Tuesday, October 8, 2019

தாவூத் என்கிற ராக்கெட்டு!

காரல் மார்க்ஸை யாரென்று தெரியாது. அவரது சிறுகதைகளை, சில இதழ்களில் முன்பு வாசித்து வியந்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் கதைகள் நம்மை அறியாமலேயே மனசுக்கு நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வது இயல்பு. அப்படி, சத்தம் போடாமல் வந்து அமர்ந்து கொண்டது, சமீபத்தில் வாசித்த அவரது 'ராக்கெட் தாதா' தொகுப்பு.

அவர் கதைகளின் பலங்களில் ஒன்றாக, நான் நினைப்பது மொழி. சொற்சிக்கனத்தோடும், அவ்வளவு அடர்த்தியாகவும் நேர்த்தியாகவும் எழுத முடிவது, ஒரு வகையில் அவரது அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டம், பயிற்சி!

ஒவ்வொரு கதையும் ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தத்தோடும் அழகியலோடும் நம்மை, அழகாக இழுத்துச் செல்கிறது காதலியைப் போல. அவரது சுமித்ராவும் 'கற்படிகளி'ன் ராமமூர்த்தியும் 'ராக்கெட்டு' தாவூத் இப்ராஹிமும் வாசித்து முடித்த பின்னும் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்கள் வேலையும் கூட.
சில கதைகளில் வருகிற 'கொண்டி' உள்ளிட்ட வழக்குகளைக் கண்டு தெக்கத்திக்காரராக இருக்கலாம் என நினைத்தேன். இல்லை.

வாழ்த்துகள் மார்க்ஸ்! உங்களின் மற்றத் தொகுப்புகளையும் வாசிக்க வேண்டும்.

No comments: