சைக்கிளு மோகனுக்கு மோந்து பாத்தாலே போதை ஏறிரும். இன்னைக்கு வேற கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டான். பயலுக்கு நடக்க முடியலை. ஆத்து மணல்ல அங்கயும் இங்கயுமா அலைஞ்சுகிட்டு வந்தவன், பெரிய தாழைகிட்ட வந்ததும் பொத்துன்னு விழுந்துட்டான். இந்த தாழைக்கு பக்கத்துல வரப்பு மேல ஏறி கல்யாண வீட்டு போவணும். அதுக்குள்ள இந்தப் பய இப்படி விழுந்துதொலைச்சுட்டான். கூட வந்தவனுவோல்ல கொஞ்சம் பேரு, முன்னாலயே போயிட்டானுவோ.
மந்திரக்கோன் நெலமையும் கொஞ்சம் சரியில்லை. வரப்புக்கிட்ட போனதும் குபுக்குனு வாயால எடுத்துட்டாரு. குத்தவச்சுகிட்டு 'ஆங்.. ஆங்" தரையை பார்த்து துப்பிக்கிட்டிருந்தாரு. வெயிலு வேற சுள்ளுனு அடிக்கு. ஆத்துல தண்ணி, ஓடை மாதிரி ஓடிட்டு இருக்கு. என்னதான் வெயிலடிச்சாலும் லேசான குளிரு இருந்துகிட்டுதானிருக்கு.
இவங்களை கூட்டிட்டு வந்த உள்ளூர்க்கார பயலுக்கு வேசடையா போச்சு. இப்படி விழுந்துட்டானுவளேன்னுதான். மோகனை கைய புடிச்சு இழுத்து இழுத்து பாத்தான். அங்க திரும்புதான் , இங்க திரும்புதான ஒழிய எழ்ந்திருக்க வழிய காணோம். அந்தானி, துண்டை தண்ணியில நனைச்சுக் கொண்டு வந்து, அவன் மூஞ்சில புழிஞ்சான். மோகன் கண்ணை தொறந்துட்டு, 'எனக்கு என்னாச்சு?'ன்னு எழுந்திரிச்சு முட்டியை கெட்டிக்கிட்டு உக்கார்ந்தாம். வேட்டி ஒரு பக்கம் கெடந்தது. சட்டை பையில பாத்தான். வச்சிருந்த ரூவா அப்டியே இருந்தது.
'ஏண்ணே... எந்திரு... சாப்டுத நேரமாச்சு"'
அவன் கையை பிடிச்சு இழுத்தான். கூட்டிட்டு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப்போச்சு. வரப்பு கிட்ட வந்தா மந்திரக்கோன் மல்லாந்துக்கிடக்காரு... வேட்டி சட்டையெல்லாம சவதி கரை.
பேச்சு மட்டு்ம் அன்னா இன்னான்னு பேசுதானுவோ. ஒரு பாட்டிலுக்கு தாங்கமாட்டக்கானுவளேன்னு நெனச்ச உள்ளூக்காரன், அண்ணாச்சோ.. அண்ணாச்சோ...ன்னு உசுப்பி உசுப்பி பாத்தான். பொரண்டு பொரண்டு படுத்தவரை அதே போல ஈரத்துண்டை எடுத்து மூஞ்சியில பிழிஞ்சு..., கண்ணை தொறந்து பாத்தாரு... எப்படி இங்ஙன விழுந்தேன்னு மொணங்கிட்டு நடக்க போனாரு, காலு ஆடுது. பின்னால வந்த மோகனை புடிச்சுக்கிட்டாரு... அவன் ஒருபக்கம் லம்புதாம்... இவரு ஒருபக்கம் லம்புதாரு... அப்டியே நடந்து வந்துட்டிருக்காவோ. இவ்வோ தண்ணியடிச்ச லெச்சனம், கல்யாண வீடு பூரா தெரிஞ்சு, மோகன் பொண்டாட்டி வந்து ஏசுனா.
'ஏய் ச்சீ கேவலப்படுத்தாத.. போட்டி"ன்னான் அவன்.
