<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694</id><updated>2012-01-29T21:13:42.720-08:00</updated><category term='குறிப்புகள்'/><category term='சிறுகதை'/><category term='நினைவுகள்'/><category term='வாய்மொழிகதைகள்'/><category term='காடு'/><category term='சமுத்திரம்'/><category term='ஞாபகம்'/><category term='பீலிங்'/><category term='கந்தர்வன்'/><category term='மன அரசியல்'/><category term='பேட்டி'/><category term='முன்னுரை'/><category term='கவிதைகள்'/><category term='மொக்கை'/><category term='காதல்'/><category term='டூர்'/><category term='அன்புமணி'/><category term='கதை'/><category term='கி.ரா'/><category term='ஊர்'/><category term='பீலிங்கு'/><category term='புகை'/><category term='சீரியல்'/><category term='அனுபவம்'/><category term='கட்டுரை'/><category term='சாமிகொண்டாடி'/><category term='அம்மன்'/><category term='விளையாட்டு'/><category term='மாடு'/><category term='தோப்பு'/><category term='பழசு'/><category term='புனைவு'/><category term='மலேசியா'/><category term='நினைவுகள'/><category term='மழை'/><category term='வாழ்க்கை'/><category term='ஊட்டி'/><category term='இலக்கியம்'/><category term='பில்டப்'/><category term='கேரக்டர்'/><category term='லவ்'/><category term='என்னத்த சொல்ல?'/><category term='குருணை'/><category term='பிரச்னை'/><category term='இந்திரன்'/><category term='கிராமம்'/><category term='டாப்ஸ்லிப்'/><category term='சாமி'/><category term='சினிமா'/><category term='வாய்மொழி கதைகள்'/><category term='கட்டுரைகள்'/><category term='சொந்த கதை'/><title type='text'>ஆடுமாடு</title><subtitle type='html'>இது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>146</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7169768326529593079</id><published>2012-01-28T00:35:00.000-08:00</published><updated>2012-01-28T00:36:39.644-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திரன்'/><title type='text'>எழுத்து மணலில் முட்டையிடும் ஞாபக ஆமைகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;எழுத்து மணலில் முட்டையிடும் ஞாபக ஆமைகள்: இந்திரன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்நாத்தை எனக்குத் தெரியும் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். பேசும்போது ஏதோ வியப்பில் இருப்பது போல மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து விரியும் அவரது கண்கள் நகரத்துத் தெருக்களில் பாதாளச் சாக்கடைகள் ஏதெனும் திறந்து கிடக்குமோ என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் அவரது கண்கள் அவர் பிறந்த கீழாம்பூர் கிராமத்தில் மிதிக்கிற தெருக்களில் நடக்கிற பாதையில் ஒரு போர்வீரனின், மன்னனின், சாமான்யனின்,அடிமையின் காலடித்தடம் கண்ட வியப்பில் விரிந்து கொண்டிருக்கின்றன என்று இப்போதுதான் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது ‘கெடாத்தொங்கு (கவிதைகள்), ‘பூடம்', (சிறுகதைகள்), “குள்ராட்டி" (சிறுகதைகள்) காலத்திலிருந்தே அவரை கவனித்து வருகிறேன். ஞாபகங்களின் பனி மூட்டத்தில் சிக்கிக் கொண்டு தனது வழியை அடிக்கடி தொலைத்துவிடுகிற கோட்டிக்காரத் தனம் அவரிடம் ஒட்டிக் கொள்வதுண்டு. இந்த நூலில் உள்ள எழுத்துக்களை படிக்கிறபோதுதான் தெரிகிறது, ஞாபகங்களின் பனிமூட்டத்திலிருந்து நூல் நூற்பவர் என்று. கவிதையோ, கதையோ, கட்டுரையோ எல்லாமே நினைவுகளின் நூற்பாலையிலிருந்து பெற்ற நூலைக் கொண்டுதான் அவருக்கான எழுத்தின் நெசவு நடைபெறுகிறது என்று இப்போது புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்நாத்துக்கு எழுத்து என்பது தவிப்பு. பிறந்து வளர்ந்து விழுந்து எழுந்து விளையாடிய கிராமத்தை ருசித்து விட்ட நாக்கின் தவிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;தூர்ந்து போன கிட்டி அய்யங்கிணறு, கோடையில் சுடு தண்ணீராய்ப் போய்க் கொண்டிருக்கும் எதுவும் பேசாத ஆறு, வயலுக்குள் நின்னாலே வாசனை தூக்கும் தாழம்பூப் புதர், தானாகப் பாதை விரிக்கும் காடு என்று அவர் அலைந்து திரிந்து, கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்த அவரின் கீழாம்பூர் கிராமம் அவரது எழுத்தின் மூலம் வாசகனின் மனதில் மழையாய்ப் பொழிந்து மண்வாசனையைக் கிளப்பி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்நாத்தை ஒரு ஓவியன் என்று நாம் கருதுவோமானால் அவர் கையிலிருக்கும் வண்ணங்கள்தான் ஞாபகங்கள். &lt;br /&gt;ஆனால் இந்த ஞாபகங்களை வண்ணங்களாகப் பயன்படுத்த வேண்டுமானால் அந்த எழுத்தாளன் உண்மை என்னும் தூரிகையைத் தனது கையில் ஏந்த வேண்டும். அப்போதுதான் வண்ணங்கள் பிசிரடிக்காமல் இருக்கும். வங்கிக் காசாளர்கள் ரூபாய் நோட்டை எண்ணுகிறபோது அவர்களின் விரல் தொடுதலில் காகிதத்தின் சொரசொரப்பிலேயே அது கள்ளநோட்டா நல்ல நோட்டா என்று கண்டு பிடித்து விடுவது போல, ஞாபகம் என்ற பெயரில் உருவாக்கப் படும் பொய்ச் சித்திரங்களை ஓரத்து வாசகன் எளிதில் கண்டுபிடித்து விடுவான். எனவே உண்மை எனும் தூரிகையின் தொடுதலில்தான் ஞாபகம் எனும் வண்ணங்கள் பிரகாசிக்கும். இக்கட்டுரைகளில் இதை அறிந்தவராகச் செயல்படுகிறார் ஏக்நாத்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக இந்த எழுத்துக்களில் ஞாபகங்களை நேசித்துத் தள்ளுகிறார். ஞாபகங்களை நேசிப்பது என்பதின் முதல் நிபந்தனை என்ன தெரியுமா? ஞாபகங்களை நேசிக்கத் தொடங்குவதற்கு முன்னால் உன்னை நீயே நேசிக்கத் தொடங்க வேண்டும். உனது மார்பில் அணிந்த பதக்கங்களை நேசிக்கிறபோது அந்த பதக்கங்களை உனது சட்டையில் குத்துகிறபோது கை தவறி உனது மார்பிலும் கொஞ்சம் குத்தி கசிந்த ரத்தத்தையும் நேசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உனது குற்றம் குறைகளோடு, உனது மாசு மறுக்களோடு, உனது தோல்விகளோடு,உனது ரணங்களோடு, உனது வெற்றிகளோடு, உனது பதக்கங்களோடு, உனது பரிவட்டங்களோடு எந்தவித நிபந்தனையுமற்று உன்னை நீயே நேசிக்கத் தொடங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேசிப்பு வந்து விட்டால் எல்லாம் சாத்தியப்பட்டு விடும். காலையில் பார்த்தும்கூட மாலையில் மீண்டும் ஒரு முறை நலம் விசாரிக்கும் பாம்படப் பாட்டியின் பெயர் என்ன என்று ஏக்நாத்துக்கு மறந்து போயிருக்கிறது. லக்ஷ்மி பாட்டி என்றோ ராக்காயிப் பாட்டியென்றோ ஒரு பெயர் ஜோடிக்கத் தெரியாதா அவருக்கு? ஆனால் அப்படி ஒரு பொய் ஜோடனை செய்ய மறுக்கிறார் அவர். அதனால்தான் அவள் வெறுமனே ‘பாம்படப் பாட்டி' ஆகி விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காது வளர்த்து அதில் கனமான பாம்படம் எனும் அணிகலனை அணிந்து, காதாட்டிப் பேசும் மூதாட்டியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்த அவரால் முடிகிறது . தகவல்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால் காலையில் விசாரித்தும் கூட மாலையிலும் ஒரு முறை விசாரிக்கும் பாட்டியின் அன்பு எனும் அனுபவம் அவள் பெயர் எனும் தகவலை விட முக்கியமானது என்பது அவருக்குத்த் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது எழுத்துச் சித்திரத்தில் வரும் பல கதாபாத்திரங்களின் பெயர்களை மறந்து போயிருக்கிறார் ஏக்நாத். கால வெள்ளம் எனும் காட்டாற்றில் எதிர் நீச்சல் போட்டுக் கரையேறுகிறபோது இப்படி இடுப்பு வேட்டிகளை இழந்து போக நேர்வது இயல்புதான். வாழ்க்கை என்பது சதுரங்க விளையாட்டு அல்ல. அது பில்லியர்ட்ஸ் விளையாட்டு. எந்த பந்தை அடித்தால் எந்த பந்து, பாக்கெட்டுக்கள் போய் விழும் என்று நமக்குத் தெரியாது. நாம் மறக்க வேண்டும் என்று நினைப்பவற்றை அக்கு வேறாக ஆணிவேறாகப் பிரித்து நினைவில் வைத்திருந்து மனதை ஆறாத ரணமாகி வைத்து விடும். நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவற்றை மறக்கடித்து அதை உருத்தெரியாமல் ஆக்கி அதை தொலைவில் கேட்கும் கீதமாக்கி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்களை மறந்தால் என்ன குடி முழுகியா போய் விடும்? அதுதான் அந்த கதாபாத்திரங்களின் செல்லப் பெயர்கள், அவர்களின் மீதான அன்பின் வாசனை அல்லது பகைமையின் முடை நாற்றத்தொடு மனதில் தங்கி நிற்கிறதே .இது போதாதா? பட்டாணிக் குருவி, பாம்படப் பாட்டி, குடலு தாத்தா, மூக்காண்டி, சடையன் என்று செல்லப் பெயர்களோடு ஏக்நாத்தின் ஞாபகத் தெருக்களில் நடந்து செல்லும் அல்லது உருண்டு புரண்டு புழுதியோடு கிடக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் வாசகன் மனதில் ஒரு மூலையில் துண்டு விரித்து நிம்மதியான இடத்தைப் பிடித்து விடுகின்றனவே.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனசில் அடிக்கடி இரண்டு கேள்விகள் எழுவதுண்டு: கடலை நேசித்து காலம் காலமாய் கடலில் வாழும் கடல் ஆமைகள் கடலுக்குள்ளேயே முட்டையிடாமல், கரையேறி வந்து மணலில் பள்ளம் தோண்டி முட்டைகளை இடுவது எதனால்? அடுத்த கேள்வி: மார்கழி மாசத்துப் பனி போல மனசுக்குள் புரளும் ஞாபக அலைகளை எழுத்தில் இறக்கி வைத்து வாசகனின் முகம் பார்த்து நிற்பது எதனால்? இது ஆமைகளுக்கும் ஏக்நாத்துக்கும்தான் வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எனது 'ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்' புத்தகத்துக்கு கலைவிமர்சகர் இந்திரனின் முன்னுரை.&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-7169768326529593079?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/7169768326529593079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=7169768326529593079' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7169768326529593079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7169768326529593079'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2012/01/blog-post_28.html' title='எழுத்து மணலில் முட்டையிடும் ஞாபக ஆமைகள்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-143171924255072942</id><published>2012-01-09T00:43:00.000-08:00</published><updated>2012-01-09T00:50:21.305-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கி.ரா'/><title type='text'>கி.ரா.உரை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பிரம்மா எழுதுனது யாருக்குப் புரியும். யாருக்கு புரியணும்? அன்னு (அன்று) எழுதுனதெ அழுச்சி எழுத முடியுமா? முடியாதுங்கறதுதாம் தீர்மானமான பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட சின்ன வயசில் அந்த தலெ எழுத்தெப் பார்க்கணும்ன்னு ரொம்...ப ஆசைப்பட்டேம். அதுக்காகவே அய்யனுவோட நெருக்கமாப் பழகி அவனுக்குப் பல்லிமுட்டைப் பப்பர்மெண்ட் எல்லாம் வாங்கித்தந்து, 'அய்யனு அய்யனு, அந்தத் தலெ எழுத்தெ நாம் பாக்கணுமெ'ன்னு கெஞ்சினேம்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி மொதலாளி. பாத்துறலாம், கருக்கல்லேயே நீங்க எந்திரிச்சு வந்துறணும்'ன்னாம். அது கொஞ்சம் சிரமமான பாடுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டியிட்டெ சொல்லி வச்சிருந்தெம்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னெ சீக்கிரமா எழுப்பி விட்டிரு பாட்டி'.&lt;br /&gt;&lt;br /&gt;''என்னத்துக்கு ராசா?'&lt;br /&gt;&lt;br /&gt;'படிக்கறதுக்குத்தாம்'&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோசமாயிட்டது பாட்டிக்கு! படிக்கிறதுக்கு ஆசைப்படுதானேன்னுட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மறா நா.&lt;br /&gt;'எந்திரிச்சதும் எங்கெ ஓடுதெ; படி'&lt;br /&gt;&lt;br /&gt;'வெளிக்குப் போக வேண்டாமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'சரி சரி போயிட்டு சிக்கிரமா வந்துரு'&lt;br /&gt;&lt;br /&gt;கம்மாக்கறையைப் பாத்துப் பிடிச்செம் ஓட்டம். அந்த கம்மாக் கறையிலயும் ஒரு மயானக் கறை உண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, எங்க ஊருக்கு கிச்சம்மா ஓடைதாம் முக்கியமான சுடுகாடு. அங்கெ போய்ப் பார்த்தால் அய்யனுவைக் காணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகுதாம் விவரம் தெரியுது! யாராவது செத்து வந்தாத்தானெ அங்கெ அய்யனு இருப்பாம். இப்படி கொஞ்சநாள் தட்டிப்போய்க் கொண்டிருந்தது. யாரு செத்தாலும் எங்க பள்ளிக் கூடம் வழியாகத்தான் சுடுகாட்டுக்குப் போகணும். எங்க பள்ளிக் கூடத்தையும் வாத்தியார்களையும் தாண்டாமல் ஒரு சுடுகுஞ்சும் போயிற முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சத்தம் சாவுமேளம் கேட்கும். அல்லது, ''கோவிந்தா. கோவிந்தா"சத்தம். கொஞ்சம் பேருக்கு ''ராமாநுஜம், ராமாநுஜம்"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராமாநுஜம் மட்டும், வைணவர்களுக்கு. இவர்கள் கோவிந்தா சொல்லுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வைணவர்களுக்குக் கோவிந்தனும் முக்கியந்தான்; என்றாலும் இவர்களுடைய மதத்தை உண்டாக்கியவர் ராமாநுஜம். அதோடு இவர்களுடைய திருநாட்டுப் பயணத்துக்கு சாவுமேளம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்துக்குள் சாவுமேளத்தின் சத்தம் நுழைந்ததும் பிள்ளைகள் ஒருவர் முகத்தை பார்த்துக் கொள்வர்கள். 'ஓடுவமா பார்க்க என்று" அவர்கள் முகம் தெரிந்துவிடும். வாத்தியார்களுக்கும் பார்க்கப் பிரியம்தான். சத்தம் நெருங்க நெருங்க, கட்டுப்பாடு தகர்ந்துவிடும். பிள்ளைகள் எழுந்திருந்ததும் வாத்தியார்களும் எழுந்துவிடுவார்கள், கையில் பிரம்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுமாடு மேய்க்கிறவர்களுக்குக் கம்பு. போலீஸ்காரர்களுக்கு லத்தி. வாத்திமார்களுக்கு பிரம்பு. பிரம்பை கையில் எடுத்ததுமே ஒரு களை முகத்தில் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவுவண்டி அங்கங்கெ-முக்கியமான ஒரு சில இடங்களில் நின்று நகரும். அதில் கடேசி இடம் இது. சாவுவண்டிக்கு முன்னால் சிலம்பாட்டம் நடக்கும். (இதெல்லாம் பாட்டையாக்களின் சாவுக்களில்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;வாத்தியார்களுக்காகவும் பள்ளிப்பிள்ளைகளுக்காக நடக்கும் தனியாட்டம் போல இருக்கும். சிலாவரிசை முறையோடு கம்பை சுழற்றி வீசி பாவலாக்காட்டி முன்னும் பின்னும் போய் வந்து கம்புமேல் கம்பு மோதும்போது சத்தம் தூள் பறக்கும். அந்த கம்புகளுக்கு முன்னால் வாத்தியார்கள் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்பைப் பார்க்கும்போது அய்யோ பாவம் என்றிருக்கும். அப்போது அவர்கள் தங்கள் பிரம்புகளைப் பின்பக்கம் மறைத்து வைத்துக்கொள்வார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் மட்டும் என்றால் பிரம்பால் என்னவீச்சு வீசுவார்கள். எனக்கு அப்போது ஒரு ஆசை இருந்தது;-நிறைவேறாத ஆசை- அதில் ஒரு கம்புக்காரனைக் கூப்பிட்டு, 'எங்க வாத்தியார் பிரம்போடு ஒரு ஆட்டம் போடேம்' என்று சொல்ல.&lt;br /&gt;சிலம்பாட்டம் முடிந்து வண்டி நகரும்போது அந்த வண்டியில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் பாட்டையாவின் நெற்றியில் ஒட்டவைத்துள்ள அரக்கால் ரூபாய் எல்லார் கண்ணிலும் படாமல் போகாது. &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள், வீட்டில் நானும் என் நெற்றியில் ஒரு அரைக்கால் ரூபாயை ஒட்ட வைத்துக்கொண்டு, பாட்டியின் முன்னால் அப்படியும் இப்படியும் நடந்தேன். பாட்டிக்கு அது கவனமில்லை. என் மூஞ்சியை அவளுக்கு முன்னால் நீட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;''சே சே, என்னய்யா இது; எடுத்துரு எடுத்துரு, இப்படியெல்லாம் செய்யப்பிடாது'' என்று அதை எடுக்க வந்தாள். மற்றவர்கள்தான் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் அதை ரசிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'சரிய்யான கோமாளிரங்கன்!" என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யனுவிடம் கேட்டேன்; 'ஏம் இப்படி நெத்தியில பணம் வச்சு விடுகிறாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;போற இடத்திலெ, 'அங்கெ"-மேலே கையைகாட்டி- இப்படிப் போனாத்தாம் மதிப்பு" என்றான்.&lt;br /&gt;விடாப்பிடியாக விடென் தொடேன் என்று அய்யனுவிடம், அந்த 'தலெ எழுத்தெ' ப் பார்க்கக் கிடைத்தது. 'பாலுக்கு" வருகிறவர்கள் அன்றைக்குத் தாமதமாக வந்ததும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டை ஓட்டின் உச்சியில் பிரம்மா எழுதிய சுருக்கெழுத்து போல இருந்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யனு சொன்னான்; 'ஒவ்வொருத்தர் மண்டை ஓட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருத்தருக்கு இருக்கிற போல இன்னொருத்தருக்கு இராது; கைரேகை வித்தியாசப்படுகிறது மாதிரிதாம் இதும்"&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவங்க சொல்லுவாங்க, ''ஏலே ஒந்தலையில பிரம்மா உலக்கையாலெ எழுதித்தாண்டா. எழுத்தாணி கொண்டு எழுதலைடா பாவிப்பயலே" என்பார்கள் திருத்த முடியாதவனைப் பார்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக அந்தக்காலத்து வாத்திமார்கள்தான் இப்படியே சொல்லக் கேட்டிருக்கிறேன் (முக்கியமாக என்னைப் பார்த்தும்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரம்மன் உலக்கையால் (கழுந்து உலக்கையால்) எழுதினாலும் சரி, எழுத்தாணியால் எழுதினாலும் சரி, எழுதியது எழுதியதுதான்; அழித்து எழுத முடியாது. இது போலத்தான் படைப்பாளி என்கிற பிரம்மா எழுதுகிறதும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் ஏக்நாத் இவைகளைக் 'கட்டுரைகள்' என்று ஒரு பேச்சுக்கு சொன்னாலும் , இவைகளுக்கான முகங்கள் கட்டுரைகளுக்கானவை இல்லை; கதைகள்தான் இவை. கட்டுரைகள் (வியாசம்) என்பது பேச்சு நடையில் அமையாது. பொதுத்தமிழ் நடையில் எழுதியவைதான் கட்டுரைகள் என்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகள் என்றால் முக்கியமாக கதைகளுக்கு அதுக்கான ஒரு மொழிமுகம் இருக்க வேண்டும். இவைகளில் அவை கூடுதலாக-மிகக்கூடுதலாக-இருக்கிறது.&lt;br /&gt;இந்த மாதிரியான மொழி காதுவழியாகக் கேட்கும்போதுதான் இதன் சிறப்பை அனுபவிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ராகத்தைக் கேட்கும்போது எப்படி இருக்கும்; அதை அதுக்கான அட்சரங்களில் எழுதி வாசிப்பது எப்படி இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;கேட்கும்போதுதான் மொழியின் அழகு கூடும். புகல் இல்லாமல்தான் எழுதி வாசிக்கிறது. இந்த வகையில் நான் எழுத்தை வெறுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும், நமக்கு வாசகர்கள் வேண்டும். இவர்களுக்காக நாம் கொஞ்சம் இறங்கி வரலாம் என்பது எனது யோசனை. இந்நடையை *சற்றே செப்பம் செய்து தந்திருக்கலாம்; நட்டமில்லை, லாபம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காரமாக இருக்கவேண்டும்தான்; காரக்குழம்புக்கு லட்சணமும் அதுதான். அதைப் பரிமளிக்கம் பண்ண சற்றே உப்பும் சேர்த்தால்தான் சரி. மணமும் ருசியும் கொண்ட காரக்குழம்பு சோற்றைக் கொண்டா கொண்டா என்கும். ருசி கண்டுவிட்டால் வாசகன் நம்மை விடவே மாட்டான்.&lt;br /&gt;...............&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;em&gt;*&lt;/em&gt;&lt;em&gt;சற்றே என்றுதான் சொன்னேன்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் &lt;br /&gt;&lt;strong&gt;கி.ராஜநாராயணன்&lt;/strong&gt;&lt;br /&gt;........................&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனது &lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: x-small;"&gt;&lt;span style="font-family: Arial; font-size: x-small;"&gt;'&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;குச்சூட்டான்&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: x-small;"&gt;&lt;span style="font-family: Arial; font-size: x-small;"&gt;' &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;புத்தகத்துக்கு கி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: x-small;"&gt;&lt;span style="font-family: Arial; font-size: x-small;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ரா.வின் உரை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-143171924255072942?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/143171924255072942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=143171924255072942' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/143171924255072942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/143171924255072942'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2012/01/blog-post.html' title='கி.ரா.உரை'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-5502169323035801509</id><published>2011-11-18T21:13:00.000-08:00</published><updated>2011-11-18T21:13:09.238-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><title type='text'>கிடா வேலு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;குருசாமி மகன் வேலுவுக்கு முதன்மைத் தொழில் முடி வெட்டுவது. இரண்டாவதாக ஆடு உரிப்பது. இது இரண்டாவதாக வருவதற்கு தினமும் சோலி இருக்காது என்பது காரணமாகியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார் கோவிலில் இருந்து கருவேலப்பறை செல்லும் வழியில்தான் குருசாமியின் வீடு. ஓர் ஆள் உயரத்துக்குப் படிகளை வைத்து, அந்த காலத்திலேயே உயரமாகக் கட்டியிருந்தார்கள் வீட்டை. &lt;br /&gt;&lt;br /&gt;‘அப்பலாம் என்ன மழை அடிக்கும்கியெ... விடாம ஏழெட்டு நாளு பெய்யும். நண்டு நசுக்கெல்லாம் நடமாட முடியாது. அப்படி பெஞ்சா தெருவுக்குள்ள நடக்க முடியுமா சொல்லுங்க? கொளம் கெணக்கதான் இருக்கும். அதுக்காவ, இவ்வளவு ஒசரமா எங்கய்யா வீட்டை கட்டியிருக்காரு' என்பதை, கேட்காவிட்டாலும் சலிக்காமல் சொல்வதை வேலையாகவே வைத்திருந்தார் குருசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;குருசாமிக்கு மூன்று மகன்கள். மூவருக்கும், முடிவெட்டுவது ஒன்றே தொழில். இதில் முதலாமவன்தான் வேலு. ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படாத தேகம் வேலுவுடையது. சிறு வயதிலேயே வயிறும் முன்பற்களும் நீட்டிக்கொண்டு வந்து நின்றிருந்தது. பேச்சும் அவ்வளவு விரைவாக வராது. ஏதாவது கேட்டால் கொஞ்சம் சிரிப்போடு லேட்டாகத்தான் வந்து விழும் வார்த்தை. பெரிய வாருடன் (பெல்ட்) வேட்டியை இறுக்கிக்கட்டி கைகளை பின்பக்கம் வைத்துக்கொண்டு அவன் வருவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். வாரைத் தாண்டி பெரும் பொட்டலம் போன்று வலது பக்க இடுப்பில் வேட்டியைத் துறுத்திக் கொண்டிருக்கும். முகச்சவரம் மற்றும் ஆடு அறுப்பதற்கான உபகரணங்கள் அதில் எப்போதுமுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;கரடுமுரடனான தலைமுடியுடன் வீட்டில் அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், ஐயமார் தெருப் பிள்ளைகள் அவனிடம் முடிவெட்டப் பயப்படுவார்கள். எல்லாரும் குருசாமிக்கும் அவரது மற்ற மகன்கள் வெட்டவுமே காத்திருப்பார்கள். யாராவது அவசரத்துக்காக, வந்தால் ரெடியாக இருப்பான் வேலு.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘என்ன குருசாமி, லேட்டாவுமோ? கல்யாண வீட்டுக்குப் போணும்''&lt;br /&gt;&lt;br /&gt;‘‘செத்த நேரம் ஒக்காரும்யா''&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இல்லை, இன்னா, அடுத்த காருக்கு போணும்டே. பொண்டாட்டிக்காரி கார்சாண்ட்ல நிய்க்கா''&lt;br /&gt;&lt;br /&gt;‘‘கால்ல சுடு தண்ணி ஊத்திட்டு வந்துதாம் நிப்பீரு எப்பவும்... ஏல, ஏய் வேலு, அவருக்கு சேவிங் பண்ணிவிடு'' என குருசாமி ஆர்டர் போட்டதும் கத்தியை எடுப்பான். உடலில்தான் சிறு சிறு குறைகளைத் தவிர, அவனது தொழிலில் குறை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;திண்ணையில் இருக்கிற மூன்றாவது தூண், வேலுவின் ஏரியா. அவன் உட்கார்வதற்காக, ஒரு மரத் துண்டு இருக்கும். அதில் உட்கார்ந்து தூணில் சாய்ந்துகொள்வான். அந்த மரத்துண்டு அவனது உயரத்தை கூட்ட. எதிரில் உட்கார்பவர்களுக்கு சிறிய மரத்துண்டு. இப்படி வேலைப் பார்த்தால்தான் அவனுக்கு வசதி. கொஞ்சம் வளர்ந்திருக்கிற ஆட்கள் வந்தால் கஷ்டம்தான். மரத்துண்டில் இல்லாமல் தரையில் உட்கார வைத்துக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த தெருவிலாவது கோயில் கொடை என்றால் அவனைப் பிடிக்க முடியாது. கொட்டு சத்தம் கேட்டதும், இன்னைக்கு என்னக் கிழமை என கேட்பான். செவ்வாய்க்கிழமை என்றால் அவனது வேலை இரவு, வெள்ளிக்கிழமை என்றால் அவனது வேலை அதிகாலை என முடிவு செய்துகொள்வான். பெரும்பாலும் அம்மன் கோயில்களுக்கு செவ்வாய்க்கிழமையும், கருப்பசாமி, சுடலை போன்ற கோயில்களுக்கு வெள்ளிக் கிழமையும் கொடை வைப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமை சாமக்கொடையில் ஆடு வெட்டினால் அடுத்த நிமிடமே உரிக்க அழைப்பார்கள். வெள்ளிக்கிழமை என்றால் அதிகாலையில் பார்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் கொடைக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் வெட்டப்பட்டு, கோயில் ஓரத்தில் மாலைகளோடு கிடக்கும். நேர்ந்துவிட்டவர்கள் அவரவர்கள் ஆட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போவார்கள். போனாலும் ஆடு உரிப்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு கண்டிப்பாக, வேலு வேண்டும். யார் வீட்டு ஆடோ, அவர்கள் வீட்டுத் தொழுவில், இந்தப் பக்கத்தையும் அந்தப் பக்கத்தையும் இணைத்து நடுவில் கம்பு கட்டி ஆட்டைத்தொடங்க விட வேண்டும். கழுத்திலிருந்து அடிவயிறு வழியாக கத்தியால் ஒரு இழு. பிறகு அப்படியே தோலுக்குள் கையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தென்னி தென்னி இழுத்தால் கால்கள் மட்டும் சிக்கும். கால்களின் மூட்டுகளில் சின்னதாக ஒரு கீறலைப் போட்டால் சரி. பிறகு லாவகமாக இழுத்தால் வெளியே வந்துவிடும் தோல். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வீட்டுக்காரர் மூஞ்சை ஏறிட்டுப் பார்ப்பான். அதுக்கு, ஆட்டைத் துண்டாக்க, கதவு வேண்டும் என்று பொருள். பொருத்தி கழற்றக் கூடிய - அதிகப்படியான வெயிட்டை கொண்ட&amp;nbsp;- மரத்தினாலான வாசல் கதவை கழற்றி கொண்டு வருவார் வீட்டுக்காரர். ஓர் ஆளால் இது முடியாது என்பதால் வீட்டிலிருக்கிற மற்றவர்களும் இதுக்கு ஒத்தாசை செய்வார்கள். அலங்கரிக்கட்டிருக்கும் முன் பக்கத்தை அப்படியே கவிழ்த்து பின்பக்கம் பார்ப்பான் வேலு. பக்கத்தில் இருக்கிற குடத்திலிருந்து தண்ணீரை ஊற்றி வாரியலால் கழுவுவான். கதவின் சிராய்ப்புகளில் அடைந்துகிடக்கிற மூட்டைப்பூச்சிகள் வெளியேறி ஓடும். நன்றாக கழுவி எடுத்துவிட்டு, தொங்கும் ஆட்டை எடுத்து இதில் போடுவான். சிலுப்பி (குடல்), ஈரல், கிட்னி, புடுக்கு உட்பட ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெட்டி எடுப்பான். வயிற்றுப்பகுதிக்குள்ளானவற்றை இப்படி தனியாக எடுத்து கிளீன் செய்ததும் அடுத்து ஒவ்வொரு பகுதியாக வெட்டுவான். &lt;br /&gt;&lt;br /&gt;கால், தொடை உள்ளிட்ட கறிகளை துண்டு துண்டாக்குவான். பிறகு, எத்தனை கூறு வைக்கணும்? என்பதை சைகையால் கேட்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கூறுக்கும் பக்கத்து வீட்டில் அல்லது சொந்தக்காரர்களிடம் காசு வாங்கியிருப்பார்கள். எத்தனை பேரிடம் வாங்கியிருப்பார்களோ அவர்களுக்கு ஒரு பகுதியை கூறுவைத்து பிரிப்பான். அந்த கூறுகளில் மற்றவர்களுக்கு கொடுத்ததில் கொஞ்சமும் குறைய கூடாது. ஈரல் ஒரு கூறில் அதிகமென்றால், பிறகு நடக்கிற வெட்டுக்குத்துக்கு வேலுவும் பதில் சொல்லவேண்டும். அதனால் கூறு வைப்பதில் அவனுக்கு அதிக கவனம் உண்டு. கால்களும் தலையும் மச்சினன்மார்களுக்கு. சிலுப்பிக்கு யாராவது வந்து சண்டைப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும் வெட்டிவிட்டு கத்தியை கழுவி உட்காருவான் வேலு. ஆட்டுக்காரர், ‘தோலை நீ கொண்டு போயிரு. கறி வேணுமா? காசு தரவா?' என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒங்களுக்கு எது சவுரியமோ அதான்' என்று சிரிப்பான். காசென்றால் காசு, கறியென்றால் கறி. இதற்குள் வேலுவைத் தேடி நான்கைந்து பேர் நிற்பார்கள் அடுத்த ஆடை வெட்டுவதற்கு. வேலுவின் மகனோ, மகளோ வந்து, அப்பாவை பார்த்துக்கொண்டிருபபர்கள். ஆடு வெட்டும் வீட்டில் கிடைப்பதை அப்படியே மகளிடம் கொடுத்து அனுப்புவான். அடுத்த வீட்டுக்கு மகன் வருவான். அதற்கடுத்த வீட்டுக்கு மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முடியோ, ஆடோ, வெட்டுதல் அவனது தொழிலாகிவிட்டது. அவனது தம்பிகளில் ஒருவன் வீட்டில் துட்டைத் தூக்கிக்கொண்டு யாருடனோ மும்பைக்கு ஓடிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஏங் குருசாமி, எவ்வளவு எடுத்துட்டு போனாம்'&lt;br /&gt;&lt;br /&gt;‘நெல் வித்து அப்பதாம் எட்டாயிரம் வச்சிருந்தேன்... மூவாயிரத்தை விட்டுட்டு அஞ்சாயிரத்தை தூக்கிட்டுப் போயிட்டாம் செரிக்கியுள்ள' என்றான் குருசாமி. பேசிக்கொண்டிருக்கும்போது வேலு குறுக்கிட்டு, ‘அவன் போறேன்னு கேட்க்கும்போதே இவர் கொடுக்க வேண்டியதானே... கஞ்ச பிசினாறி' என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;‘யாரை கஞ்சப் பிசினாறிங்கல... உன்னைய பாவம் பாவம்னு நான் பாத்துட்டிருந்தா, துட்டை தூக்கிட்டுப் போனவனுக்கு சப்போட்டால?'&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து நடந்த சொத்துப் பிரிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;குருசாமி வீட்டுக்கு முடிவெட்ட வருகிறவர்களை யாரும் தடுக்கக் கூடாது. மும்பைக்கு ஓடிப் போனவனைத்தவிர நடுவுள்ளவனுக்கு வீட்டின் பின்பக்கமும், வேலுவுக்கு வீட்டுக்கு எதிரில் இருக்கிற குச்சிலும் முடிவெட்டுவதற்கான இடமாக ஒதுக்கப்பட்டது. வேலு, முடிவெட்டுவதை விட ஆடு வெட்டுவதில் அதிக கவனம் செலுத்தினான். நடுவுள்ளான் கார்சாண்ட் அருகே சின்னதாக சலூன் கடை போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் இப்போது மாறிவிட்டது. சிமென்ட் சாலைகளாகியிருக்கிற தெருவெங்கும் அவரசத்தின் கால்கள் பதிந்து கிடக்கின்றன. தலையை இப்படியும் அப்படியும் இழுத்து, வளைத்து, நறுக்கி அலைகிற இளசுகளுக்காக நான்கைந்து மாடர்ன் சலூன்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஊரின் ஒதுக்குப்புறத்தில் திறக்கப்பட்ட ஆட்டிறைச்சிக் கடை, இப்போது தினம்தோறுமாக மாறியிருக்கிறது. உடல் இளைத்துப்போன வேலு, அங்கு வலுவோடு ஆட்டின் தோல் உரித்துக் கொண்டிருக்கிறான், வாயில் பீடியை வைத்துக்கொண்டு.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-5502169323035801509?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/5502169323035801509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=5502169323035801509' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/5502169323035801509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/5502169323035801509'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/11/blog-post_18.html' title='கிடா வேலு'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-5310313364306179092</id><published>2011-11-17T04:14:00.000-08:00</published><updated>2011-11-17T04:14:37.530-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பிரியங்களின் பால் அலையும் மனம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;குரங்குகள் பற்றிய பயம் ஊருக்குள் வந்த பிறகுதான், அந்தக் குட்டிக்குரங்குடன் அலையத் தொடங்கினான் செபாஸ்டியான். வண்ண வண்ண உடைகளணிந்த அந்தக் குட்டி, தலையை குனிந்து இரண்டு கைகளையும் குவித்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லியது. சின்னப் பிள்¬ளைகளின் சிரிப்பு விளையாட்டுக்கு குட்டிக் கரணமும் அடித்தது. முகப்பகுதி மட்டும் வெள்ளை வெளேர் என இருக்கிற அந்தக் குட்டிக்கு செபாஸ்டியான் வைத்த பெயர், ‘செல்லம்'. ஊர்க்காரர்கள் வைத்த பெயர் ‘வால்'. இந்த வாலுக்கு, ‘சரியான சேட்டை புடிச்ச குரங்குல்லா' என்பதாகப் பொருள். &lt;br /&gt;&lt;br /&gt;பாபநாசத்தில் குரங்குகள் தொல்லை அதிகப்படியாகவே இருந்தன. படித்துறையில் பழக்கூடையை வைத்துக்கொண்டு நீங்கள் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தால் கூடை போவது தெரியாது. ‘ஓடு... எங்க வந்து எதை புடுங்குத' என்கிற சின்ன அதட்டலுக்கு லேசாகப் பயந்துக்கொண்டிருந்த குரங்குகள், இப்போது அதையெல்லாம் தாண்டி விட்டது. நேரடியாக முன்னால் வந்து பழக்கூடையை மடியிலிருந்து இழுக்கிற அளவுக்கு அதன் தைரியம் அதிகரித்திருந்தது. இதனால் தேங்காய், பழம், பொறி விற்கிற கடைகாரர்கள், கடையின் இரண்டு பக்கமும் குரங்கு விரட்ட என்றே இருவரை வைத்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;கோயில் வாசலில் ஆரம்பித்து, உள்பிரகாரம் வரையும் வெளியே படித்துறையிலிருந்து நிற்கிற பஸ்களின் சீட்கள் வரையிலும் எங்கெங்கும் வியாபித்திருந்தது குரங்குகள். இதை விரட்டுவதற்காகச் செய்யப்பட்ட எல்லா ஏற்பாடுகளும் தோல்வியில் முடிவடைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிருந்து எல்லை தாண்டி, அருகிலிருக்கிற எல்லா கிராமங்களுக்கும் குரங்குகள் படையெடுக்கத் துவங்கிவிட்டன. பாபநாசத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற கீழாம்பூருக்கு குரங்குகள் வந்த கதை இப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அக்ரஹாரத்தில்தான் ஆரம்பமானது இதன் சேட்டைகள். தெருவைப் போல விரிந்து கிடக்கிற வீடுகளின் பின்பக்க மரங்களில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த குரங்கள், பிறகு உரிமையோடு வீட்டுக்குள் விருந்தாளியாகி இருந்தது. பெரும் பண்ணை ராசா ஐயர் மீது குரங்கு தாவியதில், அவர் பதறி கொள்ளையில் விழுந்ததிலிருந்து ஊரில் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது இது. &lt;br /&gt;&lt;br /&gt;‘ச்சூ...