அதிகாலையிலேயே அம்மன் கோயில் பொத்தையில் வந்து உட்கார்ந்துகொண்டார் நயினார். ட வடிவிலான பாறையில் முதுகுசாய்ந்து அமர்ந்துகொண்டு இதுவரை நான்கு பீடிகளை காலி பண்ணியிருந்தார். பொத்தையின் நேர் கீழ் மற்றும் தென்கிழக்கு பக்கங்கள் மோரிஸ் வாழைகள் காய்த்துக்கிடக்கும் வயக்காடுகள். கொஞ்சம் வடக்காக வாய்க்கால். இதில் கால் கழுவிவிட்டு மேல பார்க்கிற கூனையன், நயினாரை அடையாளங்கண்டுகொண்டான். கூனையன் தனது பணி நிமித்தமாக மதுரையில் முகாமிட்டிருப்பவன். முகாம் என்று சொல்வது காரணமாகத்தான். கூனையனின் பணி என்பது ஓட்டல்களில் சமைப்பது. முதலாளியோ, கடையில் வேலை பார்ப்பவர்களோ ஏதாவது சொல்லிவிட்டால், மறு நாளே வேலையை மாற்றிவிடும் சுபாவத்தை இயற்கையிலேயே பெற்றிருந்தான். தற்சமயம் அவன் வேலை பார்ப்பது 43 வது கடையில். அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர், தற்சயம் மதுரை ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் தனது பணியை செய்திருப்பவன்.
செங்குத்தாக இருக்கிற பாறையில் தொப்பை சுமக்கின்ற வயிறோடு, கால்களை ஊன்றி ஏறுவதற்கு சிரமம் என்றாலும் பார்த்த இடத்தில் கேட்காமல் போகக்கூடாது என்கிற முறையில் மேலேறினான்.
கூனையனை பார்த்துவிட்டு, வா என்பதுபோல மவுனமாக தலையாட்டி திரும்பிக்கொண்டான் நயினார்.
‘காலைல நாலு மணி பஸ்லதான் வந்தேன். எங்க சித்திலா வெஷயத்தை சொன்னா. என்னடா இப்படியாயி போச்சு’
....
‘நல்ல பய. பொடி வாங்கிட்டு வான்னா, ஓடி போய் ஓடியாந்துருவான். இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்கானே’
....
‘இப்படி கொண்டுபோவவா பிள்ளைய கொடுத்தான்’
கூனையன் சொன்னதும் கண்ணீர் முட்டி வந்து அழ ஆரம்பித்தார் நயினார். பொழுது விடிந்து விடும் போலிருந்தது.
நயினாருக்கு தொழில் மாடுகளுக்கு காயடிப்பது. புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பச்சத்தி மாடன் கோயில் முன்பாக பரந்து விரிந்திருக்கிற இடத்தில் வைத்துதான் தொழில் நடக்கும். கோயிலுக்கு சுற்றுசுவர் எதுவும் கிடையாது என்பதால் பெரிதாக நிற்கிற ஆழ மற்றும் வேப்பரமரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு பகுதியாகவும் வாகை மரங்கள், நவ்வா மரங்கள் இருக்கிற இடம் மறுபகுதியாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. வாகை மரங்கள் இருக்கும் இடத்தை தன் தொழிலுக்கு தேர்ந்தெடுத்தார் நயினார். இந்த இடத்தின் பின்பக்கம் அக்ரஹார தெரு. பெரும்பாலான ஐயர்கள் இதைக்கண்டும் காணாமல் சென்றாலும் கொண்டை ஐயர், மற்றும் சந்தரமய்யருக்கு இந்தப் பாவத்தை பார்க்க வேண்டியிருக்கிறதே என்கிற எரிச்சல். என்னதான் வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டிருந்தாலும் மாடுகள் போடும் சத்தங்கள் அவர்களுக்கு பாவத்தின் ஞாபகத்தை உசுப்பும். பொறுக்கமுடியவில்லை. ஒரு திங்கட்கிழமை காலையில் பஞ்சாயத்து கூடியது. அக்ரஹாரத்தில் நாற்பது குடும்பங்கள். அவர்கள் அல்லாத குடும்பங்கள், ஊரில் 500 சொச்சம்.
‘எனக்கு அந்த இடந்தான் வாக்கா இருக்கு’ என்றார் நயினார்.
‘இங்கரு, சாமியோ சொல்லுதாவோ. அவ்வோ ஞாயத்தையும் கேக்கணும். அதனால, வேப்ப மரத்து பக்கத்துல நீ வேலைய பாரு’ என்றது பஞ்சாயத்து.
தலையை ஆட்டிக்கொண்டே வந்தார் நயினார். பிறகு இதே இடம் நிலைத்துவிட்டது.
ஊரின் அருகிலுள்ள பூவன்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், வடக்கு பத்து, தாட்டாம்பட்டி, சிவசைலம் ஆகிய ஊர்களிலிருந்தும் காயடிக்க மாடுகள் குவியும்.
நயினார் தனது ஒத்தாசு வேலைக்கு அக்காள் மகன் சுடலையை வைத்திருந்தார். இவனது வேலை, காயடிக்க வேண்டிய மாடுகளின் வாய் மற்றும் கால்களை கயிற்றால் கட்டி படுக்க வைப்பது. பெரும்பாலான மாடுகள் லேசில் மசிந்துவிடுவதில்லை. பக்கத்தில் படுத்திருக்கும் மாடுகளைப் பார்த்ததும் துள்ளும். இம்மாதிரியான மாடுகளை கையாள்வதில் சுடலை கைதேர்ந்தவன். சரிந்துகிடக்கும் மாடுகளின் கால் மற்றும் வாயை மாட்டுக்காரர்கள் பிடித்துக்கொள்ள வேண்டும். நயினார் இடுக்கி மாதிரியான மரத்திலான கட்டையை கொண்டு , மாட்டின் கொட்டையில் வைத்து கபக்கென அமுக்கு. கொட்டையில் இருக்கின்ற இரண்டு பகுதிக்குமான தொடர்பை கொண்டிருக்கிற அந்த நரம்பு இந்த அடித்தலில் காலியாகிவிட்டால் போதும். அமுக்கியதுமே துள்ளி அடங்கும் மாடுகள். பிறகு எழும் மாடுகளைப்பார்த்தால் உயிரற்றது போல காணப்படும். இரண்டு மூன்று நாட்கள்தான். பிறகு சரியாகிவிடும். காயடிப்பது சிலருக்கு பாவம். சிலருக்கு தொழில்.
நயினாருக்கு பெரிய சொத்து எதுவும் இல்லை. குடியிருக்க வீடும், கொஞ்சமாக இடமும் சொத்து. அவனது மனைவி மூக்கம்மாள் ஊரில் சொத்துக்காரி. காயடித்தலில் கிடைக்கும் கொஞ்ச காசுதான் வருமானம். அதிலும் இவ்வளவு வேணும் என்றெல்லாம் கேட்கமாட்டான். கொடுத்ததுதான் பணம்.
இரண்டாவதாக பிறந்த மகன் இரண்டாவது வயதில் மஞ்சள் காமாலையால் பலியான பிறகு, வாழ்க்கை வெறுத்து போனது நயினாருக்கு. இரண்டாவது மகன்தான் அவருக்கு எல்லாம். முதல் மகன் ஏழாவது படித்துக்கொண்டிருக்கிறான். அவன் மூன்றாவது படிக்கும்போது, மாடு வயிற்றில் குத்தி ஆபரேஷன் செய்ய வேண்டியதாகிவிட்டது. பணத்துக்கு அலைந்து அலைந்து பார்த்து கிடைத்ததில் ரூபாய் கொஞ்சம் குறைகிறது. அப்போதுதான் அம்பாசமுத்திரம் தர்மாஸ்பத்திரியில் இதை கேள்விபட்டான். குடும்ப கட்டுப்பாடு. போய் படுத்து எழுந்திரித்துவிட்டு வரும்போது, கையில் ஆயிரத்து ஐநூறு ரூபாயும் அரிசி பையும் ஆப்பிள் பழமுமாக வெளியே வந்தான். அந்தப் பணம்தான் மகனை காப்பாற்றியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூட விடுமுறை நாளில் பெரியவன் கேட்டான்.
‘யப்போ, எல்லா பயலுவோலும் காக்கநல்லூருக்கு சிறுகிழங்கு எடுக்க போறானுவளாம். போயாரட்டா?’
இது தேவையில்லைதான். ஆனால், சேக்காளிகளுடன் செல்கிறான் என்பதற்காக சம்மதித்தார் நயினார்.
காக்கநல்லூர் ஆற்றுக்கு மேலே வயல். ஆற்றங்கரை செத்தைகளாலும் மரங்களாலும் சூழ்ந்தது. வரிசையாக வயலில் அமர்ந்து கிழங்கு எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதில் பாட்டிகள் முதல் குமரிகள் வரையிலும் அடக்கம். பயல்கள் சகதி படிந்த கிழங்கை வயல்காரன் பார்க்காதபோது ஒருவர் மீது ஒருவர் எரிந்துகொண்டிருந்தார்கள்.
மாலை நான்குமணியளவில் நயினாரிடம் விஷயத்தை சொன்னதும் உயிர் நின்று வந்தது. பதறியடித்துக்கொண்டு துரையப்பா வைத்தியரிடம் ஓடினார்.
வேப்பங்குலையை ஆட்டி ஆட்டி வைத்தியர் ஒருவனுக்கு பண்டுவம் பார்த்துக்கொண்டிருக்க, கீழ கிடந்தான் அவர் மகன்.
‘நல்ல பாம்பாம். கடிச்சு ரொம்ப நேரத்துக்கு பெறவுதான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. கூட போன நல்லமுத்து மவனையும் கடிச்சிருக்கு. அவன் பொழச்சிட்டான். உம்மவன்...’
