பிசாசுகளின் நாக்கில் அகப்பட்டுக்கொண்ட குரல்வளையை போல தினமும் அலறுகிறது என் இரவு. நான் நானாக இருப்பதென்ற இயல்பை, ஒவ்வொரு நிமிடமும் இழந்துகொண்டிருக்கிறேன். ஒருங்கிணையாத மனது, கோட்டிக் காரனை போல குதித்துக்கொண்டிருக்கிறது அடிக்கடி. ஒவ்வொரு குதிப்பிலும் ரத்தங்கள் கசிகின்றன.
கடந்த முறை வந்த புத்தாண்டு இன்னும் அதிகப்படியான மதுபுட்டிகளையும் சிகரெட் பாக்கெட்டுகளையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு முறை புகைக்கும்/ குடிக்கும்போது இன்றே கடைசி என்கிற எச்சரிக்கை மனசு, வருடம்தோறும் தொடர்கிறது.
இயல்பை தொலைத்த மொழி, 'ஏலே' என்கிற வார்த்தையை 'ஹாய்' என்று மாற்றி போட்டிருக்கிறது. வயக்காடுகளில் கழனி மிதித்த கால்கள் ஹவாய் சப்பல்களின் சுகத்தில் சென்னை சாலைகளை அளந்துகொண்டிருக்கின்றன. கிராமம் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆசை, கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போயிருக்கிறது.
எதிர்படுபவனை கேலிக்குள்ளாக்கும் என் வட்டார வழக்கு என்னிடம் இப்போது இல்லை. 'மம்மி' என்றழைக்கிற மகனை அன்போடு கொஞ்சும் மனைவியிடம், தூக்கணாங்குருவி கூட்டை, இவனிடம் எப்படி காண்பிப்பேன் என்கிறேன் ஒவ்வொரு இரவும்.
பனைமரமேறி கிணற்றில் குதிப்பதும், கன்னி வைத்து தெண்டல்களை பிடிப்பதும், கட்டெறும்புகள் மொய்க்கும் சப்பை மூக்கு மா மரங்களில் ஏறி திருடி தின்கிற வாய்ப்புகள் மகனுக்கு கிடைக்காமல் செய்த குற்றம் சமீபகாலங்களில் அதிகரித்திருக்கிறது.
நெரிசல் மிகுந்த சென்னையில் கோழி கூடு அளவுக்காவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற இல்லத்தாளின் ஆசை, மெகா சீரியலாக தொடர்கிறது இன்னும்.
ஒரு கனவுக்காரனை போல அலைகிற நானும் வலைபதிவை தொடங்கி, அடிமையாகியிருக்கிறேன். முகம்தெரியாத நண்பர்கள்/தோழிகளின் நட்பில் நித்தம் ஒரு பூ மென்மையாகப் பூக்கிறது.
ஆடுமாடுகளை பற்றிதான் எழுதவேண்டும் என்கிற என் நிபந்தனை என்னை ஏமாற்றியிருக்கிறது.
எழுத்துகளின் சலனத்தில் வழுக்கி விழுந்திருக்கிறேன்.
தவம் கிடந்த முதல் விமானப் பயணம் இந்த வருடம் வாய்த்திருக்கிறது. ஆகாயம் வழி ஆனந்தபட்ட அப்பாவியின் வியப்பு, சிலருக்கு சிரிப்பை தரும் என்பதால் அதுபற்றி விரிவாக வேண்டாம்.
சுழலும் சூழ்நிலைகள் அதிகமாகப் பொய் பேச வைத்திருக்கிறது. அரிச்சந்திரனை அனாவசியமாக அழைத்து இருட்டறையில் பூட்ட சொன்னது மனது. ஒவ்வொரு பொய்யிலும் சில நண்பர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் வீழ்ந்திருக்கிறார்கள்.
எங்கோ இருக்கின்ற காதலியின் முகத்தை திருவிழாவிலாவது பார்க்க துடித்திருக்கிறேன். போன வருடம் போலவே வரவில்லை. அடுத்த வருடம் காத்திருக்கிறது.
