காதல், ஒரு கடலை கைக்குள் அடைத்துவிடும் சக்தி வாய்ந்தது. மூன்றாவதாக, அவன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதாக உணர்ந்தான். காதலிப்பதைவிடவும் காதல் வயப்படுவது சுகமான அவஸ்தை.
நான்காவது தெருவில் இருந்து நெய் விற்க வரும் மூக்கம்மாள், மூக்கும் முழியுமாக இருப்பதாக அப்போது நினைத்தான். இருவரும் பேசத் தொடங்கிய நான்காவது வாரத்தில் அவளுடன் ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்துக்குச் சென்றான்.
அவள் நான்கடி முன்பும் இவன் நான்கடி பின்புமாக சென்று ஊரில் யாருக்கும் தெரியாதவாறு காதல் வளர்த்தார்கள். கல்யாணி சைலப்பரிடம் தங்கள் காதல் கைகூட சிறப்பு அர்ச்சனை செய்துகொண்டார்கள். எல்லாருக்கும் இலவசமாக அருள் பாலிக்கும் அம்மனும் அய்யாவும் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டதாக நினைத்த மறுநாள், இடைகால் அத்தை மகனுக்கு நிச்சயிக்கப்பட்டாள் மூக்கம்மாள்.
விதியின் விளையாட்டுகள் விவரமானவை.
இம்முறை கலங்கவில்லை உச்சிமகாளி. விஷயத்தை உடன் ஆடுமேய்க்கும் அய்யாசாமியிடம் சொன்னதும்தான் அவன் எதையோ கண்டுபிடித்தவனாகச் சொன்னான்.
‘ஏல கவனிச்யா?‘
‘என்னத்த?‘
‘நீ ராசியான பயலே‘
‘என்ன அர்தலி சொல்லுத?‘
‘பெறவு, நீ எந்த புள்ளய காதலிக்கியோ கொஞ்ச நாள்லயே அந்த புள்ளைலுவோளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிருது பாரேன்‘
‘இதென்ன கூத்தா இருக்கு‘
‘நான் சொல்லுதம்னு பாக்காதல. நீயே யோசனை பண்ணி பாரு‘
ஆமா என்ற உ.மா, இந்த விசித்திர நிகழ்வை உணர்ந்து ஆச்சர்யப்பட்டான். கொஞ்சம் சிரிப்பாகவும் வந்தது. அதெப்படி எனக்கு மட்டும் இப்படியொரு ராசி?
பொழுது புலரும் முன்பே எழுந்துவிட்டான். அருணாசலம் டீக்கடையில் பால் சூடாகி கொண்டிருந்தது. இப்போது எந்த வீட்டுக்கும் பால் கறக்கும் வேலை இல்லை. பழகிவிடும் மாடுகள், அவர்களின் சொந்தக்காரர்கள் கைகளுக்கு பழக்கப்பட்டிருந்தது. மாடு மேய்ப்பதில் இப்போது அவனுக்கு ஆர்வம் குறைந்திருந்தது.
இருந்தாலும் இதைவிட்டால் வேறு பிழைப்பில்லை என்பதால் ஏனோ தானோ என்று தொடர்ந்துகொண்டிருந்தான். இனி காதல் வயப்பட ஊரில் அழகான குமரிகள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சீக்கிரம் கல்யாணம் ஆகி போக தான் ஒரு காரணகர்த்தாவாக இருந்து விடக் கூடாது என்று முடிவெடுத்தான். அடுத்த வாரம் குள்ராட்டிக்கு செல்லும் கோஷ்டிகளுடன் தானும் ஐக்கியமாவது என தீர்மானித்தான். காடு அவனுக்கு ஆச்சர்யம் தரவும் அவன் காட்டை அனுபவிக்கவும் புறப்பட முடிவானது.
