பெறவு இவனும் செவப்பா இருக்குத பிள்ளைய பாத்துக்கெட்டணும்னு ஊர் ஊரா தேடிப்போயி பொண்ணு பாத்தாம். இவன் அத்தைக்காரி மூணு பொட்டப்புள்ளைய வச்சிருக்கா பத்தையூர்ல.
அதெல்லாம் வேண்டாம்னுட்டாம். தோலு கருப்பா இருக்காம்.
பெறவு இப்படியே அலைஞ்சதுல மூதிக்கு வயசுதான் ஏறிச்சு. செவத்த தோலு பொண்ணு ஒண்ணும் கெடக்கல. இவன் ஆத்தாக்காரி, சொந்த பந்த கல்யாணத்துக்கு போவும்போது, செவப்பு தோலு பிள்ளைல பாத்தான்னா, யாரு என்னன்னு விசாரிச்சா... ஆனா, அவ்வோ கேட்ட வெஷயத்துல வாய பொத்திட்டு வந்துட்டா.
‘இப்படி பொண்ணு வேணுங்கிய. மாப்ள எங்க ஆபிசுல வேல பாக்காரு’ன்னு கேட்டா என்ன செய்ய முடியும்?
இந்தப் பயலுக்கு ஒரு மாதிரி ஆயிப்போச்சு. இதுக்கு மேல செவத்த தோலை தேட முடியாதுன்னுட்டா ஆத்தா. சேக்காளி பயலுவோலாம் தாலி கட்டுட்டு குழந்த குட்டின்னு இருக்கையில இவன் எவ்வளவு நாளுதான் காத்திருப்பாம்.
செரி யாரையாவது பாருன்னுட்டாம். பெறவு, பாப்பாக்குடில இருக்குத அய்யங்கோனாரு மவளை புடிச்சு கெட்டி வச்சா.அவ நீட்டி. தெனமும் குளிச்சு முழுவி, சொவத்துக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரி பவுடரை போட்டுட்டுதான் அலைவா. ‘இந்த ஊர்ல இப்டிய அலையாதட்டின்னு சொல்லிப்பாத்தான். ஊருக்கு போவும் போது மட்டும் படவுரை போடு’ன்னான். அவ கேக்கலை. ஊருல யாராவது பவுடரு வாசத்தோட போனன்ன்னா, அது வசதி பொண்டாட்டியாத்தாம் இருப்பாம்பாவோ.
வெறவுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தாம்னா அசதியா இருக்கும். வெறவு விக்கலைன்னா வீட்டு சொவத்துல சாத்தி வச்சிட்டு குளிப்பாம். நீத்தண்ணிய குடிச்சிட்டு சாஞ்சாம்னா கண்ணை கெட்டிட்டு வரும். சின்ன புள்ளை, ‘எப்போ’ன்னு கிட்ட வரும்.‘ஏல... சத்தம் போடாத: செத்த தூங்கிக்கிடுதேம்’பாம்.
மழை காலத்துலதான் சிக்கலு. நனைஞ்சுக்கிட்டு கூட வெறவுக்கு போலாம். ஆனா, மலையில மழைபெஞ்சு மண்ணு வழுக்கும். தலையில வெறவ வச்சுட்டு நடக்க முடியாது. வழுக்கிரும். இதுக்காவ செல நேரத்துல நெறய வெறவ கெட்டிக்கொண்டாந்து, வீட்டுல வச்சு அதை ரெண்டு கெட்டா பிரிப்பாம். பாதியை வீட்டுக்கு வெளியில சாத்திப்போட்டுருவாம். அதை மட்டும் விக்க மாட்டாம்.
இப்டியே ஒரு பத்து, பதினெஞ்சு கெட்டு சேந்துதுன்னா நிம்மதியா இருக்கும். மழை நேரத்துல வெறவுக்கும் நல்ல வெலை கெடக்கும். அப்பம்லாம் இவன் சொல்லுததுதாம் வெல.
உடம்பு சரியில்ல, முடியலைன்னாலும் அவனால சும்மா இருக்க முடியாது வீட்ல. வாய்க்கா கரையில இருக்குத கருவை முள்ளை வெட்டிப்போட்டுட்டு, பொண்டாட்டிய விட்டு அள்ளிட்டு வர சொல்லுவாம். வந்ததுல வாக்கான கம்பு கெடச்சுதுன்னா சின்ன பயலுவோலுக்கு செல்லாங்குச்சு செதுக்கி கொடுப்பாம். எல்லாரும் செதுக்குவோன்னாலும் இவன மாதிரி கூர்மையா அழகா செதுக்க முடியாது.
ஒரு நா வெறவுக்கு போயிட்டு வந்தாம்னா மறுநா தூங்குவாம். அடுத்த நாளு பாவூர்க்காரனுவோ சத்தம் முழிப்பை கொடுக்கும். அறுவாளைத்தூக்கிட்டு, பொன்னம்மாவை கூட்டிட்டுப் போவும் வாழ்க்கை.
அவ்வளவுதாம்.
Saturday, January 26, 2008
Thursday, January 24, 2008
வசதி 3; கேரக்டர் 7
மலைலயிருந்து செத்த எறங்குனதும் வயிறு குப்புனு பசிக்கும். கடனாநதி ஆத்துக்கு வார வரைக்கும், பசியை பொறுத்துக்கிட்டு வருவாவோ. வந்ததும் தலைல இருக்குத வெறவு கெட்ட, ஏதாவது ஒரு மரத்தை பாத்து அதுல சாத்தி வைப்பாவோ. சாத்திதான் வைக்கணும். கீழ போடக் கூடாது. போட்டா தூக்கிவிட ஆளத் தேட முடியாதுலா. அதனால.
வசதிக்கு கழுத்துலயிருந்து உடம்பு பூராவும் கறி தென்னிக்கிட்டு இருக்கும். இரும்பு உடம்புல அடிக்கடி பீடிக்குடிக்கதால கொஞ்சமா இறுமல் மட்டும் வரும். மத்தபடி தெடகாத்திரமான பயதான். ரெண்டு மூட்டை நெல்லை முக்கி முக்கி ரெண்டு கையிலயும் தூக்கிருவாம்னா பாத்துக்கிடுங்க.
ஒரு தடவை, கொம்பையாவுக்கும் இவனுக்கும் போட்டி. கொம்பையா, தொன்னாத்த மலையில வெறவுக்கு போறவன். அதுக்கு முதலியார்பட்டி பக்கமா போவணும். ஊர்லயிருந்து இவங்கலாம் மேக்கு பக்கமா போனா, கொம்பையா ஆளுவோ தெற்கு பக்கமா போவாவோ.
தொன்னாத்த மலையில வெலங்குவோ தொல்லை இருக்காது. அங்க பாம்புவோதான் நெறய. இங்கயிருந்து வெறவு கொண்டுட்டு வந்தா முதலியார்பட்டி, கோவங்கொளத்துலயே வித்துட்டு வந்துருவாவோ. பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர்ல வசதி விப்பாம். இல்லனா ஊருக்கு வெறவை கொண்டு வந்துட்டு, கருவேலப்பறை திண்டுல சாத்திவச்சுட்டு நின்னாம்னா வித்து போவும்.
சும்மா பேசிட்டு இருக்கும்போது, கொம்பையனுக்கும் வசதிக்கும் போட்டி வந்துபோச்சு.
‘நீ இந்த பொத்தி காலை வச்சுக்கிட்டு என்னத்தல கிழிப்பே’& கொம்பையா.
‘என்னத்த கிழிக்கணும்னு சொல்லுல’
‘இந்தா வா போவும். ரைஸ் மில்லுல அடுக்கி வச்சிருக்குத நெல் மூட்டையில, ஒவ்வொரு கையில ஒரு மூட்டைய நெஞ்சி வரைக்கும் தூக்கிரணும்.
முடியுமால?’
‘இதுலாம் எம்மாத்திரம்... நீ தூக்கலைனா என்ன செய்யணும் சொல்லு.’
‘ஒரு நாளு வெறவுக்கு விக்க துட்டு’
அக்கம் பக்கத்துல இருந்த லூசுவோ வேற தூண்டுவிட்டுதுவோ. அந்தானி இறங்கியாச்சு. ரைஸ் மில் போனாவோ. அங்க பட்சி தேவரு நின்னாரு.
வெஷயத்தை சொன்னதும், மூட்டைய தூக்க சரின்னுட்டாரு.
மொதல்ல கொம்பையா... ஒரு கையில தூக்கிட்டாம்... இன்னொரு கையில முடியல. உன்னி உன்னி இழுத்துப்பாக்காம். முடியல. கையு வலிக்கு. அந்தானி, மூட்டைய வச்சுக்கிட்டு சாரத்தை நல்லா தொடை வர இழுத்துக்கட்டிக்கிட்டு பெறவும் தூக்குனாம். முடியல. உடம்பெல்லாம் வேத்து போச்சு. ஆனா, பய ஒத்துக்கிட மாட்டேங்காம். ‘ச்சே.. இப்பம் பாரு தூக்கிருவேம்’ன்னு சொல்லிக்கிட்டே இருக்காம். அரை மணிநேரம் ஆயிப் போச்சு.
பொறுத்து பொறுத்து பாத்தாம் வசதி.
‘ஏல தூரப்போ... பெரிசா போட்டிப்போட வந்துட்ட மூதி...’ன்னு சொல்லிட்டே ஒரு கையால ஒரு மூட்டைய தூக்குனாம். இடது கையால தூக்க முடியல. ரெண்டு தடவை மூசு மூசுன்னு மூச்சி விட்டு, குப்புனு ஒரு தூக்கு. செத்த நேரம் நெஞ்சு வரை தூக்கிட்டு மூட்டைய கீழப் போட்டாம். சுத்தி நின்னவோயெல்லாம் கை தட்டுனாவோ. கொஞ்ச நேரம் குத்த வச்சு உக்காந்துட்டு, ஒரு பீடிய பத்தவச்சாம். கொம்பையாவுக்கு மானம் போச்சு. எல்லாரும் அவனை எடக்கு பண்ணுதானுவோ.
பேசுன மாதிரி இன்னொரு நாளு எல்லாரு முன்னாலயும் ஒரு நா வெறவு துட்டை கொடுத்துட்டாம்.
பாத்துக்கிடுங்கோ பயல. அப்படிப்பட்ட பய வசதி.
பொன்னம்மா ஆத்துக்குள்ள எறங்கி கைய காலை கழுவிட்டு வருவா. இவன் அங்ஙனயே கரையில முதுவை நீட்டு சும்மா படுப்பாம். காலைல தின்னுட்டு மிச்சம் வச்சிருக்குத சோத்தை தூக்குச்சட்டியில இருந்து எடுப்பா.
அவனுக்குள்ளதையும் எடுத்து வைப்பா. ரெண்டு பேரும் தின்னுட்டு ஆத்துக்குள்ள இறங்கி வருவாவோ. ஒரே நடதான்.
வார வழியில அந்த ஊர்ல எதும் கல்யாணம், சடங்குன்னா ஒரு வெலை சொல்லி வெறவு கேப்பாவோ. சொன்னவெலைக்கு யாரு வாங்குதா? ரெண்டு மூணு ரூவா கொறச்சுக்கேட்டா கூட கொடுத்துருவாவோ. அப்டி பாதி வழியிலேயே வித்தாச்சுன்னா, வசதிக்கு அந்தானி ஊருக்கு போவணும்னு தோணாது. வா, வெரசா போயி இன்னொரு கெட்டு எடுத்துட்டு வருவோம்னு கௌம்புவாம். பொன்னம்மா வேண்டாம்யா காலு வலிக்கும்பா.
அவளுக்கு என்னன்னா, ஒரு நாளு கெடக்கதை ரூவா நாலு நாளைக்கு வச்சுக்கிடுவா. அறுப்பு நேரத்துல வய அறுக்க போவதால நெல்லுக்கு பிரச்னையில்ல. வீட்டுக்காரன் இருக்கவரைக்கும் இவ வெறவுக்கு வரமாட்டா. அவன் காக்காவலிப்பு வந்து தெப்பக்குளத்துல விழுந்து செத்ததுலயிருந்து இவ ஆரம்பிச்சுட்டா வெறவு போறத. பின்ன ஒரு பயதாம் இருக்காம். அவனுக்குன்னு ஏதாவது வேணும்லா. வசதி பொண்டாட்டி மரகதம், வெறவுக்குலாம் வரமாட்டேன்னுட்டா.