எழுத முடியாத கவிதையும் கதையும் இன்னும் உள்ளுக்குள்ளேயே இருக்கின்றன.
இதை தவிர்த்து இந்த வருடத்தில்...
கவிஞர்கள் இன்னும் அதிகமாகவே கலைஞரை புகழ்ந்திருக்கிறார்கள். புகழுரையில் நா. முத்துக்குமார் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்.
புழ்ந்துகொண்டிருந்த பா.விஜய் ஹீரோவாகியிருக்கிறார். தமிழ் சினிமா கார்ப்பரேட் கைகளுக்குள் புகுந்திருக்கிறது.
தலைகணத்தோடே இருக்கிறார் தங்கர். குஷ்புவுக்கு ஒரு சர்ச்சை முளைத்திருக்கிறது.
ஸ்டாலின் தனது பலத்தை திருநெல்வேலியில் காட்டியிருக்கிறார்.
'டாஸ்மாக்' சரக்கு விலை அதிகரித்திருக்கிறது. ஜெயமோகன் மீண்டும் ஒரு நாவலை இறக்கியிருக்கிறார்.
குஜராத்தில் மோடி, மஸ்தான் ஆகியிருக்கிறார். பெனாசிரை கொன்றிருக்கிறார்கள். காம்ரேட்களின் கடுகடுப்பில் இன்னும் விழாமல் இருக்கிறது மன்மோகன் அரசு. பெங்களூருவில் மூடிய கோணிக்குள் அப்படியே இருக்கிறார் வள்ளுவர்.
அதிக பதிவு எழுதுகிறார் அய்யனார். அடிக்கடி காணாமல் போகிறார் காயத்ரி. ஜ்யோவ்ராம் சுந்தர் புதுவகைகளை அறிமுகப்படுத்துகிறார்.
டுபுக்குவின் சிரிப்புக்குள் அதிகமானோர் விழுந்து கிடக்கிறாகள்.
வரும் புத்தாண்டில் ஒரு வயது ஏறப்போகிறது....
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Saturday, December 29, 2007
Saturday, December 22, 2007
சடச்சான்
கடனாநதி ஆற்றின், நீள அகலத்தை அளப்பது மாதிரி இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நடந்து கொண்டிருக்கும் சடச்சான், இன்று விடிவதற்கு முன்பே வாய்க்கால் கரையில் நின்றான்.
பெரும்பாலும் அவன் இங்கு வருவதில்லை. இந்த வாய்க்காலைத்தாண்டிதான் தினமும் ஆற்றுக்குச் செல்வான். ஆற்றைப் போல வாய்க்கால்கள், அவனுக்கு கவர்ச்சியைக் கொடுக்கவில்லையோ என்னவோ ?
ஆற்றில் ஆழம் அதிகமிருக்காது. முழங்கால் அளவுதான். முகம் பார்க்குமளவுக்கான பளிங்குத் தண்ணீரில் நடப்பது சடச்சானுக்கு ஆனந்த விஷயம். இடது கை ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நீட்டிக்கொண்டும் வலது காலை இழுத்துக்கொண்டும் அவன் நடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அவிழ்ந்த சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டாவது அவன் நடக்கலாம். மயிர்களடர்ந்த கருந்தேகத்தைக் காண்பித்துக்கொண்டு நடந்துக்கொண்டிருப்பான். முகம் தண்ணீருக்குள் எதையோ தேடும். இப்படி நடந்து கொண்டே, ஆற்றுக்குள் முளைத்திருக்கும் பாறைகளில் துணி துவைக்கும் அக்காள்கள், அத்தைகளிடம் அவன் ஏதாவது பேசுவான்.
'ஏக்கா எப்பம் கல்யாணம் பண்ணப்போற ? '
'நீ எப்பம் தண்ணிக்குள்ள நடக்கத நிப்பாட்ட போறியோ அப்பதாம் '
'அப்பம் உனக்கு கல்யாணமே நடக்காது. '
'ஏ வெறுவா கெட்டவனே '
'போக்கா ' என்பான்.
