தவித்துப்போதலென்பது தன்னிலை விளக்கம். தவித்தும் தவிக்காமலும் இருக்கக் கூடிய பாக்கியம் காதலுக்கு மட்டுமே உண்டு. வேப்ப மரமொன்றின் அடியில் வேணற்கால வெயிலில் படுத்திருக்கிறது என் உடல். நினைவுகளைச் சுமக்கும் மனது உன்னையும் உன் சார்ந்தோரையும் சுற்றிக்கொண்டிருந்தது. விழுந்து கிடக்கும் வேப்பங்காய்களின் மணத்தில் என் சாரத்தையும் தாண்டி சுற்றுகிறது கடிக்காத கட்டெறும்புகள்.
மரம்தாண்டி செல்லும் அக்காள்கள் இடக்காகக் கேட்கிறார்கள்.
' என்ன சீதை சித்தி மவன் இங்ஙன படுத்துக்கிடக்கான்' என்று.
கேட்காத செவிக்குள் எதை சொன்னாலென்ன என்பதாக கிடக்கிறதென் உடல். அவர்களின் பேச்சினூடாக வருகிறது என்னை உசுப்பிவிடும் வார்த்தை.
'இந்தப் பயதான் அந்த பிள்ள பின்னால சுத்துதானாம்'
உன்னை பற்றியும் நம்மை பற்றியும் வரும் வார்த்தைகள் திட்டுதலாக இருந்தாலும் சுகமாகவே இருக்கிறது. தூக்கம் கலைந்து எழுகிறேன். புல்கட்டை தலையில் வைத்து செல்லும் அக்காள்கள் தூரமாகப் போய் விட்டார்கள். இருந்தாலும் கேட்டே விட்டேன். அவர்கள் காதுகளுக்குத்தான் செல்லவில்லை என் வார்த்தை.
'எக்கோ... நான் சுத்தலை; நாங்க சுத்துதோம்'.
அன்று தேரோட்டம். வருடந்தோறும் நிலையில் நிற்கிற தேருக்கு அன்று மட்டும் அப்படியொரு பவுசு. ஆழ்வார்க்குறிச்சி சாலையில் கூட்டமாக நடக்கிறார்கள் நம்மூர் மக்கள். தென்னை மரங்களின் ஊடே பல்வேறு கலர்களில் செல்லும் தாவணி, சேலைகளைக்கு மத்தியில் நீ மட்டும் சிகப்பு தாவணி. முதல் பார்வையிலேயே நீயென கணித்து விடுகிறதென் மனது. அந்த இளங்காலை வெயிலில் செருப்பில்லாத காலுடன் வேகமாக நடக்கிறேன்.
உனக்கும் எனக்குமான பத்தடி தூரத்துக்கு முன்னே என் கால்கள் நகர மறுக்கிறது.
அங்கும் இங்கும் ஆடி அசையும் இரட்டை ஜடைகளை ரசிக்கிறேன். ஒரு ஜடை நீயென்றும் மற்றொன்று நானென்றும் சொல்கிறது மனசு.
ஆனால் இரண்டையும் ரிப்பன் கொண்டு கட்டியிருக்கிறாய். மனதுகள் கட்டப்படுகிறது. கட்டப்படாத நினைவுகளும் அங்கேயே கட்டப்பட்டு விடுகின்றன. அதையும் தாண்டி ஒரு ஜடை கேட்கிறது 'முன்னே வாயேன்'. மற்றொன்று 'வராதே' என்கிறது.
வரவா வேண்டாமா என்கிற குழப்பத்தில் என்னை காணவில்லை. தேடி தேடிப் பார்க்கிறேன். காணாமல் போன என்னை, உன் கையில் இருக்கும் பிளாஸ்டில் கூடையில் அடைத்திருக்கிறாய். எம்பி எம்பி பார்க்கிறேன். உன் கண்களுக்கு நான் தெரியவேஇல்லை. உன்னுடனே வரும் தோழி, ஆச்சர்யத்துடன் உன்னிடம் ஜாடை பேசுகிறாள். உனக்கு புரியவில்லை.