மந்திரக்கோன் பொண்டாட்டி, இந்த மாதிரி நேரத்துல கிட்ட வரமாட்டா. வந்தா எட்டிக்கிட்டு மிதிச்சிருவாரு. இதே போல பலமுறை அனுபவ பட்டுருக்கதால, அந்த வீட்டுல வேற சட்டையை வாங்கிட்டு வந்து, 'ஏல தம்பி, அவரு சட்டையை மாத்தி விடுய்யா"ன்னு கொடுத்தா.
அந்தாப்ல பந்தியில எல்லாரும் மத்தியானம் சாப்டுட்டு இருந்தாவோ. ஏழு வவை கூட்டு பொறியலு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோருன்னு வரிசையா வச்சிருந்தாவோ. சைக்கிளு மோகன், பேச்சு வாக்குல சொன்னான், 'என்னதாம் சொல்லும்யா, தென்காசியில நடந்த எங்க அக்கா மவன் கல்யாணத்துக்கு வச்ச சாப்பாடு மாதிரி வேற எங்கயும் நான் இன்னைக்கு வர சாப்டதில்லை... என்ன சொல்லிதீரு"ன்னான்.
மந்திரக்கோன் இதை சாதாரணமா விட்டிருக்கலாம். போதை வேற உள்ள போயிருக்கா.
'எங்க வந்து சாப்டுட்டு என்னல சொல்லுத... இந்த சாப்பாடை கேவலமாவால பேசுத" ன்னுட்டு டமார்னு அவன் கன்னத்துல அடிச்சுட்டாரு. கூட சாப்ட்டுட்டு இருந்தவளோலாம் இவரை பிடிக்க, மோகனுக்கு சுள்ளுனு கோவம். எலயில இருந்து கைய எடுத்து எச்சிக் கையோட மொகத்துல வேகமா விட்டாம் பாருங்க... கிர்ருனு ஆயிப்போச்சு மந்தரக்கோனுக்கு. கல்யாண வீடு கலவர வீடா போச்சு. மோகனுக்கு கொஞ்சம் பேரு, மந்தரக்கோனுக்கு கொஞ்சபேருன்னு சத்தம் போட்டுட்டு இருக்காவோ.
''பெரியசாமிகொண்டாடிய எப்படி அந்தப் பய அடிக்கலாம்"
''சாமி கொண்டாடியா இருந்தா அவர் யாரையும் கை நீட்டலாமோ"
இப்படியே பேச்சு, போயி போயி ஊர்ல வெவராம் வச்சாச்சு. மந்தரக்கோனுக்கு இது மானப் பிரச்னையா போச்சு. இதுக்கு மட்டும் தண்டனை கொடுக்கலன்னா ஊருல ஒரு பய மதிக்கமாட்டாம்னு நெனச்சாரு. இதுக்காக சொக்கார பயலுவோல, தனக்கு சாதகமா என்ன பண்ணணுமோ அதை பண்ணி ரெடி பண்ணிவச்சிட்டாரு... அந்தானி, பஞ்சாயத்து கதவு தெறக்குத சத்தம் கேட்டது. மந்திரக்கோன் திரும்பி பாத்தாரு...கொஞ்ச காலமா பஞ்சாயத்து பக்கம் வாராத சம்முவக்கோன் மீசையை தடவிகிட்டு உள்ள வந்துகிட்டிருந்தாரு.
நாளைக்கு...
Sunday, March 29, 2009
கேரக்டர்: சாமி கொண்டாடி-1
Tuesday, March 24, 2009
கேரக்டர்: சாமி கொண்டாடி
பூதத்தாரு கோயில்ல மந்திரக்கோன்தான் பெரியசாமி கொண்டாடி. அவருக்கு முன்னால பலவேசக்கோன் ஆடிக்கிட்டிருந்தாரு. 25 வருஷத்துக்கு முன்னால மாட்டு வண்டி ஆத்துல உருண்டு தண்ணில முங்கி அவரு செத்த பெறவு, மந்திரக்கோனை பெரியசாமியா ஆக்குனாவோ. அவரும் ஆளு கம்பீரமா இருப்பாருல்லா. மீசையை திருக்கிட்டு, 'ஏல'ன்னாருன்னா எல்லா பயலுவோலும் பயந்துருவானுவோ. அதட்டலா இருக்கும். பெரியசாமிகொண்டாடி வேறயா. ஊருல அவருக்கு முக்கியத்துவம் ஜாஸ்தியாபோச்சு. வயக்காட்டு பிரச்னை, தண்ணி பிரச்னைன்னா அவரைதான் கூட்டியாந்து வெவாரம் பேசுவாவோ. இவரும் நியாயம், தர்மம் பாத்துல்லாம் சொல்லமாட்டாரு. எவன் அவருக்கு வேண்டியவன்னு பாத்து அவனுக்கு ஏத்தாப்ல வெவாரத்தை முடிப்பாரு. அவருக்கு சிங்கி அடிக்க, கூட மாட அஞ்சாரு பேரு இருப்பானுவோ. பெறவு கேக்கணுமா? அவரு சொல்லுததுதான் சட்டம்.