பீடி சுத்ததுதாம் அவளுக்கு. வாரா வாரம்தாம் காசுன்னாலும், ‘மொகத்துல பவுடரை பூசிட்டு அலையுதவளுக்கு வெறவு பொறக்கி, வேர்வை நாத்தத்துல இருக்க முடியுமா? கூறுகெட்ட செரிக்கி’ம்பா வசதி ஆத்தா. இப்பம் அவளுக்கு கண்ணு தெரியல. ரெண்டு பொட்ட புள்ளைலு வேற. பொழப்பு ஒடணும்லா.
ஆங்... இவனுக்கு வசதிங்கத பேரு எப்டி வந்ததுன்னு சொல்லலியே...
ஆழ்வாக்குறிச்சி மேஸ்த்ரி ஒருத்தரு, கேரளால இருக்குத பொனலூர்ல பாலம் கட்டுததுக்கு கான்ட்ராக்ட்டு எடுத்திருந்தாரு. ஊர்லயிருந்து ஒரு அம்பது பேரை கூட்டிட்டுப் போனாரு. வெறவுக்கு போறத விட, நல்ல சம்பளங்கதால இவனும் போனாம். இவன் பேரு சூச்சமாடன்.
போயிட்டு, தெனமும் மண்ணள்ளி போட்டுட்டு இருக்கும் போதே, கூட மண்ணள்ளி போட்ட முத்தையா பிள்ளை மவன், எதுத்தாப்ல பழகுன மலையாளத்து பிள்ளைய காதலிச்சுத் தொலைச்சுட்டாம். முத்தையா பிள்ளைக்கு ஊர்ல நல்ல சொத்து.
அவரு, இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்னுட்டாரு. ‘நம்ம சொந்தத்துலயே எவ்வளவு வசதியில நான் பொண்ணு பாப்பேன். நீ ஒரு மண்ணும் இல்லாம எவளையோ இழுத்துட்டு வார பாக்கியோல’ன்னு குதிச்சாரு. அந்தப் பய அவளைத்தான் கெட்டுவேன்னு ஒத்தகால்ல நின்னாம்.
பெறவு மலையாளத்தாட்ட பேசி, ‘உங்களுக்கு எவ்வளவு வேணாலும் தாரேன். எனக்கிருக்கது ஒரே புள்ள. நல்லா பாத்துக்கிடுங்க’ன்னு சொல்லிட்டா. முத்தையா பிள்ளைக்கு உச்சிக் குளுந்து போச்சு. சரின்னுட்டாரு.
ரெண்டு லாரில லொட்டு லொசுக்குன்னு ஏகப்பட்ட பண்ட பாத்திரம். கல்யாணத்தன்னிக்கு பார்க்கணுமே. எல்லா செலவும் பொண்ணு வூடுதாம்.
பலாப்பழமும், பச்சைப்பழமுமா விதைச்சுட்டானுவா கல்யாண வீட்டுல. ஏழு வவை கறி. இந்த கல்யாணத்தை தவிர ஊர்ல எந்தக் கல்யாணத்துலயும் ஏழு வவை கறி வச்சதில்ல. முத்தையா பிள்ளை தோள்ல துண்டை போட்டுட்டு பண்ணுன அலப்பறையும், கல்யாண பிரம்மாண்டமும் நம்ம சூச்சமாடனை ஒரு வழி பண்ணிட்டு. நாமளும் என்னைக்கு இப்படி வசதிக்காரம் மாதிரி வாழன்னு நெனச்சாம்.
அடுத்தாப்ல பொனலூருக்கு வேலக்குப் போவும் போது, இவனுக்கும் ஏகப்பட்ட மலையாளத்து பிள்ளைலுவோ கூட பழக்கம் வந்துச்சு. ஆனா, எந்த புள்ளையும் லவ்வு அது இதுன்னு சொல்லித் தொலைக்கல. இதுக்கு என்னடா காரணம்னு ராத்திரி போல யோசனை பண்ணுனாம். மறு நாள்லயிருந்து ஆரம்பிச்சாம்.
‘‘ஊருல எனக்கு நல்ல வசதியிருக்கு. ஏகப்பட்ட சொத்து’ன்னு ஆரம்பிச்சாம். ஆக்கங்கெட்டவன் எல்ல புள்ளைலுட்டயும் போயா இதை சொல்லணும்.
அவளுவோ இவனை பாத்தாலே எடக்கு பண்ண ஆரம்பிச்சுட்டுவோ. கூட வேல பாக்குத உள்ளூர்க்காரப்பயலுவோளும், பொம்பளைலுவோளும் சும்மா இருப்பாவோளா?
எடக்குக்கு ஆரம்பிச்சது...பெறவு வசதின்னு ஆயிப்போச்சு. இதுல என்ன கொடுமைன்னா... அங்க வேலை பாத்த நாலு பேரு அந்த ஊர்லயே மலையாளத்து பிள்ளைல கெட்டிட்டு வந்துட்டாம்ங்கதுதான்.
இன்னும் சொல்லுதேன்...
வசதிக்கு கழுத்துலயிருந்து உடம்பு பூராவும் கறி தென்னிக்கிட்டு இருக்கும். இரும்பு உடம்புல அடிக்கடி பீடிக்குடிக்கதால கொஞ்சமா இறுமல் மட்டும் வரும். மத்தபடி தெடகாத்திரமான பயதான். ரெண்டு மூட்டை நெல்லை முக்கி முக்கி ரெண்டு கையிலயும் தூக்கிருவாம்னா பாத்துக்கிடுங்க.
ஒரு தடவை, கொம்பையாவுக்கும் இவனுக்கும் போட்டி. கொம்பையா, தொன்னாத்த மலையில வெறவுக்கு போறவன். அதுக்கு முதலியார்பட்டி பக்கமா போவணும். ஊர்லயிருந்து இவங்கலாம் மேக்கு பக்கமா போனா, கொம்பையா ஆளுவோ தெற்கு பக்கமா போவாவோ.
தொன்னாத்த மலையில வெலங்குவோ தொல்லை இருக்காது. அங்க பாம்புவோதான் நெறய. இங்கயிருந்து வெறவு கொண்டுட்டு வந்தா முதலியார்பட்டி, கோவங்கொளத்துலயே வித்துட்டு வந்துருவாவோ. பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர்ல வசதி விப்பாம். இல்லனா ஊருக்கு வெறவை கொண்டு வந்துட்டு, கருவேலப்பறை திண்டுல சாத்திவச்சுட்டு நின்னாம்னா வித்து போவும்.
சும்மா பேசிட்டு இருக்கும்போது, கொம்பையனுக்கும் வசதிக்கும் போட்டி வந்துபோச்சு.
‘நீ இந்த பொத்தி காலை வச்சுக்கிட்டு என்னத்தல கிழிப்பே’& கொம்பையா.
‘என்னத்த கிழிக்கணும்னு சொல்லுல’
‘இந்தா வா போவும். ரைஸ் மில்லுல அடுக்கி வச்சிருக்குத நெல் மூட்டையில, ஒவ்வொரு கையில ஒரு மூட்டைய நெஞ்சி வரைக்கும் தூக்கிரணும்.
முடியுமால?’
‘இதுலாம் எம்மாத்திரம்... நீ தூக்கலைனா என்ன செய்யணும் சொல்லு.’
‘ஒரு நாளு வெறவுக்கு விக்க துட்டு’
அக்கம் பக்கத்துல இருந்த லூசுவோ வேற தூண்டுவிட்டுதுவோ. அந்தானி இறங்கியாச்சு. ரைஸ் மில் போனாவோ. அங்க பட்சி தேவரு நின்னாரு.
வெஷயத்தை சொன்னதும், மூட்டைய தூக்க சரின்னுட்டாரு.
மொதல்ல கொம்பையா... ஒரு கையில தூக்கிட்டாம்... இன்னொரு கையில முடியல. உன்னி உன்னி இழுத்துப்பாக்காம். முடியல. கையு வலிக்கு. அந்தானி, மூட்டைய வச்சுக்கிட்டு சாரத்தை நல்லா தொடை வர இழுத்துக்கட்டிக்கிட்டு பெறவும் தூக்குனாம். முடியல. உடம்பெல்லாம் வேத்து போச்சு. ஆனா, பய ஒத்துக்கிட மாட்டேங்காம். ‘ச்சே.. இப்பம் பாரு தூக்கிருவேம்’ன்னு சொல்லிக்கிட்டே இருக்காம். அரை மணிநேரம் ஆயிப் போச்சு.
பொறுத்து பொறுத்து பாத்தாம் வசதி.
‘ஏல தூரப்போ... பெரிசா போட்டிப்போட வந்துட்ட மூதி...’ன்னு சொல்லிட்டே ஒரு கையால ஒரு மூட்டைய தூக்குனாம். இடது கையால தூக்க முடியல. ரெண்டு தடவை மூசு மூசுன்னு மூச்சி விட்டு, குப்புனு ஒரு தூக்கு. செத்த நேரம் நெஞ்சு வரை தூக்கிட்டு மூட்டைய கீழப் போட்டாம். சுத்தி நின்னவோயெல்லாம் கை தட்டுனாவோ. கொஞ்ச நேரம் குத்த வச்சு உக்காந்துட்டு, ஒரு பீடிய பத்தவச்சாம். கொம்பையாவுக்கு மானம் போச்சு. எல்லாரும் அவனை எடக்கு பண்ணுதானுவோ.
பேசுன மாதிரி இன்னொரு நாளு எல்லாரு முன்னாலயும் ஒரு நா வெறவு துட்டை கொடுத்துட்டாம்.
பாத்துக்கிடுங்கோ பயல. அப்படிப்பட்ட பய வசதி.
பொன்னம்மா ஆத்துக்குள்ள எறங்கி கைய காலை கழுவிட்டு வருவா. இவன் அங்ஙனயே கரையில முதுவை நீட்டு சும்மா படுப்பாம். காலைல தின்னுட்டு மிச்சம் வச்சிருக்குத சோத்தை தூக்குச்சட்டியில இருந்து எடுப்பா.
அவனுக்குள்ளதையும் எடுத்து வைப்பா. ரெண்டு பேரும் தின்னுட்டு ஆத்துக்குள்ள இறங்கி வருவாவோ. ஒரே நடதான்.
வார வழியில அந்த ஊர்ல எதும் கல்யாணம், சடங்குன்னா ஒரு வெலை சொல்லி வெறவு கேப்பாவோ. சொன்னவெலைக்கு யாரு வாங்குதா? ரெண்டு மூணு ரூவா கொறச்சுக்கேட்டா கூட கொடுத்துருவாவோ. அப்டி பாதி வழியிலேயே வித்தாச்சுன்னா, வசதிக்கு அந்தானி ஊருக்கு போவணும்னு தோணாது. வா, வெரசா போயி இன்னொரு கெட்டு எடுத்துட்டு வருவோம்னு கௌம்புவாம். பொன்னம்மா வேண்டாம்யா காலு வலிக்கும்பா.
அவளுக்கு என்னன்னா, ஒரு நாளு கெடக்கதை ரூவா நாலு நாளைக்கு வச்சுக்கிடுவா. அறுப்பு நேரத்துல வய அறுக்க போவதால நெல்லுக்கு பிரச்னையில்ல. வீட்டுக்காரன் இருக்கவரைக்கும் இவ வெறவுக்கு வரமாட்டா. அவன் காக்காவலிப்பு வந்து தெப்பக்குளத்துல விழுந்து செத்ததுலயிருந்து இவ ஆரம்பிச்சுட்டா வெறவு போறத. பின்ன ஒரு பயதாம் இருக்காம். அவனுக்குன்னு ஏதாவது வேணும்லா. வசதி பொண்டாட்டி மரகதம், வெறவுக்குலாம் வரமாட்டேன்னுட்டா.
பீடி சுத்ததுதாம் அவளுக்கு. வாரா வாரம்தாம் காசுன்னாலும், ‘மொகத்துல பவுடரை பூசிட்டு அலையுதவளுக்கு வெறவு பொறக்கி, வேர்வை நாத்தத்துல இருக்க முடியுமா? கூறுகெட்ட செரிக்கி’ம்பா வசதி ஆத்தா. இப்பம் அவளுக்கு கண்ணு தெரியல. ரெண்டு பொட்ட புள்ளைலு வேற. பொழப்பு ஒடணும்லா.
