மேல் சட்டை மற்றும் துண்டுடன் பாதி அம்மணமாக நின்றான் புளி. இந்த அவசரத்திலும் மற்றவர்களின் சிரிப்பை அடக்க முடியவில்லை. துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டான். கிணற்றின் தென்புறமாக, உள்ளே இறங்குவதற்கு சின்ன படிகட்டு இருந்தது. அந்த படிகட்டும் பாதி வரைதான்.
படிகட்டை உரசியவாறோ அதற்கும் கொஞ்சம் கீழாகவோ தண்ணீர் இருக்கவில்லை. அநியாயத்துக்கு பாதி கிணறிலிருந்தது. ஊள்ளே குதித்து சாரத்தை எடுத்தால் தண்ணீர் சத்தம் கேட்டு யாரும் உள்ளே வந்துவிடலாம்.
குட்டை, ‘துண்டு போதும்ல... அப்படியே வா’என்றான். இருட்டு என்பதால் இப்படியே கூட வரலாம். அதற்குள் கீழ்பக்கம் யாரோ வரும் சத்தம் கேட்டது. அவசரம் அவசரமாக படபடத்து மூவரும் வந்த வழி நோக்கி ஓடினார்கள். தட்டு தடுமாறி வேலி தாண்டி, அருகில் இருந்த பிள்ளையார் கோயிலின் பின்பக்கம் சென்றார்கள்.
மூச்சு வாங்கியது.
‘இப்ப என்ன செய்யலாம்?’
‘ஏல நான் அம்மணங்குண்டியோட வரமுடியாது. வாய்க்காலை தாண்டினா ஐயமாரு தெரு. இன்னும் தெருவௌக்கு எரிஞ்சுட்டு இருக்கு. எப்படி போவ’’ என்றான்.
தோப்புக்குள் யாரோ சிலரின் பெரும் சத்தம் கேட்டது. ஐயர் சிலருடன் வந்திருக்கலாம். கோயிலின் பின்பக்கமிருந்து தோப்பை பார்த்தால், டார்ச் லைட் வெளிச்சம் சிதறி வருகிறது. இங்கு வரை வெளிச்சம் வர வாய்ப்பில்லை. பறித்த இளநீரை பிள்ளையார் கோயில் பின்புறம் போட்டுவிட்டு, வயக்காட்டுக்குள் விழுந்து மேலத் தெரு வழியாக வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர்.
புளி, ‘முட்டா பயலுவோலா... நான் எப்டில வர’
‘ஒண்ணுமில்லலே. அம்மன் கோயிலு வாய்க்கால்ல குளிச்சுட்டு, எல்லாருமே துண்டை இடுப்புல கெட்டிட்டு போவும். போற வழியில துரையப்பா சுக்காப்பி கடை பக்கத்துலதான் லைட் வெளிச்சம். அதை தாண்டுனா பிரச்னையில்லைல’’
சரியென்றார்கள்.
இவர்கள் கிளம்பும்போது கேட்டது:
‘ஏண்ணே இங்க ஓடியா? இன்னா ஒரு பய இருக்காம் பாரு’.
கெதக் என்றது மூவருக்கும்.
சுதாரித்து ஓடுவதற்குள், டொப் டொப்பென்று அடி விழுந்தது.
‘நான் இல்லை... நான் இல்லை’ சத்தம்.
யப்பா தப்பித்தார்கள்.
கருக்கலாகி விட்டது. பஞ்சாயத்து போர்டு திண்டில் தலைவர் என அழைக்கப்படும் அம்மாசி அமர்ந்திருந்தார். ஊரே கூடியிருந்தது. கூட்டத்திற்குள் புளி கூட்டாளிகள் நின்றிருந்தார்கள்.
‘ஏய் இந்த சாரம் உங்குள்ளதுதானே...’
தலைவர் கேட்டார்.
‘இல்லை... எனக்குள்ளதில்லை’
‘ஏல சொன்னதையே சொல்லாத... கையும் களவுமா பிடிச்சிருக்காவோ. இல்லங்க’
‘நான் நாலு மாசத்துக்கு முன்னால ஒரு நா ராத்திரி தோப்புல எளநீ பறிச்சிருக்கேன். நேத்து ராத்திரி நான் பறிக்கலை சாமி’
கெஞ்சினான்.
‘நல்ல கதையாலா இருக்கு. ஏல கேட்டேளா? கூத்தை.’
கூட்டத்தில் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லார் முன்பும் கை கட்டி, கண்ணீர் வர நின்று கொண்டிருந்தான் கல்யாணி அம்மனுக்கு பால் கொண்டு போகும் சைலன்!
பத்தாடி உள்ளிட்ட கூட்டாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும்போது, புளி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. அவன் அப்பா!
முற்றும்
Thursday, September 25, 2008
Tuesday, September 23, 2008
திருட்டு- 1
‘உங்கக்கா இப்டி சொல்லிருக்க கூடாதுடே...’ என்றான் புளிமூட்டை.
‘என்னத்த சொல்லிட்டா...?’
‘நல்ல செட்டு சேர்ந்துருக்கு பாருங்கா... எங்களுக்கு என்னல கொற’
‘ஏன் உங்கய்யா கூடத்தான் என்னைய சொன்னாரு... உருப்படாத பயலுவோன்னு... அதுக்கென்ன செய்ய சொல்லுத...’
கொஞ்சம் அமைதி நிலவிய பிறகு இருட்டி விட்டதை ஞாபகப்படுத்தினான் குட்டை. கும்மிருட்டு. இந்த இடம் சுற்றி, தெருவிளக்குகள் இல்லாதது வசதியாகியிருந்தது. இருந்திருந்திருந்தாலும் அது எரிந்திருக்கப் போவதில்லை.
அவரசரமாக எழுந்தார்கள். எதிரில், கழுத்து வரை இருந்த மண்சுவர் வேலியில் முட்களை ஒதுக்கினான் புளிமூட்டை. மெதுவாக கீழிறங்கினார்கள். கீரிப் பிள்ளைகளின் கிர் கிர் சத்தம் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. பம்ப் செட்கள் பொருத்தப்பட்ட அந்த பெரும் கிணற்றில் புறாக்களும் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த தோப்பில் பல முறை இவர்கள் கை வைத்திருக்கிறார்கள் என்பதால் இருட்டிலும் பாதை அத்துபடி.
காலில் செருப்பு போட்டிருந்த குட்டை, மண் வழுக்கி முள்ளில் கையை வைத்து ரத்த காயத்தை வாங்கி கொண்டான். இம்மாதிரியான ரத்த காயங்கள் ஒரு வகையில் நல்லது என்பது அவர்களது நம்பிக்கை. முதலிலேயே ரத்த காயம் ஏற்பட்டு விட்டால் பிறகு பெரிய காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லையாம்.
‘செரி... செரி... கைய வாயில வையுல, ரத்தம் அமுங்கிரும்’
‘ம்...’
அகலமான கிணறு. எந்த காலத்திலோ தோண்டப்பட்ட பெருங்கிணறு. மேலிருந்து கீழே பார்த்தால் கரும் பாறைகள் பாசி சுமந்து தென்னி நிற்கும். கரு நீலத்தில் தண்ணீர். மீன்களின் துள்ளாட்டமும், ஓரங்களில் அவற்றின் குரூப் வாக்கிங்கையும் பார்க்க சுகமாக இருக்கும். ஐயரின் அனுமதி பெற்று இங்கே குளிக்க வருபவர்களும் அதிகம்.
புளிமூட்டை சிறு வயதில் அப்படி வந்திருக்கிறான். அருகில் வளர்ந்து வளைந்து நிற்கும் தென்னைமரத்தில் ஏறி கிணற்றுக்குள் குதிப்பது இளவட்டங்களின் வீரவரலாறாகி இருந்தது. இந்த வரலாறை தாண்டிவிட்டவர்கள் இவர்கள்.
அருகில் பம்பு செட். அது ஒரு குடிலை போன்றிருந்தது. உள்ளே தலையணைகள் வைக்கப்பட்ட கட்டில் ஒன்று. ஐயர் நண்பகல் நேரங்களில் தூங்குவதற்கு.
இதற்கு கீழ்ப்பக்கம் தென்னந்தோப்பு. சில தோப்புகளை போல வரிசையாகவே, நேர்கோடாகவே தென்னைகள் இங்கு இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக தலையாட்டி நின்றன.
புளிமூட்டையும், குட்டையும் தென்னமரத்தில் ஏறலானார்கள். புளிமூட்டை செவ்விளநீர்கள் தொங்கும் மரத்திலும், ஜீனி தண்ணி மரத்தில் குட்டையும் ஏறினார்கள். பாதி மரம் ஏறுவதற்குள்ளேயே புளிக்கு, மூச்சு வாங்கியது. ‘இனும பீடிய கொறைக்கணும்’ என்று நினைத்துக்கொண்டான்.
மேலே ஏறி, இளநீர்களை சாரத்துக்குள் போட்டு இறுக்க கட்டிக்கொண்டு இறங்க வேண்டும் என்பது திருடர்கள் விதி. பறித்து கீழே போட்டால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்பதற்காக இப்படி.
புளி, சாரத்தை இறுக்க கட்டாததால் அதில் போட்ட இளநீர் ஒன்று சாரத்தை அவிழ்த்துக்கொண்டு பொத்தென்று கிணற்றுக்குள் விழுந்து பெரும் சத்தத்தை எழுப்பியது.
