ரொம்ப சக்தியான அம்மன் அது. போய் நின்னு என்ன கேட்டாலும் கொடுத்திரும். காலையில வயலுக்கு வேலைக்கு போயிட்டு, ஊர்க்காரங்க எல்லாம் கோயிலு முன்னால வந்து உக்காந்து கிடுவாவோ. எல்லாரும் அம்மன்கிட்ட எதையாவது கேட்டுகிட்டே இருப்பாவோ. அம்மா, ‘எம்புள்ளைக்கு வயித்து வலி, ஏதாவது நீதான் பண்ணனும்’ கேட்டா, மறுநாளே வயித்து வலி சரியா போயிரும். இதனால அம்மன் புகழ், அக்கம் பக்கத்து ஊருக்கெல்லாம் தெரிஞ்சு, கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சுட்டாவோ.
இதுக்கிடையில என்னன்னா, வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அம்மன், பணத்தை கொடுக்குறான்னு ஊருக்குள்ள பேச்சு. கொத்தனாரு முனியன், அம்மன்கிட்ட, ‘நான் வேலை பாக்குத எழவுல எம்புள்ளைல படிக்க வைக்க முடியாது, நீதான் ஏதாவது பண்ணணும்’ கண்ணை மூடி வேண்டியிருக்காம். திடீர்னு பாத்தா எதுத்தாப்ல இருக்குத திண்டுல ஒரு துணியில மடிச்சு ஒரு கெட்டு ரூவா இருந்துச்சு. முனிக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. அந்தானி, குப்புற அடிச்சு விழுந்து நெடுஞ்சாண் கிடையா கும்புட்டான்.
விஷயம் ஊரு பூரா பரவுனதும் வெள்ளிக்கிழமை தோறும் எல்லாரும் வரிசையா வந்து நின்னுட்டாவோ. அம்மனும் சளைக்காம கொடுக்க ஆரம்பிச்சா. எல்லாருமே சுகவாசியா ஆயிட்டானுவோ. ‘நமக்கென்னல அம்மன் இருக்கா; கேட்டா தரப்போறா’ன்னு சுத்த ஆரம்பிச்சுட்டானுவோ. கள்ளு எறக்குத சுப்பையாவுக்கு இதுல சந்தேகம் வந்து போச்சு.
ஒரு நாளு அவனும் போயி, அம்மன்கிட்ட வேண்டியிருக்காம். அம்மனும் பணத்தை அதே போல துணியில வச்சு திண்டுல வச்சுட்டா. ‘அதெப்படி? அம்மன் வந்து வச்சுட்டு போச்சு. நாம பாக்கலையே’ன்னு அங்கயே ரொம்ப நேரமா நின்னாம். அம்மன் இவன் கண்ணு முன்னாலயா வந்து நிக்கும்? வரவேயில்லை. போயிட்டான். அடுத்த வெள்ளிக்கிழமை காலையிலயே போய் கோயிலு உள்ள போயி ஒழிஞ்சுகிட்டாம். மேலத் தெருக்காரன் ஒருத்தன் வந்து அம்மன்கிட்ட வேண்டியிருக்காம்.
கண்ணை மூடிட்டு நின்னுக்கிட்டிருக்கும்போது நகைகள் ஜொலிக்க அம்மன் வந்திருக்கா. அவளைப் பாத்ததும் சுப்பையா, ஓடிப்போய் கால்ல விழுந்து ‘அம்மா நான் உங்களை பாத்துட்டேன்’னு சந்தோஷத்துல கத்திருக்காம். டமார்னு மறைஞ்சுட்டா அம்மன்.
மேலத்தெருகாரன் முழிச்சு பாத்தா, சுப்பையாதான் நிக்காம். பணத்தை காணலை. அவன், பணத்தை அம்மன் எங்கயாவது வச்சிருப்பான்னு சுத்தி சுத்தி வாராம். ஒண்ணுத்தையும் காணலை.
தன்னை ஒருத்தன் பாத்ததுலயிருந்து அம்மன் பணம் கொடுக்கதை நிறுத்திட்டா.
வள்ளியான அந்த அம்மன் பணத்தை ஈயாததால வள்ளி ஈயா கோயில்னு அதுக்கு பேரு வந்துச்சு. எதும் தராத அம்மனை ஏன் கும்புடணும்னு ஊர்க்காரனுவோ நினைச்சதால அதை மடமாக்கிட்டாங்கோ. அதனால அது வள்ளி ஈயா மடம்னு ஆச்சு. மருவி மருவி இப்ப வள்ளியா மடமா இருக்கு.
கடையத்துக்கு பக்கத்துல இருக்கு இந்த ஊரு.
Friday, June 27, 2008
Tuesday, June 24, 2008
முள்ளி மலை பொத்தை
கடையத்துல இருக்குத நித்ய கல்யாணி அம்மனுக்கு ஒரு அக்கா. அவா பேரு கல்யாணி. கடையத்துல இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்துல இருக்குத சிவசைலம்தான் இவா ஊரு. சொத்து சொகம்னு இருக்குத ரெண்டு பேருக்குள்ளயும் சின்ன மனச்சடவு. என்னன்னா கல்யாணிக்கு பிள்ளைலு இல்லை. நித்ய கல்யாணிக்கு நாலு பிள்ளைலு.
பொம்பளைக்கு பிள்ளைலுவோ இல்லைனா அது பெரிய மன வருத்தமாத்தான இருக்கும். இருந்தாலும் தங்கச்சி பிள்ளைலுவோளை அவ பிள்ளை மாதிரிதான் பார்த்துக்கிடுவா. தூக்கி வச்சு கொஞ்சுதது, சாப்பாடு கொடுக்கதுன்னு இருந்தா.
ரெண்டு பேரு ஊருக்கும் ஏழு கி.மீட்டருதானே தூரம். இருந்தாலும் ஏகப்பட்ட வேலை இருந்ததால தங்கச்சி பிள்ளைல பாக்க முடியலை.
ரொம்ப நாளு கழிச்சு, நித்யகல்யாணி இருக்குத கடையத்துக்கு தங்கச்சிய பாக்க வந்தா. இவ வாரத கேள்விபட்ட நித்ய கல்யாணி, நம்ம குழந்தைகளை பாத்தான்னா என்னமும் நினைப்பாளோன்னு யோசிச்சுட்டு, குழந்தைகளை ஒரு ரூமுக்குள்ள போட்டு பூட்டிட்டா. ரெண்டுபேரும் அம்மனுவோ. இந்த விஷயம் கல்யாணிக்கு தெரியாம இருக்குமா? தெரிஞ்சு போச்சு.
