எந்திரன் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியா சென்றிருந்தேன். பாங்கியில் உள்ள ஹோட்டல் ஈக்கிடோரியலில் அறை. விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வந்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஹோட்டல் அறையில் சிகரெட்டுகளாக கழிந்துகொண்டிருந்தது முதல் நாள். மாலையில் டீக்குடித்துவிட்டு எங்காவது வெளியில் கிளம்பலாம் என்று நினைத்தால், 'பக்கத்துல எதுவும் இல்லை. ஒரு டாக்ஸியை பிடிச்சு, 20 மினிட்ஸ் போனா... அங்க ஒரு ஷாப்பிங் மால் இருக்கு" என்றார் ரிஷப்சனிஸ்ட்.
ஹோட்டலை சுற்றி கோல்ஃப் கிரவுண்ட். வெளியில் செல்லும் ஆசையை விட்டுவிட்டு கிரவுண்டை சுற்றி வந்தேன். அருகில் நீச்சல் குளம். 'நீச்சலடிச்சு நாளேச்சே' என்று குளிக்கும் மூடுக்கு வந்தேன். நான்கைந்து வெள்ளைக்கார பெண்மணிகள் சேரில் சாய்ந்துகொண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். டவல் ஒன்றை வாங்கிக்கொண்டு நானும் ஒரு சேரை தேர்ந்தெடுத்து வைத்து விட்டு, பொத்தென்று குதித்தேன் தண்ணீருக்குள். தண்ணீர் வெள்ளைக்கார பெண்மணிகளின் மீது தெறிக்க, குனிந்து என் மூஞ்சுக்கு நேராக, கூட்டாக விட்டார்கள் லுக். ஸாரி என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஸ்மைலினேன்.
தொடையில் தெறித்த தண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தாள் ஒருத்தி. இன்னும் அதிகம் அங்கு குளிக்க எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. வேறு யாரும் நீச்சல் குளத்தில் இல்லாததது மட்டுமல்ல, அவர்களுக்கு ஏதோ தீங்கு செய்துவிட்ட மாதிரி குற்ற உணர்வு. எழுந்து துவட்டிவிட்டு அறை.
ரிகர்சல் முடிந்து வந்திருந்தார்கள் கலா மாஸ்டரின் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். வரும்போதே ஏர்போர்ட்டில் வாங்கி வந்திருந்த ரெமி மார்டின் (ஒரு பாஸ்போர்டுக்கு ஒரு பாட்டில்தான் தருவாங்களாம்) என்னை குடித்துத்தொலையேன் என்றது. பக்கத்து அறையில் இருந்த ஒளிப்பதிவாள நண்பர் கம்பெனி கொடுக்க, ரெமி அதிகாலை வரை (மலேசிய நேரம் 3.30 வரை) தாக்குப் பிடித்தது. ஹோட்டலில் இருந்து புத்ரஜெயா நகரை இரவில் பார்க்க இதமாக இருந்தது. இங்கு, இன்னென்ன இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட நகரம் என்றார்கள்.
இண்டர்நேஷனல் கன்வன்ஷன் செண்ட்ரும் அதன் அருகில் இருக்கிற ஏரி (?)யும் கொள்ளை அழகு.
இரவு போதையில் கழிய, கிறக்கத்தில் உதித்தது காலை. இன்னைக்கு எங்கயாவது போயே ஆகணும் என்று மலேசிய நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். வந்தார். அவரது காரில் மறுநாள் கோலாலம்பூரை சுற்ற கிளம்பினோம். கடந்த வருடம் வந்த இடம்தான் என்பதால் எதை பார்க்க, எங்க போக என்பது நண்பரின் விருப்பதில் விடப்பட்டது.
சாலைகளில் தொடங்கி சாலைகளில் முடியும் பயணங்கள் அற்புதமானது. அதிலும் காரும் காரோட்டும் நண்பரும் அமைந்துவிட்டால் பயணங்கள், சுகங்களாகும் சாத்தியமிருக்கிறது.