கூடையில் இருக்கும் தேங்காய், பழங்களூடாக என்னையும் இருத்தி வைத்திருக்கிறாய் நீ. நான்காவது வீதியில் வருகிறது தேர். முன்னதை ஆண்கள் இழுக்கிறார்கள். பின்னால் ஒன்று வருகிறது. அதைப்பெண்கள் இழுக்க வேண்டும். நீ தேர் இழுக்கவா வேண்டாமா என்கிற யோசனையில் இருக்கிறாய். என்னை எப்போதோ இழந்துவிட்டதால் நான் என்ன நினைக்கிறேன் என்றே தெரியவில்லை. அதற்குள் உன் தோழி, பிளாஸ்டிக் கூடையை தேரிலிருக்கும் பூசாரியிடம் கொடுக்கிறாய்.
கண்களை மூடி வேண்டுகிறாய். சிறிது நேரத்தில் பூசாரி திருப்பிக் கொடுக்கும் கூடையில் தேங்காய், பழம், திருநீறு, குங்குமம் இவை எதுவும் இல்லை. நான் மட்டும் இருக்கிறேன்.
இப்போது உன் கண்களுக்கு நான் தெரிகிறேன். என்னை எடுத்து செல்வதா வேண்டாமா என்கிற படபடப்பு உன் கண்களில். அல்லது, 'நீ எப்படி இங்க' என்பதாக இருக்கலாம். தோழியை பார்க்கிறாய். தோழி உன்னைப் பார்க்கிறாள். உங்கள் பார்வையில் நான் வாய்ப்பேச முடியாதவனாகிறேன்.
தேர் செல்ல தொடங்குகிறது. பக்தர்கள் கோஷமிடுகிறார்கள்.
கூடையிலிருந்து நானும்.
உனக்கு மட்டும் எதுவும் கேட்கவில்லை.
இன்னும் தொடர்வேன்.
Thursday, October 11, 2007
Friday, October 5, 2007
ஆட்டுமந்தையிலிருந்து ஒரு காதல்...
தூங்க முடியாத இரவுகளில் நினைவுகளைச் சுமப்பது சுகங்களின் பாக்கியம். நீர்த்துப் போகிற பண்டங்களில் இருக்கிற நீரின் சதசதப்பை உணர்கின்ற தருணம் அது.
நீ உன் கணவனுடனும் நான் என் மனைவியுடனும் இரண்டற கலந்துபோன கால சூழ்நிலையிலும் காதலில் வலிகள் உக்கிரமாகவே இருக்கிறது. நடு நிசியில் எழுந்து அழும் என் குழந்தையை தோளோடு அணைத்துக்கொண்டு மொட்டை மாடியில் உலாத்துகிற நேரம் கூட, சமீபத்தில் சந்தித்த உன் நினைவுகள் என்னை உறிந்து எடுக்கின்றன.
அது கோயில் திருவிழா. நீ வருவாய் என்பதற்காகவே நான் வந்தேன். நான் வருவேன் என்பதற்காகவே நீயும் வந்திருந்தாய். சொந்தங்கள் முன்னிலையிலேயே நலம் விசாரித்தோம். நீ என் மகனையும் நான் உன் மகனையும் முத்தமிட்டோம். அதிகம் பேச முடியாத அந்த சாயங்காலத்தில் எல்லார் முன்பும் நீ கிசுகிசுத்தாய். இரண்டு பேருமே நம் குழந்தைகளாக இருந்திருக்க வேண்டும் என்று.
வார்த்தையால் கொன்றுவிட்டு கண்ணீர்விட்டாய். உன் கண்ணீரின் தகதகப்பிலேயே பிரிந்தோம்.
வானமாக நீளும் ஆசைகளில் ஒன்றிரண்டு நிறைவேறியிருந்தாலும் உன் செம்மறியும் என் வெள்ளாடும் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக ஆகியிருக்கும். அப்படி எந்த கொலைப்பழியும் வந்துவிடாமல் தெய்வங்கள் பார்த்துக்கொண்டது. சாமிகள் பாக்கியவான்கள்.