தங்கச்சிக்காரிட்ட, ‘என்னைய இப்படி நினைச்சுட்டியே சண்டாளி, ஒன் குழந்தைகள்லாம் கருகி போவும்’னு சாபம் விட்டுட்டு போயிட்டா.
நித்ய கல்யாணி பதறி போயி, குழந்தைகளை அடைச்சு வச்சிருந்த ரூமை திறந்து பாத்தா. அவ்வளவுதான். அவளுக்கு மூச்சு பேச்சில்லை. சாபம் விட்ட மாதிரியே குழந்தைகள்லாம் கருகி போச்சு.
பதறியடிச்சுட்டு அக்காட்ட ஓடுனா நித்ய கல்யாணி. அவா காலை புடிச்சுட்டு, ‘என்னை மன்னிச்சுக்கோ; தெரியாம நடந்து போச்சு. என் கொழந்தைகளை காப்பாத்து’ன்னு கதறினா. என்னத்த இருந்தாலும் தங்கச்சியில்லையா? சரின்னு கொழந்தைகளை காப்பாத்திட்டா.
அந்தானி சொன்னா;
‘இனும நீயும் நானும் பாத்துக்கிடவே வேண்டாம். உன் மூஞ்சியிலயே முழிக்கவே மாட்டேன். இங்கியிருந்து பார்த்தா உன் வீட்டுல விளக்கெறியது தெரியும். நீ அங்கயிருந்து பாத்தா இங்க வெளக்கு எரியது தெரியும். இனும அது தெரியாது’ன்னு சொல்லிட்டு கொஞ்சூண்டு மண்ணை நுள்ளி வீசுனா, அது பொத்தையா வளந்து நின்னுச்சு.
இப்பவும் கோயிந்தபேரி பக்கத்துல இந்த மலை இருக்கு. நுள்ளி வீசுனதால இதுக்கு இந்தப் பெயரு. அது வழக்கு மாறி மாறி, இப்ப ‘முள்ளி மலை பொத்தை’ன்னு ஆயிப்போச்சு.
பொம்பளைக்கு பிள்ளைலுவோ இல்லைனா அது பெரிய மன வருத்தமாத்தான இருக்கும். இருந்தாலும் தங்கச்சி பிள்ளைலுவோளை அவ பிள்ளை மாதிரிதான் பார்த்துக்கிடுவா. தூக்கி வச்சு கொஞ்சுதது, சாப்பாடு கொடுக்கதுன்னு இருந்தா.
ரெண்டு பேரு ஊருக்கும் ஏழு கி.மீட்டருதானே தூரம். இருந்தாலும் ஏகப்பட்ட வேலை இருந்ததால தங்கச்சி பிள்ளைல பாக்க முடியலை.
ரொம்ப நாளு கழிச்சு, நித்யகல்யாணி இருக்குத கடையத்துக்கு தங்கச்சிய பாக்க வந்தா. இவ வாரத கேள்விபட்ட நித்ய கல்யாணி, நம்ம குழந்தைகளை பாத்தான்னா என்னமும் நினைப்பாளோன்னு யோசிச்சுட்டு, குழந்தைகளை ஒரு ரூமுக்குள்ள போட்டு பூட்டிட்டா. ரெண்டுபேரும் அம்மனுவோ. இந்த விஷயம் கல்யாணிக்கு தெரியாம இருக்குமா? தெரிஞ்சு போச்சு.
தங்கச்சிக்காரிட்ட, ‘என்னைய இப்படி நினைச்சுட்டியே சண்டாளி, ஒன் குழந்தைகள்லாம் கருகி போவும்’னு சாபம் விட்டுட்டு போயிட்டா.
நித்ய கல்யாணி பதறி போயி, குழந்தைகளை அடைச்சு வச்சிருந்த ரூமை திறந்து பாத்தா. அவ்வளவுதான். அவளுக்கு மூச்சு பேச்சில்லை. சாபம் விட்ட மாதிரியே குழந்தைகள்லாம் கருகி போச்சு.
பதறியடிச்சுட்டு அக்காட்ட ஓடுனா நித்ய கல்யாணி. அவா காலை புடிச்சுட்டு, ‘என்னை மன்னிச்சுக்கோ; தெரியாம நடந்து போச்சு. என் கொழந்தைகளை காப்பாத்து’ன்னு கதறினா. என்னத்த இருந்தாலும் தங்கச்சியில்லையா? சரின்னு கொழந்தைகளை காப்பாத்திட்டா.
அந்தானி சொன்னா;
‘இனும நீயும் நானும் பாத்துக்கிடவே வேண்டாம். உன் மூஞ்சியிலயே முழிக்கவே மாட்டேன். இங்கியிருந்து பார்த்தா உன் வீட்டுல விளக்கெறியது தெரியும். நீ அங்கயிருந்து பாத்தா இங்க வெளக்கு எரியது தெரியும். இனும அது தெரியாது’ன்னு சொல்லிட்டு கொஞ்சூண்டு மண்ணை நுள்ளி வீசுனா, அது பொத்தையா வளந்து நின்னுச்சு.
இப்பவும் கோயிந்தபேரி பக்கத்துல இந்த மலை இருக்கு. நுள்ளி வீசுனதால இதுக்கு இந்தப் பெயரு. அது வழக்கு மாறி மாறி, இப்ப ‘முள்ளி மலை பொத்தை’ன்னு ஆயிப்போச்சு.
Friday, June 20, 2008
அடையாத பாழ்
முத்தாண்டி புலவரு... முத்தாண்டி புலவருன்னு ஒருத்தரு. நல்ல பாடுவாரு. திருச்செந்தூர்க்காரரு. முருகனை மட்டும் பாடிட்டு இருந்தவருக்கு என்னாச்சோ தெரியலை, கால்போன போக்குல போயிகிட்டே இருக்க ஆரம்பிச்சாரு.
யாருகிட்டயும் போயு, வயிறு பசிக்கு, சாப்பாடு போடுனெல்லாம் கேட்ட மாட்டாரு. யாராவது குறிப்பறிஞ்சு கேட்டாதான் சாப்பாடு. யாரும் இவரை சரியா கவனிக்கலைன்னா சுள்ளுனு கோவம் வந்துருனம். அறம் பாடிருவாரு. அறம் பாடுனா எல்லாமே நாசமா போயிரும். அப்டியொரு ஆளு,
கால் போன போக்குல வந்தவரு, கீழாம்பூருங்கற ஊருக்கு வந்தாரு.
