தண்ணீர் குடிக்க இறக்கிவிடப்பட்ட மாடுகள், ஆற்றுக்குள் இறங்கி முங்கிகொண்டிருந்தன. எதிரில், முதலை ஒன்று வாயை பிளந்துகொண்டு நின்றது. வாய்க்குள் சோற்றை வைத்துக்கொண்டு, பெரிய கல்லை எடுத்து வீசினான் உச்சி மகாளி. குறி தப்பிவிட்டது. கப்பை கொம்பு மாடு கொஞ்சம் விலகி பின்பக்கம் திரும்பி வர ஆரம்பித்தது.
''க்கியே... க்கியே...சனியனுவோ அங்க எங்க போச்சு" என்றவாறே மற்றுமொரு கல்லெடுத்து வீசினான் தவிட்டான். இந்த முறை முதலையில் மண்டையில் விழுந்து துள்ளியது கல். மாடுகள் கரைக்கு வந்துவிட்டன. முதலை தண்ணிக்குள் முங்கி எதிரில் அடர்ந்திருந்த தாழைக்குள் நுழைந்துகொண்டது. தாழைகளின் பின்பக்கம் தென்னந்தோப்பு.
தோப்புக்காரனிடன் இதை தெரிவிக்காவிட்டால் உயிர்பலி விழுவதை தவிர்க்க முடியாது என்று நினைத்தார்கள்.
இந்த இடத்தில் இதற்கு முன் முதலைகளை பார்த்ததில்லை, அல்லது கேள்விபட்டதுமில்லை. போன முறை அடித்த மழையில் வந்த வெள்ளம், இதை எங்கிருந்தோ கொண்டு வந்திருக்கலாம். உச்சிமகாளி , ஏர்க்கலைப்பையுடன் செல்லும் உள்ளூர்க்காரனை அழைத்தான்.
'ஏண்ணே, இங்க எப்பண்ணே முதலை வந்தது?"
'முதலையா இங்கயா?.என்ன சொல்லுதியோ?'
'இன்னா மாடுவோ கலைஞ்சு வருது பாருண்ணே... முதலைலா கிடக்கு'
'இவ்வளவு நாளும் இந்த வழியாதான் போறேன் வாரேன். இப்பதானே கேள்விபடுதேன். சரியா போச்சு. சின்ன பிள்ளைலயிருந்து அம்புடு பேரும் இங்கதா புழங்குதாவோ... எப்படி தெரியாம போச்சு.'
'தோப்பு யாருக்குள்ளதுண்ணே... அவங்ககிட்ட சொல்லிருங்கோ...ராத்திரி கீத்திரி போற வழியில என்னமும் ஆயிரபோவுது'
'இன்னா போற வழியிலதான வீடு. நம்ம யேசுபய தோப்புதான்... நீங்க ஆய்ம்பூரு ஆளு மாதிரிலா தெரியுது'
'ஆமாமா'
உ.மகாளி உள்ளிட்டவர்கள் சாப்பாட்டை முடித்திருந்தார்கள். சுண்டக்கறியை நக்கிக்கொண்டிருந்த தவிட்டான், 'என்னல, முதலை கிடக்கது தெரியாதுங்காம் உள்ளுக்காரன்' என்றான்.
'அது என்னல, என்னைய வந்து பாருன்னு கரையிலயா வந்து கெடக்கும்'
'நம்ம தண்ணிக்குள்ள முங்கிட்டிருக்கும்போது தலைய புடிச்சுட்டுன்னா என்னல பண்ண முடியும்?'
'அதான் போயிட்டுலா, வேண்டாததை நினைச்சு எல்லாரையும் பயங்காட்டிருவே போலிருக்கே"
போகும் இடத்தில் எல்லாம் இந்த முதலை பற்றிய கதையை இவர்கள் பரப்பிவிட்டுப் போக, பயத்தில் இருந்தது கருத்தப்பிள்ளையூர் கிராமம். முதலை பயம், செம்மண் தரையில் போகும் போது அங்கிங்கு அதிகம் கவனிக்க வைத்தது. கவனிப்புக்கு காரணம் பாம்புகள்.
நொடிஞ்சான் ஒரு முறை இங்கு பாம்புக்கடியிலிருந்து தப்பித்திருந்தான். கோவிந்தபேரிக்கு சைக்கிளில் வாழை இலை கொடுத்துவிட்டு திரும்பும்போது, இந்த வழியாகத்தான் வந்தான். அப்போது செம்மண் சாலை புதிதாகப் போடப்பட்டிருந்தது. வேகமாக வந்தவனின் சைக்கிள் திடீரென்று ஏறி இறங்க... கீழே பார்த்தால்... மலைப்பாம்பு வலது பக்கம் வாய்ப் பிளந்து முகத்துக்கு நேராக வந்தது. அடித்து பிடித்து உருண்டு ஓடி, நினைக்கவே கெதக் என்றிருந்தது.
'ஏல... எடம் ஞாவம் இருக்கா' என்றான் நக்கலாக தவிட்டான்.
'மறக்க முடியுமால...'
'இதுக்குதாம், சைக்கிள்ல போனா, நான் எப்பவும் ஒரு அருவாளை போட்டுக்கிடுதது... அந்தானி அந்த பாம்பு ஏறும்போது, தலையில சீவியிருப்பேன்'
'சொல்லுததுக்கு நல்லாதாம்ல இருக்கு... அந்த நேரத்துல ஓடுனா போதும்னுலா இருந்துச்சு'
'மயிர...நல்ல பாம்புன்னா வேகமா மூஞ்சியில வுழும். இது மலைபாம்பு. இதுவோலுக்கு அந்த உடம்பைகொண்டுட்டு நடக்கவே முடியாதல... பின்னாலயே போயி நங்குன்னு ஒரு வெட்டைப் போட்டம்னா, அது எங்க நவுல?'
சாப்பாட்டு பாத்திரம் மற்றும் அரிசி, காய்கறிகளை தூக்கிக்கொண்டு வந்த நொடிஞ்சான், அதை இப்போது உ.மகாளிக்கு மாற்றினான்.
மாடுகள் முன்னே சென்றுகொண்டிருந்தன். ஊர் எல்லை தாண்டி காடு ஆரம்பித்துவிட்டது. தார்ச்சாலையின் மேல் பக்கம் மரங்கள் அடர்ந்திருந்த கனவு வனம். சாலையை கடந்து மாடுகள் தேக்கு மரக்காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தன. அதன் வடபுறத்தில் ஒரே ஒரு ஆல மரம் தனியாக கிளை பரப்பி நிழல் பரப்பிக்கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் செத்த உக்காரலாம் என்றிருந்தது அவர்களுக்கு.
'ஏலே மாடுவோள படுக்க போடுமா? நீத்தண்ணி குடிச்சுட்டு போலாம்'
ம்ம்ம் என்றார்கள். மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தார்கள்.
உச்சிமகாளி, சாக்கில் இருந்த காய்கறிகளில் இரண்டு கேரட்டுகளை உருவி கடிக்க ஆரம்பித்தான். காடுகளில் அமர்ந்து சாப்பிடும்போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்கிற கணக்கு வழக்கு தாண்டி சோறு செல்லும். இரண்டு கேரட்டுகள் நான்காகியிருந்தது இப்போது. கேசரி, தனக்கு ஈராய்ங்கம் வேண்டுமென்று கேட்டான். கந்தையா எதை தின்பது என்பதில் குழம்பி, புளியங்காய் துவையலை தேடினான்.
'ஆமா, இங்கயே காலிபண்ணிட்டு அங்க போயி என்னத்த திங்க" என்றான் தவிட்டான்.
மூன்று நாள் சாப்பிடும் அளவு புளியோதரையும் ஊசாமல் இருக்கும் புளித்துவையல் உள்ளிட்ட வகையறாக்களும் அதிகமாகவே இருக்கும் தகவலை சொன்னான் உ.மகாளி.
நொடிஞ்சான் அப்படியே தரையில் படுத்தான்.