அப்போது எங்கள் வயலில் சிறுகிழங்கு முளைத்திருந்தது. உன் வயலில் கத்தரிக்காய். இரண்டு வயலுக்கும் பொதுவாக இருக்கும் வடக்குவா செல்வி அம்மன் கோயிலில், உன் ஆசைக்காக பூ போட்டுப் பார்த்தோம். நம் கல்யாணம் நடக்குமென்று அம்மன் சொன்னாள். அன்றிலிருந்து உன் முகம் சிரிப்பை மட்டுமே சுமந்தது. ஆனால், காலம் உன்னையும் என்னையும் பிரித்துவிட்டது. அதே அம்மன் கோயிலில் காதலர்கள் நம்மைப் போலவே இன்னும் பூப்போட்டு பார்க்கிறார்கள். நினைத்த பூ வந்துவிடுகிறது. அம்மன் வைக்கின்ற பூ பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.
அடுத்த திருவிழா வரும் வரை நம் தவிப்புகள் நமக்குள்.
தொடர்வேன்.
நீ உன் கணவனுடனும் நான் என் மனைவியுடனும் இரண்டற கலந்துபோன கால சூழ்நிலையிலும் காதலில் வலிகள் உக்கிரமாகவே இருக்கிறது. நடு நிசியில் எழுந்து அழும் என் குழந்தையை தோளோடு அணைத்துக்கொண்டு மொட்டை மாடியில் உலாத்துகிற நேரம் கூட, சமீபத்தில் சந்தித்த உன் நினைவுகள் என்னை உறிந்து எடுக்கின்றன.
அது கோயில் திருவிழா. நீ வருவாய் என்பதற்காகவே நான் வந்தேன். நான் வருவேன் என்பதற்காகவே நீயும் வந்திருந்தாய். சொந்தங்கள் முன்னிலையிலேயே நலம் விசாரித்தோம். நீ என் மகனையும் நான் உன் மகனையும் முத்தமிட்டோம். அதிகம் பேச முடியாத அந்த சாயங்காலத்தில் எல்லார் முன்பும் நீ கிசுகிசுத்தாய். இரண்டு பேருமே நம் குழந்தைகளாக இருந்திருக்க வேண்டும் என்று.
வார்த்தையால் கொன்றுவிட்டு கண்ணீர்விட்டாய். உன் கண்ணீரின் தகதகப்பிலேயே பிரிந்தோம்.
வானமாக நீளும் ஆசைகளில் ஒன்றிரண்டு நிறைவேறியிருந்தாலும் உன் செம்மறியும் என் வெள்ளாடும் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக ஆகியிருக்கும். அப்படி எந்த கொலைப்பழியும் வந்துவிடாமல் தெய்வங்கள் பார்த்துக்கொண்டது. சாமிகள் பாக்கியவான்கள்.
அப்போது எங்கள் வயலில் சிறுகிழங்கு முளைத்திருந்தது. உன் வயலில் கத்தரிக்காய். இரண்டு வயலுக்கும் பொதுவாக இருக்கும் வடக்குவா செல்வி அம்மன் கோயிலில், உன் ஆசைக்காக பூ போட்டுப் பார்த்தோம். நம் கல்யாணம் நடக்குமென்று அம்மன் சொன்னாள். அன்றிலிருந்து உன் முகம் சிரிப்பை மட்டுமே சுமந்தது. ஆனால், காலம் உன்னையும் என்னையும் பிரித்துவிட்டது. அதே அம்மன் கோயிலில் காதலர்கள் நம்மைப் போலவே இன்னும் பூப்போட்டு பார்க்கிறார்கள். நினைத்த பூ வந்துவிடுகிறது. அம்மன் வைக்கின்ற பூ பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.
அடுத்த திருவிழா வரும் வரை நம் தவிப்புகள் நமக்குள்.
தொடர்வேன்.
Monday, October 1, 2007
நொய்யன் 5
ரெண்டு தலையிலயும் தலைப்பா இருக்கு. ஒரு சைடுல துண்டோட குஞ்சலம் தொங்குது. நம்மள வேற எடத்துக்கு மாட்டைப் பத்த சொல்லிட்டு இங்க அப்படி யாரு கூட நொய்யன் பேசிக்கிட்டிருக்கான்?ன்னு சூச்சமாடனுக்கு மண்டைக்குள்ள கொடச்சல்.