இந்த ஊரு என்னன்னா ஒரு காலத்துல போர் வீரங்க இருந்த ஊரு. அதாவது ஆண்மையூர்ங்கறது ஆம்பூரா மாறிபோச்சு. இங்க வீரர்கள் இருப்பாங்க. இந்த ஊர்லயிருந்து 15 கிலோமீட்டர் தூரத்துல, மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு. அங்க இருக்குத கொட்டுந்தளத்துலயிருந்து, முரசு கொட்டுவாங்க. அப்படி கொட்டுனா அந்த சத்தம் கேட்டு வீரர்கள் இங்கயிருந்து கொட்டுந்தளத்துக்கு கெளம்பி போகணும். அப்படியான ஊரு இது.
புலவரு ஊர்லயிருந்த கோயிலெல்லாம் பாத்துட்டு, ஐயமாரு தெருவுல நடந்து போயிட்டிருந்தாரு. சரியான பசி. 'இவருதான் பசிக்குது, சோறு போடுங்க"ன்னு கேக்க மாட்டாரே. ஒரு வீட்டு திண்ணையில சுந்தரம் ஐயருன்னு ஒருத்தரு உக்கார்ந்திருந்தாரு. அவருக்கு எதிர்ல பெரிய தோப்பு. அந்த ஐயரோட அண்ணன் தம்பி, சொக்காரங்களுக்கானது. அதுல ஒரு பாதியை பங்களா மாதிரி கட்ட, செங்கலு, மண்ணெல்லாம் அடிச்சு போட்டிருந்தாங்க. புலவரு, அந்தப் பக்கம் நின்னுகிட்டு, ஐயரு சாப்பிட கூப்பிடுவாருன்னு பாத்தாரு.
அவரு, 'யாரோ வெளியூரு காரர் போலிருக்கு, இங்க யாரையும் தேடி வந்திருப்பாரு'ன்னு நினைச்சுட்டாரு. புலவரை அவரு கண்டுக்கலை. அவருக்கு பசிக்குன்னு ஐயருக்கு எப்படி தெரியும்?. கொஞ்ச நேரத்துல புலவரு, ஐயரு இருந்த திண்டுல உக்கார்ந்தாரு. ஐயரு உடனே, 'எந்த ஊரு? யாரை பார்க்க வந்திருக்கேரு'ன்னாரு.
புலவரு, பதிலை சொல்லாம, 'எதிர்ல இருக்குத நிலத்துல என்ன பண்ண போறீங்க"ன்னு கேட்டாரு.
'பங்களா கட்ட போறோம்'னாரு ஐயரு.
உடனே ஒரு பாடலை பாடி, 'ஏழுசுந்தரம் பார்பட்டு பாழ் அடைவது என்னாளோ"ன்னு முடிச்சிருக்காரு. ஐயருக்கு அறம் பாடியிருக்காருன்னு புரிஞ்சுப்போச்சு.
'என்னய்யா இப்படி பாடிட்டே"ன்னாரு.
புலவரு, சும்மா அவரை பார்த்துட்டு, அவர் பாட்டுக்கு போயிட்டாரு. ஐயருக்கு கொழப்பம்.
எப்படி ஏழு சுந்தரத்துக்கு இந்த எடம் இருக்குன்னு இவனுக்கு தெரியும்னு. உடனே தெருவுல இருந்த பிள்ளையாரை போய் கும்புட்டுட்டு, 'இதை நீதாம்பா பாத்துக்கணும்'னு வேண்டிட்டு வந்துட்டாரு. மறுநாள் பங்களா கட்டுததுக்கு ஆளுவோலாம் வந்துட்டாவோ. திடீர்னு பாத்தா ஏழு சுந்தரத்துல, உடம்பு சரியில்லாம இருந்த ஒரு சுந்தரம் போய் சேர்ந்துட்டாரு.
பெறவென்னா... இன்னைக்கு வரைக்கும் பாழ் இடம் பாழாவே இருக்கு. பக்கத்துல வீடு, கடைன்னு என்னென்னவோ மாற்றம் வந்தாலும், இந்த எடம் மட்டும் கட்ட முடியாம அப்படியே கெடக்குது.
யாருகிட்டயும் போயு, வயிறு பசிக்கு, சாப்பாடு போடுனெல்லாம் கேட்ட மாட்டாரு. யாராவது குறிப்பறிஞ்சு கேட்டாதான் சாப்பாடு. யாரும் இவரை சரியா கவனிக்கலைன்னா சுள்ளுனு கோவம் வந்துருனம். அறம் பாடிருவாரு. அறம் பாடுனா எல்லாமே நாசமா போயிரும். அப்டியொரு ஆளு,
கால் போன போக்குல வந்தவரு, கீழாம்பூருங்கற ஊருக்கு வந்தாரு.
இந்த ஊரு என்னன்னா ஒரு காலத்துல போர் வீரங்க இருந்த ஊரு. அதாவது ஆண்மையூர்ங்கறது ஆம்பூரா மாறிபோச்சு. இங்க வீரர்கள் இருப்பாங்க. இந்த ஊர்லயிருந்து 15 கிலோமீட்டர் தூரத்துல, மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு. அங்க இருக்குத கொட்டுந்தளத்துலயிருந்து, முரசு கொட்டுவாங்க. அப்படி கொட்டுனா அந்த சத்தம் கேட்டு வீரர்கள் இங்கயிருந்து கொட்டுந்தளத்துக்கு கெளம்பி போகணும். அப்படியான ஊரு இது.
புலவரு ஊர்லயிருந்த கோயிலெல்லாம் பாத்துட்டு, ஐயமாரு தெருவுல நடந்து போயிட்டிருந்தாரு. சரியான பசி. 'இவருதான் பசிக்குது, சோறு போடுங்க"ன்னு கேக்க மாட்டாரே. ஒரு வீட்டு திண்ணையில சுந்தரம் ஐயருன்னு ஒருத்தரு உக்கார்ந்திருந்தாரு. அவருக்கு எதிர்ல பெரிய தோப்பு. அந்த ஐயரோட அண்ணன் தம்பி, சொக்காரங்களுக்கானது. அதுல ஒரு பாதியை பங்களா மாதிரி கட்ட, செங்கலு, மண்ணெல்லாம் அடிச்சு போட்டிருந்தாங்க. புலவரு, அந்தப் பக்கம் நின்னுகிட்டு, ஐயரு சாப்பிட கூப்பிடுவாருன்னு பாத்தாரு.
அவரு, 'யாரோ வெளியூரு காரர் போலிருக்கு, இங்க யாரையும் தேடி வந்திருப்பாரு'ன்னு நினைச்சுட்டாரு. புலவரை அவரு கண்டுக்கலை. அவருக்கு பசிக்குன்னு ஐயருக்கு எப்படி தெரியும்?. கொஞ்ச நேரத்துல புலவரு, ஐயரு இருந்த திண்டுல உக்கார்ந்தாரு. ஐயரு உடனே, 'எந்த ஊரு? யாரை பார்க்க வந்திருக்கேரு'ன்னாரு.