பிறகு அத்தைகள்.
'மருமவன...எம்மவ..சின்னவளை உனக்குதாம்யா கட்டிதரப் போறேன் '
வெட்கம் வந்துவிடும் அவனுக்கு.
'போங்கத்த... நீங்க சொல்லிட்டுதான் இருக்கியோ, ஆனா கெட்டிதான் தரமாட்டேங்கியோ 'என்பான்.
அத்தைகளும் அத்தை சார்ந்தவர்களும் சிரிப்பார்கள்.
'சின்னப்பயல்கள் வந்தால் இவனோடு மல்லுக்கட்டுவதே பொழுது போக்கு '
'ஏ சடச்சான் முதுவுல வங்கு.
சட்டுனு வந்து நொங்கு '
என்று கோரஸாகச் சொல்ல, கோபம் அவரும் அவனுக்கு.
'எம்முதுவுலயால நொங்கப் போறியோ,முதுவு தொலிய உறிச்சுருவேன் 'என்பான்.
'சரிடே.. ஆனா, உனக்குச் சாவு தண்ணிக்குள்ளதான் '
அவர்கள் இப்படிச் சொல்வதில் காரணமிருக்கிறது.
அது அறுவடை காலம்.மேல பத்துவயலில் அறுப்பு நடந்துகொண்டிருந்தது. சடச்சான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். வயலில் ஒழுங்காக அறுக்கிறார்களா என்பதை அம்மாவும் அப்பாவும் மேற்பார்வை செய்ய, துணைக்கு வந்தான் சடச்சான்.
அறுப்புக்களம் அம்மன் கோயிலின் பின்புறம் இருந்த்து. வயலுக்கும் அம்மன் கோயிலுக்கும் ஒரு கீ,மி தூரம்.
கதிர் கட்டைத்தூக்கிக்கொண்டு களத்துக்குச் சுமக்க பிராணன் போய்விடும் அறுப்பாள்களுக்கு.
முக்குறுணி விதைப்பாடுதான் என்பதால் இரண்டு மணி நேரத்தில் அறுத்துவிட்டார்கள். கதிர்கட்டை சுமந்து செல்பவனின் முன் சடச்சான் சென்றான்.இவன் முன்னால் சென்றால் நெல் அதிகம் வரும் என்பது அம்மா அப்பாவின் நம்பிக்கை.
களத்துக்கு அருகில் செல்லும் போது மழை கொட்டியது. கதிரடிக்க, பிணையல் மாடுகளோடு வந்தவர்கள் எல்லாரும் கோவிலில் வந்து நின்று விட்டனர். சடச்சான் இவர்களோடு நின்றிருக்கலாம். மழையில் நனைகிறேன் பேர்வழி என்று குதித்துக் கொண்டிருந்தான்.
'ஏய் தடுமம் புடிச்சுரும்டா நனையாத ' என்று சொன்னவர்களின் பேச்சை அவன் கேட்பதாகயில்லை.. அப்பாவும் அம்மாவும் பக்கத்தில் இல்லாததால் ஆனந்தம்.
பெரிதாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழை திடாரென்று நின்றது.
கதிர்கட்டுகள் போடப்பட்டிருந்த இடத்துக்கருகில் நின்ற விளக்கு கம்பத்தின் அருகில் தண்ணீர் தேங்கி நின்றன. அதன் ஒர் ஓரத்தில் அழகான கோலிக்காய் ஒன்று கிடந்தது. ஓடிப்போய் எடுக்க போனான்.
கோலிக்காயில் கை வைத்ததும் டப் பென்று ஒரு சத்தம். பத்தடி தள்ளி சுய நினைவின்றி கிடந்தான் சடச்சான்.கரண்ட் அடித்துவிட்டது.