'ச்சே இந்த காத்துக்கு இப்டியே தூங்கிரும் போல்ருக்கு'
'யாரு வேண்டாங்கா. நீ படுத்து எந்திரிச்சு வா'
பேசிக்கொண்டிருக்கும்போது, விறகு பெறக்கிவிட்டு கீழிறங்கிய ஒரு இளம் பெண் உட்பட நான்குபேர். மரத்தில் விறகு கட்டை சாய்த்துவிட்டு, 'உஸ்...என்னா வெயிலு' என்று அமர்ந்தார்கள். வந்திருந்த ஆம்பளைகள் பீடியையும், பெண்கள் ஓடையில் தண்ணீரையும் குடித்துக்கொண்டிருந்தார்கள்.
தவிட்டான், பீடிக்குடித்துக்கொண்டிருந்தவரிடம், 'ஏண்ணே... மேலே செங்குத்தாம் பாறை
பக்கத்துல மண் சரிஞ்சதுன்னு சொன்னாவளே.... இப்ப எப்படிண்ணே இருக்கு'
'இப்ப போலாம்... அதெல்லாம் எப்பவே சரியாக்கிட்டாவோ. எங்க குள்ராட்டிக்கு போறேளோ'
'ஆமா, ஆத்துக்குள்ள தண்ணி எப்படியிருக்கு. நடந்து போயிரலாட்ம்லா'
' தண்ணி கொஞ்சமாதான் இருக்கு... நடந்திரலாம்... எந்தூர்லருந்து வாரியோ?'
'ஆய்ம்பூரு'
'அப்டியா... நாங்க தாட்டாம் பட்டிதான். ஆய்ம்பூர்ல எங்க? மேல தெருவா?'
'ஆமாமா'
'உங்கூர்ல குரங்குவோ அட்டகாசம் பண்ணுதுவோலாமே'- உ.மகாளி கேட்டான்.
இளம்பெண், மரத்தின் பின்பக்கமிருந்து அவனை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள். இந்த திரும்பல், பல சங்கடங்களை உண்டாக்குபவை என்பதை தெரியாமலேயே அவள் அமர்ந்துகொண்டாள்.
உ.மகாளி கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னாரா இல்லையா என்பதை அவன் உணரவில்லை. திரும்பி பார்த்த பெண், அவனது பழைய காதலியை ஒத்திருந்தாள். ஒற்றைக்கல் மூக்குத்தியோடு அவளது ஜாடையே இவளிடமும் இருப்பதை அறிந்தான். எழுந்து சோம்பல் முறித்தவாறே,வட தென்புறங்களில் அலைந்து, சாதாரணமாக வந்தது போல், அவளின் எதிரில் நின்று பார்த்தான். அவள், ராமலட்சுமியின் ஜாடையில் இருந்தாள். உ.மகாளி கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினான்.
தொடரும்...
Saturday, January 30, 2010
Friday, January 29, 2010
ட்வின் டவர் பாண்டேவும் கென்டிங் பாண்டியும்- 3

ஊரிலிருந்து, முதல் முதல் வெளிநாடு போன, கசமுத்துவின் மகன் சுந்தர் என்பதை அறிந்தேன். ஊர்க்கதைகள் பேசி, அவனுக்கான ஏக்க பெண்கள் சிலரின் பெயரை சொல்லி, 'அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகலையே' என்று கேட்டபோது, வெளிநாடு வந்தும் திருந்த மாட்டீங்களாடா என்றிருந்தது.
'குழந்தைகுட்டிகளோட இருக்காங்க' என்ற உண்மையை சொன்னால், அவனது இன்றைய இரவு தூக்கமின்மையாகி போகுமென்பதால்,'இல்ல'என்று சொல்லி வைத்தோம்.
எங்கெங்கு என்ன கிடைக்குமென்று சொன்னான். அதுக்கெல்லாம் ரிங்கெட் வேணுமே மகனே என்று திரும்பவும் அறைக்கு வந்தால், மணி 8.30. சாப்பிடலாமென்று இரண்டு தெரு தள்ளி சென்றோம். வீச்சு புரோட்டா சுற்றல் வாசம் தெரிந்ததில் நின்று, விசாரித்தோம். நம்மூர் அண்ணன்கள்தான்.

படங்கள்: விக்கிபீடியா
அருகில் இருந்த தெருவில் இருட்டு. கடையில் கீழ்பக்கம் அரைகுறை இருட்டாக இருந்த இடத்தில் நான்கைந்து விலைமகளிர்! அங்கங்கள் தெரிவது போல வழு வழு உடையில் நின்றிருந்தனர். முனுசாமி மூச்சடைத்து நின்றான். இவர்களைத்தாண்டி கடை ஒன்றிருந்தது. பீர் வாங்கலாமே என்ற சாக்கில் அவர்க்ளை கடந்தோம். சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் சாய்ந்திருந்த ஒருவனை, ஒருத்தி சைகையால் அழைத்துக்கொண்டிருந்தாள். இந்த அழைப்பு தன் பக்கம் வருமோ என்று காத்திருந்தான் முனுசாமி. எனக்கு கைகாலில் நடுக்கம்.
அங்கிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. புரோட்டைவை வீசிக்கொண்டிருந்த திண்டுக்கல் அண்ணன், நமட்டு சிரிப்பு சிரித்தார். அர்த்தம் என்னவென்று தெரியவில்லை.
ரூமுக்கு வந்ததும் இந்தப் பெண்கள் பற்றி பேச ஆரம்பித்தான் முனு. தேவையில்லாத பேச்சு.
நாங்கள் போன நேரத்தில் இந்தியாவில் கிரிக்கெட். அறை சேனலை அங்குமிங்கும் மாற்றியதில் எங்கெங்கும் காணினும் புட்பாலடா என்றிருந்தது. ரெண்டு பெக்கிற்கு பிறகு தூக்கம்.
காலையில் 9.30க்கு ரிசப்ஷன் வந்துவிட்டோம். 10 மணிக்கு வேன் வருமாம். ரூமை காலிபண்ணிவிட்டு காத்திருந்தால், 9.45க்கே வேன். ஏறினோம். கென்டிங் பயணம்.
போகும் வழியில் பத்துகேவ் முருகனுக்காக நின்றது வண்டி. இப்போது வேனியில் வேறு சில புதிய நபர்கள் இருந்தனர். அவர்களின் குடும்ப தலைவர் பாண்டி. மதுரை பாண்டி.
படியேறி உள்ளே செல்ல அதிகமாக சிரமப்பட்டார் பாண்டியனார்.
'உள்ளே போனா நெஞ்சுவலிக்கும் சொன்னாங்க... போகவா வேண்டாமான்னு தெரியலையே' என்று பாதி வழியில் பயத்தை வரவழைத்துவிட்டு நின்றுவிட்டார்.
கூட வந்த வட இந்திய பார்டிகள் வேக வேகமாக படியேறி உள்ளே போன பிறகுதான் மதுரை பாண்டிக்கும், எங்களுக்கும் நிம்மதி. சாமி கும்பிட்டு விட்டு, வெளியே வந்து விதவிதமாக போட்டோ எடுத்துக்கொண்டோம். வாசலில் அநியாயத்துக்கு புறாக்கள்.
'ஏல மலேசிய புறா... அது பக்கத்துல நின்னுல, போட்டோ எடுக்கேன்"
'முனுஸ், புறால என்னடா மலேசியா, இந்தியா!'
கீழே இருந்த கடையில் இளநீரை குடித்துவிட்டு வேனில் ஏறினால் தூக்கம். குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் ஜில் காற்று. தூக்கம் கலைந்த போது மலைமீது ஏறிகொண்டிருந்தது வேன்.