ஆங்... இவனுக்கு வசதிங்கத பேரு எப்டி வந்ததுன்னு சொல்லலியே...
ஆழ்வாக்குறிச்சி மேஸ்த்ரி ஒருத்தரு, கேரளால இருக்குத பொனலூர்ல பாலம் கட்டுததுக்கு கான்ட்ராக்ட்டு எடுத்திருந்தாரு. ஊர்லயிருந்து ஒரு அம்பது பேரை கூட்டிட்டுப் போனாரு. வெறவுக்கு போறத விட, நல்ல சம்பளங்கதால இவனும் போனாம். இவன் பேரு சூச்சமாடன்.
போயிட்டு, தெனமும் மண்ணள்ளி போட்டுட்டு இருக்கும் போதே, கூட மண்ணள்ளி போட்ட முத்தையா பிள்ளை மவன், எதுத்தாப்ல பழகுன மலையாளத்து பிள்ளைய காதலிச்சுத் தொலைச்சுட்டாம். முத்தையா பிள்ளைக்கு ஊர்ல நல்ல சொத்து.
அவரு, இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்னுட்டாரு. ‘நம்ம சொந்தத்துலயே எவ்வளவு வசதியில நான் பொண்ணு பாப்பேன். நீ ஒரு மண்ணும் இல்லாம எவளையோ இழுத்துட்டு வார பாக்கியோல’ன்னு குதிச்சாரு. அந்தப் பய அவளைத்தான் கெட்டுவேன்னு ஒத்தகால்ல நின்னாம்.
பெறவு மலையாளத்தாட்ட பேசி, ‘உங்களுக்கு எவ்வளவு வேணாலும் தாரேன். எனக்கிருக்கது ஒரே புள்ள. நல்லா பாத்துக்கிடுங்க’ன்னு சொல்லிட்டா. முத்தையா பிள்ளைக்கு உச்சிக் குளுந்து போச்சு. சரின்னுட்டாரு.
ரெண்டு லாரில லொட்டு லொசுக்குன்னு ஏகப்பட்ட பண்ட பாத்திரம். கல்யாணத்தன்னிக்கு பார்க்கணுமே. எல்லா செலவும் பொண்ணு வூடுதாம்.
பலாப்பழமும், பச்சைப்பழமுமா விதைச்சுட்டானுவா கல்யாண வீட்டுல. ஏழு வவை கறி. இந்த கல்யாணத்தை தவிர ஊர்ல எந்தக் கல்யாணத்துலயும் ஏழு வவை கறி வச்சதில்ல. முத்தையா பிள்ளை தோள்ல துண்டை போட்டுட்டு பண்ணுன அலப்பறையும், கல்யாண பிரம்மாண்டமும் நம்ம சூச்சமாடனை ஒரு வழி பண்ணிட்டு. நாமளும் என்னைக்கு இப்படி வசதிக்காரம் மாதிரி வாழன்னு நெனச்சாம்.
அடுத்தாப்ல பொனலூருக்கு வேலக்குப் போவும் போது, இவனுக்கும் ஏகப்பட்ட மலையாளத்து பிள்ளைலுவோ கூட பழக்கம் வந்துச்சு. ஆனா, எந்த புள்ளையும் லவ்வு அது இதுன்னு சொல்லித் தொலைக்கல. இதுக்கு என்னடா காரணம்னு ராத்திரி போல யோசனை பண்ணுனாம். மறு நாள்லயிருந்து ஆரம்பிச்சாம்.
‘‘ஊருல எனக்கு நல்ல வசதியிருக்கு. ஏகப்பட்ட சொத்து’ன்னு ஆரம்பிச்சாம். ஆக்கங்கெட்டவன் எல்ல புள்ளைலுட்டயும் போயா இதை சொல்லணும்.
அவளுவோ இவனை பாத்தாலே எடக்கு பண்ண ஆரம்பிச்சுட்டுவோ. கூட வேல பாக்குத உள்ளூர்க்காரப்பயலுவோளும், பொம்பளைலுவோளும் சும்மா இருப்பாவோளா?
எடக்குக்கு ஆரம்பிச்சது...பெறவு வசதின்னு ஆயிப்போச்சு. இதுல என்ன கொடுமைன்னா... அங்க வேலை பாத்த நாலு பேரு அந்த ஊர்லயே மலையாளத்து பிள்ளைல கெட்டிட்டு வந்துட்டாம்ங்கதுதான்.
இன்னும் சொல்லுதேன்...
Sunday, January 13, 2008
வசதி 2; கேரக்டர் 7
இதுக்குள்ள வசதி, நாலஞ்சு பீடிய ஊதி தள்ளிருப்பாம். மூதிக்கு அதை குடிக்கலன்னா முடியாது. மலைக்கு அடிவாரத்துல நாலஞ்சு வீடுவோ இருக்கு. இவ்வோ போனதும், ‘ஏய் பெரியாத்தா’ன்னு ஒரு சத்தம். நடு வீட்டுலயிருந்து ரெண்டு பொம்பளைலுவோ வருவாவோ. கொஞ்சம் குடிக்க தண்ணிய வாங்கிட்டு, வீடுவோளுக்கு எதுத்தாப்ல இருக்குத வாக மரத்துக்கு கீழ உக்காருவாவோ. சட்டியில இருக்கததுல பாதியை ரெண்டு பேரும் திம்பாவோ. பெரியாத்தா, சுண்டக்கரி இருந்தா கொண்டு வந்து தருவா.
பெறவு ஊருகதை நடக்கும்.
‘புள்ளைக்கு கால்ல புண்ணு சொன்னியே வசதி, பரால்லாயா?'
‘ஆமா, நேத்துதான் ஆழ்வாக்குறிச்சி ஆஸ்பத்திரியில காட்டிட்டு வந்திருக்கா. டாக்டுரு என்ன மருந்தோ கொடுத்திருக்காரு'
‘பூச்சி கடியா?'
‘என்னன்னு தெரியுது?, கடலை எடுக்க போயிருக்கு. போன எடத்துல என்னமோ கடிச்சுட்டுங்கு. எதுவும் கடிச்சதோ, இல்லன்னா எங்கயும் விழுந்து தொலைஞ்சுதோ... தெரியல'
‘ம்..'
ரேடியோவுல பாட்டு ஓடிட்டிருக்கும். அந்தானி பாதி சட்டிச்சோறை மூடி எடுத்துக்கிட்டு நடப்பாவோ. மேலே ஏறணும். அங்கங்க ஒத்தையடி பாதை. ஏதாவது ஒரு பாதய புடிச்சு போவணும். போற எடத்துல மொயலு, கருவாலு புழுக்கையோ கெடக்கும். வசதி, இங்க மொயலுவோ ரொம்ப கெடக்குன்னு நினைச்சுக்கிடுவாம். கொஞ்சம் தூரம் போனதும் பெரிய ஆலமரம் இருக்கும். அந்த எடம் மட்டும் வெட்டையா இருக்கும். பக்கத்துல ஒரு மரம் கெடயாது. மைதானம் மாதிரி கெடக்கும். பக்கத்தூர்லயிருந்து மாட்டுக்கு வாரவனுவோ, மாட்டை மேய விட்டுட்டு, இங்ஙன உக்காந்துக்கிடுவானுவோ. தரையில தாய கட்டம்லாம் இருக்கும். கருக்கலாச்சுன்னா நரியோ கூடிரும். ஒரே கூச்சலுதாம்.
இதை தாண்டுனதும் பெரிய பாறை. வெள்ளைப் பாறைன்னு சொல்லுவாவோ. கீழ பள்ளம். பாத்துதாம் போவணும். மெதுவா போவாவோ. பாறைக்கு பின்னால செத்த நடந்தா காடு. கோங்கு, இலுப்பை மரம், கொட்டை மரம், புளிச்சி மரம், மஞ்சணத்தி மரம், வாவ மரம்னு எல்லா மரமும் பெருசு பெருசா வளந்து நிக்கும். இதுல இலுப்பை மரத்து பக்கம் எல்லாரும் போவ மாட்டாவோ. மரத்து பூவு மருந்துன்னாலும் செலருக்கு ஒத்துக்கிடாது. மூக்குல வச்சு ம்ம்முனு இழுத்தா, செலருக்கு மயக்க வந்துரும். அந்த மரம் இருக்குத பக்கம் போனாலே செலருக்கு ஒரு மாதிரி தலை சுத்துத மாதிரி ஆவும். பொன்னம்மா இந்த மரத்துக்கிட்ட கூட நடக்க மாட்டா.
அங்க இங்க ஆ ஊன்னு வெலங்குவோ சத்தம் கேக்கும். இதுக்காவ, ரெண்டு பேரும் சத்தம் போட்டு பேசிக்கிடுவாவோ. சத்தம் கேட்டா, செல வெலங்குவோ வராதுலா.
யாரும் போயி மரத்தயெல்லாம் வெட்ட மாட்டாவோ. வெட்டுனா கீழ பாரஸ்டுகாரன் எவனாவது பாத்துட்டாம்னா அயிரெத்தெட்டு கேள்வி கேப்பாம். அவனுவோ பச்சை மரக்கட்டையல பாத்துட்டாம்னா புடிச்சுட்டுப் போயிருவானுவோ. காய்ஞ்சு போயி, அங்க இங்க ஏகப்பட்டது முறிஞ்சு கெடக்கும். அந்த கிளைய வெட்டி, ஒரு இடத்துல குமிப்பாவோ. செல நேரத்துல எக்கச்சக்கமா கெடைக்கும் வெறவு.
கோங்கு வெறவுன்னா கொள்ளை வெல. கரும்பாளை மாதிரி இருக்கும் ஒவ்வொரு வெறவும். தூக்கி அடுப்புல வச்சா, பொகை சும்மா குப்புனு வரும். ரெண்டு வெறவு போதும் ஒரு பானை சோத்தை பொங்க. அந்த வெறவு கெடச்சா வசதிக்கு சந்தோஷத்தை பாக்கணுமே. மூதிக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும். இதை திருட்டுத்தனமாத்தான் கொண்டு போவணும். இதும் சந்தனமரம் மாதிரிதான். நடுவுல இந்த வெறவ வச்சு, மத்த வெறவு எல்லாத்தையும் சுத்திக்கெட்டிட்டு போனாத்தான் தெரியாது.
கீழ கெடக்குததே இவ்வளவுன்னா பெறவு எதுக்கு மரத்தை வெட்டணும். இருந்தாலும் வெட்டுவாம் வசதி. அஞ்சாறு மரத்துல கிளைய வெட்டி பொத்தைக்கு கீழ இருக்குத பள்ளத்துல போட்டுக்கிடுவாம். நாலஞ்சு நாளு கழிச்சு அதை எடுத்து கெட்டிட்டு வந்துருவாம். ஒரளவுக்குதான் தலையில வச்சு சொமந்துட்டு போவவும் முடியும். ஊர்ல யாராவது செலம்பாட்டத்துக்கு, இல்ல மாடு பத்த தார்க்குச்சிக்கு கம்பு வேணும்னு கேட்டா, மரத்தை தேடிப் போயி, குச்சியும் வெட்டிக்கிடுவாவோ.
இதுக்குள்ள பத்து பன்னெண்டு மணி ஆயிரும். கால்ல மட்டும் சிக்கலு இருந்தாலும் வசதி கொஞ்சம் பலமுள்ள பயதான். ரெண்டு பேருக்கும் தனி தனியா வெறவ கெட்டிட்டு, அவளுக்கு தூக்கி விடுவாம். நல்ல செம்மாடை வச்சுக்கிட்டு அதுக்கு மேல தூக்கி விடுவாம். இவன் தன்னாலயே முக்கி முக்கி தூக்கிக்கிடுவாம். அவளுக்கு வெறவு கொஞ்சம்தான் இருக்கும். அவ என்னதான் வசதி மாதிரி, நெறய சொமந்துட்டு போனாலும் ஊருக்குள்ள பொம்பளை கட்டுனா வெல கொறச்சலாத்தான் கேப்பானுவோ. அதுக்காவே அவ கொறச்சலாத்தான் சொமந்துட்டு வருவா.
நடப்பாவோ...