குய்யோ முறயோ என்று அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரிக்குத் தூக்கி கொண்டு போனார்கள். பேச்சு மூச்சு வந்தது. வலது கால் இழுத்துக்கொண்டது.இடது கை ஆட்காட்டி விரலும் சுண்டு விரலும் நீட்டிக்கொண்டே நின்றன. இனி மூளை வளராதாம். வலிப்பு நோய் வேறு ஒட்டிக்கொண்டது. நிறைய வைத்தியம் பார்த்தாகிவிட்டது.குணமாகவில்லை.இருபத்தைந்து வயதாகியும் இன்னும் குழந்தைத்தனமும் விளையாட்டும்தான்.
வலிப்பு நோய்க்கும் தண்ணீருக்கும் ஆகவே ஆகாது என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் சடச்சான் விஷயத்தில் வேறு மாதிரி இருந்தது.
அதிகாலையில் எழுந்து ஆற்றுக்கு நடந்து வருவது. குளிர்ந்த தண்ணீரில் இறங்கி இந்தக் கரைக்கும் அந்தக்கரைக்குமாக நடப்பது என்று பொழுது கழித்தான்.இது பதினோரு மணிவரைதான்.
அதற்கு மேல் மாடு மேய்க்க வருபவர்கள் மாடுகளை ஆற்றுக்குள் இறக்கி விடுவார்கள். மாடுகளுக்கும் அவனுக்கும் ஆகாது என்பதால் அவன் கரையேறிவிடுவான். அந்த நேரத்தில் ஊர்க்காரர்கள் யாராவது சைக்கிளில் குளிக்க வந்திருந்தால் அவர்களோடு வீட்டுக்குத் திரும்புவான்.
வீட்டில் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். கட்டிப்போட்டுப்பார்த்தர்கள். அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
'வலிப்பு வந்து தண்ணிக்குள் விழுந்து செத்துப் போய் விடக்கூடாதே என்று கூடப் பயந்தார்கள். பிறகு விட்டுவிட்டார்கள். சொல்லமாடன் புண்ணியத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஒரே மகன் இப்படியானதில் மனதொடிந்துவிட்டார் அப்பா. அம்மாவுந்தான். அம்மாவின் தங்கைக்கு நான்கு மகள்கள். அதில் இரண்டு மகள்களை - கடைக்குட்டியையும் அவளுக்கு மூத்தவளையும் இவர்கள் வளர்த்தார்கள்.
சடச்சான் வீட்டிலிருந்தால் சின்னவள் ஓடி ஒளிந்துகொள்வாள்.பயம். ஏதாவது கேள்வி கேட்டு அவள் சொல்லவில்லையென்றால், 'நீயெல்லாம் ஏம் பள்ளிக்கூடம் போற ? 'என்று கேட்டுவிட்டு மண்டையில் நறுக்கென்று கொட்டுவான். இந்தக் குட்டலைச் சின்னவளால் தாங்கமுடியாது.பெரியவளுக்கு அவன் மீது வேறொரு அலர்ஜி.
அவள் தும்மல் போட்டுவிட்டால் போதும். கையை அவள் மூக்குக்கு நேராக கொண்டு போய் மூக்கு சிந்திவிடும் கெட்ட பழக்கம் அவனுக்கு.அவளுக்கு எரிச்சலாக வரும். இந்த அவஸ்தையைப் போக்க அவள் அவன் பக்கமே வருவதில்லை.
சாயங்காலங்கள் அவனுக்குச் சுகமானவை.தெப்பக்குள திண்டில் உட்கார்ந்து கொண்டு அங்கு போகிற வருகிறவர்களை உறவு சொல்லி அழைத்து, 'கண்ணாமூச்சி விளையாடுமா ' ',செல்லாங்குச்சி விளையாடுமா ' என்று கேட்டுக்கொண்டே இருப்பான்.
புல்லறுத்துவிட்டுப் போகும் பாட்டிகள், 'எங்கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாட வாரியா ? 'என்று சிரித்துக்கொண்டே இடக்கு பண்ணுவார்கள்.
