்ததில் இருந்து அவள் பற்றிய பேச்சு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
ஊரில் ஒரு மாதிரி பேசுவார்களே என்கிற கவலையெல்லாம் அவளுக்கு இல்லை. உடல் தேவை, உள்ளத்தை மீறுவது இயல்பு.
பிறகு, அவள் ஊரில் பல பேருடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருந்தாள். இவ்வளவுக்கும் அவள் உ.மகாளிக்கு சித்தி முறை. நொடிஞ்சான், கந்தையா, கேசர் போன்றோருக்கும் ஏதோ ஒரு வகையில் உறவு. முதலில் சொந்தக் கார பயல்களுடன் 'வாழ்ந்து' கொண்டிருந்த அவள், தெரு தாண்டி தன் எல்லையை விரித்தபோது, ஊர் பஞ்சாயத்து வரைக்கும் விஷயம் வந்துவிட்டது.
பஞ்சாயத்து தலைவர், மற்றும் செயலாளரின் மனைவிகள், அவளிடம் பேசினார்கள்.
'இதெல்லாம் நல்லதுக்கில்ல... கேவலமாலா இருக்கு'
'எது கேவலம், எது கேவலமில்லைன்னு எனக்கு தெரியும். உங்க வீடுவோள்ல வந்து நான் நிக்கலை. என் பேச்சை யாரும் பேசாண்டாம்'
இன்னும் பேசினால் பெரும் பிரச்னையாக வாய்ப்பிருப்ப்பதாலும், அது சொந்தங்களுக்குள் சிக்கலை உருவாக்கும் என்பதாலும் அந்த ப்ஞ்சாயத்து அதோடு நிறுத்தப்பட்டது.
பின்னர் அவள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் தேவையாக இருந்தாள்.
Thursday, February 18, 2010
காடு - 9
பள்ளம் என்பது அருவி நீர் பட்டுத் தெறித்து குளமாக்கப்பட்ட பகுதி. முழுவதும் தண்ணீர் இல்லாமல் ஒரு ஓரமாக மட்டும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. மறுபக்கம் மணலாகவே காட்சியளித்தது. கண்ணாடியான தண்ணீரை மேலிருந்து பார்க்கும் போது, அடியில் மணல்களும் கூழாங்கற்களும் தெரிந்தன.
தண்ணீரில் பாதி முங்கிய நிலையில் உடல்கள் வீங்கிய உருவம் தெரிந்தது.
கேசரி கொஞ்சம் நடுக்கமாகி, 'ஏல இங்கரு... எவனோ செத்துகிடக்காம்" என்றான்.
எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாத கந்தையா, எந்தவித ரியாக்சனையும் காட்டாமல், எட்டிப்பார்த்தான்.
பிறகு கேசரிக்கு பொடதியில் ஒரு போடு.
'உனக்கு கண்ணு எளவும் தெரியாதால'
'ஏம்'
'செத்துக்கிடக்குதது கரடி'
'கரடியா... மனுசம் மாதிரிலா தெரியுது"
'ஆக்கங்கெட்ட கூவை... நல்லா பாருல'
கண்ணைக் கசக்கி கொண்டு பார்ர்த்தான் கேசரி. மல்லாக்க கிடந்திருந்தது கரடி. அதன் கரு உருவங்கள் கரடி என்பதை தீர்மானித்திருந்தன.
நள்ளிரவில், புலி போன்ற விலங்குகள் அல்லது கொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் கடி வாங்கி கரடி இறந்திருக்கலாம் என்பது கேசரியின் நினைப்பு.
ஆனால், புலி எப்போதும் இடதுபக்கமாகத்தான் தாக்கும் என்பது ஊர் பெருசுகளின் பேச்சு. அது ஒரு போதும் வலபக்கம் அடிக்காது என்றும், தானே அடித்துதான் சாப்பிடும், இறந்துகிடப்பதை தொடாது என்பதும் பேச்சிதாத்தாவின் வாயிலிருந்து கேட்கப்பட்டவை.
பேச்சித் தாத்தா ஊரில் வீரம் செறிந்தவராக காணப்பட்டார். அவரது இளம் வயது கதைகள், அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
துப்பாக்கிகள் நகரங்களில் அறிமுகமாகியிருந்த காலத்தில், ஆழ்வார்க்குறிச்சி சின்ன ராசாவுடன் அவரும் ஒரு துப்பாக்கி வாங்கியிருந்தார்.
எப்படி சுடுவது என்பது உள்ளிட்டவற்றை சின்ன ராசா கற்றுக்கொடுத்திருந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் பொதிகை மலைக்குள் வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் தாத்தா. அதற்கு அத்தாட்சியாக, அவர் வீட்டு வாசலின் இரண்டு பக்கமும் மான் கொம்புகள் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தன.
சட்டையில்லாத அவரு நெஞ்சில் ஆடும் பெரிய தங்க சங்கிலியில் சிங்கப்பல் பொருத்தியிருப்பதாக சொல்வார்கள்.
'எங்காலத்துல எல்லாம் இப்டியாடா... உங்க தாத்தாவும் நானும்தான் சேக்காளியோ. அந்தானி, வில்வண்டியை (கூண்டு வண்டி) எடுத்தம்னா, ரெண்டு மூணு நாளு ஆவும் வீட்டுக்கு வர.
ஏழெட்டு மானு, முயலுவோ, கருவாலி அது இதுன்னு அள்ளிப்போட்டுட்டு வருவோம். ஒரு தடவை, மலைக்கு மேலே வண்டி போற பாதை மாதிரி இருந்தது. தீப்பந்தத்தை வண்டியில சொருவி வச்சுட்டு அதுபாட்டுக்கு போயிட்டிருந்தோம். போனா, விடிஞ்சு போச்சு, உச்சிமலைக்கு வந்திட்டோம். சரியான காடு. பக்கத்துல தேயில தோட்டமா இருக்கு. அந்தானி வண்டிய நிறுத்தி மாட்டை அவுத்து, செத்த நேரம் படுக்கப்போட்டுட்டு, நின்னா, மலையில வாழுறவங்க ஒரு ஏழெட்டு பேரு வந்துட்டாங்க. விஷயத்தை சொன்னோம்.
சரின்னு ஒருத்தன் வீட்டுல போயி, நீத்தண்ணி குடிச்சிட்டு, பேசிட்டிருக்கோம். அவங்க பேச்சு நம்ம தமிழ் மாதிரியும் இருக்கு. இல்லாத மாதிரியும் இருக்கு.
அதுல ஒருத்தியை, உங்க தாத்தன் பாத்துட்டாம். அவ என்னடான்னா கலருன்னா கலரு, அப்படியொரு கலரு. அவளை கூட்டிட்டு போயிரணும்னு ஒத்த கால்ல நிக்காம். குடிக்க தண்ணி கொடுத்த இடத்துல அப்படிலாம் பண்ணக்கூடாதுடான்னு வந்துட்டோம்.
வரும்போதே, கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு நிக்குத மாதிரி, வா வீட்டுக்குபோலாம்னு பறந்துட்டிருப்பாம்... ஏம்னா, அவனுக்கு உங்க ஆச்சி பக்கத்துல தூங்கலைன்னா தூக்கம் வராது" என்று சொல்லிவிட்டு மீசையை திருகியவாறு, பலமாக சிரிப்பார் பேச்சித் தாத்தா.
அவருக்கான காலமும், அனுபவமும் அவருக்கானதுதான்.
சமையலுக்கான வேலைகள் ஆரம்பமாகிக்கொண்டிருந்தது. உ.மகாளி கண்களின் தண்ணீர் வர வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தான்.
ஏற்கனவெ அங்கு அடுப்பு மூட்டியிருந்த்தால் வசதியாக இருந்தது. அவர்கள் வேலைப் பார்த்துக்கொண்டிருக்க, கந்தையாவும் கேசரியும் அருகிலேயே மணலில் படுத்தார்கள்.
'சுகமா இருக்குலா... அப்டியே தூங்கிருவேம் போலிருக்கு'
'தூங்கேன். எங்களுக்கு ஒரு பிடி சோறு மிச்சமாவும்"
'நீங்க செஞ்சாலும் செய்வியோ" என்றவாறே எழுந்தார்கள் இருவரும்.
நாலைந்து பேர்கள் ஊரில் கூடுகிற இடத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணைப் பற்றியோ, அல்லது வேறு தெரு பெண்களைப் பற்றியோ இல்லாததும் பொல்லாததுமாக கதைகள் நடக்கும்.
இப்படியானதொரு தனிமையில் அது இல்லையென்றால் எப்படி?
நொடிஞ்சான்தான் ஆரம்பித்தான்.
'கொண்டை ஐயரு வீட்டுல வேலை பார்த்தாம்லா, கருப்பையா'
'ஆமா'
'அவன், அடிவாரத்துல இருந்து ஒருத்திய கூட்டிட்டு வந்திருக்காணாமே'
உ.மகாளி, ஆர்வமாகி, தொடந்தான்,
'ஆமா, இந்தப்பய ஐயரு வீட்டு, தென்னை மரத்துல இருந்து காய் எடுத்துட்டு வர, வண்டியில அடிக்கடி போயிருக்காம்... முதல்ல கொஞ்சம் தண்ணிக்கொடுங்கன்னு ஆரம்பிச்சிருக்கான். பிறவு, அப்படி இப்படி பழக்கமாயிருக்கு. பொண்டாட்டிக்காரிக்கு தெரிஞ்சு, வாரியலை எடுத்து அடிச்சுருவேன்னு சொல்லி ஒப்பாரி வச்சிருக்கா. அந்தப் புள்ளய விட்டுட்டு அவனுக்கு இருக்க முடியலை. அந்தானி ஐயரு வீட்டு தொழுவுல வாடகைக்கு வச்சிருக்காம். பாதி நேரம் இவன், தேங்காய் எடுக்க, ரைஸ் மில்லுக்கு மூட்டைய தூக்கிட்டு போவன்னுதான் இருக்காம். ஆனா, ஐயரு...'