பத்தாடி தலையில் அடித்துக்கொண்டான். எப்போதும் உள்ளே எழுதுவும் அணிந்திராத புளிக்கு இறங்குவது சிக்கலாகியிருந்தது. காரணம் எப்போதும் எங்கேயும் தென்னங்கீரல்கள் விழலாம் என்கிற பயம்.
‘சீக்கிரம் இறங்கி தொலைங்கல’ என்றான் பத்தாடி.
தோப்புக்கு வடக்காக வாய்க்காலை தாண்டிய வீடுதான் ஐயருடையது. அவர் மொட்டை மாடியில் நின்றால் இந்த சத்தத்தை கேட்டிருக்க முடியும் என்பதால் பயத்தில் வேக வேகமாக இறங்கினான் புளி. இந்த களேபரத்தில் வெறும் நான்கு காய்களை மட்டும் சாரத்தில் போட்டுகொண்டு, அவசரமாக தரை இறங்கினான் குட்டையும்.
கீழிறங்கிய புளி, சாரத்தை தேடினான். அது கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்தது.
தொடரும்.
‘என்னத்த சொல்லிட்டா...?’
‘நல்ல செட்டு சேர்ந்துருக்கு பாருங்கா... எங்களுக்கு என்னல கொற’
‘ஏன் உங்கய்யா கூடத்தான் என்னைய சொன்னாரு... உருப்படாத பயலுவோன்னு... அதுக்கென்ன செய்ய சொல்லுத...’
கொஞ்சம் அமைதி நிலவிய பிறகு இருட்டி விட்டதை ஞாபகப்படுத்தினான் குட்டை. கும்மிருட்டு. இந்த இடம் சுற்றி, தெருவிளக்குகள் இல்லாதது வசதியாகியிருந்தது. இருந்திருந்திருந்தாலும் அது எரிந்திருக்கப் போவதில்லை.
அவரசரமாக எழுந்தார்கள். எதிரில், கழுத்து வரை இருந்த மண்சுவர் வேலியில் முட்களை ஒதுக்கினான் புளிமூட்டை. மெதுவாக கீழிறங்கினார்கள். கீரிப் பிள்ளைகளின் கிர் கிர் சத்தம் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. பம்ப் செட்கள் பொருத்தப்பட்ட அந்த பெரும் கிணற்றில் புறாக்களும் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த தோப்பில் பல முறை இவர்கள் கை வைத்திருக்கிறார்கள் என்பதால் இருட்டிலும் பாதை அத்துபடி.
காலில் செருப்பு போட்டிருந்த குட்டை, மண் வழுக்கி முள்ளில் கையை வைத்து ரத்த காயத்தை வாங்கி கொண்டான். இம்மாதிரியான ரத்த காயங்கள் ஒரு வகையில் நல்லது என்பது அவர்களது நம்பிக்கை. முதலிலேயே ரத்த காயம் ஏற்பட்டு விட்டால் பிறகு பெரிய காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லையாம்.
‘செரி... செரி... கைய வாயில வையுல, ரத்தம் அமுங்கிரும்’
‘ம்...’
அகலமான கிணறு. எந்த காலத்திலோ தோண்டப்பட்ட பெருங்கிணறு. மேலிருந்து கீழே பார்த்தால் கரும் பாறைகள் பாசி சுமந்து தென்னி நிற்கும். கரு நீலத்தில் தண்ணீர். மீன்களின் துள்ளாட்டமும், ஓரங்களில் அவற்றின் குரூப் வாக்கிங்கையும் பார்க்க சுகமாக இருக்கும். ஐயரின் அனுமதி பெற்று இங்கே குளிக்க வருபவர்களும் அதிகம்.
புளிமூட்டை சிறு வயதில் அப்படி வந்திருக்கிறான். அருகில் வளர்ந்து வளைந்து நிற்கும் தென்னைமரத்தில் ஏறி கிணற்றுக்குள் குதிப்பது இளவட்டங்களின் வீரவரலாறாகி இருந்தது. இந்த வரலாறை தாண்டிவிட்டவர்கள் இவர்கள்.
அருகில் பம்பு செட். அது ஒரு குடிலை போன்றிருந்தது. உள்ளே தலையணைகள் வைக்கப்பட்ட கட்டில் ஒன்று. ஐயர் நண்பகல் நேரங்களில் தூங்குவதற்கு.
இதற்கு கீழ்ப்பக்கம் தென்னந்தோப்பு. சில தோப்புகளை போல வரிசையாகவே, நேர்கோடாகவே தென்னைகள் இங்கு இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக தலையாட்டி நின்றன.
புளிமூட்டையும், குட்டையும் தென்னமரத்தில் ஏறலானார்கள். புளிமூட்டை செவ்விளநீர்கள் தொங்கும் மரத்திலும், ஜீனி தண்ணி மரத்தில் குட்டையும் ஏறினார்கள். பாதி மரம் ஏறுவதற்குள்ளேயே புளிக்கு, மூச்சு வாங்கியது. ‘இனும பீடிய கொறைக்கணும்’ என்று நினைத்துக்கொண்டான்.
மேலே ஏறி, இளநீர்களை சாரத்துக்குள் போட்டு இறுக்க கட்டிக்கொண்டு இறங்க வேண்டும் என்பது திருடர்கள் விதி. பறித்து கீழே போட்டால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்பதற்காக இப்படி.
புளி, சாரத்தை இறுக்க கட்டாததால் அதில் போட்ட இளநீர் ஒன்று சாரத்தை அவிழ்த்துக்கொண்டு பொத்தென்று கிணற்றுக்குள் விழுந்து பெரும் சத்தத்தை எழுப்பியது.
பத்தாடி தலையில் அடித்துக்கொண்டான். எப்போதும் உள்ளே எழுதுவும் அணிந்திராத புளிக்கு இறங்குவது சிக்கலாகியிருந்தது. காரணம் எப்போதும் எங்கேயும் தென்னங்கீரல்கள் விழலாம் என்கிற பயம்.
‘சீக்கிரம் இறங்கி தொலைங்கல’ என்றான் பத்தாடி.
தோப்புக்கு வடக்காக வாய்க்காலை தாண்டிய வீடுதான் ஐயருடையது. அவர் மொட்டை மாடியில் நின்றால் இந்த சத்தத்தை கேட்டிருக்க முடியும் என்பதால் பயத்தில் வேக வேகமாக இறங்கினான் புளி. இந்த களேபரத்தில் வெறும் நான்கு காய்களை மட்டும் சாரத்தில் போட்டுகொண்டு, அவசரமாக தரை இறங்கினான் குட்டையும்.
கீழிறங்கிய புளி, சாரத்தை தேடினான். அது கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்தது.
தொடரும்.
Monday, September 22, 2008
திருட்டு
திருடுவது என்று முடிவாகிவிட்டது. புளிமூட்டைதான் இதற்கான திட்டத்தை வகுத்தான். இது மூன்றாவது திருட்டு திட்டம் என்பதால் நண்பர்களிடம் அவன், திட்ட வகுப்பாளன் என்ற பெயரை பெற்றிருந்தான். இது திருட்டு வகையை சேர்ந்தாலும் திருட்டல்ல.
பிள்ளையார் கோவில் திண்டிலிருந்து எதிரே பார்த்தால் கல்யாணி ஐயர் தோப்பு. நாற்பது தென்னைகள், ஒரு கிணறு, ரெண்டு பின்ன மரம், எழெட்டு மா மரங்கள், நெற்கள் விளையும் வயலில் கடலை, அருகே குறுணி விதைப்பாட்டில் ஈராய்ங்கம்... இன்னபிற விளையும் பொருட்களை உள்ளடிக்கியிருந்தது தோப்பு என சொல்லப்படும் அது.
தெற்கே வாய்க்கால் கரைக்கும் வடக்கே இருந்த பொத்தைக்குமிடையே புதிதாக வேலி அமைத்திருந்தார் ஐயர். வாய்க்கால் கரையில் அனாதையாக முளைத்து நின்ற இரண்டு தென்னைகளும், தோப்பை ஒட்டி இருந்ததால் ஐயருக்கு சொந்தமாகியிருந்தன.
மற்ற இரு பக்கமும் ஏற்கனவே வேலி இருந்தது. வேலி என்பது புதிதாக கத்தாழை செடிகளை நட்டும், கருவை முட்களை வைத்துமாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு. இவை ஆடு மாடுகள் உள்ளே புகுந்துவிடக்கூடாது என்பதற்காக. இம்மாதிரியான வேலிகள் ஆடு மாடுகளுக்கு எம்மாத்திரம்?.
வேலி அமைக்கும் போது வந்த நான்கைந்து பாம்புகளில் ஒன்று மலைப்பாம்பாக இருந்தது. எப்போதோ வந்த வெள்ளத்தில் தப்பி வந்த பாம்பு, ஐயர் தோட்டத்தில் அடை காத்திருந்த விஷயம் அப்போதுதான் தெரிந்தது. வேலி அமைத்துக்கொண்டிருந்த கூனையன், பாம்பின் குறுக்கில் அரிவாளை போட்டான். சரியாகப் பதியாத அரிவாள், வழுக்கி திரும்பியது. அடுத்த முயற்சியும் அப்படியே... நீண்டு உருண்ட அந்த பாம்பு இரண்டு முறை எகிறி, அவனிடம் வாயை காண்பித்து நகர்ந்து நகர்ந்து வாய்க்காலுக்குள் இருந்த பெருங்கல்லின் கீழே சென்றுவிட்டது. கூனையன், துணைக்கு ஆளை கூட்டி வந்து கல்லை புரட்டிய போது பாம்பு அங்கே இல்லை.