‘யய்யா...ராசா... ஏலே அப்பனை இப்படி உட்டுட்டு போயிட்டியடா...’
கண்ணீரும் கதறலும் கிராமம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தது.
இன்றோடு ஒரு மாதமாகிவிட்டது.
மகனின் படத்துக்கு அருகில் விளைக்கை ஏற்றிவிட்டு அமர்ந்தாள் நயினார் மனைவி. பொட்டலத்தை தலையில் போட்டு படுத்துக்கொண்டிருந்த நயினாருக்கு எரியும் விளக்கின் ஊடாக கொள்ளி தெரிந்துகொண்டிருந்தது.
உரையாடல் - சிறுகதை போட்டிக்கு
,
Monday, June 29, 2009
Monday, June 15, 2009
கேரக்டர்: சாமி கொண்டாடி-3
மந்தரக்கோன் கைய புடிச்சதும் திமிருனாரு. 'எம் மேலயால கையை வக்கியோ'ன்னு வேட்டிய மடிச்சு கெட்டுனாரு. அதுக்குள்ள நாலஞ்சு இளவட்ட பயலு்வோ வந்து தர தரன்னு இழுத்துட்டு வந்துடானுவோ. அந்தானி, ஊர்ல முடிவு பண்ணுனாவோ. இனும பெரியசாமிக்கு இந்த திருட்டு பய ஆடக்கூடாதுன்னு. இந்த வெவாரத்தை வச்சு, சங்க பணத்து கணக்கு வழக்கையெல்லாம் மோவப்பயகிட்ட கொடுத்தாவோ. 'அடுத்த கொடை வாரதுக்குள்ள எவன் பெரியசாமிக்கு ஆடுதானோ அவன் ரெத்தம் கக்கி சாவறதை பாக்கத்தான் போறியோ"ன்னு சாபத்தை கொடுத்துட்டு போனாரு மந்தரக்கோன்.
இப்படியொரு தப்பை பண்ணிட்டோமே; எவனும் மதிக்கமாட்டானுவோளேங்க கவலையெல்லாம் மந்தரக்கோனுக்கு இல்லை. இன்னும் அவனை பெரியசாமிகொண்டாடின்னு சொல்லிக்கிட்டிருக்காவோ.அவனும் அதே கெத்தோட மானங்கெட்ட பொழப்பு நடத்திக்கிட்டிருதான் இருக்காம்.
அடுத்த கொடைக்கு கால் நாட்டுன ராத்திரி, வீட்டுக்குள்ள இருந்து மந்தரக்கோனுக்கு சாமி வந்துட்டு, 'ஓய் ஓய்"னு சத்தம் போடுதாரு. அவரு வீட்டு முன்னால சாமியாடிட்டு அவரு போடுத சத்தம் கீழத் தெரு வரைக்கும் கேட்டுது.
'என்னையவாடா எதுக்குயோ. பாருங்க என்ன பண்ணுதன்னு" -சத்தமா இதை சொன்னதும் அடுத்தாபல புதுசா பெரியசாமிக்கு ஆடப்போற செல்லையாவுக்கு பயம் வந்துச்சு.
செத்த நேரம் அப்படி இப்படின்னு சத்தம் போட்டுட்டு போயிட்டாரு மந்தரக்கோன்.
சூச்சமடையாரு தாத்தாகிட்ட போனான் செல்லையா., இவன் இப்படி சொல்லிட்டானேன்னு.
'ஏல இதுக்கால பயப்படுத;சாமிங்கது எல்லாரையும் காப்பத்ததான். அழிக்க இல்லைல. நீ போய் வேலைய பாரு. நானிருக்கேன்"ன்னாரு.
அந்தானி வந்துட்டான் செல்லையா.
கொடை வந்துட்டு. திங்ககிழமை சாமி ஆத்துல போயி தண்ணி எடுத்துட்டு வருவாரு. வந்ததும் ராத்திரிக்கு சாமக்கொடை ஆரம்பிக்கும். புது பெரிய சாமி கொண்டாடி ஆத்துல போயி தண்ணியெடுத்துட்டு, பெரிய சாமி கொண்டாடிக்குன்னு, சாமி பூடத்துக்கு கீழ இருக்குத பலகையில உக்காந்துட்டாரு. ராத்திரிக்கு கொட்டு அடிச்சதும் கோயில்ல செல்லையா ஆடுதாரு.... வீட்டுல மந்தரக்கோன் சந்தம் போட்டுட்டு ஆடிக்கிட்டிருக்காரு. ஆனா, கோயிலு பக்கமே அவரு வரலை.
கொடையெல்லாம் முடிஞ்சு போச்சு. அவரு சொன்ன மாதிரி எதுவும் நடக்கலை. ஆனாலும் இன்னைக்கும் தாந்தான் பெரிய சாமி கொண்டாடிங்கத மாதிரி மீசை திருவிகிட்டு தெனாவட்டா அலைஞ்சுகிட்டிருக்கான் மந்தரக்கோன். எந்த கேவலமும் அவனை ஒண்ணும் செய்யலை.
முற்றும்
இப்படியொரு தப்பை பண்ணிட்டோமே; எவனும் மதிக்கமாட்டானுவோளேங்க கவலையெல்லாம் மந்தரக்கோனுக்கு இல்லை. இன்னும் அவனை பெரியசாமிகொண்டாடின்னு சொல்லிக்கிட்டிருக்காவோ.அவனும் அதே கெத்தோட மானங்கெட்ட பொழப்பு நடத்திக்கிட்டிருதான் இருக்காம்.
அடுத்த கொடைக்கு கால் நாட்டுன ராத்திரி, வீட்டுக்குள்ள இருந்து மந்தரக்கோனுக்கு சாமி வந்துட்டு, 'ஓய் ஓய்"னு சத்தம் போடுதாரு. அவரு வீட்டு முன்னால சாமியாடிட்டு அவரு போடுத சத்தம் கீழத் தெரு வரைக்கும் கேட்டுது.
'என்னையவாடா எதுக்குயோ. பாருங்க என்ன பண்ணுதன்னு" -சத்தமா இதை சொன்னதும் அடுத்தாபல புதுசா பெரியசாமிக்கு ஆடப்போற செல்லையாவுக்கு பயம் வந்துச்சு.
செத்த நேரம் அப்படி இப்படின்னு சத்தம் போட்டுட்டு போயிட்டாரு மந்தரக்கோன்.
சூச்சமடையாரு தாத்தாகிட்ட போனான் செல்லையா., இவன் இப்படி சொல்லிட்டானேன்னு.
'ஏல இதுக்கால பயப்படுத;சாமிங்கது எல்லாரையும் காப்பத்ததான். அழிக்க இல்லைல. நீ போய் வேலைய பாரு. நானிருக்கேன்"ன்னாரு.
அந்தானி வந்துட்டான் செல்லையா.
கொடை வந்துட்டு. திங்ககிழமை சாமி ஆத்துல போயி தண்ணி எடுத்துட்டு வருவாரு. வந்ததும் ராத்திரிக்கு சாமக்கொடை ஆரம்பிக்கும். புது பெரிய சாமி கொண்டாடி ஆத்துல போயி தண்ணியெடுத்துட்டு, பெரிய சாமி கொண்டாடிக்குன்னு, சாமி பூடத்துக்கு கீழ இருக்குத பலகையில உக்காந்துட்டாரு. ராத்திரிக்கு கொட்டு அடிச்சதும் கோயில்ல செல்லையா ஆடுதாரு.... வீட்டுல மந்தரக்கோன் சந்தம் போட்டுட்டு ஆடிக்கிட்டிருக்காரு. ஆனா, கோயிலு பக்கமே அவரு வரலை.
கொடையெல்லாம் முடிஞ்சு போச்சு. அவரு சொன்ன மாதிரி எதுவும் நடக்கலை. ஆனாலும் இன்னைக்கும் தாந்தான் பெரிய சாமி கொண்டாடிங்கத மாதிரி மீசை திருவிகிட்டு தெனாவட்டா அலைஞ்சுகிட்டிருக்கான் மந்தரக்கோன். எந்த கேவலமும் அவனை ஒண்ணும் செய்யலை.
முற்றும்
Sunday, June 7, 2009
பேட்டியாம்ல!
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அதுக்கு நீண்ட ப்ளாஷ்பேக இருக்கு. எங்கப்பா மகாராஷ்ட்ராவுல வேலை பார்த்தாரு. அங்கயே பொறந்துட்டதால இந்த பெயர். இந்தப் பெயர் கண்டிப்பா பிடிக்கும். அதுலயும் ஒரு சென்டிமென்ட் இருக்கு.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
டிசம்பர் 8. நண்பனின் மரணத்தின் போது...
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு சொல்லி ஒரு டைரக்டர் 15 வருஷத்துக்கு முன்னால என்னை அசிஸ்டெண்டா சேர்த்துக்கிட்டாரு.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சோறு. புளித்தண்ணி. கானம் துவையல்.
5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
கண்டிப்பா.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கிணத்துல.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பல்லு. ஏன்னா எனக்கு ஓட்டைப்பல்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
உடனே கோபம் வராது. பிடிக்காததும் அதுதான்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
தினமுமே லேட்டாவே வாங்க.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் சின்னவன் நீனோ
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ப்ளூ ஜீன்ஸ். வொயிட் டிசர்ட்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
களவானியே...
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிகப்பு.
14.பிடித்த மணம்?
மல்லி... மல்லி
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
ஜ்யோவ்ராம் சுந்தரு, நம்ம பைத்தியக்காரன்... அநியாயத்துக்கு நல்லவங்களாச்சே!
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
எல்லாமே.
17. பிடித்த விளையாட்டு?
செல்லாங்குச்சி.
18.கண்ணாடி அணிபவரா?
பின்ன.
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
அப்டிலாம் இல்லை. எல்லாத்தையும் பார்த்து தொலைச்சுடுவேன்..
20.கடைசியாகப் பார்த்த படம்?