தொடர்வேன்
Sunday, September 20, 2009
Tuesday, September 15, 2009
காடு-1
உச்சி மகாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதில் சில சுவாரஸ்யங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ரசனையை பொறுத்தது அது. மாடுகள் மேய்ப்பதில் கெட்டிக்காரனான உ.மகாளிக்கு வயது இருபது. வயது முக்கியமில்லையென்றாலும் இந்த பருவத்துக்கான சேட்டைகளை, நீங்கள் அறிய உதவலாம். பீடி குடிப்பது, தண்ணியடிப்பது போன்ற எந்த நல்ல பழக்கங்களையும் அவன் கொண்டிருக்கவில்லை. அதை கொண்டிருப்பதற்கு, பணம் ஒரு விஷயம் என்பதை தவிர, பிற காரண காரியங்களை தேட வேண்டியதில்லை. உ.மகாளியின் தந்தை எனப்படுவர் ஊரில் கஞ்சன் என பெயரெடுத்தவர். அவருக்கு தெரியாமல் மாடக்குழியில் இருந்து அஞ்சோ பத்தோ எப்போதாவது திருடும் பழக்கம் இருந்தாலும் அதை எப்போதும் செய்வதில்லை உ.மகாளி. இப்படியான இன்ட்ரோ உ.மகாளிக்கு போதுமென்பதால் கதைக்குள் செல்லலாம்.
தன்னைப்பற்றிய இப்படியொரு விஷயம், தனக்கு தெரியாமல், சேக்காளிகளுக்குத் தெரிந்திருக்கிறதே என்பதில் அவனுக்கு கொஞ்சம் வெசனைதான். தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து தலையில் கட்டினான். அவன் மேல் சட்டை அணிவதில்லை என்பதால் தோளில் இருக்கின்ற பெரிய மச்சம் பளிச்சென தெரிந்தது.
மேல பத்தில் மாடு மேய்த்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, கோட்டிமணிதான் இதை சொன்னான். கொஞ்சம் புளங்காகிதமும், புல்லரிப்பும் இருந்தாலும் கூட, தனக்கு ஏன் இது தோணவில்லை என்பதில் குழப்பமடைந்தான். மறுநாள் கிட்டி ஐயர் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது பொன்னையாவும் இதை சொல்ல, மகிழ்ச்சியடைந்தான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது.
முத்தையா பிள்ளை வீட்டுக்கு, காலையில் பால் கறக்க போனபோதுதான் லட்சுமியை அவன் சந்தித்தான். அதற்கு முன் பலமுறை சந்தித்திருந்தாலும் அன்று அவனுக்கு ஏதோவாகி இருந்தது. இந்த ஏதோவாகியை, காதலென்றும் கொள்ளலாம். தினமும் வெறும் பல்லிளிப்பும், பாட்டு பாடுவதுமாக அவனது காதல் ஒரு கட்டுக்குள் இருந்தது. விஷயத்தை, உடன் மாடுமேய்க்கும் அய்யா சாமியிடன் சொன்ன போது, ‘சும்மா சிரிச்சிட்டு இருந்தா என்னல அர்த்தம். ஐ லவ் யூன்னு சொல்லித் தொலைல’ என்றான். பக்கத்தூர் டூரிங் தியேட்டருக்கு, அப்போதுதான் அதிகமாக காதல் படங்கள் வரத்தொடங்கி, ஊருக்கு காதல் வார்த்தைகளை சொல்லிக்கொடுத்ததன் விளைவாக, ஐலவ்யூ வை அறிந்திருந்தான் அவன். அறிதலும் அறியப்படுதலும் அவரவர் விதிப்படி.
இப்படி இவன் சொன்ன ஐடியாபடி, அந்த வார்த்தையை சொல்லி விடுவதென்று முடிவெடுத்த காலையில், பால் கறக்கும்போது, லட்சுமியின் அம்மா பத்தமடையாள் வந்தாள். அவளுக்கு உடல் நலமில்லையாம். உடல் நலம் சரியில்லை என்பதற்கு, ஊரில் அந்த மூன்று நாள் என்றும் பொருள். நான்கைந்து நாள் கழித்து, சொல்லிவிடுவது என்று நினைத்த போது, அவளது அம்மாவானவள், ‘எய்யா விஷயம் தெரியுமா? நம்ம புள்ளைக்கு ஆழ்வார்க்குறிச்சியில மாப்பிள்ளை பாத்தாச்சு’’ என்றாள். குபுக்கென்று வியர்த்தது அவனுக்கு. ஒரு காதல், முளையிலேயே கிள்ளி எரியப்பட்டதற்காக, அவன் இரண்டு நாட்கள் மட்டுமே வருத்தப்பட்டான்.