சொல்லுதேன்.
பெறவு ஊருகதை நடக்கும்.
‘புள்ளைக்கு கால்ல புண்ணு சொன்னியே வசதி, பரால்லாயா?'
‘ஆமா, நேத்துதான் ஆழ்வாக்குறிச்சி ஆஸ்பத்திரியில காட்டிட்டு வந்திருக்கா. டாக்டுரு என்ன மருந்தோ கொடுத்திருக்காரு'
‘பூச்சி கடியா?'
‘என்னன்னு தெரியுது?, கடலை எடுக்க போயிருக்கு. போன எடத்துல என்னமோ கடிச்சுட்டுங்கு. எதுவும் கடிச்சதோ, இல்லன்னா எங்கயும் விழுந்து தொலைஞ்சுதோ... தெரியல'
‘ம்..'
ரேடியோவுல பாட்டு ஓடிட்டிருக்கும். அந்தானி பாதி சட்டிச்சோறை மூடி எடுத்துக்கிட்டு நடப்பாவோ. மேலே ஏறணும். அங்கங்க ஒத்தையடி பாதை. ஏதாவது ஒரு பாதய புடிச்சு போவணும். போற எடத்துல மொயலு, கருவாலு புழுக்கையோ கெடக்கும். வசதி, இங்க மொயலுவோ ரொம்ப கெடக்குன்னு நினைச்சுக்கிடுவாம். கொஞ்சம் தூரம் போனதும் பெரிய ஆலமரம் இருக்கும். அந்த எடம் மட்டும் வெட்டையா இருக்கும். பக்கத்துல ஒரு மரம் கெடயாது. மைதானம் மாதிரி கெடக்கும். பக்கத்தூர்லயிருந்து மாட்டுக்கு வாரவனுவோ, மாட்டை மேய விட்டுட்டு, இங்ஙன உக்காந்துக்கிடுவானுவோ. தரையில தாய கட்டம்லாம் இருக்கும். கருக்கலாச்சுன்னா நரியோ கூடிரும். ஒரே கூச்சலுதாம்.
இதை தாண்டுனதும் பெரிய பாறை. வெள்ளைப் பாறைன்னு சொல்லுவாவோ. கீழ பள்ளம். பாத்துதாம் போவணும். மெதுவா போவாவோ. பாறைக்கு பின்னால செத்த நடந்தா காடு. கோங்கு, இலுப்பை மரம், கொட்டை மரம், புளிச்சி மரம், மஞ்சணத்தி மரம், வாவ மரம்னு எல்லா மரமும் பெருசு பெருசா வளந்து நிக்கும். இதுல இலுப்பை மரத்து பக்கம் எல்லாரும் போவ மாட்டாவோ. மரத்து பூவு மருந்துன்னாலும் செலருக்கு ஒத்துக்கிடாது. மூக்குல வச்சு ம்ம்முனு இழுத்தா, செலருக்கு மயக்க வந்துரும். அந்த மரம் இருக்குத பக்கம் போனாலே செலருக்கு ஒரு மாதிரி தலை சுத்துத மாதிரி ஆவும். பொன்னம்மா இந்த மரத்துக்கிட்ட கூட நடக்க மாட்டா.
அங்க இங்க ஆ ஊன்னு வெலங்குவோ சத்தம் கேக்கும். இதுக்காவ, ரெண்டு பேரும் சத்தம் போட்டு பேசிக்கிடுவாவோ. சத்தம் கேட்டா, செல வெலங்குவோ வராதுலா.
யாரும் போயி மரத்தயெல்லாம் வெட்ட மாட்டாவோ. வெட்டுனா கீழ பாரஸ்டுகாரன் எவனாவது பாத்துட்டாம்னா அயிரெத்தெட்டு கேள்வி கேப்பாம். அவனுவோ பச்சை மரக்கட்டையல பாத்துட்டாம்னா புடிச்சுட்டுப் போயிருவானுவோ. காய்ஞ்சு போயி, அங்க இங்க ஏகப்பட்டது முறிஞ்சு கெடக்கும். அந்த கிளைய வெட்டி, ஒரு இடத்துல குமிப்பாவோ. செல நேரத்துல எக்கச்சக்கமா கெடைக்கும் வெறவு.
கோங்கு வெறவுன்னா கொள்ளை வெல. கரும்பாளை மாதிரி இருக்கும் ஒவ்வொரு வெறவும். தூக்கி அடுப்புல வச்சா, பொகை சும்மா குப்புனு வரும். ரெண்டு வெறவு போதும் ஒரு பானை சோத்தை பொங்க. அந்த வெறவு கெடச்சா வசதிக்கு சந்தோஷத்தை பாக்கணுமே. மூதிக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும். இதை திருட்டுத்தனமாத்தான் கொண்டு போவணும். இதும் சந்தனமரம் மாதிரிதான். நடுவுல இந்த வெறவ வச்சு, மத்த வெறவு எல்லாத்தையும் சுத்திக்கெட்டிட்டு போனாத்தான் தெரியாது.
கீழ கெடக்குததே இவ்வளவுன்னா பெறவு எதுக்கு மரத்தை வெட்டணும். இருந்தாலும் வெட்டுவாம் வசதி. அஞ்சாறு மரத்துல கிளைய வெட்டி பொத்தைக்கு கீழ இருக்குத பள்ளத்துல போட்டுக்கிடுவாம். நாலஞ்சு நாளு கழிச்சு அதை எடுத்து கெட்டிட்டு வந்துருவாம். ஒரளவுக்குதான் தலையில வச்சு சொமந்துட்டு போவவும் முடியும். ஊர்ல யாராவது செலம்பாட்டத்துக்கு, இல்ல மாடு பத்த தார்க்குச்சிக்கு கம்பு வேணும்னு கேட்டா, மரத்தை தேடிப் போயி, குச்சியும் வெட்டிக்கிடுவாவோ.
இதுக்குள்ள பத்து பன்னெண்டு மணி ஆயிரும். கால்ல மட்டும் சிக்கலு இருந்தாலும் வசதி கொஞ்சம் பலமுள்ள பயதான். ரெண்டு பேருக்கும் தனி தனியா வெறவ கெட்டிட்டு, அவளுக்கு தூக்கி விடுவாம். நல்ல செம்மாடை வச்சுக்கிட்டு அதுக்கு மேல தூக்கி விடுவாம். இவன் தன்னாலயே முக்கி முக்கி தூக்கிக்கிடுவாம். அவளுக்கு வெறவு கொஞ்சம்தான் இருக்கும். அவ என்னதான் வசதி மாதிரி, நெறய சொமந்துட்டு போனாலும் ஊருக்குள்ள பொம்பளை கட்டுனா வெல கொறச்சலாத்தான் கேப்பானுவோ. அதுக்காவே அவ கொறச்சலாத்தான் சொமந்துட்டு வருவா.
நடப்பாவோ...
சொல்லுதேன்.
Saturday, January 12, 2008
வசதி - கேரக்டர் 7
''நண்டு நசுக்காலாம் வெறவு வெட்ட வந்துருதுவோ. இதுல நம்ம என்னத்த வெட்டி, வெலக்கி விக்க. ஒரு மண்ணும் நடக்க மாட்டக்கு. இந்த சொக்கன் மவனுக்கு என்ன வயசிருக்கும். அதுக்குள்ள வெறவுக்கு வந்துட்டாம். ஒல்லிமாடன் மவன் சரட்டுங்கதுக்குள்ள ரெண்டு கெட்டுக்கு வெட்டிருதாம் வெறவ. முன்னாலயெல்லாம் ஒரு நாதி வராது வெறவுக்கு. எத்தன பேரை கூப்டுருப்பேன்ங்க. இந்த மலையாளத்தா மவன் என்ன எக்காளமா பேசுவான் தெரியுமா? வெறவு வெட்டுததெல்லாம் ஒரு வேலயாம்னான். இப்பம் பாரு, தங்க பாண்டியன் மரக்கடையில மரத்த வெட்டிட்டு இருக்காம் கேட்டியா?"
பீடிய இழுத்துக்கிட்டு, பேசிக்கிட்டே முன்னால நடந்தாம் வசதி. அருவாளை இடுப்புல சொருவிட்டு வந்த பொன்னாமா ம்ம்முனு கேட்டுட்டே வந்தா. விரையலு நடுக்கிக்கிட்டு இருந்துச்சு. பொழுது இன்னும் செத்த நேரத்துல விடிஞ்சுரும். விடிஞ்சாலும் வெரையலு விடாது.
ஊர்லயிருந்து ஏழு மைலு இருக்கும் மலை. வயக்காட்டு வழியா போனா செத்த சீக்கிரமா போவலாம். காலையில நாலு மணிக்கே எந்திரிச்சு வெறவுக்கு போவணும். ஒரு நாளு விட்டு ஒரு நாளுதான் போவ முடியும். தெனமும் போனா அசதி தாங்க முடியாது. அடிச்சுப்போட்ட மாதிரி இருக்கும் உடலு. ஒரு நாளு போயிட்டு வந்தாலே காலு கையிலாம் விண்ணுனு வலிக்கும்.
பாவூர் பால்க்காரனுவதான் கணக்கு. நாலு மணிக்கே ரோட்டுல பேசிக்கிட்டே போவானுவோ. சள சளன்னு அவனுவோ பேச்சும், சிரிப்பும் ஊரையே உசுப்பிரும். அரவமில்லாம இருக்குத நேரம் பாத்தியலா. அதனால லேசா தும்முனா கூட பெரிய சத்தமா கேக்கும்.
அவனுவ சத்தம் வந்துச்சுன்னா முழிப்பு வந்துரும் வசதிக்கு. அந்தானி, வீட்டுல நீத்தண்ணிய தொண்டயில ஊத்திட்டு, தெக்கூட்டு பொன்னம்மாவ கூப்டுவாம். அதுக்குள்ள அவம் பொண்டாட்டி, தூக்கு சட்டியில தண்ணியும் சோறுமா வச்சு, வீட்டுக்கு வெளியில சாச்சுட்டு தூங்க போயிருவா. கொறட்டைய விட்டுட்டு தூங்கிட்டிருப்பா பொன்னம்மா. இவம் போயி, அவயம் போட்டதும் எந்திரிப்பா. அந்தானி மொவத்த கழுவிட்டு, தூக்குல சோத்தையும் நேத்தே அரச்சு வச்சிருந்த புளியங்கா தொவலையும் எடுத்துக்கிட்டு கௌம்பிருவா. இடுப்புல எப்பவும் வெத்தல. அவனுக்கு பீடி.
நடப்பாவோ. சின்ன வாய்க்கா, ரயிலு கேட்டு, பறையாங்கொளம், பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூருன்னு கண்ணை மூடிட்டு போனா ரெண்டு மூணு மணிநேரத்துல மலை. அப்பலாம் அங்க போவ பஸ்சு கெடயாது. நடதாம். பறையாங்கொளத்து கரையில ரோடு போட, சல்லி போட்டுருந்தாவோ. சல்லிய போட்டு ரொம்ப நாளாச்சு. ஒதுக்கி வச்சிருந்ததெல்லாம் சைக்கிளுவோ போயி போயி ரோடு பூரா கருங்கல்லு பூவு மாதிரி நெறஞ்சு கெடந்தது. வசதிக்கு என்னன்னா ரெண்டு கால்லயும் பித்து. செருப்பில்லாம நடக்க முடியாது. கல்லுகாட்டுல நடக்கணும்னா செருப்பு போட்டுருந்தா கூட காலு கூசும். கெந்தி கெந்திதான் நடப்பாம். இந்த எடத்துக்கு வந்துட்டாம்னா என்னதாம் ஓரமா நடந்தாலும் அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும்.
சின்ன பயலுவோ அவன கண்டா,‘பொத்தியாம் பொத்தியாம்'னு எடக்கு பண்ணுவானுவோ. இவன், ‘செவுட்டுல போட்டம்னா’ ன்னுட்டு போவாம். வேறன்ன செய்ய முடியும்? இல்லததயா சொல்லுதானுவோ.