'அப்படியில்லலை... அடிவாரத்துல ஒரு நா போதை போட்டுட்டு, பிரச்னையாகி தெருவுல கிடந்திருக்காம்... தண்ணிக்குப் போன இந்த புள்ள, ஐயோ பாவம்னுட்டு மூஞ்சியில் தெளிச்சிருக்கு. அதுக்குப் பிறவுதான் உணரு வந்து, அவளை பத்தி விசாரிச்சிருக்காம்... அந்தானி தொடர்ந்துட்டு தொடுப்பு'
அடுப்பில் சோறு கொதித்து கொண்டிருக்க, கதைகள் தொடர்ந்துகொண்டிருந்தது.
நானும் தொடர்கிறேன்.
தண்ணீரில் பாதி முங்கிய நிலையில் உடல்கள் வீங்கிய உருவம் தெரிந்தது.
கேசரி கொஞ்சம் நடுக்கமாகி, 'ஏல இங்கரு... எவனோ செத்துகிடக்காம்" என்றான்.
எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாத கந்தையா, எந்தவித ரியாக்சனையும் காட்டாமல், எட்டிப்பார்த்தான்.
பிறகு கேசரிக்கு பொடதியில் ஒரு போடு.
'உனக்கு கண்ணு எளவும் தெரியாதால'
'ஏம்'
'செத்துக்கிடக்குதது கரடி'
'கரடியா... மனுசம் மாதிரிலா தெரியுது"
'ஆக்கங்கெட்ட கூவை... நல்லா பாருல'
கண்ணைக் கசக்கி கொண்டு பார்ர்த்தான் கேசரி. மல்லாக்க கிடந்திருந்தது கரடி. அதன் கரு உருவங்கள் கரடி என்பதை தீர்மானித்திருந்தன.
நள்ளிரவில், புலி போன்ற விலங்குகள் அல்லது கொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் கடி வாங்கி கரடி இறந்திருக்கலாம் என்பது கேசரியின் நினைப்பு.
ஆனால், புலி எப்போதும் இடதுபக்கமாகத்தான் தாக்கும் என்பது ஊர் பெருசுகளின் பேச்சு. அது ஒரு போதும் வலபக்கம் அடிக்காது என்றும், தானே அடித்துதான் சாப்பிடும், இறந்துகிடப்பதை தொடாது என்பதும் பேச்சிதாத்தாவின் வாயிலிருந்து கேட்கப்பட்டவை.
பேச்சித் தாத்தா ஊரில் வீரம் செறிந்தவராக காணப்பட்டார். அவரது இளம் வயது கதைகள், அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
துப்பாக்கிகள் நகரங்களில் அறிமுகமாகியிருந்த காலத்தில், ஆழ்வார்க்குறிச்சி சின்ன ராசாவுடன் அவரும் ஒரு துப்பாக்கி வாங்கியிருந்தார்.
எப்படி சுடுவது என்பது உள்ளிட்டவற்றை சின்ன ராசா கற்றுக்கொடுத்திருந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் பொதிகை மலைக்குள் வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் தாத்தா. அதற்கு அத்தாட்சியாக, அவர் வீட்டு வாசலின் இரண்டு பக்கமும் மான் கொம்புகள் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தன.
சட்டையில்லாத அவரு நெஞ்சில் ஆடும் பெரிய தங்க சங்கிலியில் சிங்கப்பல் பொருத்தியிருப்பதாக சொல்வார்கள்.
'எங்காலத்துல எல்லாம் இப்டியாடா... உங்க தாத்தாவும் நானும்தான் சேக்காளியோ. அந்தானி, வில்வண்டியை (கூண்டு வண்டி) எடுத்தம்னா, ரெண்டு மூணு நாளு ஆவும் வீட்டுக்கு வர.
ஏழெட்டு மானு, முயலுவோ, கருவாலி அது இதுன்னு அள்ளிப்போட்டுட்டு வருவோம். ஒரு தடவை, மலைக்கு மேலே வண்டி போற பாதை மாதிரி இருந்தது. தீப்பந்தத்தை வண்டியில சொருவி வச்சுட்டு அதுபாட்டுக்கு போயிட்டிருந்தோம். போனா, விடிஞ்சு போச்சு, உச்சிமலைக்கு வந்திட்டோம். சரியான காடு. பக்கத்துல தேயில தோட்டமா இருக்கு. அந்தானி வண்டிய நிறுத்தி மாட்டை அவுத்து, செத்த நேரம் படுக்கப்போட்டுட்டு, நின்னா, மலையில வாழுறவங்க ஒரு ஏழெட்டு பேரு வந்துட்டாங்க. விஷயத்தை சொன்னோம்.
சரின்னு ஒருத்தன் வீட்டுல போயி, நீத்தண்ணி குடிச்சிட்டு, பேசிட்டிருக்கோம். அவங்க பேச்சு நம்ம தமிழ் மாதிரியும் இருக்கு. இல்லாத மாதிரியும் இருக்கு.
அதுல ஒருத்தியை, உங்க தாத்தன் பாத்துட்டாம். அவ என்னடான்னா கலருன்னா கலரு, அப்படியொரு கலரு. அவளை கூட்டிட்டு போயிரணும்னு ஒத்த கால்ல நிக்காம். குடிக்க தண்ணி கொடுத்த இடத்துல அப்படிலாம் பண்ணக்கூடாதுடான்னு வந்துட்டோம்.
வரும்போதே, கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு நிக்குத மாதிரி, வா வீட்டுக்குபோலாம்னு பறந்துட்டிருப்பாம்... ஏம்னா, அவனுக்கு உங்க ஆச்சி பக்கத்துல தூங்கலைன்னா தூக்கம் வராது" என்று சொல்லிவிட்டு மீசையை திருகியவாறு, பலமாக சிரிப்பார் பேச்சித் தாத்தா.
அவருக்கான காலமும், அனுபவமும் அவருக்கானதுதான்.
சமையலுக்கான வேலைகள் ஆரம்பமாகிக்கொண்டிருந்தது. உ.மகாளி கண்களின் தண்ணீர் வர வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தான்.
ஏற்கனவெ அங்கு அடுப்பு மூட்டியிருந்த்தால் வசதியாக இருந்தது. அவர்கள் வேலைப் பார்த்துக்கொண்டிருக்க, கந்தையாவும் கேசரியும் அருகிலேயே மணலில் படுத்தார்கள்.
'சுகமா இருக்குலா... அப்டியே தூங்கிருவேம் போலிருக்கு'
'தூங்கேன். எங்களுக்கு ஒரு பிடி சோறு மிச்சமாவும்"
'நீங்க செஞ்சாலும் செய்வியோ" என்றவாறே எழுந்தார்கள் இருவரும்.
நாலைந்து பேர்கள் ஊரில் கூடுகிற இடத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணைப் பற்றியோ, அல்லது வேறு தெரு பெண்களைப் பற்றியோ இல்லாததும் பொல்லாததுமாக கதைகள் நடக்கும்.
இப்படியானதொரு தனிமையில் அது இல்லையென்றால் எப்படி?
நொடிஞ்சான்தான் ஆரம்பித்தான்.
'கொண்டை ஐயரு வீட்டுல வேலை பார்த்தாம்லா, கருப்பையா'
'ஆமா'
'அவன், அடிவாரத்துல இருந்து ஒருத்திய கூட்டிட்டு வந்திருக்காணாமே'
உ.மகாளி, ஆர்வமாகி, தொடந்தான்,
'ஆமா, இந்தப்பய ஐயரு வீட்டு, தென்னை மரத்துல இருந்து காய் எடுத்துட்டு வர, வண்டியில அடிக்கடி போயிருக்காம்... முதல்ல கொஞ்சம் தண்ணிக்கொடுங்கன்னு ஆரம்பிச்சிருக்கான். பிறவு, அப்படி இப்படி பழக்கமாயிருக்கு. பொண்டாட்டிக்காரிக்கு தெரிஞ்சு, வாரியலை எடுத்து அடிச்சுருவேன்னு சொல்லி ஒப்பாரி வச்சிருக்கா. அந்தப் புள்ளய விட்டுட்டு அவனுக்கு இருக்க முடியலை. அந்தானி ஐயரு வீட்டு தொழுவுல வாடகைக்கு வச்சிருக்காம். பாதி நேரம் இவன், தேங்காய் எடுக்க, ரைஸ் மில்லுக்கு மூட்டைய தூக்கிட்டு போவன்னுதான் இருக்காம். ஆனா, ஐயரு...'
'அப்படியில்லலை... அடிவாரத்துல ஒரு நா போதை போட்டுட்டு, பிரச்னையாகி தெருவுல கிடந்திருக்காம்... தண்ணிக்குப் போன இந்த புள்ள, ஐயோ பாவம்னுட்டு மூஞ்சியில் தெளிச்சிருக்கு. அதுக்குப் பிறவுதான் உணரு வந்து, அவளை பத்தி விசாரிச்சிருக்காம்... அந்தானி தொடர்ந்துட்டு தொடுப்பு'
அடுப்பில் சோறு கொதித்து கொண்டிருக்க, கதைகள் தொடர்ந்துகொண்டிருந்தது.
நானும் தொடர்கிறேன்.
Tuesday, February 16, 2010
காடு-8
மாடுகள் சென்றுக்கொண்டிருந்தபோது, கீழே கிடக்கும் சருகுகளில் இருந்து சர்புர் சத்தம் வந்துகொண்டிருந்தது. நிழலாக மூடியிருந்த மரக்கிளைகளில் இருந்து விழுந்துகிடந்த அவற்றின் மீது அணில்கள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.