இப்படியான, சின்ன காதல் சோகத்தில் அவன் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீனிவாச அய்யங்கார்வாள் பசுமாடு வாங்கியிருந்தார். காலையில் 5 லிட்டரும் மாலையில் 5 லிட்டரும் கறக்கும் மாடு. கறப்பதற்கு தந்தைவழி பணிக்கப்பட்டிருந்தான் உ.மகாளி. இதன் பொருட்டு அக்ரகாரம் போகும் வழியில், கொஞ்சம் சுற்றி வளைத்து, அத்தை உறவான மாரியம்மாளின் வீட்டில் அவளது மகள் சுருட்டையை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தான். அவளும் அதிகாலை, இவன் வரும் வேளையில் அக்ரகாரத்துக்கு பின்பக்கம் இருக்கிற வாய்க்காலில் தண்ணீர் எடுக்க செல்வதை வழக்கமாகியிருந்தாள். வெறும் சந்திப்பு, புன்னகை என்றிருந்த வேளையில், அய்யாசாமியின் அறிவுரைப்படி கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வழக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவள் நடிகை ராதாவின் சாயலை ஒத்திருப்பதாக நினைத்துக்கொண்டான்.
சுருட்டையும் சுமாராக இப்போது இவன் வசம் ஆகியிருந்தாள். மந்திர மூர்த்தி கோயில் கொடையை முன்னிட்டு, புது துணி அணியும் பழக்கம் இருந்ததால், உ.மாகாளி, அவளுக்காக சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று, மஞ்சள்பாவாடை, பச்சைக்கலர் தாவணி வாங்கி வந்தான். எறும்பு ஓடினாலே பொசுக்கென்று தெரியும் குச்சு, வீட்டில் இதை அவள் எங்கு போய் ஒளித்து வைக்க முடியும். கொடையை முன்னிட்டு அவள், தண்ணிக்கு போவதை மாலையில் வைத்துக்கொண்டாள். இரண்டு நாட்கள் அதை கையில் வைத்துக்கொண்டு காதலியிடம் கொடுக்க பெரும் சிரமப்பட்டான்.
கொடைக்காக வெளியூரிலிருந்தும் உறவினர்கள் வந்திருந்தனர். உந்த உறவினர்கள், சாமி வேட்டைக்கும் செல்லும் முன், மச்சினன்களுக்கு வேட்டி, சட்டை கட்ட வேண்டும் என்பது வழக்கம். அப்போது, பாப்பாக்குடியில் இருந்து பேண்ட், சட்டை போட்டு வந்திருந்த, மீசை சுப்பையா உறவினரான சிவப்பு ராசு, சுருட்டையின் மீது காதல் கொண்டான். மும்பை தாராவி பகுதியில் அவன் வேலைப்பார்ப்பதாகப் பேசிக்கொண்டார்கள். சுருட்டை சம்மதிக்க, கொடை முடிந்த நாள் நிச்சயதார்த்தத்தை நடத்திவிட்டார்கள். விஷயம் தெரியாத உ.மகாளி, தினமும் அவள் வீட்டை உற்றுப் பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தான். அதிகமாக பொசமுட்டி, அந்த பாவாடை தாவணியை, அநியாயத்துக்கு பொய் சொல்லி தனது சித்தி மகளுக்கு கொடுத்தான்.
சுருட்டையின் அம்மாவின் அப்பாவும் பத்திரிகை வைக்க, வீட்டுக்கு வந்தபோதுதான் உ.மகாளி விஷயம் தெரிந்துகொண்டான். தனது இரண்டாவது காதலும் இப்படியானதில் உடைந்துபோனான் உ.ம.
தொடரும்.
தன்னைப்பற்றிய இப்படியொரு விஷயம், தனக்கு தெரியாமல், சேக்காளிகளுக்குத் தெரிந்திருக்கிறதே என்பதில் அவனுக்கு கொஞ்சம் வெசனைதான். தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து தலையில் கட்டினான். அவன் மேல் சட்டை அணிவதில்லை என்பதால் தோளில் இருக்கின்ற பெரிய மச்சம் பளிச்சென தெரிந்தது.