மீண்டும் பத்துகேவ், ட்வின் டவர், சாக்லேட் பேக்டரி, புத்தர் கோவில் என சுற்றிவிட்டு ரிட்டர்ன் ஆனோம். கெண்டிங் போகலாம் என்றால் நேரமில்லை. நள்ளிரவு பார்ட்டிக்கு தேடுவார்களே.
இரவு சாப்பாடு பஃபே சிஸ்டம். வந்திருக்கிற எந்திரன் டீமுக்காக, வேலை பார்க்கும் தமிழர்களை மொத்தமாக இங்கே இறக்கியிருந்தார்கள். 'அண்ணே... நீங்க எந்த ஊரு'வில் ஆரம்பித்து ஏஜெண்ட் ஏமாற்றியது வரை கதை கதையாக வந்தது. பிரபலங்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்கள். 'ரஜினி சார் எந்த ஹோட்டல்' என்று அவரையும் தேடிக்கொண்டிருந்தார்கள்.
வைத்திருந்த சாப்பாடு ஐட்டங்களில் நம்ம ஊர் டேஸ்ட் எதுவுமில்லை. நான்வெஜ் வகையறாக்களை அரைகுறையாக வேக வைத்திருந்தார்கள். நானும் நண்பரும் பழவகைகளை மொத்தமாக அள்ளி, பசி போக்கிக்கொண்டோம். ஆனால், நம்ம ஊர் நடிகர்கள், நடிகைகள், ரொம்ப டேஸ்டாக இருப்பது மாதிரி அள்ளி அள்ளி முழுங்கியது எப்படி என்றுதான் தெரியவில்லை.
மறுநாள் விழா. காலையிலேயே செண்டருக்கு வந்துவிட்டோம். படிப்படியாக ஏறி உள்ளே சென்றால் ஆடிட்டோரியம் பிரமாண்டமாக இருந்தது. அதற்கடுத்து நடந்த விழா நிகழ்ச்சிகள்தான் உங்களுக்கு தெரியுமே?
மலேசியாவில், இம்முறை நான் கற்றுக்கொண்ட இரண்டு மலாய் வார்த்தை :
செலாமத் ததாங், தெரிமா காஷிஹ்.
Showing posts with label சொந்த கதை. Show all posts
Showing posts with label சொந்த கதை. Show all posts
Sunday, August 8, 2010
Friday, April 9, 2010
பிறந்ததும் மறந்ததும்
கடந்துபோகிற காலங்கள் எல்லாம் ஏதாவதொன்றைக் கற்றுக்கொடுத்தே போகிறது. கற்பதும் கல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது.
பேஸ்புக்கில் பிறந்த நாளைப் பார்த்துவிட்டு, நண்பர்கள் போன் செய்தபோதுதான் மறந்துபோன எல்லாமும் மூளைக்கீறி மூச்சுமுட்ட வைத்தது.
கருவைக்காட்டிலும், தென்னந்தோப்புகளிலும் வயல் வரப்புகளிலும் ஆடுமாடுகளோடு அம்மணமாக, சகதியோடு சகதியாக, புரண்டு எழுந்த காலங்களில் எனது இன்னொரு பெயர், 'அப்பனை கொன்ன பய'. பிறந்த 22 வது நாளில் தந்தையானவர் மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத்திலுள்ள மலைக்காட்டில் விபத்தொன்றில் உயிரிழந்துபோனார்.
'அவன் தாத்தா மாதிரியே இருக்கான் பாரேன்' என்ற சொந்தங்களுக்கு, பிறகு அப்பாவை கொன்ன பாவியாகிப்போனேன். பிறகான நான்கைந்து வருடங்கள் அவுரங்காபாத்தில், அரசு கொடுத்த சலுகைக்காக, அம்மா, தாத்தா, பாட்டி, அக்காவுடன் வாழ நேர்ந்தது. பிறகு, அந்த வேலையை உதறச்சொல்லிவிட்டு, அம்மாவை, சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார் தாத்தா.
'காய் வோ, கஷ காய்' என்றிருந்த என் மொழி, 'ஏலே... எங்கோற' என்றானது.
