இன்னும் எழ முடியாமல் இருக்கிறது உன் ஞாபகங்கள் அழுத்தும் மனசு. இமைகளை அறுத்து கண்களை எடுத்து செல்லும் உன் நினைவுகள், ஆயுதமானது பற்றிய யோசனை வரவே இல்லை. சாணம் மெழுகிய மண் தரை முற்றத்தில் மல்லாந்து படுத்தபடி வான் பார்த்து பேசுகிறேன். வானம் பூமியை காதலிப்பதாய் ரகசியம் சொல்கிறது.
வலிகளை உணர்ந்த வானுக்கு நானும், எனக்கு வானும் ஆறுதல் பரிமாறிக் கொண்டோம். ஊடே, தெரிந்தோ தெரியாமலோ பாய்ந்து வந்த அருவம் காற்றாகவும் இருக்கலாம். அப்போது அதை தென்றல் என்றேன். அது நான் நானாக இருந்த காலம்.
சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருகிறது என் உயிர் குடிக்கும் உன் வாசம். வானிடம் பேச்சை நிறுத்திவிட்டு கண்கள் மூடி வாசனை நுகர்கிறேன். விழி திறக்கையில் மண் தரை முற்றமெங்கும் உன் வார்த்தைகள் சிதறி கிடக்கின்றன. ஒவ்வொன்றாய் பொறுக்குகிறேன். கைகளுக்குள் அகப்படாமல் கீழே விழுவதில் ஒன்று என் முகமாக இருக்கிறது.
உன் கூந்தலில் சிந்தும் நீர் பட்டு, மீண்டும் முளைக்கிறது முகம். உன் வேடிக்கைப் பார்த்து ஆளரவமற்ற மனவெளியெங்கும் சிரிப்பலைகள். அதில் என்னால் நீந்த முடிகிறது. ஆழ்கடல் இருட்டில் திசையின்றி செல்கிறது பயணம். திடீரென முளைக்கும் மரத்திலிருந்து அழைக்கிறது உன் கைகள். நீந்திய களைப்பில் உன்னருகே அமர்கிறேன்.
கண்களில் நீ தீட்டிய மை பெயர்ந்து என் கைகளில் விழுகின்றன. ஒவ்வொன்றும் கனம். தாங்கும் சக்தியற்று நடுங்குகின்றன கைகள். ‘விழப்போகிறது... விழப்போகிறது... ம்... எடுத்துக்கொள்’ என்கிறேன். நீ என் அவஸ்தையை ரசிக்கிறாய். உடல் கோணலாகி, என் பாதத்திலேயே விழுகின்றன மை.
கனம் தாங்காத நோஞ்சான் கால்கள் வலியால் அலறி தனியாக அமர்கிறது. உன் சிரிப்பின் சத்தத்தில் ஆல மர இலைகள் அந்தரத்தில் தொங்கின்றன. விடாமல் தொடர்கிறது சிரிப்பு. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். நீ மட்டுமே சிரிக்கிறாய். வானம் அதிர்ந்து அங்கிருந்து ஒரு துண்டு நிலம் பெயர்ந்து வருகிறது. என் மீது விழுமோ என் அருகில் விழுமோ தெரியாது.
Friday, July 18, 2008
அலையில் நீந்தும் மனவெளி (அ) அவஸ்தையின் ரசிகை
Thursday, July 10, 2008
பைத்தியகாரனி்ன் அரிவாளும் சுகுணாவின் கழுத்தும்
சமீப காலமாகவே ஒரு கையில் அரிவாளுடனும் மறுகையில் கோணிப்பையுடனும் பைத்தியகாரன் என் நிழல் தொடர்ந்து வந்ததன் காரணத்தை புரிந்துகொண்டேன். அரிவாளுக்கு கீழே என் தலையை வைத்ததற்கு வாழ்த்துகள் (எனக்கும் நேரம் வராமலயா போயிரும்).