'இந்த ஐலேண்ட் முழுவதும் சீனாக்காரர் ஒருத்தருக்கு சொந்தமானது. அவர் இறந்துட்டாரு. அவரு மகன்தான் இதை இப்ப பார்த்துக்கிறார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சூதாட்ட கிளப், இங்கதான் இருக்கு... கடல் மட்டத்தில இருந்து 2000 அடி உயரத்துல இருக்கிற இடம் இது. உங்களுக்கு புது அனுபவமா இருக்கும்" என்ற டிரைவர், ஒரு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, 'நீங்க இங்க இறங்கி, வீஞ்ச்ல வாங்க. நான் நீங்க இறங்குற இடத்துக்கு வந்துடறேன்' என்று சொல்லி கிளம்பினார்.
வீஞ்ச் நிற்பதே இல்லை. திரும்பும் இடத்தில் மெதுவாக நகரும். ஓடிப்போய் ஏறவேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என்றால் வீஞ்ச்சை நிறுத்தி ஏற்றுவார்களாம்.
ஏறி, மேலே மேலே... கீழ பார்த்தால் கெதக் என்றிருந்தது. காடு. பெரு மரங்களின் உச்சந்தலை தெளிவாக தெரிந்துகொண்டிருந்தது. இவ்வளவு உயரத்துக்கு இதை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்று அந்த உழைப்பை வியந்தோம்.
போகும்போது எதிரில் போகும் வீஞ்ச் பெண்களுக்கு டாட்டா காட்டிக்கொண்டிருந்தான் முனு.
இறங்கி வெளியே வந்தால் மெகா ஹோட்டல்கள் நிறைய. எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது ஹோட்டல் பர்ஸ்ட் வேர்ல்டு. உள்ளே போனால் ரூம் புக்கிங்கிற்கு மெகா க்யூ. லக்கேஜ்ஜை தூக்கிக்கொண்டு நின்று டோக்கன் வாங்கி, ரிசர்ப்ஷன் அருகில் வெயிட்டிங்.
போர்டில் நம்பர் வரும். வெளிநாட்டுக்காரர்களுக்கு நான்கு டிஜிட் நம்பர். லோக்கல் பார்ட்டிகளுக்கு மூன்று டிஜிட்.
வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும்போது மதுரை பாண்டி வந்தார். அவரது லக்கேஜ்ஜுக்கு முனு உதவியதால் கொஞ்சம் கூச்சம் மறந்து சகஜமாக பழக ஆரம்பித்தார்.
'நீங்க எந்த ஊரு... மலேசியாதானா?"
'சென்னை'
'ஏம்தம்பி இதை சொல்லலை'
'நீங்க கேக்கலையே'
--நாங்கள் வைத்திருந்த நம்பர் 4242 போர்டில்.
ஓடிப்போய் பாஸ்போர்ட் காண்பித்து, அதை இதை கேட்டு, கார்ட் கொடுத்தார்கள். சாவி.
எங்களுக்கு அடுத்த ரூம் மதுரை பாண்டி அண்ட் பேமிலிக்கு. மூன்றாவது புளோரில் சந்து சந்தாய் போய், குட்டி ரூமில் பெட்டி வைத்துவிட்டு, குளியல் போட்டோம்.
பிறகு வெளியே வந்தால், குழந்தைகள் விளையாட ஏராளமான விஷயங்கள்.
'நம்மளும் குழந்தைதாம்ல'
-ஒவ்வொரு ரைடாய் போய், இறங்கி, ஹீலிங் டச் போர்டு பார்த்து, மச்சான் மஜாஜ்.
'வா போலாம்'.
உள்ளே இருந்த ரிசப்ஷன் பெண், எல்லாம் கேட்டுவிட்டு, 'டூ யூ வான்ட் ஹேப்பி எண்டிங்?' என்றாள்.
அவள் மூக்கால் பேசியதை வைத்து இதைதான் கேட்டிருப்பாள் என்கிற யூகம்தான்.
அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல், நோ என்றோம்.
உள்ளே, இளம் பெண்கள் மசாஜ் செய்ய தொடங்கினார்கள். மூன்று பெக் உள்ளே போயிருந்ததால் தூங்கிவிட்டேன். அவ்வவ்வோது சுடு தண்ணீரில் நனைத்த டவ்லை கொண்டு அமுக்கி கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் ஞாபகம்.
வெளியில் வந்து பாதத்துக்கு மசாஜ் பண்ணிக்கொண்டிருந்த போது பார்த்தால், உள்ளிருந்து அவசரமாக வெளியே போய்க்கொண்டிருந்தார் பாண்டி.
'அண்ணாச்சி...'
'நீங்களும், இங்கதான் இருக்கீங்களா?' என்று கேட்டுவிட்டு, அவர்கள் கொடுத்த பச்சை தேனீரை இன்னுமொரு குடித்தார்.
'நல்லா இருக்குலா' என்று பாண்டி சொன்னதும் மசாஜ் பெண்ணுக்கு என்ன கேட்டதோ தெரியவில்லை.
'இந்தியால ஆயுர்வேத மசாஜ் பேமஸ் இல்ல' என்றாள்.
'ஆமா, 6 மாசத்துக்கு ஒரு முறை அதை பண்ணுவேன்'----பாண்டி முந்தினார்.
மூணு மாசத்துக்கு ஒருமுறை மசாஜ் செய்தால் ரத்தஓட்டம் சூப்பராக இருக்கும் என்று ஆரம்பித்து பெரிய லெக்சர் கொடுத்தார் மலாய் லேடி.
வெளியே வந்து ஜில் குளிரில் ஸ்வெட்டர் கூட இல்லாமல், நாங்கள் சுற்ற, பாண்டியும் சேர்ந்துகொண்டார். அவரது குடும்பம் மகன் தலைமையில் தனியாகச் சுற்றிக்கொண்டிருந்தது.
அடுத்து, சூதாட்ட விடுதிக்குள் நுழைந்தோம். டீசண்டான சந்தைக்கடை மாதிரி இருந்தது. அநியாயத்துக்கு அருகருகே எஸ்கலேட்டர்.
'எப்படி விளையாடுறாங்க?' என்று ஒரு இடத்தில் நின்று பார்த்தால், ஒவ்வொரு டேபிளிலும் வெவ்வேறான ஆட்டங்கள்.
இது நமக்கு சரிபட்டு வராதுப்பா என்று நகரும்போது தெரிந்த முகமாக இருக்கிறதே என்று பார்த்தால், அட நம்ம ஹீரோ ஷாம்!
'என்ன பாஸ் இங்க'
'நீங்க..."
'இங்கதான தில்லாலங்கடி ஷூட்டிங்'
பாண்டியை அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு, கொஞ்ச நேரம் ஆச்சரிய கதை பேசினோம்.
விளையாட்டை கட் பண்ணிவிட்டு, வெளியே வந்தார் ஷாம். அவருடன் மலேசிய தமிழ் பத்திரிகை ஒன்றின் ஓனர், மலேசிய பிரதமரின் நெருங்கிய நண்பர்...இன்னும் சில மெகா தலைகள் தெரிந்தன.
'நான் டயட்ல இருக்கேன். நீங்க... பீர்...'
'பின்ன'
ஒரு தூக்குவாளி முழுவதும் ஐஸ். அதற்குள் 5 பீரை குத்தி வைத்திருந்தார்கள். அதெல்லாம் நம்மூர் ஸ்பிரைட் பாட்டில் மாதிரி இருந்தது.
ஜில்லென்று குடித்தால் ஒரு மண்ணும் தெரியவில்லை. நான், நான்கை காலி பண்ண, முனு ஒன்றை மட்டும். இன்னும் குடிக்கலாம் போலிருந்தது. நாகரிகம் கருதி போதும்.
'அப்புறம் எத்தனை நாள் இங்க இருக்கீங்க'
'காலைல பிளைட்'
'இன்னும் ரெண்டு நாள் டேரா போடுங்க, பினாங்குலாம் போயிட்டு வரலாம்'.
'ஆபீஸ்ல அவ்வளவுதான் லீவு பாஸ். இவ்வளவு தூரத்துல வந்து உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி'.
அவர் கிளம்ப, நாங்களும்.