மாயாண்டி குடும்பத்தார்
21.பிடித்த பருவ காலம் எது?
கோடை. கிணத்துல குளிக்கலாமில்ல.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
பரசுராமின் சாளரம்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படம் வைக்கிறதே இல்லை.
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: கோயில் கொடையில் பட்றையன் சாமிக்கு அடிக்கும் கொட்டு.
பிடிக்காதது: ஏங்க இங்க வாங்க!
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இலங்கை. டில்லி. எது தூரம்?
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நல்லா மாடுமேய்ப்பேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கள் இறக்க அனுமதிக்க மாட்டேங்கிறாங்களே!
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அதைதான் தேடுறேன்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
தோணியாறு.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே...
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மூச்!
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நதியில் விழுந்த இலை.
அதுக்கு நீண்ட ப்ளாஷ்பேக இருக்கு. எங்கப்பா மகாராஷ்ட்ராவுல வேலை பார்த்தாரு. அங்கயே பொறந்துட்டதால இந்த பெயர். இந்தப் பெயர் கண்டிப்பா பிடிக்கும். அதுலயும் ஒரு சென்டிமென்ட் இருக்கு.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
டிசம்பர் 8. நண்பனின் மரணத்தின் போது...
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்காது. ஆனா, நல்லா இருக்குன்னு சொல்லி ஒரு டைரக்டர் 15 வருஷத்துக்கு முன்னால என்னை அசிஸ்டெண்டா சேர்த்துக்கிட்டாரு.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சோறு. புளித்தண்ணி. கானம் துவையல்.
5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
கண்டிப்பா.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கிணத்துல.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பல்லு. ஏன்னா எனக்கு ஓட்டைப்பல்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
உடனே கோபம் வராது. பிடிக்காததும் அதுதான்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
தினமுமே லேட்டாவே வாங்க.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் சின்னவன் நீனோ
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ப்ளூ ஜீன்ஸ். வொயிட் டிசர்ட்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
களவானியே...
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிகப்பு.
14.பிடித்த மணம்?
மல்லி... மல்லி
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
ஜ்யோவ்ராம் சுந்தரு, நம்ம பைத்தியக்காரன்... அநியாயத்துக்கு நல்லவங்களாச்சே!
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
எல்லாமே.
17. பிடித்த விளையாட்டு?
செல்லாங்குச்சி.
18.கண்ணாடி அணிபவரா?
பின்ன.
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
அப்டிலாம் இல்லை. எல்லாத்தையும் பார்த்து தொலைச்சுடுவேன்..
20.கடைசியாகப் பார்த்த படம்?
மாயாண்டி குடும்பத்தார்
21.பிடித்த பருவ காலம் எது?
கோடை. கிணத்துல குளிக்கலாமில்ல.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
பரசுராமின் சாளரம்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படம் வைக்கிறதே இல்லை.
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: கோயில் கொடையில் பட்றையன் சாமிக்கு அடிக்கும் கொட்டு.
பிடிக்காதது: ஏங்க இங்க வாங்க!
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இலங்கை. டில்லி. எது தூரம்?
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நல்லா மாடுமேய்ப்பேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கள் இறக்க அனுமதிக்க மாட்டேங்கிறாங்களே!
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அதைதான் தேடுறேன்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
தோணியாறு.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே...
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மூச்!
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நதியில் விழுந்த இலை.
Monday, June 1, 2009
கேரக்டர்: சாமி கொண்டாடி-2
மந்திரக்கோனுக்கு, இவன் ஏன் வர்றாம்னு ஒண்ணும் பிடிபடல. மொகத்தை வேறபக்கம் திருப்பிட்டு, யோசிக்குத மாதிரி உக்காந்திருந்தாரு.
என்னைக்கும் வராத சம்முவக்கோனை,'வாரும்யா, இங்ஙன உக்காரும்'னு சொன்னாரு சின்ன சுப்பையா. துண்டை உதறிட்டு உக்காந்தாரு.
வெவாரம் ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும்னு பாத்துட்டு இருந்த சம்முவக்கோனுக்கு சப்புனு போச்சு. சும்மா அவங்கவங்க அங்கங்க உக்காந்து பேசிக்கிட்டிருக்காவோ. எதுக்கு இப்டி இருக்காவோன்னு அவருக்கு பிடிபடல.
அந்தானி, சின்ன சுப்பையாவை கூப்டு, 'இப்ப யாரு வரணும்னு காத்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதானே"ன்னு சொன்னாரு. இவரு பேசிக்கிட்டிருக்கதை, மந்திரக்கோன் கோஸ்கண்ணு போட்டு பாத்துட்டு, சண்முவக்கோன் ஏதோ வில்லங்கத்தோட தான் வந்திருக்கான்னு நெனச்சிக்கிட்டாரு.
சின்ன சுப்பையா, சத்தம் போட்டு, ஏம் இப்டி உக்காந்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதான'ன்னு சொன்னாரு.
'இரும்யா. வெவாரத்துக்கு வர வேண்டிய மோவப்பயல காணுமே"ன்னு சத்தம் வந்ததும், எதுத்தாப்ல சம்முவக்கோன் மவன் கண்ணனும், மோகப்பயலும் வந்தாவோ.
மந்திரக்கோனுக்கு திக்குனு ஆயிப்போச்சு. ''சரிப்பா. வந்துட்டாம். ஏல மோவா, நீ பெரியசாமி கொண்டாடிய, எச்சிக்கையால கன்னத்துல அடிச்சிருக்கே. இது உம்மையா இல்லையா" ன்னு மந்தரக்கோனுக்கு சிங்கி அடிக்கத, கசமுத்து கேட்டாம்.
மோகப்பய சம்முவக்கோனை பாத்தாம்.
'மொதல்ல எனக்கொரு பஞ்சாயத்து இருக்கு. அதை பேசிட்டு, பெறவு இதை பேசுவோம்"னு ஆரம்பிச்சாரு சம்முவக்கோன்.
கூட்டம் புரா, இதென்ன கதைன்னு பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. மந்தரக்கோன் மீசையை தடவிட்டு தரையை பாத்துக்கிட்டு இருந்தாரு.
''வெஷயம் என்னன்னு சொல்லு சம்முவம். பாப்போம்" ன்னாரு சின்ன சுப்பையா.
'இங்க, பெரிய மனுஷன்னு இருக்குத சாமிகொண்டாடி இதுவரைக்கு கோயிலுக்கு வரியே கொடுக்காம ஏமாத்திருக்காரு. நாமலாம் என்ன கேணப்பயலுவோலா"ன்னு ஆரம்பிச்சாரு.
'யோவ் அஞ்சாரு தெரியுமோ உமக்கு. யாரை பாத்து என்ன சொல்லுத. நாங்கென்ன கஞ்சிக்கு வழியில்லாமயா அலையுதோம்"ன்னாம் மந்தரக்கோன் மவன். அவனுக்கு கூட மாட அவனுவ சொக்காரனுவோ வந்துட்டானுவோ.
மோகப்பய, அவரு மவனை பாத்து, ';நீ ஏம்ல குதிக்க, உங்கப்பந்தானல இதை சொன்னாரு"னு சொன்னதும் கூட்டத்துல சல சலன்னு பேச்சு.
இதுக்கு வெவாரத்தை பேசிட்டு மத்ததை பேசுவோம்னாவோ.
ஒரே காச்சு மூச்சுன்னு சத்தம். மந்தரக்கோன் போதையில சொன்னதை மோவனும், சம்முவக்கோன் மவனும் கூட்டதுல சொன்னதும் ஆதாரமா போச்சு. அங்ஙனயே புது தலைவரை தேர்ந்தெடுக்கணும்னு, மந்தரக்கோனை ஊரை விட்டு ஒதுக்கணும்னு பேச்சி. செல பேரு, ஊரைவிட்டு ஒதுக்காண்டாம், அம்மன் கோயிலுக்கு நாலுலிட்டரு எண்ணையையும், அஞ்சாயிரம் ரூபா தண்டம் (அபராதம்) கட்டச்சொல்லுங்கன்னாவோ.
இவ்வளவு நடக்கும்போது, திடீர்னு துண்டை உதறிட்டு, 'என்ன மயி்ரைல பேசுதியோ; எம்மேலயே குத்தம் சொல்ல வந்தேட்டேளா"ன்னுட்டு எழுந்திரிச்சு போவ போனாரு மந்தரக்கோன்.
யாரும் விடலை. ரொம்ப நாளா இருந்த கொஞ்ச நஞ்ச கோவத்தையும் இப்ப கொட்டி, 'உன்னையபத்திதான் பேசிட்டிருக்கு. எங்க அவசரமா வெளிய போற. உள்ள உக்காரு"ன்னுட்டாவோ. அவருக்கு அவமானமா போச்சு. மூச்சு, மேலயும் கிழயும் ஏறி ஏறி இறங்குது. சங்காபீசை சுத்தி நிக்குத ஆளுவோலாம் சுவத்துல எட்டி நின்னும, இங்க வேடிக்கை பாக்காவோ. அதுல நாலஞ்சு பொம்பளைலுவோலும் உண்டு. கோவம் கோவமாவும் வருது. இந்த நேரத்துல என்ன செய்ய முடியும்?.
மோவப்பய சொன்னதை இந்தாளு மறுத்துலாம் பேசல. அப்டின்னா ஒத்துக்கிடுதாருய்யா, அடுத்த முடிவை எடுங்கங்காவோ. ஆளாளுக்கு பேசி, பேசி கடைசில, வீட்டுல தூங்கிட்டிருந்த சூச்சமடையன் தாத்தாவை கூட்டிட்டு வந்தாவோ. இந்த மாதிரி தலைவரு, பெரியசாமிகொண்டாடிக்கெல்லாம் வெவாரம் சொல்லணும்னா பெரிய மனுஷங்க வேணும்.