தலை தூக்கி தூக்கிப் பாக்கான். மொகம் சரியா தெரியமாட்டேங்கு. எள்ளுக்காட்டுக்குள்ள நுழையற எடத்துல ஒத்தை பனை ஒண்ணு நின்னுது. சூச்சமாடன் அதுல ஏறி பாத்துரணும்னு போனான். இடுப்பு சாரத்தை இழுத்து கட்டிக்கிட்டு, மேல ஏறுனான். பாதி பனைக்கு ஏறுனப் பெறவுதான் தெரிஞ்சது அது பொம்பளைன்னு. மஞ்சள்ல பூப்போட்ட தாவணி போட்டிருக்கு. தலையில சீசன் துண்டி கட்டிருக்கு. பக்கத்துல பல்லைக்காட்டிக்கிட்டு உக்காந்திருக்காம் இந்த பய. கொஞ்ச நாளா யார்கிட்டயும் பேசாம உம்முனு இருந்த பயலுக்கு சிரிப்பை பாரேன். வாரியலை எடுத்து அடின்னு சூச்சமாடன் கீழ இறங்குனான். சந்தேகப்பட்டது சர்தாம்.
கீழ, கூட மேய்ச்சலுக்கு வந்த பயலுவோ நின்னானுவோ. விஷயத்தை சொன்னாம் சூச்சன்.
'இங்க எந்த புள்ளைல வரும்?'
'ஏல இதுக்கு அடுத்தாப்ல இருக்கது கோவங்கொளத்துக்காரன் வயலு'
'ஆமா. மரியம் வயலு'
'அப்பம் அந்த புள்ள அவன் மவதாம்ல. பாத்தா அவ மாதிரிதாம் தெரியுது'
'அது ஏம் இங்க வருது'
'சோளக்காவலுக்கு'
'நல்ல காவலுதாம்ல'
'இதென்னல இப்படிப் போயி பழக்கத்தை வச்சுட்டாம்'
'சும்மாவே ஊர்ல வெவாரம் வேற மாதிரி போய்ட்டிருக்கு. இவன் கொலை வழக்குல கொண்டு போய் வுட்டுருவானோ'
'நம்ம யாருகிட்டயும் சொல்லிரக்கூடாது. நொய்யங்கிட்ட நைசா பேசிப்பாப்போம் என்ன சொல்லுதாம்னு. இப்பம் சத்தம் போடாம போவும்'
போனாவோ. சாயந்தரம் மாட்டை தொழுவத்துல கட்டிட்டி சூச்சமாடன் அப்பத்தா கடைக்கு வந்தாம். எல்லா பயலுவோலும் வந்துட்டாவோ. இந்த பய இன்னும் வரலை.
அப்பத்தா வழக்கம் போல, 'கொஞ்ச நாளா யாவாரமே சரியில்லைடே'ன்னாம்.
'ஆமா, அம்பத்தைஞ்சு குடும்பம் இருக்கு ஊர்ல. இதுல எழுபத்திரண்டு கடைய தெறங்கோ. உங்களுக்கு யாவாரம் இருக்கும்? ஒண்ணுமில்லனா கூட டீக்கடைய தெறந்துருதானுவோ'ன்னு சூச்சமாடன் பேசிக்கிட்டே இருக்கும் போது, நொய்யன் வந்தான். வந்ததும் எல்லாரும் அவனை பாக்காவோ.
காரணம் என்னன்னா என்னைக்கும் இல்லாத அதிசயமா இன்னைக்கு அவன் மொகத்துல பவுடர் போட்டிருந்தாம்.
சூச்சனுக்கு, அவன் முன்னால ஒருதடவை சொன்னது ஞாபகம் வந்துச்சு:
'நமெக்கெதுக்குல அதுலாம். இந்த மாடு ,தொழுவு, சாணம்னு நாத்தத்தோட வாழுதோம். நமெக்கெதுக்குல பவுடரு, மண்ணுனு'.
இப்பம் எப்படி இப்படி மாறிப்போனாம்?
நொய்யன் வந்து உக்காந்ததும் ஒவ்வொருத்தனும் ஒருத்தரு மொகத்தை ஒருத்தரு பாத்துக்கிடுதானுவோ. சூச்சங்கிட்ட கண்ணை காட்டுதானுவோ. அதுக்கு அர்த்தம் என்னன்னா, வாய்க்காலுக்கு போயி நொய்யங்கிட்ட விசாரிக்கணுங்கறது.