'ஏக் கெழவி ஒன் வயசென்ன, என் வயசென்ன,எங்கிட்ட போயி இப்படி பேசுத ? 'என்று ரோஷம் காட்டுவான்.
சொந்தக்காரர்கள் என்று வீட்டுக்கு யார் வந்தாலும் விடுவதில்லை சடச்சான். 'நானும் ஊருக்கு வாரன், என்னையும் கூட்டிட்டுப் போங்க ' என்று அரற்றிவிடுவான்.அவன் மீது பரிதாபபடுவார்களே தவிர யாரும் கூட்டிக்கொண்டு செல்லாமாட்டார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஒரு முறை மெட்ராஸ் அத்தை அவனைச் சிகிச்சைக்காக அங்கு அழைத்துச்சென்றிருந்தாள். கிண்டி அருகே உள்ளே ஒரு மருத்துவமனைக்குப் போகும்போது ,விமானம் ஒன்று தாழ்வாக பறக்க அதையே பார்த்துக்கொண்டு 'ஐ ப்ளேனு ' என்று போய்விட்டான்.
அத்தைக்கும் மாமாவுக்கும் உயிர் போய்விட்டது. ஊரில் என்ன பதில் சொல்லுவது ? அங்கே இங்கே என்று தேடி அலைந்ததில் ஏதோ ஒரு ஜவுளிக்கடை முன்பு பொம்மைகளை அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது பிடித்துவந்தார்களாம்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சடச்சானை எங்கும் அனுப்புவதில்லை. பக்கத்திலிருக்கிற ஆழ்வார்க்குறிச்சி,கடையத்துக்குக்கூட அவனைக் கூட்டிக்கொண்டுப் போவதில்லை.
வெய்க்காலிப்பட்டி சித்தப்பா வந்திருந்தார் நேற்று.
'ஒருவாரம் அங்க வந்து இருக்கட்டும்.எத்தனை நாளைக்குதான் இங்கனயே சுத்திட்டு இருப்பான். கூட்டிட்டுப் போறேன் ' என்றார் அப்பாவிடம்.
'வேண்டாம் வீணா தொல்லை ' என்று தடுத்துப் பார்த்தாள் அம்மா. வழக்கத்துக்கு மாறாக சடச்சானும் சத்தமாகக் கத்தி அழுது அடம் பிடிக்க, 'போய்த் தொலை ' என்று அனுமதியளித்தாள் அம்மா.
சந்தோஷம் தாங்கவில்லை அவனுக்கு. உற்சாகத்தில் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். தூக்கக் கலக்கம் தீரும் முன்பே வாய்க்கால் கரைக்கு வந்தான்.
வாயில் கொடுவாய் நீட்டமாக இருந்தது. அடிக்கடி கொட்டாவி வேறு. கரை நிரம்பி தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. செத்த நேரம் நின்று கொண்டிருந்தவன் கரையில் அப்படியே உட்கார்ந்தான்.இலேசான குளிர். தண்ணீரிலிருந்து மீன்கள் மேலே துள்ளி,மீண்டும் தண்ணிக்குள் விழுந்தன. துணி துவைக்க போடப்பட்டிருந்த கருங்கல்லின் அடியில் தண்ணீர் பாம்பொன்று தலையை நீட்டிக்கொண்டிருந்தது.
சடச்சான் அதைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அதன் தலையைப் பிடித்து இழுத்து இரண்டு சுற்று சுற்றி பளீரென்று தரையில் அடித்திருப்பான். பாம்புக்கு ஆயுசு கெட்டி.
சிவசைலத்திலிருந்து பெருமாள் கோயிலுக்குப் பால் கொண்டு வரும் கோபாலன் இவனைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி, 'என்ன சடச்சான் விடியதுக்குள்ள இங்க வந்துட்ட ' என்று கேட்டான்.
'ஒண்ணுமில்ல மாமா, சித்தப்பா ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச்சு. அதான் பல் தேய்ச்சிட்டுப் போலாம்னு வந்தேன் ' என்றான்.