சுற்றி சுற்றி வந்து டயடாகி ரூமுக்கு செல்லும்போது, இரவு 11. காலையில் 6 மணிக்கு பிக்கப் வேன் வருமென்பதால் பேக்கிங் ஞாபகம் வந்தது.
லிப்டில் ஏறும்போது, முனு, பாண்டியிடம் கேட்டான்,
'அண்ணாச்சி, மசாஜ் சென்டர்ல, ஹேப்பி எண்டிங்னாங்களே... என்ன அர்த்தம்"
'ச்சீ போங்க தம்பி'.
முற்றும்
Saturday, January 16, 2010
ட்வின் டவர் பாண்டேவும் கென்டிங் பாண்டியும்- 2
குபுக்கென வியர்த்து, கூடத்தை விட்டு வெளியே வந்தோம். அடுத்து கோலாலம்பூருக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்றதை விவரித்தார் டிரைவர். அவர் சொல்ல சொல்ல, போர் நினைவு சின்னம் வந்தது. இறங்கி எல்லாரும் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பாண்டேவும் அவரது மனைவியும் வெளியே ஐஸ் வாங்கி சாப்பிடுவதில் குஷியாக இருந்தார்கள்.
அடுத்து மன்னர் அரண்மனை. உள்ளே செல்ல அனுமதி இல்லை. வாசலில் நின்று பார்த்து ஏங்கி பெருமூச்சு விட்டுவிட்டு, சிகரெட்டை பற்ற வைத்தோம். மன்னர் உள்ளே இருந்தால், வாசல் அருகே உள்ள குளத்தில் ஒரு கலரில் தண்ணீரும் இல்லையென்றால் வேறு நிறத்தில் தண்ணீரும் இருக்கும் என்றார்கள்.

'ம்' என்று கேட்டுவிட்டு எல்லாரும் வேனில் ஏறினால், பாண்டேவையும் அவரது மனைவியையும் காணவில்லை. எங்கடா என்று தேடினோம். அரண்மனையை தாண்டி ரோட்டில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இங்கிருந்து கையசைத்து, வந்து சேர்ந்து புறப்பட்டோம். பிறகு ஆசியாவிலே பெரிய மசூதி. உள்ளே போகவில்லை. எங்களை தவிர, வேனில் இருந்த மற்றவர்கள் எதிலும் விருப்பம் இல்லாதது போலவே இருந்ததால், டிரைவரும் ஆர்வம் காட்டவில்லை.
அடுத்து கோக்கெய் சாக்லெட் கடை. சுத்தி சுத்தி பார்த்து அவர்கள் கொடுத்த ஒவ்வொரு விதமான சாக்லெட்டின் சாம்பிளை ருசித்து, யாரும் வாங்காமல் போனால் எப்படி?
யாராவது வாங்குகிறார்களா என்று பார்த்தோம். ம்ஹும்.. இங்கலாம் ஏன் கூட்டிட்டு வர்றீங்க என்பது போல கூட வந்தவர்கள் சரட்டென்று வெளியே போய் விட்டார்கள்.
நண்பன், ரெண்டு பாக்கெட் வாங்கினான்.
பாண்டே, 'நம்ம ஏர்போர்ட்லயே சீப்பா கிடைக்குமே" என்றார்.
நல்ல யோசனைதான் என்று சொல்லிவிட்டு வேனில் ஏறினோம்.
பின்னால் இருந்துகொண்டே, அது இது என்று பேசிக்கொண்டு வந்தவர், 'நாங்க ஈவினிங் லங்காவி போறோம். நீங்க வர்றீங்கல்ல' என்றார்.
'இல்ல, நாங்க, காலையில கெண்டிங் போறோம்"
'இது என் விசிட்டிங் கார்ட். எப்ப வேணாலும் பேசுங்க. நான் சென்னை வரும் போது சந்திக்கிறேன்'.
பதிலுக்கு நண்பனும் கார்ட்டை கொடுத்தான்.
வேன், சுற்றி சுற்றி வந்து ஹோட்டலில் நின்றது. வண்டியில் இருந்தவர்களில் எங்களுக்கு மட்டும்தான் இந்த ஹோட்டல். மற்றவர்கள் வெவ்வேறு ஹோட்டல்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். பாண்டேவுக்கும் அவ்பர் மனைவிக்கு ஒரு டாடாவை போட்டுவிட்டு, லிஃப்டில் ஏறும்போது மிச்ச பெக்கார்ட்டியை தேடியது மனது. நண்பனுக்கு ஹோட்டலில் இருந்து பீர்.
முதல் இரண்டு மூன்று ரவுண்ட்களை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என்பது எங்களது திட்டம். மணி இப்போது 6 மணி. மலேசியாவுக்கு ஏற்கனவே போய்விட்டு வந்த நண்பர்கள், அப்படி இப்படி என்று விட்ட புருடாவுக்கு ஆவலாய் பறந்துகொண்டிருந்தான் நண்பன்.
டிரெஸ் மாற்றிவிட்டு, சுற்ற கிளம்பும் போது நண்பன் கேட்டான்.
'ஏல செல்போனு"
'நீதாண்டே வச்சிருந்தே'
நண்பன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து தடவி தடவி பார்த்துவிட்டு கேட்டான்.
'ஏல மூதேவி, அந்த பாண்டேகிட்டயிருந்து போனை வாங்கினியா?'
'ஆமா, உங்கிட்டதான் கொடுத்தேன்"
'தரலையே'
பிறகு ரூமில் உட்கார்ந்து யோசித்ததில் பாண்டேவிடமிருந்து போனை வாங்கவில்லை என்று தெரிந்தது. ரிசப்ஷன் வந்து, நம்பருக்கு போட்டால், ஸ்விட்சுடு ஆஃப் தகவல்.
'நீ அந்த பாண்டே நம்பருக்கு போடு"
கார்டை எடுத்து, நம்பரை பார்த்தால், மூன்று நம்பர். இதுல எதை போடறது?'.
'ஒண்ணொன்னா எல்லாத்தையும் போடு. எதை எடுக்காம்னு பார்ப்போம்"
முதல் நம்பர், நாட் ரீச்சபிள்
அடுத்த நம்பர், நாட் இன் யூஸ்.
அடுத்த நம்பரை போட்டால்... யெஸ். ரிங் போகுதுடா!
'சார் திஸ் இஸ் முனுசாமி சுடலைமுத்து"
'யெஸ்...டெல் மி"
'மாப்பிளை டெல் மீங்கறான்"
நீ கொண்டா என்று போனை வாங்கி, கூட ரவுண்ட் அடிச்ச விஷயத்தை சொன்னதும், 'எங்கிட்ட இல்லையே... கொடுத்துட்டேனே' என்றார் பாண்டே.
போனை கட் பண்ணிவிட்டு, 'எங்கடா போயிருக்கும்' என்ற கண்ணீர் வராத குறையாக, ரிசப்ஷன் பக்கத்திலேயே நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ரிசப்ஷனில் இருந்து அழைப்பு.
'பாண்டே"
'அவங்கிட்டதான் போன் இருக்காம். அவன் மனைவி தெரியாம, அவங்க போனுன்னு நினைச்சு பேக்ல போட்டுட்டாளாம். இப்ப, அவன் லங்காவி கிளம்பிட்டு இருக்கான். இந்தியா வந்துட்டு அனுப்பி வைக்கவான்னு கேக்குறான்.
எதையாவது பண்ணித்தொலை. பாண்டேவிடம் அட்ரஸ் கொடுத்துவிட்டு, நண்பனை பார்த்தால், குடிச்ச மூன்று பீரும் இறங்கியிருப்பது போல் தெரிந்தான்.
'விடுடா...அதான் அனுப்புறன்னு சொல்றான்ல" என்று சொல்லிக்கொண்டே ரோட்டில் நடந்தோம். மாடி ரயில் ஏறி, ஏதாவது ஒரு ஊர் என்று சொல்லலாம் என்று நினைத்தால், அங்கே அடுத்த ஸ்டாப்லிருந்து அந்த ரூட்டையே எழுதியிருந்தார்கள். பார்த்துவிட்டு, 'சுல்தான் இஸ்மாயில் டூ'.
