Thursday, July 19, 2007

ஆடு மாடுகளின் வாழ்க்கை...2

இன்னும் சில நாட்களில் வயல்காரர்களே சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து, 'நீ பண்ணுதது நல்லா இருக்காடே; இனும மாடு வயல்ல விழுந்ததுன்னா, பெறவு என் வீட்டுல கெட்டிப்போட்டுருவேன். பாத்துக்கோ' என்று உரக்க கத்துவார்கள்.
இந்த கத்தல்களுக்கெல்லாம் செவிசாய்க்காமல் 'ஆங்..ஆங்..' என்ற சத்தத்தை பதிலாக்கி மேய்ப்பர்கள் நடப்பார்கள். மந்தைக்கு மாடுகள் வந்ததும் மேய்ப்பர்கள் கூட்டம் நடக்கும்.
'ஏல நீ எங்க பத்த போற'
'நான் சுப்பையா கோன் தோப்புக்கு'
'நான் ரயிலடி பக்கம்'
'நேத்தும் அங்கதானல மேய்ச்ச'
'பேசாம மஞ்சப்புளிச்சேரி போவும் எல்லாரும். கொளத்துல தண்ணி பொங்கிட்டு கெடக்கு. மாட்டை பத்திவுட்டு கருப்பசாமி கோயில்ல கட்டைய சாத்துவோம்' என்பான் ஒருவன்.
இதற்குள் நான்கைந்து மாடுகள் எல்லை தாண்டி ஏதாவது ரோட்டோர வயலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்.
'க்கே...க்கே. எங்க போய் தொலையுதே' என்று அதை விரட்டுக்கொண்டு ஓடுவான் ஒருவன்.
இவர்களுக்கான பேச்சுக்கிடையே மாடுகளின் சாணங்களுக்கு சில பெரியாச்சிகள் அவற்றின் பின்பகுதியில் பனை ஓலை பெட்டிகளை வைத்துக்கொண்டு நிற்பார்கள். இப்படி சாணத்தை நேரடியாக பெட்டிக்குள் பிடிப்பதே கலை. இம்மாதிரியான கலைகள் பெரியாச்சிகளுக்கு மட்டுமே உரியது. பெட்டியை மாடுகளின் பின்னாலேயே வைத்துக்கொண்டு அது சாணம் போட்டுக்கொண்டே நடக்க, மெதுவாக அவற்றின் பின்னால் பெரியாச்சிகள் அலைவது சுவாரஸ்யத்தின் உச்சம். சளப் என்று சில மாடுகள் போடும் சாணம் தெறித்து, ஆச்சிகளின் முகத்தில் அப்பிக்கொள்வதும் அன்றாட வாடிக்கை.
மந்தைக்கு அருகிலேயே தார் ரோடு. டவுண் பஸ்கள் வந்தத்திலிருந்து ரோடுகள் காட்டிறைச்சலைக் கொண்டிருந்தன. டிரைவர்களின் புஜ பலம் காட்ட்டி, ஏர்ஹாரனை முடித்த மட்டும் அமுக்ககுவதால் எழும் ஓசையால் ஆரம்ப காலகட்டத்தில் எருமை மாடுகல் அரண்டு ஓடி கடும் கோபத்தைக் காட்டியிருக்கின்றன. இப்போது மாடுகளின் முதுகில் வந்து பஸ்கள் முத்தம் கொடுத்தாலும் அசைவதில்லை.
ஒரு முறை, கல்லூரி பெண்கள் பஸ்சின் முன் பக்கத்தில் இருந்ததால் உணர்ச்சி வசப்பட்ட டிரைவர் ஒரு மாட்டின் முதுகில் பஸ்ஸை டொக்க, மாட்டின் பின்பக்க எலும்பு நொருங்கி, அந்த இடத்திலேயே படுத்துவிட்டது மாடு. பிறகு அக்கம்பக்கத்து ஆட்கள் வந்து டிரைவரை உண்டு இல்லையாக்கி, மாட்டின் மருத்துவ செலவுக்காக ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு விட்டார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாடுகளின் ராஜ்யம் தொடங்கிவிட்டது. அவற்றிற்கான மரியாதையும் அன்றிலிருந்துதான் அதிகமாயின. அவை எவ்வளவு மெதுவாக சென்றாலும் அதுவரை பஸ்சை மெதுவாக ஓட்ட வேண்டும். 'அதுவாக பார்த்து போனா போய் தொலை' என்று வழி விட்டால்தான் உண்டு. இப்போதும் மாடுகளுக்கான ராஜ மரியாதை தொடர்கிறது.
(இன்னும் சொல்வேன்)

2 comments:

thamizh selvan said...

ã«ôŒ! ÞŠð® à†è£˜‰¶ â¿F†´ Þ¼‚Aø¶‚° å¿ƒè£ ñ£´ «ñŒ‚è «ð£õô£‹ô!
& «îõ¬î

thamizh selvan said...

ã«ôŒ! ÞŠð® à†è£˜‰¶ â¿F†´ Þ¼‚Aø¶‚° å¿ƒè£ ñ£´ «ñŒ‚è «ð£õô£‹ô!
& «îõ¬î