மேல பத்தில் மாடு மேய்த்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, கோட்டிமணிதான் இதை சொன்னான். கொஞ்சம் புளங்காகிதமும், புல்லரிப்பும் இருந்தாலும் கூட, தனக்கு ஏன் இது தோணவில்லை என்பதில் குழப்பமடைந்தான். மறுநாள் கிட்டி ஐயர் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது பொன்னையாவும் இதை சொல்ல, மகிழ்ச்சியடைந்தான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது.
முத்தையா பிள்ளை வீட்டுக்கு, காலையில் பால் கறக்க போனபோதுதான் லட்சுமியை அவன் சந்தித்தான். அதற்கு முன் பலமுறை சந்தித்திருந்தாலும் அன்று அவனுக்கு ஏதோவாகி இருந்தது. இந்த ஏதோவாகியை, காதலென்றும் கொள்ளலாம். தினமும் வெறும் பல்லிளிப்பும், பாட்டு பாடுவதுமாக அவனது காதல் ஒரு கட்டுக்குள் இருந்தது. விஷயத்தை, உடன் மாடுமேய்க்கும் அய்யா சாமியிடன் சொன்ன போது, ‘சும்மா சிரிச்சிட்டு இருந்தா என்னல அர்த்தம். ஐ லவ் யூன்னு சொல்லித் தொலைல’ என்றான். பக்கத்தூர் டூரிங் தியேட்டருக்கு, அப்போதுதான் அதிகமாக காதல் படங்கள் வரத்தொடங்கி, ஊருக்கு காதல் வார்த்தைகளை சொல்லிக்கொடுத்ததன் விளைவாக, ஐலவ்யூ வை அறிந்திருந்தான் அவன். அறிதலும் அறியப்படுதலும் அவரவர் விதிப்படி.
இப்படி இவன் சொன்ன ஐடியாபடி, அந்த வார்த்தையை சொல்லி விடுவதென்று முடிவெடுத்த காலையில், பால் கறக்கும்போது, லட்சுமியின் அம்மா பத்தமடையாள் வந்தாள். அவளுக்கு உடல் நலமில்லையாம். உடல் நலம் சரியில்லை என்பதற்கு, ஊரில் அந்த மூன்று நாள் என்றும் பொருள். நான்கைந்து நாள் கழித்து, சொல்லிவிடுவது என்று நினைத்த போது, அவளது அம்மாவானவள், ‘எய்யா விஷயம் தெரியுமா? நம்ம புள்ளைக்கு ஆழ்வார்க்குறிச்சியில மாப்பிள்ளை பாத்தாச்சு’’ என்றாள். குபுக்கென்று வியர்த்தது அவனுக்கு. ஒரு காதல், முளையிலேயே கிள்ளி எரியப்பட்டதற்காக, அவன் இரண்டு நாட்கள் மட்டுமே வருத்தப்பட்டான்.
இப்படியான, சின்ன காதல் சோகத்தில் அவன் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீனிவாச அய்யங்கார்வாள் பசுமாடு வாங்கியிருந்தார். காலையில் 5 லிட்டரும் மாலையில் 5 லிட்டரும் கறக்கும் மாடு. கறப்பதற்கு தந்தைவழி பணிக்கப்பட்டிருந்தான் உ.மகாளி. இதன் பொருட்டு அக்ரகாரம் போகும் வழியில், கொஞ்சம் சுற்றி வளைத்து, அத்தை உறவான மாரியம்மாளின் வீட்டில் அவளது மகள் சுருட்டையை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தான். அவளும் அதிகாலை, இவன் வரும் வேளையில் அக்ரகாரத்துக்கு பின்பக்கம் இருக்கிற வாய்க்காலில் தண்ணீர் எடுக்க செல்வதை வழக்கமாகியிருந்தாள். வெறும் சந்திப்பு, புன்னகை என்றிருந்த வேளையில், அய்யாசாமியின் அறிவுரைப்படி கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வழக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவள் நடிகை ராதாவின் சாயலை ஒத்திருப்பதாக நினைத்துக்கொண்டான்.