பைத்தியகாரனின் கேள்விகளுக்கான பதில்கள்:
1. தொடர்ந்து வட்டார வழக்கிலேயே எழுதி வருகிறீர்களே... வட்டார வழக்கு இலக்கியமாகுமா? ஆகும் என்றால் எப்படி? உலக இலக்கியங்களில் அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?
!. மனித வாழ்க்கையை திறம்பட பேசுகிற எல்லாமே சிறந்த இலக்கியம்தான். அதில் வட்டார வழக்குக்கு முக்கியமான இடம் இருக்கிறது. ஏனென்றால் அது மக்களின் மொழி. குறிப்பிட்ட வட்டார மனிதர்களின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, கொண்டாட்டங்களை சொல்லும் இலக்கியம்தான் பண்பாட்டை பேசும் இலக்கியம். நமது மண்ணின், பண்பாட்டின், கலாசாரத்தின் ஆழமான வேர் அது. ஆதி மனிதன் சைகையிலிருந்து பேச்சுக்கு மாறினான். பேச்சு எழுத்தானது. பரந்து விரிந்த அந்த எழுத்து, நவீனமான பிறகு, ஆதி வழக்கு ஆவணமாகிறது.
‘காலணாக்கு பெறாத பய
என்ன கேள்வி கேக்காம் பாரு’ & காலணா என்கிற துட்டு புழக்கத்தில் இருந்த விஷயம் இங்கே வெளியே வருகிறது.
‘நாசமத்து போறவன’& என்கிற வசவு சொல், (நாசம் + அற்று + போதல்) வாழ்த்தை குறிக்கிறது. இது தமிழின் வேரிலிருந்து/வட்டாரத்திலிருந்து வருகிற வார்த்தை.
மக்கள் பேசுகின்ற/புழங்குகின்ற வார்த்தைகளால் அவர்களது வாழ்க்கையை காட்டுவது இலக்கியம் இல்லாமல் என்ன? இப்படியான வட்டார வழக்கை ஒதுக்கி விட முடியாது.
நமது மகாபாரதமும், ராமாயணமும் வட்டார வழக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்கிறார்கள். முகமது நபியின் போதனைகளும், பைபிளும் வாய்மொழி இலக்கியத்திலிருந்து வந்தவைதானாம்.
உலகம் முழுவதும் வட்டார வழக்கு இருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பேசும் ஆங்கிலம் அவர்களது வட்டார வழக்குதான். அந்த ஆங்கிலத்திற்கும் அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களின் இலக்கியம் வட்டார இலக்கியம். ஒரே ஒரு உதாரணம்: நோபல் பரிசு பெற்ற டோனி மாரிசனின் நாவல்கள் அனைத்தும் வட்டார இலக்கிய வகையை சேர்ந்தது. ரஷ்யாவின் தாஸ்தாவோஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி உட்பட அங்கிருந்து வந்த அனைத்து நாவல்களுமே வட்டார வழக்கிலிருந்து வந்தவை என்றே சொல்லப்படுகிறது.
2. சினிமாவில் முதன்முதலில் நீங்கள் எழுதிய பாடல் எது? நயன்தாராவை புகழ்ந்து கதாநாயகன் பாடுவது போல் உங்களை பாடல் எழுதச் சொன்னால் என்ன எழுதுவீர்கள்?
முதல் பாடல் எழுதிய திரைப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இரண்டாவதாக எழுதியது மெட்டிஒலி டி.வி. தொடருக்கு.
நயன்தாராவை புகழ்ந்து எழுதினால் இப்போதிருக்கிற காதல் சண்டையில் (சிம்புவா? விஷாலா) என் டவுசரும் கிழியலாம். அதனால் இதிலிருந்து எஸ்...