பூவங்குறிச்சி தாண்டுனதும் கோயில் பிள்ளை தோப்பு இருக்கு. பெரிய தோப்பு. சின்னதா கேட்டு மாதிரி அதுல போட்டுருப்பாரு. அதுக்கு பக்கத்துலயே சின்ன தொண்டு. ரோட்டோடி போவாம, இதுக்குள்ள ஆமை மாதிரி போயி நடந்தா, மலை பக்கம். தோப்புக்குள்ள போவும் போது சத்தம் போடமத்தான் போவணும். கோயில்பிள்ளைக்கு அறுவது வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்துட்டாலும் மனுஷனுக்கு ஆசை பொறுக்கல.
ஒருத்திய தொசுக்கா வச்சிருந்தாரு. அவளுக்கு இங்கதான் குச்சிலு. பம்பு செட்டு கெணத்துல பக்கத்துல இருக்குத குச்சிலை தாண்டிதான் போவணும். செல நேரத்துல பிள்ளை, இங்க வந்துதான் படுத்துக்கெடப்பாரு. யாராவது நடக்குத சத்தம் கேட்டுதுன்னா, கண்டமேனிக்கு ஏசிப்போடுவாரு.
‘‘இதுயென்ன தெருவா? இப்படிக்கூடிப் போறியோ... இப்டி வரக்கூடாதுன்னுட்டுதான் கேட்டு போட்டு வச்சிருக்கேன். அதையும் தாண்டி வந்தியன்னா என்ன அர்த்தம்? இனும வாங்க உங்களை... நாயை கெட்டி போட்டாத்தாம் சரிபடுவியோ’ம்பாரு.
கூட இருக்குத தொசுக்கு, ‘இப்பம் என்னா போயிட்டு போவுதுவோ’ம்பா. அவ சொல்லுததெல்லாம் கேக்க மாட்டாரு கிழவரு.
இதனால, சத்தம் போடாமதான் போவணும். போற வழியில ஏகப்பட்ட மா மரம். மாங்கா காய்ச்சி தொங்கும். கிளி மூக்கு காயை பாத்தா, வசதிக்கு நாக்குல எச்சி வந்துரும். யாருமில்லனா, நாலஞ்சை பறிச்சு, சத்தம்போடாம சாரத்துக்குள்ள போட்டுட்டு, தோப்பு தாண்டுனதும் கடிச்சு தின்னுட்டு போவாம்.
இந்த தோப்பை தாண்டுனதும் ஆறு வந்துரும். முட்டுக்குத்தான் தண்ணிங்கதால இறங்கி அக்கறைக்கு போவாவோ. அக்கரையில நாவப்பழ மரம் நிக்கும். கீழ விழுந்து கெடக்குத பொன்னம்மா பொறுக்கி சேலை ஓரத்துல வச்சுக்கிடுவா. ஒண்ணு ஒண்ணா வாயில போட்டு ஒதுப்பிட்டு நடப்பாவோ.
அந்தானி நடந்தா...
சொல்லுதேன்.
பீடிய இழுத்துக்கிட்டு, பேசிக்கிட்டே முன்னால நடந்தாம் வசதி. அருவாளை இடுப்புல சொருவிட்டு வந்த பொன்னாமா ம்ம்முனு கேட்டுட்டே வந்தா. விரையலு நடுக்கிக்கிட்டு இருந்துச்சு. பொழுது இன்னும் செத்த நேரத்துல விடிஞ்சுரும். விடிஞ்சாலும் வெரையலு விடாது.
ஊர்லயிருந்து ஏழு மைலு இருக்கும் மலை. வயக்காட்டு வழியா போனா செத்த சீக்கிரமா போவலாம். காலையில நாலு மணிக்கே எந்திரிச்சு வெறவுக்கு போவணும். ஒரு நாளு விட்டு ஒரு நாளுதான் போவ முடியும். தெனமும் போனா அசதி தாங்க முடியாது. அடிச்சுப்போட்ட மாதிரி இருக்கும் உடலு. ஒரு நாளு போயிட்டு வந்தாலே காலு கையிலாம் விண்ணுனு வலிக்கும்.
பாவூர் பால்க்காரனுவதான் கணக்கு. நாலு மணிக்கே ரோட்டுல பேசிக்கிட்டே போவானுவோ. சள சளன்னு அவனுவோ பேச்சும், சிரிப்பும் ஊரையே உசுப்பிரும். அரவமில்லாம இருக்குத நேரம் பாத்தியலா. அதனால லேசா தும்முனா கூட பெரிய சத்தமா கேக்கும்.
அவனுவ சத்தம் வந்துச்சுன்னா முழிப்பு வந்துரும் வசதிக்கு. அந்தானி, வீட்டுல நீத்தண்ணிய தொண்டயில ஊத்திட்டு, தெக்கூட்டு பொன்னம்மாவ கூப்டுவாம். அதுக்குள்ள அவம் பொண்டாட்டி, தூக்கு சட்டியில தண்ணியும் சோறுமா வச்சு, வீட்டுக்கு வெளியில சாச்சுட்டு தூங்க போயிருவா. கொறட்டைய விட்டுட்டு தூங்கிட்டிருப்பா பொன்னம்மா. இவம் போயி, அவயம் போட்டதும் எந்திரிப்பா. அந்தானி மொவத்த கழுவிட்டு, தூக்குல சோத்தையும் நேத்தே அரச்சு வச்சிருந்த புளியங்கா தொவலையும் எடுத்துக்கிட்டு கௌம்பிருவா. இடுப்புல எப்பவும் வெத்தல. அவனுக்கு பீடி.
நடப்பாவோ. சின்ன வாய்க்கா, ரயிலு கேட்டு, பறையாங்கொளம், பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூருன்னு கண்ணை மூடிட்டு போனா ரெண்டு மூணு மணிநேரத்துல மலை. அப்பலாம் அங்க போவ பஸ்சு கெடயாது. நடதாம். பறையாங்கொளத்து கரையில ரோடு போட, சல்லி போட்டுருந்தாவோ. சல்லிய போட்டு ரொம்ப நாளாச்சு. ஒதுக்கி வச்சிருந்ததெல்லாம் சைக்கிளுவோ போயி போயி ரோடு பூரா கருங்கல்லு பூவு மாதிரி நெறஞ்சு கெடந்தது. வசதிக்கு என்னன்னா ரெண்டு கால்லயும் பித்து. செருப்பில்லாம நடக்க முடியாது. கல்லுகாட்டுல நடக்கணும்னா செருப்பு போட்டுருந்தா கூட காலு கூசும். கெந்தி கெந்திதான் நடப்பாம். இந்த எடத்துக்கு வந்துட்டாம்னா என்னதாம் ஓரமா நடந்தாலும் அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும்.
சின்ன பயலுவோ அவன கண்டா,‘பொத்தியாம் பொத்தியாம்'னு எடக்கு பண்ணுவானுவோ. இவன், ‘செவுட்டுல போட்டம்னா’ ன்னுட்டு போவாம். வேறன்ன செய்ய முடியும்? இல்லததயா சொல்லுதானுவோ.
பூவங்குறிச்சி தாண்டுனதும் கோயில் பிள்ளை தோப்பு இருக்கு. பெரிய தோப்பு. சின்னதா கேட்டு மாதிரி அதுல போட்டுருப்பாரு. அதுக்கு பக்கத்துலயே சின்ன தொண்டு. ரோட்டோடி போவாம, இதுக்குள்ள ஆமை மாதிரி போயி நடந்தா, மலை பக்கம். தோப்புக்குள்ள போவும் போது சத்தம் போடமத்தான் போவணும். கோயில்பிள்ளைக்கு அறுவது வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்துட்டாலும் மனுஷனுக்கு ஆசை பொறுக்கல.
ஒருத்திய தொசுக்கா வச்சிருந்தாரு. அவளுக்கு இங்கதான் குச்சிலு. பம்பு செட்டு கெணத்துல பக்கத்துல இருக்குத குச்சிலை தாண்டிதான் போவணும். செல நேரத்துல பிள்ளை, இங்க வந்துதான் படுத்துக்கெடப்பாரு. யாராவது நடக்குத சத்தம் கேட்டுதுன்னா, கண்டமேனிக்கு ஏசிப்போடுவாரு.
‘‘இதுயென்ன தெருவா? இப்படிக்கூடிப் போறியோ... இப்டி வரக்கூடாதுன்னுட்டுதான் கேட்டு போட்டு வச்சிருக்கேன். அதையும் தாண்டி வந்தியன்னா என்ன அர்த்தம்? இனும வாங்க உங்களை... நாயை கெட்டி போட்டாத்தாம் சரிபடுவியோ’ம்பாரு.
கூட இருக்குத தொசுக்கு, ‘இப்பம் என்னா போயிட்டு போவுதுவோ’ம்பா. அவ சொல்லுததெல்லாம் கேக்க மாட்டாரு கிழவரு.
இதனால, சத்தம் போடாமதான் போவணும். போற வழியில ஏகப்பட்ட மா மரம். மாங்கா காய்ச்சி தொங்கும். கிளி மூக்கு காயை பாத்தா, வசதிக்கு நாக்குல எச்சி வந்துரும். யாருமில்லனா, நாலஞ்சை பறிச்சு, சத்தம்போடாம சாரத்துக்குள்ள போட்டுட்டு, தோப்பு தாண்டுனதும் கடிச்சு தின்னுட்டு போவாம்.
இந்த தோப்பை தாண்டுனதும் ஆறு வந்துரும். முட்டுக்குத்தான் தண்ணிங்கதால இறங்கி அக்கறைக்கு போவாவோ. அக்கரையில நாவப்பழ மரம் நிக்கும். கீழ விழுந்து கெடக்குத பொன்னம்மா பொறுக்கி சேலை ஓரத்துல வச்சுக்கிடுவா. ஒண்ணு ஒண்ணா வாயில போட்டு ஒதுப்பிட்டு நடப்பாவோ.
அந்தானி நடந்தா...
சொல்லுதேன்.
Wednesday, January 9, 2008
ஆகாயத்தில் சு.மு
ஆச்சர்யமாகத்தான் இருந்தது நண்பன் சுடலைமுத்து சொல்லும்போது. வட இந்திய சேனல் ஒன்று வைத்த போட்டியில் சு.முத்து வெற்றிபெற்றதால் மும்பை செல்லும் வாய்ப்பு. அங்கு இந்திநடிகர் ஆமிர்கானுடன் விருந்துக்கு ஏற்பாடு. அவனோடு ஒருவரை அழைத்துவர அனுமதி. அவன் சென்னையில், அறையில் இருக்கிறான். குடும்பம் ஊரில் இருப்பதால் என்னை அழைத்துப்போவதாகச் சொன்னான். கேட்டதும் குபுக்கென்று வியர்வை. காரணம், அவனிடம் அடிக்கடி புலம்பியிருக்கிறேன் எனது பயங்காட்டும் கனவு பற்றி.
இரவில், வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மகன்களுக்கு விமானத்தை காட்டி, 'அதுல மாமா போறார்டா; இதுல ஆச்சி போறாடா' என்று ஏகத்துக்கும் வகுப்பெடுத்த இரவுகளில், நடுவானில் நான் பயணம் செய்யும் விமானம் இரண்டாக பிளந்து, எல்லோரும் கீழ விழுவது போலவும், ஏழெட்டு பாராஷூட்களும் ஸ்பைடர் மேன் மாதிரி பறந்து எல்லோரையும் காப்பாற்றுவது போலவுமான கனவு தினமும் வரத் தொடங்கி விட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை.
இந்தக் கனவு கூத்தை நண்பன் சு.முத்துவிடம் சொல்லித் தொலைத்ததிலிருந்து அவனுக்கும் விமான பயணம் பற்றிய பயம் அதிகரித்திருந்தது. இப்படியான பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் இப்படியொரு வாய்ப்பு.
என்ன செய்யலாம் என்று சு.மு. கேட்டபோது, 'போகலாம்' என்றேன். 'கற்றது தமிழ்' ஆனந்தி மாதிரி, 'நெசமாத்தான் சொல்றியா?' என்றான். 'ஏலேய் இதை விட்டா, எந்த ஜென்மத்துக்கும் ப்ளைட்ல போக முடியாதுல' என்று ஒரு பாட்டில் பீரைக்குடித்துக்கொண்டு சொன்னதும், ஒ.கே என்றான்.