உடம்பு சரியில்லைன்னு படுத்துக்கிடந்த சூச்சமடைய தாத்தா இருமிகிட்டே வந்தாரு. ஊருல பாதி சொத்து அவருக்குங்கதால அவரு பேச்சுக்கு கொஞ்சம் மரியாதையும் உண்டு. இவருக்குன்னு அவரு வீட்டுல இருந்து கயித்து கட்டுலையும் தூக்கிட்டு வந்தாவோ. அதுல வந்து உக்காந்தாரு. 'அதாவது வெவாரம் என்னனனா'ன்னு சம்முவக்கோன் ஆரம்பிச்சாரு.
எல்லாம் தெரியுங்கத மாதிரி கையை காண்பிச்சாரு தாத்தா. செத்த நேரம் அமைதியா இருந்தாரு. அவரு பேரன் சுருட்டை கொண்டு வந்து கொடுத்ததும் பத்த வச்சுட்டு, புகைய இழுத்தாரு.
'இங்க பாருங்க, கோயிலுக்கு வரி கொடுக்காம ஏமாத்திருக்கது, நம்மள மட்டுமில்லை, சாமியையும்தான் ஏமாத்திருக்கான். அதனால இனும அவன் பெரியசாமிக்கு ஆட கூடாது. இதுதான் நான் சொல்லுதது"ன்னாரு பாருங்க, கூட்டத்துல குசு குசுன்னு பேசுதானுவோ. ஓரமா செவத்துல சாஞ்சிட்டிருந்த மந்தரக்கோன், உர்ருனு பாத்துக்கிட்டிருக்கான். அவங்கூட நாலஞ்சு பேரு உக்காந்துட்டுருக்கான்.
சம்முவக்கோன், 'இதுதான் சரி;அவன் என்ன சொல்லுதான்னு கேளுங்க. அடுத்த பெரிய சாமியை தேர்தெடுப்போம்"ன்னாரு பாருங்க.
மந்தரக்கோன் வேகமா எந்திரிச்சாரு, 'நீங்க ஆட்டுததுக்கெல்லாம் நானும் என் சொக்காரப் பயலுவோலும் ஆடமாட்டோம். என்ன வேணாலும் பண்ணிக்கிங்க. அடுத்த கொடைக்கு என்னைய தவிர எந்த சாமி ஆடிடுதாம்னு பாக்கேன்"ன்னு சொல்லிட்டு போனாரு.
சூச்சமடைய தாத்தாவுக்கு சுள்ளுனு கோவம் வந்துட்டு.
'ஏல அவனை புடிச்சு இழுங்களே"ன்னாரு.
நாளைக்கு சொல்றேன்.
என்னைக்கும் வராத சம்முவக்கோனை,'வாரும்யா, இங்ஙன உக்காரும்'னு சொன்னாரு சின்ன சுப்பையா. துண்டை உதறிட்டு உக்காந்தாரு.
வெவாரம் ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும்னு பாத்துட்டு இருந்த சம்முவக்கோனுக்கு சப்புனு போச்சு. சும்மா அவங்கவங்க அங்கங்க உக்காந்து பேசிக்கிட்டிருக்காவோ. எதுக்கு இப்டி இருக்காவோன்னு அவருக்கு பிடிபடல.
அந்தானி, சின்ன சுப்பையாவை கூப்டு, 'இப்ப யாரு வரணும்னு காத்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதானே"ன்னு சொன்னாரு. இவரு பேசிக்கிட்டிருக்கதை, மந்திரக்கோன் கோஸ்கண்ணு போட்டு பாத்துட்டு, சண்முவக்கோன் ஏதோ வில்லங்கத்தோட தான் வந்திருக்கான்னு நெனச்சிக்கிட்டாரு.
சின்ன சுப்பையா, சத்தம் போட்டு, ஏம் இப்டி உக்காந்திருக்கியோ. வெவாரத்தை ஆரம்பிக்க வேண்டியதான'ன்னு சொன்னாரு.
'இரும்யா. வெவாரத்துக்கு வர வேண்டிய மோவப்பயல காணுமே"ன்னு சத்தம் வந்ததும், எதுத்தாப்ல சம்முவக்கோன் மவன் கண்ணனும், மோகப்பயலும் வந்தாவோ.
மந்திரக்கோனுக்கு திக்குனு ஆயிப்போச்சு. ''சரிப்பா. வந்துட்டாம். ஏல மோவா, நீ பெரியசாமி கொண்டாடிய, எச்சிக்கையால கன்னத்துல அடிச்சிருக்கே. இது உம்மையா இல்லையா" ன்னு மந்தரக்கோனுக்கு சிங்கி அடிக்கத, கசமுத்து கேட்டாம்.
மோகப்பய சம்முவக்கோனை பாத்தாம்.
'மொதல்ல எனக்கொரு பஞ்சாயத்து இருக்கு. அதை பேசிட்டு, பெறவு இதை பேசுவோம்"னு ஆரம்பிச்சாரு சம்முவக்கோன்.
கூட்டம் புரா, இதென்ன கதைன்னு பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. மந்தரக்கோன் மீசையை தடவிட்டு தரையை பாத்துக்கிட்டு இருந்தாரு.
''வெஷயம் என்னன்னு சொல்லு சம்முவம். பாப்போம்" ன்னாரு சின்ன சுப்பையா.
'இங்க, பெரிய மனுஷன்னு இருக்குத சாமிகொண்டாடி இதுவரைக்கு கோயிலுக்கு வரியே கொடுக்காம ஏமாத்திருக்காரு. நாமலாம் என்ன கேணப்பயலுவோலா"ன்னு ஆரம்பிச்சாரு.
'யோவ் அஞ்சாரு தெரியுமோ உமக்கு. யாரை பாத்து என்ன சொல்லுத. நாங்கென்ன கஞ்சிக்கு வழியில்லாமயா அலையுதோம்"ன்னாம் மந்தரக்கோன் மவன். அவனுக்கு கூட மாட அவனுவ சொக்காரனுவோ வந்துட்டானுவோ.
மோகப்பய, அவரு மவனை பாத்து, ';நீ ஏம்ல குதிக்க, உங்கப்பந்தானல இதை சொன்னாரு"னு சொன்னதும் கூட்டத்துல சல சலன்னு பேச்சு.
இதுக்கு வெவாரத்தை பேசிட்டு மத்ததை பேசுவோம்னாவோ.
ஒரே காச்சு மூச்சுன்னு சத்தம். மந்தரக்கோன் போதையில சொன்னதை மோவனும், சம்முவக்கோன் மவனும் கூட்டதுல சொன்னதும் ஆதாரமா போச்சு. அங்ஙனயே புது தலைவரை தேர்ந்தெடுக்கணும்னு, மந்தரக்கோனை ஊரை விட்டு ஒதுக்கணும்னு பேச்சி. செல பேரு, ஊரைவிட்டு ஒதுக்காண்டாம், அம்மன் கோயிலுக்கு நாலுலிட்டரு எண்ணையையும், அஞ்சாயிரம் ரூபா தண்டம் (அபராதம்) கட்டச்சொல்லுங்கன்னாவோ.
இவ்வளவு நடக்கும்போது, திடீர்னு துண்டை உதறிட்டு, 'என்ன மயி்ரைல பேசுதியோ; எம்மேலயே குத்தம் சொல்ல வந்தேட்டேளா"ன்னுட்டு எழுந்திரிச்சு போவ போனாரு மந்தரக்கோன்.
யாரும் விடலை. ரொம்ப நாளா இருந்த கொஞ்ச நஞ்ச கோவத்தையும் இப்ப கொட்டி, 'உன்னையபத்திதான் பேசிட்டிருக்கு. எங்க அவசரமா வெளிய போற. உள்ள உக்காரு"ன்னுட்டாவோ. அவருக்கு அவமானமா போச்சு. மூச்சு, மேலயும் கிழயும் ஏறி ஏறி இறங்குது. சங்காபீசை சுத்தி நிக்குத ஆளுவோலாம் சுவத்துல எட்டி நின்னும, இங்க வேடிக்கை பாக்காவோ. அதுல நாலஞ்சு பொம்பளைலுவோலும் உண்டு. கோவம் கோவமாவும் வருது. இந்த நேரத்துல என்ன செய்ய முடியும்?.
மோவப்பய சொன்னதை இந்தாளு மறுத்துலாம் பேசல. அப்டின்னா ஒத்துக்கிடுதாருய்யா, அடுத்த முடிவை எடுங்கங்காவோ. ஆளாளுக்கு பேசி, பேசி கடைசில, வீட்டுல தூங்கிட்டிருந்த சூச்சமடையன் தாத்தாவை கூட்டிட்டு வந்தாவோ. இந்த மாதிரி தலைவரு, பெரியசாமிகொண்டாடிக்கெல்லாம் வெவாரம் சொல்லணும்னா பெரிய மனுஷங்க வேணும்.
உடம்பு சரியில்லைன்னு படுத்துக்கிடந்த சூச்சமடைய தாத்தா இருமிகிட்டே வந்தாரு. ஊருல பாதி சொத்து அவருக்குங்கதால அவரு பேச்சுக்கு கொஞ்சம் மரியாதையும் உண்டு. இவருக்குன்னு அவரு வீட்டுல இருந்து கயித்து கட்டுலையும் தூக்கிட்டு வந்தாவோ. அதுல வந்து உக்காந்தாரு. 'அதாவது வெவாரம் என்னனனா'ன்னு சம்முவக்கோன் ஆரம்பிச்சாரு.
எல்லாம் தெரியுங்கத மாதிரி கையை காண்பிச்சாரு தாத்தா. செத்த நேரம் அமைதியா இருந்தாரு. அவரு பேரன் சுருட்டை கொண்டு வந்து கொடுத்ததும் பத்த வச்சுட்டு, புகைய இழுத்தாரு.