ச்சூ' விரட்டலோ, கல்லால் எறிவதோ வேலைக்காகாது எனத் தெரிந்த பிறகு ஊர் தலையாரி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு, தென்காசியிலிருந்து வேனில் வந்தவர்கள் சிலவற்றைப் பிடித்தும் சிலவற்றை விட்டும் போயிருந்தார்கள். இதையடுத்து குரங்குகளின் பிடியிலிருந்து கட்டுக்குள் வந்திருந்தது ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘யப்பா இனும கவலை இல்ல' என்று ஊர் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தப் போது செபாஸ்டியான் இப்படியொரு குரங்கோடு அலைவது வேடிக்கையாக இருந்தது. அநேகமாக இதையும் பாபநாசத்திலிருந்தே பெரிய குரங்குகளுக்கு தெரியாமல் தூக்கி வந்திருக்க வேண்டும். ஆனால் குட்டிகளுக்கு குரங்குகள் கொடுப்பதை விட, பால், மோரீஸ், கதலி, ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள், இது தவிர மத்தியானம் சோறு, இரவு தோசை உள்ளிட்டவற்றை உணவாக கொடுத்து வளர்த்தான் செபாஸ்டியான். &lt;br /&gt;இந்த ‘செல்லத்'துக்காக அவனது சைக்கிளின் முன்பகுதியில் ஒரு சிறப்பு பெட்டிப் பொருத்தப்பட்டிருந்தது. அவன் சைக்கிளை அழுத்தினால், யாராவது அவனுக்கு வணக்கம் வைத்தால், இது முந்திக்கொண்டு, ‘வணக்கம்' என கையை தூக்கி கும்பிட்டு, பற்களை காட்டும். இப்படியான பழக்க வழக்கங்கள் குட்டிக்கு இன்னும் வளர்ந்திருந்தன. யாராவது சைக்கிளில் கை வைத்தால், குர்குர் என கத்தி முறைப்பது, சைக்கிளுக்கு ஏதாவது பிரச்னையாகி சைக்கிள்கடைக்காரன் அதை சரி செய்தால், அவனது கையை தட்டிவிடுவது உள்ளிட்ட செயல்களை செவ்வனே செய்து வந்தது குட்டி.&lt;br /&gt;‘இது இப்பவே இப்படி இருக்கடே... வளர்ந்தா குதறிரும் போலிருக்கே?' என்கிற பேச்சுக்கள் வரத்தொடங்கின. ஆனால், ‘செல்ல'த்துக்கு ரசிகர்களும் பெருக ஆரம்பித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;தனது குடிசைக்கு வெளியே வளர்த்திருக்கிற வாதமடக்கி மரத்தின் கீழே, சிறு குடிசை ஏற்பாடாகியிருந்தது செல்லத்துக்கு. உள்ளே சாக்குகள் விரிக்கப்பட்டு அதன் மீது செபாஸ்டியான் மனைவியின் கிழிந்த சேலை விரிப்பாக்கப்பட்டு பெட் உருவாக்கப்பட்டிருந்தது. சின்னதாக கேட் வேறு. சில நாட்களில் அதை செல்லமே சரியாக இழுத்து வைத்துவிட்டு தூங்கப் பழகிவிட்டது. இரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கிவிடுகிற ஊரில் செல்லத்துக்கும் என்ன வேலை? ‘போல, போய் தூங்கு' என்றதும் வலது கையை தூக்கி வணக்கம் வைத்துவிட்டு செபாஸ்டியனின் நெற்றியில் முத்தமிட்டு தூங்கப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் இல்லாமல் ஊரின் நடுவில் இருக்கிற தேவாலயத்துக்கு செபாஸ்டியன் நடந்து சென்றால், அவன் தலையில் குத்தவைத்துக் கொண்டு செல்லமும் சென்றது. தேவாலயத்துக்குள் வழிபாட்டில் இருந்தவர்களுக்கு இது பழக்கம் என்றாலும் புதிதாகச் செட்டிக்குளத்திலிருந்து வந்திருந்த பாதிரியாருக்கு இது வியப்பாக இருந்தது. ‘பர மணடலத்திலிருக்கும் எங்கள் பிதாவே' என்று வாசிக்கப்படுகிற போதும் ‘ஆமென்' என்று முடிக்கிற போதும், மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அதை செல்லமும் செய்தது. உள்ளே குரங்கை அனுமதிக்கலாமா வேண்டாமா என குழப்பத்திலிருந்த பாதிரியார், ஓரக்கண்ணால் இதை பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனார். ‘இது அடிக்கடி வந்துபோறதுதான்' என பிறகு அவருக்கு சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செபாஸ்டியானுக்கு இடது கால் கொஞ்சம் சூம்பிப் போயிருக்கும். நடக்கும்போது காலை இழுத்து இழுத்துதான் நடப்பான். குரங்கு குட்டிக்கு முன், அவனது பொழுது போக்கு, வேட்டையாக இருந்தது. இது காட்டு வேட்டையல்ல. ரயில்வே கேட்டுக்கு மேற்பக்கம் இருக்கிற சோமுதேவர் விளை, கீழ்ப்பக்கம் இருக்கிற குச்சித் தாத்தா விளைகளில் கருவாலி, தப்பித்தவறி நள்ளிரவில் அலைகிற முயல்கள், பறையாங்குளத்திலும் கோவன்குளத்திலும் கொக்குகள், ஐயர் வீட்டு ரைஸ் மில்லில் புறாக்கள் என அவனது வேட்டை வகைப்பட்டிருந்தது. இதற்காக கார் டயரில் செய்யப்பட்ட தடிமனான ரப்பரைக் கொண்ட, கவிட்டையை அவன் வைத்திருந்தான். நரிக்குறவர் ஒருவரிடமிருந்து காசுக்கு வாங்கிய கவிட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;கருவாலிகள் கோழிக்குஞ்சு மாதிரிதான். அதன் ருசியும் அப்படியே. கொக்குள் கொழுப்புகளால் ஆனதாகச் சொல்லுவான் செபாஸ்டியான். முயல், புறாக்களின் ருசியையும் சொல்லி மாளாது என்பான். கோயில்கொடை காலங்களில் இதில் சிலவற்றை விற்றும் வந்தான். ஒரு நாள் செல்லத்துடன் சென்ற செபாஸ்டியான், கவிட்டையால் கொக்கு ஒன்றை குறிபார்த்து, போட்டான். பொத்தென்று விழுந்த கொக்கைத் தேடி ஓடியது செல்லம். அதை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ரத்தம் வந்த இடத்தை கை வைத்து துடைத்து, ‘உஸ் உஸ்' என்று ஊதியது. பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை. செபாஸ்டியனைப் பார்த்து கர்புர்ரென கத்திவிட்டு அவனருகில் ஓடி வந்தது. பிறகு விழுந்த கொக்கின் அருகில் ஓடியது. சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு, அதன் அருகிலேயே குத்த வைத்தது செல்லம். &lt;br /&gt;&lt;br /&gt;செபாஸ்டியானுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது. கொக்கு இறந்திருந்தது. அதை எடுக்காமல், ‘வா போவோம்' என்றான் செபாஸ்டியான். திரும்பவும் கர்புர்ரென கத்திவிட்டு, வழக்கமாக, அவன் தோளில், தலையில் ஏறிக்கொள்ளும் ‘செல்லம்' இப்போது அப்படி ஏறவில்லை. அவன் பின்னால் சோகத்துடன் வாயை இழுத்து இழுத்துக் காட்டிவிட்டு நடந்து வந்தது. அவ்வப்போது விழுந்து கிடந்த கொக்கை நின்று பார்த்துக் கொண்டே வந்தது. அதன் நடையில் கோபம் தெரிந்தது. அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அமைதியாக சென்ற குட்டி, அவனுடன் இரண்டு நாட்கள் பேசவில்லை. எப்போதாவது கவிட்டையை எடுத்தால் அது கண்ணைப் பொத்திக்கொண்டு, தூரத்தில் ஓட ஆரம்பித்தது. ‘இதானே உன் பிரச்னை' என்று கவிட்டையை கூரைக்குள் சொருகிய செபாஸ்டியான், இன்றுவரை எடுக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய், வெள்ளிகளில் என்றாவது அக்ரஹாரம் தாண்டி, கிளப் கடைக்கு வரும்போது, எதிரில் வாய்க்காலில் குளித்துவிட்டு வரும் மாமிகள், செல்லத்தைப் பார்த்து, ‘ராமா ராமா' என்று கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். அப்படி யாராவது செய்தால் ‘செல்லமு'ம் அவர்கள் மாதிரியே கன்னத்தில் போட்டுக்கொள்ளும். ‘கிண்டலைப் பாரேன் இதுக்கு?' என்பார்கள் மாமிகள். கடையில் அவன் சாப்பிட உட்கார்ந்தால், ‘இட்லியா தோசையா' என்று கேட்பான். வடையை, கை காண்பிக்கும் அது. &lt;br /&gt;&lt;br /&gt;‘இது உன்னைய விட ஏழு மடங்கு பெரிசா வரும்டே...' என்பான் கடை சைலு. அவனுக்கு இடது கையால் வணக்கம் வைக்கும், ‘செல்லம்'. &lt;br /&gt;&lt;br /&gt;‘ரெண்டு பிள்ளைல வச்சுட்டு என்னாலயே இருக்க முடியலையே... இதை வச்சுட்டு எப்படிடே இருக்க வீட்டுல... வேசடையா இல்லையா?' என்கிற பத்திர எழுத்தர் பரவசிவம் பிள்ளையின் கேள்விக்கு, செபாஸ்டியனின் பதில் சிரிப்பாகத்தான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;‘பரம்சம் கழுத்துல பாம்பு இருக்கது, யாருக்கு பெருமை? அவருக்கா, பாம்புக்கா?'&lt;br /&gt;&lt;br /&gt;‘எதுக்கும் எதுக்கும் முடிச்சுப்போடுத...'&lt;br /&gt;&lt;br /&gt;‘எல்லாம் ஒண்ணுதாம்யா... வேசடைன்னா வேசடைதான்... இல்லைன்னா இல்லை... என்ன சொல்லுதியோ செட்டியாரே...' என்கிற செபாஸ்டியான், யாரின் பதிலையும் எதிர்பாக்க மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைதூரப் பிழைப்பில் கிராமத்தைத் தொலைத்துவிட்டு ஊர்ப்பாசத்தில் திரும்பிய பிரிதொரு வருடத்தில், செபாஸ்டியனைப் பார்த்தபோது, ஆளே மாறியிருந்தான். தலையில் முடிகள் இல்லை. பிரியங்களால் ஆன இரண்டு கிளிகள் அவரது தோள்களில் இருந்தன. குட்டிக்குரங்கு வளர்ந்து வழி தேடி, இனம் தேடி போயிருக்கலாம். குழி விழுந்த கன்னத்துடன் வயதான நிலையிலிருக்கும் செபாஸ்டியானிடம் கேட்கலாம் என்றால், இப்போது அவனுக்கு காது கேட்காது என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை கிளிப்பேச்சு கேட்குமோ என்னவோ?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-5310313364306179092?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/5310313364306179092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=5310313364306179092' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/5310313364306179092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/5310313364306179092'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/11/blog-post_17.html' title='பிரியங்களின் பால் அலையும் மனம்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-3403536352659606235</id><published>2011-11-16T01:45:00.000-08:00</published><updated>2011-11-16T01:53:31.579-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><title type='text'>மார்கழி மனிதர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கை, கால்களை உறைய செய்கிற கடுங்குளிர் மார்கழி மாதம் மட்டுமே அவரை பார்க்க முடியும். இரண்டு தோள்களிலும் ஜோல்னா பைகளை மாட்டிக்கொண்டு காவி நிற வேட்டி, ஜிப்பாவில் அவர் வருவதைப் பார்க்க, நம்ம வீட்டு தாத்தா போலவே தோன்றும். முன்பக்கம் வழுக்கையை கொண்ட நரைகளடர்ந்த தலை, காதில் கடுக்கன், கழுத்தில் ருத்ராட்ச மாலைகள், நெற்றியை மறைத்திருக்கிற திருநீறு, இவற்றைத் தாண்டி அவரது வலது கையில் இருக்கிற சேண்டி மற்றும் அழகான வெண்நிற சங்கு. &lt;br /&gt;&lt;br /&gt;சேண்டி என்கிற வட்ட வடிவ கனத்த இரும்புத் தட்டுக்கும் சங்குக்கும் சம்மந்தமில்லைதான். அதிக மூச்சு வாங்கும் சங்கை எப்போதும் ஊதிக்கொண்டே இருக்க முடியாது என்பதாலும் தன் வருகையை அறிவிக்க, அதற்கு பதிலாக இன்னொன்று தேவை என்பதாலும் சேண்டி அவருக்குப் பயன்பட்டது. வெண் சங்கு, அழகான வடிவமைப்புகளுடன், வாயால் ஊதும்பகுதி தங்கப் பூண் போட்டு அழகாக்கப்பட்டிருந்தது. இந்த தங்கத்தின் காரணமாக உள்ளூர்க்காரர்களின் மதிப்பை குலைக்கும் வகையில், எப்போதும் அதன் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பார் திருச்சங்குக்காரர்.&lt;br /&gt;குளிரில் நடுங்கும் அதிகாலையில், ஊர் தொடங்குவதாகக் கருதப்படும் பேரூந்து நிறுத்தம் அருகிலிருந்து ஆரம்பிப்பார் முதல் சங்கொலியை. ‘பம்பம்பம்... பம்...பம்...பம்...' என இழுக்கவும் அவரது கன்னங்கள் புடைத்து கும்மென்று நின்ற சில நிமிடங்களில் ‘பபம்பம்...' என்று ராகமாக முடிப்பார். இந்த ராகத்தின் ரசனையறியாமல் பஸ்&amp;amp;ஸ்டாண்டில் படுத்திருக்கிற நாய்கள் ‘லொள் லொள்' என கத்தியபடி சிதறி ஓடும். ஊர், பாதி விழித்துக்கொள்ளும். விழித்தால் அந்த குளிரில் இழுத்துமூடி தூங்கத்தோன்றுமே தவிர, எழுந்து நடமாடத் தோன்றாது. இருந்தாலும் கலைந்து எழும் தூக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சங்கூதலுக்குப் பிறகு, முருகன் பாடலை பாடிக்கொண்டு, சேண்டியை அடித்துக்கொண்டே அவர் தெருத்தெருவாக வருவார். நான்கைந்து வீடுகளைத் தாண்டி நின்றுகொண்டு சேண்டியை பலமாக அடித்தபடி நின்றவாறே கிழக்கும் மேற்கும் பார்ப்பார். அந்தக் குளிரிலும் யாராவது குழந்தைகளிடம், ஒரு க்ளாஸில் அரிசியை கொடுத்துவிடுவார்கள். அதை, ‘சாமி இந்தாங்க...'என்று நீட்டுகிற குழந்தைகளிடம் வாங்கி வலதுபக்கம் தொங்கும் ஜோல்னா பைக்குள் போட்டுக்கொள்வார். பிறகு தொடரும் நடையும் சேண்டியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தெருவின் குறிப்பிட்ட வீடுகளுக்கு முன் மட்டுமே இந்த நல்சங்கை ஊதுவதை வழக்கமாக வைத்திருந்தார் அவர். அதில் ஒன்று எனது வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் ஒரு பக்கம் கலைந்தாலும், ‘பம்பம்..' என்ற அந்த வெண்சங்கு ஊதலில் காதுகள் அவரைத் தேடி அழைக்கும். அம்மாவிடம், ‘ஏம்மா சாமி வந்திருக்கு, அரிசி கொடு' என்பேன். ‘ஊர்க்காரவோளுக்கு கொடுக்கணும்னா ரொம்ப ஆர்வம்தான்டே' என்று முணு முணுத்துக்கொண்டே அம்மா, குதிருக்குள் கை விட்டு க்ளாஸில் அள்ளுவாள் அரிசியை. அவளிடம் வாங்கிகொண்டு வாசலுக்கு ஓடினால், அவர் சங்கொலியை முடித்திருப்பார். கொடுத்த அரிசியை ஜோல்னாவுக்குள் போட்டுவிட்டு, என் நெற்றியில் திருநீறை பூசுவார். பிறகு சேண்டி அடித்துவிட்டு கிளம்ப போகும்போது சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தாத்தா இன்னொரு தடவை...''.&lt;br /&gt;&lt;br /&gt;இலேசாக சிரித்துவிட்டு, குறைவாக ஊதுவார் அவர். இருந்தாலும் அது எனக்கான ஊதலென்பதால் பெரும் மகிழ்ச்சி. இப்படியான நேரத்தில் ஆச்சியும் கூட வந்தால், ‘அவனுக்கு கொஞ்சம் தண்ணியடிங்கய்யா... ராத்திரியானா ரொம்ப வாய் உளறுதான்... ஏதும் அண்டிருக்குமான்னு தெரியல' என்பாள். அதாவது எனக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதன் சுருக்கக் குறியீடுதான், ‘ஏதாவது அண்டியிருக்கும்' என்பது. அவள் அப்படிச்சொன்னால் அவர் வைத்திருக்கிற கூஜாவிலிருந்து தண்ணீர் எடுத்து, என் முகத்துக்கு நேரே சள் என ஒரு வீச்சு. நடுங்கும் குளிரில் இது வேறு இன்னும் குளிராட்ட, முகத்தை துடைத்தவாறு, ஆச்சியை திட்டிக்கொண்டே வீட்டுக்குள் ஓடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;திருச்சங்குக்காரரின் வருகை, அம்மாவுக்கு பால் கறக்கும் நேரம். ஒரு வேளை அவர் வர நேரமாகிவிட்டால் கூட பசுமாடு சத்தம் போட்டே அம்மாவை உசுப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘மார்கழி காலைல நல்ல ஒலியை ஊர் கேக்கணுண்டா... ஊர் நல்லாயிருக்கணுங்கதுக்காக, சாமி சொல்லி அவர் வாராரு' என்று ஆச்சி சொல்வது எனக்குப் புரியாது. சாமி சொல்லி இவர் ஏன் வரவேண்டும்? சாமியே வரவேண்டியதுதானே என்பதாக எனக்குள் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சங்குக்காரரின் பெயர் இதுவென்று ஊரில் யாருக்கும் தெரியாது. அவர் பக்கத்தூர்க்காரர். அதுவும் பக்கத்து ஊர் என்றுதான் தெரியுமே தவிர, எந்த ஊர் என்பது சுத்தமாகத் தெரியாது. மார்கழி முடிந்ததும் இந்த ஊரில் பிரிகிற அரிசிகளை மொத்தமாகச் சேர்த்து திருச்செந்தூர் கோவிலில் சேர்த்துவிடுவார் என்றும் அதனால் அவர் கடவுளின் ஊழியர் என்றும் ஊரில் சொல்லப்பட்டது. கடவுளின் ஊழியருக்கு என்ன சம்பளம் என்பது யாருக்கும் தெரியாது. தானம் செய்யும் குணம் கொண்ட உள்ளூர் மக்களுக்கு அது பற்றிய எந்த கேள்வியும் எழவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஊர் முழுவதும் சென்றுவிட்டு, அரிசி அல்லது காசு வாங்கும் திருச்சங்குகாரர், நன்றாக விடியுமுன்பே பஸ் &amp;amp;ஸ்டாண்ட் வந்துவிடுவார். ஆட்கள் அதிகம் இருக்காத அங்கு, கிடைத்தவற்றை ஒரு வேட்டியில் கொட்டிப் பிரிப்பார். வெவ்வேறு வகை அரிசிகள் கலந்து கிடைக்கும் அந்த வேட்டியில், நாலணா, எட்டணாக்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளும் கிடக்கும். ரூபாய், சில்லறைகளை தனியாக எடுத்துவிட்டு மொத்தமாக அரிசியை கட்டுவார். ஜோல்னா பை இப்போது வெற்றிடமாக இருக்கும். அதில் ஒன்றில் வெண்சங்கை வைத்துக்கொள்வார். எட்டு மணி பஸ் வந்து நின்றதும் டிரைவர் இவரைத் தேடுவார். சிரித்துக்கொண்டே இவரும் ஏறுவார். பிறகு, மறுநாள் காலையோ, முந்தைய நாள் இரவே வந்து பஸ்&amp;amp;ஸ்டாண்டில் தங்கிவிடுவாரோ தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மார்கழி மாதத்தின் கடைசி நாள் அவர் பகல் பன்னிரெண்டு மணி வரை ஊரில் அரிசிப் பிரிப்பார். வழக்கமாக அதிகாலையில் அதிகம் கண்டுகொள்ளாத வீடுகள், கடைகள் ஆகியவற்றை இந்த கடைசி நாளில் பிடித்துக் கொள்வார். அதிகமாக பிரியும் என்பதால் உடன் மகனையும் அழைத்து வருவார். இவர் காவி வேட்டியில் இருந்தால் அவன் வெள்ளை வேட்டியில், ஜிம் பாடி வெற்றுடம்பில் துண்டுடன் வந்துகொண்டிருப்பான். நடக்கும் போது அவ்வப்போது நெஞ்சை நிமிர்த்து முன்பக்கம் புடைக்க நடப்பான்.&lt;br /&gt;இருக்கிற எல்லா கடைகளிலும் டீ, வடை உள்ளிட்ட வகையறாக்கள் ஓசியில் கிடைக்கும். அதிகபட்சம் பகல் பன்னிரெண்டு மணிவரைதான் என்றாலும் பதினோரு மணிக்கே ரெடியாகிவிடுகிற அண்ணாமலை செட்டியார் கடையில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுதான் எழுவார். இதில் யாராவது கடை திறக்கவில்லை என்றாலோ, அல்லது வேறு விஷயமாக வெளியூர் சென்றிருப்பது தெரிந்தாலோ, அவர்கள் வீடுகளுக்கே சென்றுவிடுவார் திருச்சங்குக்காரர். எதையாவது வாங்கிவிட்டுதான் நகர்தல் நடக்கும். இதையடுத்து ஒரு வருடத்துக்கு அவரைப் பார்க்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை இவர் பற்றி பேச்சு வரும்போது, ‘மனுஷன் வாழ்க்கையில மூணு சங்கு இருக்குடே. குழந்தை பிறந்ததும் சங்குலதான பால் ஊட்டுதோம், இது முதல் சங்கா... கல்யாணத்தன்னைக்கு ஊதுதாவோலா, அது ரெண்டாவது... மூணாவது சுடுகாடு போவும்போது... எல்லாத்துக்கும் ரெண்டு மூணு விஷயம் வச்சிருக்காம் பாத்துக்கோ அந்த காலத்துலயே...இந்த சங்கும் அதுமாதிரிதான்'' என்ற சுடலை தாத்தாவிடம் இன்னும் ஏராளக் கதைகள் இருக்கலாம். &lt;br /&gt;கதைகளைச் சொல்வதும் கதைகளைக் கேட்பதும் அவரவர் விதியைப் பொறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான வருடங்களில் ஒரு மார்கழி மாத குளிரில் பார்த்தபோது, உடல் தளர்ந்திருந்தார் திருச்சங்குக்காரர். பாடினால் ராகம் சிதறி ஓடுகிறது. சங்கிலிருந்து வரும் ஒலியும் சிதைந்து சிதைந்து வெளியேறுகிறது. அதனாலோ என்னவோ, சேண்டி அடிக்க அவர் மகனை அழைத்து வந்திருந்தார். எல்லோரையும் போல நன்றாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டிய நேரத்தில், இப்படி அழைத்து வந்துவிட்டாரே என்கிற எரிச்சல் அவனது முகத்தில் இருக்கும். இருந்தாலும் மேலத்தெருவுக்குச் செல்லும்போது அதிகாலையில் குளித்து, கூந்தல்களில் துண்டு கட்டியிருக்கிற இளம்பெண்கள், வாசல் பெருக்கி கோலம் போடுவதைப் பார்க்கிற போது, இந்த மாதிரியான எரிச்சல்கள் தானாகவே கழன்றுகொள்ளும் அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர் உடல் தளர்ந்துவிட்டதால் அடுத்தடுத்த வருடங்களில் அவர் மகன்தான் வருவான் என நினைத்தேன். மார்கழிக்கு முந்தைய நாளே, அதிகாலை எழுப்பப்போகும் நல் ஒலியை எதிர்பார்த்து படுத்துக் கிடந்தேன். பன்னிரெண்டு மணி வரை தூக்கம் வரவில்லை. புதிதாக வரக்கூடிய அவர் மகன் சரியாக அந்த சங்கை ஊதுவானா? இழுத்து முடிக்கும்போது வருகிற இனிமையான ‘பபம்பம்' இவனுக்கு கைகூடுமா? அப்படி வருபவன் தெருவில் நுழைந்து என் வீட்டு வாசல் நின்று ஊதுவானா? எனக்காகக் கேட்டால், சங்கை எடுப்பானா? என்பது உள்ளிட்டு ஏராள கேள்விகளுடன் சமாதானங்களையும் நானே சொல்லிவிட்டு தூங்கிப்போனேன், காலை எட்டுவரை.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கொலிக்காரர் வந்தாரா தெரியவில்லை. வாசல் திண்ணையில் சேலை முந்தானையால் உடலை மூடி வெற்றிலைப் போடும் ஆச்சியிடம் கேட்டேன்:&lt;br /&gt;&lt;br /&gt;‘யாச்சி, இன்னைக்கு யாரு வந்தா? அவரா, மவனா?'&lt;br /&gt;&lt;br /&gt;‘ரெண்டுபேருமில்லைடா பேரா' என்றாள் ஆச்சி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-3403536352659606235?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/3403536352659606235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=3403536352659606235' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3403536352659606235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3403536352659606235'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/11/blog-post_16.html' title='மார்கழி மனிதர்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-6409002800524815973</id><published>2011-11-07T04:36:00.000-08:00</published><updated>2011-11-07T04:36:18.300-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>சோடா என்றொரு மாடல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எப்போதாவது பேஷன் ஷோக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு நண்பர்களுடன் எனக்கும் கிடைத்திருக்கிறது. சென்னையில் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில், விளக்குகள் குறைவாக எரிகிற இடங்களில் இம்மாதிரியான ஷோக்கள் நடக்கும். விதவிதமான உடைகளில் இளைஞிகளும் இளைஞர்களும் கூடியிருக்க, அவர்களின் மேக்கப் மற்றும் பேச்சுகளைப் பார்த்தால் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். மனீஷ் மல்கோத்ரா மாதிரியான பெரிய ஆட்களின் ஷோக்களில் நட்சத்திரங்கள் கலந்துகொள்வது ஷோக்களுக்கான பேஷன். அப்படியொரு ஷோவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சில ஷோக்களில், கிழிந்து தொங்கும் உடைகளுடன் நடந்து வரும் பெண்களை, கையில் ஒயின் கிளாஸுடன் ஸ்டைலாக நின்றுகொண்டு பார்த்தால் பாவமாகத்தான் தோன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை பெரியாச்சி பார்த்தால், ‘ஏட்டி, ஒனக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு... இப்படி கிழிச்சுப் போட்டுட்டு அலையுதெ...மானங்கெட்ட செரிக்கி...‘‘ என்று வெற்றிலைச் சாறைத் துப்பிவிட்டு திட்டியிருப்பாள். முதுகில் பெரிதாக இடம் விட்டு ஜாக்கெட் போட்ட பெரிய மாமா பொண்டாட்டிக்கே அர்ச்சனை அதிகமாக விழுந்தது என்றால் இந்த பெண்களுக்கு என்ன மாதிரியான அர்ச்சனை நடக்கும் என்று யோசித்துக் கொள்வேன். ஒயினுக்குப் பிறகு பிராண்டிக்குப் போனதும் இவர்களை பெரியாச்சியிடம் பிடித்துக்கொடுக்க வேண்டும் எனத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல விதவிதமாக உடைகளை சுமந்துகொண்டு வரும் இளைஞர்களைப் பார்த்தால், ‘சோடா‘ ஞாபகம்தான் வரும். இரண்டு மூன்று கலர்களில் சட்டை, இதில் உள்சட்டை, வெளிசட்டை, முட்டியில் கிழிந்த ஜீன்ஸ், சீவப்படாத தலைமுடி என பேஷன் ஷோக்களில் நடந்து வருபவர்களுக்கு ‘சோடா‘ ஒன்றும் குறைச்சல் இல்லை. இவர்களுக்கு ஈடான அல்லது இவர்களை விட அதிகப்படியான அழகை அவன் கொண்டிருந்தான். ஆனால், அவன் கொஞ்சம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன். &lt;br /&gt;&lt;br /&gt;அக்ரஹாரத்தில் யார் வீட்டிலோ கொடுத்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சிவப்பு, வெள்ளை, மற்றும் ஊதா நிறத்தில் கோடு போட்ட சட்டைகளை மொத்தமாக அணிந்திருந்தான். தூரத்தில் இருந்து அவன் நடந்து வருவதைப் பார்த்தால் பேஷன் ஷோவில் நடந்து வரும் மாடல்களைப் போன்றே தோன்றும். &lt;br /&gt;ஊருக்கு மேற்கே இருக்கிற பஞ்சாயத்து போர்டு திண்டுதான், சோடாவின் சொகுசு வீடு. இங்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை என்பதும் இரவு நேரங்களில் அதிகப்படியான தொந்தரவு இல்லை என்பதும் சோடா இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம். எப்போதும் சட்டைப் பையில் பீடி கட்டு இருக்கும். அப்படி இல்லையென்றால் அவன் குடித்துப் போட்ட துண்டுகளை சேகரித்து, பீடி கட்டினுள்ளே சொருகியிருப்பான். அவன் எதற்கும் கவலைப்பட்டதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாயத்து போர்டு திண்டின் பின்பக்கம் இருக்கிற பிள்ளையார் கோவில் வாய்க்காலுக்கு காலையில் ஆட்கள் செல்லும் சத்தம் கேட்டதும் எழுந்து சுவரோரமாக குத்த வைத்து உட்கார்ந்துகொள்வான். எதிரில் மஞ்சளாக வெளிச்சம் தரும் செவனனின் டீக்கடை திறந்திருக்கும். பால் கொதிக்கும் சத்தத்துடன் செவனனின் கொட்டாவி சத்தமும் கேட்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து பெஞ்சில் உட்கார்கிற பேச்சி நம்பியாரும், புனமாலையும் பேச்சை ஆரம்பிப்பார்கள். முதல் போணி பேச்சி நம்பியார்தான். அவர் காசைக்கொடுத்து டீயை குடித்ததும் திண்டிலிருந்து இறங்குவான் சோடா. அவன் நடந்து வர வர, ‘சோடா வாராண்டே‘ என்ற சத்தம் கடையில் கேட்கும். போய் கடை வாசலில் நின்றதும், டீயை நீட்டுவார் செவனன். வாங்கி சூட்டோடு குடித்துவிட்டு கிளாசை கழுவி விட்டு ஓரமாக வைப்பான். வைத்துவிட்டு அவன் போகாமல் நின்றால், பீடி வேண்டும் என்று அர்த்தம். இரண்டு செய்யது பீடிகளை நீட்டுவார். வாங்கிக்கொண்டு அங்கேயே பத்த வைத்துக்கொண்டு நடப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இதெல்லாம் கரெக்டா பண்ணுதாம்... ஏதாவது கேட்டாதான் பதிலு பேசமாட்டங்காம்‘ என்று முனங்குவார் புனமாலை. &lt;br /&gt;&lt;br /&gt;‘அவன் என்ன கொழுத்துபோயா அப்படி செய்யுதாம்? எவனும் செய்வினை வச்சிருப்பானுவோ பாவம்...‘ என்பார் பேச்சி நம்பியார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் திண்டில் வந்து உட்கார்ந்துகொள்வான். வாய்க்காலில் குளிக்கப் போகிற, வருகிறவர்களைப் பார்த்துவிட்டு ஏதோ கற்பனையில் உட்கார்ந்திருப்பான். எட்டு மணிக்கு டாணா, விக்ரமசிங்கபுரம் வழியாக நாங்குநேரி செல்லும் தேவி பஸ் வந்ததும் சோம்பல் முறித்துவிட்டு பஸ்&amp;amp;ஸ்டாண்ட் நோக்கி நடப்பான். எதையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கும் அவனது உதடு. திடீரென்று சிரித்துக்கொள்வதும் சாலையில் ஓரத்தில் மட்டுமே நடப்பதுமான அவனது விதிகளில் இன்னொன்றும் பிரதானமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அது பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடமும் அதிகம் பேசாத சோடா, ஒரு கட்டு செய்யது பீடிக் கொடுத்தால் பழைய பாடல்களை ஸ்ருதி குறையாமல், அட்சரச் சுத்தமாக பாடுவான். அதில் சீனிவாஸ், ஏஎம் ராஜா பாடல்களே அதிகம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்-ஸ்டாண்டின் கீழ்ப்பக்கம் இருக்கும் கணேசன்னனின் கடையில் வலது ஓரம் அமர்ந்துகொண்டு, ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ‘ என்ற ‘இதய கமலம்‘ பட பாடலுடன் கச்சேரி ஆரம்பமாகும். சண்முகத் தேவரும் சீனி ஆசாரியும் துண்டை விரித்து தூணில் சாய்ந்துகொண்டு மெய் மறந்து போவார்கள். அவர்கள் காலத்து காதலை நினைத்திருப்பார்களோ என்னவோ?&lt;br /&gt;அடுத்ததாக ஏஎம் ராஜாவின் ‘பாட்டுப பாடவா பாடம் சொல்லவா‘ என்ற பாடல் தொடரும். இதற்குள் நான்கு கட்டுப் பீடிகள் சேர்ந்திருக்கும் சோடாவுக்கு. கண்களை மூடி சோடா, தன்னிலை மறந்து பாடலுக்குள் போய்க்கொண்டிருப்பான். கேட்டுக்கொண்டிருப்பவர்களும் அப்படியே. பாடல்களில் வரும் பெண்குரலையும் ஆணின் குரலிலேயே அவன் பாடினாலும் அப்படியொரு இனிமை. இதில் அதிகமாக, சோகப்பாடல் பாடும்போது, சண்முகத்தேவருக்கு கண்ணீர் வந்துவிடும். கடை கணேசன்னனும் தன் பங்குக்கு ஒரு டீயை கொடுப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ச்சே... கொன்னு போட்டாம்லே... பய கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தாலும் என்னமா பாடிட்டாங்க... மனசு கேட்கலைடா‘ என்று சொல்லும் சீனி ஆசாரி, வேட்டியை அவிழ்த்து ‘இந்தாடா...‘ என்று இரண்டு ரூபாயை கொடுப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூல், கல்லூரி செல்பவர்கள் பஸ்&amp;amp;ஸ்டாண்டில் கூடியதும் திரும்பவும் மேற்கு நோக்கி நடப்பான். அவனது அதிகப்பட்ச சந்தோஷம் பீடியாகவே இருக்கும். வயிறு பசித்தால் ஏதாவதொரு வீட்டு வாசலில் போய் நிற்பான். வீட்டுக்குள்ளிலிருந்து யாராவது அவர்களாகவே பார்த்தால்தான் உண்டு. இலலையென்றால் பார்க்கும் வரை அப்படியே நிற்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாக அவனைப் பார்த்துவிட்டு, ‘சோடாவா, ஒரு சத்தம் கொடுத்தா என்னடே‘ என்று எழுந்து வருவார்கள். குறிப்பிட்ட வீடுகளில் அவனுக்கென்று தனி பீங்கான் தட்டு இருக்கும் வாசலிலேயே. அதை எடுத்து சோடாவே கழுவிக்கொள்வான். பிறகு வீட்டிலிருப்பவர்கள் சோறோ, கஞ்சித்தண்ணியோ கொடுப்பார்கள். முதன்முறை எவ்வளவு கொடுக்கிறார்களோ அவ்வளவுதான். பிறகு அவன் கேட்கமாட்டான். சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டு தட்டைக் கழுவி வைத்துவிட்டுப் போவான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் ஆச்சர்யப்படும் படி அவன் எப்போதாவது ஆற்றில் குளித்துவிட்டு வருவான். உச்சிவெயில் மண்டையை பிளக்கிற நண்பகலில் அணிந்திருக்கிற துணிகளை களைந்து குளித்துவிட்டு நனைந்த பேண்ட், சட்டைகளுடன் அப்படியே அவன் வருவதை பார்க்க ஒரு மாதிரியாகத் தோன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;‘நின்னு காயப்போட்டுட்டு உடுத்திட்டு போனா என்னல... இப்படி நனைஞ்சதை உடுத்திட்டுப் போற?‘ என்று யாராவது சொன்னால், அவன் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாகத் தருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் உள்ளூர்க்காரனா இல்லை வெளியூர்க்காரனா? அல்லது இங்கிருப்பவர்களுக்கு சொந்தக்காரனா என்கிற விவரம் எனக்கு தெரியவில்லை. விசாரித்தாலும் அதே பதில்தான். இதற்கிடையே இவனது மனைவி பற்றி ஒரு பலாத்கார கதையும் அதன் காரணமாகவே இவன் மனநிலைப் பாதிக்கப்பட்டான் என்கிற கதையும் ஊரில் எப்படியோ ஆங்காங்கே கொடுமையாக வலம் வந்துகொண்டிருந்தன. கதையை கேட்ட சில நொடிகளிலேயே அப்படி எதுவும் அவனுக்கு நிகழ்ந்திருக்காது என முடிவு செய்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அநியாயமாக ஊர் பெயர் எதுவும் தெரியாத உள்ளூருக்கு வந்திருக்கிற ஒரு மனநோயாளிக்கு வக்ரப் பின்னணி கொண்ட ஒரு கதையை ஏன் உருவாக்க வேண்டும் எனவும் தோன்றியது. ஊரில் வேலை இல்லாதவர்களுக்கு இப்படி கதைகளை உருவாக்குவதும் ஒரு வேலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூல் லீவு நாட்களை கொண்ட சனி, ஞாயிறுகளில் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு திண்டில் கூடிவிடும். எதிரில் இருக்கிற வேப்ப மரத்தில் ஏற்கனவே சேலை துணியால் கட்டியிருக்கிற ஊஞ்சலில் ஆடுவது இவர்களுக்குப் பொழுதுபோக்கு. சோடாவுக்கு இந்த கிழமைகளில் அவனையறியாமல் மகிழ்ச்சி வந்துவிடும். சிறிது நேரம் அவர்களை வேடிக்கைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பான். யாராவது நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் திடீரென்று அவர்களை நோக்கி கைதட்டுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏட்டி, சோடா உன்னைய பாத்து கைதட்டிட்டான் பாரு...‘ என்று எவளாவது சொல்ல, ‘ஆமா, ஒனக்கு புருஷம்லா‘ என்று மற்றொருவள் சொல்ல, சண்டை ஆரம்பிக்கும். தலைமுடியை இழுத்துக்கொண்டு ஆளாளுக்கு ஓடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் போன பிறகு சோடாவுக்கு ஆசை வரும். ஓடிப்போய் தொங்கும் சேலையில் உட்கார்ந்து அங்கும் இங்கும் ஆடுவான். இரண்டு மூன்று ஆட்டத்துக்குப் பிறகு ஒன்று சேலை கிழியும் அல்லது சேலை கட்டப்பட்டிருக்கிற மரக்கிளை முறியும். டொப்பென்று பின்பக்கம் தரையில் மோதி விண்ணென்று தெறிக்கும் வலியை பொருட்படுத்தாமல் அப்படியே திண்டில் வந்து உட்காருவான். &lt;br /&gt;&lt;br /&gt;எதிரில் சைக்கிளில் போகிறவர்கள் யாராவது இதைப் பார்த்தால், ‘ஒனக்கும் கெடக்க முடியலை என்னா..? எருமை மாடு மாதிரி இருந்துட்டு எதுல ஏறி ஆடுத...‘ என்று சத்தம் போடுவார்கள். அதை இவன் கண்டுகொண்டால்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல்கள் நடந்து பஞ்சாயத்து போர்டு விரிவாக்கம் செய்யப்பட்டதன் பொருட்டு, சோடா அங்கு தங்குவதில்லை. திண்டின் எதிரில் புதிதாக, ‘ஊஞ்சல்களை கொண்ட சிறுவர் பூங்கா‘ வந்திருக்கிறது. எதிரில் இருந்த செவனன் கடைக்குப் பதிலாக இன்னும் சில மாடர்னான டீக்கடைகள் முளைத்திருக்கிறது. சாலைகளின் இருமருங்கிலும் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. திண்டின் வலப்பக்கம் திறந்தவெளி ஜிம் உருவாகியிருக்கிறது. காலை, மாலையில் இளைஞர்கள் விளையாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குப் போன போது, சோடா எங்கே போயிருப்பான் என்பதாகவே இருந்தது என் தேடல்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஏய், சீதை பெரிம்ம, உம் மவனை பார்த்தியா? ஊர்ல இருந்து வந்த பய, அம்மா எப்படியிருக்கா? அக்கா எப்படியிருக்கானெல்லாம் கேட்கலை... எவனோ சோடாவாம்... அவன் எப்படியிருக்காம்னு கேக்காம்... கேட்டியா பெரிம்ம...‘‘ என்று சிரித்தாள் சித்தி மகள் பிரேமா. கல்லூரி படிக்கும் அவளது மகன் மந்திரம், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தெருவில் விசாரித்தால் ஏதும் நினைக்கலாம் என்று உலகநாதன் மளிகைக் கடைக்குப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘உலகா, சோடா எங்கயிருக்கான்?