தூரத்தில் இருந்து, இதுவரை கேட்டிராத பல பறவை மற்றும் வண்டுகளின் சத்தங்கள் ராகங்களாய் வந்துகொண்டிருந்தன. உ.மகாளி அவற்றை ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நடந்தான்.
உயரமான மரங்களில் இருந்து தாவும் கருங்குரங்கள், மாடுகளையும் இவர்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சென்றன. குற்றாலம், பாபநாசம் பகுதிகளில் இப்படியான குரங்களை பார்த்திருக்க முடியாது. இது பாடப்புத்தகங்களில் காட்டப்பட்டிருக்கும் குரங்கு. சாதாரண குரங்குகளை விட இவை, அதிக சேட்டைகளை கொண்டவை.
உ.மகாளியின் தலையில் இருக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்டவை அடங்கிய மூட்டையை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு, அவனை முன்னே விட்டு, பின்னால் வந்தார்கள தவிட்டான் உள்ளிட்டவர்கள்.
இந்த வகை குரங்குகள் எதற்கும் பயப்படாதவை. நேராக தலையில் வந்தமர்ந்து மூட்டையை தள்ளி, அள்ளிக்கொண்டு போகும் வகையறாக்கள்.
உ.மகாளிக்கு இப்படியானதொரு குரங்கு அனுபவம் ஏற்கனவே இருக்கிறது.
அக்ரஹாரத்துக்கு புதிதாக வந்திருந்த கல்யாணி டீச்சர், பின் வாசலில் நின்று மேலே பார்த்துக்கொண்டிருந்தாள். உ.மகாளி கீழ வீட்டில் பால் கறந்துகொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
சில பல முறை கல்யாணி டீச்சர், அவனை பார்த்திருந்தாலும் பேசிக்கொண்டதில்லை. அறிமுகமில்லாதவனிடம் எப்படி பேச என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது.
உ.மகாளிக்கு அறிமுகங்கள் தேவையில்லை. முகத்தை பார்த்தே நோக்கம் அறிந்துகொள்ளும் அபிப்ராயன். இருந்தாலும் கல்யாணி டீச்சர், இளவட்ட பசங்களின் கனவு கன்னியாக இருந்த படியாலும் இப்படியான பெண்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்பதாலும் கொஞ்சம் துணிந்தே கேட்டான் உ.மகாளி.
'என்ன டீச்சரு மேலயே பார்த்துட்டு இருக்கீயோ"
'தேங்கா உடைச்சேன். குரங்கு தூக்கிட்டு மச்சிக்கு ஓடிட்டு. தேங்கா போனா கூட பரவாயில்லை. சேலை, ஜாக்கெட் எல்லாத்தையும் அள்ளிட்டு போயிட்டு"
'மச்சியிலதான இருக்கு. இந்தா போறேன் பாருங்க" என்ற உ.மகாளி, அவள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி. மச்சிக்கு சென்றான். அங்கு இருக்கிற அறை பூட்டி இருந்தது. அதற்கு அடுத்து, அடுத்த வீட்டின் மச்சி. அது ராசா ஐயர் வீட்டினுடையது. அங்கு அனுமதி இல்லாமல் பிரவேசித்தால் திருட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்பதால் இங்கிருந்தே அவர் வீட்டு மச்சியை எட்டிப்பார்த்தான்.
குரங்கு இல்லை. ஆனால், சிவப்பு கலர் ஜாக்கெட்டும், இரண்டு கருப்பு கலர் பிராவும் பத்தடி தூரம் தள்ளிக் கிடந்தது. டீச்சர் இதைதான் எதிர்பார்த்தாள் என்பதால், ஆசையாக முதலில் பிராவையும் பிறகு ஜாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு திரும்பும்போது... வேகமாக வந்து முதுகில் விழுந்தது குரங்கு. முதுகில் டர்ர்ர்ர். கொஞ்சம் பயமும், திகிலும் கலந்த உ.மகாளி மச்சியில் இருந்து எப்படி விழுந்தான் என்று தெரியாது. கிழே காயப்போட்டிருந்த மிளாகாய் வத்தலில் மீது சப்பென்று அவனின் பின்பகுதி அமர்ந்திருந்தது.
துணி காய போடுவதற்காக கட்டப்பட்டிருந்த கொடியை கிழித்தும் விழுந்திருந்தான் உ.மகாளி. பிறகு எப்படி டீச்சரின் வீட்டுக்குள் தூக்கிச்செல்லப்பட்டான். சட்டை களைந்து தூங்க வைகக்ப்பட்டான் என்பது அவனுக்கு பிறகுதான் தெரிந்தது. அவன் உணர்வு வந்து பார்த்தபோது, அவனது பின்பக்கத்தை ஐயோடக்ஸால் தடவிக்கொண்டிருந்தாள் டீச்சர்.
டமாலென்று அவளது கையை தட்டிவிட்டு, எழுந்தான். லேசாக வலி இருந்தது. சாரத்தை இழுத்துக்கட்டிக்கொண்டான்.
டீச்சர் அவனது முகத்தைப் பார்க்காமல் பேசினாள்
'ஐயோ நேக்கு உயிரே போயிடுச்சு... சிவ சிவா"- கண்ணை கசக்கினாள்.
'ஒண்ணுமில்ல டீச்சரு. அது முதுவுல விழுந்ததும் காலு தடுமாறிபோச்சு. லேசாதான் வலி, பரவாயில்ல".
பிறகு பலமுறை அவனது கனவுகளில் டீச்சர் வரத்தொடங்கினாள் என்பதும், ஐயோடக்ஸ் மேட்டர் அடிக்கடி ரிபீட் ஆவதும் தனிக்கதை.
வெயில் மறைய தொடங்கிவிட்டது. இப்போது அவர்கள் தோணியாறை நெருங்கி இருந்தார்கள். சின்ன அருவியும் பெரும் பள்ளமும் நிறைந்த பகுதி இது. அருகிலேயே இவர்கள் மாதிரி மாடு மேய்க்க, தேன் எடுக்க, விறகு வெட்ட வருபவர்கள் இங்கு ஏற்கனவே அடுப்பு மூட்டி சோறாக்கிய வடுக்கள் அங்கு இருந்தன.
இரண்டு பாறைகள் ஒன்றுக்கொன்று ஆங்கில ஏ எழுத்து போல சேர்ந்து குகை மாதிரி இருந்ததால், நடுவில் உட்கார்ந்து சோறாக்க வசதியாக இருந்தது. பறைகள் மீது சாக்பீசால், முத்தம்மா, செல்லத்துரை லவ் என்கிற மாதிரியான ஆர்டின் வடிவ சிம்பல்கள் அதிகமாகச் செதுக்கப்பட்டிருந்தன. இப்படியான பெயரிகளில், தான் எவள் பெயரைச் சேர்த்து எழுதுவது என்று நின்று யோசித்துக்கொண்டிருந்தான் உ.மகாளி.
காலை மதியத்திற்கு கொண்டு வரப்பட்ட பழையச்சோறு காலியானதால் இங்கு சோறாக்கிவிட்டு செல்வது என்று முடிவெடுத்தார்கள்.
அப்பகுதி முழுவதும் வீட்டில் செய்யப்படும் முறுக்கின் வாசனை வந்துகொண்டிருந்தது.
'இங்க யாரு வந்து, முறுக்கு சுட போறா" என்று உ.மகாளி, மூக்கை இன்னும் உரிஞ்சு உரிஞ்சு வாசம் தேடிக்கொண்டிருந்தான். தூரத்தில் சாய்ந்து கிடக்கிற மரத்தில் அமர்ந்து பீடிக்குடிக்கலாம் என்றிருந்தவனை, காய்கறி வெட்ட சொன்னான் தவிட்டான்.
'முறுக்கு வாசனை வருது... அங்க இங்கன்னு அலையாத... பாம்புவோ எங்கயாது கிடந்து காத்து குடிச்சாதான் இப்படி வாசனை வரும்" என்று நொடிஞ்சான் சொன்னதும் உ.மகாளிக்கு குபுக்கென வியர்த்தது.
கந்தையாவும் கேசரியும் மாடுகளை கிடையில் போட்டுவிட்டு வந்தார்கள். கால், கைகளை கழுவிவிட்டு வர அருவி அருகே செல்லும் போது, பக்கத்து பள்ளதில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
எட்டிப்பார்த்தான் கேசரி, திக்கென்றிருந்தது அவனுக்கு.
தொடர்கிறேன்.
தூரத்தில் இருந்து, இதுவரை கேட்டிராத பல பறவை மற்றும் வண்டுகளின் சத்தங்கள் ராகங்களாய் வந்துகொண்டிருந்தன. உ.மகாளி அவற்றை ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நடந்தான்.
உயரமான மரங்களில் இருந்து தாவும் கருங்குரங்கள், மாடுகளையும் இவர்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சென்றன. குற்றாலம், பாபநாசம் பகுதிகளில் இப்படியான குரங்களை பார்த்திருக்க முடியாது. இது பாடப்புத்தகங்களில் காட்டப்பட்டிருக்கும் குரங்கு. சாதாரண குரங்குகளை விட இவை, அதிக சேட்டைகளை கொண்டவை.
உ.மகாளியின் தலையில் இருக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்டவை அடங்கிய மூட்டையை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு, அவனை முன்னே விட்டு, பின்னால் வந்தார்கள தவிட்டான் உள்ளிட்டவர்கள்.
இந்த வகை குரங்குகள் எதற்கும் பயப்படாதவை. நேராக தலையில் வந்தமர்ந்து மூட்டையை தள்ளி, அள்ளிக்கொண்டு போகும் வகையறாக்கள்.