கோயில்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொட. மூணுநாளு கொட நடக்கும். கொட செலவுக்கு தல கட்டுக்கு இவ்வளவுன்னு வரி வைப்பாவோ. கொஞ்சம் ஏழைபாழை கொடுக்கமுடியலன்னா கூட விடமாட்டாவோ. கடனை வாங்கியாவது குடுக்கணும். சில பேருக்கு அது மான பிரச்னை. வரி கொடுக்காத பயன்னு கேவலமா பேசிருவாவோன்னுட்டு, பொண்டாட்டி தாலியை கூட அடவு வச்சு கொடுத்துருவானுவோ. கோயிலு செலவயெல்லாம் பெரியசாமிகொண்டாடி மவந்தான் பாத்துக்கிடுததால, அவரு வரியை கொடுக்க மாட்டாரு. ஆனா, கொடுத்த மாதிரி கணக்கை காண்பிச்சி, செலவுல அதுஇதுன்னு எழுதிக்கிடுவானுவோ. இது பலவருஷ கோயில் கொடையில நடந்திருக்கு. சனி வாயில இருக்குன்னு சொன்ன மாதிரி, ஒரு நாளு தன்னோட வாயாலயே மாட்டிக்கிட்டாரு மந்திரக்கோன்.
பாப்பாக்குடி பக்கத்துல இருக்குத நந்தந்தட்டையில, அவரு தங்கச்சி மவ கல்யாணம். ஊர்க்காரங்க எல்லாரும் போயிருந்தாவோ. இந்த கல்யாணம் காய்ச்சின்னா தண்ணி இல்லாமயா. தாலிகட்டி முடிஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு, மந்தரக்கோன் மச்சான், 'யோவ், நம்ம மருமவ பய இப்பம் வருவாம். கூட வந்த ஆளுவோளை கூட்டிட்டு ஆத்து வரைக்கும் போயிட்டு வந்திரும்'னு சொன்னாரு. ஆத்துக்குள்ள ஒரு தாழக்குப் பின்னால வடிப்பு (சாராயம்).
மந்திரக்கோன், ஊர்க்காரன்ல குடிக்குதவனையெல்லாம் கூட்டிட்டு போயிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணப்பயயலும் கல்யாணத்துக்கு வந்திருக்காம். இந்தப்பய குடிக்க மாட்டான். மந்திரக்கோனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் ஆவாது. சொக்காரனுவோன்னாலும் சொத்து தகராறு. வந்த ப்யல கூப்டாம இருக்க முடியுமா? அந்தானி, மந்திரக்கோனுக்கு ஒத்து ஊதுத பயலை கூப்டு, 'ஏல அந்தப் பயலை கூப்டுக்கோ. இல்லன்னா, அதை வேற கொறயா சொல்லுவானுவோ"ன்னாரு. சரின்னு அவனும் கூப்டான். வேட்டிய மடிச்சு கெட்டிட்டு போயிட்டாம். மொத்தம் 12 பேரு.