நாளை காலை 9 மணிக்கு ப்ளைட். ஏற்கனவே விமான பயணம் செய்த புண்ணியவான்கள், ' காலையில 7.30க்கு ஏர்போர்ட் போயிருடே. நிறைய செக்கிங் இருக்கும். தீப்பெட்டி கொண்டு போவாத; சிகரெட் பாக்கெட்டை கண்ணுல காட்டாதே...' என்று எக்கச்சக்கமாகக் கிளப்பிவிட்டதால் பாதி புளி நள்ளிரவிலேயே கரைய ஆரம்பித்துவிட்டது.
இதற்குள் நெட்டில் மேய்ந்து விமான சீட்கள், அங்குள்ள நடைமுறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டோம்.
நண்பர்கள் சொன்னது போல, 7 மணிக்கே ஏர்போர்ட்டில் ஆஜர். போனதும்தான் டொமஸ்டிக், இண்டர்நேஷனல் என இரண்டு பகுதிகள் இருப்பது தெரிந்தது.
சர்புர்ரென போகும் அழகழகான கார்கள் எங்களுக்குள் ஏகப்பட்ட தாழ்வுணர்ச்சியை தந்திருந்தன. யாரிடம் போய் கேட்க என்பதில் தடுமாறி, இறுமிக்கொண்டே போன வயதான ஒருவரிடம் பேசினேன்.
'இந்தியாக்குள்ள போறதுக்கெல்லாம் டொமஸ்டிக்குனு சொல்வாங்க. வெளிநாடு போனா இண்டர்நேஷல் ஏர்போர்ட் போகணும். நீங்க கீழ்பக்கமா இருக்கிற வழியா போங்க' .
ஆளுக்கு ஒரு ஹேண்ட் பேக். தோளில் போட்டுக்கொண்டு நடந்தபோது, வாசலில் இருந்த போலீஸ் எங்கள் இருவரையும் உற்று உற்று பார்த்தார். டிக்கெட்டை காட்டினோம். உள்ளே போகச் சொன்னார்.
ஜெட் ஏர்வேஸ் போர்ட் இருந்த இடத்தில், ஊதா நிற ஆடையிலிருந்த பெண்ணிடம், ஈ டிக்கெட்டை கொடுத்ததும், 'ஜன்னல் சீட் வேணுமா?' என்றார். (புதுசா வர்றோம்னு இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?) இரண்டு பேருமே ஒரே ராகத்தில் தலையாட்ட, 'ஒரு சீட்தான்' என்று செல்லமாகச் சொல்லிவிட்டு தந்தார். போனசாக ஜில் சிரிப்பு.
ஹேண்ட் பேக்குக்கு ஒரு டேக். அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல் முழித்தோம். எனக்கு முன்னால் டிக்கெட் வாங்கியவர்கள் செக்கிங்குக்குள் சென்று கொண்டிருந்தனர். அங்கிருந்த போலீசை கண்டதும் கைகள் ஆட ஆரம்பித்தது. நான்கு நாட்களுக்கு முன் ஷூவுக்குள் போதை பொருள் வைத்திருந்ததாக இரண்டு பேரை அமுக்கியிருந்தனர்.
அப்படி ஏதும் இல்லையென்றாலும், 'ஏன் சாக்ஸ் போடலை, ஷாக்ஸ் ஏன் இவ்வளவு ஸ்மெல் அடிக்கு... என்பதுபோன்ற கேள்விகளை கேட்டால்...?
பேக்கை ஸ்கேன் பண்ண வைத்துவிட்டு, எதிரில் சின்ன மேடை மாதிரி இருந்த இடத்தில் 'என்னைய சுட்டுராதீங்கப்பா' என வில்லன்கள் நிற்பதுபோல கையை விரித்துக்கொண்டு நின்றேன். மேலிருந்து கீழேவரை ஒரு தடவு. இறங்கிவந்துவிட்டேன்.
சு.முத்துவை பார்த்தால்...திக்கென்றது. அவனை தனியாக உக்கார வைத்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். கையில் ஒரு பொட்டலம்.
என்ன ஏதென்று பதட்டத்தோடு போனேன்.
'ஹெராயினா?'என்றார் ஒரு போலீஸ். 'இல்லை சார் பாண்ட்ஸ் பவுடர்தான்' என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தான் சு.மு.
அப்புறம் அதை முகர்ந்து பார்த்து இன்னும் நாலு போலீஸ் வந்து, 'ஆமா இது முகப்பவுடர்தான்' என்பதை உறுதி செய்தபின் விட்டார்கள் அவனை.
உள்ளே போனதும் பாத்ரூம் அருகில் கூட்டிப்போய், பொடரியில் போட்டேன்.
'எதுக்கு இந்தப் பவுடரை கொண்டு வந்தே'
'பின்ன ஆமீர்கானை பார்க்க போறோம். போற இடத்துல இதை எங்க போய் வாங்கறது? அதான்...'
நான் பரவாயில்லை என்று தோன்றியது. அப்புறம் 9 மணி பிளைட் 9.30க்கு என்று ஒரு அறிவிப்பு. இதற்குள் கிங்பிஷர், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானங்களுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அழகழகான பஸ்கள், பயணிகளை விமானம் நிற்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தன.
எங்களுக்கு நேரம் இருக்கிறது என்பதால், கண்ணாடி கதவு வழியே விமானங்கள் ஓடுபாதையில் செல்லுவதையும், மேலே டேக்ஆப் ஆவதையும் ஆ வென்று பாத்துக்கொண்டிருந்தேன்.
சு.மு என் கனவை கலைத்து, 'ஏலே... அங்க பாரு சினேகா' என்றான். குப்பென்று திரும்பி எங்கே எங்கே என்று தேடினேன். தாய்க்குலத்துடன் சினேகா. சு.மு.வுக்கு வாயெல்லாம் பல்.
'ஏலே பேசுவோமா?'
'ச்சீ...இது என்ன மாதிரியான இடம்...இங்கெல்லாம் டீசெண்ட் பார்ட்டிங்க இருக்காங்க. அவங்ககிட்ட போய் வழிஞ்சுக்கிட்டு நின்னா நல்லா இருக்காது.பாத்துட்டு கண்டுக்காம நிக்கணும்' என்று சொல்லிவிட்டு எனக்குள் இருந்த ஆசையையும் கொன்றுவிட்டு திரும்பிக்கொண்டேன்.
நினைத்த மாதிரியே அவரை அங்கு யாரும் சீண்ட வில்லை. சிறிது நேரத்தில் சு.மு திரும்பி, 'ஏலே சித்ரா' என்றான்.
'எந்த தெரு சித்ரா' என்று பார்த்தால் பாடகி சித்ரா. ஐதராபாத்துக்கு போகிறார்கள் என்பது தெரிந்தது. அந்த பிளைட் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் வாயில் வழியாக உள்ளே நுழைந்து... ம்ஹூம்.
அப்புறம் ஜெட் ...மும்பை என்று அரைகுறையாக காதில் விழுந்ததை வைத்து நான்காம் நம்பர் கேட்டுக்கு வரிசையில் நின்றோம். அங்கு ஒரு செக்கப். பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். அழகழகான பஸ்கள். உட்கார நான்கு சீட்தான். எல்லாரும் நின்று கொண்டு. இதற்குள் ஒருவர், 'எக்ஸ்க்யூஸ்மி, ஐ மிஸ்டு மை கேஸ் பேக். உங்க பேக் கூட வந்திருக்கா பாருங்களேன்' என்றார்.
எல்லோரும், 'இதுவா பாருங்க, அதுவா பாருங்க' என்று கேட்டுவிட்டு, 'நீங்க எங்க போட்டீங்க, எங்க உக்காந்திருந்தீங்க, எப்படி உக்கார்ந்திருந்தீங்க... என்று ஏகப்பட்ட கேள்விகளைப் போட்டு வாங்கியதில் அவருக்கு கேஸ் பேக் மறந்தே போயிருக்கும். பிறகு எப்படியோ கிடைத்தது என்பது மும்பை போய் இறங்கிய பிறகுதான் தெரிந்தது.
இலேசாக மழை ஆரம்பித்துவிட்டது.
பஸ்சில் இருந்து ஒவ்வொருவராக இறங்கி, அங்கே டிக்கெட்டை காட்டி விமானத்துக்குள் ஏறினார்கள். வாசலில் ஓவராக மேக்கப் போட்டிருந்த விமான பணிப்பெண், 'குட்மார்னிங் சார்' என்றார்.
தலையை ஆட்டிக்கொண்டே உள்ளே இருந்த பணிப்பெண்ணிடம், 'இந்த சீட்...'
அவர் வாங்கி பார்த்துவிட்டு இடம் காண்பித்தார். சு.மு. ஓடிப்போய் ஜன்னல் இருக்கையை பிடுங்கி கொண்டான். சண்டை போட்டு அதில் உக்கார ஆசைதான். டீசென்ஸி மெயிண்டென் பண்ண வேண்டாமா?
சீ்ட் என்னமோ... நெட்டில் பார்த்ததெல்லாம் இல்லை. அதெல்லாம் பிசினஸ் கிளாசாம். நம்மூர் டவுண்பஸ் சீட் மாதிரி இந்த பக்கம் மூன்று. அந்தப் பக்கம் மூன்று சீட். காலை கொஞ்சம் நீட்டலாம் என்றால் எதிர் சீட்டில் முட்டி தட்டும். விமான ஜன்னல் கூட என் வீட்டு ஜன்னல் மாதிரி விசாலமாக இருக்கும் என்று பார்த்தால்... தம்மாத்துண்டு. ஒரு சாண் அளவுதான்.
'எல்லாரும் பெல்ட் போட்டுக்குங்கப்பா' என்று அறிவிப்பு. அதை எப்படி போட வேண்டும் என்று தெரியவில்லை. மூன்றாவதாக இருந்தவர் என்ன செய்கிறாரோ அதையே பின்பற்றினோம்.
ஓடு பாதையில் லேசாக விமானம் ஓடியதும் மனதுக்குள் பட்டாம்பூச்சி. பிறகு விர்ர்ரென்று வேகமாகி...ஜிவ்வ்வ்... மேலே மேலே...
வயிறு குமட்டும், தலைகீழ தொங்குவோம் என்று பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. பறந்தோம். சு.மு. என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு.
'நல்லாத்தாம்ல இருக்கு'.
மேலே போகப் போக ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கீழே போய்க்கொண்டிருந்தது. பிறகு மேகத்துக்குள் நுழைந்து, அதுக்கும் மேல போக, மேகம் மட்டும்தான் தெரிந்தது. எங்காவது வெட்டையாக மேகத்தின் வழியாக சின்ன சின்னதாக லேண்ட்ஸ்கேப் மட்டும் தெரிந்தது.
பக்கத்தில் இருந்த மூன்றாவது பார்ட்டி உம்மென்றிருந்தார். பணிப்பெண்கள் ஏதாவது கொண்டு வந்து நீட்டினால், 'நோ' என்றார்.
அவர் சொல்லிவிட்டாரே என்று நாங்களும் 'நோ' சொன்னோம். அப்புறம் டிபன் கொடுத்தார்கள். இதையும் இவர் நோ சொல்லிவிடுவாரோ என்று பயந்தோம். நல்லவேளை சொல்லவில்லை. எதிரிலிருந்து சீட்டின் பின்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு டிரேயை, எதையோ திருகி இழுத்தார். அது டேபிள் மாதிரி ஆனது. நாங்களும்.
'வெஜ் ஆர் நான்வெஜ்'
சு.மு.க்கு 'நான் வெஜ்'. எனக்கு வெஜ்.
சாப்பிட்டுக்கொண்டே கேட்டான் சு.மு.
'ஏலே ஏர்ஹோஸ்டஸ்னா நான் என்னமோ நெனச்சேன். இங்க என்னடான்னா ஹோட்டல் சர்வர் வேலைதான் போலுக்கு'
இவன் சொன்னதும் மூன்றாவது சீட் பார்ட்டி எங்களைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
சாப்பிட்டு முடித்ததும் உச்சியில் பறந்த விமானம் தடக் தடக்... அண்ணாசாலை ஆட்டோ பயணம் மாதிரி லேசான குலுங்கல். உடனே ஏதோ அறிவிப்பு. புரியவில்லை. சு.மு. கலவரமாகி, 'ஒண்ணுமில்லைல, விழுந்தா நம்ம கூட இவ்ளோ பேரு இருக்காங்க'. என்றான்.