உ.மகாளிக்கு இப்படியானதொரு குரங்கு அனுபவம் ஏற்கனவே இருக்கிறது.
அக்ரஹாரத்துக்கு புதிதாக வந்திருந்த கல்யாணி டீச்சர், பின் வாசலில் நின்று மேலே பார்த்துக்கொண்டிருந்தாள். உ.மகாளி கீழ வீட்டில் பால் கறந்துகொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
சில பல முறை கல்யாணி டீச்சர், அவனை பார்த்திருந்தாலும் பேசிக்கொண்டதில்லை. அறிமுகமில்லாதவனிடம் எப்படி பேச என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது.
உ.மகாளிக்கு அறிமுகங்கள் தேவையில்லை. முகத்தை பார்த்தே நோக்கம் அறிந்துகொள்ளும் அபிப்ராயன். இருந்தாலும் கல்யாணி டீச்சர், இளவட்ட பசங்களின் கனவு கன்னியாக இருந்த படியாலும் இப்படியான பெண்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்பதாலும் கொஞ்சம் துணிந்தே கேட்டான் உ.மகாளி.
'என்ன டீச்சரு மேலயே பார்த்துட்டு இருக்கீயோ"
'தேங்கா உடைச்சேன். குரங்கு தூக்கிட்டு மச்சிக்கு ஓடிட்டு. தேங்கா போனா கூட பரவாயில்லை. சேலை, ஜாக்கெட் எல்லாத்தையும் அள்ளிட்டு போயிட்டு"
'மச்சியிலதான இருக்கு. இந்தா போறேன் பாருங்க" என்ற உ.மகாளி, அவள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி. மச்சிக்கு சென்றான். அங்கு இருக்கிற அறை பூட்டி இருந்தது. அதற்கு அடுத்து, அடுத்த வீட்டின் மச்சி. அது ராசா ஐயர் வீட்டினுடையது. அங்கு அனுமதி இல்லாமல் பிரவேசித்தால் திருட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்பதால் இங்கிருந்தே அவர் வீட்டு மச்சியை எட்டிப்பார்த்தான்.
குரங்கு இல்லை. ஆனால், சிவப்பு கலர் ஜாக்கெட்டும், இரண்டு கருப்பு கலர் பிராவும் பத்தடி தூரம் தள்ளிக் கிடந்தது. டீச்சர் இதைதான் எதிர்பார்த்தாள் என்பதால், ஆசையாக முதலில் பிராவையும் பிறகு ஜாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு திரும்பும்போது... வேகமாக வந்து முதுகில் விழுந்தது குரங்கு. முதுகில் டர்ர்ர்ர். கொஞ்சம் பயமும், திகிலும் கலந்த உ.மகாளி மச்சியில் இருந்து எப்படி விழுந்தான் என்று தெரியாது. கிழே காயப்போட்டிருந்த மிளாகாய் வத்தலில் மீது சப்பென்று அவனின் பின்பகுதி அமர்ந்திருந்தது.
துணி காய போடுவதற்காக கட்டப்பட்டிருந்த கொடியை கிழித்தும் விழுந்திருந்தான் உ.மகாளி. பிறகு எப்படி டீச்சரின் வீட்டுக்குள் தூக்கிச்செல்லப்பட்டான். சட்டை களைந்து தூங்க வைகக்ப்பட்டான் என்பது அவனுக்கு பிறகுதான் தெரிந்தது. அவன் உணர்வு வந்து பார்த்தபோது, அவனது பின்பக்கத்தை ஐயோடக்ஸால் தடவிக்கொண்டிருந்தாள் டீச்சர்.
டமாலென்று அவளது கையை தட்டிவிட்டு, எழுந்தான். லேசாக வலி இருந்தது. சாரத்தை இழுத்துக்கட்டிக்கொண்டான்.
டீச்சர் அவனது முகத்தைப் பார்க்காமல் பேசினாள்
'ஐயோ நேக்கு உயிரே போயிடுச்சு... சிவ சிவா"- கண்ணை கசக்கினாள்.
'ஒண்ணுமில்ல டீச்சரு. அது முதுவுல விழுந்ததும் காலு தடுமாறிபோச்சு. லேசாதான் வலி, பரவாயில்ல".
பிறகு பலமுறை அவனது கனவுகளில் டீச்சர் வரத்தொடங்கினாள் என்பதும், ஐயோடக்ஸ் மேட்டர் அடிக்கடி ரிபீட் ஆவதும் தனிக்கதை.
வெயில் மறைய தொடங்கிவிட்டது. இப்போது அவர்கள் தோணியாறை நெருங்கி இருந்தார்கள். சின்ன அருவியும் பெரும் பள்ளமும் நிறைந்த பகுதி இது. அருகிலேயே இவர்கள் மாதிரி மாடு மேய்க்க, தேன் எடுக்க, விறகு வெட்ட வருபவர்கள் இங்கு ஏற்கனவே அடுப்பு மூட்டி சோறாக்கிய வடுக்கள் அங்கு இருந்தன.
இரண்டு பாறைகள் ஒன்றுக்கொன்று ஆங்கில ஏ எழுத்து போல சேர்ந்து குகை மாதிரி இருந்ததால், நடுவில் உட்கார்ந்து சோறாக்க வசதியாக இருந்தது. பறைகள் மீது சாக்பீசால், முத்தம்மா, செல்லத்துரை லவ் என்கிற மாதிரியான ஆர்டின் வடிவ சிம்பல்கள் அதிகமாகச் செதுக்கப்பட்டிருந்தன. இப்படியான பெயரிகளில், தான் எவள் பெயரைச் சேர்த்து எழுதுவது என்று நின்று யோசித்துக்கொண்டிருந்தான் உ.மகாளி.
காலை மதியத்திற்கு கொண்டு வரப்பட்ட பழையச்சோறு காலியானதால் இங்கு சோறாக்கிவிட்டு செல்வது என்று முடிவெடுத்தார்கள்.
அப்பகுதி முழுவதும் வீட்டில் செய்யப்படும் முறுக்கின் வாசனை வந்துகொண்டிருந்தது.
'இங்க யாரு வந்து, முறுக்கு சுட போறா" என்று உ.மகாளி, மூக்கை இன்னும் உரிஞ்சு உரிஞ்சு வாசம் தேடிக்கொண்டிருந்தான். தூரத்தில் சாய்ந்து கிடக்கிற மரத்தில் அமர்ந்து பீடிக்குடிக்கலாம் என்றிருந்தவனை, காய்கறி வெட்ட சொன்னான் தவிட்டான்.
'முறுக்கு வாசனை வருது... அங்க இங்கன்னு அலையாத... பாம்புவோ எங்கயாது கிடந்து காத்து குடிச்சாதான் இப்படி வாசனை வரும்" என்று நொடிஞ்சான் சொன்னதும் உ.மகாளிக்கு குபுக்கென வியர்த்தது.
கந்தையாவும் கேசரியும் மாடுகளை கிடையில் போட்டுவிட்டு வந்தார்கள். கால், கைகளை கழுவிவிட்டு வர அருவி அருகே செல்லும் போது, பக்கத்து பள்ளதில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
எட்டிப்பார்த்தான் கேசரி, திக்கென்றிருந்தது அவனுக்கு.
தொடர்கிறேன்.
Sunday, February 14, 2010
கண்ணாடி வளையல் காரி
அமுங்கி உறையும் ஆயிரக்கணக்கான நினைவுகளுடன் உன்னையும் சேர்த்து வைக்க முடியவில்லை. நீ கட்டுக்குள் அடங்காத காயம். எப்போது வலிப்பாய் எப்போது செழிப்பாய் என்பதை சொல்லிவிட முடியாது. நீ வற்றிய கடலை வானம் ஆக்கும் ஆற்றல் பெற்றவள். ஆழ்மனதிலிருந்து பீறிட்டு எழுகிறாய், இல்லை எழுந்து பீறிடுகிறாய்.
என்னை நான் தொலைக்கிற நாட்கள் எல்லாம் உன்னாலே மீள்கிறேன். அல்லது மீட்கப்படுகிறேன். தொடர்ந்து கொலை செய்யும் வன்மத்தையும் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் ஞானத்தையும் எப்போதும் உன் தாவணியில் முடிந்து வைத்திருக்கிறாய்.
உன் ஒற்றைக்கல் மூக்குத்தி, தாக்கும் ஒலியில் தெருவெங்கும் சிதறி தெறிக்கிறது என்னுயிர். மிதித்து செல்லும் பல நூறு கால்களில் ஒட்டிக்கொள்கிறேன். ஒவ்வொரு பாதங்களும் உன்னைப்பற்றியே கேட்கின்றன. சொல்லவோ, சொல்லாமல் இருக்கவோ முடியாதவனாகிறேன். கேட்கிற செவிகளெங்கும் ரவுத்திரம் பொங்கும் உன் விழிகள். அதில் எழும், தீ பிழம்புகள் என்னை தாக்கித் தாக்கிச் செல்கின்றன.
அடங்கமாட்டாத என் ஆணவம், அத்தீப்பிழம்பை விழுங்கச் சொல்கிறது. தொண்டைக்குள் செல்லும் தீப்பிழம்பின் ஓசையில், எப்போதோ நீ கொடுத்த முத்தம் வடிகிறது சொட்டு சொட்டாய். நான் இறந்து பிறக்கிறேன். பிறந்து இறக்கிறேன்.