புலவரு, பதிலை சொல்லாம, 'எதிர்ல இருக்குத நிலத்துல என்ன பண்ண போறீங்க"ன்னு கேட்டாரு.
'பங்களா கட்ட போறோம்'னாரு ஐயரு.
உடனே ஒரு பாடலை பாடி, 'ஏழுசுந்தரம் பார்பட்டு பாழ் அடைவது என்னாளோ"ன்னு முடிச்சிருக்காரு. ஐயருக்கு அறம் பாடியிருக்காருன்னு புரிஞ்சுப்போச்சு.
'என்னய்யா இப்படி பாடிட்டே"ன்னாரு.
புலவரு, சும்மா அவரை பார்த்துட்டு, அவர் பாட்டுக்கு போயிட்டாரு. ஐயருக்கு கொழப்பம்.
எப்படி ஏழு சுந்தரத்துக்கு இந்த எடம் இருக்குன்னு இவனுக்கு தெரியும்னு. உடனே தெருவுல இருந்த பிள்ளையாரை போய் கும்புட்டுட்டு, 'இதை நீதாம்பா பாத்துக்கணும்'னு வேண்டிட்டு வந்துட்டாரு. மறுநாள் பங்களா கட்டுததுக்கு ஆளுவோலாம் வந்துட்டாவோ. திடீர்னு பாத்தா ஏழு சுந்தரத்துல, உடம்பு சரியில்லாம இருந்த ஒரு சுந்தரம் போய் சேர்ந்துட்டாரு.
பெறவென்னா... இன்னைக்கு வரைக்கும் பாழ் இடம் பாழாவே இருக்கு. பக்கத்துல வீடு, கடைன்னு என்னென்னவோ மாற்றம் வந்தாலும், இந்த எடம் மட்டும் கட்ட முடியாம அப்படியே கெடக்குது.
Tuesday, June 17, 2008
பொய்சொல்லாம் பாறை
ஜமீன் வீட்டு ஆட்டுக்குட்டியை தூக்கிட்டு போய் கறி வச்சுத்தின்னுட்டாம் சூச்சன். விஷயம் வெளிய வராம இருக்குமா? வீட்டுல வச்சு வெட்டுனா தெரிஞ்சுரும்னு ரெண்டு மூணு மைலு தூரமா இருக்குத பாறைக்கு பின்னால போட்டு ஆட்டை வெட்டியிருக்காம்.
கூட அவன் அண்ணமாருவோளும், தம்பிமாருவோளும். சாரயத்தை குடிச்சுட்டு அங்ஙனயே கறிவச்சு நல்லா தின்னுட்டாவோ. இதை அங்க ஆடு பத்திட்டு வந்த பய பாத்திருக்காம். அவனும் நல்ல பய. இதை போய் ஜமீனுகிட்ட சொல்லலை. ஆனாலும் சூச்சன் மேல சந்தேகம் வந்துட்டு ஜமீனுக்கு. அவருக்கு சந்தேகம் வந்தா விடுவாவுளா? தொழுவுல போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்காவோ. பய வாயவே தெறக்கலை. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னுட்டாம்.
ஜமீனு இவன் எங்க வச்சு ஆட்டை வெட்டி, தின்னாம்னு தெரிஞ்சுகிட்டு, பாறைகிட்ட கூட்டிப் போனாரு.
இங்கதானல நீ ஆட்டை வெட்டி, கறிவச்சு தின்னே’ன்னு கேட்டாரு. இவன் இல்லைங்குத பல்லவியை பாடியிருக்கான்.
அங்ஙன வச்சு, கன்னத்துலயே போட்டாரு. கீழ விழுந்தான் பாறைக்கு முன்னால. ஜமீன் குதிரை வண்டியில இருக்குத அருவாளை எடுக்க போயிருக்காரு, இவனை வெட்ட. திடீர்னு பாத்தா, விழுந்து கெடந்த பயலை பாறை உள்ள இழுத்துட்டு.
ஜமீனுக்கு ஒரே அதிர்ச்சி. பாறை இப்படி இழுத்துட்டேன்னு. கூட வந்திருந்த ஆட்களுக்கும் ஆச்சரியம். அந்தானி, முடிவு பண்ணுனாவோ. பொய் சொன்னா இந்த பாறை உள்ள இழுத்துக்கிடும்னு. இதுகிட்ட யாராவது போனா பேசவே மாட்டோவோ. ஏதாவது சொல்லி அது பொய்யா இருந்தா பாறை இழுத்துக்கிடும்லா.
இன்னைக்கும் பாபநாசம் பக்கத்துல இருக்குத டானாவுல பொய் சொல்லாம் பாறை வெள்ளையா இருக்கு பாருங்க.
கூட அவன் அண்ணமாருவோளும், தம்பிமாருவோளும். சாரயத்தை குடிச்சுட்டு அங்ஙனயே கறிவச்சு நல்லா தின்னுட்டாவோ. இதை அங்க ஆடு பத்திட்டு வந்த பய பாத்திருக்காம். அவனும் நல்ல பய. இதை போய் ஜமீனுகிட்ட சொல்லலை. ஆனாலும் சூச்சன் மேல சந்தேகம் வந்துட்டு ஜமீனுக்கு. அவருக்கு சந்தேகம் வந்தா விடுவாவுளா? தொழுவுல போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்காவோ. பய வாயவே தெறக்கலை. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னுட்டாம்.
ஜமீனு இவன் எங்க வச்சு ஆட்டை வெட்டி, தின்னாம்னு தெரிஞ்சுகிட்டு, பாறைகிட்ட கூட்டிப் போனாரு.
இங்கதானல நீ ஆட்டை வெட்டி, கறிவச்சு தின்னே’ன்னு கேட்டாரு. இவன் இல்லைங்குத பல்லவியை பாடியிருக்கான்.
அங்ஙன வச்சு, கன்னத்துலயே போட்டாரு. கீழ விழுந்தான் பாறைக்கு முன்னால. ஜமீன் குதிரை வண்டியில இருக்குத அருவாளை எடுக்க போயிருக்காரு, இவனை வெட்ட. திடீர்னு பாத்தா, விழுந்து கெடந்த பயலை பாறை உள்ள இழுத்துட்டு.