'மவனே...இப்பலாம் அதை மறந்து உக்காந்திருக்கேன்... மூஞ்சியிலேயே குத்துனம்னா...'
எதிரில் சீட்டின் பின்பக்கமிருந்த மினி மானிடரில் மியூசிக். விமானம் செல்லும் பாதை போன்றவற்றை தொடு திரையில் பார்க்கலாம். மூன்றாவது சீட் பார்ட்டி, அங்கிருந்த ஹெட்போனை சீட்டிலிருந்த கைப்பிடி பின்னில் இணைத்து, காதில் மாட்டிக்கொண்டார். நாங்களும் அப்படியே.
பறத்தல் சுகமாகத்தான் இருந்தது. 1.30 மணி நேரம் ஆன பிறகு, வி்மானம் மும்பை அருகே வந்துவிட்டிருந்தது. இன்ஜினை விமானி அணைத்துவிட்டாரோ என்னவோ ஒரு சத்தமுமில்லை.
திரும்பவும், 'சீட் பெட்டை போடுங்கப்பா' அறிவிப்பு.
கொஞ்சம் அந்த பக்கம் இந்த பக்கம் சாய்ந்தது. தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறும்போது காத்தடித்தால் ஆடும் மரம்போல இருந்தது.
விமானப் பணிப்பெண், சாக்லெட் பாக்ஸை திறந்து ஒவ்வொருவரிடமாக நீட்டிக்கொண்டிருந்தார். வழக்கம்போல மூன்றாவது சீட் பார்ட்டி 'நோ'. சு.மு. அவரை முறைத்துக்கொண்டே, பக்கென்று பாக்ஸுக்குள் கைவிட்டு ஒரு குத்தை அள்ள, அவன் கையிலேயே போட்டு, ஒண்ணே ஒண்ணை எடுத்தேன்.
'ப்ளைட்ல சரக்கு தருவாங்கன்னு பிச்சமுத்து சொன்னாம்லா' என்றான் சு.மு.
'ஆமா'
'தரலையே'
'அது வெளிநாடு போனாத்தானாம்'.
திடீரென்று விமானம் கீழே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியதை உணரமுடிந்தது. சு.மு.வைத் தள்ளிக்கொண்டு ஜன்னலை எட்டிப்பார்த்தேன். முதலில் கடல். மேலிருந்து பார்க்க எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது. நெருக்கடியான கட்டிடங்கள். இறங்கி இறங்கி... மும்பை சத்ரபதி விமான நிலையம்.
த்ரில்லிங்காக இருந்தது. சீட்டை விட்டு இறங்கும் போது காது ஜவ்வு கிழிந்துவிடுவது மாதிரி வலி.
'போனதுமே பஞ்சு வாங்கி காதுல வச்சுக்கோ' வை மறந்து போனேன். கையை விட்டு குடைந்துகொண்டே இறங்கும் போது, மூன்றாவது சீட் பார்ட்டியை பார்த்து ஒருவர், 'ஹலோ சார், எப்படியிருக்கீங்க. அடுத்தப் படம் போய்க்கிட்டிருக்கா' என்றார்.
இயக்குனர் சிம்புதேவனாம்.
சொல்லவே இல்லை.
இரவில், வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மகன்களுக்கு விமானத்தை காட்டி, 'அதுல மாமா போறார்டா; இதுல ஆச்சி போறாடா' என்று ஏகத்துக்கும் வகுப்பெடுத்த இரவுகளில், நடுவானில் நான் பயணம் செய்யும் விமானம் இரண்டாக பிளந்து, எல்லோரும் கீழ விழுவது போலவும், ஏழெட்டு பாராஷூட்களும் ஸ்பைடர் மேன் மாதிரி பறந்து எல்லோரையும் காப்பாற்றுவது போலவுமான கனவு தினமும் வரத் தொடங்கி விட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை.
இந்தக் கனவு கூத்தை நண்பன் சு.முத்துவிடம் சொல்லித் தொலைத்ததிலிருந்து அவனுக்கும் விமான பயணம் பற்றிய பயம் அதிகரித்திருந்தது. இப்படியான பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் இப்படியொரு வாய்ப்பு.
என்ன செய்யலாம் என்று சு.மு. கேட்டபோது, 'போகலாம்' என்றேன். 'கற்றது தமிழ்' ஆனந்தி மாதிரி, 'நெசமாத்தான் சொல்றியா?' என்றான். 'ஏலேய் இதை விட்டா, எந்த ஜென்மத்துக்கும் ப்ளைட்ல போக முடியாதுல' என்று ஒரு பாட்டில் பீரைக்குடித்துக்கொண்டு சொன்னதும், ஒ.கே என்றான்.
நாளை காலை 9 மணிக்கு ப்ளைட். ஏற்கனவே விமான பயணம் செய்த புண்ணியவான்கள், ' காலையில 7.30க்கு ஏர்போர்ட் போயிருடே. நிறைய செக்கிங் இருக்கும். தீப்பெட்டி கொண்டு போவாத; சிகரெட் பாக்கெட்டை கண்ணுல காட்டாதே...' என்று எக்கச்சக்கமாகக் கிளப்பிவிட்டதால் பாதி புளி நள்ளிரவிலேயே கரைய ஆரம்பித்துவிட்டது.
இதற்குள் நெட்டில் மேய்ந்து விமான சீட்கள், அங்குள்ள நடைமுறைகள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டோம்.
நண்பர்கள் சொன்னது போல, 7 மணிக்கே ஏர்போர்ட்டில் ஆஜர். போனதும்தான் டொமஸ்டிக், இண்டர்நேஷனல் என இரண்டு பகுதிகள் இருப்பது தெரிந்தது.
சர்புர்ரென போகும் அழகழகான கார்கள் எங்களுக்குள் ஏகப்பட்ட தாழ்வுணர்ச்சியை தந்திருந்தன. யாரிடம் போய் கேட்க என்பதில் தடுமாறி, இறுமிக்கொண்டே போன வயதான ஒருவரிடம் பேசினேன்.
'இந்தியாக்குள்ள போறதுக்கெல்லாம் டொமஸ்டிக்குனு சொல்வாங்க. வெளிநாடு போனா இண்டர்நேஷல் ஏர்போர்ட் போகணும். நீங்க கீழ்பக்கமா இருக்கிற வழியா போங்க' .
ஆளுக்கு ஒரு ஹேண்ட் பேக். தோளில் போட்டுக்கொண்டு நடந்தபோது, வாசலில் இருந்த போலீஸ் எங்கள் இருவரையும் உற்று உற்று பார்த்தார். டிக்கெட்டை காட்டினோம். உள்ளே போகச் சொன்னார்.
ஜெட் ஏர்வேஸ் போர்ட் இருந்த இடத்தில், ஊதா நிற ஆடையிலிருந்த பெண்ணிடம், ஈ டிக்கெட்டை கொடுத்ததும், 'ஜன்னல் சீட் வேணுமா?' என்றார். (புதுசா வர்றோம்னு இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?) இரண்டு பேருமே ஒரே ராகத்தில் தலையாட்ட, 'ஒரு சீட்தான்' என்று செல்லமாகச் சொல்லிவிட்டு தந்தார். போனசாக ஜில் சிரிப்பு.
ஹேண்ட் பேக்குக்கு ஒரு டேக். அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல் முழித்தோம். எனக்கு முன்னால் டிக்கெட் வாங்கியவர்கள் செக்கிங்குக்குள் சென்று கொண்டிருந்தனர். அங்கிருந்த போலீசை கண்டதும் கைகள் ஆட ஆரம்பித்தது. நான்கு நாட்களுக்கு முன் ஷூவுக்குள் போதை பொருள் வைத்திருந்ததாக இரண்டு பேரை அமுக்கியிருந்தனர்.
அப்படி ஏதும் இல்லையென்றாலும், 'ஏன் சாக்ஸ் போடலை, ஷாக்ஸ் ஏன் இவ்வளவு ஸ்மெல் அடிக்கு... என்பதுபோன்ற கேள்விகளை கேட்டால்...?
பேக்கை ஸ்கேன் பண்ண வைத்துவிட்டு, எதிரில் சின்ன மேடை மாதிரி இருந்த இடத்தில் 'என்னைய சுட்டுராதீங்கப்பா' என வில்லன்கள் நிற்பதுபோல கையை விரித்துக்கொண்டு நின்றேன். மேலிருந்து கீழேவரை ஒரு தடவு. இறங்கிவந்துவிட்டேன்.
சு.முத்துவை பார்த்தால்...திக்கென்றது. அவனை தனியாக உக்கார வைத்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். கையில் ஒரு பொட்டலம்.
என்ன ஏதென்று பதட்டத்தோடு போனேன்.
'ஹெராயினா?'என்றார் ஒரு போலீஸ். 'இல்லை சார் பாண்ட்ஸ் பவுடர்தான்' என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தான் சு.மு.
அப்புறம் அதை முகர்ந்து பார்த்து இன்னும் நாலு போலீஸ் வந்து, 'ஆமா இது முகப்பவுடர்தான்' என்பதை உறுதி செய்தபின் விட்டார்கள் அவனை.
உள்ளே போனதும் பாத்ரூம் அருகில் கூட்டிப்போய், பொடரியில் போட்டேன்.
'எதுக்கு இந்தப் பவுடரை கொண்டு வந்தே'
'பின்ன ஆமீர்கானை பார்க்க போறோம். போற இடத்துல இதை எங்க போய் வாங்கறது? அதான்...'
நான் பரவாயில்லை என்று தோன்றியது. அப்புறம் 9 மணி பிளைட் 9.30க்கு என்று ஒரு அறிவிப்பு. இதற்குள் கிங்பிஷர், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானங்களுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அழகழகான பஸ்கள், பயணிகளை விமானம் நிற்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தன.
எங்களுக்கு நேரம் இருக்கிறது என்பதால், கண்ணாடி கதவு வழியே விமானங்கள் ஓடுபாதையில் செல்லுவதையும், மேலே டேக்ஆப் ஆவதையும் ஆ வென்று பாத்துக்கொண்டிருந்தேன்.
சு.மு என் கனவை கலைத்து, 'ஏலே... அங்க பாரு சினேகா' என்றான். குப்பென்று திரும்பி எங்கே எங்கே என்று தேடினேன். தாய்க்குலத்துடன் சினேகா. சு.மு.வுக்கு வாயெல்லாம் பல்.
'ஏலே பேசுவோமா?'
'ச்சீ...இது என்ன மாதிரியான இடம்...இங்கெல்லாம் டீசெண்ட் பார்ட்டிங்க இருக்காங்க. அவங்ககிட்ட போய் வழிஞ்சுக்கிட்டு நின்னா நல்லா இருக்காது.பாத்துட்டு கண்டுக்காம நிக்கணும்' என்று சொல்லிவிட்டு எனக்குள் இருந்த ஆசையையும் கொன்றுவிட்டு திரும்பிக்கொண்டேன்.
நினைத்த மாதிரியே அவரை அங்கு யாரும் சீண்ட வில்லை. சிறிது நேரத்தில் சு.மு திரும்பி, 'ஏலே சித்ரா' என்றான்.
'எந்த தெரு சித்ரா' என்று பார்த்தால் பாடகி சித்ரா. ஐதராபாத்துக்கு போகிறார்கள் என்பது தெரிந்தது. அந்த பிளைட் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் வாயில் வழியாக உள்ளே நுழைந்து... ம்ஹூம்.
அப்புறம் ஜெட் ...மும்பை என்று அரைகுறையாக காதில் விழுந்ததை வைத்து நான்காம் நம்பர் கேட்டுக்கு வரிசையில் நின்றோம். அங்கு ஒரு செக்கப். பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். அழகழகான பஸ்கள். உட்கார நான்கு சீட்தான். எல்லாரும் நின்று கொண்டு. இதற்குள் ஒருவர், 'எக்ஸ்க்யூஸ்மி, ஐ மிஸ்டு மை கேஸ் பேக். உங்க பேக் கூட வந்திருக்கா பாருங்களேன்' என்றார்.