'அப்டியா பாத்து இருந்துக்கோல, 'என்று சொல்லிவிட்டுப் போனான்.
இடுப்புப்பகுதியில் சாரத்துக்குள் சொருகி வைத்திருந்த வேப்பங்குச்சியை எடுத்து தூக்கக் கலக்கத்துடனேயே பல் தேய்த்தான். கரையில் இருந்து கொண்டு எச்சிலைப் புளிச்சென்று தண்ணிக்குள் துப்பினான். துப்பப்பட்ட இடத்தில் மீன்கள் துள்ளி விழுந்தன. அவனுக்கு அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தது. தண்ணீரின் அருகில் சென்றான். கால் நனையாமல், காற்றடித்து தண்ணீரடினால் நனைந்துவிடுமளவுக்கான தூரத்தில் குத்த வைத்துக்கொண்டு துப்பிக்கொண்டிருந்தான்.
எதிரில் வயலுக்குப் போகும் இடும்பனிடம், ' 'ஏய் இடும்பா நான் ஊருக்குப் போறேன் 'என்றான்.
'உன்னைய யாருல கூட்டிட்டுப்போறா '
'சித்தப்பா '
'அங்க போய் ஒழுங்கா இரி, ஆத்துக்கு போறேன்,வாய்க்கலுக்குப் போறேன்னு அவருக்கு இழுத்து வச்சிராத '
'அது எனக்கு தெரியும் உஞ்சோலிய பாத்துட்டுப் போ '
' சும்மா போறவன கூப்புட்டு சோலியப் பாத்துட்டுப் போங்க. உனக்கு கொஞ்சமாவா கொழுப்பு இருக்கு ? '
திட்டிக்கொண்டே சென்றான்.
துப்புவதையும் மீன்கள் துள்ளுவதையும் அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருந்தான். பிறகு ஒரு கையால் தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவினான். தண்ணீர் குளிர்ந்திருந்தது.இன்னொரு முறை தண்ணீரை அள்ள முயன்ற போது வலது கால் இலேசாக வழுக்க, முஞ்சிக்குப்புற விழுந்தான் சடச்சான். முகம் மட்டும் தண்ணிக்குள் கிடக்க உடல் முழுவதும் கரையில் கிடந்தது. ஒரு முறை கையை ஊன்றி முகத்தை மேலே தூக்கியவன் பொத்தென்று தண்ணீருக்குள்ளேயே விழுந்தான்.
வலிப்பு வந்தது அவனுக்கு.
----
திண்ணையில் வெளியான என் கதை
பெரும்பாலும் அவன் இங்கு வருவதில்லை. இந்த வாய்க்காலைத்தாண்டிதான் தினமும் ஆற்றுக்குச் செல்வான். ஆற்றைப் போல வாய்க்கால்கள், அவனுக்கு கவர்ச்சியைக் கொடுக்கவில்லையோ என்னவோ ?
ஆற்றில் ஆழம் அதிகமிருக்காது. முழங்கால் அளவுதான். முகம் பார்க்குமளவுக்கான பளிங்குத் தண்ணீரில் நடப்பது சடச்சானுக்கு ஆனந்த விஷயம். இடது கை ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நீட்டிக்கொண்டும் வலது காலை இழுத்துக்கொண்டும் அவன் நடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அவிழ்ந்த சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டாவது அவன் நடக்கலாம். மயிர்களடர்ந்த கருந்தேகத்தைக் காண்பித்துக்கொண்டு நடந்துக்கொண்டிருப்பான். முகம் தண்ணீருக்குள் எதையோ தேடும். இப்படி நடந்து கொண்டே, ஆற்றுக்குள் முளைத்திருக்கும் பாறைகளில் துணி துவைக்கும் அக்காள்கள், அத்தைகளிடம் அவன் ஏதாவது பேசுவான்.