ஜமீனுக்கு ஒரே அதிர்ச்சி. பாறை இப்படி இழுத்துட்டேன்னு. கூட வந்திருந்த ஆட்களுக்கும் ஆச்சரியம். அந்தானி, முடிவு பண்ணுனாவோ. பொய் சொன்னா இந்த பாறை உள்ள இழுத்துக்கிடும்னு. இதுகிட்ட யாராவது போனா பேசவே மாட்டோவோ. ஏதாவது சொல்லி அது பொய்யா இருந்தா பாறை இழுத்துக்கிடும்லா.
இன்னைக்கும் பாபநாசம் பக்கத்துல இருக்குத டானாவுல பொய் சொல்லாம் பாறை வெள்ளையா இருக்கு பாருங்க.
Friday, June 13, 2008
சூலிபொத்தை
காட்டுக்குள்ள வீடு. பத்து பேரு குடும்பம், அங்க குடிசைய போட்டு விவசாயம் பாத்துட்டு இருக்கு. ஒரு இருவது வீடுவோ இருக்கும். மாணிக்கம் வீட்டுல ரெண்டு சமஞ்ச புள்ளைலுவோ. சுழியான பிள்ளைலுவோ. எடக்கு மடக்குன்னுதான் இருக்கும். ராத்திரிக்கு மேல வெளியில போவ கூடாதுன்னா இதுவோ அங்கதான் கெடக்கும். சேட்டைக்காரச்சியோ.
நாலாவது வீட்டுல இருக்குத பயலுக்கு மூத்தவ மேல கண்ணு. அரசல்புரசலா மாணிக்கத்துக்கு தெரிய வந்ததும் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாவோ. பய வேலைல சரியா இருந்தாம். கர்ப்பமாயிட்டா புள்ள. நெற மாசம் வந்ததும், கூட ஒத்தாசைக்கு தங்கச்சிக்காரி இருந்தா. ஒரு நாளு பகல்ல எல்லாரும் வய வேலைக்கு போயிட்டாவோ. தங்கச்சிக்காரியும் போயிட்டா. நெறமாச சூலி வீட்டுல படுத்துக்கெடந்தா. திடீர்னு வாசல்ல இருந்து சத்தம் ‘ஐயா’ன்னு.
இவ உள்ளயிருந்து, ‘யாரு’ன்னு கேட்டா.
‘நான் சன்னியாசி. தவமிருந்துட்டு வந்திருக்கேன். தலை வாழை இல போட்டு சாப்பாடு போடணும்’னு கேட்டிருக்காரு.
இவா, இது என்னடா கூத்தா இருக்குன்னுட்டு, ‘வீட்டுல யாருமே இல்லையே’ன்னா.
‘அதான் நீ இருக்கியே’.
‘நான் சூலி, என்னால சமைக்க முடியாது. வீட்டுல நீத்தண்ணிதான் இருக்கு, அத வேணும்னா தாரேன்’ன்னா.
‘ம்ஹ¨ம். நீ வந்து சமைச்சு தந்தாதான் நான் சாப்பிடுவேன்’ன்னு சாமியாரு அடம்பிடிச்சிருக்காரு.
‘அப்படின்னா நீரு இங்ஙன பட்டினியாத்தான் கெடக்கணும்; எங்க வீட்டுக்காரங்க வந்ததும் தருவாவோ’ன்னு இவளும் கிண்டலா சொல்லியிருக்கா.
‘என்னையே ஏளன படுத்துதியா, பாரு உன்னை’ன்னுட்டு வீட்டு வாசல்ல கண்ணை மூட்டிட்டு உக்காந்துட்டாரு.
இதுக்குள்ள வய வேலைக்கு போன எல்லோரும் திரும்பி வந்துட்டாவோ. வீட்டு வாசல்ல இருந்த சாமியாரை பாத்து, மாணிக்கத்துக்கு ஒண்ணும் புரியலை. மவா கிட்ட கேட்டாம்.
அவ வெஷயத்தை சொன்னா.
இது என்ன வம்பா போச்சுன்னு கண்ணை மூடிட்டு இருந்தவரை, ‘யோவ் சாமியாரே... என் வீட்டு வாசல்ல யாம்யா இருக்கீரு’ன்னு முதுவுல கைய வச்சு ஆட்டுனாம் மாணிக்கம்.
அவரு திடுக்குன்னு முழிச்சுட்டு, ‘என் தவத்தை கலைச்சுட்டியே’ன்னு கோவமா பாத்தாரு.
‘எங்க வந்து என்னய்யா பேசுதீரு; மொதல்ல எடத்தை காலி பண்ணும்யா’னு சொன்னாம்.
‘எல்லாருமா சேர்ந்து என் கோபத்தை கிளறிட்டீங்க. உங்களை...’ன்னு சொல்லிட்டு கண்ணை மூடி தெறந்த சாமியாரு... ‘நீங்க கல்லா போங்க’ ன்னு சாபம் போட்டாரு.
அவரு கையை நீட்டி சொன்னதுமே எல்லாரும் கல்லா போயிட்டாவோ. இன்னைக்கும் அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்குத காக்கநல்லூரு சூலி பொத்தையில, எல்லாரும் அப்படியே செல மாதிரி இருக்கத பாக்கலாம். பக்கத்துல வைக்கப் படப்பு, அம்மிக்கல்லு எல்லாம் செதஞ்சு போயி கெடக்கு.
(திருடி அம்மன் கதை விரைவில்)
நாலாவது வீட்டுல இருக்குத பயலுக்கு மூத்தவ மேல கண்ணு. அரசல்புரசலா மாணிக்கத்துக்கு தெரிய வந்ததும் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாவோ. பய வேலைல சரியா இருந்தாம். கர்ப்பமாயிட்டா புள்ள. நெற மாசம் வந்ததும், கூட ஒத்தாசைக்கு தங்கச்சிக்காரி இருந்தா. ஒரு நாளு பகல்ல எல்லாரும் வய வேலைக்கு போயிட்டாவோ. தங்கச்சிக்காரியும் போயிட்டா. நெறமாச சூலி வீட்டுல படுத்துக்கெடந்தா. திடீர்னு வாசல்ல இருந்து சத்தம் ‘ஐயா’ன்னு.
இவ உள்ளயிருந்து, ‘யாரு’ன்னு கேட்டா.
‘நான் சன்னியாசி. தவமிருந்துட்டு வந்திருக்கேன். தலை வாழை இல போட்டு சாப்பாடு போடணும்’னு கேட்டிருக்காரு.
இவா, இது என்னடா கூத்தா இருக்குன்னுட்டு, ‘வீட்டுல யாருமே இல்லையே’ன்னா.
‘அதான் நீ இருக்கியே’.
‘நான் சூலி, என்னால சமைக்க முடியாது. வீட்டுல நீத்தண்ணிதான் இருக்கு, அத வேணும்னா தாரேன்’ன்னா.