அது எந்த ஏரியா என்று கூட தெரியாது. உட்கார்ந்தோம். ரயிலில் கூட்டம் அதிகமில்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, நடந்தால் 'மஜீத் இந்தியா" என்றார்கள். எல்லாம் நம்மூர் பார்ட்டிகள். ஹனிபாவில் ஏறி இறங்கி, நாலு பாக்கெட் சிகரெட், சாக்லெட் அயிட்டங்களை நண்பன் வாங்கினான்.
கடையில் இருந்து இறங்கிகொண்டிருந்தபோது, ஒருவர் உற்று உற்றுப்பார்த்துவிட்டு, 'நீங்க முனுசாமி அண்ணன்தானே" என்று கேட்டார்.
நாளைக்கு சொல்றேன்.
அடுத்து மன்னர் அரண்மனை. உள்ளே செல்ல அனுமதி இல்லை. வாசலில் நின்று பார்த்து ஏங்கி பெருமூச்சு விட்டுவிட்டு, சிகரெட்டை பற்ற வைத்தோம். மன்னர் உள்ளே இருந்தால், வாசல் அருகே உள்ள குளத்தில் ஒரு கலரில் தண்ணீரும் இல்லையென்றால் வேறு நிறத்தில் தண்ணீரும் இருக்கும் என்றார்கள்.

'ம்' என்று கேட்டுவிட்டு எல்லாரும் வேனில் ஏறினால், பாண்டேவையும் அவரது மனைவியையும் காணவில்லை. எங்கடா என்று தேடினோம். அரண்மனையை தாண்டி ரோட்டில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இங்கிருந்து கையசைத்து, வந்து சேர்ந்து புறப்பட்டோம். பிறகு ஆசியாவிலே பெரிய மசூதி. உள்ளே போகவில்லை. எங்களை தவிர, வேனில் இருந்த மற்றவர்கள் எதிலும் விருப்பம் இல்லாதது போலவே இருந்ததால், டிரைவரும் ஆர்வம் காட்டவில்லை.
அடுத்து கோக்கெய் சாக்லெட் கடை. சுத்தி சுத்தி பார்த்து அவர்கள் கொடுத்த ஒவ்வொரு விதமான சாக்லெட்டின் சாம்பிளை ருசித்து, யாரும் வாங்காமல் போனால் எப்படி?
யாராவது வாங்குகிறார்களா என்று பார்த்தோம். ம்ஹும்.. இங்கலாம் ஏன் கூட்டிட்டு வர்றீங்க என்பது போல கூட வந்தவர்கள் சரட்டென்று வெளியே போய் விட்டார்கள்.
நண்பன், ரெண்டு பாக்கெட் வாங்கினான்.
பாண்டே, 'நம்ம ஏர்போர்ட்லயே சீப்பா கிடைக்குமே" என்றார்.
நல்ல யோசனைதான் என்று சொல்லிவிட்டு வேனில் ஏறினோம்.
பின்னால் இருந்துகொண்டே, அது இது என்று பேசிக்கொண்டு வந்தவர், 'நாங்க ஈவினிங் லங்காவி போறோம். நீங்க வர்றீங்கல்ல' என்றார்.
'இல்ல, நாங்க, காலையில கெண்டிங் போறோம்"
'இது என் விசிட்டிங் கார்ட். எப்ப வேணாலும் பேசுங்க. நான் சென்னை வரும் போது சந்திக்கிறேன்'.
பதிலுக்கு நண்பனும் கார்ட்டை கொடுத்தான்.
வேன், சுற்றி சுற்றி வந்து ஹோட்டலில் நின்றது. வண்டியில் இருந்தவர்களில் எங்களுக்கு மட்டும்தான் இந்த ஹோட்டல். மற்றவர்கள் வெவ்வேறு ஹோட்டல்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். பாண்டேவுக்கும் அவ்பர் மனைவிக்கு ஒரு டாடாவை போட்டுவிட்டு, லிஃப்டில் ஏறும்போது மிச்ச பெக்கார்ட்டியை தேடியது மனது. நண்பனுக்கு ஹோட்டலில் இருந்து பீர்.
முதல் இரண்டு மூன்று ரவுண்ட்களை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என்பது எங்களது திட்டம். மணி இப்போது 6 மணி. மலேசியாவுக்கு ஏற்கனவே போய்விட்டு வந்த நண்பர்கள், அப்படி இப்படி என்று விட்ட புருடாவுக்கு ஆவலாய் பறந்துகொண்டிருந்தான் நண்பன்.
டிரெஸ் மாற்றிவிட்டு, சுற்ற கிளம்பும் போது நண்பன் கேட்டான்.
'ஏல செல்போனு"
'நீதாண்டே வச்சிருந்தே'
நண்பன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து தடவி தடவி பார்த்துவிட்டு கேட்டான்.
'ஏல மூதேவி, அந்த பாண்டேகிட்டயிருந்து போனை வாங்கினியா?'
'ஆமா, உங்கிட்டதான் கொடுத்தேன்"
'தரலையே'
பிறகு ரூமில் உட்கார்ந்து யோசித்ததில் பாண்டேவிடமிருந்து போனை வாங்கவில்லை என்று தெரிந்தது. ரிசப்ஷன் வந்து, நம்பருக்கு போட்டால், ஸ்விட்சுடு ஆஃப் தகவல்.
'நீ அந்த பாண்டே நம்பருக்கு போடு"
கார்டை எடுத்து, நம்பரை பார்த்தால், மூன்று நம்பர். இதுல எதை போடறது?'.
'ஒண்ணொன்னா எல்லாத்தையும் போடு. எதை எடுக்காம்னு பார்ப்போம்"
முதல் நம்பர், நாட் ரீச்சபிள்
அடுத்த நம்பர், நாட் இன் யூஸ்.
அடுத்த நம்பரை போட்டால்... யெஸ். ரிங் போகுதுடா!
'சார் திஸ் இஸ் முனுசாமி சுடலைமுத்து"
'யெஸ்...டெல் மி"
'மாப்பிளை டெல் மீங்கறான்"
நீ கொண்டா என்று போனை வாங்கி, கூட ரவுண்ட் அடிச்ச விஷயத்தை சொன்னதும், 'எங்கிட்ட இல்லையே... கொடுத்துட்டேனே' என்றார் பாண்டே.
போனை கட் பண்ணிவிட்டு, 'எங்கடா போயிருக்கும்' என்ற கண்ணீர் வராத குறையாக, ரிசப்ஷன் பக்கத்திலேயே நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ரிசப்ஷனில் இருந்து அழைப்பு.
'பாண்டே"
'அவங்கிட்டதான் போன் இருக்காம். அவன் மனைவி தெரியாம, அவங்க போனுன்னு நினைச்சு பேக்ல போட்டுட்டாளாம். இப்ப, அவன் லங்காவி கிளம்பிட்டு இருக்கான். இந்தியா வந்துட்டு அனுப்பி வைக்கவான்னு கேக்குறான்.
எதையாவது பண்ணித்தொலை. பாண்டேவிடம் அட்ரஸ் கொடுத்துவிட்டு, நண்பனை பார்த்தால், குடிச்ச மூன்று பீரும் இறங்கியிருப்பது போல் தெரிந்தான்.
'விடுடா...அதான் அனுப்புறன்னு சொல்றான்ல" என்று சொல்லிக்கொண்டே ரோட்டில் நடந்தோம். மாடி ரயில் ஏறி, ஏதாவது ஒரு ஊர் என்று சொல்லலாம் என்று நினைத்தால், அங்கே அடுத்த ஸ்டாப்லிருந்து அந்த ரூட்டையே எழுதியிருந்தார்கள். பார்த்துவிட்டு, 'சுல்தான் இஸ்மாயில் டூ'.