இருந்தும், உயிரின் ஆழத்தில் இருந்து கொண்டு ஏதோ கேட்கிறாய். கண்ணாடி வளையல் அணிந்த உன் கரங்களைப் பிடித்துக்கொண்டே, உனக்காக வாழ்வேன் என்கிறேன். நீயும் அதையே சொல்கிறாய். எல்லாம் சொல்லிவிட்டு அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொண்டோம். வேண்டாத நினைவுகளை மட்டும் நானும் சுமக்கிறேன், நீயும் சுமப்பாய் என்றே.
(காதலர் தினமாமே... அதான்)
என்னை நான் தொலைக்கிற நாட்கள் எல்லாம் உன்னாலே மீள்கிறேன். அல்லது மீட்கப்படுகிறேன். தொடர்ந்து கொலை செய்யும் வன்மத்தையும் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் ஞானத்தையும் எப்போதும் உன் தாவணியில் முடிந்து வைத்திருக்கிறாய்.
உன் ஒற்றைக்கல் மூக்குத்தி, தாக்கும் ஒலியில் தெருவெங்கும் சிதறி தெறிக்கிறது என்னுயிர். மிதித்து செல்லும் பல நூறு கால்களில் ஒட்டிக்கொள்கிறேன். ஒவ்வொரு பாதங்களும் உன்னைப்பற்றியே கேட்கின்றன. சொல்லவோ, சொல்லாமல் இருக்கவோ முடியாதவனாகிறேன். கேட்கிற செவிகளெங்கும் ரவுத்திரம் பொங்கும் உன் விழிகள். அதில் எழும், தீ பிழம்புகள் என்னை தாக்கித் தாக்கிச் செல்கின்றன.
அடங்கமாட்டாத என் ஆணவம், அத்தீப்பிழம்பை விழுங்கச் சொல்கிறது. தொண்டைக்குள் செல்லும் தீப்பிழம்பின் ஓசையில், எப்போதோ நீ கொடுத்த முத்தம் வடிகிறது சொட்டு சொட்டாய். நான் இறந்து பிறக்கிறேன். பிறந்து இறக்கிறேன்.
இருந்தும், உயிரின் ஆழத்தில் இருந்து கொண்டு ஏதோ கேட்கிறாய். கண்ணாடி வளையல் அணிந்த உன் கரங்களைப் பிடித்துக்கொண்டே, உனக்காக வாழ்வேன் என்கிறேன். நீயும் அதையே சொல்கிறாய். எல்லாம் சொல்லிவிட்டு அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொண்டோம். வேண்டாத நினைவுகளை மட்டும் நானும் சுமக்கிறேன், நீயும் சுமப்பாய் என்றே.
(காதலர் தினமாமே... அதான்)
Wednesday, February 10, 2010
காடு-7
விஜயலட்சுமி அக்கா, உ.மகாளியை பார்த்துவிட்டு, யாரோ என்பதுபோல தலையை திருப்பிக்கொண்டாள். லட்சுமி, இவனை பார்த்த மாத்திரத்தில் யாருக்கும் தெரியாமல் இடது கண்ணை சிமிட்டினாள். புல்லரித்துப்போனான் உ.மகாளி. அவனுள் காதல் தீ நரம்புகளினூடாக, பாயத் தொடங்கியது.
இப்படியானதொரு சந்தர்ப்பம் அவனுக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமானதாகவும் இருந்தது. பெண்களை கண்ணடிக்க, இவன் தயங்கும் வேளையில், ஒரு பெண் அவனை நோக்கி அப்படியானதொரு செய்கையை செய்தால்.?
அடுத்த கட்டமாக என்ன செய்வதென்பதை அவன் அறியாதிருந்தான்.
வெடக்கென கேள்வியை போட்ட பாட்டி, 'ஆளில்லாத ஊருல எலி அம்மணமாலா ஆடுது' என்றொரு சொலவடையை சொல்லிவிட்டு அடுத்த வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தாள்.
லட்சுமி, மச்சி வீட்டின் வெளிப்புறத்துக்கு சென்றுவிட்டாள். அவளின் இன்னொரு பார்வைக்காகவும், இன்னொரு புன்னகைக்காகவும் ஏங்கமடைந்திருந்தான் உ.மகாளி. இதற்கு மேல் அங்கிருந்து நகர அவனால் முடியவில்லை. பார்த்த சில நிமிடங்களிலேயே கூட காதல் வந்துவிடக்கூடிய சாத்தியத்தை அவன் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது பல காதல் முயற்சிகள் கைகூடாமல் போனதிலிருந்து, 'ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்' கதையாய், அதை ஒரு பொருட்டாக நினைக்க கூடாது என்று முடிவு செய்திருந்தான்.
ஆனால், காதல், மனம் வயப்பட்டது. அது முடிவுகளின் முடிவுக்கு முடிச்சு போடும் ஆற்றல் பெற்றது. இப்படித்தான் வரவேண்டும் என்கிற எல்லை ஏதுமின்றி எப்படியும் வரும் சூத்திரம் கொண்டது அல்லது சூத்திரத்திற்கு அப்பாற்பட்டது.
தன்னிலை மறந்து தனக்குள் அவன் சென்றுகொண்டிருந்தபோது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருலகம் அவனுக்காக காத்திருந்தது. அதில் ஒரு மலராக அவளிருந்தாள். அவனது பாதம் பட்டபோது மலர் தேவதையானது. தேவதைகளுக்கும் மலர்களுக்குமான சம்பந்தம் இப்படியாகவும் இருக்கலாம். அவன், அந்த மலரின் வாசத்தை நேசித்தான். அது அவனது ஆழ்மனத்துள் அழைத்துச்சென்றது. ஏக்கங்களின் கட்டுக்கோப்பாய் அடைந்திருக்கும் அங்கு, வாசம் பெண்ணிருவில் நின்றது.
வளையல்கள் அணிந்திருந்த அவளது கைகளை தொட்டான். அந்த தொடுதலில் வானம் கீழாகவும் பூமி மேலாகவும் இருப்பதை உணர்ந்தான். ஆசைகளாய் உறைந்த மனது அவளை அள்ளி அணைத்தது. கட்டிய பிடிக்குள் பாம்பின் வாய்க்குள் அகப்பட்ட தவளையாகியிருந்தாள் அவள்.
'ஏல இங்க என்ன பண்ணுத?'
சத்தம் வந்ததும் நினைவு கலைந்து நிஜத்துக்கு வந்தான் உ.மகாளி.
பிரமாச்சி நின்றுகொண்டிருந்தான். அவனுடன் மாடு மேய்ப்பவன்.
'சும்மாதான். ராத்திரி ஆட்டம் இருக்குலா'
'ஆமா...இங்க நின்னுட்டிருந்தா... வால, இப்பவே பட்டைய அடிச்சாதான் சரியாருக்கும்'
'இல்ல...நீ போயிட்டிரு...வாரேன்'
'ஏ அர்தலி, அங்க எல்லா பயலும் வந்துட்டானுவ...உன்னதாம்ல தேடுதாவோ'
'நீ போ... பின்னாலயே வாரேன்' என்று சொல்லிவிட்டு மேலே பார்த்தான். மச்சியில் லட்சுமி இல்லை. தாவணி ஒன்று நடுவில் காய்ந்துகொண்டிருந்தது. அதற்கு கீழ், மேல் பக்கங்களில் அவளது முகம் தென்படுமா என்று பார்த்தான். அவள் வரவில்லை. இன்னும் சிறிது நேரம் அவளுக்காக காத்திருந்தது. எட்டிப்பார்த்தாள் லட்சுமி. அவளை விட்டுப்போக மனமில்லை. சைகையில், 'நான் அப்புறம் பார்க்கிறேன்" என்பதுபோல் கையாட்டிவிட்டு போனான். அவளும் குத்துமதிப்பாக மீண்டும் சிரித்து வைத்தாள்.
இப்படியாக நான்கைந்து மணி நேரம்,. நகர்ந்துகொண்டிருந்த இரவில், அவளது ஆட்டத்தை பார்க்க நிதானமான போதையில், நண்பர்களுடன் மணலில் அமர்ந்திருந்தான். கொடைக்காக, அடிக்கப்பட்டிருந்தது இந்த ஆற்றுமணல்கள். ஒன்பது பத்துமணிவாக்கில் ஆட்டம் ஆரம்பமானது.
லட்சுமியானவள், கூட்டத்தில் தன்னை தேடுகிறாளா என்பதை பார்த்துக்கொண்டிருந்தான். முதலில் ஒவ்வொரு பாட்டுக்காய் கரகம் சுமந்து ஆடிக்கொண்டிருந்தவளை கொட்டுக்காரர், வேகவேகமாக ஆட வைத்துக்கொண்டிருந்தார்.
பெரும் தொப்பையில் ஏழெட்டு தங்க சங்கிலிகளை மாட்டிக்கொண்டு நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தவர், வேகத்தை கூட்டிக்கூட்டி வாசித்தார். அதற்கு தகுந்தாற்போல் கொட்டுக்காரர்களும் வேகவேகமாக அடித்துக்கொண்டிருந்தார்கள். விஜயலட்சுமி அக்காவும் லட்சுமியும் அதற்கு தகுந்தாற்போல கரகத்தை தலையில் வைத்துக்கொண்டு வேகமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
வியர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்த ஆட்டம், ஒரு வகையில் சாடிஸ்ட் தனம் கொண்டது. மேளக்காரரும் நாகஸ்வரக்காரர்களும் ஆட்டக்காரிகள் மீதான தங்கள் கோபத்தை, அல்லது தங்களுடைய முட்டாள் ஆண்மையை இதன் மூலம் காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.
5 நிமிடம் சுற்றி சுற்றி ஆடுவதற்குள் மயக்கம் வந்துவிடும் நமக்கு. ஆனால், அவர்களை 10 நிமிடம் வரை ஆட வைப்பதற்கு நாகஸ்வரத்தையும் மேளத்தையும் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆட்டம் முடிந்ததும் ஆடியவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.