இதே போல தென்பட்ட இன்னும் இரண்டு பாம்புகளில் ஒன்று கண்ணாடி விரியன். ஆள் சத்தம் கேட்டதுமே சிட்டாக பறக்க கூடிய பாம்பு. ஆனால், சரியாக போட்டுத்தாக்கும் ஆபத்துடையது அது. இன்னொன்று நல்லபாம்பு. இதை சாமி பாம்பாக கருதிய ஐயர், விட்டுவிடச்சொன்னார். ஆனால் கண்ணாடி விரியன், கூனையனின் குறி தவறாத கல் எறியில் சுருண்டது.
மலைப்பாம்பு? அதன் வசிப்பிடம் இப்போது தெரியவில்லை. அனேகமாக தோப்புக்குள் எங்காவது குடியிருந்து வரலாம்.
இவ்வாறான பாம்புகளின் நடமாட்டத்தையடுத்து ஐயர், கருக்கல் நேரங்களில் தோப்புக்கு வருவதை தவிர்த்துக்கொண்டார். அவரின் இந்த முடிவு, புளிமூட்டை உள்ளிட்ட இளசுகளுக்கு வசதியாகிவிட்டது.
திண்டை உடைத்து வளர்ந்திருந்த எருக்கலை செடியின் அருகே அமர்ந்து, பீடி குடித்துக்கொண்டிருந்த குட்டை, புகையை விட்டவாறே சொன்னான்.
‘‘ஏழாவதா நிக்கி பாரு எளந்தென்னை. அதுலதாம்ல சரியான காயி. டேஸ்டு எப்டிங்க. குறும்பை மாதிரிதான் இருக்கும். அவ்வளவும் ஜீனி தண்ணிலா’’
‘ஒனக்கெப்படில தெரியும்?’ புளிமூட்டை கேட்டான்.
‘ஏ அர்தலி, ஐயருக்கு யாரு காய் பறிச்சு போடுதா?’
‘நீயால’
‘‘பெறவு? ஒரு தென்னைக்கு நாலு காய்ன்னு சொன்னாரு. நாலு மரம் ஏறுனேன். ஒரு மரத்துக்கு அஞ்சுன்னு வச்சு கொத்தாரு. ரெண்டு எளநீய வெட்டி போடுன்னாரு. போட்டேன். ஒண்ணை குடிக்க கொடுத்தாரு... அதை வச்சுதான சொல்லுதேன்’
துண்டை விரித்து திண்டில் சாய்ந்திருந்த பத்தாடி, ‘கடலை கூட வௌஞ்சிருக்கும்’ என்றான்.
இதைக்கேட்ட புளிமூட்டை, ‘ச்சீ ஆக்கங்கெட்டவன. போனா எதையாவது ஒண்ணத்தாம்ல களவாங்கணும். அதுல கைய வைக்கேன். இதுல கைய வைக்கேன்னு இருந்தா நாளைக்கு சிக்கலாயிரும்’ என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சைக்கிள் ஒன்று வந்தது. ஸ்குரு கழன்ற பெல், ஹேண்ட்பரில் பட்டு ணங் ணங் ஒலியை எழுப்பிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு மிதிக்கும் ஒரு ணங். சைக்கிளில், ஆழ்வார்க்குறிச்சியிருந்து கல்யாணி அம்மன் கோயிலுக்கு பால் கொண்டு போகும் சைலன் இருந்தான். அவனது பூசணிக்காய் தேகத்தில் சைக்கிள் டயர் நசுங்கி எப்போதும் வெடித்துவிடும் பிரயத்தனத்தில் இருந்தன.
இன்னும் இருட்டவில்லை என்பதால் பார்வையில் ஆட்கள் தெளிவாக அகப்பட்டனர்.
‘ஏலே எளவட்ட பயலுவளா? இந்நேரத்துக்கு இங்கென்ன சோலிடே... எவளாது வாரேன்னு சொல்லிருக்காளா...?’என்றான் சைலன்.
‘யோவ் எக்காளமாய்யா... பொத்திகிட்டு போவேரா’
‘ம்.. ம்... ஹூம்...’ என்ற சத்தத்துடன் போனான் சைலன்.
‘பெறவு என்ன செய்லாம்’ என்றான் குட்டை.
‘பொறுல. இன்னும் இருட்டட்டும்’ என்றான் புளி மூட்டை.
வேலியை கடப்பது விஷயமில்லை. எதிரே இருக்கிற மண் சுவர் மீது பெரிதாக அடைந்திருக்கிற கருவை முள்ளை கைகளால் தூக்கி ஒதுக்கிவிட்டு, மெதுவாக உள்ளே இறங்குவது சுலபமான வேலை. இதில் பத்தாடி கை தேர்ந்தவன். நிஜமாகவே அவன் தேர்ந்த கைகளை கொண்டவன். அரிவாள், கலப்பை, மம்பட்டிகள் பிடித்து பலமேறியே கை. முட்கள் குத்தி கைகளுக்கு வலிக்கப் போவதில்லை.
தென்னைமரங்களில் இவன் மாதிரியான திருடர்களுக்காகவே பிளேடை அடித்து வைத்திருப்பது திருட்டு அதிகமாக புழங்குகின்ற தோப்புகளில் வழக்கம். கருத்த பிள்ளையூருக்கு சூடடிக்க போகும் போது, கோயில்பிள்ளை தோப்பிலிருந்த தென்னமரத்தில் அடிக்கப்பட்டிருந்த பிளேடை சரியாக கவனித்து, வாக்காக தாவி காய் திருடிய திறமையை பார்த்து வியந்திருக்கிறான் புளிமூட்டை. பிளேடு அடித்திருக்கிற மரங்கள் மட்டுமில்லாமல், ஊரில் கிருஷ்ண பிறப்புக்கு நடக்கிற வழுக்கு மர போட்டியில் வெல்பவனும் இவனாகவே இருந்தான். இப்படியான திறமைசாலிகளை ஊர்மக்கள் கொண்டாட மறுக்கிறார்களே என்பது அவனது ஆதங்கம். ஆதங்கங்கள் அடிமனதோடு ஆறுபவையே.
இன்னும் இருட்டவில்லை. மாத்ராங்குளத்து வயக்காடுகளில் களை எடுத்து வரும் அக்காள்கள், தூக்குச்சட்டியை ஆட்டிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். எடக்கு பேச்சும், தூக்குச்சட்டியின் சத்தமும் அவர்களின் வருகையை தெரிவித்துக்கொண்டிருந்தன.
திண்டில் சாய்த்து கிடந்த பத்தாடி, இந்த சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தான்.
புளிமூட்டை, குட்டையிடம் சொன்னான்.
‘பயலுக்கு பயத்தை பாத்தீயா?’
‘ச்சீ சும்மார்ல, வீட்டுக்கு போனா ஏசுவா?’
வருபவர்களில் பத்தாடியின் அக்காவும் ஒருவர் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை. அவர்கள் நெருங்கி வர வர, அப்பாவி போல எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான் பத்தாடி. கிட்டே வந்த அக்காள்களில் ஒருத்தி, இவர்களை உற்று பார்த்துவிட்டு, ‘புளிமூட்டையால... என்ன இங்க உக்காந்திருக்கே’ என்றாள்.
‘புளிமூட்டையா... அப்பம் என் தம்பியும் இருப்பானே...’ என்றாள் பத்தாடி அக்காள்.
‘ஆமா, வந்தோம். இன்னா பெறப்ட வேண்டியதான்’ என்றான் பத்தாடி.
‘ராத்ரி போல இங்கலாம் சுத்து. வெறவுக்கு ரெண்டு கருவைய வெட்டிப்போடுன்னா போடாத... ஆக்கங்க கெட்டவன... நல்ல செட்டுலா சேர்ந்திருக்கு’
‘நா எங்க சுத்துதேன்’
‘போதும்ல... சீக்கிரமா வந்து தொல’ என்றவள் கிளம்பினாள்.
அக்காள்களின் கோபங்கள் அதிக ஆபத்தில்லாதவை. ஆனால், இப்படி எல்லார் முன்பும் மானம் வாங்கும் செய்கை அறிந்தவர்கள். பத்தாடி, தலையை கீழே போட்டபடி உக்கார்ந்திருந்தான்.
தொடரும்
.....................
பிள்ளையார் கோவில் திண்டிலிருந்து எதிரே பார்த்தால் கல்யாணி ஐயர் தோப்பு. நாற்பது தென்னைகள், ஒரு கிணறு, ரெண்டு பின்ன மரம், எழெட்டு மா மரங்கள், நெற்கள் விளையும் வயலில் கடலை, அருகே குறுணி விதைப்பாட்டில் ஈராய்ங்கம்... இன்னபிற விளையும் பொருட்களை உள்ளடிக்கியிருந்தது தோப்பு என சொல்லப்படும் அது.
தெற்கே வாய்க்கால் கரைக்கும் வடக்கே இருந்த பொத்தைக்குமிடையே புதிதாக வேலி அமைத்திருந்தார் ஐயர். வாய்க்கால் கரையில் அனாதையாக முளைத்து நின்ற இரண்டு தென்னைகளும், தோப்பை ஒட்டி இருந்ததால் ஐயருக்கு சொந்தமாகியிருந்தன.