அது எந்த ஏரியா என்று கூட தெரியாது. உட்கார்ந்தோம். ரயிலில் கூட்டம் அதிகமில்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, நடந்தால் 'மஜீத் இந்தியா" என்றார்கள். எல்லாம் நம்மூர் பார்ட்டிகள். ஹனிபாவில் ஏறி இறங்கி, நாலு பாக்கெட் சிகரெட், சாக்லெட் அயிட்டங்களை நண்பன் வாங்கினான்.
கடையில் இருந்து இறங்கிகொண்டிருந்தபோது, ஒருவர் உற்று உற்றுப்பார்த்துவிட்டு, 'நீங்க முனுசாமி அண்ணன்தானே" என்று கேட்டார்.
நாளைக்கு சொல்றேன்.
Sunday, January 10, 2010
ட்வின் டவர் பாண்டேவும் கென்டிங் பாண்டியும்- 1
ஏர்போர்டிலிருந்து வளைந்து நெளிந்து வெளியே சென்று கொண்டிருந்தது டூரிஸ்ட் வேன். 'என்ன விஷயம், வண்டிய நிறுத்த சொன்னீங்களே'
----நண்பன் ஆட்காட்டி விரலை காண்பித்தான். சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தினார் டிரைவர். வேகமாக ஓடிச்சென்று திரும்பி வந்தவன் சொன்னான்:
'யப்பாட்டா... மலேசியா மண்ணுல ஒண்ணுக்கடிச்சாச்சு'
அடப்பாவிகளா... இப்படியெல்லாமா ஆசை வச்சிருப்பாங்க.
ட்வின் டவரின் எதிரில் இருந்தது, ஹோட்டல் அறை. வேனில் இருந்து இறங்குமுன் ஒரு மஞ்சள் கலர் ஸ்லிப் கொடுத்தார்கள். அதைக்காண்பித்தால் ரூம், மற்றும் டிபன் கொடுப்பார்களாம். ரிசப்ஷனில் இருந்த மலாய் (மலேசியால பார்த்ததுல இந்த பொண்ணுதான் ரொம்ப ஒல்லி) பொண்ணு, கன்னம் வரை சிரித்துக்கொண்டே ஏதேதோ எழுதி, சாவி கொடுத்தாள்.
வேன் டிரைவர் இறங்குவதற்கு முன், 'நீங்க தங்க போற ஏரியா கொஞ்சம் மோசமானது, ஈவினிங்ல அங்க இங்க அலையாதீங்க'என்று அட்வைஸ் என்ற பெயரில் பயங்காட்டிச் சென்றிருந்தார். அவர் சொன்ன அடுத்த நிமிடத்திலிருந்த நண்பன், சர்வநாடியும் ஒடுங்கி, சிரிக்க மறந்திருந்தான். அறையில் ரெஸ்ட் எடுத்துவிட்டு, 2 மணிக்கு ரிசப்ஷன் வந்தால் சிட்டி டூருக்கு வேன் வருமாம்.
வந்ததும் நண்பன் கட்டையை சாத்தினான்.
'ஏல, இதுக்கா வந்தோம். பக்கத்துல ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம்டா" என்றேன்.
'ச்சீ... ஏரியா மோசம். வந்த எடத்துல எக்குத்தப்பா ஆயிரக்கூடாது பாரு".
'அடே, ப்ளாக் எழுதற பல பேரு இங்க இருக்காங்க...ஏதாவதுன்னா ஓடியாந்து விசாரிப்பாங்கடா'
'நீ, எங்க வேணா போ. நான் வரலை"
டூட்டி ஃப்ரியில் வாங்கிய பெக்கார்டியில் 2 பெக் போட்டுவிட்டு, இறங்கி வந்தால், எவ்வளவு பெரிய ரோடு!. சிக்னல் விழுந்ததும் பைக்காரர்கள் செல்லும் வேகத்தில், ஓரத்தில் நின்ற என் காது ஜவ்வு கிர்ர். எதிரில் தமிழில் எழுதப்பட்டிருந்த கடையில் எட்டிப்பார்த்தேன் எதையாவது சாப்பிடலாமே என்று.

அவர்கள் தமிழ் பேசியதைப் பார்த்து, உள்ளே உட்கார்ந்தேன்.
நம்மூர் ஓட்டல் மாதிரி. ஆனா, அவர்கள் வைக்கிற காம்பினேஷன் பிடிக்காது போலிருந்தது. (பக்கத்தில் சாப்பிட்டவரை பார்த்துதான்).
என்னிடம் வந்த சர்வர், 'தண்ணி' என்றார். சரி என்றேன். ஒரு பெரிய டம்பளரில் டீ கொண்டு வந்தார். 'நான் தண்ணிதானே கேட்டேன்"
'ஊர்ல இருந்து வந்திருக்கீங்களா? என்று கேட்டுக்கொண்டே, தண்ணீர் கொண்டு வந்தார். இங்க தண்ணின்னா இதுதான்.
'அப்புறம், எந்த ஊர்ல இருந்து..."
'சென்னை...நீங்க?"
'ராமநாதபுரம்"
'என்ன விஷயமா வந்திருக்கீங்க... எத்தனை நாளு தங்கியிருப்பீங்க"
'சும்மா. ரெண்டு நாளு"
'ரெண்டு நாளா... வைர பிசினசா'
'வைரமா... இல்ல இல்ல"
'தெரியும் சார். இவ்வளவு வருஷமா இங்கயிருக்கோம். எங்களுக்கு தெரியாதா... கிராண்ட் காண்டினெண்டல்லதான தங்கியிருக்கீங்க"

இது, ஏதோ வில்லங்கத்தில் கொண்டு விட்டுவிடும் என்பதால் வேகமாக தலையாட்டி விட்டு வந்துவிட்டேன். ரோட்டு வேடிக்கை முடிந்து, நண்பனை உசுப்பி, ரெண்டு மணி சிட்டி டூர் வேனை பிடித்தோம். வேனில், இந்தியாவிலிருந்து வந்திருந்த நான்கு இளம் ஜோடிகள் இருந்தார்கள். ஒவ்வொரு இடம் போனதும், 'சீ மை ரைட்டன் சைட்.. திஸ் இஸ்..." என்று ஆரம்பிப்பார் டிரைவர் கம் கைட். நம்மூர் அண்ணாச்சிதான்.
ட்வின் டவர் அருகில், போடோ எடுப்பதற்கான இடத்தில் அவ்வளவு கூட்டம். இறங்கி வந்த ஒரு ஜோடியின் செல்போன், என் கால் அருகே விழுந்துவிட்டது. எடுத்துக்கொடுத்ததில் கொஞ்சம் பேச ஆரம்பித்தோம்.
பெயர் சஞ்சய் பாண்டே. மகாராஷ்ட்ரா. சென்னையில் ரெண்டு கெமிக்கல் கம்பெனி இருக்கிறதாம்!. ஹனிமூன் வந்திருக்கிறார்கள்.
'நான் இங்க அடிக்கடி வருவேன். என் வொய்ப்புக்காக இப்ப வந்திருக்கேன்' என்று ஆரம்பித்து, அவர்கள் காதலித்ததிலிருந்து, பெற்றோர் சண்டை, கல்யாணம் ஆன வரை, விலாவாரியாக விளக்கியதில், நண்பன் அப்செட்.
'ஏண்டா வெளிநாட்டுல வந்துமா?" என்பதுபோல் எனக்கொரு முறைப்பை கொடுத்தாலும் பார்ட்டி விட்டபாடில்லை.
'ஏல முன்னபின்ன தெரியாத நம்மட்டயே, இந்தா கொல்லு கொல்லுதானே... அவன் பொண்டாட்டி பாவம்ல' என்றான். அந்த இளம் மனைவி, 'பீடா" கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தாள். கொடுமைடா.