பொதுவாக யாராவது
ஒரு கதாநாயகிக்கான பல்லவி:
நீ ராட்சஷ தேவியடி
என் ரகசிய போதையடி
ஒரு தேள் கடிச்சு
சிறு மீன் துடிக்கும்
ராத்திரி அவஸ்தையடி
(ரொம்ப முக்கியம்யா)
பின்நவீன சூழலை, அது சார்ந்த உரையாடலை வட்டார மொழியில் விளக்குங்கள்
'ஏட்டி நீயும் வெறவு பெறக்க வாரியா? ரெண்டு பேருக்கும் 25, 25 கொடுத்தாம்னா ஒரு நா வெறவு பெறக்க போவாம இருக்கலாம்’’
‘செரி வாரேன். ஆனா, வீட்டுக்கு வந்ததும் நீருதான் சோறு பொங்கணும்’
‘செரி’
ரெண்டு பேரும் வெறவுக்கு போனாவோ. சாயந்தரமா வெறவ வித்துட்டு கூலி வாங்குனாவோ. வாங்கிட்டு அந்த பய நேரா வீட்டுக்கு வரலை. பொத்தை மாரிட்ட போயி ஒரு கிளாஸ் சாராயத்தை குடிச்சுட்டு வந்தாம்.
வீட்டுக்காரி, அவனை மேலும் கீழும் பார்த்தா. பாத்துட்டு,
‘உனக்கு தெனமும் இதே வேலையா போச்சு. நீ சோறு பொங்கி வைக்க மாட்டேன்னுதான் நானே பொங்கிட்டேன்"
--கதை இவ்வளவுதான். வளரின் வார்த்தையில் பின் நவீனத்துவம் என்பது ஒரு சூழல்.
திருமணமான நீங்கள், சினிமாவில் உள்ள ஒரு கதாநாயகியுடன் நெருக்கமாக பழகுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. இந்த விஷயம் உங்கள் வீட்டுக்கு தெரியுமா?
இனிமேல் பைத்தியக்காரனுடன் எந்த பாருக்கும் செல்வதில்லை என்றும் போதையில் எதையும் உளற மாட்டேன் என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.
பி.கு: (பைத்தியக்காரன் ஒழிக)
சுகுணாவுக்கான கேள்விகள்:
1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)
2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?
4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...
பைத்தியகாரனின் கேள்விகளுக்கான பதில்கள்:
1. தொடர்ந்து வட்டார வழக்கிலேயே எழுதி வருகிறீர்களே... வட்டார வழக்கு இலக்கியமாகுமா? ஆகும் என்றால் எப்படி? உலக இலக்கியங்களில் அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?
!. மனித வாழ்க்கையை திறம்பட பேசுகிற எல்லாமே சிறந்த இலக்கியம்தான். அதில் வட்டார வழக்குக்கு முக்கியமான இடம் இருக்கிறது. ஏனென்றால் அது மக்களின் மொழி. குறிப்பிட்ட வட்டார மனிதர்களின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, கொண்டாட்டங்களை சொல்லும் இலக்கியம்தான் பண்பாட்டை பேசும் இலக்கியம். நமது மண்ணின், பண்பாட்டின், கலாசாரத்தின் ஆழமான வேர் அது. ஆதி மனிதன் சைகையிலிருந்து பேச்சுக்கு மாறினான். பேச்சு எழுத்தானது. பரந்து விரிந்த அந்த எழுத்து, நவீனமான பிறகு, ஆதி வழக்கு ஆவணமாகிறது.
‘காலணாக்கு பெறாத பய
என்ன கேள்வி கேக்காம் பாரு’ & காலணா என்கிற துட்டு புழக்கத்தில் இருந்த விஷயம் இங்கே வெளியே வருகிறது.
‘நாசமத்து போறவன’& என்கிற வசவு சொல், (நாசம் + அற்று + போதல்) வாழ்த்தை குறிக்கிறது. இது தமிழின் வேரிலிருந்து/வட்டாரத்திலிருந்து வருகிற வார்த்தை.