மற்ற இரு பக்கமும் ஏற்கனவே வேலி இருந்தது. வேலி என்பது புதிதாக கத்தாழை செடிகளை நட்டும், கருவை முட்களை வைத்துமாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு. இவை ஆடு மாடுகள் உள்ளே புகுந்துவிடக்கூடாது என்பதற்காக. இம்மாதிரியான வேலிகள் ஆடு மாடுகளுக்கு எம்மாத்திரம்?.
வேலி அமைக்கும் போது வந்த நான்கைந்து பாம்புகளில் ஒன்று மலைப்பாம்பாக இருந்தது. எப்போதோ வந்த வெள்ளத்தில் தப்பி வந்த பாம்பு, ஐயர் தோட்டத்தில் அடை காத்திருந்த விஷயம் அப்போதுதான் தெரிந்தது. வேலி அமைத்துக்கொண்டிருந்த கூனையன், பாம்பின் குறுக்கில் அரிவாளை போட்டான். சரியாகப் பதியாத அரிவாள், வழுக்கி திரும்பியது. அடுத்த முயற்சியும் அப்படியே... நீண்டு உருண்ட அந்த பாம்பு இரண்டு முறை எகிறி, அவனிடம் வாயை காண்பித்து நகர்ந்து நகர்ந்து வாய்க்காலுக்குள் இருந்த பெருங்கல்லின் கீழே சென்றுவிட்டது. கூனையன், துணைக்கு ஆளை கூட்டி வந்து கல்லை புரட்டிய போது பாம்பு அங்கே இல்லை.
இதே போல தென்பட்ட இன்னும் இரண்டு பாம்புகளில் ஒன்று கண்ணாடி விரியன். ஆள் சத்தம் கேட்டதுமே சிட்டாக பறக்க கூடிய பாம்பு. ஆனால், சரியாக போட்டுத்தாக்கும் ஆபத்துடையது அது. இன்னொன்று நல்லபாம்பு. இதை சாமி பாம்பாக கருதிய ஐயர், விட்டுவிடச்சொன்னார். ஆனால் கண்ணாடி விரியன், கூனையனின் குறி தவறாத கல் எறியில் சுருண்டது.
மலைப்பாம்பு? அதன் வசிப்பிடம் இப்போது தெரியவில்லை. அனேகமாக தோப்புக்குள் எங்காவது குடியிருந்து வரலாம்.
இவ்வாறான பாம்புகளின் நடமாட்டத்தையடுத்து ஐயர், கருக்கல் நேரங்களில் தோப்புக்கு வருவதை தவிர்த்துக்கொண்டார். அவரின் இந்த முடிவு, புளிமூட்டை உள்ளிட்ட இளசுகளுக்கு வசதியாகிவிட்டது.
திண்டை உடைத்து வளர்ந்திருந்த எருக்கலை செடியின் அருகே அமர்ந்து, பீடி குடித்துக்கொண்டிருந்த குட்டை, புகையை விட்டவாறே சொன்னான்.
‘‘ஏழாவதா நிக்கி பாரு எளந்தென்னை. அதுலதாம்ல சரியான காயி. டேஸ்டு எப்டிங்க. குறும்பை மாதிரிதான் இருக்கும். அவ்வளவும் ஜீனி தண்ணிலா’’
‘ஒனக்கெப்படில தெரியும்?’ புளிமூட்டை கேட்டான்.
‘ஏ அர்தலி, ஐயருக்கு யாரு காய் பறிச்சு போடுதா?’
‘நீயால’
‘‘பெறவு? ஒரு தென்னைக்கு நாலு காய்ன்னு சொன்னாரு. நாலு மரம் ஏறுனேன். ஒரு மரத்துக்கு அஞ்சுன்னு வச்சு கொத்தாரு. ரெண்டு எளநீய வெட்டி போடுன்னாரு. போட்டேன். ஒண்ணை குடிக்க கொடுத்தாரு... அதை வச்சுதான சொல்லுதேன்’
துண்டை விரித்து திண்டில் சாய்ந்திருந்த பத்தாடி, ‘கடலை கூட வௌஞ்சிருக்கும்’ என்றான்.
இதைக்கேட்ட புளிமூட்டை, ‘ச்சீ ஆக்கங்கெட்டவன. போனா எதையாவது ஒண்ணத்தாம்ல களவாங்கணும். அதுல கைய வைக்கேன். இதுல கைய வைக்கேன்னு இருந்தா நாளைக்கு சிக்கலாயிரும்’ என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சைக்கிள் ஒன்று வந்தது. ஸ்குரு கழன்ற பெல், ஹேண்ட்பரில் பட்டு ணங் ணங் ஒலியை எழுப்பிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு மிதிக்கும் ஒரு ணங். சைக்கிளில், ஆழ்வார்க்குறிச்சியிருந்து கல்யாணி அம்மன் கோயிலுக்கு பால் கொண்டு போகும் சைலன் இருந்தான். அவனது பூசணிக்காய் தேகத்தில் சைக்கிள் டயர் நசுங்கி எப்போதும் வெடித்துவிடும் பிரயத்தனத்தில் இருந்தன.
இன்னும் இருட்டவில்லை என்பதால் பார்வையில் ஆட்கள் தெளிவாக அகப்பட்டனர்.
‘ஏலே எளவட்ட பயலுவளா? இந்நேரத்துக்கு இங்கென்ன சோலிடே... எவளாது வாரேன்னு சொல்லிருக்காளா...?’என்றான் சைலன்.
‘யோவ் எக்காளமாய்யா... பொத்திகிட்டு போவேரா’
‘ம்.. ம்... ஹூம்...’ என்ற சத்தத்துடன் போனான் சைலன்.
‘பெறவு என்ன செய்லாம்’ என்றான் குட்டை.
‘பொறுல. இன்னும் இருட்டட்டும்’ என்றான் புளி மூட்டை.
வேலியை கடப்பது விஷயமில்லை. எதிரே இருக்கிற மண் சுவர் மீது பெரிதாக அடைந்திருக்கிற கருவை முள்ளை கைகளால் தூக்கி ஒதுக்கிவிட்டு, மெதுவாக உள்ளே இறங்குவது சுலபமான வேலை. இதில் பத்தாடி கை தேர்ந்தவன். நிஜமாகவே அவன் தேர்ந்த கைகளை கொண்டவன். அரிவாள், கலப்பை, மம்பட்டிகள் பிடித்து பலமேறியே கை. முட்கள் குத்தி கைகளுக்கு வலிக்கப் போவதில்லை.
தென்னைமரங்களில் இவன் மாதிரியான திருடர்களுக்காகவே பிளேடை அடித்து வைத்திருப்பது திருட்டு அதிகமாக புழங்குகின்ற தோப்புகளில் வழக்கம். கருத்த பிள்ளையூருக்கு சூடடிக்க போகும் போது, கோயில்பிள்ளை தோப்பிலிருந்த தென்னமரத்தில் அடிக்கப்பட்டிருந்த பிளேடை சரியாக கவனித்து, வாக்காக தாவி காய் திருடிய திறமையை பார்த்து வியந்திருக்கிறான் புளிமூட்டை. பிளேடு அடித்திருக்கிற மரங்கள் மட்டுமில்லாமல், ஊரில் கிருஷ்ண பிறப்புக்கு நடக்கிற வழுக்கு மர போட்டியில் வெல்பவனும் இவனாகவே இருந்தான். இப்படியான திறமைசாலிகளை ஊர்மக்கள் கொண்டாட மறுக்கிறார்களே என்பது அவனது ஆதங்கம். ஆதங்கங்கள் அடிமனதோடு ஆறுபவையே.
இன்னும் இருட்டவில்லை. மாத்ராங்குளத்து வயக்காடுகளில் களை எடுத்து வரும் அக்காள்கள், தூக்குச்சட்டியை ஆட்டிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். எடக்கு பேச்சும், தூக்குச்சட்டியின் சத்தமும் அவர்களின் வருகையை தெரிவித்துக்கொண்டிருந்தன.
திண்டில் சாய்த்து கிடந்த பத்தாடி, இந்த சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தான்.
புளிமூட்டை, குட்டையிடம் சொன்னான்.
‘பயலுக்கு பயத்தை பாத்தீயா?’
‘ச்சீ சும்மார்ல, வீட்டுக்கு போனா ஏசுவா?’
வருபவர்களில் பத்தாடியின் அக்காவும் ஒருவர் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை. அவர்கள் நெருங்கி வர வர, அப்பாவி போல எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான் பத்தாடி. கிட்டே வந்த அக்காள்களில் ஒருத்தி, இவர்களை உற்று பார்த்துவிட்டு, ‘புளிமூட்டையால... என்ன இங்க உக்காந்திருக்கே’ என்றாள்.
‘புளிமூட்டையா... அப்பம் என் தம்பியும் இருப்பானே...’ என்றாள் பத்தாடி அக்காள்.
‘ஆமா, வந்தோம். இன்னா பெறப்ட வேண்டியதான்’ என்றான் பத்தாடி.