'ஏக்கா எப்பம் கல்யாணம் பண்ணப்போற ? '
'நீ எப்பம் தண்ணிக்குள்ள நடக்கத நிப்பாட்ட போறியோ அப்பதாம் '
'அப்பம் உனக்கு கல்யாணமே நடக்காது. '
'ஏ வெறுவா கெட்டவனே '
'போக்கா ' என்பான்.
பிறகு அத்தைகள்.
'மருமவன...எம்மவ..சின்னவளை உனக்குதாம்யா கட்டிதரப் போறேன் '
வெட்கம் வந்துவிடும் அவனுக்கு.
'போங்கத்த... நீங்க சொல்லிட்டுதான் இருக்கியோ, ஆனா கெட்டிதான் தரமாட்டேங்கியோ 'என்பான்.
அத்தைகளும் அத்தை சார்ந்தவர்களும் சிரிப்பார்கள்.
'சின்னப்பயல்கள் வந்தால் இவனோடு மல்லுக்கட்டுவதே பொழுது போக்கு '
'ஏ சடச்சான் முதுவுல வங்கு.
சட்டுனு வந்து நொங்கு '
என்று கோரஸாகச் சொல்ல, கோபம் அவரும் அவனுக்கு.
'எம்முதுவுலயால நொங்கப் போறியோ,முதுவு தொலிய உறிச்சுருவேன் 'என்பான்.
'சரிடே.. ஆனா, உனக்குச் சாவு தண்ணிக்குள்ளதான் '
அவர்கள் இப்படிச் சொல்வதில் காரணமிருக்கிறது.
அது அறுவடை காலம்.மேல பத்துவயலில் அறுப்பு நடந்துகொண்டிருந்தது. சடச்சான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். வயலில் ஒழுங்காக அறுக்கிறார்களா என்பதை அம்மாவும் அப்பாவும் மேற்பார்வை செய்ய, துணைக்கு வந்தான் சடச்சான்.
அறுப்புக்களம் அம்மன் கோயிலின் பின்புறம் இருந்த்து. வயலுக்கும் அம்மன் கோயிலுக்கும் ஒரு கீ,மி தூரம்.
கதிர் கட்டைத்தூக்கிக்கொண்டு களத்துக்குச் சுமக்க பிராணன் போய்விடும் அறுப்பாள்களுக்கு.
முக்குறுணி விதைப்பாடுதான் என்பதால் இரண்டு மணி நேரத்தில் அறுத்துவிட்டார்கள். கதிர்கட்டை சுமந்து செல்பவனின் முன் சடச்சான் சென்றான்.இவன் முன்னால் சென்றால் நெல் அதிகம் வரும் என்பது அம்மா அப்பாவின் நம்பிக்கை.
களத்துக்கு அருகில் செல்லும் போது மழை கொட்டியது. கதிரடிக்க, பிணையல் மாடுகளோடு வந்தவர்கள் எல்லாரும் கோவிலில் வந்து நின்று விட்டனர். சடச்சான் இவர்களோடு நின்றிருக்கலாம். மழையில் நனைகிறேன் பேர்வழி என்று குதித்துக் கொண்டிருந்தான்.
'ஏய் தடுமம் புடிச்சுரும்டா நனையாத ' என்று சொன்னவர்களின் பேச்சை அவன் கேட்பதாகயில்லை.. அப்பாவும் அம்மாவும் பக்கத்தில் இல்லாததால் ஆனந்தம்.
பெரிதாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழை திடாரென்று நின்றது.
கதிர்கட்டுகள் போடப்பட்டிருந்த இடத்துக்கருகில் நின்ற விளக்கு கம்பத்தின் அருகில் தண்ணீர் தேங்கி நின்றன. அதன் ஒர் ஓரத்தில் அழகான கோலிக்காய் ஒன்று கிடந்தது. ஓடிப்போய் எடுக்க போனான்.
கோலிக்காயில் கை வைத்ததும் டப் பென்று ஒரு சத்தம். பத்தடி தள்ளி சுய நினைவின்றி கிடந்தான் சடச்சான்.கரண்ட் அடித்துவிட்டது.