வாழப்பழகிய நாட்களில் பிறந்த நாளும் அப்பா இறந்த நாளும் எல்லாருக்குமே மறந்த நாளாகிவிட்டது. சில பல வருடங்கள் கழித்து, ஒரு மார்கழி மாதம், 19-ம் தேதி ஏதோ தோன்றியவளாக அம்மா, அய்யமார் தெருவில் இருந்த பெருமாள் கோயிலுக்கு அழைத்துச்சென்றாள். 'இவனுக்கு அர்ச்சனை பண்ணுங்க. இன்னைக்குதான் பொறந்தான்' என்றாள்.
இதுபற்றி ஆச்சிக்கும் அம்மாவுக்கும் கருத்து மோதல்.
'அவன் பொறந்தது மார்கழி 23 லா. நீ இன்னைக்கு சொல்லுத' என்று ஆச்சி சொல்ல, அம்மா மறுக்க, பிறகு மறந்துபோனது பிறந்ததும் தேதியும்.
பள்ளிச்சான்றிதழ் புதிதாக, ஏப்ரல் பத்தை தந்து போயிருந்தது. ஜாதகம் வேறொரு தேதி. பிறந்த நாள் என்கிற சொல், எப்போதாவது அப்ளிகேஷன் நிரப்புகிற இடத்தில் மட்டுமே ஞாபகத்துக்கு வந்து செல்லும் வஸ்தானது.
கல்லூரியில் முதல் வருடம் ஆச்சர்யமாக பரபரக்க பார்த்துக்கொண்டு வந்த ஒரு நாளில், சக தோழி பிலோமினா, 'இந்தாங்க, பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று ஒரு வாழ்த்தட்டையையும், கூலிகிளாஸ் கண்ணாடியையும் தந்துவிட்டு போனாள்.
பர்த் டேன்னா இப்படிலாம் பண்ணணும் என்கிற விஷயம் அப்போது ஆச்சரியமாக இருந்தது. பிறகு, அவள் பிறந்த நாள் எதுவென்று தெரியாமல் நான் ஏதும் அவளுக்கு பரிசு கொடுக்காத நாளில், அவள் மற்றொரு தோழியிடம் கோபித்துக்கொண்டதாக அறிந்தேன். கொடுப்பதும் வாங்குவதுமான பிறந்த நாள் பற்றி நானென்ன அறிவேன்?
அவளின் அடுத்த வருட பிறந்தநாளில் கொடுப்பதற்கு ஏதுமன்றி லீவு போட்டு அமர்ந்த கதை தனி.
பிறகு பிழைப்புக்கு மாநகரம் வந்தபிறகு, பிறந்த நாள் சுத்தமாக மறந்துவிட்டது. வாழ்வில் மோதும் வலிமை தேடி அலைபவனுக்கு அது தேவையில்லாததாகவும் பட்டது.
பேஸ்புக்கில் பிறந்த தேதியை அறிந்து கொண்டு, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கதவை தட்டிய நண்பர்கள், ஷாக் கொடுத்தார்கள்.
பிறகு என் மழலைகள் கொடுத்த முத்தங்களுக்குப் பிறகு நண்பனின் வீட்டில் திறக்கப்பட்டது ரெமி மார்டின்.
திறக்கப்படுகிற பாட்டில்களுக்காகவும், நண்பர்களின் அன்புக்காகவுமாவது வந்துவிட்டுப் போகட்டும் பிறந்ததும் மறந்ததும்.
பேஸ்புக்கில் பிறந்த நாளைப் பார்த்துவிட்டு, நண்பர்கள் போன் செய்தபோதுதான் மறந்துபோன எல்லாமும் மூளைக்கீறி மூச்சுமுட்ட வைத்தது.
கருவைக்காட்டிலும், தென்னந்தோப்புகளிலும் வயல் வரப்புகளிலும் ஆடுமாடுகளோடு அம்மணமாக, சகதியோடு சகதியாக, புரண்டு எழுந்த காலங்களில் எனது இன்னொரு பெயர், 'அப்பனை கொன்ன பய'. பிறந்த 22 வது நாளில் தந்தையானவர் மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத்திலுள்ள மலைக்காட்டில் விபத்தொன்றில் உயிரிழந்துபோனார்.