சரின்னு கொளம்புனாவோ. புள்ளையாரு கோயிலு வாய்க்கா திண்டுல உக்காந்தாச்சு. சூச்சன் மெதுவா ஆரம்பிச்சாம்.
'ஏல ஏம் இப்ப எள்ளுக்காட்டு பக்கத்துல மாட்டை மேய்க்கடே'
'சும்மாதான்'
'சும்மாதாம்னா...வெறதுவும் கதை இருக்கா?'
'வெறென்ன கதை'
'அது உனக்குதாம் தெரியும்'
'ஒரு கதையுமில்ல. வேற பேச்சை பேசுல'
'எங்களுக்கு தெரியாதுன்னு நெனக்காத'
'என்னல தெரியும் உங்களுக்கு'
அந்தானி சண்டை வந்துட்டு, நொய்யன் சூச்சனை ஓங்கி கீழ தள்ளிட்டு, 'இனும எங்கிட்ட யாரும் பேசாண்டாம். உங்க வழியில நீங்க மாட்டைப் பத்திட்டு போங்க. இவன் அங்க இங்க போறாங்கதுலாம் தேவையில்லாதது ஆமா. சொல்லிட்டேன்.'
சூச்சனுக்கு சுள்ளுனு கோவம் வந்தது. மத்த பயலுவோ அடக்கிட்டானுவோ. 'இதை இப்படியே உட்டா நாளைக்கு ரெண்டு ஊருக்கும் சண்டை வந்துதான் நிக்கும். பேசாம முத்தையா கோனார்ட்ட சொல்லிர வேண்டியதாம்'
சூச்சமாடங்கிட்ட ஒருத்தம் சொன்னாம்.
'வாங்க போலாம்'னு கிளம்புனாவோ. எதுத்தாப்ல முத்தையா கோனாரு வந்துட்டிருந்தாரு.
முற்றும். அப்பாடி முடிச்சுட்டேன்.
தலை தூக்கி தூக்கிப் பாக்கான். மொகம் சரியா தெரியமாட்டேங்கு. எள்ளுக்காட்டுக்குள்ள நுழையற எடத்துல ஒத்தை பனை ஒண்ணு நின்னுது. சூச்சமாடன் அதுல ஏறி பாத்துரணும்னு போனான். இடுப்பு சாரத்தை இழுத்து கட்டிக்கிட்டு, மேல ஏறுனான். பாதி பனைக்கு ஏறுனப் பெறவுதான் தெரிஞ்சது அது பொம்பளைன்னு. மஞ்சள்ல பூப்போட்ட தாவணி போட்டிருக்கு. தலையில சீசன் துண்டி கட்டிருக்கு. பக்கத்துல பல்லைக்காட்டிக்கிட்டு உக்காந்திருக்காம் இந்த பய. கொஞ்ச நாளா யார்கிட்டயும் பேசாம உம்முனு இருந்த பயலுக்கு சிரிப்பை பாரேன். வாரியலை எடுத்து அடின்னு சூச்சமாடன் கீழ இறங்குனான். சந்தேகப்பட்டது சர்தாம்.
கீழ, கூட மேய்ச்சலுக்கு வந்த பயலுவோ நின்னானுவோ. விஷயத்தை சொன்னாம் சூச்சன்.
'இங்க எந்த புள்ளைல வரும்?'
'ஏல இதுக்கு அடுத்தாப்ல இருக்கது கோவங்கொளத்துக்காரன் வயலு'
'ஆமா. மரியம் வயலு'
'அப்பம் அந்த புள்ள அவன் மவதாம்ல. பாத்தா அவ மாதிரிதாம் தெரியுது'
'அது ஏம் இங்க வருது'
'சோளக்காவலுக்கு'
'நல்ல காவலுதாம்ல'
'இதென்னல இப்படிப் போயி பழக்கத்தை வச்சுட்டாம்'
'சும்மாவே ஊர்ல வெவாரம் வேற மாதிரி போய்ட்டிருக்கு. இவன் கொலை வழக்குல கொண்டு போய் வுட்டுருவானோ'
'நம்ம யாருகிட்டயும் சொல்லிரக்கூடாது. நொய்யங்கிட்ட நைசா பேசிப்பாப்போம் என்ன சொல்லுதாம்னு. இப்பம் சத்தம் போடாம போவும்'
போனாவோ. சாயந்தரம் மாட்டை தொழுவத்துல கட்டிட்டி சூச்சமாடன் அப்பத்தா கடைக்கு வந்தாம். எல்லா பயலுவோலும் வந்துட்டாவோ. இந்த பய இன்னும் வரலை.