மக்கள் பேசுகின்ற/புழங்குகின்ற வார்த்தைகளால் அவர்களது வாழ்க்கையை காட்டுவது இலக்கியம் இல்லாமல் என்ன? இப்படியான வட்டார வழக்கை ஒதுக்கி விட முடியாது.
நமது மகாபாரதமும், ராமாயணமும் வட்டார வழக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்கிறார்கள். முகமது நபியின் போதனைகளும், பைபிளும் வாய்மொழி இலக்கியத்திலிருந்து வந்தவைதானாம்.
உலகம் முழுவதும் வட்டார வழக்கு இருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பேசும் ஆங்கிலம் அவர்களது வட்டார வழக்குதான். அந்த ஆங்கிலத்திற்கும் அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களின் இலக்கியம் வட்டார இலக்கியம். ஒரே ஒரு உதாரணம்: நோபல் பரிசு பெற்ற டோனி மாரிசனின் நாவல்கள் அனைத்தும் வட்டார இலக்கிய வகையை சேர்ந்தது. ரஷ்யாவின் தாஸ்தாவோஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி உட்பட அங்கிருந்து வந்த அனைத்து நாவல்களுமே வட்டார வழக்கிலிருந்து வந்தவை என்றே சொல்லப்படுகிறது.
2. சினிமாவில் முதன்முதலில் நீங்கள் எழுதிய பாடல் எது? நயன்தாராவை புகழ்ந்து கதாநாயகன் பாடுவது போல் உங்களை பாடல் எழுதச் சொன்னால் என்ன எழுதுவீர்கள்?
முதல் பாடல் எழுதிய திரைப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இரண்டாவதாக எழுதியது மெட்டிஒலி டி.வி. தொடருக்கு.
நயன்தாராவை புகழ்ந்து எழுதினால் இப்போதிருக்கிற காதல் சண்டையில் (சிம்புவா? விஷாலா) என் டவுசரும் கிழியலாம். அதனால் இதிலிருந்து எஸ்...
பொதுவாக யாராவது
ஒரு கதாநாயகிக்கான பல்லவி:
நீ ராட்சஷ தேவியடி
என் ரகசிய போதையடி
ஒரு தேள் கடிச்சு
சிறு மீன் துடிக்கும்
ராத்திரி அவஸ்தையடி
(ரொம்ப முக்கியம்யா)
பின்நவீன சூழலை, அது சார்ந்த உரையாடலை வட்டார மொழியில் விளக்குங்கள்
'ஏட்டி நீயும் வெறவு பெறக்க வாரியா? ரெண்டு பேருக்கும் 25, 25 கொடுத்தாம்னா ஒரு நா வெறவு பெறக்க போவாம இருக்கலாம்’’
‘செரி வாரேன். ஆனா, வீட்டுக்கு வந்ததும் நீருதான் சோறு பொங்கணும்’
‘செரி’
ரெண்டு பேரும் வெறவுக்கு போனாவோ. சாயந்தரமா வெறவ வித்துட்டு கூலி வாங்குனாவோ. வாங்கிட்டு அந்த பய நேரா வீட்டுக்கு வரலை. பொத்தை மாரிட்ட போயி ஒரு கிளாஸ் சாராயத்தை குடிச்சுட்டு வந்தாம்.
வீட்டுக்காரி, அவனை மேலும் கீழும் பார்த்தா. பாத்துட்டு,
‘உனக்கு தெனமும் இதே வேலையா போச்சு. நீ சோறு பொங்கி வைக்க மாட்டேன்னுதான் நானே பொங்கிட்டேன்"
--கதை இவ்வளவுதான். வளரின் வார்த்தையில் பின் நவீனத்துவம் என்பது ஒரு சூழல்.
திருமணமான நீங்கள், சினிமாவில் உள்ள ஒரு கதாநாயகியுடன் நெருக்கமாக பழகுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. இந்த விஷயம் உங்கள் வீட்டுக்கு தெரியுமா?