‘‘&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இன்னா வருவாம் பாரு‘‘ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்துக்குப் பிறகு நரைத்த தாடிகளுடன் அதே மாதிரியான உடைகளை உடுத்திக்கொண்டு பீடி புகைத்தவாறே கடைக்கு வந்தான். ஓடிப்போய் ஒரு கட்டு, செய்யது பீடியை வாங்கி அவன் கையில் திணித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்தவன், ‘‘எய்யோ... எப்படியிருக்கியோ...?‘‘ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். சோடா பேசத்தொடங்கியிருந்தான்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-6409002800524815973?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/6409002800524815973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=6409002800524815973' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/6409002800524815973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/6409002800524815973'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/11/blog-post.html' title='சோடா என்றொரு மாடல்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-9102580833552839768</id><published>2011-10-31T05:13:00.000-07:00</published><updated>2011-10-31T05:13:50.465-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>காதலுக்கு கண் இருந்தது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;காதல் பற்றி எழுதும்போது, எழுத்து தானாகவே தன்னை விரித்துக்கொள்கிறது. நித்தமும் ஏராளமான காதல் கவிதைகள் எங்காவது பிறந்து எங்காவது வாழ்ந்துகொண்டே இருக்கிறது, காதலர்களைப் போல. ஏழை, பணக்கார காதல், மாறுபட்ட ஜாதி/மதத்துக்கிடையேயான காதல், கிராமத்து/நகரத்து காதல், ஹீரோயிச காதல், கண்டதும் காதல், முன் ஜென்மக் காதல் உட்பட பல்வேறு வகைகளை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது சினிமா காதல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே விழுந்துவிடுகிற பேனாவை எடுத்துக் கொடுத்ததற்காகவெல்லாம் காதல் வந்து விடுகிற இன்றைய சூழலில், நாற்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில், காதல் எப்படி நடந்திருக்கும் என நினைப்பதே அலாதியானது. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கொண்ட கிராமம் அப்படி சீக்கிரமாக காதலையும் காதலர்களையும் விட்டுவிடுமா என்ன? இப்படியான யோசனையின் போதுதான் நண்பன் சேவியர் சொன்னான். 'எங்கப்பா அந்த காலத்துலயே லவ் மேரேஜ் பண்ணவர்லா' என்று. நண்பன் சொன்ன அந்த காலம் அறுபதுகளின் ஆரம்பம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் தவறாகவே பார்ப்பதும் பொறாமையாக கொள்வதுமான ஆட்கள் எங்கும் எப்போதும் உண்டு. தன்னால் முடியாத அல்லது தனக்கு நடக்காத ஒரு விஷயம் மற்றொருவரின் பால் நடந்து அதுபற்றி தெரியவருகிற போது தாங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. இந்த 'தாங்கிக்கொள்ள' முடியாததுதான் 'ஊர்க்கட்டுப்பாடு' என்ற பெயரில் கடுமையை உத்தரவாகிவிடுகிறது. ஊர்களின் உத்தரவுகள் சாமிகளின் நேரடி வார்த்தைகளாக வந்து விழுவதாக கருதப்பட்ட காலத்தில், நண்பனின் அப்பா ஹீரோவாக காணப்பட்டார். பெண்ணின் மனதில் இடம்பிடித்ததை தவிர வேறெந்த போராட்டத்தையும் அவனது தந்தை நடத்தியதில்லை. ஆனால் காதல் நடந்தது. தூர தூர ஊர்களில் இருந்துகொண்டு தெரியாமல் வந்துவிழுகிற கடிதங்களின் வழி நடந்த காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சொல்லப்பட்ட அல்லது நான் கேள்விபட்ட, கிராமத்து காதல்கள் எல்லாம் கொடுமையானதாகவே இருந்தன. இப்போது நினைத்தாலும் அந்த வன்முறைக்கு அவர்களது வம்சத்தில் யாரையாவது சிறையிலடைக்கச் சொல்லலாம் எனத் தோன்றும். விஷயம் இதுதான்: தெரு முனை பிள்ளையார் கோயிலில் கரகாட்டம். பகலில் வெளியில் முகம் காட்டாத தாவணிப் பெண்களுக்கு கருக்கலும் இரவும்தான் சுகங்களின் காற்றடிக்கும் பொழுது. மூன்றாவது வீட்டு பையனுக்கும் இவளுக்கும் காதல் என்று அறியப்படாத ஏதோ ஒன்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. இது அரசல் புரசலாக அங்கங்கே பரவ, பகலில் காட்டுக்கு வேலைக்குப் போய்விட்டு மாலையில் வருகிற உழைப்பாளிகளுக்கு இது கவுரவப் பிரச்னை. அண்ணன்காரனும் தம்பிகாரனும் திட்டம் போட்டுவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கரகாட்டம் நடக்கும் கோயில் வாசலுக்கு அவளும் வந்திருந்தாள். அவளது கண்கள் வழக்கம் போலவே அவனைத் தேடிக்கொண்டிருந்தன. இதுபற்றிய பேச்சு, கரகாட்டத்தின் போது இளக்காரமாக அண்ணன்- தம்பி காதுக்குப் போனது. வீட்டுக்குப் போனார்கள் அண்ணனும் தம்பியும். அடுக்களைக்குப் பின்பக்கம் குழி தோண்டினார்கள். ஆட்டம் முடிந்து வந்த தங்கையை, 'வாம்மா வந்து இறங்கு'என்றார்கள். ஏன் எதற்கு என்ற அவளின் கேள்வியை புறந்தள்ளிவிட்டு அவளை அப்படியே உள்ளே தள்ளி, குழியை மூடிவிட்டார்கள் உயிரோடு!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு கதையை கேட்டபிறகு அந்த பெண்ணின் கதறல் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அவள் செய்த பாவம் என்ன? அவளுக்கு தண்டனை என்றால் இவர்களுக்கு? அதற்கு வேறொரு கதை சொன்னார்கள். அவர்கள் சொன்ன காதல் கதைகளில் எல்லாம் தாங்க முடியாத வன்முறை. இப்படியாக கேள்விபட்ட காலங்களில் நண்பனின் தந்தை காதலில் ஜெயித்தாரென்றால் அது பெரிய விஷயம்தானே. இதிலிருந்து இரண்டு விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. காதலர்களை சேர்த்து வைப்பதும், சேர்த்தே புதைத்திருப்பதும் அந்த காலத்தில் நடந்திருக்கிறது. இதையடுத்த காலகட்டங்களில் ஊரில், காதலின் வளர்ச்சி கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் தைரியம் என்றளவிலேயே இருந்ததாகச் சொல்வார் மூர்த்தி அத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;''ஏலே... நாங்கலாம் வேலை பாத்தாதான் சோறு. என்னதான் பேண்ட், சட்டையை போட்டுட்டு போனாலும் வேலையை தாண்டி வேற சிந்தனை வராதுலா. அப்படியும் கொஞ்சம் கொஞ்சம் வரும் பாத்துக்கோ... நம்ம கெடக்குத கெடப்புக்கு இது தேவையான்னு இருந்துக்கிட வேண்டியதான்" -அத்தான்களின் காதல்கள் எழுந்து அடங்கியதை போல எல்லாருக்கும் இருந்திருக்குமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவின் காதல் பற்றி கேள்விபட்ட போது, சொந்தங்களுக்குள் நடக்கும் காதல் அதிகம் வென்றிருப்பதாக உணர முடிந்தது. பெருங்கூட்டம் கொண்ட குடும்பங்களில் நடக்கும் காதலில் ஈகோவே பிரதானமாக இருந்திருக்கிறது. சித்தப்பா பியூசி முடித்த கம்யூனிஸ்ட் பேச்சாளர். அவரது பேச்சுக்காகவே கிருஷ்ணம்மா சித்தி காதலில் விழுந்தாள் என்று சொல்வது அதிகப்படியானதல்ல. இதை அவளே சொன்னாள் என்று தெருக்காரிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர் மேடையில் பேசுகிறார் என்றால், சித்தியின் வீடிருக்கும் தெருவுக்கு குழாயை திருப்ப சொல்லுவாராம் சித்தப்பா. குழாய்களின் வழி வந்த குரலில் காதல் வளர்த்திருக்கிறார்கள். சித்தப்பாவின் வறுமையை அதிகம் செழிப்பாக்கியது சித்தியின் சிரிப்பாக மட்டும்தான் இருந்திருக்கும். சித்தியின் வயதை கொண்ட அவளது தோழியிடம், எப்போதோ ஒரு தருணத்தில், காதல் பற்றி கேட்டபோது சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 'எனக்கு அப்படிலாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லடே... நான்லாம் சங்க இலக்கியத்துல வர்றாளா தோழி... அவளை மாதிரின்னு வச்சுக்கோயேன்' என்றதும், அவள் இதை சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான காலகட்டத்தில்தான் அக்ரஹாரத்து தேவியக்காள், அம்பாசமுத்திரம் வாலிபனோடு ஓடிவிட்டாள் என்ற செய்தி ஊருக்குள் பரவி, முக்குக்கு முக்கு பேசும் பொருளாகியிருந்தது. அந்த தேவி, அம்பை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். பெரும் வசதிகொண்ட, ஏகப்பட்ட சொந்தங்களை கொண்டிருந்த தேவிக்கு அதைத்தாண்டி அந்த வாலிபனிடம் என்ன கவர்ந்திருக்கும்? ஏதோ ஒன்று. அந்த ஏதோ ஒன்றை காதல் என்றும் கொள்ளலாம். அப்போது தண்ணீர் பிடிக்கும் பைப்படியில் குடங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண்களிடம், 'பொட்ட புள்ளைல படிக்க வைக்கணுமா? அதும் அம்பாசமுத்ரத்துல போயி... இப்படித்தான் ஆவும்' என்ற பேச்சுகளை அதிகம் கேட்க முடிந்தது. சில பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஜோடியாக பஸ்-ஸ்டாண்ட்டில் வந்திறங்கியபோது எல்லோர் கண்ணும் அவர்கள் மேல் இருந்தன. முதல் குழந்தைக்குப் பிறகு அக்ரஹாரம் தேவியக்காவை ஏற்றுக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ட்யூஷன் சொல்லிக்கொடுத்த அக்காள்களின் காதல் கதைகள் எந்தவித திருப்பங்களும் இன்றி நேரிடையாக கல்யாணத்தில் முடிந்ததற்கு ஒரே ஜாதி என்பது பிரதானமாக இருந்தது. கல்லூரியில் படித்த அக்காள்கள் ஜாதி பார்த்து காதலித்திருப்பார்களோ என்னவோ? வெவ்வேறு ஊர்களில் நடந்த இவர்களின் காதலுக்கு ஊரில் எந்த சாட்சியும் இல்லாதது ஆச்சரியம்தான். எப்போதும் திண்ணையில் அமர்ந்துகொண்டு பொரணி பேசுபவர்களுக்கு இவர்களது திருமணத்துக்குப் பிறகுதான் காதலித்த கதை தெரிந்து, அதிர்ந்தார்கள். 'இவ்வளவு கமுக்கமாவா பண்ணியிருக்காவோ' என்பதாக இருந்தது பொரணி பேச்சு. இம்மாதிரியான எந்த சம்பவங்களும் இல்லையென்றால் பொரணி பேசுபவர்களின் பாடுகளும் திண்டாட்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெவ்வேறு ஜாதியினருக்கான காதல்கள் பெரும்பாலும் ஊரில் நொடிந்து சின்னா பின்னமானதை பார்த்திருக்கிறேன். இப்படியான விஷயங்களும் வெற்றிகரமாக ஓடிய சினிமாக்களும் காதல் அறிவை தந்துபோனதிலிருந்து ஊரில் பலரும் காதலிப்பதை கடமையாக கொண்டிருந்தனர். இதற்காகவே வந்துவிடுகிற திருவிழாக்களும் கொடைகளும் காதலை ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தது/ கொண்டிருக்கி றது. &lt;br /&gt;&lt;br /&gt;படித்து முடித்துவிட்டு டெல்லிக்கு வேலைக்குப் போன கருப்பசாமி அண்ணனி்ன் காதல் பற்றி, மேலத்தெரு முழுவதும் போஸ்டர் ஒட்டாத குறையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இனும எங்கடா அவன் ஊருக்கு வரப்போறான்? அத்தை மவ, மாவன் மவளை அவன் எப்படி கெட்டுவான்? இவளுவோ என்னத்தை படிச்சிருக்காவோ?' என்கிற பேச்சுகள் ஒவ்வொரு வாசல் படியிலும் நடந்துகொண்டிருந்தன. டெல்லியில் இருந்து வருகிற அண்ணனின் கடிதங்களில் காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ எதுவும் இருக்காது. ஆனால், அவனுடன் வேலைக்கு சென்றுவிட்டு பாதியில் ஊரைத்தேடி வந்துவிட்ட நல்லமுத்து சொன்ன பிறகுதான் விஷயம் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;'அது என்னமோ சேட்டு புள்ளைன்னு சொல்லுதாவோ?' என்று நல்லமுத்து சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அது என்னல ஜாதி? நம்மள விட கொறச்சலா கூடுதலா?' என்ற பெரிசுகளிடம், 'ச்சீ... அவளுவோ என்ன கலரா இருக்காவோ... கண்டிப்பா நம்மள விட ஒசத்தியாதான் இருக்கும்' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அவன் படிச்ச பய.. அவனுக்கு தெரியாத வெவரமாடா?' என்று பேச்சு தொடர்ந்துகொண்டிருந்தது. யாரோ, எங்கோ யாரையோ காதலித்துக்கொண்டிருக்க, இவர்கள் ஒரு கதையை இங்கு உருவாக்கியிருந்தார்கள். முதல் குழந்தை பிறந்த மூன்று வருடத்துக்கு பிறகு குலதெய்வ கோயிலில் மொட்டை அடிக்க, குடும்பத்தை கூட்டி வந்திருந்தான் கருப்பசாமி அண்ணன். &lt;br /&gt;&lt;br /&gt;அவனது அம்மா, 'ஏட்டி ஆச்சிய பாரு' என்று பெண்குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தை புதிய முகத்தைப் பார்த்து மிரண்டு கொண்டிருந்தது. கருப்பசாமி அண்ணனின் மனைவியானவளுக்கு மொழி பிரச்னை. மருமகளும் மாமியாரும் செய்கையால் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு கருப்பசாமியோடு ஊரே சிரித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒம் மருமவ என்ன சொல்லுதா?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆங்... என்னமோ கியா கியாங்கா... மாட்டை பத்துத மாதிரி' என்றாள் அவனது அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ வேலைக்குப் போன செவனு, நாசிக்கிலிருந்து ஒரு பெண்ணை காதலித்து அங்கேயே திருமணம் முடித்துக்கொண்டு வந்திருந்தார். அந்த காதல் ஆச்சரியமாக இருந்தது. அவளுடன் நான்கு வயது மகனும் வந்திருந்தான். 'காதலிச்ச பிறகுதான் அவ வீட்டுக்காரன் செத்துபோயிட்டான்னு தெரிஞ்சது... ஒத்த புள்ளைய வச்சுகிட்டு என்ன செய்வா? அதான் தாலி கட்டி கூட்டியாந்துட்டேன்..." என்றார் செவனு. &lt;br /&gt;&lt;br /&gt;இவளுக்கும் மொழி பிரச்னை. இந்தப் பிரச்னையிலும் கூட மாமியாருக்கும் மருமகளுக்குமான சண்டை தொடர்ந்ததுதான் ஆச்சரியம். &lt;br /&gt;&lt;br /&gt;'எழவெடுத்தவா... என்னைக்குன்னு வந்தாளோ... அன்னைலயிருந்து போச்சு, நிம்மதி'&lt;br /&gt;&lt;br /&gt;'பாகல் ஹோகயி கியா... ஹைசா மத் பாத் கர்னா... ஆப் கி பேட்டாஸே பாத் கரோ... முஜே நஹி '&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான காதல்களின் வழி எனக்கும் வந்து தொலைத்தது ஒரு தலையான காதல். முதல் மூன்று நாட்கள் நெஞ்சுக்குள் கிளர்ந்த அந்த காதலை விட்டுவிட்டு, வெறொருத்தியுடன் இணைத்து பேசப்பட்டதிலிருந்து நொறுங்கி போனேன் நான். முளைக்கும் முன்பே கருகிவிட்ட அந்த காதலுக்கு கண்டிப்பாக 'கண்' இருந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-9102580833552839768?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/9102580833552839768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=9102580833552839768' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/9102580833552839768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/9102580833552839768'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/10/blog-post_31.html' title='காதலுக்கு கண் இருந்தது'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7042137085727759291</id><published>2011-10-29T01:41:00.000-07:00</published><updated>2011-10-29T06:20:42.243-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தகடுகள் புதைந்த நிலம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்யாணம் முடித்துவிட்டு திரும்பிய சின்ன மாமாவையும் அத்தையையும் அக்ரகார புளியமரம் அருகிலிருந்து வில் வண்டியில் கூட்டி வந்துகொண்டிருந்தார்கள். கோபால் மாமாதான் வண்டி ஓட்டினார். அம்மா, சித்திகள், சித்தப்பா என்று யாருமே வரவில்லை. ஆச்சி, வாயில் துணியை வைத்துக்கொண்டு பெரியாச்சி வீட்டில் நின்றுகொண்டிருந்தாள். கல்யாணம் முடிந்த கையோடு அந்த வழியாகவே பெரிய மாமாவும் பெரிய அத்தையும் திருநெல்வேலிக்கு போயிருப்பார்களோ என்னவோ. இங்கு வரவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அத்தைக்கு சொந்தக்காரர்களான அதிக உயரம் கொண்ட பெண்களும் சில முரட்டு மீசை ஆண்களும் வில் வண்டிக்குப் பின் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களது நடையில் பெருமிதம் தெரிந்தது. வண்டி மெதுமெதுவாக புழுதி படிந்த செம்மண் சாலையில் நகர்ந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஏ தாயீ, உன் தம்பி வந்தாச்சாமே..?' என்று அம்மாவிடம் மேல விட்டு பாலா ஆச்சி சொன்ன பிறகுதான் எனக்கும் தெரிந்தது. அக்கா, வீட்டுக்குள் இருந்தாள். அம்மா, 'ஆமா... நல்லாயிருந்தா சரிதான்... யாரு பசிக்கு யாரு கஞ்சி ஊத்த?' என்று சொல்லிவிட்டு மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கப் போய்விட்டாள். வீட்டு வேலியின் வடக்கு ஓரத்தில் வளர்ந்திருக்கிற வாதமடக்கி மர மூட்டில் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்த செல்லையாண்ணன் புது வேட்டி அணிந்து கொண்டு மாமாவை பார்க்க ஓடினான். அம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரியாமல் பின்பக்க கருவை மூடு வழியாக டவுசரைப் பிடித்துக்கொண்டு நானும் ஓடினேன். அப்போதெல்லாம் சின்ன மாமா, என்னிடம் பேசுவதில்லை. அக்காவிடமும்தான். அம்மாவுடனான சண்டையில் நாங்களும் பலியாகி இருந்தோம். ஆனால், புதிதாக வர இருக்கிற அத்தையை பார்க்கும் ஆவலில் புளியமரம் வந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது. 'எய்யா கணேசா... கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?' என்று மாமாவிடம் கேட்டுக்கொண்டே அத்தையை நோட்டமிடும் பெண்கள், 'யம்மா, கணேசன் பொண்டாட்டி.. வா... பார்க்கதான் ஊரு புழுதிகாடு. பாசக்காரங்க ஊரு' என்று சொல்லிவிட்டு சிரித்தார்கள். வண்டியின் உள்ளிருந்து அத்தையும் சிரித்தாள். ஓரமாக நடந்துவந்துகொண்டிருந்தவன், அத்தையை பார்த்தேன். மூக்குத்தி மினுமினுத்தது. கழுத்தில் பெரும் நகைகள். அடிக்கடி மாமாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிற முகம். ஒரு பக்கமாக கிட்னம்மா சித்தியின் சாயல் தெரிந்தது. பட்டுப்புடவையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தாள். இதுவரை கவனிக்காத மாமா, இப்போது என்னைப் பார்த்துவிட்டு, அத்தையிடம் ஏதோ சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்குள்ளிருந்து தலையை நீட்டிப் பார்த்தாள் அத்தை. என்னுடன் நான்கைந்துபேர் நின்றுகொண்டிருந்தார்கள். திரும்பவும், மாமா ,கைகாட்டி ஏதோ சொன்னார். இப்போது அத்தை சிரித்தாள். 'இங்க வா" என்பது போல கையை ஆட்டினாள். நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம். யாரை அழைக்கிறாள் என்பது தெரியவில்லை. அப்படியே என்னை அழைபபதாக இருந்தாலும் பேசாத மாமாவின் பொண்டாட்டி அருகில் ஏன் போக வேண்டும் எனபதாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி நகர்ந்துகொண்டிருக்க தண்ணிக்குப் போகும் பெண்கள் திருவிழா காட்சிப் போல, 'எய்யா வண்டியை நிறுத்து... கணேசன் பொண்டாட்டியை பார்த்துக்கிடுதேன்' என்று உரிமையோடு நிறுத்தி பார்த்து விட்டுப் போனார்கள். அத்தைக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்கும். நகரத்தில் வாழ்ந்திருந்த அவளுக்கு இது புதிதாக இருந்திருக்கலாம். வெட்கம் பிடுங்கி தின்றிருக்கும். 'நான் என்ன பொம்மையா?' என்று செல்லமாக மாமாவிடம் கோபப்பட்டிருக்கலாம். 'கொஞ்சம் சீக்கிரமா வண்டியை அடிக்க சொல்லுங்க?' என்று மனதுக்குள் சொல்லியிருக்கலாம். பார்த்துவிட்டுப் போன பெண்கள், என்ன கமெண்ட் அடித்திருப்பார்கள்? என்பதும் அத்தையின் மனதில் மல்லுக்கட்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னும் கொஞ்சம் கலரா இருந்திருக்கலாம் என்றோ? 'ரெண்டு மூக்கு குத்தியிருந்தா எடுப்பா இருந்திருக்கும்? என்றோ...காது பக்கத்துல ரெண்டு முடியை இழுத்துவிட்டு ஸ்டைல் காட்டியிருக்கலாம் என்றோ அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் யார் நினைத்தும் எதுவும் ஆகப்போவதில்லை. எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தமயந்தி டீச்சர் வீட்டுக்கு பின்னால் நானும் சிலரும் நின்றுகொண்டோம். வில் வண்டி தூர தூரமாக சென்றுகொண்டிருந்தது. வீட்டுக்கு போக நினைக்கையில் எனக்கு அழுகை வர ஆரம்பித்தது. ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை. புள்ளியாக போகும் வண்டியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் கண்ணீரோடு மாமாவின் பட்டு வேட்டியும் சட்டையும் தெரிந்துகொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு எதிரிலிருக்கிற பெரிய வீட்டில்தான் மாமா தங்குவார். அந்த வீட்டின் மச்சி மாமாவின் அறை எனப்பட்டது. அவரது அறை என்று சொல்லப்பட்டாலும் பகல் நேரத்தில் மிளகாய், நெல், கத்தரி வத்தல், சீனிஅவரைக்காய் உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் காய வைக்கப்பட்டிருக்கும். &lt;br /&gt;அப்பா, மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத்தில் வாங்கி கொடுத்த டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோவை அம்மாவை விட மாமாதான் அதிகம் பாதுகாத்து வந்தார். பழுப்பு நிறத்தில் முன்பக்கம் மட்டும் பளபளக்கிற &lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;யுடன் கூடிய அந்த ரேடியோவை பார்க்கிற யாரும், 'இதை எங்க வாங்குனியோ?' என்று கேட்காமல் இருந்ததில்லை. அப்படியான அழகை கொண்ட ரேடியோவை அக்கு அக்காக கழற்றி ரிப்பேர் பார்க்கும் தொழிலையும் மாமா கற்றிருந்தார். இரவு நேரங்களில் இலங்கை வானொலியின் பாடல், காற்றின் அலைகளுக்கு ஏறி இறங்கி கேட்டுக்கொண்டிருக்க, மாமாதான் அதை தெளிவாக கேட்கும் படி செய்து கொடுத்தார். பக்கத்து வீட்டு வானொலிகள் திக்கித்திணறி பாடிக்கொண்டிருக்கையில் இந்த ரேடியோ மட்டும் எப்படி இவ்வளவு தெளிவாக பாடுகிறது என்பது பற்றிய வியப்பு, பக்கத்து வீட்டு பட்சி தாத்தாவுக்கும் பாலா ஆச்சிக்கும் உண்டு.&lt;br /&gt;உறை&lt;br /&gt;&lt;br /&gt;மாமா பற்றிய நினைவுகளை இப்படியாக கொண்ட அந்த வீடு, அவர் வராமல் இருந்த பிறகு வெறுமையானது. ரோட்டில் என்னைப் பார்த்தால் கூட மாமா பேசுவதில்லை. பிறகு ஏதோ ஒரு விஷேசத்துக்கு அழைப்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, நெல் அவித்துக் கொண்டிருந்தாள் அம்மா. அதன் வாசம், வீடு முழுவதும் வெந்து வியாபித்துக்கொண்டிருந்தது. வேகமாக ஓடி மாமாவின் அருகில் உட்கார்ந்தேன். 'ஏன் அத்தையை கூட்டிட்டு வரலை' என்றாள் அக்கா. 'ஏல சாப்ட்டு போ' என்றாள் அம்மா. கோபம் திடீரென்று பிறந்து திடீரென எரிக்கும் தீ. பாசம் உயிருக்குள் உறங்கும் அக்னி. &lt;br /&gt;&lt;br /&gt;மாமா கிளம்பும்போது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினார். 'ஏல என்ன வேல பார்க்க? அவனுக்கு எதுக்கு துட்டு?' என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சிரித்துக் கொண்டு வாங்கிவிட்டேன். 'வாரேன்' என்று கிளம்புபோதுதான் நிகழ்ந்தது அது. வீட்டின் ஓட்டிலிருந்து கற்களாக விழத் தொடங்கின. பெரும் பெரும் கற்கள். டொப் டொப் என்று வாசல் முழுதுவம் அதற்குள் நிரம்பியிருந்தது. எல்லாம் சரளைக் கற்கள். பின்னால் இருந்து யாரும் எறிகிறார்களா என்று நினைத்து, 'யார்ல அது' என மாமா வேகமாக பின் பக்கம் ஓடி பார்த்தார். யாருமில்லை. அக்காவும் நானும் பயத்தில் நின்றிருக்க, அம்மாவும் வெளியில் போய் பார்த்துவிட்டு வந்தாள். கற்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. வீட்டின் மேற்பகுதியில் இருந்து தானாக கற்கள் விழும் அதியசம் ஆச்சர்யமாக இருந்தது. வீட்டின் ஓடுகள் சில உடைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துவீட்டு பாலா ஆச்சியும் எதிர்வீட்டு எஞ்கம்மக்காவும் வந்தார்கள். வீட்டில் வேலி தாண்டி செல்கிறவர்களும் என்ன ஏதென்று வந்தார்கள். மாமா ஆச்சரியமாக பார்த்தார். எப்படி கல் வந்து விழுது? அம்மா ஓரமாக உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;'ஏ சீதை அழாத..., இதுக்கு நீ அழுது என்னாவ போவுது?' என்றார்கள் வந்திருந்தவர்கள். நான் மாமாவை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக பார்த்துவிட்டு போய்விட்டார்கள் எல்லாரும். மாமா, 'அதை விடு... என்னன்னு பாத்துக்கிடுவோம்' என்று அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பிறகு தினமும் ஒரு முறை இப்படி கற்குவியல் வீட்டின் மேலிருந்து விழுவது தொடர்ந்தது. அம்மா அவற்றை பெருக்கி ஓரமாக ஒதுக்கியிருந்தாள். மாலை நேரத்தில் கூடை கூடையாக கற்களை அள்ளி, நானும் அக்காவும் வீட்டின் பின்புறம் போட்டுவிட்டு வருவோம். பத்து பதினைந்து நாளுக்குப் பிறகு இது பழக்கமாகியிருந்த நிலையில் மேலத்தெரு மோர் பாட்டி சொன்னதன் பேரில் அம்மா, குறி கேட்க போனாள் முக்கூடலுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;'இங்கரு... சொன்னதெல்லாம் நடக்கு தாயீ... என் நடுவுள்ளானுக்கு என்ன மருந்து கொடுத்தும் கேக்கலைலா. அங்க போயி திருநாறு போட்டபெறவுதான் கேட்டுது' என்ற அவளின் நம்பிக்கையில் அம்மாவும் சரிந்தாள். முக்கூடல் குறிகாரர், 'அது குரலி வேலைம்மா... வாசல்ல படிக்கு வெளிய தோண்டி பாரு... செப்பு தகடு இருக்கும்.' என்று சொன்ன பிறகு, 'இதை யாரு வச்சிருப்பா? என்கிற கவலை அதிகமானது அம்மாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பர் மகன் நாராயணனை அழைத்து நள்ளிரவு புஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டதட்ட ஹோமம் மாதிரி நடந்த பூஜைக்குப் பிறகு வீட்டு வாசல் தோண்டப்பட்டு, எடுக்கப்பட்டது சதுர வடிவ செப்புத்தகடு. அம்மாவுக்கு ஆச்சரியம். கண்களிலிருந்து திடீரென கண்ணீர் முட்டி வெளிவந்தது. 'அட பாவிகளா?' என்று மூக்கின் மேல் விரல் வைத்தாள். அந்த செப்புத்தகடில் ஏதேதோ எழுதப்பட்டிருந்தது. அம்மாவும், மாமாவும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் தகடு புதைந்த நிலத்தை, இன்னும் ஏதாவது இருக்குமோ என்று. ஆச்சி, தூணுக்கு பின்பக்கம் நின்று கொண்டிருந்தாள். நானும் அக்காவும் அருகில் செல்ல தடை. நாராயண கம்பர், அதை எடுத்து அப்படியே ஒரு மஞ்சள் துணியில் பொதிந்தார். பிறகு அம்மாவுக்கும் மாமாவுக்கு திருநீறு பூசிவிட்டு, 'இன்னைல இருந்து ஒண்ணும் இருக்காது' என்று சென்றுவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் புதைக்கப்பட்ட சாதாரண செப்புத்தகடு எப்படி வீட்டின் மேலிருந்து கல்லெறியும்? என்கிற கேள்வியோடு தூங்கிப்போனேன் நான். காலையில் எழுந்தபோது வாசலில் பெரிய கோலம் போடப்பட்டிருந்தது. அதன் நடுவில் சாணிப்பிள்ளையார் அமர்ந்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக கற்கள் விழும் பதினோறு மணி வாக்கில் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு கற்கள் வரும் என்ற நினைப்பில் பார்த்தேன். கற்கள் விழவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு ஓட்டிலிருந்து சத்தமில்லாமல் உருண்டு உருண்டு வாசலில் விழுந்தது மஞ்சள் நிற பூவரசம் பூ.&lt;br /&gt;&lt;br /&gt;இனி பூக்களாக விழுமோ தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-7042137085727759291?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/7042137085727759291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=7042137085727759291' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7042137085727759291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7042137085727759291'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/10/blog-post_29.html' title='தகடுகள் புதைந்த நிலம்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7186705142771679586</id><published>2011-10-23T03:40:00.000-07:00</published><updated>2011-10-23T03:40:40.673-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகம்'/><title type='text'>கடவுள்களிடம் பேசுபவர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பெரும்பாலு்ம் அவரை பெரியவாய்க்கால் பாலம் அருகே இருக்கிற சிறு தோப்பில் தென்னை மரத்தினூடாகப் பார்க்கலாம். காவிநிற கோவணத்தைக் கட்டியபடி வியர்க்க விறுவிறுக்க மண்வெட்டிக்கொண்டோ, ஈராய்ங்கம் உள்ளிட்ட செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டோ இருப்பார். நீட்டமாக வளர்ந்திருக்கிற தலைமுடி, சடை சடையாக திரண்டிருக்கும். வளர்ந்து சுருண்டு கட்டியான முடிகளில் இரண்டு சடை, சிறு மாலை போல பின் பக்கம் தொங்கிக்கொண்டிருக்கும். நெற்றியில் எப்போதும் நாராயண சாமியின் முத்திரி. வயிற்றில் தொப்புளில் இருந்து நேர் மேலாக கழுத்துவரை முத்திரியால் ஒரு கோடு. இதே போல இரண்டு கைகளில். அது சாதாரண திருநீறு என்றால் வெளிவருகிற வியர்வையில் காணாமல் போயிருக்கும். ஆனால், வெண்பழுப்பு நிற முத்திரி அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிறு தோப்பு, ராஜம்மாள் தாங்கி அம்மன் கோயிலுக்கு வலப்புறம் இருந்தது. எதிரில் பெரிய வாய்க்கால் என்று சொல்லப்படுகிற சின்ன வாய்க்கால். இதன் படித்துறையில் பெண்கள் மட்டுமே குளிக்கும் துணிதுவைக்கும் பணியை செய்துகொண்டிருந்தனர். ஆண்களுக்கு அதன் மேல் பக்கம். கொஞ்சம் தள்ளி சின்னதாக நான்கைந்து பாறாங்கற்களைப் போட்டு குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு குளிக்க வருகிற காலை நேரத்தில்தான் அவரை எப்போதும் பார்ப்பது. இதைத் தவிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸுக்குப் பின் பக்கம் இருக்கிற தங்கம்மன் கோயில் தெரு மளிகை கடை அருகில் இரவு நேரங்களில் நின்று கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்து திருகிய மீசையும் முடிகள் படர்ந்த தேகமுமாக அவர் நடந்துவரும்போது ஒரு கம்பீரம் இருக்கும். கைகளை பின்பக்கம் கட்டிக்கொண்டு நெஞ்சை விரித்து விரித்து அவர் வேகமாக நடந்துவருகிற தோரணையில் பாரதியாரை நான் பார்ப்பேன். ஏன் பாரதியார் தெரிகிறார் என்பதெல்லாம் எனக்குப் புரியாதது. சல்லிசாக மேனி தெரிகிற துண்டைபோட்டுக்கொண்டுதான் நடப்பார். ஏதாவது ஒரு வளைவில் திரும்பும்போது நின்று பின்பக்கம் திரும்பி எங்காவது தெரிகிற கோயிலுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொடர்வார். கொஞ்சம் தூரத்திலோ, பின்பக்கமோ யாராவது வருகிறார்கள் என்றால் கொஞ்சம் ஓரமாக நின்று அவர்களைப் பார்ப்பார். அவர்கள் சென்ற பின்புதான் இவர் நடக்கத் தொடங்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோப்பு வேலை இல்லாத நாட்களில், அம்மன் கோயில் அருகில் இருக்கிற வேப்ப மர மூட்டில் அமர்ந்துகொண்டு போகிற வருகிறவர்களுக்கு-முன்பின் தெரியாதவர்களானாலும் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லுவார். இந்த வணக்கம் உங்களிடமிருந்து பதில் வணக்கத்தை எதிர்பார்த்து அல்ல. அதுவொரு சுபாவம். எப்படி எங்கிருந்து வந்தது என்பதும் தெரியாது. அவரது பெயர் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள கிட்டத்தட்ட உங்களைப் போல் எனக்கும் ஆசைதான். யாரிடம் விசாரித்தாலும் சடையன் என்றுதான் சொன்னார்கள். இது சடைமுடைகள் கொண்டவர் என்ற காரணத்தால் வந்த பெயர். ஆனால், அவரது நிஜப் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தப் பெயராக இருக்குமோ, அந்தப் பெயராக இருக்குமோ என்று நானே பல பெயர்களை அவருக்கு வைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால், சடையனைத் தாண்டி வேறு எந்த பெயரும் அவருக்குப் பொருத்தமானதாகவும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலையில், அம்மனுக்கு பூசை நடக்கும். இந்தப் பூசைக்காக, திருமணமாகாத அக்காள்கள் சாயங்காலங்களில் கோயிலுக்கு வருவார்கள். அந்த அக்காள்களுக்காக சில அண்ணன்களும். சரியாக அவர்களுக்குப் பின்னால்தான் இவர்கள் நடப்பார்கள். இது அக்காள்களுக்கும் தெரியும். ஒரு வேளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;தீபாராதனை முடிந்ததுமே அண்ணன்கள் வெளியில் வந்துவிடுவார்கள். அவர்களது நோக்கம் சாமி கும்பிடுவதல்ல என்பது குத்துமதிப்பாக அங்கங்கே தெரிந்ததுதான். இப்படி அண்ணன்களும் அக்காள்களும் வெளியே வந்தபிறகு, கோயில் அமைதியாக இருக்கும். அப்போதுதான், சடையனின் சத்தம் கேட்டு சாமி விக்ரகத்தைப் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;'என்ன நீ? என்னைய கண்டுக்கிட மாட்டே... அப்படித்தானே... நானும் பாத்துக்கிடுதேன், எவ்வளவு நாள்தான் இப்படி பண்ணுதேன்னு... நேத்து நான் என்ன சொன்னேன்? இன்னைக்கு நீ இப்படி சொல்லுதே...ம்ம்' என்று சிலை பார்த்து பேசிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தார். கோயிலுக்குள் எதிரொலித்து திரும்பி என் காதுக்குள் வந்தது. அப்போதுதான் முதன்முதலில் கடவுளிடம் பேசுபவரைப் பார்த்தேன். இவருக்கு மட்டும் எப்படி கடவுளின் மொழி தெரிந்திருக்கிறது. இல்லையே, இவர் பேசியது தமிழில்தானே... கடவுளின் மொழி தமிழா? இல்லை அம்மன் தமிழ்க் கடவுள். அதனால் தமிழ். மனதுக்குள்ளேயே கேள்வியும் பதிலும் வந்து வந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;சாமிகளிடம் பேசுபவர் சாமானியனாக இருக்க முடியுமா? முடியாது என்று மறுநாளில் இருந்து அவர் வணக்கம் வைத்தால் பதிலுக்கு வணக்கம் வைக்க ஆரம்பித்தேன். என்னுடன் வரும் நண்பர்கள், 'ஏல என்னாச்சு.. இவனுக்கெல்லாம் வணக்கம் போடுதே" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 'அவரு வயசென்ன, நம்ம வயசென்ன? பதிலுக்கு ஒரு வணக்கத்துல என்ன குறைஞ்சு போயிர போவுது' என்பேன். வணக்கங்கள் சில வாசல்களைத் திறக்கவும் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. எதிர்வயல்காரர்கள், அவரது உறவினர்கள் இப்படி யாராவது வந்தால், வார்த்தைகளை எண்ணிப் பேசுவதைப் போலதான் பேச்சு. 'ஆங்... ஆறு வார்த்தை முடிஞ்சுட்டு. இனி பேச மாட்டேன்' என்பது போல மேலே பார்ப்பார். அவருக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. அவர் பற்றி வேறு யாரிடம் கேட்டாலும் 'அவனைக் கேட்டு என்ன பண்ணப் போற?' என்பதாகவே இருந்தது. இப்படிச் சொன்னதாலோ என்னவோ எனக்கு அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அம்மன் கோயில் வாய்க்காலுக்கு குளிக்க வரும்போது என்றாவது அவர் தென்படாவிட்டால் மனம் அவரைத் தேட ஆரம்பித்தது. வலப்பக்கம் இருக்கிற தோப்பில் கோயிலின் பின் பக்கம் இருக்கிற ஓடையில், எதிர் வரப்பில் எங்காவது... &lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் எங்கு கோயில் கொடை என்றாலும் வந்துவிடுவார் சடையன். எல்லா சாமிகளுடனும் பேசும் தன்மை கொண்டவர் அவர். பூடத்தின் முன் அமர்ந்தோ, நின்று கொண்டோ, அவர் பேசுவார். பேச்சினூடாக வருகிற சிரிப்புதான் பிரதானம. அந்த சிரிப்பில் ஏளனம், வீராப்பு, தெனாவட்டு, எல்லாம் இருக்கும். 