போய் ஆத்து மணல்ல, தென்னம்பிள்ளை நெழல்ல உக்காந்தாச்சு. ஆளாளுக்கு ஒருபாட்டுல சாராயமுப். கொஞ்சம் ஊறுகாயும். வெறுவாகெட்ட பயலுவோ கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணுங்கறதெல்லாம் கெடயாது. அந்தானி, பாட்டிலை கையில புடிச்சு, கண்ணை பொத்திட்டு சடசடன்னு உள்ள இறக்கிட்டானுவோ. அந்தானி, செத்த நேரத்துல உச்சிக்கு ஜிவ்வுனு தூக்குச்சி பாருங்க, எல்லா பயலுவோலுக்கும் வாய் உளறலு. சைக்கிளு கடை மோகனனுக்கு தண்ணி ஒவரா ஆயிட்டுன்னா, பய அழுது தொலைச்சுருவாம். அந்தானி, கவலையை எல்லாம் பொலம்பவும் ஆரம்பிச்சிருவாம்.
ஊருகாயை பூராம் நக்கிட்டு, வேட்டியில மடிச்சி வந்திருந்த கதலி பழத்தை எடுத்து தின்னான் மோகன். 'ஏலே.. இதை எப்பம்ல வாங்குன. அரவமில்லாம எடுக்க"ன்னாவோ.
'ஆமா, குடிக்கன்னு போறோம். திங்கதுக்கு எதும்னு வேண்டாமான்னுதான் வாங்குனேன்"ன்னுட்டு புலம்ப ஆரம்பிச்சிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணன், குடிக்கலைன்னாலும் ஊறுகாயை நக்கிட்டு, இவங்களை வேடிக்கைப்பாத்துட்டு இருந்தாம்.
மோகன், 'ஏண்ணே இன்னும் கோயிலு வரிக்கு வாங்குன கடனை அடைக்கலண்ணே. தெனமும் வீட்டுலவேற சண்டை"ன்னு அழ ஆரம்பிச்சாம் பாருங்க... மந்திரக்கோன் மத்த பயலுவோளை பாத்தான். எல்லாம் தலையை தொங்கப்போட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருந்துச்சு. அந்தானி, மோகன் காதுகிட்ட வந்து சொன்னாரு மந்திரக்கோன் .'ஏ ஆக்கங் கெட்ட பயல. இதை மொதல்லயே சொல்லிருந்தனா... வரி கட்டாமயா கட்டுனமாதிரி காட்டிருக்கலாம்ல"ன்னான்.
'எப்டி மாமா"
அந்தானி வெவரத்தை பூரா மந்திரக்கோன் சொன்னாம் பாருங்க, கண்ணப்பயலுக்கு திக்குனு ஆயிபோச்சு. இவனுவோ தடுமாறி வாரதுக்கு முன்னால, நடந்து போனான் கண்ணன்.
நாளைக்கு சொல்லுதேன்
கோயில்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொட. மூணுநாளு கொட நடக்கும். கொட செலவுக்கு தல கட்டுக்கு இவ்வளவுன்னு வரி வைப்பாவோ. கொஞ்சம் ஏழைபாழை கொடுக்கமுடியலன்னா கூட விடமாட்டாவோ. கடனை வாங்கியாவது குடுக்கணும். சில பேருக்கு அது மான பிரச்னை. வரி கொடுக்காத பயன்னு கேவலமா பேசிருவாவோன்னுட்டு, பொண்டாட்டி தாலியை கூட அடவு வச்சு கொடுத்துருவானுவோ. கோயிலு செலவயெல்லாம் பெரியசாமிகொண்டாடி மவந்தான் பாத்துக்கிடுததால, அவரு வரியை கொடுக்க மாட்டாரு. ஆனா, கொடுத்த மாதிரி கணக்கை காண்பிச்சி, செலவுல அதுஇதுன்னு எழுதிக்கிடுவானுவோ. இது பலவருஷ கோயில் கொடையில நடந்திருக்கு. சனி வாயில இருக்குன்னு சொன்ன மாதிரி, ஒரு நாளு தன்னோட வாயாலயே மாட்டிக்கிட்டாரு மந்திரக்கோன்.
பாப்பாக்குடி பக்கத்துல இருக்குத நந்தந்தட்டையில, அவரு தங்கச்சி மவ கல்யாணம். ஊர்க்காரங்க எல்லாரும் போயிருந்தாவோ. இந்த கல்யாணம் காய்ச்சின்னா தண்ணி இல்லாமயா. தாலிகட்டி முடிஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு, மந்தரக்கோன் மச்சான், 'யோவ், நம்ம மருமவ பய இப்பம் வருவாம். கூட வந்த ஆளுவோளை கூட்டிட்டு ஆத்து வரைக்கும் போயிட்டு வந்திரும்'னு சொன்னாரு. ஆத்துக்குள்ள ஒரு தாழக்குப் பின்னால வடிப்பு (சாராயம்).