இனிமேல் பைத்தியக்காரனுடன் எந்த பாருக்கும் செல்வதில்லை என்றும் போதையில் எதையும் உளற மாட்டேன் என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.
பி.கு: (பைத்தியக்காரன் ஒழிக)
சுகுணாவுக்கான கேள்விகள்:
1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)
2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?
4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...
Sunday, July 6, 2008
தலை மலை அய்யன்
ஊர்ல மழைதான் முக்கியம். வெவசாயத்துக்கு அதுதான உயிரு. எட்டு மாச கோடையில மழை வாரது கஷ்டம்தான். வெவசாயிவோ திக்குமுக்காடி போவாவோ. ‘இப்ப மழை வந்தா பயிருலாம் பொழச்சுக்கிடுமே’ங்குத நெலமை வந்தா, ஊருல இருக்குத ஐயமாருவோ வூட்டுக்கு வெஷயம் போவும்.
அவங்கலாம் ஒண்ணு கூடி, ராமநதி அணைக்குள்ள இருக்குத தலை மலை அய்யன் (அய்யனாரு) கோயிலுக்கு போயி, பந்தலை போட்டு உக்காந்திருவாவோ. கூடவே ஒரு கூடையில பச்சை மௌகாயும் இருக்கும். அஞ்சு நாளு யாகம் நடக்கும். அஞ்சு நாளும் ஊரு பூரா இங்கதான் கூடி இருக்கும். சாப்பாடெல்லாம் இங்ஙனதான். விருந்து மாதிரி, தலை வாழை எலை போட்டு தடாபுடால்னு நடக்கும்.
நாலாவது நாளுலேயே சில சமயத்துல மழை பெஞ்சுரும். அஞ்சு நாளு வரைக்கும் மழை பெய்யலைன்னு வையுங்கோ. கோயிலுக்கு வெளியில இருக்குத சாமி செல மேல ( கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில வந்தாருங்கதுக்கு கதை இருக்கு) அந்த பச்ச மௌகாயை அரைச்சு, சாமி செல மேல பூரா பூசிருவாவோ. அந்தானி, எல்லாரும் அவ்வவ்வோ வூட்டுக்கு போயிருவாவோ. மௌகா பூசுன 24 மணி நேரத்துல மழையை கொண்டு வந்திருவாரு சாமி.
இதனால தலை மலை அய்யன்னு சாமிக்கு பேரு.
கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில இருக்காரு? அந்த கதைய கேளுங்க.
கோடையிலயெல்லாம் ராமநதில தண்ணி வத்திபோவும். அணையில கொஞ்சமாத்தான் தேங்கி கெடக்கும். அணைக்குள்ள இறங்கி மேற்காப்ல போனா மலை. அந்த வழியாதான் எல்லாரும் வெறவு வெட்டிட்டு வருவாவோ.
ஒரு நாளு, புள்ளதாச்சி பொம்பளை ஒருத்தி வெறவு வெட்ட போயிருக்கா. போற வழியிலேயே அவளுக்கு வயித்து வலி வந்துட்டு. என்ன பண்ணன்னு தெரியாம, உக்காந்து வயித்தை புடிச்சுட்டு அழுதிருக்கா. பின்னால வந்த இன்னொருத்தி, இங்ஙன இருந்து இவளுக்கு எப்படி பெரசவம் பார்க்கன்னு யோசிச்சிருக்கா. அந்தானி, ஆபத்துக்கு பாவமில்லைன்னு கோயிலுக்குள்ள அவளை கூட்டிட்டு போயிட்டா. அங்ஙனயே பெரசவம் நடந்திருக்கு.
இதை பாத்துக்கிட்டு சாமி அங்க இருக்க முடியுமா? சாமி வெளியில வந்து உக்காந்துட்டாரு. பெரசவம் நல்லபடியா நடந்து அவளும் பிள்ளைய தூக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா. ஆனா சாமி மட்டும் உள்ள போவாம வெளியிலயே உக்காந்திகிட்டாரு.