'போய்யா போ... நீயெல்லாம்...' என்கிற திமிர் இருக்கும். இவ்வளவு தைரியமாக, கோபமாக, ஏளனமாக சாமியுடன் பேசுகிற ஒருவர், ஏன் சக மனிதர்களிடம் அதிகம் பேசுவதில்லை? சாமியுடனான இப்படியான உரையாடல்களில் சாமி என்னப் பதில் சொல்லியிருப்பார் என்றும் நினைப்பேன். மனிதர்களின் சத்தம் போல சாமிகளின் சத்தங்கள் கேட்பதல்ல. அது உணர்வது. எப்படி? இதோ சடையன் வழியாக. சடையன் சாமியின் வடிவமா? யார் கண்டது? &lt;br /&gt;&lt;br /&gt;கண்டதும் காணாததும்தான் வாழ்க்கை. &lt;br /&gt;&lt;br /&gt;மேட்டுத்தெருவில் இருக்கிற நாராயணசாமி கோயிலில் வெள்ளி, ஞாயிறுகளில் குறி சொல்லுவார் சாமியார். வெளியூர்களில் இருந்தெல்லாம் குறி கேட்க வந்திருப்பார்கள். இரவு ஒன்பது பத்து மணிக்கு மேல்தான் சாமி குறி சொல்ல ஆரம்பிப்பார். அந்த கோயிலின் நடுவில் நாராயணசாமியும், அதன் வலது பக்கம் ஆஞ்சநேயர் சாமியும். குறி சொல்பவர் செந்நிற வேட்டியுடன் நாராயணசாமி வாசலின் உள்ளே உட்கார்ந்துகொள்வார் கண்களை மூடி. &lt;br /&gt;&lt;br /&gt;''யாரோ குழந்தை இல்லைன்னு குறி கேட்க வந்திருக்காவுளோ?" என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா' என்று குரல் வரும். 'நீங்க கீழ திசையில இருந்து வாரேளா?' என்று ஆரம்பித்து ஒவ்வொரு சம்பவமாக கண்களை மூடிக்கொண்டு சொல்லுவார். கேட்பவர்களுக்கு எல்லாம் சரியென்றே தோன்றும். அம்மாவுடன் இந்த கோயிலுக்குச் சென்றபோது ஆஞ்சநேயரின் அருகில் சடையன் அமர்ந்திருந்தார். வருகிறவர்களுக்கு முத்திரி கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை அவர் செய்துகொண்டிருந்தார். திடீரென்று சாமியுடன் பேசிக்கொண்டே, பல்லால் தேங்காயை வேகவேகமாக உரித்து, அவரது மண்டையிலேயே அடித்து உடைத்து தேங்காய் தண்ணி தலையிலிருந்து சிந்த, அப்படியே சாமியார் முன்னால் வைத்தபோது எனக்கு திக்கென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;நான்கைந்து பேர்களுக்கு குறி சொல்லிவிட்டு, எந்த பக்தரோ கொடுத்த ஒரு வாழைத்தாரைக் காட்டி, உரிச்சு ஒரு சீப் கொடுங்க நாராயணனுக்கு என்றார் சாமியார். சடையன் அந்த தாரில் துண்டு துண்டாக இருந்த பழங்களில் ஒரு வரிசையின் கீழே கைவைத்து மேலே இழுக்க டொப்பென்று தொளியை உரித்துக்கொண்டு வந்தது பழ சீப். கொடுத்துவிட்டு, இன்னொரு சீப்பை பிய்த்து தொளியோடு தின்றுகொண்டு சடையன் பார்க்கும் பார்வையில் ஆஞ்சநேயர் தெரிந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு சாமியிடம் கேட்க எதுவும் இல்லை. புதிதாக வாங்கியிருந்த பசுமாட்டின் பாலை கோயிலுக்கு கொடுத்துவிட்டு திரும்பினோம். போகும்போது கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அந்தாளு யாருழா?'&lt;br /&gt;&lt;br /&gt;'அவரும் சாமிக்கொண்டாடிதான்... எப்பவும் சாமியவே நினைச்சுட்டிருக்கவரு' என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;'பொண்டாட்டி பிள்ளைலு இல்லையோ?'&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா என்னைத் திரும்பிப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏண்டே இந்த கதையெல்லாம் உனக்கு?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல, சாமியவே நினைச்சுட்டிருந்தா, பொண்டாட்டி பிள்ளைலுவோள யாரு பார்ப்பா?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஒனக்கு ரொம்ப முக்கியம்ல... வாய பொத்திட்டு வா?' என்றாள். அதன் பிறகு அவளிடம் யார் பற்றியும் கேட்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சடையனிடமே அவர் பற்றி கேட்டுவிடலாம் என முடிவு செய்தேன். ஒரு சாயங்காலம், அம்மன் கோயிலோடு ஒட்டிய அறை ஒன்றில் சப்பரத்துக்கான சாமான்கள் வைக்கப்பட்டிருந்த வெட்டவெளி அறையில் நின்றுகொண்டிருந்தார் . குளித்துவிட்டுப் போகும் யாரோ ஒரு பெண்ணை, 'சீக்கிரமா போங்க... மழை வாரதாப்ல இருக்கு' என்று வான் நோக்கிப் பார்த்தவாறே சொல்லிக்கொண்டிருந்தார். வானில், மேகம் கருநிற சாம்பலாகியிருந்தது. வான் நோக்கியதிலிருந்து சடையனின் பார்வை வேறுபக்கம் திரும்பவில்லை. தலை மட்டும் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தது. துண்டை எடுத்து இப்போது இடுப்பில் கட்டிக்கொண்டு சிரிக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்பவும் அதையே சொல்லாதீரும்... நான் நம்ப மாட்டேன். உன்னை பார்த்தாலே போதும். வெறன்ன கேட்க போறேன் நான்? அல்லது என்னத்தை எனக்கு தந்துர முடியும் உன்னால?' என்றவாறு அவரது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரையேப் பார்த்துக்கொண்டிருந்தேன். நேராக அவர் முன் நின்றேன். என்னைப் பார்க்கவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு கண்ணை மூடி திறந்து என்னைப் பார்த்தார். கைகளை கூப்பி வணக்கம் வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;'யார்ட்ட பேசிட்டிருந்தயோ? என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'நம்ம ஐயாட்டதான். வேறு யாரு வந்து எங்கிட்ட பேசப்போறா?'- என்ற சடையன், பிறகு நடக்கத் தொடங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த 'ஐயா', கடவுளா என்பது தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-7186705142771679586?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/7186705142771679586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=7186705142771679586' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7186705142771679586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7186705142771679586'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/10/blog-post_23.html' title='கடவுள்களிடம் பேசுபவர்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-3062954652402675271</id><published>2011-10-21T06:08:00.000-07:00</published><updated>2011-10-21T06:08:41.382-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>கொடைகால குறிப்புகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற பீடங்களை விட, இவரது பீடம் வான்நோக்கிய உயரம் கொண்டது என்பதால், வளர்ந்திருந்தார் என்ற வார்த்தை உண்மையே. கோயிலில் இவருக்கான முக்கியத்துவம் கருதி பீடம் உயரமானது என்றாலும் வான்நோக்கலுக்கான காரணம் வேறாகவும் சொல்லப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வில்லிசைப்புலவர் கல்லிடைக்குறிச்சி பப்பு வார்த்தையில் சொல்வதென்றால், ‘‘எம்பெருமான் மந்திரமூர்த்தி, மேற்கு மலைத்தொடரில் கடனாநதி அணைக்கு மேலே கோலோச்சிக் கொண்டிருக்கிற கோரக்கநாதரை, தினமும் பார்க்க வேண்டும் என்றும் எல்லோரையும் விட உயரமான பூடம் (பீடம்) இருந்தால்தான் என்னால் தரிசிக்க முடியும் என்று கண்ணன் குடும்பத்து மூத்தவரின் கனவில் சொன்னதன் பேரில் உயரமான பூடம் படைக்கப்பட்டது...''இப்படி இழுத்துப் பாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உயரமான பீடம் உருவாக்கப் படுவதற்கு முன், சின்ன பீடத்தில் அருள்பாலித்து வந்த மந்திரமூர்த்தி, இப்போதும் மற்ற பூடங்களுடன் அப்படியே இருக்கிறார். அந்த பீடத்திலிருந்து மண் எடுத்து மெகா சைஸ் மந்திரமூர்த்தியை உருவாக்கியிருந்தார்கள். இந்த கோயிலின் ஹெட் மந்திரமூர்த்தி சாமி என்பதால் அவருக்கு ஆடுபவர்கள் பெரிய சாமிகொண்டாடி ஆனார்கள். மேற்கு நோக்கி இருக்கும் மந்திரமூர்த்திக்கு எதிரே பிரம்மராட்சதை, சிவனனைந்த பெருமாள், சுடலை ஆகியோரின் பீடங்கள் இருந்தன. இடபக்கம் சங்கிலி பூதத்தார், வலப்பக்கம் பலவேசக்காரன், மற்றும் தளவாய் மாடசாமி, பட்றையன், மாடன் போன்ற குற்றேவல் சாமிகளும் அரிவாள் தாங்கி, உள்ளூர் மக்களின் நிம்மதிக்கு அருள்வழங்கி வந்தனர். ஒவ்வொரு சாமிக்கும் ஆடுபவர்கள், இந்த சாமி, இன்னாரின் குடும்ப சாமி என்பதாக கொள்ளப்பட்டு கொடையின் போது ஆட கடமைப்பட்டிருந்தார்கள். இவர்களின்றி திடீரென அருள் வந்து ஆடுகிற அசலூர் உறவுக்காரர்களும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ராமர் கோயில் அடுத்து, புதிதாகக் கட்டப்பட்டிருந்த சங்காபீஸில் (சங்க அலுவலகம்) வெளியூரில் வேலைப்பார்க்கிற பத்தமடையாள் மகன் தவிர, மொத்த வரிகாரர்களும் கூடியிருந்தார்கள். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிற சூச்சமடையான், சுவரில் முதுகை சாய்த்து, மூக்குப் பொடியை மூக்கினுள் திணித்துவிட்டு, ‘எல்லாரும் வந்தாச்சாடே...' என்றார் ஒரு தும்மலை போட்டுவிட்டு. அது தெறித்து, பக்கத்தில் இருந்த பச்சைமுத்துவின் கண்ணில் விழுந்தது. ‘உங்கிட்ட வந்து உக்காந்தேம் பாரு' என்று எழுந்து, தள்ளிப்போய் உட்கார்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வந்தாச்சா... எல்லாரும்...' திரும்பவும் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இங்கருங்க. இத்தனை மணிக்கு சங்காசுக்கு வந்திருங்கன்னு தாக்கல் சொல்லியாச்சு... வராதோளப் பத்தி நமக்கென்ன? இருக்கவோள வச்சு பேசிக்கிட வேண்டியதானே’ என்றான் கொத்தனார் குட்டி. அவனையொத்த இளவட்டங்கள், குட்டியின் பேச்சை ஆமோதித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;‘சரிதான்’ என்ற தலைவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, எல்லாரையும் பார்த்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் தூங்கிக்கொண்டும் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பேச்சையும் தாண்டி குறட்டை சத்தமும் மெதுவாக ஏறி இறங்கி கொண்டிருந்தது. முகத்தை கொஞ்சம் தூக்கி எட்டிப்பார்த்தார். தூங்கிக் கொண்டிருந்தது உப்பிலி என்று தெரிந்தது. இவருக்கு தங்கச்சி மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அங்க தூங்குதவன எழுப்புங்கல... எங்க வந்து படுத்திருக்காம்..?'&lt;br /&gt;&lt;br /&gt;படுத்திருந்த உப்பிலியை, உட்கார்ந்துகொண்டே வலது காலால் மிதித்தான் குட்டை. அதைக் கண்டுகொள்ளாமல், திரும்பி படுத்தான் உப்பிலி.&lt;br /&gt;&lt;br /&gt;‘அவன் தூங்கிட்டு போறாம். பகல் பூரா கெணறு வெட்டிட்டு வந்திருக்காம். அசதியாயிருக்கும். அவன எழுப்பி என்ன நடக்க போவுது?' என்றான் மாரி.&lt;br /&gt;&lt;br /&gt;‘சரி, விஷயம் இதான்டே. இந்த வருஷ கொடைக்கு எவ்வளவு வரிங்கதை பேசணும்... போன கொடைக்கு வச்சதையே வச்சிக்கிடலாமா? இன்னைக்கு இருக்குத வெலதாச்சிக்கு அது பத்துமான்னும் சொல்லுங்க...' என்ற சூச்சமடையான், வெள்ளை மீசையை தடவ ஆரம்பித்தார். மூக்குப்பொடிபட்டு உதட்டு மேலே மட்டும் வெள்ளை மீசை, காப்பி கலருக்கு பட்டை அடித்தாற்போல் மாறியிருந்தது. வெண்ணிற தாடியும் எதையோ தேடுகிற கண்களும் அவருக்கு ஒரு தேஜஸை கொடுத்திருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;'பூ செலவுதான் கூடியிருக்கும்... மத்த செலவுவோ என்னத்த பெரிசா ஆயிரப்போவுது...' என்றான் கொம்பன். அவன், போன வருடத்தை விட, வரியை குறைத்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு வருட கொடையின்போதும் கடன் வாங்கி வாங்கி அதை அடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதைதாண்டி மச்சினன்மார் முறைக்கு, பதில் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. இந்த சாமிகள், செலவு வைப்பதை தவிர பண வரவுக்கு ஏதும் செய்வதில்லை என்கிற கடுப்பு கொம்பனுக்கு ரொம்ப நாளாக உண்டு. போன கொடையின்போது இரண்டு ஆடுகளை விற்றான். இந்த முறை அப்படி விற்கவும் முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;‘வரிய எப்படின்னு பேசிக்கிடுவோம். அதுக்கு முன்னால இன்னொன்னையும் பேசணும்' என்றான் கூட்டத்திலிருந்த பலவேசம். பக்தி பரவசக்காரன். இவனது பெரியப்பாதான் பெரியசாமிக் கொண்டாடி என்பதால் எப்போதும் சாமி கதை, பக்தி என்றே பேசிக்கொண்டு அலைபவன். நடக்கும் வழியில், தூரத்தில் சிறு கோயில் தெரிந்தால் கூட அப்படியே நின்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஒரு சுற்றுசுற்றி வணங்கிவிட்டுதான் செல்வான். இப்படியான பக்திக்கு அடிமையாகியிருந்த பலவேசம், தன்னுள்ளும் பலவேசக்காரன் சாமி இறங்கி, அருள் வரச் செய்வதாகவும் கொடையின்போது ஆடச்சொல்லி தூண்டும் என்றும் ஆனால், அடக்கிக்கொண்டு ஆடாமல் இருப்பதாகவும் சமீபகாலமாகச் சொல்லிக்கொண்டு அலைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் சூச்சமடையான், எட்டிப்பார்த்தார் பலவேசத்தை. தூணுக்கு பின்பக்கம் இருந்த அவனை நோக்கி, ‘என்னத்த பேசணுங்கடே பலாசம்..?' என்றார் தலையை ஆட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்ல. நமக்கும் பொறுப்பு இருக்கு பாத்துக்கிடுங்கோ. இது என்ன சாதரண சாமியாய்யா? தண்ணியெடுக்க ஆத்துக்கு சாமி போனா, எதிர்ல ஒரு பய நடக்க மாட்டான். திமிறி போனவன் கெதியும் நமக்கு தெரியும். அப்படியிருக்கும்போது, சின்னபயலுவோலாம், இப்படி பண்ணுதது நல்லாவா இருக்கு? போன கொடைல நிலையாவா நின்னானுவோ?'&lt;br /&gt;&lt;br /&gt;‘செரிவே, வெவரமா சொல்லும். என்ன பண்ணுனானுவோ? எவளையும் கைய புடிச்சு இழுத்தானுவளோ? இல்ல கெடா குட்டிய களவாண்டு போனானுவளா...' &amp;amp;தோளில் கிடந்த துண்டை எடுத்து தலைப்பாகை கட்டிக்கொண்டு கேட்டான் குட்டி.&lt;br /&gt;‘நா என்ன சொல்ல வாரேன்... நீ என்னல சொல்லுத... நீ, உன்கூட வேலைப்பாக்குத பயலுவோளுக்கும் மச்சினன்மார்களுக்கும் நல்லா ஊத்திக் கொடுத்துட்டு கோயில் வாசல்ல சலம்பிட்டு நின்னதைதான் சொல்லுதேன்... குடிச்சுட்டு ஆடுததுக்கு இது என்ன கருமாதி வீடால... எதெத எங்க பண்ணணும்னு இருக்குலா?'&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயம் தெரிந்ததுதான். மூன்றாவது நாள், சாமி வேட்டைக்குப் போகும்போது குடித்துவிட்டு வரலாம் என்பதை எழுதாத விதியாக வைத்திருந்தார்கள். இளவட்டங்கள் தமக்கு வேண்டிய மற்ற தெரு நண்பர்களுக்கு வாங்கி கொடுப்பது வழக்கமானதாகவே இருந்தது. இருந்தாலும் சிலர் இரண்டாவது நாள் இரவே ஆரம்பித்து விடுவதும் அதைக் கண்டும் காணாமல் இருப்பதும் தொடர்ந்தது. இதுபற்றி பேச என்ன இருக்கிறது? கொடை முடிந்த மறுநாளே சாமிகொண்டாடிகளுக்கும் போதை தேவையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டி, குட்டை உள்ளிட்ட அவனது நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பலவேசத்தைப் பார்த்து எழுந்த குட்டி, ‘குடிச்சுட்டு வந்து சாமி முன்னால நின்னாவே ஆடுனாவோ. வாசல்ல நின்னுதான பேசிட்டுருந்தோம். ரெண்டு நாளு சோறு, தண்ணி, தூக்கம் இல்லாம கோயில் வேலையை பூரா நாங்களாங்கும் பார்த்திருக்கோம்... உனக்கென்னவே... சீமை துரை மாதிரி, இடுப்புல துண்டைக்கட்டி சாமி கும்புட்டுட்டு வீட்டுல போயி தூங்கவா செஞ்சோம்? நாலு ஆட்டை உரிச்சு வெட்டி, படைப்பு போடும்போது என்னைக்காவது நின்னுருக்கியா எங்க கூட? ஒரு ஆட்டைமட்டும் உரிச்சு பாரு ஒனக்குலாம் தெரியும்... மயிராண்டி அலுவசமா ஆவலாதி சொல்ல வந்துட்டாம் கூட்டத்துல... குடிச்சாவோளாம்... கும்மாளம் அடிச்சாவுளாம்னுட்டு...'என்றான் ஆவேசமாக. பதிலுக்கு பலவேசமும் எதிர்ப்பேச்சுக்கொடுக்க, காட்டுக்கத்தாலாக இருந்தது கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏய்... சும்மாருல பலாசம்... குட்டி, போய் உக்காரு' என்ற தலைவர், ‘சனியனை இழுக்கதுக்குன்னே எப்பவும் அலையுதானுவளே' என மனதுக்குள் நினைத்துக்கொண்டார். பிறகு, ‘இங்க பாருங்க... யாரும் சின்ன பிள்ளைலுவோ கிடையாது. நானோ, நீயோ சொல்லி தெரியுததுக்கு. எது நல்லது கெட்டதுன்னு எல்லாத்துக்கும் தெரியும் கேட்டேளா. அதனால நீங்களா மனசாட்சிப் படி நடந்துக்கணும். கொடை வைக்க போற நேரத்துல இதுக்கெல்லாம் வெவாரம் வச்சுட்டிருந்தா நல்லாருக்காது. மற்ற பட்றை கோயில்ல எல்லாரும் எப்படி நடந்துக் கிடுதாவோன்னு பார்த்துக்கிடுங்கோ. அந்த மரியாதைய காப்பத்தணும். கொடைன்னா, நம்ம மட்டும் நின்னு சாமி கும்புட்டு போற இடமில்ல. அசலூர்க்காரவோளும், சொந்தக்காரவோளும் வந்து போற இடம்...' என்று சொல்லி முடிப்பதற்குள் குட்டி எழுந்து கதவை திறந்து வெளியே போகப்போனான். அவனைத்தொடர்ந்து குட்டையும் மாரியும் எழுந்திரிக்க, ‘ஏலே எல்லாரும் எங்க போறியோ? அப்ப இங்க எதுக்கு வந்திருக்கோம். எல்லாரும் வெளிய போனா, நாங்க எதுக்கு உட்காந்திக்கிட்டு... உள்ள வாங்கல' என்றார் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இன்னா... ஒரு பீடிய பத்தவச்சுட்டு வாரேன்' என்ற குட்டியை, ‘இல்லைனாலும் நீ பீடி குடிக்கது தெரியாது பாரு. சும்மா உள்ள வச்சு குடிங்கடே' என்றார் தலைவர். உள்ளே வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒவ்வொருவராக அது இது என்று பேசி, போன கொடைக்கு வைத்த வரியையே வைத்துக்கொள்வது என்றும் புதிதாக கல்யாணம் செய்தவர்களுக்கான அரை வரி, முழுதானதில் கடந்த வருடத்தை விட சில ஆயிரங்கள் அதிகமாக கிடைக்கும் என்றும் முடிவானது. ஆடி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை கொடை என தேதியும் குறிக்கப்பட்டது. பூ, பந்தல், மைக் செட், வில்லுபாட்டு, சாமி அலங்காரம் போன்றவற்றுக்கு இன்னார் இன்னாருக்கு அட்வான்ஸ் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. வெள்ளையடிப்பது மற்றும் பூடங்களின் பூச்சு வேலைகளுக்கான செலவுகளை, வரியையும் தாண்டி குட்டி ஏற்றிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடைக்கான வேலைகள் பரபரத்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் குட்டியும் பலவேசமும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டும் சாடை மாடையாக பேசிக்கொண்டும் அலைவது வாடிக்கையானது. கோயில் கால்நாட்டுக்குப் பிறகு ஒருவாரத்துக்கு வரிக்கார வீடுகளில் கவுச்சி கிடையாது. சுத்த பத்தம் கடைபிடிக்கப்பட்டது. வெளியூர்களில் இரவு தங்கல் கூடாது என்பதால் எந்த வேலையாக இருந்தாலும் இரவே வீடு திரும்பும் பழக்கம் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;திங்கட்கிழமை காலையில், குட்டி குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு வந்துவிட்டான். அவன் கூட்டாளிகள் செல்லையா, குட்டை, மாரி என நான்கைந்து பேர் கூடிவிட்டார்கள். இன்று மத்தியானத்திலிருந்து கொடை துவங்க வேண்டும். நள்ளிரவு கோயிலுக்கு இரண்டு கெடாவும், மறுநாள் சாமக்கொடைக்கு நேர்த்திக்கடனாக வந்திருக்கும் 23 கிடாவும் வெட்ட வேண்டும். கிடா வெட்டு முடிந்ததும் படைப்புச் சோறு, கறிக்குழம்பு ரெடி பண்ண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரைக் கூப்பிட்டான் குட்டி. ‘இங்க பாரும் என்னென்ன சாமான் வாங்கணுமோ, எழுதிகொடும். இப்பவே வாங்குனாதான் சரியா வரும். போனகொடை மாதிரி, கடைசி நேரத்துல அங்க இங்கன்னு ஓடிட்டு இருக்க முடியாது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பலவேசம் வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கோபம் முட்டிக்கொண்டு வந்தாலும் வெளிக்காட்டாமல், ‘பலாசண்ணே வா.., அம்பாசமுத்ரம் போயி சாமான வாங்கிட்டு வருவோம். இப்டி தூர தூர போனன்னா என்னத்த தெரியும் உனக்கு? நீயென்ன எனக்கு வேண்டாதவனா? சொக்கரனுவக்குள்ள முஞ்சியையும் மோறையும் துக்கிட்டு அலைஞ்சா நல்லாவாவே இருக்கு... வா' என்றான். இந்த திடீர் பாசத்தை பலவேசம் எதிர்பார்க்கவில்லை. என்னத்த இருந்தாலும் நம்ம பயலுவோ பாசக்காரனுவதான் என்று நினைத்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சரி வா... இதுல என்ன இருக்குல?. நம்ம கோயிலு, நாம போவாம வேற யாரு போவா?' என்று குளிர்ந்து போனான் பலவேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாடே. நாலு சாமான் வாங்க ஏழு பேரு போங்க?' என்று குட்டை சொல்ல, ‘அதுவும் சரிதான். சரிண்ணே, நாங்களே போயிட்டாரோம். நீரு வேணா, நம்ம செண்பவம் ஆசாரிட்ட பலகை சொல்லிருந்தது... ரெடியாயிருந்தா கொண்டாரும்?' என்ற குட்டி, தலைவரிடம் லிஸ்டையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு பொந்தனின் மினி டெம்போவில் ஏறினான். கூடவே செல்லையா, மாரி, குட்டை. அம்பாசமுத்திரம் போனது வேன். &lt;br /&gt;&lt;br /&gt;மத்தியானம் திரும்பியிருந்தார்கள். நல்ல வெயில், கோயிலில், இன்னும் சில நிமிடங்களில் வில்லுபாட்டு ஆரம்பமாக இருந்தது. வாங்கிய சாமான்களை ஒவ்வொருவருவராக கோயில் வாசலில் இருந்த அரங்குக்குள் வைத்தார்கள். குட்டி, மசாலா சாமான்கள் இருந்த பெட்டியை தலையில் வைத்துக்கொண்டு படியேறும்போது லேசாக லம்பினான். செல்லையா பிடித்துக்கொண்டான். கொடை கோலாகலமாகத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சாமக்கொடை முடிந்து, அதிகாலை நான்கைந்து மணி வாக்கில் சாமியாடிகள் வெளியில் போய்விட்டு வந்தார்கள். படைப்புச்சோறு தயாரிப்பில் இருந்த குட்டி, ஒவ்வொரு பூடத்துக்கு முன்பும் இரவில், முனை வெட்டி வைக்கப்பட்டிருந்த இளநீர்களை சேகரித்தான். செல்லையா உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது போக, மூன்று இளநீர்களை மட்டும் தனியாக ஒதுக்கி வைத்தான். பெரியசாமி பூடத்தின் முன்பு பெரிய வாழை இலை விரிக்கப்பட்டிருந்தது. மற்றப்பூடங்களின் முன்பு சிறு சிறு இலைகள் விரிக்கப்பட்டு படைப்புச் சோறு படைக்கபப்ட்டது சாமிக்கு. பெரியசாமி கொண்டாடி, சாமியை பார்த்து கும்பிட்டுவிட்டு ஒரு குத்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். வேலை முடிந்துவிட்டது. விடிந்ததும் வரிக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும். அதற்கு முன், வேண்டிய மட்டும் இவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். தெரியாமல் ஆட்டுக்கறிகளை மொத்தமாக ஒதுக்கி தின்பதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய சாமி கொண்டாடியின் வேட்டியை வாங்கிக்கொண்டு மாத்துவேட்டி கொடுப்பதற்காக வந்தான் பலவேசம். ‘சோறு வேலை முடிஞ்சுப்போச்சா' என்று தட்டியை எட்டிப்பார்த்தான். உள்ளிருந்த குட்டி, ‘ஏண்ண, வா... இந்தா உனக்குதான் வச்சிருக்கேன். எளநீ குடி... எல்லாரும் குடிச்சதுபோவ இதுதான் மிச்சம்... அதும் துவர்த்துலா கெடக்கு' என்று சொல்லிவிட்டு மூன்று இளநீர்களையும் பாசமாகக் கொடுத்தான். சாமி இளநீர் என மிகுந்த மரியாதையோடு ஒவ்வொன்றாக குடித்தான் பலவேசம். கோயிலை விட்டு இறங்கும்போது கண்முட்டிக்கொண்டு வந்தது. லேசாக நடை தடுமாறியது. பிறகு என்ன நினைத்தானோ, கோயிலில் வாசலருகே போடப்பட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தான். இலேசாக விடிந்ததும் படைப்புச் சோறு வாங்க, வரிக்காரர்கள் வந்துகொண்டிருந்தார்கள். திடீரென்று வந்த சத்தம் கேட்டு, குட்டி, செல்லையா உள்ளிட்டவர்கள் வாசலுக்கு ஓடி வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சுப்பையாண்ணனின் பெரிய மகள் அழுதுகொண்டிருந்தாள். எதிரில், கண்கள் சொருக சொருக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் பலவேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;படாரென்று அவன் முதுகில் விழுந்தது ஒரு மிதி. பொத்தென்று கீழே விழுந்தான். இரண்டு மூன்றுபேர் கட்டைகளை எடுக்கப்போனார்கள் கோயிலுக்குள். கண்முன் நடக்கும் போரை ஆக்ரோஷமாக பார்த்துக்கொண்டிருந்தார் மந்திரமூர்த்தி சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தினகரன் தீபாவளி மலரில் வெளியான கதை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-3062954652402675271?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/3062954652402675271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=3062954652402675271' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3062954652402675271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3062954652402675271'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/10/blog-post_21.html' title='கொடைகால குறிப்புகள்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-5944601043981697432</id><published>2011-10-18T03:38:00.000-07:00</published><updated>2011-10-18T03:38:06.729-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆணாதிக்க சினிமா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நடிகை நிகிதா விவகாரம், சின்ன உதாரணம்தான். &lt;br /&gt;கன்னட நடிகர் தர்ஷன், அவர் மனைவி விஜயலட்சுமிக்குமான பிரச்னைக்கு காரணம் எனக் கூறி, நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிக்க தடைவிதித்தது கன்னட தயாரிப்பாளர் சங்கம். அதற்கடுத்து எழுந்த கண்டனங்களால் அதை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அடிப்படையில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது? நிகிதாவால் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதில் தர்ஷனுக்கும் சம்மந்தம் இருந்திருக்காதா? விஜயலட்சுமி இப்படியொரு புகாரைச் சொன்னால் கூட அது உண்மைதானா என்று ஏன் ஆராயவில்லை?, புகார் சொன்ன மறுநிமிடமே தடை போட்டதெப்படி? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இப்படியொரு முடிவை எடுக்க, ஒரே ஒரு காரணம்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். &lt;br /&gt;அது ஆணாதிக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா, பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் விஷயம்தான் இது என்றாலும் இப்போது இன்னும் வேரூன்றி வளர்ந்திருக்கிறது, ஆணாதிக்க மனநிலை. சினிமாவில் படைப்பு ரீதியாக பெண்களை கையாளும் விதம், இன்டஸ்ட்ரியில் பெண்களின் நிலை என இரண்டு விதமாக பார்க்கலாம். இரண்டிலுமே ஆணாதிக்க மனோபாவம் எல்லையின்றி விரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;‘சார், இந்த காட்சியை இப்படி வச்சுக்கலாமே...', ‘பெட்ரூம் சீனை மேலோட்டமா எடுக்கலாமே?' என்று ஏதாவது ஒரு ஹீரோயின் சொன்னால், அவர்கள் எப்படி பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்கு பத்மப்ரியாவிலிருந்து ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கிறது தெரிந்தும் தெரியாமலும். ஒரு இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ தங்கள் வேலையில் இன்னொருத்தர் கருத்து சொல்வதையோ, ஆலோசனை சொல்வதையோ ஏற்க மறுக்கிறார்கள். ‘இவ என்ன நமக்கு ஐடியா சொல்றது?' என்கிற ஈகோவை ஆலமரமாக வளர்த்து வைத்திருக்கிறது சினிமா. சினிமா கூட்டு முயற்சி என்றாலும் அதில் பெண்களை அனுமதிக்க மறுக்கிறது ஆணாதிக்க சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;தன் உடல் நிலையை கருத்தில்கொண்டு ஆற்றில் முங்கும் காட்சியை இன்னொரு நாள் படமாக்கலாம் என்றார் பிரபலமான அந்த நடிகை. சரி என்று தலையாட்டிய அந்த நல்ல இயக்குனர், வேறு சில காட்சிகளை எடுத்துவிட்டு, அந்த இன்னொரு நாளில் ஆற்றில் முங்கும் காட்சிக்கு வந்தார். நடிகை ஜாக்கெட்டுக்குள் பிரா போடக்கூடாது என்பது முதல் கண்டிஷனாக இருந்தது இயக்குனரிடமிருந்து. சேலையால் மறைத்துக்கொள்ளலாம் என்று நடிகையும் முதலில் கண்டு கொள்ளவில்லை. நான்கு டேக்குகள் போனது. டைரக்டர் ஒன் மோர் சொல்லிக்கொண்டே இருந்தார். கடுப்பானவர், ‘முங்கி எழறதுக்கு ஏன் இவ்ளோ ஷாட்?' என்று இயக்குனரிடம் நியாயம் கேட்க, நடிகைக்கு விழுந்தது அர்ச்சனை. இப்படியொரு அசிங்கத்தை வேறு எங்கும் எதிர்பார்த்திருக்க மாட்டார். நூறு, நூற்றம்பது பேருக்கு முன்னால் அவளை கேவலமாக அவமானப்படுத்த நினைக்கிற டைரக்டருக்குள் இருந்தவன் அந்த ஆணாதிக்க அரக்கன். &lt;br /&gt;&lt;br /&gt;வேண்டிய நண்பர்களிடம் இந்த விஷயத்தை நடிகை சொன்னபோது, அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீருக்குள் ரத்தம் இருந்ததை அந்த இயக்குனர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘இயக்குனருக்கு சரியான மரியாதை (?!) தராத நடிகைகளும் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் சினிமாவில் புதிதல்ல. இந்த மரியாதை விஷயம் கொஞ்சம் காமெடியானது. இப்போதைய மும்பை நடிகைகள் எல்லோருமே மாடர்ன் பெண்கள். அவர்கள் எல்லோரையும் போல ‘ஹாய்' என்று அழைக்கிறார்கள் தயாரிப்பாளரையும் இயக்குனர்களையும். ஆனால், கையெடுத்து கும்பிடாமல் இந்த ‘ஹாய்' தன்னை அவமானப்படுத்திவிட்டது என நினைத்து, அவர்களை காட்சிகளில் பழிவாங்கும் போக்கை சினிமா இன்றும் கடைபிடித்து வருகிறது. சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் ஒரு இயக்குனருக்கு தடை விதித்தை மறந்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய இன்னொரு உதாரணம், நித்யா மேனன். &lt;br /&gt;&lt;br /&gt;இவர், மலையாள படம் ஒன்றிற்காக திருவனந்தபுரத்தில் ஷூட்டிங்கில் இருந்தார். இவரிடம் கதை சொல்வதற்காக மலையாள தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆண்டோ ஜோசப், நண்பர்களுடன் போனார். தான் வந்திருப்பதாக நடிகையிடம் சொல்ல சொல்கிறார் உதவியாளரிடம். அவர் போய் சொன்னதும், ‘இங்கு எப்படி கதை கேட்பது? என் மாஜேனரிடம் பேசச் சொல்லுங்கள்' என்றார் நித்யா. இதை தயாரிப்பாளரிடம் சொன்னார் உதவியாளர். ‘என்னிடமே இப்படி நடந்துகொள்கிறாளா? என்ன செய்கிறேன் பார்' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் சொல்லியிருக்கிறார். மூத்த தயாரிப்பாளரை அவமானப்படுத்திவிட்டதாகத் தடை விதித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எங்கே அவமானம் வந்தது? நித்யா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? எல்லா நடிகர், நடிகைகளுமே மானேஜர் மூலம் தேதி வாங்கிதான் கதை கேட்கிறார்கள். தயாரிப்பாளர் சங்க நிர்வாகி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இது நிஜமாகவே ஆணாதிக்க காமெடியாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா கேமரா வைக்கப்பட்டிருக்கும் வேனுக்குள், பெண்கள் இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு ஏதோதோ காரணம் சொன்னாலும் அதை நியாயப்படுத்த முடியாததாக இருக்கிறது. இன்டஸ்ட்ரியில் பெண்களின் நிலைக்கு இது ஒரு சாம்பிள். &lt;br /&gt;&lt;br /&gt;‘வாய்ப்பு தருகிறேன், திருமணம் செய்கிறேன்' என்ற ஆசை காட்டி பெண்கள் சூறையாடப்படுவதும் சினிமாவில் அதிகம். இப்படியொரு பிரச்னையில், மூன்று முறை தேசிய விருது பெற்ற இந்திப் பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மீது, சமீபத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது மும்பை கோர்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பள விஷயங்களிலும் ஹீரோக்களின் கோடிகளை, ஹீரோயின்கள் தொட்டுவிட முடியாத நிலைதான் இருக்கிறது. ‘‘ஹீரோக்களை மையப்படுத்தியதுதான் சினிமா வியாபாரம். இங்கு யாருக்கு என்ன விலை என்பதை மார்க்கெட்தான் நிர்ணயிக்கிறது. ஹீரோவை முன்னிலைப்படுத்தும் சினிமா சந்தையில், ஆணாதிக்க மனோநிலைதான் இருக்கும். அதை மாற்றுவது சாதாரண விஷயமில்லை'' என்கிறார்கள் சினிமா வியாபாரத்தை முன்னிலைப் படுத்துபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பு ரீதியாக, பெண்களின் பிரச்னைகளை பேசும் சினிமா என்பதில் கூட ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவே காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால், பெண்குரல் சினிமாவில் இல்லை. அதாவது பெண்ணுக்கு ஏற்படுகின்ற காதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஆண்களால் எழுதப்பட்டு பாடலாகிறது, அல்லது வசனமாகிறது. ஆணின் குரலிலேயே பெண்கள் பிரச்னைகள் பேசப்படுவதால், அதில் ஆணாதிக்க சிந்தனைதான் இருக்கும் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இது ஆணாதிக்க சமூகம். இங்கிருந்து அப்படிப்பட்ட படைப்புகள்தான் வரும். அசுத்தமாக இருக்கும் மனிதனிடமிருந்து சுத்தமான படங்களை எதிர்ப்பார்க்க முடியாது. ரவுடிகளின் சமூகத்தில் ரவுடிகள் பற்றிய படம்தான் வரும். பல்வேறு இயக்குனர்களின் படங்களில் பெண்களின் பிரச்னைகள் அலசப்பட்டிருந்தாலும் அது ஆணாதிக்கச் சிந்தனையைதான் கொண்டிருக்கிறது. பெண்ணிய படம் என்று சொல்கிற படங்களிலும் பெண்ணடிமைத்தனம்தான் இருக்கிறது'' என்கிறார் கலை விமர்சகர் இந்திரன். &lt;br /&gt;‘‘சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அறிஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் உட்பட எல்லாருமே சினிமாவை கொச்சையாகப் பார்க்கும் போக்கு இருக்கிறது. அரசே, அப்படித்தான் பார்த்தது. அதனால்தான் 1931-ம் வருடம் பேசத் தொடங்கிய சினிமாவை 26 வருடம் கழித்து (1957-ம் ஆண்டு) கலையாக அங்கீகரித்தது அரசு. ஆரம்ப காலத்தில் ரெட்லைட் ஏரியாவில் இருக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க மறுத்தார்கள் என்பதே சினிமாவை எப்படி பார்த்திருக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பது புரியும். இதைத்தாண்டி, கே.பி.சுந்தராம்பாள், டி.பி.