‘ராத்ரி போல இங்கலாம் சுத்து. வெறவுக்கு ரெண்டு கருவைய வெட்டிப்போடுன்னா போடாத... ஆக்கங்க கெட்டவன... நல்ல செட்டுலா சேர்ந்திருக்கு’
‘நா எங்க சுத்துதேன்’
‘போதும்ல... சீக்கிரமா வந்து தொல’ என்றவள் கிளம்பினாள்.
அக்காள்களின் கோபங்கள் அதிக ஆபத்தில்லாதவை. ஆனால், இப்படி எல்லார் முன்பும் மானம் வாங்கும் செய்கை அறிந்தவர்கள். பத்தாடி, தலையை கீழே போட்டபடி உக்கார்ந்திருந்தான்.
தொடரும்
.....................
Tuesday, September 16, 2008
பிரச்னைகளின் உலகம்
சீரியல்களுக்கு வசனம் மட்டுமே எழுதி கொண்டிருந்த நண்பர் பைத்தியகாரன் (நம்ம பைத்தியகாரன்தான்), இப்போது கதை, திரைக்கதை, வசன பார்ட்டியாக புரமோஷன் பெற்றிருக்கிறார். மூன்று வாரத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அந்த சீரியல் நாகவல்லி.
சிறு வயதில் மந்திர, தந்திர, மாயாஜால கதைகளின் அடிமை நான். தாத்தா சொல்லும் கதைகளில் அவ்வப்போது பயம் வந்தாலும் அதை ரசிப்பவனாகவே இருந்திருக்கிறேன். திடீரென்று பூமிக்குள் இருந்து நிலவு உதிர்த்து வருவது, ஒரு லட்சம் பாம்புகள் ஊர்ந்து, எதிரில் படமெடுத்து நிற்பது போன்ற கற்பனைகள் மாயாஜால கதைகளில் அதிகம். நாகவல்லியும் அப்படியொரு கதைதான். இதன் பிரச்னை வேறுமாதிரியானது.
நான்காவது வாரமும் வரப்போகிறது. இன்னும் பார்க்கவில்லை.
'பார்த்தேன் பைத்தியம்,. பிரம்மாதம், எப்படிய்யா இப்படி... அந்த டயலாக் இருக்கே அது போதும்யா உன் திறமைக்கு?' என்று ஏகத்துக்கும் அவரிடம் விட்ட கதைகள், பொய்யென்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
................................
பொதுவாக சீரியல்கள் பெண்களின் ஏரியா என்றே நினைத்திருந்தேன். சில சீரியல்களில் பணியாற்றும் நண்பர்களை சந்தித்த பின், அது ஆண்களின் ஏரியா என்பதை புரிந்து கொண்டேன். ஒரு மெகாவுக்கு வசனம் எழுதும் நண்பர் சொன்னார்.
'என்ன பண்ண? டி.ஆர்.பி.யில நல்லா போகுதுன்னு தயாரிப்பு இன்னும் இழுக்க சொல்லுதாரு'.
மாமியாரை எப்படியெல்லாம் இன்னும் கொடுமைகாரியாக காட்டலாம், இன்னும் என்னென்ன பிரச்னைகளை குடும்பத்துக்குள் கொண்டு வரலாம் என்பதையெல்லாம் யோசிக்கும் திரைக்கதை, வசனகர்த்தாக்கள்தான் இதன் உயிர். இதனால் இது ஆண்களின் ஏரியா.
'கோலங்களி'ல், இப்போ பிரச்னை முடிஞ்சுடும், நாளைக்கு முடிஞ்சுரும் என்று பார்த்தால், பிரச்னை மேல் பிரச்னை என்று இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். (தங்கமணி தினமும் இதன் கதையை சொல்லி என் கண்ணீரை வேறு வரவழைத்துவிடுகிறார்).
'நாலு வருஷத்துக்கு முன்னால திருவண்ணாமலை பக்கத்துல ஒரு சம்பவம் நடந்ததே. பேப்பர்ல பெரிசா போட்டிருந்தானே ஞாபகமிருக்கா'.
'எது சார்... மாமியாரும் மருமகளும் சேர்ந்து புருஷனை கொன்னாங்களே அந்த நியூசா"
'கரெக்ட். அதை எப்படி, நம்ம கதைக்குள்ள கொண்டுவரலாம்னு யோசி'
ஒரு சீரியல் இயக்குனர் அசிஸ்டென்டிடம் இப்படி சொன்னதை கேள்விபட்டேன். அடப்பாவிகளா எங்கயோ ஒரு விஷயம் நடந்தா அதையெல்லாமா சீரியல்ல கொண்டு வருவீங்க. என்ன கொடுமைடா ராசா.
.....................................
புதிதாக படம் இயக்க போகும் நண்பன், கதை விவாதத்திற்கு அழைத்தான் (சும்மா துணைக்குதான்). டிராகன் சிக்கன் மற்றும் பெக்கார்டி உண்டு என்று சொன்னதையடுத்து என் பயணம் உறுதிபடுத்தப்பட்டது.
பாண்டிச்சேரி அருகே வழுதாவூர் சாலையில் வயக்காட்டுக்குள் இருக்கிறது அந்த கெஸ்ட் ஹவுஸ். இசை அமைப்பாளர் ஒருவருக்கு தெரிந்தவர்தான் இதன் உரிமையாளராம். அவர் ரெகமண்டேசனில் குறைந்த வாடகைக்கு அறை கிடைத்தது. வாயில் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தால் எல்லாம் பெரிது பெரிதான கூழாங்கற்கள். நடக்கவே சுகமாக இருந்தது.
டிஸ்கஷனுக்காக உட்கார்ந்தவர்களிடம், 'வந்த வேலையை பார்க்க போகிறேன்' என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் அமர்ந்து ஆரம்பித்தேன். இப்படியானதொரு இடங்களில் தண்ணி அடிப்பது சுகமானது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு கொஞ்சம் போதையுடன், விவாத கூட்டத்தில் உக்கார்ந்தேன்.
'இல்ல... இந்த இடத்துல ஏதாவது ஒரு புது பிரச்னையை வைக்கணும். வழக்கமானதா இருக்க கூடாது'
'நான் சொன்னது கூட புதுசுதான் சார்'
'இல்லை, அது அவ்வளவு அட்ராக்டா இல்ல'
பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. இரவு எட்டு மணியளவில் எழுந்து, எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு காரை சென்னைக்குத் திருப்பினேன்.
மண்டை 'என்ன பிரச்னைய வைக்கலாம்... இந்த பிரச்னை எப்படியிருக்கும்... நாளைக்கு அவங்கிட்ட இதை சொல்லலாம்" என்று யோசித்துக்கொண்டே வந்தது, மாயாஜால் அருகே பைக்காரன் மீது உரசும் வரை!
சிறு வயதில் மந்திர, தந்திர, மாயாஜால கதைகளின் அடிமை நான். தாத்தா சொல்லும் கதைகளில் அவ்வப்போது பயம் வந்தாலும் அதை ரசிப்பவனாகவே இருந்திருக்கிறேன். திடீரென்று பூமிக்குள் இருந்து நிலவு உதிர்த்து வருவது, ஒரு லட்சம் பாம்புகள் ஊர்ந்து, எதிரில் படமெடுத்து நிற்பது போன்ற கற்பனைகள் மாயாஜால கதைகளில் அதிகம். நாகவல்லியும் அப்படியொரு கதைதான். இதன் பிரச்னை வேறுமாதிரியானது.
நான்காவது வாரமும் வரப்போகிறது. இன்னும் பார்க்கவில்லை.
'பார்த்தேன் பைத்தியம்,. பிரம்மாதம், எப்படிய்யா இப்படி... அந்த டயலாக் இருக்கே அது போதும்யா உன் திறமைக்கு?' என்று ஏகத்துக்கும் அவரிடம் விட்ட கதைகள், பொய்யென்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
................................
பொதுவாக சீரியல்கள் பெண்களின் ஏரியா என்றே நினைத்திருந்தேன். சில சீரியல்களில் பணியாற்றும் நண்பர்களை சந்தித்த பின், அது ஆண்களின் ஏரியா என்பதை புரிந்து கொண்டேன். ஒரு மெகாவுக்கு வசனம் எழுதும் நண்பர் சொன்னார்.
'என்ன பண்ண? டி.ஆர்.பி.யில நல்லா போகுதுன்னு தயாரிப்பு இன்னும் இழுக்க சொல்லுதாரு'.
மாமியாரை எப்படியெல்லாம் இன்னும் கொடுமைகாரியாக காட்டலாம், இன்னும் என்னென்ன பிரச்னைகளை குடும்பத்துக்குள் கொண்டு வரலாம் என்பதையெல்லாம் யோசிக்கும் திரைக்கதை, வசனகர்த்தாக்கள்தான் இதன் உயிர். இதனால் இது ஆண்களின் ஏரியா.
'கோலங்களி'ல், இப்போ பிரச்னை முடிஞ்சுடும், நாளைக்கு முடிஞ்சுரும் என்று பார்த்தால், பிரச்னை மேல் பிரச்னை என்று இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். (தங்கமணி தினமும் இதன் கதையை சொல்லி என் கண்ணீரை வேறு வரவழைத்துவிடுகிறார்).
'நாலு வருஷத்துக்கு முன்னால திருவண்ணாமலை பக்கத்துல ஒரு சம்பவம் நடந்ததே. பேப்பர்ல பெரிசா போட்டிருந்தானே ஞாபகமிருக்கா'.