லட்சுமி, ஆட்டம் முடிந்து, ரெண்டு செம்பு தண்ணீரைக்குடித்துவிட்டு, நாகஸ்வரக்காரரிடம் ஏதோ கோபமாக பேசிவிட்டு, பின்னால் பார்த்தாள். அங்குதான், உ.மகாளி உம்மென்று அமர்ந்திருந்தான். போதையில் அவம் முகம் மாறியிருந்தது.
லட்சுமிக்கு சிரிக்க தோன்றினாலும், அந்த நேரத்தில் அது முடியவில்லை அவளுக்கு. உ.மகாளி, அவள் தன்னைப் காதலிப்பதாகவும், ஆட்டத்தின் போதே தன்னைப் பார்த்து அவள் சிரித்துக்கொண்டிருப்பாள் என்றும் நண்பர்களிடம் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லி வைத்திருந்தான்.
ஆனால், செயல்கள் நேர்மாறாக இருந்தது கொஞ்சம் அவனுக்கு ஏமாற்றத்தைக்கொடுத்தன.
இந்நேரத்தில் அங்கு வந்த சடச்சான், மணி வீட்டில் சாராயம் காய்ச்சப்பட்டு விட்டதாகவும், ஒரு கும்பல் குடித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னான். மதியமே இரண்டு ஆடுகளும் இதற்காக பலியாகியிருந்தன.
இளஞ்சாராயத்தின் ருசி, அவர்களை அங்கு இழுத்தது. காதலை கரகாட்டத்தில் விட்டுவிட்டு வர மறுத்தன மனது. இருந்தாலும் நடந்தான் உ.மகாளி.
போதை ராத்திரியில் புழுதியில் கிடந்து உறங்கிவிட்டு, காலையில் அவன் எழுந்தபோது, லட்சுமி ஊருக்குச் சென்றிருந்தாள்.
மூஞ்சியில் தண்ணீர் விழுந்தபோதுதான் நினைவை கலைத்தான் உ.மகாளி. இப்போது அருகில் லட்சுமியின் சாயலில் இருந்தவளும் அவளோடு வந்திருந்தவர்களும் மாயமாகியிருந்தார்கள்.
'என்னல பகல் கனவா'
தவிட்டான் கேட்டான்.
'இல்ல சும்மா உக்காந்தேன், கண்ணசந்துபோச்சு'
'செரி செரி மாட்டை பத்து.... போவும்"
அசை போட்டுக்கொண்டிருந்த மாடுகள், கிளம்ப ஆயத்தமாயின. சாமானகளின் மூட்டை, இப்போது மீண்டும் உ.மகாளியின் தோளுக்கு வந்தது.
மாட்டுவண்டி செல்வதை போல இருந்த அந்த பாதை, வளைந்து நெளிந்து செல்லக்கூடியது. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் மேலே ஏறிச்செல்லும் பாதையில் புற்கள் நிரம்பியிருந்தன. இரண்டு பக்கமும் கருவை மரங்களும் சிமக்கருவைகளும் அதிகமாக வளர்ந்திருந்தன. உ.மகாளி அந்தப் பகுதியை அதிசயமாக பார்த்தான். தூரத்தில் சுற்றும் முற்றும் மலைகளும், மரங்களும் அடர்ந்த அந்த பெரும் நிலபரப்பு அவனை காட்டுக்குள் இழுத்தது.
தவிட்டான், பின்னால் வரும் உ.மகாளி உள்ளிட்டவர்களைப் பார்த்து சொன்னான்.
'இங்கருங்கல... அன்னா தெரியுது பாரு... பாறைக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கா ஒரு இடம்..'
'ஆமா'
'நாம அங்கதான் போவணும். அது என்னன்னு தெரியுதுலா'
உச்சிமகாளி ஆர்வமாகி, 'தெரியும் அது அருவிதான' என்றான்.
'அருவிதாம்... கீழ ஒரு பெரிய கசம் இருக்கு. தண்ணி நெறய வந்தா அங்க இறங்கிர கூடாது. என்னதாம் நீச்சல் தெரிஞ்சாலும் உள்ள கொண்டுபோயிரும்.. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால, சிவசைலத்துக்காரன் ஒருத்தான் கசத்துல விழுந்து செத்திருக்கான்'
தொடரும்.
இப்படியானதொரு சந்தர்ப்பம் அவனுக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமானதாகவும் இருந்தது. பெண்களை கண்ணடிக்க, இவன் தயங்கும் வேளையில், ஒரு பெண் அவனை நோக்கி அப்படியானதொரு செய்கையை செய்தால்.?
அடுத்த கட்டமாக என்ன செய்வதென்பதை அவன் அறியாதிருந்தான்.
வெடக்கென கேள்வியை போட்ட பாட்டி, 'ஆளில்லாத ஊருல எலி அம்மணமாலா ஆடுது' என்றொரு சொலவடையை சொல்லிவிட்டு அடுத்த வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தாள்.
லட்சுமி, மச்சி வீட்டின் வெளிப்புறத்துக்கு சென்றுவிட்டாள். அவளின் இன்னொரு பார்வைக்காகவும், இன்னொரு புன்னகைக்காகவும் ஏங்கமடைந்திருந்தான் உ.மகாளி. இதற்கு மேல் அங்கிருந்து நகர அவனால் முடியவில்லை. பார்த்த சில நிமிடங்களிலேயே கூட காதல் வந்துவிடக்கூடிய சாத்தியத்தை அவன் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது பல காதல் முயற்சிகள் கைகூடாமல் போனதிலிருந்து, 'ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்' கதையாய், அதை ஒரு பொருட்டாக நினைக்க கூடாது என்று முடிவு செய்திருந்தான்.
ஆனால், காதல், மனம் வயப்பட்டது. அது முடிவுகளின் முடிவுக்கு முடிச்சு போடும் ஆற்றல் பெற்றது. இப்படித்தான் வரவேண்டும் என்கிற எல்லை ஏதுமின்றி எப்படியும் வரும் சூத்திரம் கொண்டது அல்லது சூத்திரத்திற்கு அப்பாற்பட்டது.
தன்னிலை மறந்து தனக்குள் அவன் சென்றுகொண்டிருந்தபோது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருலகம் அவனுக்காக காத்திருந்தது. அதில் ஒரு மலராக அவளிருந்தாள். அவனது பாதம் பட்டபோது மலர் தேவதையானது. தேவதைகளுக்கும் மலர்களுக்குமான சம்பந்தம் இப்படியாகவும் இருக்கலாம். அவன், அந்த மலரின் வாசத்தை நேசித்தான். அது அவனது ஆழ்மனத்துள் அழைத்துச்சென்றது. ஏக்கங்களின் கட்டுக்கோப்பாய் அடைந்திருக்கும் அங்கு, வாசம் பெண்ணிருவில் நின்றது.
வளையல்கள் அணிந்திருந்த அவளது கைகளை தொட்டான். அந்த தொடுதலில் வானம் கீழாகவும் பூமி மேலாகவும் இருப்பதை உணர்ந்தான். ஆசைகளாய் உறைந்த மனது அவளை அள்ளி அணைத்தது. கட்டிய பிடிக்குள் பாம்பின் வாய்க்குள் அகப்பட்ட தவளையாகியிருந்தாள் அவள்.
'ஏல இங்க என்ன பண்ணுத?'
சத்தம் வந்ததும் நினைவு கலைந்து நிஜத்துக்கு வந்தான் உ.மகாளி.
பிரமாச்சி நின்றுகொண்டிருந்தான். அவனுடன் மாடு மேய்ப்பவன்.
'சும்மாதான். ராத்திரி ஆட்டம் இருக்குலா'
'ஆமா...இங்க நின்னுட்டிருந்தா... வால, இப்பவே பட்டைய அடிச்சாதான் சரியாருக்கும்'
'இல்ல...நீ போயிட்டிரு...வாரேன்'
'ஏ அர்தலி, அங்க எல்லா பயலும் வந்துட்டானுவ...உன்னதாம்ல தேடுதாவோ'
'நீ போ... பின்னாலயே வாரேன்' என்று சொல்லிவிட்டு மேலே பார்த்தான். மச்சியில் லட்சுமி இல்லை. தாவணி ஒன்று நடுவில் காய்ந்துகொண்டிருந்தது. அதற்கு கீழ், மேல் பக்கங்களில் அவளது முகம் தென்படுமா என்று பார்த்தான். அவள் வரவில்லை. இன்னும் சிறிது நேரம் அவளுக்காக காத்திருந்தது. எட்டிப்பார்த்தாள் லட்சுமி. அவளை விட்டுப்போக மனமில்லை. சைகையில், 'நான் அப்புறம் பார்க்கிறேன்" என்பதுபோல் கையாட்டிவிட்டு போனான். அவளும் குத்துமதிப்பாக மீண்டும் சிரித்து வைத்தாள்.
இப்படியாக நான்கைந்து மணி நேரம்,. நகர்ந்துகொண்டிருந்த இரவில், அவளது ஆட்டத்தை பார்க்க நிதானமான போதையில், நண்பர்களுடன் மணலில் அமர்ந்திருந்தான். கொடைக்காக, அடிக்கப்பட்டிருந்தது இந்த ஆற்றுமணல்கள். ஒன்பது பத்துமணிவாக்கில் ஆட்டம் ஆரம்பமானது.
லட்சுமியானவள், கூட்டத்தில் தன்னை தேடுகிறாளா என்பதை பார்த்துக்கொண்டிருந்தான். முதலில் ஒவ்வொரு பாட்டுக்காய் கரகம் சுமந்து ஆடிக்கொண்டிருந்தவளை கொட்டுக்காரர், வேகவேகமாக ஆட வைத்துக்கொண்டிருந்தார்.