ராஜலட்சுமி, அஷ்டாவதனி பானுமதி போன்றவர்கள் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். தனியுடமை சமூகத்தில் பெண் அடிமையானாள். பொதுவுடைமை சமூகத்தில்தான் பெண் சுதந்திரமடைவாள்'' என்கிறார் இயக்குனர் ஜனநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பெண்களால் ஒரு படைப்பு வெளிப்படும்போதுதான், பெண்களின் குரல் அதில் வரும். அப்படி அவள் பேசும்போது என்ன பேசுவாள்? அப்படிப்பட்ட குரலை கேட்க ஆர்வமாக இருக்கிறது சினிமா'' என்கிற ஜனநாதன், ஆணாதிக்க மனோபாவத்தை போக்க, பெண் படைப்பாளிகள் சினிமாவில் அதிகரிக்க வேண்டும் என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;‘‘கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் போன்ற துறைகளில் பெண்கள் கவனம் செலுத்துவதன் மூலம், சினிமாவில் பெரிய அளவில் அவர்கள் இடம்பெற முடியும். சில பெண் எழுத்தாளர்கள் செய்திருந்தாலும், படையெடுப்பு போல் வந்தால்தான் ஆணாதிக்கத்திலிருந்து சினிமாவை விடுபட வைக்கலாம்'' என்கிறார் ஜனநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் அது முடியுமா என்றால், ம்ஹூம்தான் பதில். பெண் படைப்பாளிகள் அதிகரித்தாலும் ஆணாதிக்கத்திலிருந்து சினிமாவை விடுபட வைக்கும் முயற்சி நடக்குமே தவிர, முழுமையாக ஒழித்துவிட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால், சினிமா ஆணாதிக்கத்தின் வேர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(நாளிதழ் ஒன்றுக்காக எழுதப்பட்ட அவசரக் கட்டுரை)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-5944601043981697432?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/5944601043981697432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=5944601043981697432' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/5944601043981697432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/5944601043981697432'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/10/blog-post_18.html' title='ஆணாதிக்க சினிமா!'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-2438933748340256454</id><published>2011-10-09T03:11:00.000-07:00</published><updated>2011-10-09T03:12:12.435-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>தள்ளாடி தடுமாறும் நடைகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மூக்காண்டியை இப்படி பார்ப்பது அரிதான காட்சிதான். புதுவேட்டி, சந்தனக்கலர் சட்டை, சவரம் செய்யப்பட்ட முகத்துடன் அவனைப் பார்த்து மாதங்களாகி விட்டது. மடித்துக்கட்டிய வேட்டிக்குள்ளியிலிருந்து தொடைவரை தொங்கும் பட்டாபட்டி டிரவுசருக்குள் பீடிக்கட்டும் தீப்பெட்டியும் தனியாக தெரிந்துக் கொண்டிருந்தது. தோளில் தொங்குகிற, மஞ்சள்நிற கறை கொண்ட வெண்ணிறத் துண்டில், சந்தனம் தடவப்பட்டிருந்தது. நடுவி்ல் உச்சியெடுக்கப்பட்ட எண்ணெய் தடவிய தலையில், இடமும் வலமும் படிக்கட்டுகளைப் போல சுருண்டு மடிந்து இருந்தது முடி. கன்னம் வரை வந்திருந்த கிருதா, அனாதரவாக நின்றிருந்தது இரண்டு பக்கமும்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்நிறுத்தத்தில் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிற வேப்ப மரத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு மறுகையால் இடுப்பைப் பிடித்தபடி நின்றிருந்தான் அவன். சிறியதுமல்லாமல் பெரியதுமல்லாமல் வளர்ந்திருக்கிற மீசையை திருக்கியிருந்தான். குழந்தையாக இருந்தபோது நேர்த்திக்கடனுக்காக அவன் மூக்கில் ஒரு வளையம் போடப்பட்டிருந்தது. சிறுவயதில் அடிக்கடி ஏதாவது ஒரு நோயின் தாக்கத்தால் பலமிழந்திருப்பான் மூக்காண்டி. அடிக்கடி இப்படி நோய் தாக்குவதால், ஏதாவது சாமி குத்தம் இருக்குமோ என்று ஆண்டி கோயிலில் குறி கேட்கப்போனாள் மூக்காண்டியின் ஆச்சி. அங்கு குறிசொன்னவர், 'மூக்கை கோரப்படுத்தி சாமியை கும்புடு சரியாவும்' என்று அருள் வந்து ஆடி சொன்ன குறியின் பொருட்டு அவன் மூக்கு கோரப்படுத்தப்பட்டது. இதனால் அவன் 'மூக்குவாளி' என்று சிறுவயதில் அழைக்கப்பட்டிருந்தான். இப்போது மூக்கு வளையம் இல்லை. அது போடப்பட்டிருந்த வலது பக்க மூக்கில், கருப்பு நிறத்தில் மக்கிப்போன ஓட்டை, அடையாளமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே இடத்தில் நின்றுகொண்டே, வலப்பக்கமாக அடிக்கடி தலையை நீட்டி நீட்டி, பஸ் வருகிறதா என்றும் பார்த்துக்கொண்டான். தூரத்தில் வருகிற வேன் அல்லது லாரிகளின் சத்தங்கள், பஸ் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன மூக்கா... வெளியூராடே..?' -போகிற வருகிறவர்கள் கேட்கிற இந்த கேள்விக்கு, தொண்டையை கணைத்துக்கொண்டு பதில் சொல்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா... விகே.புரத்துல சின்ன மாமன் மவா, சடங்காயிருக்கா. அதான்' என்கிற அவன் சத்தம், கிட்டதட்ட பஸ் நிறுத்தத்தை சுற்றியிருக்கிற பெரும்பாலான வீடுகளுக்கு தகவலாகச் சென்றிருக்கும். அப்படியொரு அவயம் அவனுடையது. சிலருக்கு சத்தங்கள்தான் பலம். சிலருக்கு உருவங்கள். சிலரின் உருவத்துக்கும் சத்ததுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ஆனால், மூக்கனுக்கு இந்த சத்தம்தான் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி, இப்படி வெள்ளையும் சொள்ளையுமா போறானே... சாயந்திரம் இப்படியே வந்துருவானாட்டி, பாப்போம்' என்கிற பெண்களின் கிண்டல்கள் அவனை நேரடியாகவே பல முறை தாக்கியிருக்கின்றன. எந்த இடக்கும் அவனை எதுவும் செய்துவிடாது. &lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலையில் நான்கு மணிவாக்கில் என்ன மழை, பனியடித்தாலும் சரியாக எழுந்துவிடுவது, மாடுகளில் பாலை கறந்துவிட்டு ஆழ்வார்க்குறிச்சி, செட்டிகுளம், கல்யாணிபுரம், சிவசைலம், கோயிந்தபேரி ஆகிய கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்ப, பகல் பதினோரு மணிக்கு மேலாகிவிடும். வரும் வழியில் ஆற்றில் பால்கேனை நன்றாக கழுவுவான். பிறகு காலை நனைக்கும் தண்ணியில் குளியலை போடுவான். புறப்பட்டு வருவதற்குள் நனைத்த துணிகள் காய்ந்துவிடும். பஸ் நிறுத்தத்தில் இருக்கிற துரையப்பா கடையில் டீ குடித்துவிட்டு, நின்றுகொண்டே நாளிதழ்களை மேம்போக்காக பார்ப்பான். &lt;br /&gt;&lt;br /&gt;''நேத்து காலைல ஆழ்வாரிச்சுக்கு எம்மெல்லே வந்தாரு... போட்டோவயே போடலையே?'என்பான் பக்கங்களை புரட்டிவிட்டு. பிறகு ஒரு பீடியை பற்றவைத்துவிட்டு சைக்கிளை மிதிப்பான். கருவேலப்பிறை தாண்டியதும் வலப்பக்கம் திரும்பி சைக்கிளை வீட்டின் சுவற்றில் சாய்ப்பான். பூட்டி சாவியை எடுத்துவிட்டு வீட்டுக்குள் போவான். திண்ணை தாண்டிய வீட்டு வாசலுக்கு மேலே, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்பு வெள்ளை புகைப்படங்களில், மாலையணிவித்து பொட்டு வைத்திருக்கிற மணிமேகலையின் அருகில் அவன் புகைப்படமும் இருக்கும். அவனையறியாமலேயே கண்ணிலிருந்து பொல பொலவென்று தண்ணீர் வரும். வீட்டுக்குள் அம்மாவானவள், கஞ்சி, தண்ணியை வைத்திருப்பாள். ஈராயங்கத்தோடு ரெண்டு சட்டி தின்பான். சாப்பிட்டு ஏப்பம் விட்டதும் குட்டித்தூக்கம். இரண்டு மணி வாக்கில் எழுந்ததும்தான் அவனது உலகம் ஞாபகத்துக்கு வரும். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவானவளுக்கும் அவனுக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை. பேச்சு வார்த்தைதான் இல்லையே தவிர, மற்றபடி சாப்பாடு உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தான். வேறு தேவைகள் என்றால் பக்கத்து வீட்டு பிரமு மகன், ''ஏண்ணே, ஆச்சிக்கு இருவது ரூவா வேணுமாம்?" என்பான். ஏன், எதற்கு என்ற கேள்வியெல்லாம் கிடையாது. இருந்தால் கொடுத்துவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலிருந்து நடப்பான். அவனது நடையும் போகிற வேகமும் எங்கு போகிறான் என்பதை தெருவில் இருக்கிறவர்களுக்கு உணர்த்திவிடும். இது ஒன்றும் புதிதில்லை என்பதால், அவர்களுக்கு அது பற்றிய அக்கறை இல்லை. புளியமரங்கள் இருக்கும் சாலையின் எதிரே மரத்தட்டிகளால் மறைக்கப்பட்டிருக்கிற கடைக்குள் போவான். இவனைப்போலவே அங்கு நான்கைந்து பேர் இருப்பார்கள். கடையில் இருக்கும் கோபாலு, 'மணியாச்சே... ஆளை காணும்னு பாத்திட்டிருந்தேன்" என்பான். ஒரு பாட்டிலை வாங்கி அதை மூன்று கிளாஸ்களில் விடுவான். ஒரே மடக்கில் ஒரு கிளாசை முடித்துவிட்டு, பட்டை ஊறுகாயை நக்கிக் கொள்வான். இப்படியே ஒவ்வொரு கிளாசையும் முடித்துவிட்டு, தலையை ஒரு சிலுப்பு. நரம்புகளின் வழியே ஜிவ்வென்று வீரம் தலைக்கேறும். ஜல்லிக்கட்டில் திமுறுகிற காளைகளின் கண்கள் மாதிரி ஆக்ரோஷமாக பார்வை மாறும். கால்கள் தடுமாற ஆரம்பிக்கும். உள்ளேயே சிறிது நேரம் குத்த வைத்து அமர்ந்திருப்பான். ஊறுகாய் காலியான பட்டையை நக்கிவிட்டு, ஸ்ஸ் என்பான். அதற்கு பிறகு அவனால் அங்கு இருப்பு கொள்ள முடியாது. வெளியே வருவான். கால்கள் தள்ளாட தள்ளாடி தடுமாறும் நடை. &lt;br /&gt;&lt;br /&gt;எதிரில் வந்து போகிற யாராவது, 'ஏல, ஏம் இப்படி போற... அந்தா அந்த திண்ணையில உட்காரு' என்றதும் அவன் வார்த்தைகள் வேறு வடிவம் எடுக்கும். ஊரில் புழங்குகிற கெட்டவார்த்தைகள் இவன் வாயின் வழியாக வெளிவந்து சிதறும். இதனாலேயே, உள்ளூர்க்காரர்கள் அவனை எதுவும் சொல்வதில்லை. அவனது திட்டல்கள் எந்த தனிப்பட்ட நபரை பற்றியானதாக இருக்காது. பொதுவானதாகவே இருக்கும். கெட்டவார்த்தைகளை கூட, அடுக்குமொழி போல் பேசுகிற சுபாவம் கொண்ட மூக்கன், சில நேரம் அந்த தெருவில் இருக்கிற கீரைத்தோட்டத்துக்கு முன்பக்கமாக மல்லாந்துவிடுவான். தெம்பாக உணர்கிற சில நாட்களில் கொஞ்சம் அதை தாண்டி கருவேலப்பிறை வாசல்வரை தாங்கும். தரையில் உருண்டு புரண்டு புழுதியோடு அவன் கிடப்பதைப் பார்க்க பாவமாக இருக்கும். மூக்கன் உள்ளாடை அணிவதில்லை என்பதால் அவன் கோலம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழியாக செல்கிற பெண்கள், இதை கண்டும் காணாமலும் போக முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;'ஏய் செல்லையா, இந்தப் பய வேட்டியை ஒழுங்கா இழுத்து விடுல... குடிகார நாயி கெடக்கு பாரு... கழுதைக்கு கெடந்தால' என்கிற அவர்களின் வார்த்தைகள், எப்போதும் கையில் கம்போடு அலையும் செல்லையாவுக்கு கேட்டதும் வேட்டியை இழுத்துவிடுவான். கிட்டத்தட்ட செல்லையாவுக்கு இது தினசரி வேலையாகவே போய்விட்டது. யார் சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவனது சித்தப்பா உள்ளிட்ட உறவுகள் பேசிப்பேசி பார்த்தும் அவன் குடியை விடுவதாக இல்லை என்று தெரிந்ததும் அவனை கை விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறரை, ஏழு மணி வாக்கில் எழுந்திருப்பான். தலை முதல் கால்வரை புழுதி போர்த்தியிருக்கும். விலகி தூரமாக கிடக்கும் வேட்டியை வேகமாக எடுத்து இடுப்பில் கட்டுவான். அக்கம் பக்கம் யாருமிருக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு துண்டை தேடுவான். அது கொஞ்சம் பின்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ கிடக்கும். எழுந்து நிற்கும் போது கால் தடுமாறும். தலையை அங்கும் இங்கும் ஆட்டுவான். வாய்க்காலை நோக்கி நடக்கத்தொடங்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரியாது. 'என்னடே உங்க பெரியம்மையே இந்தா ஏச்சு ஏசுன?" என்றாலோ, 'பக்கத்து வீட்டுக்காரை அடிக்கப் போயிட்டியே" என்பதாக யாராவது கேள்வி கேட்டால், 'அப்படியா... ச்சே...ச்சே, நான் போய் அப்படி செய்வனா?' என்பான் சிரித்துக்கொண்டு. வாய்க்காலில் குளித்துவிட்டு, கருவேலப்பிறை டீக்கடை. சுக்காப்பிகுடித்துவிட்டு, வீட்டுக்கு கிளம்புவான். வீட்டுக்கு திரும்பும் முக்குக்கு முன்னால் இருக்கிற பஜனை மட திண்டில் அமர்வான். ஏற்கனவே அங்கு அமர்ந்திருக்கிறவர்கள், '' என்னடே, சாயந்திரம் நல்ல தூக்கம் போலுக்கு" என்று கேலி பேசினால், சிரிப்புதான் அதற்கு பதில்..&lt;br /&gt;&lt;br /&gt;மூக்கனின் மனைவி மணிமேகலை தலை பிரசவதுக்கு அவளது ஊரான தென்காசி அருகேயுள்ள புலியூருக்குப் போனபோது மருத்துவமனையில் இறந்துபோனாள். மொத்த ஊரும் கூடி புலியூரில் கதறி அழுத போது, மூக்கன் மட்டும் அவ்வளவாக அழாமல் இருந்தான். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகுதான் அவனுக்கு வெறுமை புரிந்தது. அழுதான். அழுதுகொண்டே இருந்தான். பதினாறாவது நாள் கழித்து அவனுக்கு இன்னும் அழுகை அதிகமாகியது. மூன்று நாட்கள் அவன் வீட்டை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;'ஏந்தாயி உம் மவன் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்காம்' என்று கேட்கிற பக்கத்து வீட்டுக்காரிகளுக்கு அவளது அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னொரு கல்யாணத்தை முடிச்சு வையி. வேறென்ன செய்ய முடியும். எல்லாம் நம்ம கையிலயா இருக்கு?' என்று சொந்தக்காரிகள் சொல்லிப்போன பின், அதை மூக்கனிடம் அம்மா விவரிக்க, இருவருக்குமான பேச்சுவார்த்தை முறிந்தது அன்றிலிருந்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகுதான் குடிக்கத் தொடங்கினான். முதலில் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தவன் , உள்ளூர் கூட்டாளிகள் புண்ணியத்தில் அதை தொடரலானான். குடி அவனை ஆசுவாசப்படுத்தியிருக்க வேண்டும். தினமும் அந்த போதையில் அவன் எதையோ தேடிக்கொண்டிருக்கலாம். அல்லது பேசிக்கொண்டிருந்திருக்கலாம். ஏன், மறைந்து போன அவன் மனைவியிடம் கூட பேசியிருந்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் பஸ் வரும் சத்தம் கேட்டது. பாபநாச ரூட்டில் திரும்பி நின்றதும் இடுப்பு வேட்டியை ஒருகையால் பிடித்துக்கொண்டே முன்பக்க வாசலில் ஏறினான் மூக்கன். விசில் சத்தம் கேட்டு பஸ் புறப்பட்டதும் எதிர்கடையில் இருக்கிற சுப்பையாவும் அரைபல்லுவும் போட்டிப் போட்டு பந்தயம் கட்டிக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'இங்கரு, வீட்டுல போயி தலைய காட்டிட்டு, இதே பஸ் திரும்பிவரும்போது, இங்க இறங்குதானா, இல்லையான்னு மட்டும் நீ பாரு'- இது சுப்பையா.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ஹும். போனதும், அங்க உள்ள சாராயக்கடைல ரெண்டு கிளாசை போட்டுட்டு, வீட்டுக்குப் பின்னால விழுந்துகெடந்துட்டு ராத்திரிக்குதான் வருவாம்'- இது அரைப்பல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குடி&lt;/strong&gt;க்கிறவர்களை குழந்தையாகவே பார்க்க வேண்டும் என்பான் நண்பன். பல்வேறு பிரச்னை காரணமாக குடிக்க வருபவர்கள், தனது பிரச்னையை யாரிடமாவது கதறி கொட்ட, போதையை பயன்படுத்துகிறார்கள். மனதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிற ஏதாவது ஒரு பிரச்னை போதையில் கரைந்துவிடுவதாக உணர்கிறார்கள். சென்னையில் டாஸ்மாக் ஒன்றில் குடித்துக் கொண்டிருந்த போது, 'எக்ஸ்கியூஸ் மி, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?' என்ற பக்கத்து இருக்கை மனிதரை பார்த்ததும், சிரித்தார். ஏதோ ஒரு ஐடி கம்பெனியின் டேக் கழுத்தில். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி, எதிர் இருக்கைக்கு வந்தார். 'உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா சார்..?' என்றவரிடம், 'ஒரு லவ் ஓடிக்கிட்டிருக்கு' என்றான் நண்பன். 'லவ் பண்ணுங்க... ஆனா, கல்யாணம் பண்ணாதீங்க...உங்களை மாதிரிதான் நான்..' -கதை தொடர்ந்தது. பேசி, அழுது, கண்ணீர் விட்டு, சோகமாகி, மகிழ்ந்து, சிரித்து, 'டைம் ஆயிடுச்சு, இன்னொரு நாள் பேசுவோம்... இதுதான் என் கார்டு... எப்ப வேணாலும் பேசுங்க' என்று கிளம்பியவரை அதற்குப் பிறகு பார்க்கவில்லை. வேறு ஏதோ பாரில், யாருடனோ இதே கதையை அவர் சொல்லியிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் உரையாடலை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தபோதுதான், இப்போது நீங்கள் வாசிக்கிற மூக்காண்டி ஞாபகத்துக்கு வந்தான். இங்கு எல்லாமே போதைதான். ஒவ்வொரு போதைக்கும் ஒவ்வொரு பெயர். &lt;br /&gt;மூக்கனுக்கு சாராயம். உங்களுக்கு வாசிப்பு. எனக்கு எழுத்து!&lt;br /&gt;...............................&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-2438933748340256454?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/2438933748340256454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=2438933748340256454' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2438933748340256454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2438933748340256454'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/10/blog-post_09.html' title='தள்ளாடி தடுமாறும் நடைகள்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-836543572832807908</id><published>2011-10-04T01:22:00.000-07:00</published><updated>2011-10-04T01:22:57.147-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>செல்வி சவுண்ட் சர்வீஸும் சிங்கப்பல் முத்துவும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒலிபெருக்கிகள் வந்த பிறகுதான், ஊர் கெட்டுவிட்டதாகச் சொல்வார் உச்சிமகாளி தாத்தா. திண்ணையில் அமர்ந்துகொண்டு வெண்கல நிறத்திலான செவ்வக வடிவம் கொண்ட வெற்றிலைப் பெட்டியை திறந்ததும் சின்னதாக ஒரு ஏப்பம். பாக்கு, சுண்ணாம்பு கலந்த வெற்றிலை மடிக்கப்பட்டு வாய்க்குள் சென்றதும் அங்குவிலாஸ் புகையிலையை குத்துமதிப்பாக கொஞ்சம் அள்ளி போட்டு சவைத்துக் கொண்டு, எதிரில் ஒரு பார்வை. பக்கத்தில் அவரது துணைக்கு இருக்கிற கம்பர் தாத்தா, ‘நீரு சொன்னா சர்தாம்... நான் எங்க போயி கண்டேன், ஒலிபெருக்கியையும் ஊர் கெட்டதையும்' என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையின் எதிரே, சரியாக இவரது திண்ணைக்கு எதிரில் இருக்கிற வீட்டு வாசலில், ஒலிபெருக்கி குழாய்களையும் சீரியல் பல்புகளையும் சரி செய்வதற்காக கிடத்தி வைத்திருப்பான் முத்து. செல்வி சவுண்ட் சர்வீஸ் ஓனர். குருவி கூடு தலையுடன், வாயில் ஒரு வயர் துண்டை கடித்துக்கொண்டே இருக்கும் முத்துவின் சட்டைப் பையில், பேனா போல எப்போதும் ஒரு டெஸ்டர் இருக்கும். நேற்றைய தூக்கமும் நாளைய முழிப்பும் கண்களில். நொடிக்கொருதரம் இடதுகையை முதுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு நடப்பதும், எடுப்பதும் அவனது மேனரிசம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியில் இருந்து புதிதாக வாங்கி வந்திருந்த இசைத்தட்டுகள், ஓரமாக அடுக்கப்பட்டிருக்கும். வட்ட வடிவத்தில் கலர் கலராக வைக்கப்பட்டிருக்கும் வயர்கள், அட்டைக் கவருக்குள் பாதுக்காக்கப்பட்டிருக்கும் ட்யூப் லைட்கள், கோபுர வடிவ சீரியல் அலங்கார செட்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளேயும் வெளியேயும் இறைந்துகிடக்கும். லுங்கியை மடித்துக்கட்டி, சிறு மரப்பலகையில் அமர்ந்துகொண்டு, தரையில் கால் நீட்டி, ஒவ்வொரு சீரியல் பல்புகளுக்கும் ஜிகினா பேப்பர்களை சுற்றத் தொடங்குவான் முத்து. சிங்கப்பல் முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இவனிடம் வேலை பார்க்கும் கிட்டு, கீழ்ப்பக்கமாகவும் அய்யன் மேல் பக்கமாகவும் அமர்ந்துகொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;‘முத்தண்ணே... கருத்தப்பிள்ளையூர்க்காரன் பாக்கிய கொடுத்துட்டானா?'-பீடியை பற்ற வைத்ததும் கிட்டு கேட்பான். &lt;br /&gt;&lt;br /&gt;‘அடுத்த வாரம் அங்க சடங்கு வீடு இருக்குலா, போவும்போது கேப்போம்' என்பான் முத்து. அய்யன் குழாய்களை துடைக்கத் தொடங்குவான். ‘செல்வி சவுண்ட் சர்வீஸ்' என்று குழாயில் வட்ட வடிவில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தின் பெயிண்ட் உறிந்து, சில இடங்களில் வெட்டையாக இருக்கும். அதைத் துடைக்கும்போது அய்யனுக்கு கோபமாக வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இதுக்கொரு பெயிண்ட் அடிக்கணும்னு சொல்லிட்டே இருக்கேன்... நீ காதுலயே வாங்கமாட்டேங்க... என்ன, ஒரு அரை மணி நேரம் ஆவுமா..?'&lt;br /&gt;&lt;br /&gt;‘பொறுல... அடுத்த வாரம் பாப்போம்...' என்பான் முத்து. &lt;br /&gt;&lt;br /&gt;எதிரிலிருந்து இறுமல் சத்தம் கேட்கும். கம்பரும், உச்சிமகாளி தாத்தாவும் இங்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த பார்வைக்கு, ‘ஊரைக் கெடுப்பதற்கான வேலைகளை தொடங்குபவர்களே...' என்று பொருள். கிட்டு முத்துவை பார்ப்பான். முத்துக்கு சிரிப்பு வரும். ‘பாட்டையாவ வீட்டுக்குள்ள போவ வச்சிருமா?' என்பான். ‘இன்னும் செத்த நேரம் இரு' என்றபடி, ஜிகினா வேலை தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் ரோட்டில் மேலத்தெருவிலிருந்து பஸ்ஸ்டான்ட் செல்பவர்கள், தாத்தாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு போவார்கள். அப்படி யாராவது வணக்கம் சொன்னால், லேசில் விட்டுவிட மாட்டார் தாத்தா. &lt;br /&gt;&lt;br /&gt;‘நம்ம சூச்சாரு மவனாடே...'&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமா... மறந்துட்டேளா?'&lt;br /&gt;&lt;br /&gt;‘ச்சே மறக்க முடியுமாடா, உன் அப்பனையும் ஒன்னையும்... தூரமா போற?'&lt;br /&gt;&lt;br /&gt;‘இன்னா, இடைகால்ல ஒரு துட்டி வீடு.., இப்பம் ஒரு பஸ் வரும்லா..'&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாமா... வார நேரம்தான்' என்று தாத்தா சொன்னதும், நடப்பான் சூச்சாரு மவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்து பத்து அதிகம் வைத்திருந்த தாத்தா எல்லாவற்றையும் மகன்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டு, இப்போது பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் இருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக வாங்கியிருந்த நீண்ட மூக்கு குழாய்களில் இரண்டை எடுத்து வாசலில் இரண்டு பக்கமும் வைத்து வயரால் திருக்குவான் கிட்டு. வாங்கி வந்திருந்த இசைத்தட்டுகளில், ‘கோழி கூவுது’ படத்தின், ‘ஏதோ மோகத்தை தேடி அதன் மேல் முள்ளை வைப்பான். பாடல் தொடங்குவதற்கு முன்னான, ‘கிர்ர்ர்ர்ர்ர்' ஆரம்பிக்கும்போது தாத்தாவை பார்ப்பான் கிட்டு. அவர், ஏதோ செய்வதாக நினைத்துக் கொண்டு கம்பரிடம், ‘என்னடே செய்தானுவோ' என்று கேட்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிர்ரென இழுத்து, பாடல் ஆரம்பித்ததும் தாத்தா, கம்பரை பார்ப்பார். அவர் உதட்டைப் பிதுக்கி, காலம் கெட்டுப்போச்சு என்பது மாதிரி கையை மேல தூக்குவார். பாடல் சத்தம் கேட்டு, பாபநாசம் கல்லூரியில் படிக்கும் மணியும், ஆழ்வார்க்குறிச்சியில் படிக்கும் உமயரும் பவுடர் அப்பிய முகத்துடன், வருவார்கள். அய்யன் அவர்களை அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்து, ‘ஏ அய்யா, அந்த சேரை எடுத்து போடுல' என்பான். இவன் சொன்னாலும் அவன் எடுக்க மாட்டான். ‘நான் வேலையா இருக்கம்லா... அண்ணனுவோ எடுக்க மாட்டாவோளோ?' என்று அவன் சொன்னதும், மணி, ‘நீயெல்லாம் என்னத்த உருப்பட போறலே' என்று சொல்லிவிட்டு சேரை எடுத்து வெளியே போடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;உமயரும் தானாகவே சேரை எடுத்து வந்து உட்கார்ந்துகொள்வான். இவர்கள் இப்படி உட்கார்வது பாடலை மட்டும் ரசிப்பதற்கு அல்ல. நான்காவது வீட்டிலிருக்கும் அய்யன் சகோதரி, தனது தாவணி தோழிகளுடன் பாடல் கேட்டு வாசலில் வந்து பீடி சுற்றுவாள் என்பதற்காக. அதனாலேயே அய்யனுக்கு இவர்கள் மீது கடுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா நகர்வது போலில்லை என்று தெரிந்ததும் குழாயை அவர் இருக்கும் திசைக்கு எதிராக திருப்பி, வால்யூமை கூட்டுவான் கிட்டு. டப் என்று இரண்டு காதையும் பொத்திக்கொண்டு இருவரும் வீட்டுக்குள் நடப்பார்கள். உள்ளே போனதும் ஜன்னலை அடைத்து மூடும் சத்தம் கேட்டதும், முத்துவும் கிட்டுவும் சிரித்துக் கொள்வார்கள், ‘பாட்டையா, நம்மளையா கொற சொல்லுது?' என்று.&lt;br /&gt;முத்து எங்கு போயும் எலெக்ட்ரிக் தொழில் படித்ததில்லை. ஏற்கனவே ஊரில் இருக்கும் பாலன் சவுண்ட் சிஸ்டத்தில் டைம்பாஸுக்காக வேலைக்குச் சென்று தொழில் கற்றுக்கொண்டதன் விளைவு, ஊரில் இருக்கிற மூன்று மைக் செட்களுடன் நான்காவதாக உதயமானது ‘செல்வி சவுண்ட் சர்வீஸ்'. முத்துவின் வாயில், முன் பல் ஒன்று குழாய் கட்ட போஸ்டில் ஏறும்போது மோதி உடைந்துவிட்டது. அந்த பல்லுக்குப் பதில் தங்கப்பல் கட்ட இருப்பதாக அவன் சொல்லிக்கொண்டு அலைந்தான். அலைந்தானே தவிர, இன்றுவரை அவன் கட்டவில்லை. என்றாலும் தங்கப்பல் முத்து என்கிற பெயர் அவனுக்கு நிலைத்துவிட்டது. நிலைப்பதும் நிலையாததும் அவரவர் கர்மா சார்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டுக்கும், அய்யனுக்கும் எப்போதும் அந்த ஆச்சர்யம் இருந்துகொண்டிருக்கும். எங்கு போய் மைக் செட் கட்டினாலும் அங்கு ஏதாவது ஒரு பெண் முத்துக்கு தோதாகிவிடும் ஆச்சர்யம் இருவருக்கும் புகைச்சலை ஏற்படுத்தும். போனமுறை மன்னார்கோயிலில் கல்யாணவீடொன்றுக்கு செட் கட்டியிருந்தபோது, ஒரு தாவணிப் பெண், ‘அந்தப் பாட்டிருக்கா, இந்தப் பாட்டிருக்கா' என்று கேட்டுவிட்டு போனாள். கேட்டபாடலை போட்டுவிட்டு காத்திருப்பான் முத்து. கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை ஆரம்பித்த இந்த சுகமான தொந்திரவு, கல்யாணம் முடிந்த மறுநாள் காலைவரை தொடர்ந்தது. ஆனால், அதற்கடுத்த சில மாதங்கள் வரை கடித வாயிலாக இது தொடரும் என்பதை முத்து கூட அறிந்திருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதே போல தாட்டாம் பட்டிக்கு ஆறு மாசத்துக்கு முன்னால் ஒரு சடங்கு வீட்டுக்கு செட் கட்டப் போயிருந்தார்கள். மாலை நேரம் கால் கொலுசு சலசலக்க வந்தவள் ஒரு சீட்டில் நான்கைந்து பாடலை எழுதி முத்துவிடம் கொடுத்துவிட்டு, பேசாமல் தலையாட்டினாள். இந்த தலையாட்டலுக்கு பாடல்கள் எல்லாம் இருக்கிறதா என்று அர்த்தம். முத்துவும் சிரித்துக்கொண்டே தலையாட்டினான். பிறகு ஒவ்வொன்றாக போட்டுவிட்டு, சடங்கு வீட்டுக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த கடையில் சாப்பிட போனார்கள். பார்த்தால் அதே கொலுசு பெண். நாலு பரோட்டா இறங்கும் முத்துவுக்கு அன்றைக்கு ஏழெட்டு புரோட்டா இறங்கியதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை. ஒரு நாள் கூத்துக்குப் பிறகு ஊருக்கு வந்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னால் அங்கு வேறொரு கல்யாண வீட்டுக்கு சென்றால், கொலுசு பெண், அதே சிரிப்போடு நின்றிருந்தாள். மீண்டும் அவள் கடையிலேயே சாப்பாடு.. முத்துக்கு குஷியாகிவிட்டது. இம் மாதிரியான கடும் உழைப்பை வாங்குகிற தொழில்களில், இதுபோன்ற இனிமைகளும் இல்லையென்றால் வாழ்க்கை சூன்யமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;‘நாங்களும்தான் இருக்கோம்... ஒரு குருவாங்கூட பார்க்க மாட்டேக்கே... அப்படி என்னண்ணே இருக்கு ஒங்கிட்டே?' கிட்டுதான் இப்படி கேட்டது. பக்கத்தில் இருந்த அய்யன், ‘அழுக்கு சாரமும், வேர்வை நாத்தம் புடிச்ச சட்டையும்தான்' என்றதும் முத்துக்கு சட்டென கோபம் ஏறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான். ‘இது ரொம்ப அவசியம்ல... கேள்வி கேக்காம் பாரு, போய் குழாயை அவுரு' என்று விரட்டுவான். பல்லால் வயரை கடித்து இழுத்து, அவன் கனெக்ஷன் கொடுக்கும் அழகே தனி. சில நேரங்களில் ஊர் தெருவிளக்கு எரியவில்லை என்றால், அதை சரிசெய்யும் பொறுப்பும் முத்துவுக்கு இருந்தது. வெளியூரில் வசிக்கும் உள்ளூர் வயர்மேன், இதற்காக அந்த ஊரிலிருந்து இரவில் வருவது சாத்தியமில்லாததால் இந்த பணி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர, ஊரில் நடக்கிற கட்சிக் கூட்டங்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள், முத்தாரம்மன், தங்கம்மன், வடக்குவா செல்வி அம்மன், மந்திரமூர்த்தி, கருப்பசாமி, சுடலை, ராமர், விநாயகர் ஆகிய சாமிகளின் கொடைகள் மற்றும் கல்யாணம், காதுகுத்து, பெயர் சூட்டு விழா, சடங்கு வீடு ஆகிய விழாக்களால் முத்து உள்ளிட்ட உள்ளூர் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் வாழ்ந்து வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உச்சிமகாளி தாத்தாவின் மருமகள் செண்பகம், அவருக்கு நீத்தண்ணி கொடுத்துவிட்டு வரும்போது, நேராக முத்துவைப் பார்க்க வருவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒனக்கெல்லாம் எடக்கு ஜாஸ்திடே' என்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுமே தெரியாதது போல, ‘என்னது சித்தி' என்பான் முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;‘அவரு ஒனக்கு தாத்தா இல்லையோடே... அவரை விரட்டி விரட்டி வுடுதியாம்...'&lt;br /&gt;&lt;br /&gt;‘அவரு சொல்லுதாரோ..? பெறவு, நாங்க ஊரை கெடுக்க வேலை பாக்கோம்னு போற வாரவோட்டலாம் ஆவலாதி சொல்லிட்டிருக்காரு...'&lt;br /&gt;&lt;br /&gt;‘அவரு சொன்னாருன்னா அதுக்கு குழாயை திருப்பி பாட்டை வைப்பியோ... ஏல கிட்டு, வாலை சுருட்டிட்டு இருல... பெரிய மனுஷனுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க கத்துக்கிடுங்க' என்று சொல்லிவிட்டு போவாள்.&lt;br /&gt;‘பாட்டையா, இன்னும் போட்டுக் கொடுக்கு பாரேன்' என்று கிட்டு சொன்னதும், ‘நாளைக்கு வச்சுக்கிடுவோம், பாக்கியை' என்பான் முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிபெருக்கிகள் பற்றி தாத்தா இப்படியொரு கருத்து வைத்திருந்தாலும், பாகவதர் பாடல்கள் தாண்டி, அவர் கடைசியாக பார்த்த, ‘தில்லானா மோகானாம்பாள்' பாடல்கள் அல்லது ‘திருவிளையாடல்’ வசனங்களை போட்டால் சந்தோஷமாகிவிடும் தன்மையை கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்காவது போதையில் வரும் நாட்களின் கருக்கலில், முத்துவுக்கு தாத்தா மீது பாசம் வந்துவிடும். ‘நலம்தானா... நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா...' என்ற பாடலை மெதுவாக ஓடவிட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்துகொள்வான் முத்து. எதிரில் ஜன்னல் திறக்கும் சத்தம் கேட்டதும் முத்து அவர் தெரிகிறாரா என்று பார்ப்பான். வெளிச்சத்தில் இவன் இருப்பதால், அவர் முகம் தெரியாது. ஆனால், தாத்தா ரசிக்கிறார் என்பதை அறிவான். நான்கைந்து பாடல்களுக்குப் பிறகு தூக்கம் வந்துவிடும் முத்துவுக்கு. லைட்டை அணைத்துவிட்டு படுப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவூர்சத்திரத்தில் மூன்று நாள், கோயில் கொடைக்கு போய்விட்டு, மூன்று சைக்கிள்களில் குழாய் மற்றும் பொருட்களை கொண்டு திரும்பியிருந்தனர் முத்து அண்ட் கோ. சாலையை விட்டு இறங்கும்போதே தாத்தா வீட்டில் பெருங்கூட்டம். சிவலோகப் பதவி அடைந்திருந்தார் தாத்தா என்பதை அந்தக் கூட்டம் தெரிவித்துக்கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக பொருட்களை இறக்கிவைத்துவிட்டு வீட்டுக்குள் போனார்கள். பெரிய மீசையுடன், நெற்றியில் பட்டையடித்து கட்டிலில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தார் தாத்தா. மகன், மகள்கள், மருமகள் கீழே அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்கள். அவர் முகத்தில் அப்படியொரு சிரிப்புக் களை தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்து அவரது காலை தொட்டு கும்பிட்டுவிட்டு, திரும்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நலம்தானா?' என்று தாத்தா கேட்பது போலிருந்தது.&lt;br /&gt;............&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-836543572832807908?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/836543572832807908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=836543572832807908' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/836543572832807908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/836543572832807908'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/10/blog-post.html' title='செல்வி சவுண்ட் சர்வீஸும் சிங்கப்பல் முத்துவும்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-2432017723906014211</id><published>2011-09-24T01:50:00.000-07:00</published><updated>2011-09-24T02:50:01.993-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><title type='text'>பஸ்-ஸ்டாண்ட் - சில நினைவுகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;உறைந்து போன நினைவுகளை ஓரமாய் சேகரித்து வைத்துக்கொண்டே இருக்கிறது அனைத்து பஸ்-ஸ்டாண்டுகளும். பஸ்களுக்கும் ஸ்டாண்டுக்குமான உறவுகளை விட, பயணிகளுக்கும் ஸ்டாண்டுகளுக்குமான உறவு ரத்தமும் சதையுமானது. ஒவ்வொரு முறை பஸ்ஸில் ஏறி இறங்கும் அல்லது பஸ்ஸுக்காக காத்திருக்கிற பாதங்கள் பட்ட மணல்கள், இப்போதும் தேடிக்கொண்டிருக்கலாம் நம் பாதங்களை. ஆசையோடு பஸ்சில் ஏறிச்செல்கிற கால்கள், அதைவிட அதிக ஆசைகள் கொண்டே, சொந்த ஊர் பஸ் ஸ்டாண்ட்களில் இறங்கத் துடிக்கிறது. வாழ்க்கை முழுவதும் உள்ளூரில் கழிக்க முடிகிறவர்களுக்கும் பஸ் ஸ்டாண்ட்களுக்குமான உறவு ஜாஸ்தி. இருப்பத்தாறு வருடங்கள் வரை தினமும் ஏதோ ஒரு காரணத்துக்காக பஸ்-ஸ்டாண்டை மிதித்திருக்கிற என் கால்கள் பேசத் தொடங்கினால், அதற்கொரு nostalgia இருக்குமானால் அது என்னை பேசியிருக்கு்ம் என்பதை அறிய ஆவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சூட்கேஸில் உடைகளை அடைத்துக்கொண்டு, ஊர் விட்டு போகிற எல்லாருக்கும் தெரியாது, பஸ்-ஸ்டாண்டின் அழுகை பற்றி. அம்மா, அப்பாவுக்கோ, அண்ணன், தங்கைகளுக்கோ டாடா காட்டி விட்டு பஸ்ஸில் ஏறுகிற யாருக்கும் பஸ்-ஸ்டாண்ட் புழுதியின் ஏக்கம் தெரிவதில்லை. அதனதன் ஏக்கம் அதுவதுக்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஊர்களையும் போல பள்ளம் -மேடுகளை கொண்டிருந்த பஸ்-ஸ்டாண்ட்தான் கீழாம்பூருக்கும். பஸ்கள், ஆன் தி வேயில் நின்று செல்லும் இடம் என்பதால் பஸ்-ஸ்டாண்ட் என்றழைப்பது இலக்கண பிழையாகலாம். அதனால் பேருந்து நிறுத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிறுத்தங்கள், குறைந்த பட்சம் இரண்டு, மூன்று கடைகளை கண்டிப்பாகக் கொண்டிருக்கிறது. ஒன்று பீடி சிகரெட் மற்றும் டீ கடை. இன்னொன்று பூ, அல்லது லாலா கடை. கொஞ்சம் விரிந்திருக்கிற நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஊர்களில் பரோட்டா கடைகளும் உண்டு. கீழாம்பூர் தம்மாத்துண்டு கிராமம் என்பதால், பஸ்களே எப்போதாவதுதான் வரும் என்ற நிலையிலும் பேருந்து நிறுத்தம் மூன்று கடைகளை கொண்டிருந்தது அதிசயம்தான். இந்த கடைகளின் புண்ணியத்தில் சிகரெட் பிடிக்க பழகியிருந்தனர், ஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில் படிக்கும் உள்ளூர் அண்ணன்கள். அவர்களுக்கு ஈடாக திருட்டு தம்மடிக்கும் பழக்கம் பளஸ் ஒன், டூ படிக்கிறவர்களுக்கும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பேரூந்து நிறுததத்தின் கிழக்காக, கோயில் காம்பவுண்ட் சுவரின் வலப்பக்கத்தில் இருந்தது கசமுத்துவின் டீக்கடை. வாழ்க்கையில் கனவு என்பதை தாண்டி, கனவையே வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கும் கசமுத்துவுக்கும் டேப் ரெக்கார்டருக்கும் அப்படியொரு பொருத்தம். காலையில் எழுந்து கடையை திறந்ததுமே, 'ஆயர் பாடி மாளிகையில்...' ஓடும். சாமியிலிருந்து ஆரம்பிக்கிறாராம் கடையையும் பாடலையும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் கொஞ்ச சொச்ச மாணவ, மாணவிகள் நிறுத்தத்தில் குழுமியதும் க.