'இங்க பாருங்க, கோயிலுக்கு வரி கொடுக்காம ஏமாத்திருக்கது, நம்மள மட்டுமில்லை, சாமியையும்தான் ஏமாத்திருக்கான். அதனால இனும அவன் பெரியசாமிக்கு ஆட கூடாது. இதுதான் நான் சொல்லுதது"ன்னாரு பாருங்க, கூட்டத்துல குசு குசுன்னு பேசுதானுவோ. ஓரமா செவத்துல சாஞ்சிட்டிருந்த மந்தரக்கோன், உர்ருனு பாத்துக்கிட்டிருக்கான். அவங்கூட நாலஞ்சு பேரு உக்காந்துட்டுருக்கான்.
சம்முவக்கோன், 'இதுதான் சரி;அவன் என்ன சொல்லுதான்னு கேளுங்க. அடுத்த பெரிய சாமியை தேர்தெடுப்போம்"ன்னாரு பாருங்க.
மந்தரக்கோன் வேகமா எந்திரிச்சாரு, 'நீங்க ஆட்டுததுக்கெல்லாம் நானும் என் சொக்காரப் பயலுவோலும் ஆடமாட்டோம். என்ன வேணாலும் பண்ணிக்கிங்க. அடுத்த கொடைக்கு என்னைய தவிர எந்த சாமி ஆடிடுதாம்னு பாக்கேன்"ன்னு சொல்லிட்டு போனாரு.
சூச்சமடைய தாத்தாவுக்கு சுள்ளுனு கோவம் வந்துட்டு.
'ஏல அவனை புடிச்சு இழுங்களே"ன்னாரு.
நாளைக்கு சொல்றேன்.
Sunday, March 29, 2009
கேரக்டர்: சாமி கொண்டாடி-1
சைக்கிளு மோகனுக்கு மோந்து பாத்தாலே போதை ஏறிரும். இன்னைக்கு வேற கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டான். பயலுக்கு நடக்க முடியலை. ஆத்து மணல்ல அங்கயும் இங்கயுமா அலைஞ்சுகிட்டு வந்தவன், பெரிய தாழைகிட்ட வந்ததும் பொத்துன்னு விழுந்துட்டான். இந்த தாழைக்கு பக்கத்துல வரப்பு மேல ஏறி கல்யாண வீட்டு போவணும். அதுக்குள்ள இந்தப் பய இப்படி விழுந்துதொலைச்சுட்டான். கூட வந்தவனுவோல்ல கொஞ்சம் பேரு, முன்னாலயே போயிட்டானுவோ.
மந்திரக்கோன் நெலமையும் கொஞ்சம் சரியில்லை. வரப்புக்கிட்ட போனதும் குபுக்குனு வாயால எடுத்துட்டாரு. குத்தவச்சுகிட்டு 'ஆங்.. ஆங்" தரையை பார்த்து துப்பிக்கிட்டிருந்தாரு. வெயிலு வேற சுள்ளுனு அடிக்கு. ஆத்துல தண்ணி, ஓடை மாதிரி ஓடிட்டு இருக்கு. என்னதான் வெயிலடிச்சாலும் லேசான குளிரு இருந்துகிட்டுதானிருக்கு.
இவங்களை கூட்டிட்டு வந்த உள்ளூர்க்கார பயலுக்கு வேசடையா போச்சு. இப்படி விழுந்துட்டானுவளேன்னுதான். மோகனை கைய புடிச்சு இழுத்து இழுத்து பாத்தான். அங்க திரும்புதான் , இங்க திரும்புதான ஒழிய எழ்ந்திருக்க வழிய காணோம். அந்தானி, துண்டை தண்ணியில நனைச்சுக் கொண்டு வந்து, அவன் மூஞ்சில புழிஞ்சான். மோகன் கண்ணை தொறந்துட்டு, 'எனக்கு என்னாச்சு?'ன்னு எழுந்திரிச்சு முட்டியை கெட்டிக்கிட்டு உக்கார்ந்தாம். வேட்டி ஒரு பக்கம் கெடந்தது. சட்டை பையில பாத்தான். வச்சிருந்த ரூவா அப்டியே இருந்தது.
'ஏண்ணே... எந்திரு... சாப்டுத நேரமாச்சு"'
அவன் கையை பிடிச்சு இழுத்தான். கூட்டிட்டு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப்போச்சு. வரப்பு கிட்ட வந்தா மந்திரக்கோன் மல்லாந்துக்கிடக்காரு... வேட்டி சட்டையெல்லாம சவதி கரை.
பேச்சு மட்டு்ம் அன்னா இன்னான்னு பேசுதானுவோ. ஒரு பாட்டிலுக்கு தாங்கமாட்டக்கானுவளேன்னு நெனச்ச உள்ளூக்காரன், அண்ணாச்சோ.. அண்ணாச்சோ...ன்னு உசுப்பி உசுப்பி பாத்தான். பொரண்டு பொரண்டு படுத்தவரை அதே போல ஈரத்துண்டை எடுத்து மூஞ்சியில பிழிஞ்சு..., கண்ணை தொறந்து பாத்தாரு... எப்படி இங்ஙன விழுந்தேன்னு மொணங்கிட்டு நடக்க போனாரு, காலு ஆடுது. பின்னால வந்த மோகனை புடிச்சுக்கிட்டாரு... அவன் ஒருபக்கம் லம்புதாம்... இவரு ஒருபக்கம் லம்புதாரு... அப்டியே நடந்து வந்துட்டிருக்காவோ. இவ்வோ தண்ணியடிச்ச லெச்சனம், கல்யாண வீடு பூரா தெரிஞ்சு, மோகன் பொண்டாட்டி வந்து ஏசுனா.
'ஏய் ச்சீ கேவலப்படுத்தாத.. போட்டி"ன்னான் அவன்.
மந்திரக்கோன் பொண்டாட்டி, இந்த மாதிரி நேரத்துல கிட்ட வரமாட்டா. வந்தா எட்டிக்கிட்டு மிதிச்சிருவாரு. இதே போல பலமுறை அனுபவ பட்டுருக்கதால, அந்த வீட்டுல வேற சட்டையை வாங்கிட்டு வந்து, 'ஏல தம்பி, அவரு சட்டையை மாத்தி விடுய்யா"ன்னு கொடுத்தா.
அந்தாப்ல பந்தியில எல்லாரும் மத்தியானம் சாப்டுட்டு இருந்தாவோ. ஏழு வவை கூட்டு பொறியலு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோருன்னு வரிசையா வச்சிருந்தாவோ. சைக்கிளு மோகன், பேச்சு வாக்குல சொன்னான், 'என்னதாம் சொல்லும்யா, தென்காசியில நடந்த எங்க அக்கா மவன் கல்யாணத்துக்கு வச்ச சாப்பாடு மாதிரி வேற எங்கயும் நான் இன்னைக்கு வர சாப்டதில்லை... என்ன சொல்லிதீரு"ன்னான்.
மந்திரக்கோன் இதை சாதாரணமா விட்டிருக்கலாம். போதை வேற உள்ள போயிருக்கா.
'எங்க வந்து சாப்டுட்டு என்னல சொல்லுத... இந்த சாப்பாடை கேவலமாவால பேசுத" ன்னுட்டு டமார்னு அவன் கன்னத்துல அடிச்சுட்டாரு. கூட சாப்ட்டுட்டு இருந்தவளோலாம் இவரை பிடிக்க, மோகனுக்கு சுள்ளுனு கோவம். எலயில இருந்து கைய எடுத்து எச்சிக் கையோட மொகத்துல வேகமா விட்டாம் பாருங்க... கிர்ருனு ஆயிப்போச்சு மந்தரக்கோனுக்கு. கல்யாண வீடு கலவர வீடா போச்சு. மோகனுக்கு கொஞ்சம் பேரு, மந்தரக்கோனுக்கு கொஞ்சபேருன்னு சத்தம் போட்டுட்டு இருக்காவோ.
''பெரியசாமிகொண்டாடிய எப்படி அந்தப் பய அடிக்கலாம்"
''சாமி கொண்டாடியா இருந்தா அவர் யாரையும் கை நீட்டலாமோ"
இப்படியே பேச்சு, போயி போயி ஊர்ல வெவராம் வச்சாச்சு. மந்தரக்கோனுக்கு இது மானப் பிரச்னையா போச்சு. இதுக்கு மட்டும் தண்டனை கொடுக்கலன்னா ஊருல ஒரு பய மதிக்கமாட்டாம்னு நெனச்சாரு. இதுக்காக சொக்கார பயலுவோல, தனக்கு சாதகமா என்ன பண்ணணுமோ அதை பண்ணி ரெடி பண்ணிவச்சிட்டாரு... அந்தானி, பஞ்சாயத்து கதவு தெறக்குத சத்தம் கேட்டது. மந்திரக்கோன் திரும்பி பாத்தாரு...கொஞ்ச காலமா பஞ்சாயத்து பக்கம் வாராத சம்முவக்கோன் மீசையை தடவிகிட்டு உள்ள வந்துகிட்டிருந்தாரு.
நாளைக்கு...
மந்திரக்கோன் நெலமையும் கொஞ்சம் சரியில்லை. வரப்புக்கிட்ட போனதும் குபுக்குனு வாயால எடுத்துட்டாரு. குத்தவச்சுகிட்டு 'ஆங்.. ஆங்" தரையை பார்த்து துப்பிக்கிட்டிருந்தாரு. வெயிலு வேற சுள்ளுனு அடிக்கு. ஆத்துல தண்ணி, ஓடை மாதிரி ஓடிட்டு இருக்கு. என்னதான் வெயிலடிச்சாலும் லேசான குளிரு இருந்துகிட்டுதானிருக்கு.