'எது சார்... மாமியாரும் மருமகளும் சேர்ந்து புருஷனை கொன்னாங்களே அந்த நியூசா"
'கரெக்ட். அதை எப்படி, நம்ம கதைக்குள்ள கொண்டுவரலாம்னு யோசி'
ஒரு சீரியல் இயக்குனர் அசிஸ்டென்டிடம் இப்படி சொன்னதை கேள்விபட்டேன். அடப்பாவிகளா எங்கயோ ஒரு விஷயம் நடந்தா அதையெல்லாமா சீரியல்ல கொண்டு வருவீங்க. என்ன கொடுமைடா ராசா.
.....................................
புதிதாக படம் இயக்க போகும் நண்பன், கதை விவாதத்திற்கு அழைத்தான் (சும்மா துணைக்குதான்). டிராகன் சிக்கன் மற்றும் பெக்கார்டி உண்டு என்று சொன்னதையடுத்து என் பயணம் உறுதிபடுத்தப்பட்டது.
பாண்டிச்சேரி அருகே வழுதாவூர் சாலையில் வயக்காட்டுக்குள் இருக்கிறது அந்த கெஸ்ட் ஹவுஸ். இசை அமைப்பாளர் ஒருவருக்கு தெரிந்தவர்தான் இதன் உரிமையாளராம். அவர் ரெகமண்டேசனில் குறைந்த வாடகைக்கு அறை கிடைத்தது. வாயில் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தால் எல்லாம் பெரிது பெரிதான கூழாங்கற்கள். நடக்கவே சுகமாக இருந்தது.
டிஸ்கஷனுக்காக உட்கார்ந்தவர்களிடம், 'வந்த வேலையை பார்க்க போகிறேன்' என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் அமர்ந்து ஆரம்பித்தேன். இப்படியானதொரு இடங்களில் தண்ணி அடிப்பது சுகமானது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு கொஞ்சம் போதையுடன், விவாத கூட்டத்தில் உக்கார்ந்தேன்.
'இல்ல... இந்த இடத்துல ஏதாவது ஒரு புது பிரச்னையை வைக்கணும். வழக்கமானதா இருக்க கூடாது'
'நான் சொன்னது கூட புதுசுதான் சார்'
'இல்லை, அது அவ்வளவு அட்ராக்டா இல்ல'
பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. இரவு எட்டு மணியளவில் எழுந்து, எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு காரை சென்னைக்குத் திருப்பினேன்.
மண்டை 'என்ன பிரச்னைய வைக்கலாம்... இந்த பிரச்னை எப்படியிருக்கும்... நாளைக்கு அவங்கிட்ட இதை சொல்லலாம்" என்று யோசித்துக்கொண்டே வந்தது, மாயாஜால் அருகே பைக்காரன் மீது உரசும் வரை!
Sunday, September 14, 2008
ஒரு காட்டெருமையும் இருட்டு பங்களாவும்
நண்பர் வெயிலான் உள்ளிட்ட கோவை பகுதி பதிவர்கள் டாப்சிலிப் பற்றி எழுதியதை அறிந்து, மனைவியிடம் சொன்னதும், ஒகே ஆனது பட்ஜெட் காலி பண்ணும் பரபர டூர்.
முதலில் டாப்சிலிப்புக்காக போடப்பட்ட ப்ளான், பக்கத்து வீட்டுக்காரியின் புண்ணியத்தில் ஊட்டிக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த விஷயம் எப்படியோ தெரிந்து வயக்காட்டு வேலையை அப்படியே போட்டுவிட்டு சென்னை வந்தான் மனைவியின் தம்பியானவன்.
'நீ இப்ப வந்திருக்கே. நாங்க ஊட்டிக்குலா போறோம்" என்றேன்.
'தெரியும் மச்சான். அதுக்குதானே வந்திருக்கேன்" என்றான். மச்சான்கள் விவரமானவர்கள்.
மனைவியை பார்த்தேன். எல்லாம் என் வேலைதான் என்பது போல சிரித்தாள். பர்ஸில் கனம் இன்னும் கூடியது.
கோவையில் இறங்கி, குவாலிஸ் உதவியுடன் ஊட்டி ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்க்கு போவதற்குள் மணி நண்பகல் 12.
'ஐயையோ அங்க நல்லா குளிருண்டா. இந்தா ஸ்வட்டர் போட்டுக்கோ' என்று என் ஜூனியர்களை கோவையிலேயே முழுதாக மூடினாள் மனைவி. ஆனால், அங்கு குளிருக்கு பதில் ஜிவ் வெயில். 'என்ன கொடுமைடா' என்று நண்பர் இயக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் அங்கு நடப்பதை அறிந்து (முன்கூட்டியே அறிந்துதான்) இடத்தை தேடினால்... மலை மலையாய் ஏறி, வளை வளையென வளைந்து எங்கோ ஒரு தேயிலை தோட்டத்தில் நின்றது வண்டி.
நடிகை சரண்யா மோகன் மரத்தில் சாய்ந்து லேசாக கண்ணை ஆட்டினாள். இதை நான்கைந்து தடவை படமாக்கிய பிறகு அடுத்த ஷாட் என்றார்கள். அது எங்கே என்று கேட்டால், மலையில், இன்னும் நான்கைந்து ரவுண்ட் அடித்து உச்சியில் ஏதோ ஒரு தோட்டம் என்றார்கள். 'இனும முடியாதுப்பா. நீங்களும் உங்க ஷூட்டிங்கும்" என்று சொல்லிவிட்டு, பொட்டானிக்கல் கார்டன். பரந்து விரிந்த கார்டன். முழுசாக பார்ப்பதற்குள் மழை.
'ஒரு நா மழையில நனைவோமே' என்று பொடிசுகளை இழுத்தால், என் தர்மபத்தினி, 'உங்களுக்கெல்லாம் சளி பிடிச்சு, காய்ச்சல் வந்து, ஆஸ்பிடல் போயி, ரெண்டு நாள் லீவு போட்டு... எனக்கிருக்கிற வேலையில இதெல்லாம் தேவையா?' என்று அநியாயத்துக்கு பயம் காட்டியதால் நான்காவது மரம் வரை பார்த்துவிட்டு கார்டனுக்கு ஒரு டாடா.
கார்டன் வாசலில் இருந்து வலப்பக்கம் உற்றுப்பார்த்து டாஸ்மாக் இருப்பதை மச்சான் கண்களால் சொன்னான். அவன் அக்காவுக்கு தெரிந்தால்.... குலை நடுங்கியது. மூச் என்று மூக்கு மேல் விரல் வைத்து ஆஃப் பண்ணினேன். மச்சான் ஞாபகப்படுத்திய பிறகு வேறு எந்த சிந்தனையும் வரவில்லை.
லேசாக குளிர ஆரம்பித்தது.
'நீங்க ஸ்வட்டர் போட்டுக்கிறீங்களா?'
'ம்ஹூம்... இதெல்லாம் குளிரா? எங்க உடம்புக்கெல்லாம் இது ச்சூ... காஷ்மீர் குளிருலயே வெத்து உடம்போட போனவன் நான்"
'ம்..."
'பின்ன'
வீராப்பாய் சொல்லிவிட்டாலும் நிஜமாகவே குளிர். அதுக்காக ஸ்வட்டர் எடுத்து போட முடியுமா?
வேறு எங்கு போகவும் விருப்பமில்லை. மச்சானிடம் 'ரூம் போயிடலாமாப்பா' என்றேன். தலையாட்ட, புறப்பட்டோம். அறைக்குள் குடும்பத்தை வைத்து, டி.வியை ஆன் பண்ணிவிட்டு, போதை தேடி அலைந்தது மனது. 'இந்த மாதிரி குளிர் பிரதேசத்துக்கு வந்துட்டு, ஹாட் அடிக்கலைன்னா..." என்று முடிப்பதற்குள்ளேயே உர்ரானாள் மனைவி.
'என்ன ப்ர்மிஷனா?"
கெஞ்சி கூத்தாடி, கொஞ்சமா குடிக்க அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைத்த பின் கொஞ்சம் என்ன கொஞ்சம்!
விவரமான மச்சான், எங்கயோ பராக் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆஃப் பாட்டிலை வாங்கி வந்ததை அப்போதுதான் சொன்னான். 'புத்திசாலிடா நீ' என்ற சர்டிபிகேட்டை கொடுத்துவிட்டு, கீழே ஹோட்டல் பேரரிடம் 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்ததும் அரேன்ஜ் பண்ணினான் தண்ணி அடிக்க ஒரு இடத்தை.பிறகு தூக்கம்.
இரவு. சாப்பிட்டுவிட்டு ஹால் வந்தால் எக்கச்சக்க குளிர். மனைவி என்னை பார்த்தாள். இம்முறை மறுப்பேதும் இன்றி ஸ்வட்டர் போட்டுக்கொண்டேன். ஹோட்டலிலேயே மரக் குச்சிகளை வைத்து தீ வளர்த்தார்கள். ஹோட்டலில் இருந்த இன்னும் இரண்டு உ.பி பார்ட்டிகளும், கோவாவிலிருந்து வந்திருந்த கொங்கனி ஆண்டி, வேகமாக ஆங்கிலம் பேசும் அவள் மகள் என எல்லாரும் நெருப்பருகே நின்றோம். பின்னணியில் 'மச்சான் பேரு மதுர" பாடல்.
