Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Tuesday, September 1, 2009

காடு


காலில் பீய்ங்கான் கிழித்து
படுத்திருந்த நாட்களில்
அவள் கொடுத்த
கத்தரி வத்தலும்
கருவாட்டு துண்டும்
எந்த காதலனுக்கும்
கிடைக்காத மருந்து.
-தொகுப்பிலிருந்து


காடு- கோடானு கோடி புதிர்களை புதைத்துக்கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவி கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக்காத்தில் நமக்கு பல கதைகள் கிடக்கிறது. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டி வைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுத்தவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண்தரையெங்கும் எவனோ சென்று வந்த ஒன்றையடி பாதை எனக்கும் இன்னும் ஆச்சர்யம். காட்டையும் மாட்டையும் வாழ்க்கையாக கொண்டு பிராயம் எனக்கு தந்த அனுபவம் நிறைய. கண்ணாடி விரியன் பாம்பிலிருந்து பெயர் புரியாத ஊர்வன, பறப்பன, பாய்வன உள்ளிட்டவற்றை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசான் அது. ஆசான்கள் கொஞ்சம் பயமூட்டுபவர்கள். நிறைய படிப்பூட்டுபவர்கள். அலற வைக்கும் காட்டின் குரல்கள் நம்மையும் அதிர வைப்பவை. சுகங்களும் சுவாரஸ்யங்களும் புதையலாகியிருக்கும் அக்காட்டின் அனுபவத்தை நண்பனின் வாழ்க்கையோடு விரைவில் தொடரப் போகிறேன்.

(கவிதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை பாஸு!)