இவங்களை கூட்டிட்டு வந்த உள்ளூர்க்கார பயலுக்கு வேசடையா போச்சு. இப்படி விழுந்துட்டானுவளேன்னுதான். மோகனை கைய புடிச்சு இழுத்து இழுத்து பாத்தான். அங்க திரும்புதான் , இங்க திரும்புதான ஒழிய எழ்ந்திருக்க வழிய காணோம். அந்தானி, துண்டை தண்ணியில நனைச்சுக் கொண்டு வந்து, அவன் மூஞ்சில புழிஞ்சான். மோகன் கண்ணை தொறந்துட்டு, 'எனக்கு என்னாச்சு?'ன்னு எழுந்திரிச்சு முட்டியை கெட்டிக்கிட்டு உக்கார்ந்தாம். வேட்டி ஒரு பக்கம் கெடந்தது. சட்டை பையில பாத்தான். வச்சிருந்த ரூவா அப்டியே இருந்தது.
'ஏண்ணே... எந்திரு... சாப்டுத நேரமாச்சு"'
அவன் கையை பிடிச்சு இழுத்தான். கூட்டிட்டு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப்போச்சு. வரப்பு கிட்ட வந்தா மந்திரக்கோன் மல்லாந்துக்கிடக்காரு... வேட்டி சட்டையெல்லாம சவதி கரை.
பேச்சு மட்டு்ம் அன்னா இன்னான்னு பேசுதானுவோ. ஒரு பாட்டிலுக்கு தாங்கமாட்டக்கானுவளேன்னு நெனச்ச உள்ளூக்காரன், அண்ணாச்சோ.. அண்ணாச்சோ...ன்னு உசுப்பி உசுப்பி பாத்தான். பொரண்டு பொரண்டு படுத்தவரை அதே போல ஈரத்துண்டை எடுத்து மூஞ்சியில பிழிஞ்சு..., கண்ணை தொறந்து பாத்தாரு... எப்படி இங்ஙன விழுந்தேன்னு மொணங்கிட்டு நடக்க போனாரு, காலு ஆடுது. பின்னால வந்த மோகனை புடிச்சுக்கிட்டாரு... அவன் ஒருபக்கம் லம்புதாம்... இவரு ஒருபக்கம் லம்புதாரு... அப்டியே நடந்து வந்துட்டிருக்காவோ. இவ்வோ தண்ணியடிச்ச லெச்சனம், கல்யாண வீடு பூரா தெரிஞ்சு, மோகன் பொண்டாட்டி வந்து ஏசுனா.
'ஏய் ச்சீ கேவலப்படுத்தாத.. போட்டி"ன்னான் அவன்.
மந்திரக்கோன் பொண்டாட்டி, இந்த மாதிரி நேரத்துல கிட்ட வரமாட்டா. வந்தா எட்டிக்கிட்டு மிதிச்சிருவாரு. இதே போல பலமுறை அனுபவ பட்டுருக்கதால, அந்த வீட்டுல வேற சட்டையை வாங்கிட்டு வந்து, 'ஏல தம்பி, அவரு சட்டையை மாத்தி விடுய்யா"ன்னு கொடுத்தா.
அந்தாப்ல பந்தியில எல்லாரும் மத்தியானம் சாப்டுட்டு இருந்தாவோ. ஏழு வவை கூட்டு பொறியலு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோருன்னு வரிசையா வச்சிருந்தாவோ. சைக்கிளு மோகன், பேச்சு வாக்குல சொன்னான், 'என்னதாம் சொல்லும்யா, தென்காசியில நடந்த எங்க அக்கா மவன் கல்யாணத்துக்கு வச்ச சாப்பாடு மாதிரி வேற எங்கயும் நான் இன்னைக்கு வர சாப்டதில்லை... என்ன சொல்லிதீரு"ன்னான்.
மந்திரக்கோன் இதை சாதாரணமா விட்டிருக்கலாம். போதை வேற உள்ள போயிருக்கா.
'எங்க வந்து சாப்டுட்டு என்னல சொல்லுத... இந்த சாப்பாடை கேவலமாவால பேசுத" ன்னுட்டு டமார்னு அவன் கன்னத்துல அடிச்சுட்டாரு. கூட சாப்ட்டுட்டு இருந்தவளோலாம் இவரை பிடிக்க, மோகனுக்கு சுள்ளுனு கோவம். எலயில இருந்து கைய எடுத்து எச்சிக் கையோட மொகத்துல வேகமா விட்டாம் பாருங்க... கிர்ருனு ஆயிப்போச்சு மந்தரக்கோனுக்கு. கல்யாண வீடு கலவர வீடா போச்சு. மோகனுக்கு கொஞ்சம் பேரு, மந்தரக்கோனுக்கு கொஞ்சபேருன்னு சத்தம் போட்டுட்டு இருக்காவோ.
''பெரியசாமிகொண்டாடிய எப்படி அந்தப் பய அடிக்கலாம்"
''சாமி கொண்டாடியா இருந்தா அவர் யாரையும் கை நீட்டலாமோ"
இப்படியே பேச்சு, போயி போயி ஊர்ல வெவராம் வச்சாச்சு. மந்தரக்கோனுக்கு இது மானப் பிரச்னையா போச்சு. இதுக்கு மட்டும் தண்டனை கொடுக்கலன்னா ஊருல ஒரு பய மதிக்கமாட்டாம்னு நெனச்சாரு. இதுக்காக சொக்கார பயலுவோல, தனக்கு சாதகமா என்ன பண்ணணுமோ அதை பண்ணி ரெடி பண்ணிவச்சிட்டாரு... அந்தானி, பஞ்சாயத்து கதவு தெறக்குத சத்தம் கேட்டது. மந்திரக்கோன் திரும்பி பாத்தாரு...கொஞ்ச காலமா பஞ்சாயத்து பக்கம் வாராத சம்முவக்கோன் மீசையை தடவிகிட்டு உள்ள வந்துகிட்டிருந்தாரு.
நாளைக்கு...
Tuesday, March 24, 2009
கேரக்டர்: சாமி கொண்டாடி
பூதத்தாரு கோயில்ல மந்திரக்கோன்தான் பெரியசாமி கொண்டாடி. அவருக்கு முன்னால பலவேசக்கோன் ஆடிக்கிட்டிருந்தாரு. 25 வருஷத்துக்கு முன்னால மாட்டு வண்டி ஆத்துல உருண்டு தண்ணில முங்கி அவரு செத்த பெறவு, மந்திரக்கோனை பெரியசாமியா ஆக்குனாவோ. அவரும் ஆளு கம்பீரமா இருப்பாருல்லா. மீசையை திருக்கிட்டு, 'ஏல'ன்னாருன்னா எல்லா பயலுவோலும் பயந்துருவானுவோ. அதட்டலா இருக்கும். பெரியசாமிகொண்டாடி வேறயா. ஊருல அவருக்கு முக்கியத்துவம் ஜாஸ்தியாபோச்சு. வயக்காட்டு பிரச்னை, தண்ணி பிரச்னைன்னா அவரைதான் கூட்டியாந்து வெவாரம் பேசுவாவோ. இவரும் நியாயம், தர்மம் பாத்துல்லாம் சொல்லமாட்டாரு. எவன் அவருக்கு வேண்டியவன்னு பாத்து அவனுக்கு ஏத்தாப்ல வெவாரத்தை முடிப்பாரு. அவருக்கு சிங்கி அடிக்க, கூட மாட அஞ்சாரு பேரு இருப்பானுவோ. பெறவு கேக்கணுமா? அவரு சொல்லுததுதான் சட்டம்.
கோயில்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொட. மூணுநாளு கொட நடக்கும். கொட செலவுக்கு தல கட்டுக்கு இவ்வளவுன்னு வரி வைப்பாவோ. கொஞ்சம் ஏழைபாழை கொடுக்கமுடியலன்னா கூட விடமாட்டாவோ. கடனை வாங்கியாவது குடுக்கணும். சில பேருக்கு அது மான பிரச்னை. வரி கொடுக்காத பயன்னு கேவலமா பேசிருவாவோன்னுட்டு, பொண்டாட்டி தாலியை கூட அடவு வச்சு கொடுத்துருவானுவோ. கோயிலு செலவயெல்லாம் பெரியசாமிகொண்டாடி மவந்தான் பாத்துக்கிடுததால, அவரு வரியை கொடுக்க மாட்டாரு. ஆனா, கொடுத்த மாதிரி கணக்கை காண்பிச்சி, செலவுல அதுஇதுன்னு எழுதிக்கிடுவானுவோ. இது பலவருஷ கோயில் கொடையில நடந்திருக்கு. சனி வாயில இருக்குன்னு சொன்ன மாதிரி, ஒரு நாளு தன்னோட வாயாலயே மாட்டிக்கிட்டாரு மந்திரக்கோன்.
பாப்பாக்குடி பக்கத்துல இருக்குத நந்தந்தட்டையில, அவரு தங்கச்சி மவ கல்யாணம். ஊர்க்காரங்க எல்லாரும் போயிருந்தாவோ. இந்த கல்யாணம் காய்ச்சின்னா தண்ணி இல்லாமயா. தாலிகட்டி முடிஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு, மந்தரக்கோன் மச்சான், 'யோவ், நம்ம மருமவ பய இப்பம் வருவாம். கூட வந்த ஆளுவோளை கூட்டிட்டு ஆத்து வரைக்கும் போயிட்டு வந்திரும்'னு சொன்னாரு. ஆத்துக்குள்ள ஒரு தாழக்குப் பின்னால வடிப்பு (சாராயம்).
மந்திரக்கோன், ஊர்க்காரன்ல குடிக்குதவனையெல்லாம் கூட்டிட்டு போயிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணப்பயயலும் கல்யாணத்துக்கு வந்திருக்காம். இந்தப்பய குடிக்க மாட்டான். மந்திரக்கோனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் ஆவாது. சொக்காரனுவோன்னாலும் சொத்து தகராறு. வந்த ப்யல கூப்டாம இருக்க முடியுமா? அந்தானி, மந்திரக்கோனுக்கு ஒத்து ஊதுத பயலை கூப்டு, 'ஏல அந்தப் பயலை கூப்டுக்கோ. இல்லன்னா, அதை வேற கொறயா சொல்லுவானுவோ"ன்னாரு. சரின்னு அவனும் கூப்டான். வேட்டிய மடிச்சு கெட்டிட்டு போயிட்டாம். மொத்தம் 12 பேரு.