பேச ஆரம்பித்தால் வாயிலிருந்து புகை. குளிர் நன்றாக இருந்தது.
அறைக்கு போனதும் மகன் கேட்டான்:
'அப்பா இங்கதான் இவ்வளவு குளிருதே, ஏன் ஏ.சி ரூம் புக் பண்ணினே".
அடப் பாவி!
............
மறு நாள் காலை பொள்ளாச்சி வழியாக டாப்ஸ்லிப் போகும் போது மலை அடிவாரத்தில் ஷூட்டிங். ஏதோ தெரிஞ்ச முகமாக இருக்கிறதே என்று காரை நிறுத்தினால், அட நம்ம ராஜ்கிரண்.
கொஞ்ச நேரம் பழங்கதை பேசிவிட்டு, அவர் கொடுத்த இளநீரையும் காலி செய்துவிட்டு, மலைக்கு போனோம். டாப்சிலிப் போனதும் அங்கிருந்த வனத்துறை அதிகாரி,' காட்டுக்குள்ள போக எங்க பஸ் வரணும்னா குறைஞ்சது 25 பேராவது வேணும், உங்க காரையெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது" என்று உட்கார்ந்து கொண்டார்.
செல்பேசி உதவியுடன் (இங்க சிக்னல் கம்மியாத்தான் கிடைக்குது) பொள்ளாச்சி அதிகாரிக்கு போன். அவர் உத்தரவின் பேரில் எங்கள் கார் அனுமதிக்கப்பட்டது. துணைக்கு ஒருவரையும் அனுப்பினார் அந்த வன அதிகாரி.
காரின் சத்தம் கேட்டு இரண்டு யானைகள் முகத்தை திருப்பி எங்களை பார்த்தது.
மச்சான், இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து 'விநாயகா விநாயகா" என்று போட்டுக்கொண்டான்.
'ஏண்டா... குரங்கும்தான் நிக்குது. அதை ஏன் ஆஞ்சநேயர்னு கும்பிடலை" என்றேன்.
'சும்மா இருங்க மச்சான்"
'புலி வந்தா ஐயப்பா ஐயப்பான்னு சொல்வியா?'
'சாமிய கிண்டல் பண்ணாதீங்க' என்றாள் மனைவி. இதற்கு மேல் நான் பேசக்கூடாது என்று அர்த்தம்.
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, 'சார் அங்க பாருங்க, காட்டெருமை. எவ்வளவு கூட்டமா நிற்குது பாருங்க. நம்ம கார் சத்த்ம் கேட்டதும் கலையுது" என்றார் துணைக்கு வந்தவர்.
ஒரே ஒரு காட்டெருமை மட்டும் முகத்தை நீட்டி, பல்லை காட்டியது லேசான ராகத்துடன். அழகான பல்!
உள்ளே மான்கள், மயில்கள் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு, பங்களாவுக்கு போகலாம் என்றார் துணை பார்ட்டி.
'போலாமே"
போனோம்.
சின்ன பங்களா. அதிகமாக இருட்டாகத்தான் இருந்தது. உள்ளே போனால், சரக்கு பாட்டில்களும்(காலியானது) தண்ணி பாட்டில்களும் அதிகமாக கிடந்தன.
'டிஸ்கஷனுக்கு சினிமாக்காரங்க இங்கதான் சார் வருவாங்க. ஆனா, இங்க கரண்ட் கிடையாது. மத்த படி அமைதியா யோசிக்க நல்ல இடம்" என்றார்.
அமைதியா யோசிக்க 5000 ரூபாய் செலவு பண்ணணுமே! கார் ரிட்டர்ன் ஆனது
முதலில் டாப்சிலிப்புக்காக போடப்பட்ட ப்ளான், பக்கத்து வீட்டுக்காரியின் புண்ணியத்தில் ஊட்டிக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த விஷயம் எப்படியோ தெரிந்து வயக்காட்டு வேலையை அப்படியே போட்டுவிட்டு சென்னை வந்தான் மனைவியின் தம்பியானவன்.
'நீ இப்ப வந்திருக்கே. நாங்க ஊட்டிக்குலா போறோம்" என்றேன்.
'தெரியும் மச்சான். அதுக்குதானே வந்திருக்கேன்" என்றான். மச்சான்கள் விவரமானவர்கள்.
மனைவியை பார்த்தேன். எல்லாம் என் வேலைதான் என்பது போல சிரித்தாள். பர்ஸில் கனம் இன்னும் கூடியது.
கோவையில் இறங்கி, குவாலிஸ் உதவியுடன் ஊட்டி ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்க்கு போவதற்குள் மணி நண்பகல் 12.
'ஐயையோ அங்க நல்லா குளிருண்டா. இந்தா ஸ்வட்டர் போட்டுக்கோ' என்று என் ஜூனியர்களை கோவையிலேயே முழுதாக மூடினாள் மனைவி. ஆனால், அங்கு குளிருக்கு பதில் ஜிவ் வெயில். 'என்ன கொடுமைடா' என்று நண்பர் இயக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் அங்கு நடப்பதை அறிந்து (முன்கூட்டியே அறிந்துதான்) இடத்தை தேடினால்... மலை மலையாய் ஏறி, வளை வளையென வளைந்து எங்கோ ஒரு தேயிலை தோட்டத்தில் நின்றது வண்டி.
நடிகை சரண்யா மோகன் மரத்தில் சாய்ந்து லேசாக கண்ணை ஆட்டினாள். இதை நான்கைந்து தடவை படமாக்கிய பிறகு அடுத்த ஷாட் என்றார்கள். அது எங்கே என்று கேட்டால், மலையில், இன்னும் நான்கைந்து ரவுண்ட் அடித்து உச்சியில் ஏதோ ஒரு தோட்டம் என்றார்கள். 'இனும முடியாதுப்பா. நீங்களும் உங்க ஷூட்டிங்கும்" என்று சொல்லிவிட்டு, பொட்டானிக்கல் கார்டன். பரந்து விரிந்த கார்டன். முழுசாக பார்ப்பதற்குள் மழை.
'ஒரு நா மழையில நனைவோமே' என்று பொடிசுகளை இழுத்தால், என் தர்மபத்தினி, 'உங்களுக்கெல்லாம் சளி பிடிச்சு, காய்ச்சல் வந்து, ஆஸ்பிடல் போயி, ரெண்டு நாள் லீவு போட்டு... எனக்கிருக்கிற வேலையில இதெல்லாம் தேவையா?' என்று அநியாயத்துக்கு பயம் காட்டியதால் நான்காவது மரம் வரை பார்த்துவிட்டு கார்டனுக்கு ஒரு டாடா.
கார்டன் வாசலில் இருந்து வலப்பக்கம் உற்றுப்பார்த்து டாஸ்மாக் இருப்பதை மச்சான் கண்களால் சொன்னான். அவன் அக்காவுக்கு தெரிந்தால்.... குலை நடுங்கியது. மூச் என்று மூக்கு மேல் விரல் வைத்து ஆஃப் பண்ணினேன். மச்சான் ஞாபகப்படுத்திய பிறகு வேறு எந்த சிந்தனையும் வரவில்லை.
லேசாக குளிர ஆரம்பித்தது.
'நீங்க ஸ்வட்டர் போட்டுக்கிறீங்களா?'
'ம்ஹூம்... இதெல்லாம் குளிரா? எங்க உடம்புக்கெல்லாம் இது ச்சூ... காஷ்மீர் குளிருலயே வெத்து உடம்போட போனவன் நான்"
'ம்..."
'பின்ன'
வீராப்பாய் சொல்லிவிட்டாலும் நிஜமாகவே குளிர். அதுக்காக ஸ்வட்டர் எடுத்து போட முடியுமா?
வேறு எங்கு போகவும் விருப்பமில்லை. மச்சானிடம் 'ரூம் போயிடலாமாப்பா' என்றேன். தலையாட்ட, புறப்பட்டோம். அறைக்குள் குடும்பத்தை வைத்து, டி.வியை ஆன் பண்ணிவிட்டு, போதை தேடி அலைந்தது மனது. 'இந்த மாதிரி குளிர் பிரதேசத்துக்கு வந்துட்டு, ஹாட் அடிக்கலைன்னா..." என்று முடிப்பதற்குள்ளேயே உர்ரானாள் மனைவி.
'என்ன ப்ர்மிஷனா?"
கெஞ்சி கூத்தாடி, கொஞ்சமா குடிக்க அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைத்த பின் கொஞ்சம் என்ன கொஞ்சம்!
விவரமான மச்சான், எங்கயோ பராக் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆஃப் பாட்டிலை வாங்கி வந்ததை அப்போதுதான் சொன்னான். 'புத்திசாலிடா நீ' என்ற சர்டிபிகேட்டை கொடுத்துவிட்டு, கீழே ஹோட்டல் பேரரிடம் 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்ததும் அரேன்ஜ் பண்ணினான் தண்ணி அடிக்க ஒரு இடத்தை.பிறகு தூக்கம்.
இரவு. சாப்பிட்டுவிட்டு ஹால் வந்தால் எக்கச்சக்க குளிர். மனைவி என்னை பார்த்தாள். இம்முறை மறுப்பேதும் இன்றி ஸ்வட்டர் போட்டுக்கொண்டேன். ஹோட்டலிலேயே மரக் குச்சிகளை வைத்து தீ வளர்த்தார்கள். ஹோட்டலில் இருந்த இன்னும் இரண்டு உ.பி பார்ட்டிகளும், கோவாவிலிருந்து வந்திருந்த கொங்கனி ஆண்டி, வேகமாக ஆங்கிலம் பேசும் அவள் மகள் என எல்லாரும் நெருப்பருகே நின்றோம். பின்னணியில் 'மச்சான் பேரு மதுர" பாடல்.