'அவன் தாத்தா மாதிரியே இருக்கான் பாரேன்' என்ற சொந்தங்களுக்கு, பிறகு அப்பாவை கொன்ன பாவியாகிப்போனேன். பிறகான நான்கைந்து வருடங்கள் அவுரங்காபாத்தில், அரசு கொடுத்த சலுகைக்காக, அம்மா, தாத்தா, பாட்டி, அக்காவுடன் வாழ நேர்ந்தது. பிறகு, அந்த வேலையை உதறச்சொல்லிவிட்டு, அம்மாவை, சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார் தாத்தா.
'காய் வோ, கஷ காய்' என்றிருந்த என் மொழி, 'ஏலே... எங்கோற' என்றானது.
வாழப்பழகிய நாட்களில் பிறந்த நாளும் அப்பா இறந்த நாளும் எல்லாருக்குமே மறந்த நாளாகிவிட்டது. சில பல வருடங்கள் கழித்து, ஒரு மார்கழி மாதம், 19-ம் தேதி ஏதோ தோன்றியவளாக அம்மா, அய்யமார் தெருவில் இருந்த பெருமாள் கோயிலுக்கு அழைத்துச்சென்றாள். 'இவனுக்கு அர்ச்சனை பண்ணுங்க. இன்னைக்குதான் பொறந்தான்' என்றாள்.
இதுபற்றி ஆச்சிக்கும் அம்மாவுக்கும் கருத்து மோதல்.
'அவன் பொறந்தது மார்கழி 23 லா. நீ இன்னைக்கு சொல்லுத' என்று ஆச்சி சொல்ல, அம்மா மறுக்க, பிறகு மறந்துபோனது பிறந்ததும் தேதியும்.
பள்ளிச்சான்றிதழ் புதிதாக, ஏப்ரல் பத்தை தந்து போயிருந்தது. ஜாதகம் வேறொரு தேதி. பிறந்த நாள் என்கிற சொல், எப்போதாவது அப்ளிகேஷன் நிரப்புகிற இடத்தில் மட்டுமே ஞாபகத்துக்கு வந்து செல்லும் வஸ்தானது.
கல்லூரியில் முதல் வருடம் ஆச்சர்யமாக பரபரக்க பார்த்துக்கொண்டு வந்த ஒரு நாளில், சக தோழி பிலோமினா, 'இந்தாங்க, பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று ஒரு வாழ்த்தட்டையையும், கூலிகிளாஸ் கண்ணாடியையும் தந்துவிட்டு போனாள்.
பர்த் டேன்னா இப்படிலாம் பண்ணணும் என்கிற விஷயம் அப்போது ஆச்சரியமாக இருந்தது. பிறகு, அவள் பிறந்த நாள் எதுவென்று தெரியாமல் நான் ஏதும் அவளுக்கு பரிசு கொடுக்காத நாளில், அவள் மற்றொரு தோழியிடம் கோபித்துக்கொண்டதாக அறிந்தேன். கொடுப்பதும் வாங்குவதுமான பிறந்த நாள் பற்றி நானென்ன அறிவேன்?
அவளின் அடுத்த வருட பிறந்தநாளில் கொடுப்பதற்கு ஏதுமன்றி லீவு போட்டு அமர்ந்த கதை தனி.
பிறகு பிழைப்புக்கு மாநகரம் வந்தபிறகு, பிறந்த நாள் சுத்தமாக மறந்துவிட்டது. வாழ்வில் மோதும் வலிமை தேடி அலைபவனுக்கு அது தேவையில்லாததாகவும் பட்டது.
பேஸ்புக்கில் பிறந்த தேதியை அறிந்து கொண்டு, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கதவை தட்டிய நண்பர்கள், ஷாக் கொடுத்தார்கள்.
பிறகு என் மழலைகள் கொடுத்த முத்தங்களுக்குப் பிறகு நண்பனின் வீட்டில் திறக்கப்பட்டது ரெமி மார்டின்.
திறக்கப்படுகிற பாட்டில்களுக்காகவும், நண்பர்களின் அன்புக்காகவுமாவது வந்துவிட்டுப் போகட்டும் பிறந்ததும் மறந்ததும்.
Subscribe to:
Posts (Atom)