போய் ஆத்து மணல்ல, தென்னம்பிள்ளை நெழல்ல உக்காந்தாச்சு. ஆளாளுக்கு ஒருபாட்டுல சாராயமுப். கொஞ்சம் ஊறுகாயும். வெறுவாகெட்ட பயலுவோ கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணுங்கறதெல்லாம் கெடயாது. அந்தானி, பாட்டிலை கையில புடிச்சு, கண்ணை பொத்திட்டு சடசடன்னு உள்ள இறக்கிட்டானுவோ. அந்தானி, செத்த நேரத்துல உச்சிக்கு ஜிவ்வுனு தூக்குச்சி பாருங்க, எல்லா பயலுவோலுக்கும் வாய் உளறலு. சைக்கிளு கடை மோகனனுக்கு தண்ணி ஒவரா ஆயிட்டுன்னா, பய அழுது தொலைச்சுருவாம். அந்தானி, கவலையை எல்லாம் பொலம்பவும் ஆரம்பிச்சிருவாம்.
ஊருகாயை பூராம் நக்கிட்டு, வேட்டியில மடிச்சி வந்திருந்த கதலி பழத்தை எடுத்து தின்னான் மோகன். 'ஏலே.. இதை எப்பம்ல வாங்குன. அரவமில்லாம எடுக்க"ன்னாவோ.
'ஆமா, குடிக்கன்னு போறோம். திங்கதுக்கு எதும்னு வேண்டாமான்னுதான் வாங்குனேன்"ன்னுட்டு புலம்ப ஆரம்பிச்சிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணன், குடிக்கலைன்னாலும் ஊறுகாயை நக்கிட்டு, இவங்களை வேடிக்கைப்பாத்துட்டு இருந்தாம்.
மோகன், 'ஏண்ணே இன்னும் கோயிலு வரிக்கு வாங்குன கடனை அடைக்கலண்ணே. தெனமும் வீட்டுலவேற சண்டை"ன்னு அழ ஆரம்பிச்சாம் பாருங்க... மந்திரக்கோன் மத்த பயலுவோளை பாத்தான். எல்லாம் தலையை தொங்கப்போட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருந்துச்சு. அந்தானி, மோகன் காதுகிட்ட வந்து சொன்னாரு மந்திரக்கோன் .'ஏ ஆக்கங் கெட்ட பயல. இதை மொதல்லயே சொல்லிருந்தனா... வரி கட்டாமயா கட்டுனமாதிரி காட்டிருக்கலாம்ல"ன்னான்.
'எப்டி மாமா"
அந்தானி வெவரத்தை பூரா மந்திரக்கோன் சொன்னாம் பாருங்க, கண்ணப்பயலுக்கு திக்குனு ஆயிபோச்சு. இவனுவோ தடுமாறி வாரதுக்கு முன்னால, நடந்து போனான் கண்ணன்.
நாளைக்கு சொல்லுதேன்
கோயில்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொட. மூணுநாளு கொட நடக்கும். கொட செலவுக்கு தல கட்டுக்கு இவ்வளவுன்னு வரி வைப்பாவோ. கொஞ்சம் ஏழைபாழை கொடுக்கமுடியலன்னா கூட விடமாட்டாவோ. கடனை வாங்கியாவது குடுக்கணும். சில பேருக்கு அது மான பிரச்னை. வரி கொடுக்காத பயன்னு கேவலமா பேசிருவாவோன்னுட்டு, பொண்டாட்டி தாலியை கூட அடவு வச்சு கொடுத்துருவானுவோ. கோயிலு செலவயெல்லாம் பெரியசாமிகொண்டாடி மவந்தான் பாத்துக்கிடுததால, அவரு வரியை கொடுக்க மாட்டாரு. ஆனா, கொடுத்த மாதிரி கணக்கை காண்பிச்சி, செலவுல அதுஇதுன்னு எழுதிக்கிடுவானுவோ. இது பலவருஷ கோயில் கொடையில நடந்திருக்கு. சனி வாயில இருக்குன்னு சொன்ன மாதிரி, ஒரு நாளு தன்னோட வாயாலயே மாட்டிக்கிட்டாரு மந்திரக்கோன்.
பாப்பாக்குடி பக்கத்துல இருக்குத நந்தந்தட்டையில, அவரு தங்கச்சி மவ கல்யாணம். ஊர்க்காரங்க எல்லாரும் போயிருந்தாவோ. இந்த கல்யாணம் காய்ச்சின்னா தண்ணி இல்லாமயா. தாலிகட்டி முடிஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு, மந்தரக்கோன் மச்சான், 'யோவ், நம்ம மருமவ பய இப்பம் வருவாம். கூட வந்த ஆளுவோளை கூட்டிட்டு ஆத்து வரைக்கும் போயிட்டு வந்திரும்'னு சொன்னாரு. ஆத்துக்குள்ள ஒரு தாழக்குப் பின்னால வடிப்பு (சாராயம்).
மந்திரக்கோன், ஊர்க்காரன்ல குடிக்குதவனையெல்லாம் கூட்டிட்டு போயிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணப்பயயலும் கல்யாணத்துக்கு வந்திருக்காம். இந்தப்பய குடிக்க மாட்டான். மந்திரக்கோனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் ஆவாது. சொக்காரனுவோன்னாலும் சொத்து தகராறு. வந்த ப்யல கூப்டாம இருக்க முடியுமா? அந்தானி, மந்திரக்கோனுக்கு ஒத்து ஊதுத பயலை கூப்டு, 'ஏல அந்தப் பயலை கூப்டுக்கோ. இல்லன்னா, அதை வேற கொறயா சொல்லுவானுவோ"ன்னாரு. சரின்னு அவனும் கூப்டான். வேட்டிய மடிச்சு கெட்டிட்டு போயிட்டாம். மொத்தம் 12 பேரு.
போய் ஆத்து மணல்ல, தென்னம்பிள்ளை நெழல்ல உக்காந்தாச்சு. ஆளாளுக்கு ஒருபாட்டுல சாராயமுப். கொஞ்சம் ஊறுகாயும். வெறுவாகெட்ட பயலுவோ கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணுங்கறதெல்லாம் கெடயாது. அந்தானி, பாட்டிலை கையில புடிச்சு, கண்ணை பொத்திட்டு சடசடன்னு உள்ள இறக்கிட்டானுவோ. அந்தானி, செத்த நேரத்துல உச்சிக்கு ஜிவ்வுனு தூக்குச்சி பாருங்க, எல்லா பயலுவோலுக்கும் வாய் உளறலு. சைக்கிளு கடை மோகனனுக்கு தண்ணி ஒவரா ஆயிட்டுன்னா, பய அழுது தொலைச்சுருவாம். அந்தானி, கவலையை எல்லாம் பொலம்பவும் ஆரம்பிச்சிருவாம்.
ஊருகாயை பூராம் நக்கிட்டு, வேட்டியில மடிச்சி வந்திருந்த கதலி பழத்தை எடுத்து தின்னான் மோகன். 'ஏலே.. இதை எப்பம்ல வாங்குன. அரவமில்லாம எடுக்க"ன்னாவோ.
'ஆமா, குடிக்கன்னு போறோம். திங்கதுக்கு எதும்னு வேண்டாமான்னுதான் வாங்குனேன்"ன்னுட்டு புலம்ப ஆரம்பிச்சிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணன், குடிக்கலைன்னாலும் ஊறுகாயை நக்கிட்டு, இவங்களை வேடிக்கைப்பாத்துட்டு இருந்தாம்.
மோகன், 'ஏண்ணே இன்னும் கோயிலு வரிக்கு வாங்குன கடனை அடைக்கலண்ணே. தெனமும் வீட்டுலவேற சண்டை"ன்னு அழ ஆரம்பிச்சாம் பாருங்க... மந்திரக்கோன் மத்த பயலுவோளை பாத்தான். எல்லாம் தலையை தொங்கப்போட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருந்துச்சு. அந்தானி, மோகன் காதுகிட்ட வந்து சொன்னாரு மந்திரக்கோன் .'ஏ ஆக்கங் கெட்ட பயல. இதை மொதல்லயே சொல்லிருந்தனா... வரி கட்டாமயா கட்டுனமாதிரி காட்டிருக்கலாம்ல"ன்னான்.
'எப்டி மாமா"
அந்தானி வெவரத்தை பூரா மந்திரக்கோன் சொன்னாம் பாருங்க, கண்ணப்பயலுக்கு திக்குனு ஆயிபோச்சு. இவனுவோ தடுமாறி வாரதுக்கு முன்னால, நடந்து போனான் கண்ணன்.
நாளைக்கு சொல்லுதேன்
Saturday, February 14, 2009
கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-4
எல்லா ஊர்க்கதைகளையும் தோண்டி எடுத்து பொரணி பேசும் ஊருக்கு இவர்கள் விவகாரம் தெரியாமலிருந்தது ஆச்சர்யம்தான். பலவேசம் கனவுகளோடு பழையபடி பலூன் விற்க போனான். பிச்சம்மாளைப் போல சாயல்கொண்ட பெண்களிடமெல்லாம் ஏதாவது பேசி விடுகிற துணிச்சல் அவனுக்கு இருந்தது. மனம் மனதுடன் போட்டிப்போட்டு போட்டுக்கொடுக்கிற துணிச்சல்.