மந்திரக்கோன், ஊர்க்காரன்ல குடிக்குதவனையெல்லாம் கூட்டிட்டு போயிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணப்பயயலும் கல்யாணத்துக்கு வந்திருக்காம். இந்தப்பய குடிக்க மாட்டான். மந்திரக்கோனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் ஆவாது. சொக்காரனுவோன்னாலும் சொத்து தகராறு. வந்த ப்யல கூப்டாம இருக்க முடியுமா? அந்தானி, மந்திரக்கோனுக்கு ஒத்து ஊதுத பயலை கூப்டு, 'ஏல அந்தப் பயலை கூப்டுக்கோ. இல்லன்னா, அதை வேற கொறயா சொல்லுவானுவோ"ன்னாரு. சரின்னு அவனும் கூப்டான். வேட்டிய மடிச்சு கெட்டிட்டு போயிட்டாம். மொத்தம் 12 பேரு.
போய் ஆத்து மணல்ல, தென்னம்பிள்ளை நெழல்ல உக்காந்தாச்சு. ஆளாளுக்கு ஒருபாட்டுல சாராயமுப். கொஞ்சம் ஊறுகாயும். வெறுவாகெட்ட பயலுவோ கொஞ்சம் கொஞ்சமா குடிக்கணுங்கறதெல்லாம் கெடயாது. அந்தானி, பாட்டிலை கையில புடிச்சு, கண்ணை பொத்திட்டு சடசடன்னு உள்ள இறக்கிட்டானுவோ. அந்தானி, செத்த நேரத்துல உச்சிக்கு ஜிவ்வுனு தூக்குச்சி பாருங்க, எல்லா பயலுவோலுக்கும் வாய் உளறலு. சைக்கிளு கடை மோகனனுக்கு தண்ணி ஒவரா ஆயிட்டுன்னா, பய அழுது தொலைச்சுருவாம். அந்தானி, கவலையை எல்லாம் பொலம்பவும் ஆரம்பிச்சிருவாம்.
ஊருகாயை பூராம் நக்கிட்டு, வேட்டியில மடிச்சி வந்திருந்த கதலி பழத்தை எடுத்து தின்னான் மோகன். 'ஏலே.. இதை எப்பம்ல வாங்குன. அரவமில்லாம எடுக்க"ன்னாவோ.
'ஆமா, குடிக்கன்னு போறோம். திங்கதுக்கு எதும்னு வேண்டாமான்னுதான் வாங்குனேன்"ன்னுட்டு புலம்ப ஆரம்பிச்சிட்டாம். சம்முவக்கோன் மவன் கண்ணன், குடிக்கலைன்னாலும் ஊறுகாயை நக்கிட்டு, இவங்களை வேடிக்கைப்பாத்துட்டு இருந்தாம்.
மோகன், 'ஏண்ணே இன்னும் கோயிலு வரிக்கு வாங்குன கடனை அடைக்கலண்ணே. தெனமும் வீட்டுலவேற சண்டை"ன்னு அழ ஆரம்பிச்சாம் பாருங்க... மந்திரக்கோன் மத்த பயலுவோளை பாத்தான். எல்லாம் தலையை தொங்கப்போட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருந்துச்சு. அந்தானி, மோகன் காதுகிட்ட வந்து சொன்னாரு மந்திரக்கோன் .'ஏ ஆக்கங் கெட்ட பயல. இதை மொதல்லயே சொல்லிருந்தனா... வரி கட்டாமயா கட்டுனமாதிரி காட்டிருக்கலாம்ல"ன்னான்.
'எப்டி மாமா"
அந்தானி வெவரத்தை பூரா மந்திரக்கோன் சொன்னாம் பாருங்க, கண்ணப்பயலுக்கு திக்குனு ஆயிபோச்சு. இவனுவோ தடுமாறி வாரதுக்கு முன்னால, நடந்து போனான் கண்ணன்.
நாளைக்கு சொல்லுதேன்
Subscribe to:
Posts (Atom)