இதுதான் சாமி கோயில விட்டு வெளிய வந்த கதை.
கடையம் பக்கம் போனீங்கன்னா, ராமநதிக்குள்ள இருக்குத, இந்த தலை மலை அய்யனை பார்த்துட்டு வாங்க.
அவங்கலாம் ஒண்ணு கூடி, ராமநதி அணைக்குள்ள இருக்குத தலை மலை அய்யன் (அய்யனாரு) கோயிலுக்கு போயி, பந்தலை போட்டு உக்காந்திருவாவோ. கூடவே ஒரு கூடையில பச்சை மௌகாயும் இருக்கும். அஞ்சு நாளு யாகம் நடக்கும். அஞ்சு நாளும் ஊரு பூரா இங்கதான் கூடி இருக்கும். சாப்பாடெல்லாம் இங்ஙனதான். விருந்து மாதிரி, தலை வாழை எலை போட்டு தடாபுடால்னு நடக்கும்.
நாலாவது நாளுலேயே சில சமயத்துல மழை பெஞ்சுரும். அஞ்சு நாளு வரைக்கும் மழை பெய்யலைன்னு வையுங்கோ. கோயிலுக்கு வெளியில இருக்குத சாமி செல மேல ( கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில வந்தாருங்கதுக்கு கதை இருக்கு) அந்த பச்ச மௌகாயை அரைச்சு, சாமி செல மேல பூரா பூசிருவாவோ. அந்தானி, எல்லாரும் அவ்வவ்வோ வூட்டுக்கு போயிருவாவோ. மௌகா பூசுன 24 மணி நேரத்துல மழையை கொண்டு வந்திருவாரு சாமி.
இதனால தலை மலை அய்யன்னு சாமிக்கு பேரு.
கோயிலை விட்டு சாமி ஏன் வெளியில இருக்காரு? அந்த கதைய கேளுங்க.
கோடையிலயெல்லாம் ராமநதில தண்ணி வத்திபோவும். அணையில கொஞ்சமாத்தான் தேங்கி கெடக்கும். அணைக்குள்ள இறங்கி மேற்காப்ல போனா மலை. அந்த வழியாதான் எல்லாரும் வெறவு வெட்டிட்டு வருவாவோ.
ஒரு நாளு, புள்ளதாச்சி பொம்பளை ஒருத்தி வெறவு வெட்ட போயிருக்கா. போற வழியிலேயே அவளுக்கு வயித்து வலி வந்துட்டு. என்ன பண்ணன்னு தெரியாம, உக்காந்து வயித்தை புடிச்சுட்டு அழுதிருக்கா. பின்னால வந்த இன்னொருத்தி, இங்ஙன இருந்து இவளுக்கு எப்படி பெரசவம் பார்க்கன்னு யோசிச்சிருக்கா. அந்தானி, ஆபத்துக்கு பாவமில்லைன்னு கோயிலுக்குள்ள அவளை கூட்டிட்டு போயிட்டா. அங்ஙனயே பெரசவம் நடந்திருக்கு.
இதை பாத்துக்கிட்டு சாமி அங்க இருக்க முடியுமா? சாமி வெளியில வந்து உக்காந்துட்டாரு. பெரசவம் நல்லபடியா நடந்து அவளும் பிள்ளைய தூக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா. ஆனா சாமி மட்டும் உள்ள போவாம வெளியிலயே உக்காந்திகிட்டாரு.
இதுதான் சாமி கோயில விட்டு வெளிய வந்த கதை.
கடையம் பக்கம் போனீங்கன்னா, ராமநதிக்குள்ள இருக்குத, இந்த தலை மலை அய்யனை பார்த்துட்டு வாங்க.
Subscribe to:
Posts (Atom)