ஒரு பெண்ணை தனியாக ஊரைவிட்டு கூட்டிச்சென்ற பலவேசத்துக்கு அவளை கட்டியணைக்கின்ற வாய்ப்பு கூட கிடைக்காதது அவனது துரதிர்ஷடம். அதற்கான வாய்ப்பு வந்தும் கூட , உள்மன சொல்படியோ, தன்னை நேர்மையானவனாக காட்டிக்கொள்கிற பக்குவத்தாலோ அவன் அப்படி செய்யாமலிருந்திருக்கக் கூடும்.
ஆனால், ஆசை எல்லாருக்குமானதுதான். அது கடுகளவு நிலத்தில் காடளவு தீயை மூட்டும் சூச்சுமம். இப்படியானதொரு தனி சந்திப்பையும் ஒரு கட்டியணைத்தலையும் பிச்சம்மாவும் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் கருத்தப்பிள்ளையூர் மாமா வீடு அவனுக்கும் அவளுக்கும் அதை கொடுத்திருக்கவில்லை.
சைக்கிளை வீட்டுக்கு வெளியே சாத்திவிட்டு, உள் நுழைந்து போர்வைக்குள் தன்னை அடக்கிக்கொள்கிற பலவேசத்துக்கு நித்தம் இது ஒரு வேதனையாக இருந்தது. அவளுக்கும் இருக்கின்ற வேதனை.
கட்டிலில் இருந்து போர்வை உத்றி எழுந்தான் பலவேசம். அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குள் தூங்கிகொண்டிருந்தார்கள். இந்நேரம், பிச்சம்மாள் திண்ணையும் படுத்திருப்பாள். அமைதியாக எழுந்து அவளது வீட்டுக்குள் நடந்தான். தெரு நாய்கள் இவனை திருடன் என நினைத்து குரைத்தன. அதை பொருட்படுத்தாமல் நடந்தான். அவள் வீட்டுக்குள் நுழைந்து தட்டிக்குள் எட்டிப்பார்த்தான். அவளது அப்பாவின் குறட்டைச் சத்தத்தையும் மீறி அவள் தூங்கிகொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டில் ஒண்ணுக்கிருக்க எழுந்த பெண், ஏதோ உருவம் நிற்பதை அறிந்து, 'ஏங்க... திருட்டு பய... வாங்க வாங்க" என கத்த, ஓடினான் பலவேசம். முட்கள் தாண்டி வேகவேகமாக ஓடினாலும் பாபநாசத்தேவன் எறிந்த ஈட்டிக்கம்பு காலில் குத்தி பொத்தென்று விழுந்தான் பலவேசம். அதற்கு மேலும் ஒட முயற்சித்த அவனது கால்கள் நடை மறந்தன. இந்த எந்த விஷயமும் அறியாத பிச்சம்மா குடும்பம் இன்னும் நித்திரையில் ஆழ்ந்திருந்தது.
ஊருக்குள் நான்கைந்து மாதமாக கோழிகளும் ஆட்டுக்குட்டிகளும் காணமல் போயிருந்த கணக்குகள் பலவேசத்தின் மீது விழுந்தது. இல்லை இல்லை என மன்றாடி பார்த்தான். இதற்குள் பலமான சாத்துகள் அவனுக்கு விழுந்திருந்தன.
'திருட்டு பயலுவோ என்னக்குல உண்மையை சொல்லியிருக்கானுவோ. இவன போலீஸ்ல கூட்டிட்டு போயி விட்டாத்தாம் சரிபடுவானுவோ".
பிச்சம்மாளைப் பார்க்க வந்த விஷயத்தையும் ஏற்கனவே ஊரைவிட்டு ஓடிய விஷயத்தை சொன்னால் இந்நேரம் பலவேசம் தப்பிக்கலாம். ஆனால், அதற்கு பிற்கு பிச்சம்மா குடும்பத்திற்கான மானம் சுருண்டு விழுந்து விடும் என்பதால் அதை சொல்ல முடியவில்லை அவனுக்கு.
ஊருக்குப் பொதுவான அம்மன் கோயில் தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் பலவேசம். அவனது அம்மாவும் அப்பாவும் அழுதுகொண்டிருந்தார்கள். விஷயம் தெரிந்து காலையில்தான் பிச்சம்மா வந்து பார்த்தாள். அவளுக்கும் துக்கமாக இருந்தது. முதல் பஸ் வந்ததும் அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதற்கான் ஏற்பாடுகளை பெரிசுகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
காணாமல் போன ஏழு செம்மறி ஆடுகள், நான்கு வெள்ளாடுகள், ஒன்பது கோழிகளை இவன்தான் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டதன் பேரில் பலவேசன் முதல் பஸ்சில் அழைத்துச்செல்லப்பட்டான்.
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் பிச்சம்மாளின் கண்களில் கனவு பூச்சிகள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. மேலும் கீழும் செல்லும் அப்பூச்சிகளின் மீது பெருமழை பெயதுகொண்டிருந்தது. அம்மழை கனவுகளை மட்டுமே பெய்துகொண்டிருந்தது.
முற்றும்.
ஒரு பெண்ணை தனியாக ஊரைவிட்டு கூட்டிச்சென்ற பலவேசத்துக்கு அவளை கட்டியணைக்கின்ற வாய்ப்பு கூட கிடைக்காதது அவனது துரதிர்ஷடம். அதற்கான வாய்ப்பு வந்தும் கூட , உள்மன சொல்படியோ, தன்னை நேர்மையானவனாக காட்டிக்கொள்கிற பக்குவத்தாலோ அவன் அப்படி செய்யாமலிருந்திருக்கக் கூடும்.
ஆனால், ஆசை எல்லாருக்குமானதுதான். அது கடுகளவு நிலத்தில் காடளவு தீயை மூட்டும் சூச்சுமம். இப்படியானதொரு தனி சந்திப்பையும் ஒரு கட்டியணைத்தலையும் பிச்சம்மாவும் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் கருத்தப்பிள்ளையூர் மாமா வீடு அவனுக்கும் அவளுக்கும் அதை கொடுத்திருக்கவில்லை.
சைக்கிளை வீட்டுக்கு வெளியே சாத்திவிட்டு, உள் நுழைந்து போர்வைக்குள் தன்னை அடக்கிக்கொள்கிற பலவேசத்துக்கு நித்தம் இது ஒரு வேதனையாக இருந்தது. அவளுக்கும் இருக்கின்ற வேதனை.
கட்டிலில் இருந்து போர்வை உத்றி எழுந்தான் பலவேசம். அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குள் தூங்கிகொண்டிருந்தார்கள். இந்நேரம், பிச்சம்மாள் திண்ணையும் படுத்திருப்பாள். அமைதியாக எழுந்து அவளது வீட்டுக்குள் நடந்தான். தெரு நாய்கள் இவனை திருடன் என நினைத்து குரைத்தன. அதை பொருட்படுத்தாமல் நடந்தான். அவள் வீட்டுக்குள் நுழைந்து தட்டிக்குள் எட்டிப்பார்த்தான். அவளது அப்பாவின் குறட்டைச் சத்தத்தையும் மீறி அவள் தூங்கிகொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டில் ஒண்ணுக்கிருக்க எழுந்த பெண், ஏதோ உருவம் நிற்பதை அறிந்து, 'ஏங்க... திருட்டு பய... வாங்க வாங்க" என கத்த, ஓடினான் பலவேசம். முட்கள் தாண்டி வேகவேகமாக ஓடினாலும் பாபநாசத்தேவன் எறிந்த ஈட்டிக்கம்பு காலில் குத்தி பொத்தென்று விழுந்தான் பலவேசம். அதற்கு மேலும் ஒட முயற்சித்த அவனது கால்கள் நடை மறந்தன. இந்த எந்த விஷயமும் அறியாத பிச்சம்மா குடும்பம் இன்னும் நித்திரையில் ஆழ்ந்திருந்தது.
ஊருக்குள் நான்கைந்து மாதமாக கோழிகளும் ஆட்டுக்குட்டிகளும் காணமல் போயிருந்த கணக்குகள் பலவேசத்தின் மீது விழுந்தது. இல்லை இல்லை என மன்றாடி பார்த்தான். இதற்குள் பலமான சாத்துகள் அவனுக்கு விழுந்திருந்தன.
'திருட்டு பயலுவோ என்னக்குல உண்மையை சொல்லியிருக்கானுவோ. இவன போலீஸ்ல கூட்டிட்டு போயி விட்டாத்தாம் சரிபடுவானுவோ".
பிச்சம்மாளைப் பார்க்க வந்த விஷயத்தையும் ஏற்கனவே ஊரைவிட்டு ஓடிய விஷயத்தை சொன்னால் இந்நேரம் பலவேசம் தப்பிக்கலாம். ஆனால், அதற்கு பிற்கு பிச்சம்மா குடும்பத்திற்கான மானம் சுருண்டு விழுந்து விடும் என்பதால் அதை சொல்ல முடியவில்லை அவனுக்கு.
ஊருக்குப் பொதுவான அம்மன் கோயில் தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் பலவேசம். அவனது அம்மாவும் அப்பாவும் அழுதுகொண்டிருந்தார்கள். விஷயம் தெரிந்து காலையில்தான் பிச்சம்மா வந்து பார்த்தாள். அவளுக்கும் துக்கமாக இருந்தது. முதல் பஸ் வந்ததும் அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதற்கான் ஏற்பாடுகளை பெரிசுகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
காணாமல் போன ஏழு செம்மறி ஆடுகள், நான்கு வெள்ளாடுகள், ஒன்பது கோழிகளை இவன்தான் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டதன் பேரில் பலவேசன் முதல் பஸ்சில் அழைத்துச்செல்லப்பட்டான்.
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் பிச்சம்மாளின் கண்களில் கனவு பூச்சிகள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. மேலும் கீழும் செல்லும் அப்பூச்சிகளின் மீது பெருமழை பெயதுகொண்டிருந்தது. அம்மழை கனவுகளை மட்டுமே பெய்துகொண்டிருந்தது.
முற்றும்.
Subscribe to:
Posts (Atom)