மு.வுக்கு கைகள் பரபரக்கும். கல்லூரி படிக்கும் அண்ணன்கள், கடையின் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, 'கச. அந்த பாட்டை போடு, இந்த பாட்டை போடு" என நச்சரிக்க ஆரம்பிப்பார்கள். (சம்பவம் நடக்கும் காலகட்டம் எண்பதுகளின் இறுதி என்பதை கவனத்தில் கொள்க. பாடல்களுக்கும் வருடங்களுக்கும் சம்பந்தமில்லை). 'ராசாவின் மனசுல ராசாத்தி நெனப்புதான்...' முதல் வரி முடிந்ததும் பஸ் நிறுத்தம் நோக்கி ஒரு லுக். நெஞ்சோடு நோட்டு புத்தகங்களை அமுக்கி, அடிக்கடி சிரித்துக் கொண்டிருக்கும் தாவணி பெண்களில் சிலர், வானம் பார்ப்பது மாதிரி, இங்கும் ஒரு பார்வை. அண்ணன்களில் சிலர் இப்போது மெதுவாக பறக்க ஆரம்பிப்பார்கள். பெண்களிடம் பேசுவது மகாகுற்றம் என்று கருதப்பட்ட காலத்தில் இந்த பறத்தல் உயிருக்குள் நனையும் சுகம் கொண்டது. வெறும் பார்வையை வேதமென நினைக்கும் பிராயத்து அறிவுக்கு அது காதலென்றே தெரிந்தது. காதல், கண்ணுக்குள் கத்தி சொருகி இதயத்தை நோண்டும் கருவி என்பது அப்போதும் அறிந்ததுதான். &lt;br /&gt;&lt;br /&gt;பாடல்களின் இடையே பஸ்சுக்கு மட்டும் காசிருக்கும் சட்டைப் பைகளை, கசவின் கடன் புண்ணியத்தில் நான்கைந்து சிகரெட்டுகள் நிரப்பும். இதற்கிடையே கசவும் சிதறி கிடக்கும் தனது தலைமுடியை கையால் மேல் நோக்கி கோதி விடுவார். இந்த கோதி விடலுக்கு ஏதாவது ஒரு பெண் காரணமாகி இருக்கலாம்.&lt;br /&gt;அடுத்தடுத்த பாடல்களுக்குப் பிறகு, இன்னும் 5 நிமிடத்தில் பஸ் வந்துவிடும் என்கிற நிலையில், கச சோகமயமாகிவிடுவார். 'வைதேகி காத்திருந்தாள்" படத்தின் 'ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு..."வைப் போட்டதும் பேரூந்து நிறுத்தம் அமைதியாகிவிடும். மாயா மாளவ கௌளை ராகத்தில் (சரிதான் என நினைக்கிறேன்) அமைந்த இந்தப் பாடலுக்கு சிகரெட் பிடிக்கும் அண்ணன்களும் கசவும் கூடவே பாடிக்கொண்டு கொடுக்கிற expression களைப் பார்த்தால், கஞ்சிக்கு வழியில்லாமல் நாளையே செத்துவிடுவார்கள் போல இருக்கும். அப்படியொரு சோகம் எல்லாருக்குள்ளும். டவுண் பஸ் வந்து அள்ளிக்கொண்டு சென்றதும் மயான அமைதிக்கு ஆட்பட்டுவிடும் கட்சி கொடிகம்பங்கள் சூழ்ந்த பேரூந்து நிறுத்தம்.&lt;br /&gt;பெல்பாட்டம் அணியும் அண்ணன்களை இன்ஸ்பிரேஷனாக கருதும் சிறு பயல்கள், பருவத்து மீசை முளைத்ததும் கசவின் தோழர்களானார்கள். அண்ணன்கள் சீனியர்கள் ஆனதும் ஊரைக் காலி பண்ணுவதில் குறியாக இருந்ததால் அவர்களின் இடத்தை இவர்கள் பிடிக்க வேண்டியதாயிற்று. கசவுடன் நட்பு கொள்வதற்கு வெறும் பாடல்கள் மட்டும் காரணமாக இருக்கவில்லை. கசவின் கடன் கருணை தேவையாக இருந்ததால் நட்பு ஆழமானது. இந்த ஆழத்தில் கசவின் பாடல்கள், வாரம் ஒரு கேசட்டை புதுமையாக்கி வந்தன. இந்த புதுமையில் கச இன்னும் இளமையாகவே தெரிந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பான காலை இப்படியாகியிருக்க, கச கடையின் &lt;span style="font-size: x-small;"&gt;எதிரில்&lt;/span&gt;, அதாவது கருப்பசாமி கோயில் திண்டு, மாலை நேர மயக்கமாகியிருக்கும். எந்த பஸ் வரும்போது என்ன பாடல் என்பதை அவர் அறிந்திருப்பார். அறியாத பருவம் எங்களுக்கானது. இங்கிருந்துகொண்டு கசவின் முகத்தை இங்கே திரும்ப வைக்க போதுமானதாக இருந்தது விசில். நாக்கை மடக்கி ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்து அமுக்கி உஷ்...என்கிற ஊதலில் வரும் ஒலியை ஆங்கிலம் விசிலாக்கி இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், டிக்ஸ்னரிகள் இதற்கு சொல்லியிருக்கிற 'சீழ்க்கையொலி' என்பதுதான் புரியாததாக இருக்கிறது. இந்த விசிலுக்கு அர்த்தம் யாரிடமாவது சிகரெட் கொடுத்து விடு என்பதாகவோ, அல்லது எதிர்பார்க்கிற பாடலை போடு என்பதாகவோ, கச அறிந்துகொள்வது யாருடைய விசில் என்பதை பொறுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பிழைப்புக்காக கிராமம் ஒவ்வொருவரையும் நகரத்துக்கு அனுப்பி வைக்க, ஆட்களற்று கிடக்கிற கோயில் திண்டுகளில் கடைகள் முளைத்திருப்பது ஆச்சரியம்தான். ஏதோ ஒரு மழை நாளில் தலையில் துண்டை போட்டுக்கொண்டு மீனாட்சி நடுநிலைப்பள்ளி வாசலில் நிற்கிற கசவை பார்த்ததும், அவருக்கு அடையாளம் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி புரியவைத்ததும் ,'ஏய் தம்பி, எப்படிடே இருக்கே...? கடைய இப்ப வீட்டுக்கிட்ட மாத்திட்டேன்... பஸ்-ஸ்டாண்ட்ல நிறைய கடைகள் வந்துட்டுலா." என்றவர் குடும்பம் பற்றி விசாரித்து விட்டு சொன்னார்:&lt;br /&gt;&lt;br /&gt;''உங்கூட வருவாம்லா முத்துசாமி, இன்னும் 245ரூவா பாக்கி வச்சிருக்காம்டே..."&lt;br /&gt;சில பாக்கிகள் வசூலிக்கப்படாமலே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-2432017723906014211?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/2432017723906014211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=2432017723906014211' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2432017723906014211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2432017723906014211'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/09/blog-post_24.html' title='பஸ்-ஸ்டாண்ட் - சில நினைவுகள்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-3753869785501177094</id><published>2011-09-12T05:52:00.000-07:00</published><updated>2011-10-17T01:29:02.462-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>கொடலு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;''நீ&lt;/strong&gt; கேட்டா கேளு , கேக்கலைன்னா போடா பேராண்டி. ஆனா, சொல்லாம இருக்கமாட்டேன். இப்ப எழுவத்தஞ்சுன்னு வச்சுக்கோ, ஒங்க தாத்தன், மேல போயி என்னா, பதினைஞ்சு வருஷம் இருக்குமா? அப்பன்னா எனக்கு அறுவது வயசு. மில்லு வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்தேன். ஷிப்டுக்கு எந்திரிக்கணும், மயிரு, மம்பட்டிங்கதையெல்லாம் போயி, நிம்மதியா இருந்த நேரம். அப்பதாண்டா, என் கடைகுட்டி மவன் பெறந்தான். மூத்த மவன் பொண்டாட்டிக்கும் அப்பதான் பேர்காலம். ‘பேரனை கொஞ்ச வேண்டிய வயசுல, பிள்ளைய பெத்திருக்கான் பாரு'ன்னு காதுபடவே கேலி பண்ணுனாவோ. எனக்கு மொதல்ல ஒரு மாதிரியாதான் இருந்துச்சு. ஆனா, என் மூணாவது பொண்டாட்டிக்கு வயசு என்னங்க அப்ப? முப்பத்தஞ்சுதான். அந்த வயசுல அவா பிள்ளை பெக்கதுக்கு என்ன இருக்குங்க? அந்தானி கண்டுக்கல. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்துலலாம் எப்படியிருப்பேம்னு நெனைக்கே. உடம்பு, இன்னா இப்படி இருக்குத மாதிரி ஒல்லியாதான் இருக்கும். நல்லெண்ணயை குளுர குளுர தலைக்கு தடவி, பாகவதரு மாதிரி முடிய வழிச்சு சீவி விட்டுட்டு, மீசைக்கும் எண்ணெய் தடவி லேசா மேல பாத்து திருக்கி, கை காலெல்லாம் தேங்காய் எண்ணெய்யை தடவிட்டு, சட்டையை போட்டு, வேட்டியை மடிச்சுக்கெட்டி தெருவுக்குள்ள நடந்தா... அத்தை மவளுவோலாம், கெறங்கி போயி நிப்பளுவோடா. பார்த்தாளுவோன்னு வையி, சலங்கை சத்தம் மாதிரி, க்ளுகுன்னு ஒரு சிரிப்பு வரும் பாரு... ச்சே உடம்பு நடுங்கி போயிரும்லா. இந்தா கைய பாரு, சொல்லும்போதே சிலுக்குதுடே. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு தெருவுல, கெழக்க இருந்து மேக்க வரை, கலக்க கலக்கமா வீடுவோ, தொழுவத்தோட இருக்கும். இப்ப இருக்குத தட்டடி வீடுவோள்லாம் அப்பம் இல்ல. எல்லா வீட்டுலயும் கொறஞ்சது பத்து இருவது மாடுவோளும், இருவது இருவத்தஞ்சு ஆடுவோளும் இருக்கும். எங்க வீட்டுலயே எத்தன மாடுவோங்க, எழுவத்தைஞ்சு செம்மறி. எட்டு காளைலு. &lt;span style="font-size: x-small;"&gt;பன்னெண்டு &lt;/span&gt;&amp;nbsp;பசு. இப்பம் என் வீடு இருக்கு பாரு. மூணு பயலுவோளுக்கும் நான் பிரிச்சு கொடுத்த வீடுவோ இருக்குல்லா, அதெல்லாம் சேர்த்தா எவ்வளவு பெரிய தொழுவுன்னு பாத்துக்கோ. அப்படியிருக்கும் எல்லா வீடும். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கம்மய்க்கு ஏழு அண்ணனுவோ. தெருவுல நடந்தா, பாதி வீடுவோ என் மாமன் வீடுதான். சின்ன மாமன், பெரிய மாமன்னு பொண்ணுவோளா வேற பெத்து வச்சிருந்தானுவோ. நமக்கும் கொண்டாட்டம்தான் பாத்துக்கோ. &lt;br /&gt;&lt;br /&gt;இப்பம், இந்தா வடக்கு வீட்டுல இருக்காம்லா, சொள்ளமுத்து கோன், அவன் அம்ம யாருங்க... நான் கெட்ட வேண்டியவா? எனக்குதாம்னு பேசி முடிச்சுட்டாவோ. ஆழ்வாருச்சுல தண்ணி பாய்ச்சுத தகராறு. நம்ம ஊருக்கு &lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;தண்ணிய திருப்ப கூடாதுன்னானுவோ. பெரிய மனுசனுவோ பேசிட்டிருக்கும்போது ரொம்ப முண்டுனான் ஒரு நாயி. பொசுக்குன்னு கோவம் தலைக்கேறிட்டு எனக்கு. பொட்டுன்னு கையை வெட்டிட்டேன். மணிகட்டு துண்டாயிப்போச்சு. பெறவு போலீஸ், கேஸுன்னு ஆனதால, நம்மள கேவலமா பாக்க ஆரம்பிச்சுட்டாவோ. நான் என்ன எனக்காவவா போயி அவன வெட்டுனேன். ஊருக்காவதான? எங்க மாமன், பெரிய இவன் மாதிரி சொள்ளமுத்துகோன் அப்பனுக்கு கெட்டி வச்சுட்டாம். அவளும் என்னயதான் கெட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னான்னு கேட்டதும் ரொம்ப துடிச்சுப்போயிட்டேண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெறவு பல சந்தர்ப்பத்துல மனசுக்குள்ள ஒரு மாதிரி இருக்கும். சரி, இன்னொருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா. அவனும் என்ன யாரோ ஒருத்தனா? சொக்கார பயதானேன்னு, எதிர்ல அவா வந்தா கூட பார்க்க மாட்டேன். அவளும் கீழ குனிஞ்சுகிட்டு இறுமுத மாதிரி, ஜாடையில பேசுவா. இனும பேசி எதுக்குன்னு கண்டுக்கிடமாட்டேன். அவா சாவுத வரை ஒரு வார்த்தை பேசலடே பேராண்டி. இது ஊர்ல இப்பவரை யாருக்கும் தெரியாது. யாருகிட்டயும் நானும் போய் சொல்லலை. இதை ஏன் போய் சொல்லணும்? இருந்தாலும் மவராசி செத்த பெறவுதான் சொல்லுதேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா... நீ கூட கேட்டுட்டே இருந்தியே கொடலு கதைய சொல்லுன்னு. பெறவு சொல்லுதேன்னு நானும் தள்ளிப்போட்டுட்டேன். அது ஒண்ணுமில்லலேடே. கருத்தப்பிள்ளையூருக்கு கள்ளு குடிக்கப் போயிருந்தோம் நாலஞ்சு பேரு சைக்கிள்ல. சிவசைலத்துல இருந்தும் நாலஞ்சு பேரு குடிக்க வந்திருந்தானுவோ. &lt;br /&gt;&lt;br /&gt;கள்ளை இறக்க இறக்க, ஒவ்வொரு கலயத்தையா நாங்க காலி பண்ணிட்டுருக்கோம். சிவசைலத்துக்காரனுவோ, இந்தா தருவாரு, அந்தா தருவான்னு நிக்கானுவோ. அந்தானி, சண்டையாயி போச்சு. 'அதுல ஒரு பய, கொடலு மாதிரி இருந்துட்டு நீயெல்லாம் பேச வந்துட்டியோ"ன்னாம் என்ன பாத்து. 'நான் என்ன கொடலு கனக்காவா இருக்கேன்"ன்னு பொறுக்க முடியல. உள்ள வேற வெஷம் போயிருக்கா. ஓங்கி ஒரு மிதி, வயித்துல. பின்னால கல்லு. நங்குன்னு முதுவுல குத்தி, படுத்துட்டாம் மூச்சு பேச்சு இல்லாம. அவனுவ கூட நினன்வனுவோ, அருவாளை எடுக்க, கள்ளு தந்தவன் வச்சிருந்த பாளை அறுவாளை தூக்கி நாங்க வெட்டப் போவன்னு சண்டை பாத்துக்க. சரி, அசலூர்ல போயி, கள்ளுக்குடிக்க வந்த இடத்துல அப்படி வீம்புக்கு நின்னுற முடியுமா? அவனுவோ, 'இன்னா ஊர்ல இருந்து ஆளை கூட்டியாரோம்"னு போயிட்டானுவோ. நாங்க கள்ளுக்கு துட்டு கூட கொடுக்காம, சைக்கிளை &lt;span style="font-size: x-small;"&gt;திருப்பிட்டோம்&lt;/span&gt;&amp;nbsp;ஊருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;பெறவு எங்கூட வந்த மூதி ஒண்ணு, அந்த 'கொடலு'ங்குத வார்த்தைய புடிச்சுட்டாம். ஊரு பூரா அதையே சொல்லி நாறடிச்சுட்டாம். நானும் அப்படித்தானடே இருப்பேன். ஆனாலும் தெரியாத பய எவனாவது சொன்னாம்னா தாங்க முடியாது. தெருவுக்குள்ள மாமன் , மச்சாம்னு இருந்துக்கிடுவோம். அதுக்காவ, இன்னொரு பயல கேலி பேச உடலாமாடெ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தாம் ஆத்துக்குள்ள இருக்குல்லா பட்றையன் கோயிலு. அதுக்கு ஒரு நாள் கொடை. பூங்குறிச்சு, பாப்பாங்கொளம், ஆழ்வாரிச்சுல இருந்துலாம் ஆட்கள் வந்திருக்காவோ. ராத்திரி கெடா வெட்டு நடந்தது. வெட்டி முடிஞ்சதும் நேந்துக்கிட்டவனுவோ, கெடாவ இழுத்துட்டு உரிக்கப் போறானுவோ. ஒரு பய, 'ஏய்...கொடலு'ன்னு சிரிச்சாம். பக்கத்துல பொட்டபிள்ளைலுவோ வேற நின்னுச்சு. எனக்கு மண்டைல சூடு ஏறிட்டு. சத்தம் மட்டும் வருது. எவம்னு தெரியல. இடுப்புல மடக்கு (கத்தி) வச்சிருந்தேன். திரும்ப திரும்ப அங்க இங்கன்னு இருந்து 'கொடலு"ன்னு சத்தம் வருது. அந்தானி ஒரு பயல பாத்துட்டேன். கெவனிக்காத மாதிரி, அவன் பக்கத்துல இருக்குத சாமிய, கும்புடுதாப்ல நின்னுக்கிட்டேன். பாப்பாங்கொளத்துக்காரன். பெறவு அந்த பய புளியமரத்துக்கிட்ட போனாம். கொஞ்சம் இருட்டா இருந்தது. பின்னால பிட்டத்துல ஓங்கி ஒரு குத்து. யம்மான்னு கத்துனாம். அந்த பய திரும்பி பாக்கதுக்குள்ள மடக்கை உருவிட்டு ஓடிட்டேன். கொஞ்ச பேரு வெரட்டிட்டு வந்தானுவோ. நம்மளை எங்கடா புடிக்க முடியும் பேரா?&lt;br /&gt;&lt;br /&gt;காலைல வெவாரம். நான்தாம்னு எவனோ சொல்லிட்டாம். நானும் ரொம்ப இதுலாம் பண்ணல. ஆமாய்யா. நாந்தான் குத்துனேன். எல்லாரு முன்னாலயும் கிண்டல் பண்ணுனா,பொத்திட்டிருக்க முடியுமான்னு கேட்டேன். 'சரி அவனே ஒத்துக்கிட்டாம். போத்தி கோயிலுக்கு மூணு லிட்டர் எண்ணெய் ஊத்தணு"ம்னு தீர்ப்பு சொன்னாவோ. எங்கய்யா, நாலு மிதி மிதிச்சாரு, என்னை&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ய&lt;/span&gt;&lt;/span&gt;. பெறவு, காசக் கொடுத்தாரு. செட்டியார் வீட்டுல போயி எண்ணெய வாங்கி ஊத்தி வெவாரம் முடிஞ்சுப் போச்சு. வெவாரம் முடிஞ்சாலும் 'கொடலு'ங்கத பட்டப்பேர்ல கூப்பிடுததை ஊர்க்காரனுவ விடல. இன்னும் கொடலுதான். பார்க்கதாண்டே இப்பவும் அப்படியிருக்கேன். ஆனா, வைரம் பாய்ஞ்ச ஒடம்பு. இப்பவும் எங்கூட எவம் கம்பு (சிலம்பு) சுத்த வருவாங்க?. நம்ம துரையப்பா, நல்லா வீடு கட்டுவாம். ஆனா, நாலாவது வீடுக்கு கால் வரிசை போவும் போது மேல ஒரு பல்டி அடிச்சு குதிக்க சொல்லு பார்ப்போம்? முடியாதுடே. ஆனா, இன்னைக்கும் நான் சாதிக்கம்லா. இந்த கிருஷ்ண பெறப்பு விழாவுல நானும் கம்பு சுத்துதம்னு கேட்டேன், வன்னிய நம்பிகிட்ட. 'சின்ன பயலுவோளுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நானே கம்பு சுத்தலை"ன்னாம். அதும் சரின்னுட்டு வந்துட்டேம். ஆனா, அடுத்த வருஷம் விட மாட்டன்டே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;என் இரண்டாவது மவன் புள்ள இருக்காம்லா, அதாண்டே மந்திரப் பய. 'ஏய் கெழவா, ஏன் அங்க இங்கன்னு லாந்திட்டிருக்கே... ஒரு இடத்துல கெடக்காம?"ன்னு ரோட்ல வச்சு ஏளனமா பேசுதாண்டே. இவனுவோளுக்கு என்ன தெரியுங்க. ரெண்டு மூட்டை நெல்லை தூக்கிட்டு நடப்பானா இவன்? என்னால இப்பவும் முடியும்டெ. எம்மாத்திர பயலுவோ இவனுவலாம் என்னைய கேள்விக் கேக்காம்? நான் கெழமாம்.&amp;nbsp; என்னமோ&amp;nbsp; சொன்னானாம்&amp;nbsp;&amp;nbsp; கதையில எலி லவுக்கை கேட்டதாம் சபையிலங்கத&amp;nbsp;மாதிரி...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;என்னத்த சொல்ல? &lt;/div&gt;&lt;br /&gt;நம்ம பரம்சம் இருக்காம்லா, அவன், 'கோயில்ல அன்னதானம் போடுதம்யா. நேத்திக்கடனு. பூசை பண்ணுதோம்.வந்து கும்புட்டுட்டு போரும்"ன்னான் எங்கிட்டே. ஒரு பெரிய மனுஷன்னு மதிச்சு கூப்புடுதாம். போவாம இருக்க முடியுமாடா? போயிட்டேன். போயி சாமி கும்புட்டுட்டு இருக்கும்போது, பரம்சம், பந்திக்கு கூட்டிட்டு போயிட்டாம். பந்தில ஊரே இருக்கு. நான் உக்கார்ந்தா என்னடே? சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு இருக்கேன். சைக்கிள்ள வந்த இந்த மந்திர பய, 'இங்கலாம் வந்து சாப்ட்டு குடும்பத்தை கேவலப்படுத்துதியே'ங்காம். இதுல என்னடே கேவலம் இருக்கு? என்னமோ போங்கப்பா... நாங்கலாம் பார்க்காததா? செய்யாததா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்பா, ஏண்டா பேரா, பின்னால என் மூணாவது மவன் சத்தம் மாதிரி கேக்குதே... அவனான்னு பாத்து சொல்லு. நான் தலைல துண்டை போட்டுக்கிடுதேம். ஏன்னா, இப்பலாம் மோசமா ஏசுதாம்பா. 'சின்ன பயலுவோள கூட்டிட்டு வந்து டாஸ்மாக்ல ஏன் கூத்தடிக்க'ன்னு அடிக்க வாராண்டே.&lt;br /&gt;......................&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-3753869785501177094?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/3753869785501177094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=3753869785501177094' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3753869785501177094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3753869785501177094'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/09/blog-post.html' title='கொடலு'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-4526632737344435723</id><published>2011-08-10T06:00:00.001-07:00</published><updated>2011-08-10T06:00:54.949-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><title type='text'>ஊர் என்பது, ஞாபகமாகவும் இருக்கலாம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div closure_uid_takft3="155"&gt;&lt;div closure_uid_5cmuui="139"&gt;ஊர் என்பது அடையாளம் மட்டுமல்ல. அது ஏராளமான சுகங்களையும் துக்கங்களையும் அடைத்து வைத்திருக்கிற ஆழ் புதையல். ஒரு தெரு, ஒரு கோயில், ஒரு வாய்க்கால், ஆறு, வயல்வெளி சொல்லி தருகிற அல்லது சொல்லிப்போகிற அனுபவங்கள் நிறைய. வாழ்க்கையில படிக்கவும் வாழ்க்கையை படிக்கவும் ஊரில் இருக்கிறது ஏராள விஷயங்கள். அந்நிய தேசம் அல்லது நகரம் பிழைப்புக்கு படியளந்து கொண்டிருந்தாலும் பிறந்த ஊர்தான் உயிருக்குள் கடைசிவரை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் உயிர். அந்த ஊரின் மடியில் நாம் சப்பரமாகவும் இருந்திருக்கலாம், சம்மணம் போட்டும் அமர்ந்திருக்கலாம். &lt;/div&gt;&lt;div closure_uid_5cmuui="139"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;ஊர் என்பது தவிப்பு. தினமும் நடந்து போகிற ஒற்றையடி பாதையின் சிறு மணல்கள், நம் பாதத்தின் வாசனை அறிந்திருக்கும். செடியோடு பேசவும் மரங்களோடு பாடவும் வீட்டுக்குள்ளேயே இருக்குமொரு, அணில்கள் ஏறி இறங்கும் தோட்டம். சிதறி கிடக்கிற இளநீர்களில் செவ்விளநீர் வெட்டித்தரும் அம்மாவின் வியர்வை இளிநீரோடு இனித்தே இருக்கும். தலை முடி கலைக்கும் எதிர் காற்று தந்துபோகும், தாத்தாவின் வெற்றிலை வாசம். தெப்பம் ஓடாத குளமும், தெருவுக்குள் வராத ஆலமரத்திண்டும் நித்தம் சொல்லும் ஏராள கதைகள். பறிக்க அழைக்கிற புளியம்பிஞ்சுகளின் காம்பும், பறிகொடுக்க தவிக்கிற கொடுக்காபுலிகளும் திருடச்சொல்லும் மாங்காய்களும் கிராமத்து ருசியை நாக்கில் வைத்துக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;div closure_uid_takft3="154"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஊர் என்பது பாசம். தவிக்கவிட்டுப்போன தலைமுறைகளை தினமும் ஞாபகத்தில் வந்துகொல்லும். சாமி அழைப்போ, ஆழ்வார்க்குறிச்சி தேரோ, அம்மன் கோயில் கொடையோ... ஒரு திருவிழாவில் உற்சாகம் வீசிவிட்டு போகிறது ஊர். அந்த திருவிழாக்களுக்குள் ஒழிந்துகிடக்கிறது தாவணிகள் தாங்காத காதலும், பார்வைகள் எறிந்த ஏக்கங்களும். காலையில் பார்த்தும் மாலையில் நலம் விசாரிக்கும் பாம்படப் பாட்டிகளும், ஊன்றுகோல் வயதுதாண்டியும் மண்வெட்டி பிடிக்கும் இளைஞர்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது ஊர். ஆடுமாடுகளின் பிரசவம் பார்க்கும் கொம்பையா தாத்தாவும் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கும் கிட்னம்மாவும் எந்த வகுப்புக்கும் போகாமல் டாக்டரான ஆச்சரியம் இன்னும் இருக்கிறது. பச்ச உடம்புக்காரிக்கு பச்சிலை/கசாயம் தரும் மாடத்தி பாட்டியும் ஈசான மூலை பார்த்து வானிலை சொல்லும் மூக்கம்மா ஆச்சியும் அதிசயிக்க வைக்கிறார்கள் இன்னும்.&lt;br /&gt;&lt;div closure_uid_takft3="153"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_takft3="153"&gt;ஊர் என்பது காதல். தெரிந்தோ தெரியாமலோ எல்லா ஊர்களும் முதல்காதலை மூச்சுக்குள் முளைக்க விட்டுவிடுகிறது. மூச்சடங்கி விழும் வரையும் அது மூச்சுக்குள் வாழும் வித்தை விந்தையாகவே இருக்கிறது. பனிகாலத்திலும் அதிகாலை நேர ஆற்றுக்குளியலோ, காலைநேரத்து பேருந்து நிறுத்தமோ, மாலைநேரத்து வாய்க்காலோ, கருவைமுட்கள் வளர்ந்திருக்கிற தெருவோ... காதல் வளர்க்கும் இடங்களாக இருக்கலாம். &lt;/div&gt;&lt;div closure_uid_takft3="152"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_takft3="152"&gt;ஊர் என்பது ஏக்கம். வயிற்றுப்பிழைப்புக்காக வாழ்க்கை, நகரத்துக்கு விரட்டிய பின்பும் நகராமல் இருக்கிறது ஏக்கமான ஊர். புழுதிக்காடும், பூ மணக்கும் வீடும், உருண்டு புரண்ட மண்ணும், விழுந்த எழுந்த குளமும் ஒரு நொடியில் ஊசிகுத்திப்போகிறது உயிர் பலூனில். இருந்தாலும் அன்றுபோலில்லை ஊர். புழுதிக்காடு சிமெண்ட் சாலையாகியிருக்கிறது. பூக்களற்று இருக்கிறது பூமணக்கும் வீடு. எப்போதும் குழுமியிருக்கும் தெப்பக்குளத்திண்டு ஆளின்றி தவிக்கிறது. மணல்கள் இல்லாத ஆற்றில் புதர் முளைத்திருக்கிறது. கூட்டங்களால் நிரம்பி வழிகிறது பேருந்து நிறுத்தம்... ஜனத்தொகையை மிஞ்சியிருக்கிறது உள்ளூர் கடைகள். சின்ன பசங்களை பெரியவர்களாக்கியிருக்கிறது டாஸ்மாக் போதை...&lt;/div&gt;&lt;div closure_uid_takft3="149"&gt;ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-4526632737344435723?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/4526632737344435723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=4526632737344435723' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/4526632737344435723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/4526632737344435723'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/08/blog-post.html' title='ஊர் என்பது, ஞாபகமாகவும் இருக்கலாம்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-2555647940015283960</id><published>2011-07-13T05:06:00.000-07:00</published><updated>2011-07-13T05:06:29.591-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ரயில்கள் தடதடக்கும் சாலை</title><content type='html'>&lt;em&gt;''எப்படி இருக்கே, நல்லாயிருக்கியாங்கற பார்மல் விசாரிப்புகளைத் தாண்டி நிறைய பேசணும் போல இருக்கு. 'அப்படியென்னெத்த பேசிடுவே' ன்னு உனக்கு தோணும். எங்கிட்ட பதிலில்லை. ஏன்னு தெரியலை. வழக்கமா, பத்து பதினோரு மணிக்கெல்லாம் தூங்கிடுவேன். இப்போ முடியலை. காலையிலதான் தூக்கமே வருது. 'என்னைப் பத்தியே நினைச்சுட்டிருக்கியா'ன்னு நீ கேட்காத. இது, அது இல்லை. கண்ணுக்குள்ள, ஒரு கருப்பு நிலவு உட்கார்ந்துகிட்டு என்னை மேலே மேல அழைக்குது. வேண்டாம், வேண்டாம்னு நினைச்சு இமைகளை மூடிக்கிட்டாலும் முடியலை. ஆனா, திடீர்னு றெக்கை கட்டிட்டு வந்து நிற்கிற வெள்ளை நிற குதிரைகளைப் பார்த்தா, ஏறி உட்கார்ந்திடறேன். அந்த கருப்பு நிலவுக்குதான் அது போகுதுன்னு நினைச்சிட்டிருந்தா, அதையும் தாண்டி, எங்கயோ கொண்டு போகுது. போகும்போது, முகத்தை திருப்பி என்னை பார்த்துக்கிட்டு கொஞ்சமா அழுது. அந்த அழுகை ஏன்ங்கறது எனக்கு புரியலை. புரிஞ்சா மட்டும் என்ன பண்ணிடப்போறேன்?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-பழைய நோட்டுகளை, அல்லது புத்தகங்களை திறந்து பார்க்கும்போது ஏதாவது, இப்படியொரு பக்கத்தை பார்க்க நேர்ந்துவிடுகிறது. பழையவற்றை படிப்பதும் அதன் நினைவுக்குள் முங்கி எழுவதும் சுகமான மரணம். எப்போது எழுதினேன், ஏன் எழுதினேன் என்கிற விஷயங்களும் வந்து விடும்போது, மீண்டும் பிறந்து மீண்டும் இறப்பதான உணர்வு. ஒவ்வொரு நோட்டின் கடைசி சில பக்கங்களில் எழத ஆரம்பித்து, பாதியில் நிறுத்தியிருக்கிற விஷயங்களை மீண்டும் தொடரலாமா என நினைத்து, அப்படியே விட்டுவிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஊரையும் போல, கீழாம்பூர் ரயில்வே ஸ்டேஷனும் ஊரைத்தாண்டிதான் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டுகளை விட ரயில்வே ஸ்டேஷன்கள் அதிக ஈர்ப்பை தருபவை. அதன் தனிமையும் வளர்ந்து நிழல் விரித்திருக்கிற மரங்களும் கூட, அந்த ஈர்ப்புக்கு காரணமாக இருக்கலாம். அது மட்டுமில்லாமல் எல்லா மரங்களும் ஏதோ ஒரு வரிசையில் வளர்க்கப்பட்டிருப்பதற்கான காரணமும் ஆச்சர்யமானவை. இரண்டு மூன்று முறை மட்டுமே வந்துபோகிற ரயில்களுக்காக, தனிமை காட்டில் காத்திருக்கிற மாஸ்டரும், கேட் கீப்பரும் பரிதாபத்துக்குரியவர்களாகவே தெரிவார்கள். பிழைப்புக்கு இன்னொரு பெயர்தான் பரிதாபம் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. சின்ன வயதில் ஒரே ஒரு முறை, அம்மா மற்றும் அக்காவுடன், சாத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு ரயிலில் சென்ற ஞாபகம் இருக்கிறது. அதை விடுத்து ரயில் பயணங்கள் அப்போது எனக்கு வாய்க்கவில்லை. எங்கள் ஊருக்கு வந்த மாஸ்டரின் மகன் என்னுடன் படிக்க நேர்ந்த காரணத்தாலும் அவன் வீட்டில் அடிக்கடி ப்ரூ காபி தருவார்கள் என்பதாலும் பள்ளி விடுமுறை நாட்களில் ரயில்வே ஸ்டேஷன் எனக்கும் போதிமரமானது. 'அவங்க வீட்டுல போயி படிக்கப் போறேன்' என்ற பொய்யில் அம்மாவும் தலையாட்டிவிடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;''ஆச்சர்யமா இருக்கு. நனைச்ச புளியங்கொட்டையை தின்னுக்கிட்டு, நீ வருவேங்கறதுக்காக மூணு கிலோமீட்டர் நடந்த கால்களுக்கு, இப்ப பக்கத்துலயே நீ இருக்கேன்னு தெரிஞ்சும் நடக்கவே முடியலை. கொஞ்ச நாளா, வந்து வந்து போகிற உன்நினைவுகளை மொத்தமா மூட்டைக்கட்டி தூக்கி வைப்பேன். இருந்தாலும் அது ஒண்ணும் மூட்டை இல்லையே, வைக்கிற இடத்துல உட்கார்றதுக்கு. கொஞ்சம் கொஞ்சமா கிருமி மாதிரி உடலுக்குள்ள நுழைஞ்சு , எல்லாத்தையும் அரிச்சுட்டு இருக்குது. திடீர்னு உன் நினைவுகள்ல இருந்து சூரிய ஒளி. வட்டமாகவும் இல்லாம, சதுரமாகவும் இல்லாம, வித்தியாசமான உருவத்துல இருந்தது அந்த சூரியன். என் தலையை மட்டும் வலது கையில எடுத்து வச்சுக்கிட்டு, அது கிட்ட போய்கிட்டே இருக்கிறேன். குளிரும் சூரியன். பக்கத்துல போக போக ஈரக்காத்து. நெஞ்சுக்குள்ள இருந்து நெருப்பு புகை வெளியேறி, கொள்ளளவு தாண்டி ஈரம் வந்து அடைஞ்சிடுச்சு...&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஹேண்டில்பரின் வலது பக்கத்தில், உருண்டு தொங்கிக்கொண்டிருக்கும் பெல்லை சரிசெய்துகொண்டே, சைக்கிளை அழுத்தினால் வந்துவிடுகிறது ஸ்டேஷன். செம்மண் தரை நிரம்பிவழியும் நேர்க்கோட்டு பாதையில், யாரும் வந்து அமராத சிமெண்ட் பெஞ்ச்களைப் பார்த்ததும் சினிமா காட்டியிருக்கிற ரயில்வே ஸ்டேஷன்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும். பெல்பாட்டம் அணிந்த அண்ணன்களும் பட்டு பார்டர் பாவாடை மற்றும் தாவணியில் அடிக்கடி மாராப்பை சரிசெய்கிற அண்ணன்களின் தேவதைகளும் ஓரக்கண்ணால் யாரையாவது பார்த்துக்கொண்டே சிரிக்கிற காட்சிகள் வந்து வந்து போகும். ரயில் வந்து நின்றதும் அவரவர்கள் கலைந்து ஒவ்வொரு பெட்டியில் ஏறிக்கொள்ள, காதலிக்கிற அண்ணனும் தேவதையும் அந்தந்த பெட்டியில் ஏறி நின்று, இவனை அவளும் அவளை இவனும் பார்த்துக்கொண்டே உள்நுழைவது இன்னும் சுவாரஸ்யமானது. இவர்களுக்கு தூது செல்கிற, அல்லது இன்னும் காதலி கிடைக்காத அண்ணன்கள், தலைமுடியை இப்படி அப்படி ஆட்டிக்கொண்டோ, அல்லது வாயில் இருக்கும் சிகரட்டை அவசர அவசரமாக மேலும் இழுத்து வீசிவிட்டோ, ஓடுகிற ரயிலை வேகமாக துரத்தி கம்பார்ட்மெண்ட் கம்பியில் தொங்கி ஏறுகிற ஸ்டைலும் அலாதியானது. இவ்வளவுக்கிடையிலும் ரயிலை தவறவிட்டுவிடுகிற அண்ணன்கள் அல்லது தேவதைகள் மூச்சுவாங்க, போகும் ரயிலின் பின்பக்கத்தை பார்த்துவிட்டு, மீண்டும் பஸ் ஸ்டாண்டுக்கு நடையை கட்டும் கதைகள் இருக்கிறது. இப்படியான எந்த காட்சிகளையும் இந்த ரயில்வே ஸ்டேஷன் தந்ததில்லை. மாறாக, பறவைகளின் சத்தங்கள் கூட இல்லாத தனிமை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உங்கிட்ட இப்படித்தான். நான் ஏதாவது சொன்னா, நீயா எதையாவது புரிஞ்சுக்கிட்டு பேசாம இருந்துடற. அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டருக்கு தோழிகளோட நீ சினிமாவுக்கு போறதா சொன்னே. வீட்டுல, கசங்கியிருந்த சட்டையையும், பேண்டையும் சம்படத்துல கங்குபோட்டு அயர்ன் பண்ணி -(அப்படியும் சுருக்கம் போகலை), ரெடியானேன். அம்மாகிட்ட ஆயிரத்தெட்டு பொய் சொல்லியும் காசு இல்லைன்னு சொல்லிட்டா. மூப்பனார் கடையில கதை சொல்லி, காசு வாங்கிட்டு தியேட்டருக்கு வந்தா டிக்கெட் இல்லை. படம் முடியறவரை தியேட்டர் வாசல்லயே நின்னேன், உன்னைப் பார்க்கணுங்கறதுக்காக. திடீர்னு கொலுசு ஒலி. என் கால்களைப் பார்த்தேன். சலங்கைகளா மாறியிருந்தது அது. உதறினேன். விதவிதமான ஒலி. காதல் ஒலிகள்னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. ஆனா, இடது கால்ல மட்டும் ரத்தம் பொங்கி வர்ற மாதிரி பீலிங். கா(த)ல் ஒலி, வலியா மாறிய ரகசியம் தெரியலை...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேஷனுக்கு உள்நுழையும் முன் அந்த சிறிய வீட்டின் முன்பு இருக்கிற 'குடை' வடிவ மரத்தைக் கண்டதும் ஆச்சரியமும், சிவப்புநிறத்தில் உதிர்ந்து கிடக்கிற அதன் பூக்களின் அழகும் நின்று போகச் சொல்லும். 'இந்த மரத்துக்கு என்ன பேரு' என்று யாரிடமாவது கேட்டால், பதில் சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன். என்னைப்போலவே அவர்களுக்கும் தெரியாமலிருந்ததில் ஆச்சர்யமில்லை. இந்த மரத்தை அடுத்து சைக்கிள்கள் செல்லும் ஒற்றையடி பாதையில் பெரிதாக வளர்ந்திருக்கிற அரச மரத்திண்டின் முன் தொப்பை கணபதி சிலை. யார் வந்து பூஜை செய்வார்கள் என்பதெல்லாம் தெரியாது. எப்போதாவது அவரின் கழுத்தின் ஒரு மாலையையும், நெற்றியில் குங்கும பொட்டையும் பார்த்திருக்கிறேன். அதன் அருகில் உட்கார்ந்து படித்தால் நன்றாக படிப்பு வரும் என்ற நண்பனின் யோசனையில் இங்கு உட்காரத் தொடங்கினோம். நண்பனும், ப்ரூ காபியும் வராத நாட்களில், கண்களை மூடி, உள்ளே என்னையே பார்த்துக் கொண்டிருப்பேன். காற்றடித்து இலேசாக ஆடி அசைந்து தலையில் விழுகிற ஆட்டின் வடிவ இலைகள், அந்த பாய்ச்சலை தடை செய்தாலும் நினைவுகள் நீந்தி நீந்தி செல்லும். ஆளரவமற்ற அந்த ஸ்டேஷனில் தனியாக அமர்ந்துகொண்டு, படிக்க வந்தவன், எழுத தொடங்குகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-2555647940015283960?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/2555647940015283960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=2555647940015283960' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2555647940015283960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2555647940015283960'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/07/blog-post.html' title='ரயில்கள் தடதடக்கும் சாலை'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-4774561480883688156</id><published>2011-05-28T00:33:00.000-07:00</published><updated>2011-05-28T22:19:20.172-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>கதைகள் உலாவும் வளவு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி? ஆச்சர்யமால்லா இருக்கு’.&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது வளவில் பீடிச்சுற்றிக் கொண்டிருந்தவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தாதற்கு, ‘கெழவிக்கு வேலை இல்லை’ என்பதாகவோ, ‘இப்படியெல்லாமா இருக்கும்?’ என்பதாகவோ காரணமாக இருக்கலாம். இரண்டு கருப்பட்டித் துண்டுகளை வாயில் போட்டுக்கொண்ட வசந்தா, இலைக்குள் புகையிலையை வைத்து உருட்டிக்கொண்டே, ‘கெழவி, அவன் பேரனை பத்தி ஏதாவது சொன்னா கொதிப்பா. மத்தப் பயலுவோன்னா எக்காளம் பேசுவா' என்று லேசான குரலில் சொன்னாள். அவளது இந்தப் பேச்சை ஆமோதிப்பதாக, வட்டமாக அமர்ந்து பீடி சுற்றும் பிள்ளைகள், ‘ஆமாமா" என்று தலையாட்டினார்கள். பாம்படம் ஆடும் பாட்டிக்கு காது கொஞ்சமாகத்தான் கேட்கும் என்கிற தைரியத்தில் அவளை, இவர்கள் அவ்வப்போது வாறுவதை பாட்டி அறிந்திருக்கவில்லை. பாட்டிக்கு காதுதான் கேட்கவில்லையே தவிர, கண்களின் பவர், ஜாஸ்தியாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு ஆறு என இரண்டு பக்கமும் 14 வீடுகளை கொண்ட, ‘ப’ வடிவத்தை மாற்றிப்போட்டால் இருப்பது போன்ற வடிவிலான வளவின் முதல் வீடு, லட்சுமணப் பெருமாளுடையது. சாக்கடை ஓடும் தெருவில் இருந்து, வளவின் படியேறி நின்றால், வலப்பக்கம் தெரியும் நீ...ண்ட திண்ணையில் எப்போதும் ஐந்தாறு பேர் கதையடித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக தாவணி அணிந்த பெண்கள். லட்சுமணப் பெருமாளும் அவரது மனைவியும் வயல் வேலைக்குப் போன பிறகு, பிச்சமாள் பாட்டிதான், வீட்டுக்கும் அவளது பேத்தி, மூக்கம்மாளுக்கும் காவல். ஏதோ காரணத்தால் கடந்த 5 வருடங்களாக திருமணம் தடைபட்டு தடைபட்டு, ‘எவன் வரப்போறானோ?’ என்று காத்திருப்பவள் மூக்கம்மாள். சைக்கிள் கடை செல்லையாவுக்கும் இவளுக்கும் அது இது என்று அரசல் புரசல் பேச்சும் ஊரில் கசிந்துகொண்டிருந்தது. இப்படி யாரையாவது பற்றி, கோள் சொல்லிக்கொண்டோ, அல்லது உண்மையை பேசிக்கொண்டோ இருக்காவிட்டால் உள்ளூர்க்காரர்களுக்கும் பொழுது போக வாய்ப்பில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் திண்ணை சும்மாதான் இருக்கிறது என்பதாலும் இங்கே உட்கார்ந்தால் தெருவில் செல்பவர்கள், வருபவர்களை பார்க்கலாம் என்பதாலும் அக்கம் பக்கத்து குமரிகள் இங்கு பீடி சுற்ற ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் பாட்டி சொல்லும் கிளு கிளு கதைகளில் விழுந்த கிடந்தார்கள் குமரிகள். அதை ரசிக்காதவர்களாகக் காட்டிக்கொண்டாலும் இன்னைக்கு, என்ன கதை சொல்லுவா? என்கிற தொனியில் அவர்களின் ஆர்வம் இருந்தது. இந்த கிளு கிளு கதைகள் பெரும்பாலும் ஊரின் மேல, கீழ, வட, தெற்கு தெருவில் பட்டப்பெயர்களுடன் அலையும் ஏதாவது ஒருத்தியை/ஒருவனைப் பற்றியதாக இருக்கும். இந்த கதைகளின் பொருட்டு பாட்டிக்கான முக்கியத்துவம் வளவின் இளம்பெண்களிடம் அதிகமாகியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மழை காலத்தில் மூன்றாவது வீட்டு கடையநல்லூராள் மகள், கடைக்காரனுடன் ஓடிப்போனதிலிருந்து அந்த மாதிரி கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பாட்டி. ஏதோ எடக்காக சொல்ல போய், பிள்ளைகளின் தன்னுணர்ச்சியை கீறி விடும் அவலத்துக்கு தான் காரணமாகி விடக்கூடாது என்று நினைத்ததையடுத்து பாட்டியின், அந்த மாதிரி கதைகள் அறவே நின்று போனது. ஏதாவது கல்யாணம், காட்சி என்று வளவு காலியாக இருக்கும்போது, இப்போதும் வசந்தா, ஆரம்பிப்பாள்:&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏ கெழவி, நீ கதை சொல்லி எவ்வளவு நாளாச்சு, இன்னைக்கொரு கதை சொல்லு?’&lt;br /&gt;&lt;br /&gt;‘நம்ம அம்மன் கதையை சொல்லுதேன், கேக்கேளாட்டியோ?' என்றதும் சுவாரஸ்யம் புஸ்ஸாகிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;‘அந்த கதையை எத்தனை தடவைதான் சொல்லுவ? செரி, விடு. கதையும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்'.&lt;br /&gt;&lt;br /&gt;‘ம்ம்ம்...உங்களுக்கெல்லாம் இடுப்ப ஒடிக்க ஒருத்தன் வந்தாதான் சரிபடுவியோ, கொழுப்பெடுத்துலா இருக்குவோ?' என்று தனக்குத்தானே பாட்டி புலம்பிவிட்டு வெற்றிலை பாக்குக்கு தாவிவிடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி, இப்போது குறை சொல்லும் கல்யாணி பயல், உள்ளூர் மீனாட்சிப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவன். படிப்பின் இடையே, பீடி சுற்றும் இளங்குமரிகளுக்கு தகவல் தெளிக்கும் தன்னலமில்லா தொண்டன். தொண்டன் என்கிற பதம் சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் புதிதாக தெரிந்த தகவலை சொல்லிவிடவில்லை என்றால், மண்டை வெடித்துவிடும் அளவுக்கு தவித்துவிடுவான் இவன். குறிப்பாக, பீடி சுற்றும் எல்லாரும் கல்யாணத்துக்கு காத்திருப்பவர்கள் என்பதால், தெருவில் ஏதாவது பேன்ட் &amp;amp; ஷர்ட் அணிந்த புதுமுகம் தெரிந்தாலோ, பட்டு, வேட்டி கட்டிக்கொண்டு புகைபிடித்து அலைகிற வீராப்பு பார்ட்டிகள் தெரிந்தாலோ, அவர்களைப் பற்றிய ஏ டூ இசட் விஷயங்களை அடுத்த நிமிடமே கொண்டுவந்து பகிர்பவன் கல்யாணி. இதோடு ஊரில் யார் வீட்டுக்கு பெண் பார்க்க வர இருக்கிறார்கள், அல்லது யார் யார் வீட்டில் பிரச்னை என்பது உள்ளிட்ட தகவல்களை காலை 8 மணி வாக்கிலும் மாலை ஆறு மணி வாக்கிலும் இரண்டு பகுதியாக பகிர்பவன். இதற்காக வளவு ஏரியாவில் பீடி சுற்றுபவர்களின் செல்லப்பிள்ளையாகி இருந்தான் கல்யாணி. இந்த செய்திகளுக்கு கைமாறாக &amp;amp; அவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கொடுக்கப்படுவது, அவித்த பயித்தங்காய், பொறி அரிசி, கிளிமூக்கு மாங்காய் துண்டுகள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவனைப் பற்றிய பிரச்னை என்னவென்றால் மண் தின்கிறான் என்பதுதான். மண் என்றால் ஆற்றுமணலோ, தரையில் கிடக்கும் புழுதி மண்ணோ அல்ல. சுவற்று மண். அதாவது மண்சுவற்றில் கட்டியாக, மஞ்சள் நிறத்தில் உறைந்து இருக்கும் சாரல் மண். &lt;br /&gt;&lt;br /&gt;பிச்சம்மாள் பாட்டி, தொழுவில் சாணத்தை அள்ளி, எருக்கெடங்கில் போடுவதற்காகப் போகும் போது, சந்திரமய்யர் வீட்டின் பின்பக்கத்து மண்சுவற்றில் கல்யாணி, ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்தாள். முதலில் பார்த்தபோது அவளுக்கு எந்த சந்தேகமும் வந்ததில்லை. தொடர்ந்து நான்கைந்துமுறை அதே இடத்தில் அவனைப் பார்க்கவும் நேராக, கிட்டே போய்விட்டாள். கிழவியை பார்த்ததும், மண்ணை கீழே போட்டுவிட்டு, ‘என்ன பாட்டி?’ என்றான். அவனது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. பாட்டி பார்த்துவிட்டாள் என்பதாகவோ, நாம் செய்வது மகா தவறு என்றோ, அவன் நினைக்கவில்லை. ஆனால், பாட்டிக்கு அது மகா தவறாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘இங்ஙன என்னல பண்ணுத’&lt;br /&gt;&lt;br /&gt;‘சும்மா நிக்கேன்’&lt;br /&gt;&lt;br /&gt;‘கட்டமண்ணு கிட்ட வந்து சும்மா நிக்கேன்னா என்னடே அர்த்தம்’&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன கெழவி பொசமுட்டிப் போச்சா ஒனக்கு?. எருக்கெடங்குல கொட்டிட்டன்னா போவியா? கேள்வி கேக்க’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏல, பொய் சொல்லாத, வாயை காட்டு’&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்தா பாத்துக்கோ’ என்று நாக்கை நீட்டினான். மஞ்சள் நிற மண்ணாகி இருந்த நாக்கு, ஒப்புவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘மண்ணால திங்கே...’&lt;br /&gt;&lt;br /&gt;‘போ... கெழவி, தொண்டைய போட்டு ஊரெல்லாம் கொட்டடிக்காத...’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒங்கம்மகிட்ட சொல்லுதேன்’&lt;br /&gt;&lt;br /&gt;‘சொல்லிக்கோ’&lt;br /&gt;&lt;br /&gt;கெழவி மட மடவென்று கிளம்பிவிட்டாள். அவள் சொன்னமாதிரி கல்யாணியின் அம்மாவிடம் இதை சொல்லவில்லை. அதற்கு அவளை நேரில் காணவில்லை என்பது காரணமாக இருந்தது. பீடி சுற்றுபவர்களிடம் சொல்லிப் பார்த்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘இந்த&lt;/strong&gt; கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி இப்படியொரு புத்தி? ஆச்சர்யமால்லா இருக்கு". அவர்கள் கண்டு கொள்ளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;'ஏட்டி, நான் என்ன சொல்லுதேன். நீங்க கேக்கேலா'’ என்று வசந்தாவின் வாயசைவை பார்த்து பாட்டி அதட்டவும், அவளை கவனித்தார்கள். அந்த இளங்கூட்டத்தில் வசந்தாதான் சீனியர் என்பதால் பாட்டி அவளிடம் கடிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அவன் எப்படி கெழவி, மண்ணைப் போய் திம்பான். நீயும் சொல்லுதே’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏட்டி, நா என்ன பொய்யா சொல்லுதேன். கையும் களவுமாலா புடிச்சேன்’&lt;br /&gt;&lt;br /&gt;‘அந்தப் பய வரட்டும். கேட்டுருவோம்’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேகம்&lt;/strong&gt; மூட்டமாக இருந்தது. இன்னும் செத்த நேரத்தில் மழை பெய்யலாம். கிழக்கே எங்கோ மழை பெய்வதை, வேகமாக வரும் குளிர்காற்று சொல்லிப்போயிற்று. வீட்டின் கொடியில் துணிகளை காயப்போட்டிருந்தவர்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டிருந்தார்கள். வீட்டின் வாசலில் காயப்போட்டிருந்த விறகு கட்டைகளை, உள்ளே அள்ளிப்போட்டுக்கொண்டிருந்தனர் சிலர். லேசான மழைத்துளி ஒன்று கல்யாணியின் கன்னத்தில் விழ, கைகளை மோட்டார் பைக்காக்கி டர் டர் என்று வேகமாக ஓடி வந்தான் வளவுக்கு. வந்து நின்றதும் மூச்சிறைத்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வாயில் ஆரஞ்சு வில்லையை எடுத்துப்போட்டான். திண்ணையில் யாருமில்லை. அவன் கால் டிரவுசர் பாக்கெட் இரண்டும் புடைத்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குள்ளிருந்து நனைய வைத்த அரிசியை தின்றுக்கொண்டு வந்த வசந்தா, அவனை அழைத்து, ‘ஏடே மண்ணு திங்கியாமே, நெசமா?’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமா’ என்று லேசாக சிரித்துக்கொண்டே, தலையாட்டினான் கல்யாணி.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏல, புள்ளத்தாச்சி பொம்பளைலுவோ, மாங்கா, சாம்பல், சார மண்ணுன்னு திம்பாவோ. ஒனக்கெதுக்கு? நீ பிள்ளையால பெக்க போறே?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அந்த அக்காளுக்காவ, கொண்டு போயி, கொடுத்து கொடுத்து எனக்கும் பழவி போச்சு’ &lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொல்ல சொல்ல வசந்தாவின் பின்னால் நின்று நாக்கைத் துறுத்தியும் கையை ஆட்டியும் சொல்லாதே என்று சைகை காட்டிக்கொண்டிருந்தாள் மூக்கம்மாள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-4774561480883688156?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/4774561480883688156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=4774561480883688156' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/4774561480883688156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/4774561480883688156'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2011/05/blog-post.html' title='கதைகள் உலாவும் வளவு'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-34161138070343507</id><published>2010-10-27T23:10:00.000-07:00</published><updated>2010-10-27T23:10:59.257-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>சாமிகள் பற்றிய குறிப்புகள்</title><content type='html'>0 ஆக்ரோஷமாக ஆடும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்கள் கொண்ட குலசாமிகளின்&lt;br /&gt;கண்களில் தெரிவது&lt;br /&gt;அருளா? கொலைவெறியா?&lt;br /&gt;.....................&lt;br /&gt;&lt;br /&gt;0 கொடையில்லா நாளில்&lt;br /&gt;கோயில் மரத்தில்&lt;br /&gt;இலை தின்னும் ஆடுக்கு தெரியாது&lt;br /&gt;நேர்ந்துவிட்டதும்&lt;br /&gt;நேர்த்திக் கடனானதும்&lt;br /&gt;&lt;br /&gt;........................&lt;br /&gt;0 வேப்ப மரத்துக்கு &lt;br /&gt;ஆத்தா வந்ததிலிருந்து&lt;br /&gt;பால் குடிக்க பழகிவிட்டது வேர்&lt;br /&gt;..........................&lt;br /&gt;&lt;br /&gt;0 சாமி சொன்னதாக&lt;br /&gt;குறி சொல்கிறாள் அம்மா&lt;br /&gt;சாமிக்கு யார் சொல்லுவார்?&lt;br /&gt;.......................&lt;br /&gt;&lt;br /&gt;0 ஏழு கெடா வெட்டி&lt;br /&gt;சாமிக்கு படைக்கப்படும் சோறில்&lt;br /&gt;களவாடப்படுவது&lt;br /&gt;கறிதுண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;...................&lt;br /&gt;&lt;br /&gt;0 வேட்டைக்கு போகும் சாமியின்&lt;br /&gt;எதிரில் சென்றால் அடித்துவிடும்&lt;br /&gt;மனிதனை அடிப்பது&lt;br /&gt;சாமியாகுமா?&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;0 பெரியசாமிக்கு யாராடுவது &lt;br /&gt;என்கிற சண்டையில் &lt;br /&gt;நடக்கிறது வெட்டு குத்து.&lt;br /&gt;வேடிக்கை பார்க்கிறது&lt;br /&gt;காக்கும் சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி: தினகரன் தீபாவளி மலர்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-34161138070343507?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/34161138070343507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=34161138070343507' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/34161138070343507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/34161138070343507'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/10/blog-post.html' title='சாமிகள் பற்றிய குறிப்புகள்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-8907133444491088667</id><published>2010-09-08T10:39:00.000-07:00</published><updated>2010-09-08T22:29:48.117-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>முன்னாள் கவிதைகள் 3</title><content type='html'>கரைகரையாய் மரமேறி&lt;br /&gt;காய்க்காய் முட்டைக்குடித்த &lt;br /&gt;கருப்பசாமி&lt;br /&gt;பெயர்மாற்றத்தோடு&lt;br /&gt;சினிமா இயக்குனரானான்&lt;br /&gt;&lt;br /&gt;தெப்பகுளத்தில் மீன் பிடித்து&lt;br /&gt;பிள்ளையார் கோயிலில்&lt;br /&gt;சுட்டுத்தின்ற பிச்சிமணி&lt;br /&gt;சயின்ஸ் வாத்தியாரானான்&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டை ஐயர் மண்டையில்&lt;br /&gt;கல்லெறிந்து குற்றத்துக்கு&lt;br /&gt;ஏழுமுறை பெருமாள் கோயிலை சுற்றிய&lt;br /&gt;டவுசர் மணி&lt;br /&gt;ஜெயில் சூப்ரண்டண்ட்&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் விழாவில்&lt;br /&gt;நாங்களெல்லாம் சந்தித்தோம்&lt;br /&gt;'ஹாய் அங்கிள்' என &lt;br /&gt;அவர்கள் குழந்தைகள் கைநீட்ட&lt;br /&gt;'எப்பா' என ஒடுங்கிக்கொண்டான் &lt;br /&gt;என் மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;ஊரெல்லாம் வில்லடிச்ச&lt;br /&gt;வெறுவாகெட்ட பயலுக்கு&lt;br /&gt;மொதப்பொண்டாட்டி இறந்ததும்&lt;br /&gt;பெரிய்வர் பண்ணிவச்சார்&lt;br /&gt;இரண்டாம் கல்யாணம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்க பாட்டுக்கு வந்த பொம்பளை&lt;br /&gt;மூணாவது மனைவியானதில்&lt;br /&gt;ஊரெல்லாம் த்தூ&lt;br /&gt;மாடன் கதை கேட்டு &lt;br /&gt;மயங்கி வந்தவள் &lt;br /&gt;நாலாவது மனைவி&lt;br /&gt;&lt;br /&gt;இதோடு களையெடுக்க வரும்&lt;br /&gt;கருத்தப்பிள்ளையூர் காரியுடனும்&lt;br /&gt;தொசுக்கு உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;நாலாவது மனைவிக்கு&lt;br /&gt;ஆம்பிளை பிள்ளை பிறந்தப்போ&lt;br /&gt;முதல் மகனுக்கு &lt;br /&gt;பொம்பளை பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;அப்பன் போனான் &lt;br /&gt;பேத்தியை பார்க்க&lt;br /&gt;மகன் போனான் &lt;br /&gt;தம்பியை பார்க்க.&lt;br /&gt;................................&lt;br /&gt;&lt;br /&gt;சாணம் மெழுகிய &lt;br /&gt;மண்த்ரை முற்றத்தில் &lt;br /&gt;மல்லாந்து படுத்த படி &lt;br /&gt;நட்சத்திரம் வியப்பேன்&lt;br /&gt;கோட்டைத் தெரு பொன்னம்மா&lt;br /&gt;குடத்தோடு போகையில்&lt;br /&gt;வெறித்த பார்வை&lt;br /&gt;நெஞ்சோடு நிற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;மந்தை தெரு மாரியப்பன்&lt;br /&gt;காதல் செய்யப்போய்&lt;br /&gt;கல்தூணில் கட்டி வைத்த &lt;br /&gt;பஞ்சாயத்தும் பயமுறுத்தும் இதனூடே&lt;br /&gt;&lt;br /&gt;கண்மூடி சொல்லமாடனை வேண்டுகையில்&lt;br /&gt;கவுரவம் பேசும் அப்பா தெரிவார்&lt;br /&gt;மீசையை தடவிக்கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கையில் கிடந்தாலும்&lt;br /&gt;பயத்தில் முங்கி போகும்&lt;br /&gt;ஆசையும் எண்ணமும்&lt;br /&gt;&lt;br /&gt;அடகு வைத்த &lt;br /&gt;அம்மாவின் நகை போல!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-8907133444491088667?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/8907133444491088667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=8907133444491088667' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/8907133444491088667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/8907133444491088667'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/09/3_08.html' title='முன்னாள் கவிதைகள் 3'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7672881217479032708</id><published>2010-09-08T10:37:00.000-07:00</published><updated>2010-09-08T10:37:38.507-07:00</updated><title type='text'>முன்னாள் கவிதைகள் 3</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-7672881217479032708?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/7672881217479032708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=7672881217479032708' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7672881217479032708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7672881217479032708'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/09/3.html' title='முன்னாள் கவிதைகள் 3'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7848282659145468002</id><published>2010-09-04T05:28:00.000-07:00</published><updated>2010-09-04T05:28:12.161-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>கி.ரா. என்கிற ஆச்சி</title><content type='html'>சுவாரஸ்யங்கள் அடங்கிய மொழி, சிலரின் வட்டமேஜையில் வட்டமடித்துக்கொண்டிருந்த போது, கிராமத்து கொச்சைத் தமிழுக்கான மொழி அந்நியப்பட்டு அனாதையாகக் கிடந்தது. அந்த அனாதையின் உயிர், அடர்த்தி, அழுத்தம், சகதிக்குள் முங்கி கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை, மண்ணின் வண்ணங்களாகப் பார்த்துக்கொண்டிருந்த மைந்தர்களுக்கு, அந்த அவமானம் தொண்டையில் இறங்கிய முள்ளாகத் தைத்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது பேச்சு தமிழை எழுதி வந்தவர்களும், வசை பாடிகளால் வதைப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தனர். மொழியின் ஆளுமையை ஒரு கட்டுக்குள் அடக்கிக் கொண்டு இதுதான் எழுத்து, இதை எழுவதுதான் சிறந்தது என்பதான அடக்குமுறை அது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக ஒன்றைக்கொண்டு வரும்போது அதன் நிஜ, சுக வினைகளைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் எதிர்வினைக்குள்ளாக்குவதையே தொழிலாக கொண்டவர்களின் குரல்கள் அது. ஓங்கி ஒலிக்கின்ற அந்த குரல்களின் பதிவுகளில் கோபமும் துவேஷமும் இருந்ததே தவிர, தர்க்க ரீதியான காரணம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுடைப்பு என்பது காலங்காலமாக வந்துகொண்டிருக்கும் விஷயமென்றாலும் கூடவே அதன் காலை சுற்றும் பாம்புகளின் விஷ நாக்குகளின் நீளமும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான பெருங்காட்டின் முட்களை தனது காலில் தாங்கிகொண்டு, வலிகளோடு, ‘கோபல்ல கிராமம்‘ வந்த போது, காடு தானாக பாதை விரித்தது. பரந்து விரிந்த அப் பாதையின் ஓரத்தில் பூக்கள் தானாகப் பூக்க தொடங்கின. இந்த பூத்தலையும் அது விரிக்கும் நீள அகலங்களையும் தாங்காமல் எறிந்து விழுந்த கற்கள், நிலை தடுமாறின. கி.ரா என்கிற வேர் ஆழமாக ஊடுருவியது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணின் ஈரம் தாங்கிய அது தரும் குளிர்ச்சியும், நிழலும் தெக்கத்திக்காரர்களுக்கு தாய்ப்பாலானது. அந்த தாய்ப்பால் தந்த ஊட்டத்தில் பேச்சுத் தமிழின் உயிரும் உருவமும் நிமிர்ந்து அமர்ந்தன. ஏளனமாகவும் இடக்காகவும் பார்க்கப்பட்டு வந்த மொழி, தனது நரம்புகளில் புது ரத்தம் பாய்வதை கண்டு புளகாங்கிதம் அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குள்ளும், ஊரின் தெருவுக்குள்ளும் வாய்க்கால் கரை, வயக்காட்டு வரப்புகளுக்குள் உருண்டு ஊஞ்சலாடி வந்த கதைகள், புத்தகத்துக்கு இடம்பெயர்ந்தன. நம் பாட்டனும் முப்பாட்டனும், தாத்தாவும் ஆச்சியும் சொல்லி வந்த சொலவடைகளும், கதைகளும் கிடை கூட்டங்களோடு இன்று பள்ளிக்கூடங்களுக்கு வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஊர் தெப்பக்குளத்தில் எருமைகளையும் நான்கைந்து செம்மறிகளையும் தண்ணிருக்குள் இறக்கிவிட்டுவிட்டு திண்டில் அமர்ந்து நான் படித்த புத்தகங்கள் எனக்குப் பயங்களை கொடுத்திருந்தன. பயத்திற்கான காரணம் அந்தக் கதைகளும் கதைகள் கொண்டிருந்த கற்பனைகளும், அதன் மொழி நடையும். இந்தப் பயங்களினூடாக சேக்காளி ஒருத்தன் கொடுத்த புத்தகத்தைப் படித்ததும் எனது குறுணி விதைப்பாட்டில் ஐந்து கோட்டை நெல் விளைந்த சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஏலே இவன் நம்மூரு சன்னாசி மவன் மாதிரிலா இருக்கு. இந்த புள்ள ஐஸ் விக்க வந்தவன் கூட ஓடிப்போன கல்லிடக்குறிச்சா மவ மாதிரிலா இருக்கு. ஏல பொந்தா இங்கேரு உன்னய போல ஒருத்தன். ஏ நாசமா போனவனே இங்க பார்ல...‘‘&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும் போதும் என் அம்மாக்களும் அக்காளுவோலும் அண்ணன்மார்களும், மைனிகளும், மச்சான்களும், ஊர்க்காரர்களும் எனக்குள் கி.ரா.வின் வழியாகப் பேசிப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாணம் மெழுகிய மண் தரை முற்றத்தில் மாட்டுத்தொழுவத்திலிருந்து எழும் சாண, மூத்திர வாசனை நுகர்தலுடன், கேட்காமலேயே வரும் கொசுக்கடியையும் தாங்கி மல்லாந்து படுத்திருப்போம். பெரியாச்சி சொல்லும் கதைகளில் எங்கள் இரவு கனவுகளில் நீழும். அந்தப் பாலியல் கதைகளை கேட்டு அக்காள்கள் சிரிக்க, ‘சின்ன புள்ளைலுவோகிட்ட என்ன கதைய சொல்லுதியோ‘ என்ற அம்மாவின் செல்ல கோபத்தையும் தாண்டி ஆச்சியின் கதைகள் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இறந்த பிறகு கதை சொல்லும் பாட்டிகளை தேட வேண்டியதாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதைகளை பேராசிரியர் ஒருவரிடம் யதேச்சையாக சொல்ல நேர்ந்த போது,&amp;nbsp;எரித்து விடுவதாகப் பார்த்தார். இம்மாதிரி அசிங்கமான கதைகளைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது. சொல்லக்கூடாது என்பது அவரது நிபந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையை அறுவறுப்பாக பார்க்க அதில் என்ன இருக்கிறது. அது என் முன்னோர்கள் சொன்ன கதை.&lt;br /&gt;&lt;br /&gt;‘ச்சீ... அசிங்கம்‘ என்று கூறப்பட்டு வந்த இப்படியான பாலியல் கதைகளை கி.ரா மூலமாக நான் படித்த போது எனக்கொரு ஆச்சி கிடைத்தாள் என்ற உணர்வுதான் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதைகளை விட அதில் கையாண்டிருக்கும் அவரது மொழி வியக்க வைக்கும் விஷயம். அவரது எழுத்தின், மொழியின் தன்மையில் கதைகள் கால் முளைத்து நடக்கின்றன. இம்மாதிரியான மரபை மீறிய அவரது மொழி எல்லோரையும் போல எனக்குள்ளும் சம்மணமிட்டு உட்கார்ந்து நகர மறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான கிராமத்துக் கதைகளை எழுதலாமா என்று நான் எழுத தொடங்கிய போது யோசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ‘எவன்டே சொன்னாம் எழுதக்கூடாதுன்னு. இதைதாம் எழுதணும்‘ என்ற கி.ரா வார்த்தைகள் அசரிரீயாக எனக்குள் விதைத்துவிட்டுப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;‘எனது ஊரையும் மக்களையும் நான் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுதததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை தலையில் வாரிப்போட்டுக்கொண்டும் என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப் பட்டிருக்கிறேன்‘ என்கிற கி.ரா.வின் ஆசைதான் எல்லோருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டி எழுப்பியிருக்கும் அணையை உடைத்துக்கொண்டு மண்ணின் மொழியிலேயே தனது படைப்புகளைக் கொண்டு வந்த, அவரது உரிமையும் உணர்ச்சியும்தான் சக எழுத்தாளர்களைப் போல எனது ‘கெடாத்தொங்கும்‘, ‘பூடமும்‘ ‘குள்ராட்டி‘யும் வெளிவர காரணமாயின.&lt;br /&gt;&lt;br /&gt;பாரத தேவி, வீர வேலுச்சாமி உட்பட பலரை தனது ஆளுமையின் அடையாளமாக கி.ரா என்கிற கிராமம் உருவாக்கி இருப்பது அவரது மற்றொரு பரிணாமம். இந்த மண்ணின் சொந்தத்தை, கரிசல்காரராக பார்ப்பதை விட, தெக்கத்திக்காரராக பார்ப்பதைத்தான் நமது மண்ணின் சிறப்பாகக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘கி.ரா 85‘ புத்தகத்துக்காக நான் எழுதிய கட்டுரை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(எழுத நேரமில்லை. பழைய பதிவு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-7848282659145468002?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/7848282659145468002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=7848282659145468002' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7848282659145468002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7848282659145468002'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/09/blog-post.html' title='கி.ரா. என்கிற ஆச்சி'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-1247411392542891505</id><published>2010-08-26T06:15:00.000-07:00</published><updated>2010-08-26T06:15:44.385-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>அலைபாயும் அரிசிகள்</title><content type='html'>'ஏ சொல்லமுத்து, பொண்டாட்டிய கூட்டிட்டு நாளைக்கு வீட்டுக்கு வந்திருல'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஏம் மைனி'&lt;br /&gt;&lt;br /&gt;'புது அரிசிடே'&lt;br /&gt;&lt;br /&gt;-இப்படி சொல்லி அழைப்பாள் அம்மா. அறுவடை முடிந்து, விற்றது போக, மூட்டையாகியிருக்கிற நெற்களில் ஒரு உழக்கு சாமிக்கு. அவித்த நெல் அரிசியாகி, பானையில் ஏறுகிற ஏதாவதொரு நாள் புதுஅரிசி நாள். இதற்காக, கீழத் தெருவில் இருக்கிற சுப்பு சித்தி வீட்டில் புதுபானை வாங்கி வருவாள் அம்மா. காலையிலேயே வாய்க்காலில் குளித்துவிட்டு அம்மன் கோவிலில் விழுந்து வணங்கி வீட்டுக்கு வரும்போது, பசி கப்பென்று இருக்கும். 'கொஞ்சம் நெரம் பொறுத்துங்கல' என்றவாறு அடுப்பில் விறகை திணிப்பாள். பானைக்கு பட்டை போடப்பட்டிருக்கும். டிரங்கு பெட்டியில் இருக்கிற புது துணியை நாங்கள் உடுத்த வேண்டும். (புது துணி என்பது தீபாவளிக்கோ, சித்திரை விசுவுக்கோ எடுத்து உடுத்திய துணி). &lt;br /&gt;&lt;br /&gt;பாச்சா உருண்டை மணக்கிற சட்டை, டிரவுசை போட்டுக்கொண்டு ஹீரோவாகிவிட்ட உணர்வில் வாசலில் நின்று கொண்டு, மேல வீட்டு முத்துவை, 'ஏல முத்து வாரியா...' என்று ஒரு கத்து. 'உங்கம்மா மத்தியானம்லா வர சொல்லியிருக்கா' என்றவாறே புது சட்டையை பாப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;'புதுசாடே' ,&lt;br /&gt;&lt;br /&gt;' தீவாளிக்கு எடுத்தது'&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு. அக்காவுக்கு கீழ வீட்டு பிச்சம்மா பிள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சோறு ரெடியாகியிருக்காது. சித்தி, சித்தப்பா, மாமா வருகைக்கு பிறகு,ஆச்சியின் புண்ணியத்தில் குத்துவிளக்கு சாமியாகும். மாலையிலேயே புளிபோட்டு விளக்கி புதுசாக்கியிருப்பாள் விளக்கை. செவ்வாய், வெள்ளி மட்டுமல்ல, எல்லா நாட்களுமே, சாயங்காலம் விளக்கு சாமியாகும் நாட்கள். கூடவே ஏதாவது ஒரு அகர் பத்தியின் வாசனை வீட்டிலும் தொழுவத்திலும் மணந்துகொண்டே இருக்கும். இருட்டும் அல்லாத பகலும் அல்லாத அந்த சாயங்காலங்கள் இனிமையானவை. &lt;br /&gt;&lt;br /&gt;குமரியாகியிருக்கிற அக்காள்கள் குடத்தை தூக்கிக்கொண்டு இப்போதுதான் வாய்க்காலுக்கு தண்ணீர் எடுக்க செல்வார்கள். குற்றாலம் கல்லூரியில் படித்த சுந்தரவடிவு அத்தை பற்றிதான் ஊரில் அப்போது அதிகமான பேச்சு. அந்த கால ஸ்ரீப்ரியா மாதிரி, முடியை காதுக்கருகில் ஸ்டைலாக இழுத்துக்கொண்டும், வழு வழுக்கிற சேலையுமாக அவள் வருகிற அழகே அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏல செவத்தான், நேத்து சொல்லிக்கொடுத்த கணக்கை போட்டியா?' என்று ஆரம்பிப்பாள் சு.வ.அத்தை. இவள் வந்தாலே, போதுமென்று எதிரில் இருக்கிற ஆச்சி வீட்டு மச்சில் ஒளிந்துகொள்வேன். பிறகு எப்படியோ இழுத்து வந்து சொல்லித்தருவாள். ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அத்தை பாடம் சொல்லிக்கொடுக்க வருவாள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருக்கும். பிறகொரு சாயங்காலத்தில் கணேச மாமாவை அவள் காதலிக்கிற விஷயம் தெரிந்ததில் இருந்து எனக்கு நிம்மதியானது. சு.வ.அத்தை எனக்கு பாடம் எடுப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குத்துவிளக்குக்கு எதிரில் பெரிய வாழை இலை போட்டு சோறு பரிமாறப்பட்டிருந்தது. சித்தி, சித்தப்பா, மாமா எல்லோரும் விளக்கை விழுந்து கும்பிட்டார்கள். கூடவே நானும் அக்காவும். சு.வ.அத்தை சிறிது நேரம் கழித்து வந்தாள். எல்லோருக்கும் ஆச்சி திருநீறு பூசிவிட்டாள். பிறகு எல்லோரும் வரிசையாக உட்கார்ந்து, வாழை இலைகளில் சாப்பாடு. சு.வ.அத்தைதான் பரிமாறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏட்டி, எல்லாத்தையும் அவனுக்கே (மாமா) வச்சிட்டிருக்காத, பிள்ளைலுவோலுக்கும் வையி' - அம்மா கிண்டலாக சொல்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னதாக சிரித்து, பெரிதாக வெட்கப்பட்டு, 'போங்க' என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்த&lt;/strong&gt; அறுவடை நாள் முடிந்து, புது அரிசி சமைக்கும்போது, வீட்டில் வேறொரு அத்தை இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் கொடையில் நடந்த தேவையில்லாத தகராறில் சு.வ.அத்தை வெறொருவரையும் மாமா வேறொரு அத்தையையும் கட்டிக்கொண்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-1247411392542891505?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/1247411392542891505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=1247411392542891505' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/1247411392542891505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/1247411392542891505'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/08/blog-post_26.html' title='அலைபாயும் அரிசிகள்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-419137562623605612</id><published>2010-08-15T04:08:00.000-07:00</published><updated>2010-08-15T04:08:43.980-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சிறு வயது மழை</title><content type='html'>ஜன்னலுக்குள் தெறித்துவிழும் மழைத்துளி பார்த்து, ஓடோடி அடைக்கிறாள் மனைவி. 'வெளிய போகாதல. நனைஞ்சா காய்ச்சல் வந்துரும்' என பிள்ளைகளுக்கும் தடை. கொட்டித் தீர்த்துவிடும் மழையில் நனையும் சுவருக்கு தடையேதும் இல்லை. வெயிலில் நனைந்து மழையில் காயும் பாக்கியம் சுவர்களுக்கு இருக்கிறது. மழையை நோயாகவும் எரிச்சலாகவும் பார்க்கத் துவங்கிவிட்ட நகரத்துக்கு அதனதன் காரணங்களும் ஏற்புடையதாய் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;'வீடு பள்ளத்துல இருக்குடா. மழை வந்தா நாஸ்திதான்' . நண்பனின் வார்த்தையில் மழைக்கு நாஸ்தி என்றும் பெயர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் போக்கில் வந்துவிட்டு போகும் மழையின் ஈரம், எப்போதும் நனைத்துவிட்டே செல்கிறது என் கால்களை.&lt;br /&gt;&lt;br /&gt;வயலில் சிறுகிழங்கு எடுத்துவிட்டு அம்மாவுடன் வரும் போது வந்த மழை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. சிறு சிறு துளியாய் முதலில் நனைத்த மழை பெரும் கோபங்கொண்டு வந்த போது, பொன்னையா பிள்ளை தோப்பில் ஒதுங்கி நிற்கலாம் என்றாள் அம்மா. பின்ன மரத்தின் அடியில் இருந்த கருங்கல்லில் அம்மா நின்றுகொண்டதும் கிழிந்த டவுசரை வயிற்றுக்கு மேலே ஏற்றிக்கொண்டு, போட்டேன் குதியாட்டம். மண்ணை நனைத்து செம்புல பெயராய் ஓடி வரும் தண்ணீரில் கால்கள் மண்ணை குழைத்தது. 'ஏல கீழ விழுந்திராத'என்பதாக இருந்தது அம்மாவின் அக்கறை.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் இழுத்து செல்லும் என்ற நம்பிக்கையில், தென்னை மரத்தில் இருந்து விழுந்துகிடக்கும் சில்லாட்டையின் மீதமர்ந்து, 'ஏன் தண்ணி இழுக்கலை' என்ற கவலையில் இருக்க, மழை என்னை குளிப்பாட்டியிருந்தது. நனைதல் சுகம். திடீரென்று நின்ற மழையை தொடர்ந்து நடக்கையில், ஊர் எல்லையில் மீண்டும் தொடர்ந்தது. நனைந்து நனைந்து வீட்டுக்குள் சென்றதும் அம்மா தந்த கருப்பட்டி காபி இன்னும் நாவில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுடன் அலைந்த டிரவுசர் காலத்து நினைவுகளில் மழைக்கும் இருக்கிறது பெரும்பங்கு. மழை நனைத்துவிட்டு போன காலங்களில் வீட்டு வாசல் ஓரத்தில் விதை போடாமல் வளர்ந்திருக்கும் கொத்தமல்லி செடியை பிடிங்கி, 'ஏய் சாப்டுறா பேரா... உடம்புக்கு நல்லது' என்கிற தாத்தாவின் மீசை மறக்காமல் வருகிறது ஒவ்வொரு மழை காலமும்.