‘ம்ஹ¨ம். நீ வந்து சமைச்சு தந்தாதான் நான் சாப்பிடுவேன்’ன்னு சாமியாரு அடம்பிடிச்சிருக்காரு.
‘அப்படின்னா நீரு இங்ஙன பட்டினியாத்தான் கெடக்கணும்; எங்க வீட்டுக்காரங்க வந்ததும் தருவாவோ’ன்னு இவளும் கிண்டலா சொல்லியிருக்கா.
‘என்னையே ஏளன படுத்துதியா, பாரு உன்னை’ன்னுட்டு வீட்டு வாசல்ல கண்ணை மூட்டிட்டு உக்காந்துட்டாரு.
இதுக்குள்ள வய வேலைக்கு போன எல்லோரும் திரும்பி வந்துட்டாவோ. வீட்டு வாசல்ல இருந்த சாமியாரை பாத்து, மாணிக்கத்துக்கு ஒண்ணும் புரியலை. மவா கிட்ட கேட்டாம்.
அவ வெஷயத்தை சொன்னா.
இது என்ன வம்பா போச்சுன்னு கண்ணை மூடிட்டு இருந்தவரை, ‘யோவ் சாமியாரே... என் வீட்டு வாசல்ல யாம்யா இருக்கீரு’ன்னு முதுவுல கைய வச்சு ஆட்டுனாம் மாணிக்கம்.
அவரு திடுக்குன்னு முழிச்சுட்டு, ‘என் தவத்தை கலைச்சுட்டியே’ன்னு கோவமா பாத்தாரு.
‘எங்க வந்து என்னய்யா பேசுதீரு; மொதல்ல எடத்தை காலி பண்ணும்யா’னு சொன்னாம்.
‘எல்லாருமா சேர்ந்து என் கோபத்தை கிளறிட்டீங்க. உங்களை...’ன்னு சொல்லிட்டு கண்ணை மூடி தெறந்த சாமியாரு... ‘நீங்க கல்லா போங்க’ ன்னு சாபம் போட்டாரு.
அவரு கையை நீட்டி சொன்னதுமே எல்லாரும் கல்லா போயிட்டாவோ. இன்னைக்கும் அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்குத காக்கநல்லூரு சூலி பொத்தையில, எல்லாரும் அப்படியே செல மாதிரி இருக்கத பாக்கலாம். பக்கத்துல வைக்கப் படப்பு, அம்மிக்கல்லு எல்லாம் செதஞ்சு போயி கெடக்கு.
(திருடி அம்மன் கதை விரைவில்)
Sunday, June 8, 2008
யானைக்கு சுளுக்கெடுத்த மடம்
ரெண்டு நாளா மாந்தோப்பு பக்கத்துல அரசன், படையோட இருக்காம். எங்கயோ போவ வேண்டியவன் இங்க எதுக்கு இருக்காம்னு புரியல. எதுக்கு என்னன்னு ஊர்லயும் யாருக்கும் தெரியல. இதை போய் அரசன்கிட்ட கேக்கவா முடியும்? போற வாரவோயெல்லாம் அவன் கோவத்துல இருக்காங்கத மட்டும் சொல்லுதாவோ. கீழ்ப் பக்கத்துல ஏழெட்டு யானையோ. மேல் பக்கம் குதிரைகளா இருக்கு. வீரர்கள்லாம் வேல் கம்பை வச்சுக்கிட்டு கூட்டமா இருக்காவோ. ஊர் பூரா என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காவோ.
வழக்கமா மேக்கு பத்துக்கு மாடு மேய்க்க போற பண்டார அண்ணாச்சி, இங்க என்ன நடக்குன்னு தெரியணுங்கறதுக்காக, இவங்க இருக்குத பக்கமா மாடு மேய்க்க போனாரு. ஊர்க்காரனுவோ முழுசா விசாரிச்சுட்டு வாடேன்னு வேற சொல்லிட்டானுவோ. சரின்னு கௌம்பிட்டாரு.
மாந்தோப்புக்கு உள்ள மாட்டை பத்திவுட்டுட்டு, இவங்க என்ன பண்ணுதாவோன்னு தூரத்துல நின்னுக்கிட்டு பார்த்தாரு. ஒரு யானை, கீழப் படுத்துக்கிடக்கு தும்பிக்கைய அங்க இங்கன்னு ஆட்டிக்கிட்டு. பக்கத்துல அரசன் உக்கார்ந்திருக்காரு. ஒரு ஆளு கையில பெரிய பெட்டிய வச்சுக்கிட்டு யானை கால்ல தடவி தடவி விடுதாரு. கால்ல கையை வச்சா யானை உதறுது. அந்தாளு யோசிச்சுட்டு நிக்கான்.
இவருக்கு ஒண்ணுமே புரியலை. அரசனுக்கு கோவம். பண்டாரத்துக்கு அங்க போவலாமா வேண்டாமான்னு குழப்பம். போனா அரசன் இங்க என்ன ஜோலின்னு கேட்டுட்டாம்னா?. அந்தானி பாத்துட்டே இருந்தாரு. ஒண்ணும் விளங்குத மாதிரி தெரியல. மனசுல தெரியத்தை வச்சுக்கிட்டு மெதுவா அரசன் இருக்குத பக்கம் போனாரு. இவரு வாரத பார்த்து நாலஞ்சு வீரனுவோ ஓடி வந்து தடுத்தானுவோ. இதை பாத்த அரசன், 'அவனை வர விடு'ன்னான். போனாரு பண்டாரம்.
'என்ன?'ன்னாரு அரசன்.
‘நான் மாடு மேய்க்கவன். எங்க ஊர்ல ரெண்டு நாளா இருக்கியோ. என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இங்க வந்தேன்'னு சொன்னாரு பண்டாரம்.
அரசன் மேலயும் கீழயும் பாத்தாரு.
‘இங்க படுத்து கெடக்கு பாரு யானை. இது மேலதான் வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் திடீர்னு படுத்துக்கிட்டு. என்னன்னு தெரியலை. யானையை எழுப்ப பக்கத்தூர்லயிருந்தெல்லாம் வைத்தியருங்க வந்தாங்க. முடியல. அதான் இருக்கோம்'ன்னாரு அரசன்.
‘இவ்வளவுதானா? நான் வேற ஏதோன்னு நினைச்சேன். நான் வேணா யானைய எழுப்பட்டுமா?'ன்னாரு பண்டாரம்.
‘நீ என்ன வைத்தியனா'ன்னு கேட்டாரு அரசன். இல்லைன்னான்.
‘பெறவு எப்படி எழுப்புவே'ன்னாரு.