பேச ஆரம்பித்தால் வாயிலிருந்து புகை. குளிர் நன்றாக இருந்தது.
அறைக்கு போனதும் மகன் கேட்டான்:
'அப்பா இங்கதான் இவ்வளவு குளிருதே, ஏன் ஏ.சி ரூம் புக் பண்ணினே".
அடப் பாவி!
............
மறு நாள் காலை பொள்ளாச்சி வழியாக டாப்ஸ்லிப் போகும் போது மலை அடிவாரத்தில் ஷூட்டிங். ஏதோ தெரிஞ்ச முகமாக இருக்கிறதே என்று காரை நிறுத்தினால், அட நம்ம ராஜ்கிரண்.
கொஞ்ச நேரம் பழங்கதை பேசிவிட்டு, அவர் கொடுத்த இளநீரையும் காலி செய்துவிட்டு, மலைக்கு போனோம். டாப்சிலிப் போனதும் அங்கிருந்த வனத்துறை அதிகாரி,' காட்டுக்குள்ள போக எங்க பஸ் வரணும்னா குறைஞ்சது 25 பேராவது வேணும், உங்க காரையெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது" என்று உட்கார்ந்து கொண்டார்.
செல்பேசி உதவியுடன் (இங்க சிக்னல் கம்மியாத்தான் கிடைக்குது) பொள்ளாச்சி அதிகாரிக்கு போன். அவர் உத்தரவின் பேரில் எங்கள் கார் அனுமதிக்கப்பட்டது. துணைக்கு ஒருவரையும் அனுப்பினார் அந்த வன அதிகாரி.
காரின் சத்தம் கேட்டு இரண்டு யானைகள் முகத்தை திருப்பி எங்களை பார்த்தது.
மச்சான், இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து 'விநாயகா விநாயகா" என்று போட்டுக்கொண்டான்.
'ஏண்டா... குரங்கும்தான் நிக்குது. அதை ஏன் ஆஞ்சநேயர்னு கும்பிடலை" என்றேன்.
'சும்மா இருங்க மச்சான்"
'புலி வந்தா ஐயப்பா ஐயப்பான்னு சொல்வியா?'
'சாமிய கிண்டல் பண்ணாதீங்க' என்றாள் மனைவி. இதற்கு மேல் நான் பேசக்கூடாது என்று அர்த்தம்.
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, 'சார் அங்க பாருங்க, காட்டெருமை. எவ்வளவு கூட்டமா நிற்குது பாருங்க. நம்ம கார் சத்த்ம் கேட்டதும் கலையுது" என்றார் துணைக்கு வந்தவர்.
ஒரே ஒரு காட்டெருமை மட்டும் முகத்தை நீட்டி, பல்லை காட்டியது லேசான ராகத்துடன். அழகான பல்!
உள்ளே மான்கள், மயில்கள் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு, பங்களாவுக்கு போகலாம் என்றார் துணை பார்ட்டி.
'போலாமே"
போனோம்.
சின்ன பங்களா. அதிகமாக இருட்டாகத்தான் இருந்தது. உள்ளே போனால், சரக்கு பாட்டில்களும்(காலியானது) தண்ணி பாட்டில்களும் அதிகமாக கிடந்தன.
'டிஸ்கஷனுக்கு சினிமாக்காரங்க இங்கதான் சார் வருவாங்க. ஆனா, இங்க கரண்ட் கிடையாது. மத்த படி அமைதியா யோசிக்க நல்ல இடம்" என்றார்.
அமைதியா யோசிக்க 5000 ரூபாய் செலவு பண்ணணுமே! கார் ரிட்டர்ன் ஆனது
Tuesday, September 9, 2008
கேரக்டர் 8 - பூழாத்தி -5
ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை குல தெய்வ கோயில்ல கொடை நடக்கும். பூவங்குறிச்சி கொளத்து பக்கத்துல இருக்குத பூதத்தாருதான் இவ்வோ குலசாமி. பூழா வீட்டுக்காரன், எசக்கி, கருத்தப்பிள்ளையூர்ல துணி வெளுக்குத மாடன், அவங்க சொக்காரங்க, இன்னும் ரெண்டு துணி வெளுக்குத குடும்பம் சேர்ந்து இதுக்கு கொடை கொடுப்பாவோ. கோயிலுக்குன்னு கொட்டகைன்னு எதுவும் கெடயாது. கொளத்துக்கு எதுர்ல இருக்குத ரயில் பாதை பக்கத்துல சின்ன ஓடை இருக்கு. அதுக்கு வலப்புறத்துல கொஞ்சம் மண்ணுக்குள்ள புதைஞ்சு இருக்குத கருப்பு கல்லுதான் சாமி. அது சாமிங்கதுக்கு அடையாளமா பக்கத்துல இருக்குத மரத்துல ஒரு பாதி காவிவேட்டியை கெட்டிருப்பாவோ. ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை கொட கொடுக்கும்போதுதான் இப்படி கட்டுவாவோங்கதால, அது கொஞ்ச நாள்லயே காணாம போயிரும்.
கொடை நேரத்துல சொந்தக்காரவோ கூட்டம் ரொம்ப வரும் பூழா வீட்டுக்கு. அந்த நாளுவோள்ல கழுத்துல தங்க சங்கிலி, டோலாக்கு அது இதுன்னு போட்டுகிட்டு மினுக்குவா பூழா. ஊர்ல உள்ள பொம்பளைவோ எல்லாம் அப்ப பூழாவ பாத்தா கேக்குத கேள்வி இதுதான்.
''ஏட்டி ரெண்டு புள்ளை பெத்தது போதும். நீ இப்படி மினுக்குனுன்னா, உன் வீட்டுக்காரன் இன்னொரு புள்ளைக்கு வழி பண்ணிருவாம்"
'போங்கத்தா... உங்களுக்கு இதே எடக்கா போச்சு"ம்பா பூழா. பொம்பளைலுவோ சிரிப்பாவோ.
காலமும் கண்ணு மண்ணு தெரியாம போனதுல, இப்ப வயசாயி போச்சு பூழாவுக்கு. சொன்னா நம்ப மாட்டியோ. அவ மவன் இப்ப கொயித்துல இருக்காம். என்ன வேலை செய்தாம்னெல்லாம் தெரியாது. மாசமானா வீட்டுக்கு ரூவா வந்துருது. யாராவது கடன் வாங்கணும்னா இவாகிட்டதான் கேக்காவோ. பூழா வீட்டுக்காரன் தலையில கொண்டைய போட்டுக்கிட்டு சாமியாரா அலையுதான். மவங்காரன் இனும ஒண்ணும் துணி வெளுக்க போவாண்டாம். வீட்டுல சும்மா இரு, நாந்தாம் ரூவா அனுப்புதம்லாங்கான். ஆனா, பூழாவுக்கு கேக்கலை. வய்சாகி, கண்ணு ஆபரேஷன் பண்ணிட்டு வந்தாலும் இன்னும் அழுக்கு துணி வாங்க வந்திட்டிருக்கா.
முற்றும்
கொடை நேரத்துல சொந்தக்காரவோ கூட்டம் ரொம்ப வரும் பூழா வீட்டுக்கு. அந்த நாளுவோள்ல கழுத்துல தங்க சங்கிலி, டோலாக்கு அது இதுன்னு போட்டுகிட்டு மினுக்குவா பூழா. ஊர்ல உள்ள பொம்பளைவோ எல்லாம் அப்ப பூழாவ பாத்தா கேக்குத கேள்வி இதுதான்.
''ஏட்டி ரெண்டு புள்ளை பெத்தது போதும். நீ இப்படி மினுக்குனுன்னா, உன் வீட்டுக்காரன் இன்னொரு புள்ளைக்கு வழி பண்ணிருவாம்"
'போங்கத்தா... உங்களுக்கு இதே எடக்கா போச்சு"ம்பா பூழா. பொம்பளைலுவோ சிரிப்பாவோ.
காலமும் கண்ணு மண்ணு தெரியாம போனதுல, இப்ப வயசாயி போச்சு பூழாவுக்கு. சொன்னா நம்ப மாட்டியோ. அவ மவன் இப்ப கொயித்துல இருக்காம். என்ன வேலை செய்தாம்னெல்லாம் தெரியாது. மாசமானா வீட்டுக்கு ரூவா வந்துருது. யாராவது கடன் வாங்கணும்னா இவாகிட்டதான் கேக்காவோ. பூழா வீட்டுக்காரன் தலையில கொண்டைய போட்டுக்கிட்டு சாமியாரா அலையுதான். மவங்காரன் இனும ஒண்ணும் துணி வெளுக்க போவாண்டாம். வீட்டுல சும்மா இரு, நாந்தாம் ரூவா அனுப்புதம்லாங்கான். ஆனா, பூழாவுக்கு கேக்கலை. வய்சாகி, கண்ணு ஆபரேஷன் பண்ணிட்டு வந்தாலும் இன்னும் அழுக்கு துணி வாங்க வந்திட்டிருக்கா.
முற்றும்
Subscribe to:
Posts (Atom)