பெரும் தொப்பையில் ஏழெட்டு தங்க சங்கிலிகளை மாட்டிக்கொண்டு நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தவர், வேகத்தை கூட்டிக்கூட்டி வாசித்தார். அதற்கு தகுந்தாற்போல் கொட்டுக்காரர்களும் வேகவேகமாக அடித்துக்கொண்டிருந்தார்கள். விஜயலட்சுமி அக்காவும் லட்சுமியும் அதற்கு தகுந்தாற்போல கரகத்தை தலையில் வைத்துக்கொண்டு வேகமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
வியர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்த ஆட்டம், ஒரு வகையில் சாடிஸ்ட் தனம் கொண்டது. மேளக்காரரும் நாகஸ்வரக்காரர்களும் ஆட்டக்காரிகள் மீதான தங்கள் கோபத்தை, அல்லது தங்களுடைய முட்டாள் ஆண்மையை இதன் மூலம் காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.
5 நிமிடம் சுற்றி சுற்றி ஆடுவதற்குள் மயக்கம் வந்துவிடும் நமக்கு. ஆனால், அவர்களை 10 நிமிடம் வரை ஆட வைப்பதற்கு நாகஸ்வரத்தையும் மேளத்தையும் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆட்டம் முடிந்ததும் ஆடியவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.
லட்சுமி, ஆட்டம் முடிந்து, ரெண்டு செம்பு தண்ணீரைக்குடித்துவிட்டு, நாகஸ்வரக்காரரிடம் ஏதோ கோபமாக பேசிவிட்டு, பின்னால் பார்த்தாள். அங்குதான், உ.மகாளி உம்மென்று அமர்ந்திருந்தான். போதையில் அவம் முகம் மாறியிருந்தது.
லட்சுமிக்கு சிரிக்க தோன்றினாலும், அந்த நேரத்தில் அது முடியவில்லை அவளுக்கு. உ.மகாளி, அவள் தன்னைப் காதலிப்பதாகவும், ஆட்டத்தின் போதே தன்னைப் பார்த்து அவள் சிரித்துக்கொண்டிருப்பாள் என்றும் நண்பர்களிடம் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லி வைத்திருந்தான்.
ஆனால், செயல்கள் நேர்மாறாக இருந்தது கொஞ்சம் அவனுக்கு ஏமாற்றத்தைக்கொடுத்தன.
இந்நேரத்தில் அங்கு வந்த சடச்சான், மணி வீட்டில் சாராயம் காய்ச்சப்பட்டு விட்டதாகவும், ஒரு கும்பல் குடித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னான். மதியமே இரண்டு ஆடுகளும் இதற்காக பலியாகியிருந்தன.
இளஞ்சாராயத்தின் ருசி, அவர்களை அங்கு இழுத்தது. காதலை கரகாட்டத்தில் விட்டுவிட்டு வர மறுத்தன மனது. இருந்தாலும் நடந்தான் உ.மகாளி.
போதை ராத்திரியில் புழுதியில் கிடந்து உறங்கிவிட்டு, காலையில் அவன் எழுந்தபோது, லட்சுமி ஊருக்குச் சென்றிருந்தாள்.
மூஞ்சியில் தண்ணீர் விழுந்தபோதுதான் நினைவை கலைத்தான் உ.மகாளி. இப்போது அருகில் லட்சுமியின் சாயலில் இருந்தவளும் அவளோடு வந்திருந்தவர்களும் மாயமாகியிருந்தார்கள்.
'என்னல பகல் கனவா'
தவிட்டான் கேட்டான்.
'இல்ல சும்மா உக்காந்தேன், கண்ணசந்துபோச்சு'
'செரி செரி மாட்டை பத்து.... போவும்"
அசை போட்டுக்கொண்டிருந்த மாடுகள், கிளம்ப ஆயத்தமாயின. சாமானகளின் மூட்டை, இப்போது மீண்டும் உ.மகாளியின் தோளுக்கு வந்தது.
மாட்டுவண்டி செல்வதை போல இருந்த அந்த பாதை, வளைந்து நெளிந்து செல்லக்கூடியது. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் மேலே ஏறிச்செல்லும் பாதையில் புற்கள் நிரம்பியிருந்தன. இரண்டு பக்கமும் கருவை மரங்களும் சிமக்கருவைகளும் அதிகமாக வளர்ந்திருந்தன. உ.மகாளி அந்தப் பகுதியை அதிசயமாக பார்த்தான். தூரத்தில் சுற்றும் முற்றும் மலைகளும், மரங்களும் அடர்ந்த அந்த பெரும் நிலபரப்பு அவனை காட்டுக்குள் இழுத்தது.
தவிட்டான், பின்னால் வரும் உ.மகாளி உள்ளிட்டவர்களைப் பார்த்து சொன்னான்.
'இங்கருங்கல... அன்னா தெரியுது பாரு... பாறைக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கா ஒரு இடம்..'
'ஆமா'
'நாம அங்கதான் போவணும். அது என்னன்னு தெரியுதுலா'
உச்சிமகாளி ஆர்வமாகி, 'தெரியும் அது அருவிதான' என்றான்.
'அருவிதாம்... கீழ ஒரு பெரிய கசம் இருக்கு. தண்ணி நெறய வந்தா அங்க இறங்கிர கூடாது. என்னதாம் நீச்சல் தெரிஞ்சாலும் உள்ள கொண்டுபோயிரும்.. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால, சிவசைலத்துக்காரன் ஒருத்தான் கசத்துல விழுந்து செத்திருக்கான்'
தொடரும்.
Thursday, February 4, 2010
காடு -6
அம்மன் கோயில் கொடை நடந்துகொண்டிருந்தது அப்போது. பால் குடம் எடுத்துச்செல்பவர்கள் கூட்டமாக சென்றுக்கொண்டிருந்தனர். இவர்கள் ஒரு தெருவில் வருகிறார்கள் என்றால் அவர்கள் அடுத்து வரப்போகும் தெருவில் கரகாட்டாம் சென்றுக்கொண்டிருக்கும். தெருவில் ஏதாவது ஒரு முனையில் நின்று, கொளுத்தும் வெயிலில் வேர்க்க வியர்க்க அவர்கள் ஆடுவார்கள். மாலை குறிப்பிட்ட நேரம் வரை தெருத் தெருவாக நின்று ஆடிவிட்டு, அறைக்கு சென்றுவிடுவார்கள். பிறகு இரவு 9 மணிக்கு மேல் அம்மன் கோயில் வாசலில் நடக்கும் ஆட்டம்.
உ.மகாளி உள்ளிட்ட இளசுகள் இதுகாலத்தில், நெல்லையில் இருந்து வந்திருந்த விஜயலட்சுமி அக்கா அண்ட் பார்ட்டியின் நடனம் மற்றும் தெரியும் அங்கங்களுக்காக தவம் கிடப்பார்கள். சுத்துப்பட்டில், விஜயலட்சுமி அக்கா, கரகாட்டத்தில் பிரபலமாகியிருந்ததற்கு, அவரது அழகு முக்கியமானதாக இருந்தது.
ஊர் பெருசுகள், கொடைக்கு நாள் குறித்த நாளிலேயே, விஜயலட்சுமிக்கு அட்வான்ஸ் கொடுக்க செல்வதில் பரபரப்பாகி விடுவார்கள். இரண்டு மூன்று பேர் போதுமென்கிற அட்வான்ஸ் விஷயத்துக்கு ஏழெட்டு பேர். இந்த ஆர்வம், மேளக்காரர்களுக்கு, பந்தல் போடுவர்களுக்கு வில்லடிப்பவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் நேரங்களில் இருப்பதில்லை என்பதற்கான காரணம் அறிந்ததுதான்.
விஜயலட்சுமி அக்காவுக்கும் இது தெரியாமலில்லை. ஆனால், இனிமையான அவளது குரலால், பெருசுகளை கிறக்கத்தில் நடமாட விட்டிருந்தாள். அந்த பேச்சு மற்றும் சிரிப்பை தவிர அவளிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
பார்ட்டிகளோடு ஊர் வந்து இறங்கியதுமே, தனது சுய புராணத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆரம்பித்துவிடுவாள். இந்த ஆரம்பம், பெரும்பாலும் அதிகமான கூட்டம் இருக்கும்போதாக இருக்கும்.
'புலியூர்ல ஆட்டத்துக்கு போயிருந்தம்ணே... கேட்டேளா? ரெண்டு பயலுவோ, சும்மா கண்ணடிக்காம், இங்க வர்றியா, அங்க வர்றியான்னு அசிங்க அசிங்கமா செய்கை பண்ணிட்டிருந்தாம்... ஆட்டத்தை முடிச்சுட்டு, வெளியில வந்ததும் போட்டம் பாருங்க... அன்னைக்கு வேற அரிவாளை எடுத்துட்டு வ்ரலை. இருந்திச்சுன்னா அங்கயே பொலி போட்டிருப்பேன்'
அடுத்த நிமிடமே, பெருசுகள், 'அப்டியா தாயீ, நீ நல்லா சாத்திருக்கணும். எங்கூட்டாளி அங்க இருந்தம்னா, கண்ணை நோட்டி எடுத்திருப்பேன்' என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்.
இந்த முறை விஜயலட்சுமி அக்கா, அவளது உறவுக்கார பெண்ணை ஆட்டத்துக்கு அழைத்து வந்திருந்தாள். எல்லாரும் மூக்கு குத்திக்கொண்டிருந்தாலும் அவளது ஒற்றைக்கல் மூக்குத்திக்கு ஏதோ சிறப்பு இருப்பதாகவே பட்டது. பாவாடை, தாவணியில் தேவதையாக தெரிந்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.