பிறகு, அவர் செல்போனில் சிக்னல் கிடைக்காமல் போராடிக்கொண்டி ருந்ததை பார்த்து, 'இதுல பேசுங்க சார்' என்று நண்பனின் போனை கொடுத்தேன். அவன் எரித்துவிடுவது போல பார்த்ததை, நான் பார்க்கவில்லை.
பேசிவிட்டு வேனி்ல் ஏறினோம். எங்களுக்கு பின் சீட்டில் பாண்டே. அடுத்து, மலேசிய உலோகத்தில் (இதுக்கு ஏதோ பேர் சொன்னாங்களே...pewter: தகவல் உதவி, அண்ணன் TBCD )செய்யப்பட்ட டம்ளர், கூஜா உள்ளிட்ட மினி பாத்திரக்கடை.

ஒருவர், இதை பிடிங்க என்று ஒரு டம்பள்ரை கொடுத்தார். கனமான டம்ளர். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, 'இப்ப குளிருதா பாருங்க" என்றார். அட ஆமா, டம்ளர் ஜில். இதுதான் இதோட ஸ்பெஷல் என்றார். நண்பன் ஆர்வமாக, சரக்கடிக்கும் போது மிச்ச சரக்கை ஊத்தி வைக்க நல்ல பாத்திரம் என்று சொல்லிக்கொண்டே ரேட் கேட்டான். தம்மாண்டு டம்ளருக்கு 250 ரிங்கெட். இந்திய ரூபாய்க்கு மனசுக்குள் கூட்டி கழித்தால் கிட்டத்தட்ட 3250 ரூபாய். கெதக் என்றது நண்பனுக்கு.
நாளைக்கு சொல்றேன்.
----நண்பன் ஆட்காட்டி விரலை காண்பித்தான். சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தினார் டிரைவர். வேகமாக ஓடிச்சென்று திரும்பி வந்தவன் சொன்னான்:
'யப்பாட்டா... மலேசியா மண்ணுல ஒண்ணுக்கடிச்சாச்சு'
அடப்பாவிகளா... இப்படியெல்லாமா ஆசை வச்சிருப்பாங்க.
ட்வின் டவரின் எதிரில் இருந்தது, ஹோட்டல் அறை. வேனில் இருந்து இறங்குமுன் ஒரு மஞ்சள் கலர் ஸ்லிப் கொடுத்தார்கள். அதைக்காண்பித்தால் ரூம், மற்றும் டிபன் கொடுப்பார்களாம். ரிசப்ஷனில் இருந்த மலாய் (மலேசியால பார்த்ததுல இந்த பொண்ணுதான் ரொம்ப ஒல்லி) பொண்ணு, கன்னம் வரை சிரித்துக்கொண்டே ஏதேதோ எழுதி, சாவி கொடுத்தாள்.
வேன் டிரைவர் இறங்குவதற்கு முன், 'நீங்க தங்க போற ஏரியா கொஞ்சம் மோசமானது, ஈவினிங்ல அங்க இங்க அலையாதீங்க'என்று அட்வைஸ் என்ற பெயரில் பயங்காட்டிச் சென்றிருந்தார். அவர் சொன்ன அடுத்த நிமிடத்திலிருந்த நண்பன், சர்வநாடியும் ஒடுங்கி, சிரிக்க மறந்திருந்தான். அறையில் ரெஸ்ட் எடுத்துவிட்டு, 2 மணிக்கு ரிசப்ஷன் வந்தால் சிட்டி டூருக்கு வேன் வருமாம்.
வந்ததும் நண்பன் கட்டையை சாத்தினான்.
'ஏல, இதுக்கா வந்தோம். பக்கத்துல ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம்டா" என்றேன்.
'ச்சீ... ஏரியா மோசம். வந்த எடத்துல எக்குத்தப்பா ஆயிரக்கூடாது பாரு".
'அடே, ப்ளாக் எழுதற பல பேரு இங்க இருக்காங்க...ஏதாவதுன்னா ஓடியாந்து விசாரிப்பாங்கடா'
'நீ, எங்க வேணா போ. நான் வரலை"
டூட்டி ஃப்ரியில் வாங்கிய பெக்கார்டியில் 2 பெக் போட்டுவிட்டு, இறங்கி வந்தால், எவ்வளவு பெரிய ரோடு!. சிக்னல் விழுந்ததும் பைக்காரர்கள் செல்லும் வேகத்தில், ஓரத்தில் நின்ற என் காது ஜவ்வு கிர்ர். எதிரில் தமிழில் எழுதப்பட்டிருந்த கடையில் எட்டிப்பார்த்தேன் எதையாவது சாப்பிடலாமே என்று.
அவர்கள் தமிழ் பேசியதைப் பார்த்து, உள்ளே உட்கார்ந்தேன்.
நம்மூர் ஓட்டல் மாதிரி. ஆனா, அவர்கள் வைக்கிற காம்பினேஷன் பிடிக்காது போலிருந்தது. (பக்கத்தில் சாப்பிட்டவரை பார்த்துதான்).
என்னிடம் வந்த சர்வர், 'தண்ணி' என்றார். சரி என்றேன். ஒரு பெரிய டம்பளரில் டீ கொண்டு வந்தார். 'நான் தண்ணிதானே கேட்டேன்"
'ஊர்ல இருந்து வந்திருக்கீங்களா? என்று கேட்டுக்கொண்டே, தண்ணீர் கொண்டு வந்தார். இங்க தண்ணின்னா இதுதான்.
'அப்புறம், எந்த ஊர்ல இருந்து..."
'சென்னை...நீங்க?"
'ராமநாதபுரம்"
'என்ன விஷயமா வந்திருக்கீங்க... எத்தனை நாளு தங்கியிருப்பீங்க"
'சும்மா. ரெண்டு நாளு"
'ரெண்டு நாளா... வைர பிசினசா'
'வைரமா... இல்ல இல்ல"
'தெரியும் சார். இவ்வளவு வருஷமா இங்கயிருக்கோம். எங்களுக்கு தெரியாதா... கிராண்ட் காண்டினெண்டல்லதான தங்கியிருக்கீங்க"
இது, ஏதோ வில்லங்கத்தில் கொண்டு விட்டுவிடும் என்பதால் வேகமாக தலையாட்டி விட்டு வந்துவிட்டேன். ரோட்டு வேடிக்கை முடிந்து, நண்பனை உசுப்பி, ரெண்டு மணி சிட்டி டூர் வேனை பிடித்தோம். வேனில், இந்தியாவிலிருந்து வந்திருந்த நான்கு இளம் ஜோடிகள் இருந்தார்கள். ஒவ்வொரு இடம் போனதும், 'சீ மை ரைட்டன் சைட்.. திஸ் இஸ்..." என்று ஆரம்பிப்பார் டிரைவர் கம் கைட். நம்மூர் அண்ணாச்சிதான்.
ட்வின் டவர் அருகில், போடோ எடுப்பதற்கான இடத்தில் அவ்வளவு கூட்டம். இறங்கி வந்த ஒரு ஜோடியின் செல்போன், என் கால் அருகே விழுந்துவிட்டது. எடுத்துக்கொடுத்ததில் கொஞ்சம் பேச ஆரம்பித்தோம்.
பெயர் சஞ்சய் பாண்டே. மகாராஷ்ட்ரா. சென்னையில் ரெண்டு கெமிக்கல் கம்பெனி இருக்கிறதாம்!. ஹனிமூன் வந்திருக்கிறார்கள்.
'நான் இங்க அடிக்கடி வருவேன். என் வொய்ப்புக்காக இப்ப வந்திருக்கேன்' என்று ஆரம்பித்து, அவர்கள் காதலித்ததிலிருந்து, பெற்றோர் சண்டை, கல்யாணம் ஆன வரை, விலாவாரியாக விளக்கியதில், நண்பன் அப்செட்.
'ஏண்டா வெளிநாட்டுல வந்துமா?" என்பதுபோல் எனக்கொரு முறைப்பை கொடுத்தாலும் பார்ட்டி விட்டபாடில்லை.