சுருட்டையும் சுமாராக இப்போது இவன் வசம் ஆகியிருந்தாள். மந்திர மூர்த்தி கோயில் கொடையை முன்னிட்டு, புது துணி அணியும் பழக்கம் இருந்ததால், உ.மாகாளி, அவளுக்காக சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று, மஞ்சள்பாவாடை, பச்சைக்கலர் தாவணி வாங்கி வந்தான். எறும்பு ஓடினாலே பொசுக்கென்று தெரியும் குச்சு, வீட்டில் இதை அவள் எங்கு போய் ஒளித்து வைக்க முடியும். கொடையை முன்னிட்டு அவள், தண்ணிக்கு போவதை மாலையில் வைத்துக்கொண்டாள். இரண்டு நாட்கள் அதை கையில் வைத்துக்கொண்டு காதலியிடம் கொடுக்க பெரும் சிரமப்பட்டான்.
கொடைக்காக வெளியூரிலிருந்தும் உறவினர்கள் வந்திருந்தனர். உந்த உறவினர்கள், சாமி வேட்டைக்கும் செல்லும் முன், மச்சினன்களுக்கு வேட்டி, சட்டை கட்ட வேண்டும் என்பது வழக்கம். அப்போது, பாப்பாக்குடியில் இருந்து பேண்ட், சட்டை போட்டு வந்திருந்த, மீசை சுப்பையா உறவினரான சிவப்பு ராசு, சுருட்டையின் மீது காதல் கொண்டான். மும்பை தாராவி பகுதியில் அவன் வேலைப்பார்ப்பதாகப் பேசிக்கொண்டார்கள். சுருட்டை சம்மதிக்க, கொடை முடிந்த நாள் நிச்சயதார்த்தத்தை நடத்திவிட்டார்கள். விஷயம் தெரியாத உ.மகாளி, தினமும் அவள் வீட்டை உற்றுப் பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தான். அதிகமாக பொசமுட்டி, அந்த பாவாடை தாவணியை, அநியாயத்துக்கு பொய் சொல்லி தனது சித்தி மகளுக்கு கொடுத்தான்.
சுருட்டையின் அம்மாவின் அப்பாவும் பத்திரிகை வைக்க, வீட்டுக்கு வந்தபோதுதான் உ.மகாளி விஷயம் தெரிந்துகொண்டான். தனது இரண்டாவது காதலும் இப்படியானதில் உடைந்துபோனான் உ.ம.
தொடரும்.
Tuesday, September 1, 2009
காடு

காலில் பீய்ங்கான் கிழித்து
படுத்திருந்த நாட்களில்
அவள் கொடுத்த
கத்தரி வத்தலும்
கருவாட்டு துண்டும்
எந்த காதலனுக்கும்
கிடைக்காத மருந்து.
-தொகுப்பிலிருந்து
காடு- கோடானு கோடி புதிர்களை புதைத்துக்கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவி கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக்காத்தில் நமக்கு பல கதைகள் கிடக்கிறது. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டி வைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுத்தவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண்தரையெங்கும் எவனோ சென்று வந்த ஒன்றையடி பாதை எனக்கும் இன்னும் ஆச்சர்யம். காட்டையும் மாட்டையும் வாழ்க்கையாக கொண்டு பிராயம் எனக்கு தந்த அனுபவம் நிறைய. கண்ணாடி விரியன் பாம்பிலிருந்து பெயர் புரியாத ஊர்வன, பறப்பன, பாய்வன உள்ளிட்டவற்றை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசான் அது. ஆசான்கள் கொஞ்சம் பயமூட்டுபவர்கள். நிறைய படிப்பூட்டுபவர்கள். அலற வைக்கும் காட்டின் குரல்கள் நம்மையும் அதிர வைப்பவை. சுகங்களும் சுவாரஸ்யங்களும் புதையலாகியிருக்கும் அக்காட்டின் அனுபவத்தை நண்பனின் வாழ்க்கையோடு விரைவில் தொடரப் போகிறேன்.
(கவிதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை பாஸு!)
Subscribe to:
Posts (Atom)