எல்லோரும், 'இதுவா பாருங்க, அதுவா பாருங்க' என்று கேட்டுவிட்டு, 'நீங்க எங்க போட்டீங்க, எங்க உக்காந்திருந்தீங்க, எப்படி உக்கார்ந்திருந்தீங்க... என்று ஏகப்பட்ட கேள்விகளைப் போட்டு வாங்கியதில் அவருக்கு கேஸ் பேக் மறந்தே போயிருக்கும். பிறகு எப்படியோ கிடைத்தது என்பது மும்பை போய் இறங்கிய பிறகுதான் தெரிந்தது.
இலேசாக மழை ஆரம்பித்துவிட்டது.
பஸ்சில் இருந்து ஒவ்வொருவராக இறங்கி, அங்கே டிக்கெட்டை காட்டி விமானத்துக்குள் ஏறினார்கள். வாசலில் ஓவராக மேக்கப் போட்டிருந்த விமான பணிப்பெண், 'குட்மார்னிங் சார்' என்றார்.
தலையை ஆட்டிக்கொண்டே உள்ளே இருந்த பணிப்பெண்ணிடம், 'இந்த சீட்...'
அவர் வாங்கி பார்த்துவிட்டு இடம் காண்பித்தார். சு.மு. ஓடிப்போய் ஜன்னல் இருக்கையை பிடுங்கி கொண்டான். சண்டை போட்டு அதில் உக்கார ஆசைதான். டீசென்ஸி மெயிண்டென் பண்ண வேண்டாமா?
சீ்ட் என்னமோ... நெட்டில் பார்த்ததெல்லாம் இல்லை. அதெல்லாம் பிசினஸ் கிளாசாம். நம்மூர் டவுண்பஸ் சீட் மாதிரி இந்த பக்கம் மூன்று. அந்தப் பக்கம் மூன்று சீட். காலை கொஞ்சம் நீட்டலாம் என்றால் எதிர் சீட்டில் முட்டி தட்டும். விமான ஜன்னல் கூட என் வீட்டு ஜன்னல் மாதிரி விசாலமாக இருக்கும் என்று பார்த்தால்... தம்மாத்துண்டு. ஒரு சாண் அளவுதான்.
'எல்லாரும் பெல்ட் போட்டுக்குங்கப்பா' என்று அறிவிப்பு. அதை எப்படி போட வேண்டும் என்று தெரியவில்லை. மூன்றாவதாக இருந்தவர் என்ன செய்கிறாரோ அதையே பின்பற்றினோம்.
ஓடு பாதையில் லேசாக விமானம் ஓடியதும் மனதுக்குள் பட்டாம்பூச்சி. பிறகு விர்ர்ரென்று வேகமாகி...ஜிவ்வ்வ்... மேலே மேலே...
வயிறு குமட்டும், தலைகீழ தொங்குவோம் என்று பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. பறந்தோம். சு.மு. என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு.
'நல்லாத்தாம்ல இருக்கு'.
மேலே போகப் போக ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கீழே போய்க்கொண்டிருந்தது. பிறகு மேகத்துக்குள் நுழைந்து, அதுக்கும் மேல போக, மேகம் மட்டும்தான் தெரிந்தது. எங்காவது வெட்டையாக மேகத்தின் வழியாக சின்ன சின்னதாக லேண்ட்ஸ்கேப் மட்டும் தெரிந்தது.
பக்கத்தில் இருந்த மூன்றாவது பார்ட்டி உம்மென்றிருந்தார். பணிப்பெண்கள் ஏதாவது கொண்டு வந்து நீட்டினால், 'நோ' என்றார்.
அவர் சொல்லிவிட்டாரே என்று நாங்களும் 'நோ' சொன்னோம். அப்புறம் டிபன் கொடுத்தார்கள். இதையும் இவர் நோ சொல்லிவிடுவாரோ என்று பயந்தோம். நல்லவேளை சொல்லவில்லை. எதிரிலிருந்து சீட்டின் பின்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு டிரேயை, எதையோ திருகி இழுத்தார். அது டேபிள் மாதிரி ஆனது. நாங்களும்.
'வெஜ் ஆர் நான்வெஜ்'
சு.மு.க்கு 'நான் வெஜ்'. எனக்கு வெஜ்.
சாப்பிட்டுக்கொண்டே கேட்டான் சு.மு.
'ஏலே ஏர்ஹோஸ்டஸ்னா நான் என்னமோ நெனச்சேன். இங்க என்னடான்னா ஹோட்டல் சர்வர் வேலைதான் போலுக்கு'
இவன் சொன்னதும் மூன்றாவது சீட் பார்ட்டி எங்களைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
சாப்பிட்டு முடித்ததும் உச்சியில் பறந்த விமானம் தடக் தடக்... அண்ணாசாலை ஆட்டோ பயணம் மாதிரி லேசான குலுங்கல். உடனே ஏதோ அறிவிப்பு. புரியவில்லை. சு.மு. கலவரமாகி, 'ஒண்ணுமில்லைல, விழுந்தா நம்ம கூட இவ்ளோ பேரு இருக்காங்க'. என்றான்.
'மவனே...இப்பலாம் அதை மறந்து உக்காந்திருக்கேன்... மூஞ்சியிலேயே குத்துனம்னா...'
எதிரில் சீட்டின் பின்பக்கமிருந்த மினி மானிடரில் மியூசிக். விமானம் செல்லும் பாதை போன்றவற்றை தொடு திரையில் பார்க்கலாம். மூன்றாவது சீட் பார்ட்டி, அங்கிருந்த ஹெட்போனை சீட்டிலிருந்த கைப்பிடி பின்னில் இணைத்து, காதில் மாட்டிக்கொண்டார். நாங்களும் அப்படியே.
பறத்தல் சுகமாகத்தான் இருந்தது. 1.30 மணி நேரம் ஆன பிறகு, வி்மானம் மும்பை அருகே வந்துவிட்டிருந்தது. இன்ஜினை விமானி அணைத்துவிட்டாரோ என்னவோ ஒரு சத்தமுமில்லை.
திரும்பவும், 'சீட் பெட்டை போடுங்கப்பா' அறிவிப்பு.
கொஞ்சம் அந்த பக்கம் இந்த பக்கம் சாய்ந்தது. தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறும்போது காத்தடித்தால் ஆடும் மரம்போல இருந்தது.
விமானப் பணிப்பெண், சாக்லெட் பாக்ஸை திறந்து ஒவ்வொருவரிடமாக நீட்டிக்கொண்டிருந்தார். வழக்கம்போல மூன்றாவது சீட் பார்ட்டி 'நோ'. சு.மு. அவரை முறைத்துக்கொண்டே, பக்கென்று பாக்ஸுக்குள் கைவிட்டு ஒரு குத்தை அள்ள, அவன் கையிலேயே போட்டு, ஒண்ணே ஒண்ணை எடுத்தேன்.
'ப்ளைட்ல சரக்கு தருவாங்கன்னு பிச்சமுத்து சொன்னாம்லா' என்றான் சு.மு.
'ஆமா'
'தரலையே'
'அது வெளிநாடு போனாத்தானாம்'.
திடீரென்று விமானம் கீழே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியதை உணரமுடிந்தது. சு.மு.வைத் தள்ளிக்கொண்டு ஜன்னலை எட்டிப்பார்த்தேன். முதலில் கடல். மேலிருந்து பார்க்க எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது. நெருக்கடியான கட்டிடங்கள். இறங்கி இறங்கி... மும்பை சத்ரபதி விமான நிலையம்.
த்ரில்லிங்காக இருந்தது. சீட்டை விட்டு இறங்கும் போது காது ஜவ்வு கிழிந்துவிடுவது மாதிரி வலி.
'போனதுமே பஞ்சு வாங்கி காதுல வச்சுக்கோ' வை மறந்து போனேன். கையை விட்டு குடைந்துகொண்டே இறங்கும் போது, மூன்றாவது சீட் பார்ட்டியை பார்த்து ஒருவர், 'ஹலோ சார், எப்படியிருக்கீங்க. அடுத்தப் படம் போய்க்கிட்டிருக்கா' என்றார்.
இயக்குனர் சிம்புதேவனாம்.
சொல்லவே இல்லை.
Monday, January 7, 2008
வித்தைக்காரியின் நடனம்
மழை நீர் இன்னும் உதிராத சாளரத்தின் வழியே பார்வை தொடர்கிறது. வார்த்தைகளை தொண்டைக்குழிக்குள்ளேயே கொன்றுவிடுகிற வித்தைக்காரியின் நடனம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவளை குழுமி ரசிக்கும் பார்வையாளர்களிடையே பெருக்கெடுத்து ஓடுகிறது காமம்.
அதை ரசனையென்று நினைக்கும் அவளது பாசாங்கு பாதங்கள் இன்னும் வேகமாக சுழலுகின்றன. கால்களில் கட்டப்பட்டிருக்கிற பெரும்தேவதையின் ஆணவம், சுழன்று ஆடி ஆடி அசைகிறது. அவள் மிதித்திருக்கிற நிலத்தின் வழியே கண்கள் முளைக்கின்றன.
பாதையெங்கும் மினு மினுக்கும் மேனி கொண்ட, தீரா பாம்புகளின் அலைச்சல் இன்னும் அதிகரிக்கிறது.
வார்த்தைகளை கொல்பவளின் கைகளில் சிவனின் கிரீடம் சூழ்ந்த தலைமுடி. அதிலிருந்து எழும் அழுகிய வாசனையை ரசிப்பவள் தாண்டவத்துக்கு தயாராகிறாள். ராட்சஷ உலகம் பிளவுபட்டு பிறக்கிறது.
கால்கள், வானையும் பூமியையும் மிதித்து எழுகிறது. மிதிபடும் அசைவில் குலுங்கும் வானத்திலிருந்து கண்ணீர் தெறிக்கின்றன. வேலை எதுவுமின்றி அசைவற்று கிடக்கும் உடல்கள் அதிர்ந்து எழுகிறது. இன்னொரு யுத்தம் தொடங்குகிறது. எல்லா மனிதர்களின் கைகளும் ஆயுதங்களாக மாறுகின்றன. கண்களினின் வழியே பறக்கின்றன தோட்டாக்கள்.
பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் கடலின் பாதையை காட்டுகின்றன. ரத்தங்கள் கலந்து, நிறம் மாற மறுக்கும் கடல் பூமியை விழுங்குகிறது. உயிர்கள் ஆனந்தமாக தங்கள் உயிரை விடுகின்றன.இன்னொரு முறை பூமி பிறக்கிறது. உயிர்கள் முளைக்கின்றன. வித்தைக்காரி நடனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதை ரசனையென்று நினைக்கும் அவளது பாசாங்கு பாதங்கள் இன்னும் வேகமாக சுழலுகின்றன. கால்களில் கட்டப்பட்டிருக்கிற பெரும்தேவதையின் ஆணவம், சுழன்று ஆடி ஆடி அசைகிறது. அவள் மிதித்திருக்கிற நிலத்தின் வழியே கண்கள் முளைக்கின்றன.
பாதையெங்கும் மினு மினுக்கும் மேனி கொண்ட, தீரா பாம்புகளின் அலைச்சல் இன்னும் அதிகரிக்கிறது.
வார்த்தைகளை கொல்பவளின் கைகளில் சிவனின் கிரீடம் சூழ்ந்த தலைமுடி. அதிலிருந்து எழும் அழுகிய வாசனையை ரசிப்பவள் தாண்டவத்துக்கு தயாராகிறாள். ராட்சஷ உலகம் பிளவுபட்டு பிறக்கிறது.
கால்கள், வானையும் பூமியையும் மிதித்து எழுகிறது. மிதிபடும் அசைவில் குலுங்கும் வானத்திலிருந்து கண்ணீர் தெறிக்கின்றன. வேலை எதுவுமின்றி அசைவற்று கிடக்கும் உடல்கள் அதிர்ந்து எழுகிறது. இன்னொரு யுத்தம் தொடங்குகிறது. எல்லா மனிதர்களின் கைகளும் ஆயுதங்களாக மாறுகின்றன. கண்களினின் வழியே பறக்கின்றன தோட்டாக்கள்.
பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் கடலின் பாதையை காட்டுகின்றன. ரத்தங்கள் கலந்து, நிறம் மாற மறுக்கும் கடல் பூமியை விழுங்குகிறது. உயிர்கள் ஆனந்தமாக தங்கள் உயிரை விடுகின்றன.இன்னொரு முறை பூமி பிறக்கிறது. உயிர்கள் முளைக்கின்றன. வித்தைக்காரி நடனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)