‘இப்ப பாருங்க'ன்னு யானை பக்கத்துல போனாரு பண்டாரம்.
பக்கத்துல இருந்த வைத்தியன், ‘நானே போராடி பாத்துட்டேன். நீ என்னத்த பண்ணிருவே'ன்னாரு.
இவரு ஒண்ணும் சொல்லலை. பேசாம, யானையோட காலை பாத்தாரு. காலு கொஞ்சமா வீங்கி இருந்துச்சு. அந்த காலு இருக்குத பக்கத்துல ஆழமா குழி தோண்ட சொன்னாரு அரசன்கிட்ட. வீரர்கள் வந்து தோண்டுனாவோ. அந்தானி பெரிய கயிறை கொண்டு வந்து, யானை கால்ல கட்டுனாரு பண்டாரம். கயிறோட ஒரு நுனியில பாறாங்கல்லை கட்டி குழிக்குள்ள போட்டாரு. யானையோட காலு புழுக்குன்னு குழிக்குள்ள போச்சு. டக்குன்னு சின்ன சத்தம். சரியா போச்சு. கயித்தை அவுத்துவிட்டாரு பண்டாரம். யானை கெந்தி கெந்தி எந்திரிச்சுட்டு.
அரசனுக்கு சந்தோஷம் தாங்க முடியலை.
‘என்ன பண்ணுன"ன்னு பண்டாரத்துக்கிட்ட கேட்டாம் அரசன்.
‘மாடுவோ கால்ல சுளுக்கு வந்துச்சுன்னா இப்படி படுத்துக்கிடும் பாத்துக்கிடுங்கோ. அதுக்கு பண்ணுததைதான் இதுக்கு பண்ணுனேன்'ன்னாரு பண்டாரம்.
‘யானைக்கு சுளுக்கா?'
ஆமான்னாரு பண்டாரம்.
சந்தோஷம் தாங்காத அரசன், ‘இந்தா இந்த இடம் பூராத்தையும் நீயே வச்சுக்கோ'ன்னு சுத்தி தெரிஞ்ச இடத்தையெல்லாம் இவனுக்கு கொடுத்துட்டாரு.
விஷயத்தை ஊர்ல வந்து சொன்னாரு பண்டாரம். எல்லாரும் அந்த இடத்தை பாக்கதுக்கு வந்தாவோ. வந்து பாத்தா குழி தோண்டுன இடத்துல ஊத்து பொங்கி தண்ணி வருது!
எல்லாருக்கும் ஆச்சரியம். குடிச்சு பார்த்தா அவ்வளவு ருசி. பெறவு பக்கத்துல சத்திரம் மாதிரி கெட்டுனாவோ. அன்னையில இருந்து இந்த இடத்துக்கு யானைக்கு சுளுக்கெடுத்த மடம் பேரு. இப்பம் பக்கத்துல கருப்பசாமி பூடம் வந்துபோச்சு.
இன்னைக்கும் பண்டாரம் குடும்பத்து ஆளுவோ ஒவ்வொரு சித்திரை விசுவுக்கும் இங்க ஐநூறு பேருக்காவது அன்னதானம் போடுதாவோ.
...................
அடுத்து (திருடி அம்மன்)
வழக்கமா மேக்கு பத்துக்கு மாடு மேய்க்க போற பண்டார அண்ணாச்சி, இங்க என்ன நடக்குன்னு தெரியணுங்கறதுக்காக, இவங்க இருக்குத பக்கமா மாடு மேய்க்க போனாரு. ஊர்க்காரனுவோ முழுசா விசாரிச்சுட்டு வாடேன்னு வேற சொல்லிட்டானுவோ. சரின்னு கௌம்பிட்டாரு.
மாந்தோப்புக்கு உள்ள மாட்டை பத்திவுட்டுட்டு, இவங்க என்ன பண்ணுதாவோன்னு தூரத்துல நின்னுக்கிட்டு பார்த்தாரு. ஒரு யானை, கீழப் படுத்துக்கிடக்கு தும்பிக்கைய அங்க இங்கன்னு ஆட்டிக்கிட்டு. பக்கத்துல அரசன் உக்கார்ந்திருக்காரு. ஒரு ஆளு கையில பெரிய பெட்டிய வச்சுக்கிட்டு யானை கால்ல தடவி தடவி விடுதாரு. கால்ல கையை வச்சா யானை உதறுது. அந்தாளு யோசிச்சுட்டு நிக்கான்.
இவருக்கு ஒண்ணுமே புரியலை. அரசனுக்கு கோவம். பண்டாரத்துக்கு அங்க போவலாமா வேண்டாமான்னு குழப்பம். போனா அரசன் இங்க என்ன ஜோலின்னு கேட்டுட்டாம்னா?. அந்தானி பாத்துட்டே இருந்தாரு. ஒண்ணும் விளங்குத மாதிரி தெரியல. மனசுல தெரியத்தை வச்சுக்கிட்டு மெதுவா அரசன் இருக்குத பக்கம் போனாரு. இவரு வாரத பார்த்து நாலஞ்சு வீரனுவோ ஓடி வந்து தடுத்தானுவோ. இதை பாத்த அரசன், 'அவனை வர விடு'ன்னான். போனாரு பண்டாரம்.
'என்ன?'ன்னாரு அரசன்.
‘நான் மாடு மேய்க்கவன். எங்க ஊர்ல ரெண்டு நாளா இருக்கியோ. என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இங்க வந்தேன்'னு சொன்னாரு பண்டாரம்.
அரசன் மேலயும் கீழயும் பாத்தாரு.
‘இங்க படுத்து கெடக்கு பாரு யானை. இது மேலதான் வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் திடீர்னு படுத்துக்கிட்டு. என்னன்னு தெரியலை. யானையை எழுப்ப பக்கத்தூர்லயிருந்தெல்லாம் வைத்தியருங்க வந்தாங்க. முடியல. அதான் இருக்கோம்'ன்னாரு அரசன்.
‘இவ்வளவுதானா? நான் வேற ஏதோன்னு நினைச்சேன். நான் வேணா யானைய எழுப்பட்டுமா?'ன்னாரு பண்டாரம்.
‘நீ என்ன வைத்தியனா'ன்னு கேட்டாரு அரசன். இல்லைன்னான்.
‘பெறவு எப்படி எழுப்புவே'ன்னாரு.
‘இப்ப பாருங்க'ன்னு யானை பக்கத்துல போனாரு பண்டாரம்.
பக்கத்துல இருந்த வைத்தியன், ‘நானே போராடி பாத்துட்டேன். நீ என்னத்த பண்ணிருவே'ன்னாரு.