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்ப வந்திரும் லட்சுமி புள்ள' என்ற ஏக்கத்தில் அவள் வீட்டு தொழுவத்திற்கெதிராக, நனைககும் மழையில் தண்ணீர் மனிதனாக ஆகிய காலங்கள் வடியாமல் இருக்கிறது. வருவேன் என்பதற்காக அவளும், வருவாள் என்பதற்காக நானும், நனைந்து நின்ற நாட்களில் யாருமற்ற மழைக்கு நாங்கள் சொல்லிய நன்றிகள் கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பிராய மழை, நினைத்தாலே நனைக்கிறது. என் மகனிடம் சொல்ல என்னிடம் இருக்கிறது ஏராள மழை அனுபவம். நனையாத அவனுக்கு என்ன இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;(காலையில சரியான மழை. அதான்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-419137562623605612?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/419137562623605612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=419137562623605612' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/419137562623605612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/419137562623605612'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/08/blog-post_15.html' title='சிறு வயது மழை'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-820769165685913449</id><published>2010-08-08T03:56:00.000-07:00</published><updated>2010-08-08T04:32:39.456-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்த கதை'/><title type='text'>செலாமத் ததாங்கும் தெரிமா காஷிஹ்மும்</title><content type='html'>எந்திரன் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியா சென்றிருந்தேன். பாங்கியில் உள்ள ஹோட்டல் ஈக்கிடோரியலில் அறை. விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வந்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஹோட்டல் அறையில் சிகரெட்டுகளாக கழிந்துகொண்டிருந்தது முதல் நாள். மாலையில் டீக்குடித்துவிட்டு எங்காவது வெளியில் கிளம்பலாம் என்று நினைத்தால், 'பக்கத்துல எதுவும் இல்லை. ஒரு டாக்ஸியை பிடிச்சு, 20 மினிட்ஸ் போனா... அங்க ஒரு ஷாப்பிங் மால் இருக்கு" என்றார் ரிஷப்சனிஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலை சுற்றி கோல்ஃப் கிரவுண்ட். வெளியில் செல்லும் ஆசையை விட்டுவிட்டு கிரவுண்டை சுற்றி வந்தேன். அருகில் நீச்சல் குளம். 'நீச்சலடிச்சு நாளேச்சே' என்று குளிக்கும் மூடுக்கு வந்தேன். நான்கைந்து வெள்ளைக்கார பெண்மணிகள் சேரில் சாய்ந்துகொண்டு கதைத்துக் கொண்டிருந்தார்கள். டவல் ஒன்றை வாங்கிக்கொண்டு நானும் ஒரு சேரை தேர்ந்தெடுத்து வைத்து விட்டு, பொத்தென்று குதித்தேன் தண்ணீருக்குள். தண்ணீர் வெள்ளைக்கார பெண்மணிகளின் மீது தெறிக்க, குனிந்து என் மூஞ்சுக்கு நேராக, கூட்டாக விட்டார்கள் லுக். ஸாரி என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஸ்மைலினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடையில் தெறித்த தண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தாள் ஒருத்தி. இன்னும் அதிகம் அங்கு குளிக்க எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. வேறு யாரும் நீச்சல் குளத்தில் இல்லாததது மட்டுமல்ல, அவர்களுக்கு ஏதோ தீங்கு செய்துவிட்ட மாதிரி குற்ற உணர்வு. எழுந்து துவட்டிவிட்டு அறை. &lt;br /&gt;&lt;br /&gt;ரிகர்சல் முடிந்து வந்திருந்தார்கள் கலா மாஸ்டரின் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். வரும்போதே ஏர்போர்ட்டில் வாங்கி வந்திருந்த ரெமி மார்டின் (ஒரு பாஸ்போர்டுக்கு ஒரு பாட்டில்தான் தருவாங்களாம்) என்னை குடித்துத்தொலையேன் என்றது. பக்கத்து அறையில் இருந்த ஒளிப்பதிவாள நண்பர் கம்பெனி கொடுக்க, ரெமி அதிகாலை வரை (மலேசிய நேரம் 3.30 வரை) தாக்குப் பிடித்தது. ஹோட்டலில் இருந்து புத்ரஜெயா நகரை இரவில் பார்க்க இதமாக இருந்தது. இங்கு, இன்னென்ன இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட நகரம் என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இண்டர்நேஷனல் கன்வன்ஷன் செண்ட்ரும் அதன் அருகில் இருக்கிற ஏரி (?)யும் கொள்ளை அழகு. &lt;br /&gt;&lt;br /&gt;இரவு போதையில் கழிய, கிறக்கத்தில் உதித்தது காலை. இன்னைக்கு எங்கயாவது போயே ஆகணும் என்று மலேசிய நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். வந்தார். அவரது காரில் மறுநாள் கோலாலம்பூரை சுற்ற கிளம்பினோம். கடந்த வருடம் வந்த இடம்தான் என்பதால் எதை பார்க்க, எங்க போக என்பது நண்பரின் விருப்பதில் விடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சாலைகளில் தொடங்கி சாலைகளில் முடியும் பயணங்கள் அற்புதமானது. அதிலும் காரும் காரோட்டும் நண்பரும் அமைந்துவிட்டால் பயணங்கள், சுகங்களாகும் சாத்தியமிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பத்துகேவ், ட்வின் டவர், சாக்லேட் பேக்டரி, புத்தர் கோவில் என சுற்றிவிட்டு ரிட்டர்ன் ஆனோம். கெண்டிங் போகலாம் என்றால் நேரமில்லை. நள்ளிரவு பார்ட்டிக்கு தேடுவார்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு சாப்பாடு பஃபே சிஸ்டம். வந்திருக்கிற எந்திரன் டீமுக்காக, வேலை பார்க்கும் தமிழர்களை மொத்தமாக இங்கே இறக்கியிருந்தார்கள். 'அண்ணே... நீங்க எந்த ஊரு'வில் ஆரம்பித்து ஏஜெண்ட் ஏமாற்றியது வரை கதை கதையாக வந்தது. பிரபலங்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்கள். 'ரஜினி சார் எந்த ஹோட்டல்' என்று அவரையும் தேடிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்திருந்த சாப்பாடு ஐட்டங்களில் நம்ம ஊர் டேஸ்ட் எதுவுமில்லை. நான்வெஜ் வகையறாக்களை அரைகுறையாக வேக வைத்திருந்தார்கள். நானும் நண்பரும் பழவகைகளை மொத்தமாக அள்ளி, பசி போக்கிக்கொண்டோம். ஆனால், நம்ம ஊர் நடிகர்கள், நடிகைகள், ரொம்ப டேஸ்டாக இருப்பது மாதிரி அள்ளி அள்ளி முழுங்கியது எப்படி என்றுதான் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் விழா. காலையிலேயே செண்டருக்கு வந்துவிட்டோம். படிப்படியாக ஏறி உள்ளே சென்றால் ஆடிட்டோரியம் பிரமாண்டமாக இருந்தது. அதற்கடுத்து நடந்த விழா நிகழ்ச்சிகள்தான் உங்களுக்கு தெரியுமே?&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில், இம்முறை நான் கற்றுக்கொண்ட இரண்டு மலாய் வார்த்தை :&lt;br /&gt;&lt;br /&gt;செலாமத் ததாங், தெரிமா காஷிஹ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-820769165685913449?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/820769165685913449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=820769165685913449' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/820769165685913449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/820769165685913449'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/08/blog-post.html' title='செலாமத் ததாங்கும் தெரிமா காஷிஹ்மும்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-7513114529538236625</id><published>2010-07-26T06:24:00.000-07:00</published><updated>2010-07-26T06:24:36.074-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காடு'/><title type='text'>காடு-15</title><content type='html'>இருட்டு நெருங்கும் நேரம் என்பதால் வருபவர்களை அடையாளம் காண முடியவில்லை. காற்றும் குளிரும் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கூடு திரும்பி கொண்டிருந்தன பறவைகள். அவற்றின் சட சட ஒலி வனாந்தரத்தை இசையாக்கிவிட்டு சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாடுகள் படுக்கும் இடத்துக்கு 20 அடி தள்ளி வேலி போன்றதொரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மாடுகள் இன்னும் அசைப்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தை சிலுப்பிக்கொண்டு அலையும் கப்பை கொம்பு மாடு மட்டும் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு நின்றது. அதன் பார்வையில் காடு வேறொரு ரசனையை தந்துக்கொண்டிருக்க முடியும். பச்சையாக தெரியும் எதிலும் வாயை வைத்துவிடக்கூடிய இந்த மாடுகளுக்கு, இங்கு பசி பஞ்சம் வர வாய்ப்பில்லை என்பதை கூட கப்பை கொம்பு கணித்துக்கொண்டிருக்கலாம். அதனதன் கணிப்புக்கு ஆட்பட்டதே வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;உ.மகாளி எதிரில் வருபவர்களை பார்த்துவிட்டு, 'முத்தையாண்ணே யாரோ வாராவோ' என்றான். குடிசை அமைக்கும் பணியிலிருந்த கேசரியும் முத்தையாவும் வேலையை போட்டுவிட்டு அவர்களைப் பார்த்தார்கள். நொடிஞ்சானும் கேசரியும் ஒரே குரலில், 'யாரு' என்று கத்தினார்கள். தவிட்டானும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;'நம்ம ஊரு ஆளுவோதான். இன்னைக்குதான் வந்தேலா?'&lt;br /&gt;&lt;br /&gt;மூவரில் ஒருவன் நெருக்கமாக வந்து சொன்னான். நீண்ட நாள் பழக்கப்பட்ட குரல் போல் இருந்தது அது. ஆனாலும் பழக்கமில்லாதவர்கள். இளம் வயதுடைய ஒருவனும் இரண்டு பெரியவர்களுமாக அவர்கள் தெரிந்தார்கள். பெரியவர்கள் இருவரும் வேட்டியை உடல் முழுவதும் மூடிக்கொண்டு நின்றிருந்தார்கள். கருத்தப்பிள்ளையூர்க்காரர்க்கள் என்றும் தேன் எடுக்க வந்ததாகவும் இருட்டி விட்டதால் உங்கள் சத்தம் கேட்டு வந்ததாகவும் சொன்னார்கள். இதை தாண்டிய அவர்களின் நோக்கம், 'பீடி இருந்தா கொடுங்களேன்' என்பதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விலங்குகள் மட்டுமே அலையும் காட்டுக்குள் இப்படியானதொரு மனிதர்களையும் பீடியையும் காண்கிற மகிழ்ச்சி அலாதியானது. கேசரி பல முறை பீடிக்கான அவஸ்தையை அனுபவத்திருக்கிறான். மேல பத்தில் (வயலில்) அதிகாலை உழுதுகொண்டிருந்த போது, தீப்பெட்டி தண்ணீருக்குள் விழுந்தததை அவன் கவனிக்கவில்லை. ஆயாசமாக வந்த தருணத்தில், மாட்டை அவிழ்த்து தோப்பில் விட்டுவிட்டு, பீடி குடிக்க நினைத்தான். பீடி இருந்த இடமான இடுப்பு முடிச்சில் தீப்பெட்டி இல்லை. தேடினால், உழுத மண்ணோடு குச்சி சிதைந்து கிடந்தது தீபெட்டி. விதையாக சிதைந்திருந்தால் முளைத்திருக்கும். தீப்பெட்டிகள் முளைக்க வாய்ப்பில்லை. சுற்றும் முற்றும் தேடியும் ஒரு குஞ்சானையும் காண முடியவில்லை. பக்கத்து வயல்காரரான செவத்த கண்ணுவுக்கு பீடி குடிக்கும் பழக்கமில்லாததால் அவரிடம் தீப்பெட்டி இருக்க இயலாது. கேசரி அப்போது தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமேயானது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அவர்களுடனேயே தங்குவதென்று முடிவு செய்த வந்தவர்கள், இவர்களுடன் ஒத்தாசையில் இறங்கினார்கள். வட்டவடிவமாக வேலி மாதிரி அமைக்கப்பட்ட செத்தைகளில் ஒருவன் தீ வைத்தான். குப்பென்று கொஞ்சம் கொஞ்சமாக தீப்பற்றி செந்நிற வட்டமாகியது தீ. குளிரின் இறுக்கத்திலிருந்து மாடுகள் தகதகப்பை உணர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து குடில் ரெடியானது. கீழிருந்து மேல் செல்ல ஏணியும் அமைக்கப்பட்டது. வந்திருப்பவர்களில் ஒருவன் நன்றாக சமைப்பான் என்பதால் அவனிடம் சமையல் ஒப்படைக்கப்பட்டது. குடிலின் கீழிருந்து ஆரம்பித்தான். தினமும் அசைவம் தேடும் தவிட்டானுக்கு இன்று மட்டும் சைவம். &lt;br /&gt;காட்டின் சமையலுக்கு ருசி ஜாஸ்தி. விதவிதமாக சமைக்கப்படா விட்டாலும் வெறும் சோறும், துவையலோ அல்லது ஊறுகாயா இருந்தால் கூட கொண்டா கொண்டா என்று இழுக்கும் ருசி. வழக்கமாக வீட்டில் சாப்பிடுவதை விட இங்கு சோறு அதிகம் இழுக்கும். அது காட்டின் ராசியோ என்னவோ? &lt;br /&gt;&lt;br /&gt;இருட்டி விட்டது. இரண்டு மூன்று தீப்பந்தங்கை உருவாக்கி குடிலின் கிழ் மேல் பக்கங்களில் சொருவியிருந்தார்கள். வேலியில் எரியும் தீயின் வெளிச்சமே போதுமென்றாலும் இன்னும் சிறுது நேரத்தில் வேலி தீ கனலாகிவிடும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள். குடிலின் மேலிருந்து பார்க்கும் போது தகதகக்கும் சிகப்பு நிற நிலா மாதிரி தோன்றியது வேலி. &lt;br /&gt;உ.மகாளி, கந்தையாண்ணன் மற்றும் கேசரியுடன் வேலி தீயில் குளிர்காய்ந்துகொண்டிருந்தான். தூரத்தில் கேட்கும் சில மிருகங்களின் சத்தங்களை,' இது காண்டா மிருகத்தோட சத்தம் மாதிரிலா இருக்கு", 'அது கரடி சத்தமால்லா இருக்கு" என்று அளந்துகொண்டிருந்தான் கேசரி. விலங்குகளோடு வாழ்வதாக நினைத்துக்கொண்டான் உ.மகாளி. உலகம் காடென்றால் நம் வாழ்க்கையும் அப்படித்தான். விலங்களோடுதான் வாழ்க்கை. நல்ல, கெட்ட என்பதை சேர்த்துகொள்வதை பொறுத்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏல, அண்ணாச்சி சோறு பொங்கிட்டாவோ. சாப்டுவோம்'&lt;br /&gt;&lt;br /&gt;கூவெலயில் சுட சுடச் சோறு பரிமாறப்பட்டது. வழக்கமாக சமைப்பது என்பது தண்ணீர் வடிக்காமல்தான். ஆனால், புதிதாக வந்த மூன்று பேருக்காக, குழம்பு, பொரியல் என்று மாறியது இன்றைய சாப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;'அண்ணாச்சி, நல்லா சமச்சிருக்கேளே... எங்கயும் வேலை பார்த்தேலோ?'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் எங்க வேல பாத்தேன். ஜமீன் வீட்டுல எடுபிடி சமையக்காரன். ராசாவுக்கு பெறவு அங்க இல்லை. வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்சமா,ஊர்ல நெலம் கொடுத்திருந்தாவோ. அதை வச்சு வெவசாயம் நடக்கு. எப்பவாவது தோணுச்சுன்னா, 'தேன் எடுக்க வருவோம். அம்பாசமுத்ரத்துல ஒரு நாட்டு வைத்தியரு இருக்காரு. அவரு வாங்கிக்கிடுவாரு. இப்படி போது பொழப்பு.'&lt;br /&gt;&lt;br /&gt;முருங்கைக்காயை உறிந்து இழுத்துவிட்டு, கேட்டான் உ.மகாளி:&lt;br /&gt;&lt;br /&gt;'தேன் எடுக்க வந்திருக்கேங்கியோ, கையில ஒண்ணுமில்ல. கூட வந்திருக்க பையன் உம்முனு இருக்காம். எனக்கென்னமோ சரியா படலையே'&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம்: courtesy: www.paintingofrussia.com/demo.php?num=20704&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-7513114529538236625?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/7513114529538236625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=7513114529538236625' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7513114529538236625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/7513114529538236625'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/07/15.html' title='காடு-15'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-6870306462308344777</id><published>2010-07-20T06:02:00.000-07:00</published><updated>2010-07-20T06:02:42.933-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காடு'/><title type='text'>காடு 14</title><content type='html'>பெரும் வனம் தந்திருக்கிற அமைதிக்குள் பிச்சம்மாள், உச்சிமகாளியின் கண்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக்கொண்டிருந்தாள். நடந்துபோனவற்றை நெஞ்சுக்குள் அலையவிடுவதில் சில நேரம் மனம் குளிரலாம். சில நேரம் கொதிக்கலாம். உ.மகாளி குளிர்ந்து, கொதித்துக் கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சம்மாள், தயிர்க்காரியின் மகள். தயிரிலும் மோரிலும் தண்ணீரை கச்சிதமாக கலக்கும் கலை பெற்றவள். தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் தயிர், மோராகும் வாய்ப்பிருக்கிறது. உ.மகாளிக்கு பிடித்தது கொஞ்சம் புளித்த மோர். புளிக்கும் மோர் எங்கும் கிடைக்குமென்றாலும் புளிப்பு அதிகமல்லாத, புளிக்கவும் செய்கிற பக்குவான மோரை பிச்சம்மாள் வீட்டில் மட்டுமே வாங்க முடியும். அவள் வீட்டு மோருக்கு ஐயமார் தெருவில் கொஞ்சம் கிராக்கி. &lt;br /&gt;&lt;br /&gt;மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற பிறகு, பதினோரு மணி வாக்கில் மோர் விற்க தொடங்குவாள். கூவி கூவி, மோரு... மோரு என்ற விற்பனை கிடையாது. பஜனை மடத் தெருவில் இருக்கும் சுடலைமுத்து நம்பியார் தாத்தா வீடு, அவர் வீட்டுக்கு பின்புறம் இருக்கிற விவசாய சங்க தலைவர் பரமன் வீடு, இன்னும் நான்கைந்து வீடுகளுக்கு கொடுத்துவிட்டு, நேராக அக்ரஹாரம். முனையில் இருக்கிற காசி வாத்தியார் வீட்டிலிருந்து பத்து பதினைந்து வீடுகளுக்கு பிச்சம்மாள் வீட்டு மோர்தான். சில வீடுகளில் கேட்டால், பசு நெய்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதினைந்து வீடுகளை தாண்டி கீழப்பக்கம் இருக்கிற வீடுகள், மேலத் தெரு துரையப்பா மனைவிக்கு பாத்தியப்பட்டது. பாத்தியப்பட்டது என்பது இந்த தெருவில் இந்த குடும்பம்தான் மோர் விற்க வேண்டும் என்கிற நியதி அந்த காலத்திலிருந்தே வந்திருந்தது. இந்த மோர் விற்பனைக்கு பிறகு, சாணம், மற்றும் மாட்டு மூத்திர வாச்னைகளை சுமந்துகொண்டிருக்கும் தொழுவை சுத்தப்படுத்துவது, வைக்கோல் படப்பிலிருந்து மாடுகள் கட்டப்படும் இடத்துக்கு முன்னால் இருக்கிற இடத்தில் வைக்கோலை வைப்பது உட்பட இன்ன பிற வேலைகள் பிச்சம்மாளுக்கானது. &lt;br /&gt;&lt;br /&gt;கோடையில் மாலை வேளையில் மாந்திராங்குளத்து பொததைக்கருகில் விழுந்து கிடக்கிற மரக்கிளைகள், தென்னந்தட்டிகளை விறகாக கொண்டு வருவதும் இவள் வேலையாக இருந்தது. அப்படியானதொரு பொழுதில் உ.மகாளி பிச்சம்மாளை எதிரெதிர் சந்தித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;'தென்னமட்டைக்குள்ள, நாலஞ்சு தேங்காயை களவாண்டு போன மாதிரி இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;'யாரை களவாணிங்க...?'&lt;br /&gt;&lt;br /&gt;'உன்னைதான்'&lt;br /&gt;&lt;br /&gt;'வாரிய பிஞ்சிரும். என்ன எளக்காரமா போச்சோ. அப்படி களவாண்டு திங்கணும்னு அவசியமில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;'ச்சீ... கிண்டலுக்கு சொன்னா, உடனே மூக்கு சிவக்கு'&lt;br /&gt;&lt;br /&gt;'கிண்டலுக்கும் வர முறை வேண்டாம்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏம், உங்கிட்ட நான் கிண்டல் பண்ணக்கூடாதா'&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்...'&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்தது பேச்சு. சில நாட்கள் பொத்தையில் உ.மகாளி இல்லாத நாட்களில் பிச்சம்மாள் தேடுவதும், அவள் வராத நாட்களில் இவன் தேடுவதும் தொடர்ந்தது. இதற்கு காதலென பொருள் கொள்க. ஆனால், உ.மகாளியின் இந்த காதலும் கைகூடாமலேயே போனது. &lt;br /&gt;&lt;br /&gt;காதலிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழ்பவர்களாகவும் அவ்வாய்ப்புக் கிடைக்காதவர்கள் நரகத்தில் இருப்பவர்களாகவும் கற்பனை பண்ணிக்கொண்டான் உ.மகாளி. காதல் நினைவுகள், ஏக்கங்களாக நடு மண்டைக்குள் இறங்கி படுத்தும் பாடுகள் பயங்கரமானவை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விறகு&lt;/strong&gt;களை அடுக்கிக்கொண்டு வந்து பழைய குடிலின் அருகே வைத்தார்கள். கருக்கலாக இன்னும் நேரமிருக்கிறது என்றாலும் அதற்குள் இருட்டை கொண்டு வந்திருந்தது காடு. கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் மரங்கள் கருநிற வண்ணத்துக்கு மாறத் துடித்துக்கொண்டிருந்தன. கந்தையாவும் தவிட்டானும் கோங்கு கம்புகளை ஊனினான். ஆளுக்கொரு வேலையாக குடிலமைப்பதில் மும்முரமாகியிருந்தார்கள். மாடுகள் சாவகாசமாக அசை போட்டுக்கொண்டு கிடந்தன. அவை, வனத்தில் வாசனையை முகர்ந்துகொண்டும் வனத்தில் குளிரை எதிர்கொண்டும் இனிமையாக கிடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வேலி மாதிரியான, குத்து மதிப்பாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சுற்றி செத்தைகளையும் சில மரத்துண்டுகளையும் அடுக்கிக்கொண்டிருந்தான் உச்சி மகாளி. முகத்தில் விழுந்த செத்தையை அப்புறம் படுத்துவதற்காக தலையை நிமிர்த்தியவன் பார்த்தான். எதிரில் யாரென்று தெரியாத மூன்று பேர் வந்துகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-6870306462308344777?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/6870306462308344777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=6870306462308344777' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/6870306462308344777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/6870306462308344777'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/07/14.html' title='காடு 14'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-3815571141335125718</id><published>2010-07-17T00:54:00.000-07:00</published><updated>2010-08-14T09:02:36.400-07:00</updated><title type='text'>ஏதாவது சொல்லிவிட்டு போயேன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_IzR9j4G-97E/TEFjuM-inRI/AAAAAAAAALY/i0f3eIPdwLY/s1600/Abstract-Painting-FX001-02-40X40-.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" hw="true" src="http://2.bp.blogspot.com/_IzR9j4G-97E/TEFjuM-inRI/AAAAAAAAALY/i0f3eIPdwLY/s320/Abstract-Painting-FX001-02-40X40-.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சொல்லென்பது சொல்லல்ல. அது உயிரில் பாய்வதும் உயிரை மீட்பதுமான ராட்சச இயந்திரம். நீ சொல்லும் சொற்களை கேட்கும் செவிகள், சில நேரம் மிதக்கின்றன. சில நேரம் முங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உதிர்ந்து விழுகின்ற சொற்களில் இருந்து முளைக்கிறது கனவென்னும் காட்சி. இடையே புகுந்து கையில் எடுத்துக்கொள்கிறாய். காட்சிகளாகும் சொற்களை தாங்குகிறது உன் கைகள். காட்சி விரிந்து விரிந்து உலகெனும் எல்லை எங்கும் நீள்கிறது. காட்சியின் கனம் தாங்காமல் உன்னிடமிருந்து மீள முற்படும் சொற்களின் முயற்சி தோல்வியில் முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது நடு உச்சியில் இருந்து உருண்டு விழும் எனது சொல்லால் உன் சொற்களை இழுக்கப் பார்க்கிறேன். கோபமாகிறாய் நீ. உன் கண்களில் இருந்து உதிர்ந்து வரும் வேற்றுச்சொல்லுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;உனக்கும் எனக்குமான கோபத்தில் சொற்களுக்குள் வருகிறது காதல். உன் கை தாங்கும் சொற்களை, என் உச்சி சொற்கள் கட்டித்தழுவுகின்றன. தாங்க முடியாத கோபமும் சொற்களாக உதிர்கிறது. சொற்களின் மூன்றாவது காதல் தொடர்கிறது. உன் சொற்களை பொறுக்கிக்கொள்ள துடிக்கிறாய். அவை துள்ளி, துள்ளி ஏதும் சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நீயும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். ஏதும் சொல்லாமல் போகிறாய், கூந்தல் விரித்து. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;'ஏதாவது சொல்லிட்டு போயேன்' என்கிறது எனது காய்ந்த சொற்கள். சொற்களுக்கும் தெரியாது, நீயென்பதும் சொல்லல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;pic courtesy: &lt;a href="http://non-formula-art.en.made-in-china.com/"&gt;http://non-formula-art.en.made-in-china.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-3815571141335125718?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/3815571141335125718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=3815571141335125718' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3815571141335125718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/3815571141335125718'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/07/blog-post_17.html' title='ஏதாவது சொல்லிவிட்டு போயேன்'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_IzR9j4G-97E/TEFjuM-inRI/AAAAAAAAALY/i0f3eIPdwLY/s72-c/Abstract-Painting-FX001-02-40X40-.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-2742800722791484781</id><published>2010-07-05T03:56:00.000-07:00</published><updated>2010-07-05T03:56:39.681-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>மாட்டின் அழுகை</title><content type='html'>என் நள்ளிரவு கனவு பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அது மழை பெய்த இரவு. இழுத்துப் போர்த்திய போர்வையோடு அம்மா எப்போதோ தூங்கியிருந்தாள். வீட்டின் ஓட்டிலிருந்து ஒழுகும் சொட்டுக்களுக்காக ஒரு சருவ சட்டியை அதன் கீழ் வைத்தேன். அதில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியை கண்களை இழுக்கும் தூக்கத்துடன் ரசித்தேன். இத்தனை நாள் இந்த ரசனை எங்க போனது என்று தெரியவில்லை. எப்போதும் வருவது ரசனையாகவும் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனனுலகம் நான்கு மாடுகள், எட்டு செம்மறியாடுகள், சுப்பையா தோப்பு, மஞ்சப்புளிச்சேரி குளம் இவற்றிற்குள்ளேயே முங்கி கொண்டிருந்தது. எனக்கும் ரசனைக்குமான விஷயங்கள் தூரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுவத்தில் அந்த சத்தம் கேட்டது. மாட்டின் அழுகை! அதுவரை மாடுகள் அழுமென்பது தெரியாது. இன்னும் கூட அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அன்று நான் காதால் கேட்ட அழுகை. எழுந்து பார்த்த்தபோது விரிந்திருக்கும் கப்பைக் கொம்பு பசுவிடமிருந்து அந்த சத்தம் வந்தது. கணவன், குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் அவலமாக அந்தச சத்தம் கேட்டது. ம்மா என்ற சத்ததின் சோக ஒலி. அதை என் அம்மாவி்ன அழுகையாக நினைத்தேன். அம்மாக்களி்ன் அழுகை சக்தி வாய்ந்தது. அந்தக் கண்ணீ்ரின் அடர்த்தியி்ல் ஒரு கடல் வற்றும். ஒரு கடல் பொங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் கண்களிலிருந்து நீர்க்கோடுகள் விரிந்திருந்தது. மழையின் பொருட்டு கொசுவும், குளிரும் சேர்ந்து தாக்கின. என் ஒல்லி உடம்புக்கு இவை இரண்டும் எமன்கள். இருந்து்ம் அந்தப் பசு்வை நான் அருகிலிருந்து பார்த்தேன். சோகத்தின் வலிகள் ஜீரணிக்க முடியாதவை. மாடுகளுக்கும் அப்படித்தான். அருகில் படுத்திருக்கும் மாடுகள் எதையோ இழந்தது போல எழுந்து நின்று, கண்ணீர் பசுவைப் பார்த்துக்கொண்டிருந்தன. மாடுகளின் பாஷை எனக்குப் புரியவில்லை. ஆனால், உணர முடிந்தது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த சோக ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்க முடியாத குளிரின் பொருட்டும் நான் முக்காடாகப் போட்டு மூடியிருந்த சாரம் நனைந்ததன் பொருட்டும் அந்த சோகத்தை முழுவதுமாகச் சுமந்து வீட்டுக்குள் சென்றேன். எனனுறக்கம், என்னை இழுத்துச் சென்றது. அதனதன் இழுப்புக்கு ஆட்படுவதே மனித பண்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அது நிலவொளி. பரந்து விரிந்த பனங்காடு. கள் கொடுக்கும் பனை மரங்களினடியில் சாராய விற்பனை நடந்து கொண்டிருந்தது. விற்கப்படும் போதைகளுக்கு ஏற்ப பணம். கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு கடனும் உண்டு. இளஞ்சூட்டு சாராயத்துக்கான ஆட்களும், பணமும் வெவ்வேறு. குடிப்பவர்களுக்கான எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றிரண்டாக இருந்த ஆட்களி்ன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைப்பாகைகளுடன் தலைகள் பெருகுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் ஆச்சர்யமாகக் கத்துகிறான். அவன் கத்தல் கேட்டு கூட்டம் திரும்புகிறது. ஒரு மாடு்ம் ஆடு்ம் ஏதோ பேசியபடி பணத்தைக்கொடுத்து சாராயம் கேட்கிறது. மாடு பேசுவதைக் கேட்டு அங்கு ஆச்சரியம் கலந்த பயம். போதையேறிய சிலர் கல்லெடுக்கிறார்கள். ஒருவன் பனை மட்டையை ஓங்குகிறான். 'ஏலேய்...' குரல் கேட்டு பனங்காடு அதிர்கிறது. அது மாட்டின் குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீ கொத்தனார் மவந்தானலே. கல்லெறிஞ்சனா ஒழுங்கா வீடு போ்ய் சேரமாட்டே. உங்கப்பனுக்கு நீ கொள்ளி வைக்கணுமா? உனககு ஒங்கப்பன் கொள்ளி வைக்கணுமா? ம்ம்ம்..." மாட்டின் அதட்டல் எதிரொலித்து வருகிறது. மட்டையை எடுத்தவன் மலைத்துப் போய் நிற்கிறான். கல்லெடுத்தவன் பயத்தில் பின்னோக்கி நகர்கிறான். இந்த அதிசயத்தை சாரயக்காரன் கலக்கத்தோடு கவனிக்கிறான். மாட்டின் மடியில் பெரிய பை இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளாக எடுத்து அவனிடம் கொடுக்கிறது. ஞாபகமாக அருகிலிருக்கும் ஆடு, பாக்கிச் சில்லறை கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சிதற, மாடும் ஆடும் அங்கேயே அமர்கின்றன. ஆடு ஊறுகாய் கேட்கிறது. மாடு தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'வர வர சரக்கு ரொம்ப கசக்குது'&lt;br /&gt;&lt;br /&gt;'நீ நேத்தே சொல்லியிருந்தேனா, காய்ச்சிர இடத்துக்குப்போயி, இளஞ்சூட்டோட நல்ல சரக்கு அடிச்சிருக்கலாம்'&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக குடிக்கும் ஆடு இறுமுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'மெதுவா குடி. முந்தா நாள் பல்லிலிச்சான் வந்தான். அவசர அவசரமா குடிச்சுட்டு அங்கயே கக்கி தொலைச்சு கேவலப்படுத்திட்டான்'&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறாது'&lt;br /&gt;&lt;br /&gt;இவை குடிககும் அழைகைப் பார்க்க கூட்டம் சுற்றி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுக்குப் போதை ஏறுகிறது. எழுந்து நின்று தலையை அங்குமிங்கும் திருப்புகிறது. நேராக சாராயம் விற்பனி்ன் இடத்துக்கு போய் அவன் சாய்ந்திருக்கும் பனை மரத்தில் முட்டுகிறது. சரியும் மரம் வேகமாக அவன் மீது விழுகிறது. அவனுக்கு அடியேது்மில்லை. எழுந்து முதுகை துடைத்துவிட்டு 'ஏனிப்படி பண்றே' என்கிறான் மாட்டை நோக்கி. அது கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'நேத்து என் சேக்காளி கால்ல கல்லெறிஞ்சு உடைச்சது நீதானே'&lt;br /&gt;&lt;br /&gt;'சேக்காளியா?' அவனுக்கு குலை நடுக்கம். பயத்தி்ல் உளறல்.&lt;br /&gt;&lt;br /&gt;'நேத்து வயல்ல பயிறை மேய்ஞ்சுட்டான்னு கல்லால எறிஞ்சு அவன் காலை ஒடைச்சல்ல...இப்ப பாரு...உன்னை...'&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஓடுகிறான். உயிருக்குப் பயந்து ஓடுகிறான். ஆடு்ம் அவனைத் துரத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டக்கென்று விழித்துப் பார்த்தால் விடிந்திருந்தது. மழை இல்லை. அம்மாவிடம் மாடு அழுததை சொன்னேன். அவள் ஆச்சர்யமாக கேட்டுவிட்டு சொன்னாள்;&lt;br /&gt;&lt;br /&gt;'போ்ன வருஷம் இதே நாள்லதான் அதோட கன்னு பஸ்காரன் அடிச்சுச் செத்துப்போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;(பழசு).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/215/E2785656B847BD15FD76A54DCE3829D1.png" style="background: none transparent scroll repeat 0% 0%; border-bottom: 0px; border-left: 0px; border-right: 0px; border-top: 0px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7807051552071188694-2742800722791484781?l=aadumaadu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aadumaadu.blogspot.com/feeds/2742800722791484781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7807051552071188694&amp;postID=2742800722791484781' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2742800722791484781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7807051552071188694/posts/default/2742800722791484781'/><link rel='alternate' type='text/html' href='http://aadumaadu.blogspot.com/2010/07/blog-post.html' title='மாட்டின் அழுகை'/><author><name>ஆடுமாடு</name><uri>http://www.blogger.com/profile/08233506499863441767</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='21' src='http://2.bp.blogspot.com/-fwwD6xELGME/TkzaZHDrLlI/AAAAAAAAAOw/y4Agi56lSMQ/s220/_MG_44892.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7807051552071188694.post-89252181418700008</id><published>2010-06-27T03:49:00.000-07:00</published><updated>2010-06-27T03:49:29.625-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரக்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>கேரக்டர் 10: கிட்னம்மா 1</title><content type='html'>பயலுக்கு களவு அதிமாயிட்டு. சொந்த வீட்டுல திருடுன பய, அக்கம் பக்கம் வீட்டுல கையை வைக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு நாளு காலையில சுவரு முட்டி விக்கிற, கொட்டை கடைகிட்ட நல்ல கூட்டம். கடையில இருந்த ஒரு 45 ரூவாயையும் பெரிய சுவர் கடிகாரத்தையும் காணலை. கொட்டை கடை கதவுங்கறது ஈசியா திறந்துட கூடியதுதான். இதுவரை இபப்டியொரு சம்பவம் நடக்காத ஊர்ல, நல்லா பூட்டிட்டு போவணும்னு அவரும் நினைப்பாரா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்குள்ள அழுக்குபுடிச்ச, செவப்பு நிற சீசன் துண்டு மட்டும் கெடக்கு. கொட்டை, கடைக்குள்ள வேற என்னலாம் காணாம போயிருக்குன்னு பார்க்குறாரு. கொட்டை மவனுவோ, 'கடையில கைய வச்ச நாயி மட்டும் கெடச்சது, இங்கயே பொலி போட்ட
