Saturday, August 1, 2009

நினைவுகளை சேமிப்பவன்

என் சொற்களைத் திருடும் பாக்கியம் உனக்கிருக்கிறது.
நீ நானாகும் போது எனக்கான சொற்கள் உனக்கானதாக மாறுவதில் வியப்பில்லை.
கூந்தலுக்குள் அழுந்தாமல் வெளியேறும் உன் ஒற்றை முடியில், என் உயிரை தொங்கவிடும் ஆற்றல் பெற்றிருக்கிறாய்.

கருணையில்லா கடவுளர்கள், சக்திகளை பெண்களுக்கே படைப்பதிலான ஓரவஞ்சனையில் எப்போதாவது வெடிக்கக்கூடும் பெரும் போர்.
பார்வை பட்டோ அல்லது பேசியோ திரும்புகிற அதிர்ஷ்ட தருணங்களில் நான்கு முறை இறக்கிறேன். மூன்று முறை பிறக்கிறேன்.

பிறத்தலும் இறத்தலும் உனக்கான கொடூர விளையாட்டு. எப்போதும் நான் தோற்க நினைக்கிற விளையாட்டை உன்னால்தான் நடத்த முடிகிறது.

கைக்குள் காற்றை அடைத்து அதில் நீந்த நினைக்கின்ற மோசக்காரன் நான். நீ காற்றாக இருக்கும் வரை இதுவும் சாத்தியமென்றே நினைக்கிறேன். நேற்றைய கனவில் வந்த யுத்தம் பற்றிய விவாதத்தில் உன் ஞாபகங்களே வென்றன. உன் நினைவுகளை சேமிப்பவனாகவே எப்போதும் இருக்கிறேன். உடலெங்கும் வீங்கி, பிதுங்கிக் கிடக்கும் நினைவின் துறுத்தல்களில் எப்போதாவது தெறிக்கக்கூடும் ஒரு துளி ரத்தம்.

இதுபற்றியான நம் உரையாடல் நிலமெங்கும் சிதறி கிடக்கிறது. கடலை தாண்டவோ, நீந்தவோ தகுதியற்ற என் ஏக்கங்களின் வாய்க்கால்கள், ஆற்றை தொடும் முன்னே முடிந்து விடுவதன் காரணம் மட்டும் புரியவே இல்லை.

(பழைய பதிவு)

10 comments:

முபாரக் said...

ஆஹா...

இப்ப மறுபடியும் என்ன பீலிங்க் :-)

துபாய் ராஜா said...

//(பழைய பதிவு)//

பழையது ருசியாகவே இருக்கிறது. :))

அ.மு.செய்யது said...

நல்லா இருக்கு....பாத்துகிடுங்க..

கிருத்திகா ஸ்ரீதர் said...

சாமி நீங்களுமா.?????

ஆடுமாடு said...

முபாரக்கு, ஊருக்கு போயிட்டு வந்தேன். ஆதான் ஓவர் பீலிங்காயிருக்கு.

நன்றி.

ஆடுமாடு said...

//பழையது ருசியாகவே இருக்கிறது. :))//

ஓல்டு இஸ் கோல்டு.

ஆடுமாடு said...

செய்யது, கிருத்திகா நன்றி.

காமராஜ் said...

ஆஹா ரொம்ப வருடங்களாச்சு காட்டுக்குள்ளே சுற்றித்திரிந்து.
நானும் வருகிறேன். எனக்கு பெரும்பலான தாவர, ஜீவராசிப்பெயர்கள்
தெரியும், அவற்றின் ருசியும் கூட. ஐயரவுப்படாதீர்கள்.

வித்யாஷ‌ங்கர் said...

good development in ur writting-durai

ஆடுமாடு said...

//good development in ur writting-durai//


நன்றி ஆசானே!