பகல் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல், இரவு நேர ஆட்டத்துக்கு மட்டும் அவள் பயன்பாடு இருந்தது. விஜயலட்சுமி அண்ட் கோ தங்கியிருந்தது உ.மகாளியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில். அதாவது சூச்சமடையான் வீட்டு மச்சியில். அங்கிருந்து தலைமுடியை சிக்கெடுக்கும் வி.லட்சுமி அக்காவை பார்க்க, எதிரில் இருக்கும் பஜனைமடத்தில் ஊர்க்கதை பேசுவது போல் கூட்டம் காத்திருக்கும்.
'பசும்பால் இங்க கிடைக்கும்னு சொன்னாங்க' என்று கண்ணாடி வளையல் தேவதையின் குரல் வந்ததிலிருந்து இடத்தை விட்டு நகரவில்லை உ.மகாளி. மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறத்தில் அவள் இருந்தாள்.
'கொஞ்சம் பொறுக்கேளா? இன்னா கறந்து சுட சுடத் தாரேன்' என்றான் உ.மகாளி. கறக்கும் சாக்கில் கிடைத்த அவள் பற்றிய விவரம்:
பெயர், லட்சுமி. வி.அக்காவுக்கு தூரத்து உறவு. வயது ம்ஹூம்.
பாலைக்கொடுத்துவிட்டு, தாங்கமாட்டாத சிரிப்போடு உ.மகாளி சொன்னான்:
'நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க'
வெட்கப்பட்டுக்கொண்டே, பெரும் புன்னகையோடு சென்றாள் லட்சுமி, வீட்டு வாசலுக்குள் நுழையுமுன் அவள் திரும்பி பார்த்தபோது, உ.மகாளி, தன்னை கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.
'இப்டிலாம் நடக்குமால'
இதையடுத்து மச்சியின், வெளியில் அவள் நிற்பதும் சிரிப்பதும், உ.மகாளியை காதல் பைத்தியக்காரனாக்கிக் கொண்டிருந்தது.
மாலையில் சில வீடுகளில் பால் கறந்துகொடுத்துவிட்டு, சீக்கிரமாக வீடு வந்துவிடுவான் உ.மகாளி. விஜயலட்சுமி அண்ட் கோ இங்கிருக்கப்போவது வெறும் இரண்டு நாட்கள். இரண்டாவது நாள் இரவே கிளம்ப ரெடியாகிவிடுவார்கள்.
இதில் லட்சுமியை எப்படி காதலிப்பது என்கிற யோசனையில் ஒரு பகல் கழிந்திருந்தது. விஷயம் வி.அக்காவுக்கு தெரிந்தால் சில விபரீதங்களும் நடக்கலாம் என்பதால், காதலை எப்படி சொல்லித்தொலைப்பது என்பதில் குழப்பமடைந்திருந்தான்.
'எப்பவும் வீட்டுல ஒரு நிமிஷம் நிக்க மாட்டே. இன்னைக்கு என்னடா பேரா, வீட்டையே சுத்தி சுத்தி வாரே'
செவிட்டுப்பாட்டி, இப்படிச் சத்தமாக கேட்கவும் விஜயலட்சுமி அக்காவும் லட்சுமியும் கீழே எட்டிப்பார்த்தார்கள்.
தொடரும்...
உ.மகாளி உள்ளிட்ட இளசுகள் இதுகாலத்தில், நெல்லையில் இருந்து வந்திருந்த விஜயலட்சுமி அக்கா அண்ட் பார்ட்டியின் நடனம் மற்றும் தெரியும் அங்கங்களுக்காக தவம் கிடப்பார்கள். சுத்துப்பட்டில், விஜயலட்சுமி அக்கா, கரகாட்டத்தில் பிரபலமாகியிருந்ததற்கு, அவரது அழகு முக்கியமானதாக இருந்தது.
ஊர் பெருசுகள், கொடைக்கு நாள் குறித்த நாளிலேயே, விஜயலட்சுமிக்கு அட்வான்ஸ் கொடுக்க செல்வதில் பரபரப்பாகி விடுவார்கள். இரண்டு மூன்று பேர் போதுமென்கிற அட்வான்ஸ் விஷயத்துக்கு ஏழெட்டு பேர். இந்த ஆர்வம், மேளக்காரர்களுக்கு, பந்தல் போடுவர்களுக்கு வில்லடிப்பவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் நேரங்களில் இருப்பதில்லை என்பதற்கான காரணம் அறிந்ததுதான்.
விஜயலட்சுமி அக்காவுக்கும் இது தெரியாமலில்லை. ஆனால், இனிமையான அவளது குரலால், பெருசுகளை கிறக்கத்தில் நடமாட விட்டிருந்தாள். அந்த பேச்சு மற்றும் சிரிப்பை தவிர அவளிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
பார்ட்டிகளோடு ஊர் வந்து இறங்கியதுமே, தனது சுய புராணத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆரம்பித்துவிடுவாள். இந்த ஆரம்பம், பெரும்பாலும் அதிகமான கூட்டம் இருக்கும்போதாக இருக்கும்.
'புலியூர்ல ஆட்டத்துக்கு போயிருந்தம்ணே... கேட்டேளா? ரெண்டு பயலுவோ, சும்மா கண்ணடிக்காம், இங்க வர்றியா, அங்க வர்றியான்னு அசிங்க அசிங்கமா செய்கை பண்ணிட்டிருந்தாம்... ஆட்டத்தை முடிச்சுட்டு, வெளியில வந்ததும் போட்டம் பாருங்க... அன்னைக்கு வேற அரிவாளை எடுத்துட்டு வ்ரலை. இருந்திச்சுன்னா அங்கயே பொலி போட்டிருப்பேன்'
அடுத்த நிமிடமே, பெருசுகள், 'அப்டியா தாயீ, நீ நல்லா சாத்திருக்கணும். எங்கூட்டாளி அங்க இருந்தம்னா, கண்ணை நோட்டி எடுத்திருப்பேன்' என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்.
இந்த முறை விஜயலட்சுமி அக்கா, அவளது உறவுக்கார பெண்ணை ஆட்டத்துக்கு அழைத்து வந்திருந்தாள். எல்லாரும் மூக்கு குத்திக்கொண்டிருந்தாலும் அவளது ஒற்றைக்கல் மூக்குத்திக்கு ஏதோ சிறப்பு இருப்பதாகவே பட்டது. பாவாடை, தாவணியில் தேவதையாக தெரிந்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.
பகல் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல், இரவு நேர ஆட்டத்துக்கு மட்டும் அவள் பயன்பாடு இருந்தது. விஜயலட்சுமி அண்ட் கோ தங்கியிருந்தது உ.மகாளியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில். அதாவது சூச்சமடையான் வீட்டு மச்சியில். அங்கிருந்து தலைமுடியை சிக்கெடுக்கும் வி.லட்சுமி அக்காவை பார்க்க, எதிரில் இருக்கும் பஜனைமடத்தில் ஊர்க்கதை பேசுவது போல் கூட்டம் காத்திருக்கும்.
'பசும்பால் இங்க கிடைக்கும்னு சொன்னாங்க' என்று கண்ணாடி வளையல் தேவதையின் குரல் வந்ததிலிருந்து இடத்தை விட்டு நகரவில்லை உ.மகாளி. மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறத்தில் அவள் இருந்தாள்.
'கொஞ்சம் பொறுக்கேளா? இன்னா கறந்து சுட சுடத் தாரேன்' என்றான் உ.மகாளி. கறக்கும் சாக்கில் கிடைத்த அவள் பற்றிய விவரம்:
பெயர், லட்சுமி. வி.அக்காவுக்கு தூரத்து உறவு. வயது ம்ஹூம்.
பாலைக்கொடுத்துவிட்டு, தாங்கமாட்டாத சிரிப்போடு உ.மகாளி சொன்னான்:
'நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க'
வெட்கப்பட்டுக்கொண்டே, பெரும் புன்னகையோடு சென்றாள் லட்சுமி, வீட்டு வாசலுக்குள் நுழையுமுன் அவள் திரும்பி பார்த்தபோது, உ.மகாளி, தன்னை கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.
'இப்டிலாம் நடக்குமால'
இதையடுத்து மச்சியின், வெளியில் அவள் நிற்பதும் சிரிப்பதும், உ.மகாளியை காதல் பைத்தியக்காரனாக்கிக் கொண்டிருந்தது.
மாலையில் சில வீடுகளில் பால் கறந்துகொடுத்துவிட்டு, சீக்கிரமாக வீடு வந்துவிடுவான் உ.மகாளி. விஜயலட்சுமி அண்ட் கோ இங்கிருக்கப்போவது வெறும் இரண்டு நாட்கள். இரண்டாவது நாள் இரவே கிளம்ப ரெடியாகிவிடுவார்கள்.
இதில் லட்சுமியை எப்படி காதலிப்பது என்கிற யோசனையில் ஒரு பகல் கழிந்திருந்தது. விஷயம் வி.அக்காவுக்கு தெரிந்தால் சில விபரீதங்களும் நடக்கலாம் என்பதால், காதலை எப்படி சொல்லித்தொலைப்பது என்பதில் குழப்பமடைந்திருந்தான்.
'எப்பவும் வீட்டுல ஒரு நிமிஷம் நிக்க மாட்டே. இன்னைக்கு என்னடா பேரா, வீட்டையே சுத்தி சுத்தி வாரே'
செவிட்டுப்பாட்டி, இப்படிச் சத்தமாக கேட்கவும் விஜயலட்சுமி அக்காவும் லட்சுமியும் கீழே எட்டிப்பார்த்தார்கள்.
தொடரும்...
Subscribe to:
Posts (Atom)