அப்பத்தா வழக்கம் போல, 'கொஞ்ச நாளா யாவாரமே சரியில்லைடே'ன்னாம்.
'ஆமா, அம்பத்தைஞ்சு குடும்பம் இருக்கு ஊர்ல. இதுல எழுபத்திரண்டு கடைய தெறங்கோ. உங்களுக்கு யாவாரம் இருக்கும்? ஒண்ணுமில்லனா கூட டீக்கடைய தெறந்துருதானுவோ'ன்னு சூச்சமாடன் பேசிக்கிட்டே இருக்கும் போது, நொய்யன் வந்தான். வந்ததும் எல்லாரும் அவனை பாக்காவோ.
காரணம் என்னன்னா என்னைக்கும் இல்லாத அதிசயமா இன்னைக்கு அவன் மொகத்துல பவுடர் போட்டிருந்தாம்.
சூச்சனுக்கு, அவன் முன்னால ஒருதடவை சொன்னது ஞாபகம் வந்துச்சு:
'நமெக்கெதுக்குல அதுலாம். இந்த மாடு ,தொழுவு, சாணம்னு நாத்தத்தோட வாழுதோம். நமெக்கெதுக்குல பவுடரு, மண்ணுனு'.
இப்பம் எப்படி இப்படி மாறிப்போனாம்?
நொய்யன் வந்து உக்காந்ததும் ஒவ்வொருத்தனும் ஒருத்தரு மொகத்தை ஒருத்தரு பாத்துக்கிடுதானுவோ. சூச்சங்கிட்ட கண்ணை காட்டுதானுவோ. அதுக்கு அர்த்தம் என்னன்னா, வாய்க்காலுக்கு போயி நொய்யங்கிட்ட விசாரிக்கணுங்கறது.
சரின்னு கொளம்புனாவோ. புள்ளையாரு கோயிலு வாய்க்கா திண்டுல உக்காந்தாச்சு. சூச்சன் மெதுவா ஆரம்பிச்சாம்.
'ஏல ஏம் இப்ப எள்ளுக்காட்டு பக்கத்துல மாட்டை மேய்க்கடே'
'சும்மாதான்'
'சும்மாதாம்னா...வெறதுவும் கதை இருக்கா?'
'வெறென்ன கதை'
'அது உனக்குதாம் தெரியும்'
'ஒரு கதையுமில்ல. வேற பேச்சை பேசுல'
'எங்களுக்கு தெரியாதுன்னு நெனக்காத'
'என்னல தெரியும் உங்களுக்கு'
அந்தானி சண்டை வந்துட்டு, நொய்யன் சூச்சனை ஓங்கி கீழ தள்ளிட்டு, 'இனும எங்கிட்ட யாரும் பேசாண்டாம். உங்க வழியில நீங்க மாட்டைப் பத்திட்டு போங்க. இவன் அங்க இங்க போறாங்கதுலாம் தேவையில்லாதது ஆமா. சொல்லிட்டேன்.'
சூச்சனுக்கு சுள்ளுனு கோவம் வந்தது. மத்த பயலுவோ அடக்கிட்டானுவோ. 'இதை இப்படியே உட்டா நாளைக்கு ரெண்டு ஊருக்கும் சண்டை வந்துதான் நிக்கும். பேசாம முத்தையா கோனார்ட்ட சொல்லிர வேண்டியதாம்'
சூச்சமாடங்கிட்ட ஒருத்தம் சொன்னாம்.
'வாங்க போலாம்'னு கிளம்புனாவோ. எதுத்தாப்ல முத்தையா கோனாரு வந்துட்டிருந்தாரு.
முற்றும். அப்பாடி முடிச்சுட்டேன்.
Subscribe to:
Posts (Atom)