இவரு ஒண்ணும் சொல்லலை. பேசாம, யானையோட காலை பாத்தாரு. காலு கொஞ்சமா வீங்கி இருந்துச்சு. அந்த காலு இருக்குத பக்கத்துல ஆழமா குழி தோண்ட சொன்னாரு அரசன்கிட்ட. வீரர்கள் வந்து தோண்டுனாவோ. அந்தானி பெரிய கயிறை கொண்டு வந்து, யானை கால்ல கட்டுனாரு பண்டாரம். கயிறோட ஒரு நுனியில பாறாங்கல்லை கட்டி குழிக்குள்ள போட்டாரு. யானையோட காலு புழுக்குன்னு குழிக்குள்ள போச்சு. டக்குன்னு சின்ன சத்தம். சரியா போச்சு. கயித்தை அவுத்துவிட்டாரு பண்டாரம். யானை கெந்தி கெந்தி எந்திரிச்சுட்டு.
அரசனுக்கு சந்தோஷம் தாங்க முடியலை.
‘என்ன பண்ணுன"ன்னு பண்டாரத்துக்கிட்ட கேட்டாம் அரசன்.
‘மாடுவோ கால்ல சுளுக்கு வந்துச்சுன்னா இப்படி படுத்துக்கிடும் பாத்துக்கிடுங்கோ. அதுக்கு பண்ணுததைதான் இதுக்கு பண்ணுனேன்'ன்னாரு பண்டாரம்.
‘யானைக்கு சுளுக்கா?'
ஆமான்னாரு பண்டாரம்.
சந்தோஷம் தாங்காத அரசன், ‘இந்தா இந்த இடம் பூராத்தையும் நீயே வச்சுக்கோ'ன்னு சுத்தி தெரிஞ்ச இடத்தையெல்லாம் இவனுக்கு கொடுத்துட்டாரு.
விஷயத்தை ஊர்ல வந்து சொன்னாரு பண்டாரம். எல்லாரும் அந்த இடத்தை பாக்கதுக்கு வந்தாவோ. வந்து பாத்தா குழி தோண்டுன இடத்துல ஊத்து பொங்கி தண்ணி வருது!
எல்லாருக்கும் ஆச்சரியம். குடிச்சு பார்த்தா அவ்வளவு ருசி. பெறவு பக்கத்துல சத்திரம் மாதிரி கெட்டுனாவோ. அன்னையில இருந்து இந்த இடத்துக்கு யானைக்கு சுளுக்கெடுத்த மடம் பேரு. இப்பம் பக்கத்துல கருப்பசாமி பூடம் வந்துபோச்சு.
இன்னைக்கும் பண்டாரம் குடும்பத்து ஆளுவோ ஒவ்வொரு சித்திரை விசுவுக்கும் இங்க ஐநூறு பேருக்காவது அன்னதானம் போடுதாவோ.
...................
அடுத்து (திருடி அம்மன்)
Monday, June 2, 2008
மண்ணில் முளைத்த கதைகள்
ரகசியங்களைப் புதைத்துக்கொண்டு
அப்பாவியாக நிற்கிறது கிராமம்.
அதன் நீள அகலங்களில் ஏராளமான கதைகள்
மண்ணாகவும் கல்லாகவும் விரவி கிடக்கின்றன.
அள்ளி அருந்தவும், அடிமனதில் சொருகவும்
சுகமான சுவாரஸ்யங்களை மடித்து
வைத்திருக்கிறது அந்த பொட்டல் மண்.
அந்த வேர்தேடி போகப் போக நம்
முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றைச்
சுவாசிக்க முடிகிறது. நவீனம் எட்டிப்பார்க்காத
அந்த வயக்காடுகள் வானத்தை மட்டுமே
நம்பிக்கொண்டிருக்கிறது.
மழையும் நீருமே உறவாகியிருக்கிற
அந்த வரப்புகளில் பூத்துக்குலுங்குகிறது
ஆயிரக்கணக்கான கதைகள். ஒரு கையால்
உருவ உருவ உங்களாலோ என்னாலோ
பிடித்துவிட முடியாத அளவுக்கு அவை
வந்துகொண்டேயிருக்கிறது.
அவற்றை கட்டுக் கதைகள் என்று
ஒதுக்கி விடமுடியாது. விளிம்பு நிலை மக்களின்
நம்பிக்கைகளின் அடிப்படையான
இந்த கதைகள் சாகாவரம் பெற்றவை.
இதற்கான மூலம் என்ன? எப்படி வந்திருக்க முடியும்
என்கிற ஆராய்ச்சியெல்லாம் நாட்டார் வழக்காற்றியல்
களப்பணியாளர்களின் கையில் இருக்கிறது.
இந்த மண்ணில் முளைத்த
அந்த (நான் கேள்விபட்ட)
வாய்மொழிகதைகளை எழுத இருக்கிறேன்.
விரைவில்.
அப்பாவியாக நிற்கிறது கிராமம்.
அதன் நீள அகலங்களில் ஏராளமான கதைகள்
மண்ணாகவும் கல்லாகவும் விரவி கிடக்கின்றன.
அள்ளி அருந்தவும், அடிமனதில் சொருகவும்
சுகமான சுவாரஸ்யங்களை மடித்து
வைத்திருக்கிறது அந்த பொட்டல் மண்.
அந்த வேர்தேடி போகப் போக நம்
முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றைச்
சுவாசிக்க முடிகிறது. நவீனம் எட்டிப்பார்க்காத
அந்த வயக்காடுகள் வானத்தை மட்டுமே
நம்பிக்கொண்டிருக்கிறது.
மழையும் நீருமே உறவாகியிருக்கிற
அந்த வரப்புகளில் பூத்துக்குலுங்குகிறது
ஆயிரக்கணக்கான கதைகள். ஒரு கையால்
உருவ உருவ உங்களாலோ என்னாலோ
பிடித்துவிட முடியாத அளவுக்கு அவை
வந்துகொண்டேயிருக்கிறது.
அவற்றை கட்டுக் கதைகள் என்று
ஒதுக்கி விடமுடியாது. விளிம்பு நிலை மக்களின்
நம்பிக்கைகளின் அடிப்படையான
இந்த கதைகள் சாகாவரம் பெற்றவை.
இதற்கான மூலம் என்ன? எப்படி வந்திருக்க முடியும்
என்கிற ஆராய்ச்சியெல்லாம் நாட்டார் வழக்காற்றியல்
களப்பணியாளர்களின் கையில் இருக்கிறது.
இந்த மண்ணில் முளைத்த
அந்த (நான் கேள்விபட்ட)
வாய்மொழிகதைகளை எழுத இருக்கிறேன்.
விரைவில்.
Subscribe to:
Posts (Atom)