'ஏல முன்னபின்ன தெரியாத நம்மட்டயே, இந்தா கொல்லு கொல்லுதானே... அவன் பொண்டாட்டி பாவம்ல' என்றான். அந்த இளம் மனைவி, 'பீடா" கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தாள். கொடுமைடா.
பிறகு, அவர் செல்போனில் சிக்னல் கிடைக்காமல் போராடிக்கொண்டி ருந்ததை பார்த்து, 'இதுல பேசுங்க சார்' என்று நண்பனின் போனை கொடுத்தேன். அவன் எரித்துவிடுவது போல பார்த்ததை, நான் பார்க்கவில்லை.
பேசிவிட்டு வேனி்ல் ஏறினோம். எங்களுக்கு பின் சீட்டில் பாண்டே. அடுத்து, மலேசிய உலோகத்தில் (இதுக்கு ஏதோ பேர் சொன்னாங்களே...pewter: தகவல் உதவி, அண்ணன் TBCD )செய்யப்பட்ட டம்ளர், கூஜா உள்ளிட்ட மினி பாத்திரக்கடை.

ஒருவர், இதை பிடிங்க என்று ஒரு டம்பள்ரை கொடுத்தார். கனமான டம்ளர். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, 'இப்ப குளிருதா பாருங்க" என்றார். அட ஆமா, டம்ளர் ஜில். இதுதான் இதோட ஸ்பெஷல் என்றார். நண்பன் ஆர்வமாக, சரக்கடிக்கும் போது மிச்ச சரக்கை ஊத்தி வைக்க நல்ல பாத்திரம் என்று சொல்லிக்கொண்டே ரேட் கேட்டான். தம்மாண்டு டம்ளருக்கு 250 ரிங்கெட். இந்திய ரூபாய்க்கு மனசுக்குள் கூட்டி கழித்தால் கிட்டத்தட்ட 3250 ரூபாய். கெதக் என்றது நண்பனுக்கு.
நாளைக்கு சொல்றேன்.
Saturday, January 9, 2010
ட்வின் டவர் பாண்டேவும் கென்டிங் பாண்டியும்




ஒண்ணு மண்ணா இருந்த பயலுக்கு கிடைக்காத சொத்து, கிடைச்சு போனதால வந்த சந்தோஷத்துல சொன்னான்:
'ஏல மலேசியா போலாம்'. தலையாட்டுவதை தவிர வேறென்ன இருக்கிறது.
ஒவ்வொரு டிராவல் ஏஜெண்டாக ஏறி, இறங்கி, சீப்பாக கிடைத்தது ஒரு டூர் பேக்கஜ்.
'ஏல இவன் நெசமா கூட்டிட்டு போவானா? இல்லை அங்கயே விட்டுருவானா" என்ற நண்பனின் சந்தேகம் டிராவல்ஸ்காரன் காதில் விழ, '15 வருஷமா இதை பண்ணிக்கிட்டிருக்கோம். அப்படிலாம் பண்ணினா, இங்க நாங்க வாழ முடியுமா?' என்றதில் வேர்விட்டது நம்பிக்கை.
அதிகாலை 2.30 ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் பிளைட்டுக்கு நாங்கள் ஏர்போர்ட் போனது இரவு 10 மணிக்கு. 11 மணிவரை சொந்த பந்தங்களுக்கு டாட்டா காட்டி, 'ஏல, அதை வாங்கிட்டு வா, இதை மறந்திராத"களுக்கு தலையாட்டிவிட்டு உள்ளே சென்றோம். இமிக்கிரேஷனில் நண்பனை துளைத்தெடுத்துக்கொண்டிருந்தார் அதிகாரி. என்னவென்று விசாரித்ததில், பாஸ்போட்டில் பழைய வீட்டு முகவரி இருக்க, புது வீட்டு அட்ரசையே பார்மில் எழுதினானாம். பிறகு சொந்தக்கார லோக்கல் அதிகாரி சொன்னதன் பேரில் தப்பித்தான். அப்பாடா என்றிருந்தது.
2.30 வரை என்னசெய்வதென்று தெரியாமல், போடப்பட்டிருந்த சேரில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்தால், ஒலிபெருக்கியில் வரும் அனொன்ஸ்மெண்ட்கள் அதை கெடுத்தன. ஸ்மோக்கிங் ஸோன் உள்ளே இருந்துகொண்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை காலிபண்ணியும் 2.30 ஆகவில்லை. ஒவ்வொரு பிளைட்டுக்கும் செல்லும் பயணிகளின் முகத்தை மேய்ந்துவிட்டு, திரும்பவும் உட்கார்ந்தால் 1.30 என்றது மணி.
ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ்லாம் கீழ வந்திருங்க என்று அறிவிப்பில் பதறிகொண்டு கிழே போனால் மொத்தமே 40 பேர் தான். பிளைட்டை கேன்சல் பண்ணிடுவாங்களோ என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அடிக்கடி பிரயாணிக்கும் ஒருவர் சொன்னார்.
'அப்படிலாம் பண்ணமாட்டாங்க... சிங்கப்பூர் போற ஏர் இந்தியா பிளைட்டுல அனுப்பிடுவாங்க"
எப்படியோ, போய் சேர்ந்தால் சரி என்று நினைத்துக்கொண்டோம். சரியான நேரத்துக்கு உள்ளே அனுப்பி விட்டார்கள். ஏறிய சிறிது நேரத்திலேயே விண்டோ சீட் சண்டை.
ஏர்ஹோஸ்டஸ், 'முதல்ல அங்கங்க உட்காருங்க.. அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார். பார்த்தால்...அட ங்கொய்யால, எவ்வளவு சீட்டு ப்ரி.
டேக் ஆப் ஆனதும், 'யாரு விண்டோ சீட் வேணும்னு கேட்டது?'
விண்டோ சீட் கிடைக்காத எல்லாருமே எழுந்து நிற்க, எனக்கு கிடைத்தது றெக்கை அருகில்!. பிறகுதான் தெரிந்தது. பயணிக்கிறது ராத்திரி. கீழ ஒரு மண்ணும் தெரியலை. எதுக்கு இப்ப விண்டோ சீட்.
கூட வந்த புண்ணியவான், அருகிலேயே நன்றாக தூங்கியிருந்தான். நானும் தூங்குவதற்கு பல முறை முயன்றும் முடியாமல் போயிருந்தது. அடிக்கடி பிளைட், நம்மூர் டவுண் பஸ் மாதிரி, தட தடவென ஆடும் சத்தம் வேறு பீதியை கிளப்பியதால் முழு தூக்கமும் அம்பேல்.
காலை அவங்க டைம் 9 மணிக்கு கோலாலம்பூர் ஏர்போர்ட். இறங்கி செல்பவர்களின் பின்னால் சென்று, இமிக்கிரேஷன் முடித்து சென்றால், ஏர்போர்ட்டை ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கொள்ளை அழகு.
ஏர்போர்ட் டூ வாசலுக்கு டிரைன். வெளியே வந்தால் மிஸ்டர் கப்பன் என்று போர்டு வைத்துக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதென்னடா கப்பன். கொஞ்சம் தயக்கமாகவே நண்பன், 'ஐயெம் குப்பன்' என்றார். 'யெஸ்... வெல்கம் சார்" என்று கைகுலுக்கி விட்டு வேனில் ஏறினோம்.
'மாப்ள நீ எப்படிடா கப்பன் ஆனே" என்று சிரித்துக்கொண்டிருக்கையில், 'நீங்க தமிழா... நான் தெலுங்கோன்னு நினைச்சேன்' என்றார் டிரைவர்.
உங்களுக்கு எந்த ஊரு? எங்க தாத்தா திண்டுக்கல்லு... என்று தொடங்கி, மலேசியாவின் அருமை பெருமைகளை விளக்கி கொண்டு வந்த்வரிடம் , கொஞ்சம் வண்டிய நிறுத்த முடியுமா? என்றான் நண்பன்.
நாளைக்கு தொடர்றேன்.
Subscribe to:
Posts (Atom)