என் ’அவயம்’நாவல் வெளிவந்து விட்டது. சில வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய நாவல். இப்போதுதான் வாய்த்திருக்கிறது. அரசியல் கட்சியின் பேச்சாளன் ஒருவன், தன் பலவீனங்களால் வாழ்வில் சந்திக்கிற அவமானங்களும் இழப்புகளும் போராட்டங்களும்தான் இந்நாவல்.
என் முந்தைய நாவல்களைப் போலவே சிறு கிராம பின்னணியில் எழுதப்பட்டதுதான் இதுவும். சில அரசியல் நிகழ்வுகளும் இருக்கின்றன. எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் கொளைகளைப் பேசுகிற பேச்சாளனை கொண்டாடியதில்லை என்பதை இதில் சொல்லி இருக்கிறேன். அதைத் தாண்டி திடீர் புரட்சியும் அதிர்ச்சியும் இருக்கலாம்.
அவயம், நாவல்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
கே.கே.நகர் மேற்கு, சென்னை 78.
288 பக்கங்கள். விலை: ரூ.320.
தொலைபேசி: 9940446650


No comments:
Post a Comment