குய்யோ முறயோ என்று அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரிக்குத் தூக்கி கொண்டு போனார்கள். பேச்சு மூச்சு வந்தது. வலது கால் இழுத்துக்கொண்டது.இடது கை ஆட்காட்டி விரலும் சுண்டு விரலும் நீட்டிக்கொண்டே நின்றன. இனி மூளை வளராதாம். வலிப்பு நோய் வேறு ஒட்டிக்கொண்டது. நிறைய வைத்தியம் பார்த்தாகிவிட்டது.குணமாகவில்லை.இருபத்தைந்து வயதாகியும் இன்னும் குழந்தைத்தனமும் விளையாட்டும்தான்.
வலிப்பு நோய்க்கும் தண்ணீருக்கும் ஆகவே ஆகாது என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் சடச்சான் விஷயத்தில் வேறு மாதிரி இருந்தது.
அதிகாலையில் எழுந்து ஆற்றுக்கு நடந்து வருவது. குளிர்ந்த தண்ணீரில் இறங்கி இந்தக் கரைக்கும் அந்தக்கரைக்குமாக நடப்பது என்று பொழுது கழித்தான்.இது பதினோரு மணிவரைதான்.
அதற்கு மேல் மாடு மேய்க்க வருபவர்கள் மாடுகளை ஆற்றுக்குள் இறக்கி விடுவார்கள். மாடுகளுக்கும் அவனுக்கும் ஆகாது என்பதால் அவன் கரையேறிவிடுவான். அந்த நேரத்தில் ஊர்க்காரர்கள் யாராவது சைக்கிளில் குளிக்க வந்திருந்தால் அவர்களோடு வீட்டுக்குத் திரும்புவான்.
வீட்டில் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். கட்டிப்போட்டுப்பார்த்தர்கள். அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
'வலிப்பு வந்து தண்ணிக்குள் விழுந்து செத்துப் போய் விடக்கூடாதே என்று கூடப் பயந்தார்கள். பிறகு விட்டுவிட்டார்கள். சொல்லமாடன் புண்ணியத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஒரே மகன் இப்படியானதில் மனதொடிந்துவிட்டார் அப்பா. அம்மாவுந்தான். அம்மாவின் தங்கைக்கு நான்கு மகள்கள். அதில் இரண்டு மகள்களை - கடைக்குட்டியையும் அவளுக்கு மூத்தவளையும் இவர்கள் வளர்த்தார்கள்.
சடச்சான் வீட்டிலிருந்தால் சின்னவள் ஓடி ஒளிந்துகொள்வாள்.பயம். ஏதாவது கேள்வி கேட்டு அவள் சொல்லவில்லையென்றால், 'நீயெல்லாம் ஏம் பள்ளிக்கூடம் போற ? 'என்று கேட்டுவிட்டு மண்டையில் நறுக்கென்று கொட்டுவான். இந்தக் குட்டலைச் சின்னவளால் தாங்கமுடியாது.பெரியவளுக்கு அவன் மீது வேறொரு அலர்ஜி.
அவள் தும்மல் போட்டுவிட்டால் போதும். கையை அவள் மூக்குக்கு நேராக கொண்டு போய் மூக்கு சிந்திவிடும் கெட்ட பழக்கம் அவனுக்கு.அவளுக்கு எரிச்சலாக வரும். இந்த அவஸ்தையைப் போக்க அவள் அவன் பக்கமே வருவதில்லை.
சாயங்காலங்கள் அவனுக்குச் சுகமானவை.தெப்பக்குள திண்டில் உட்கார்ந்து கொண்டு அங்கு போகிற வருகிறவர்களை உறவு சொல்லி அழைத்து, 'கண்ணாமூச்சி விளையாடுமா ' ',செல்லாங்குச்சி விளையாடுமா ' என்று கேட்டுக்கொண்டே இருப்பான்.
புல்லறுத்துவிட்டுப் போகும் பாட்டிகள், 'எங்கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாட வாரியா ? 'என்று சிரித்துக்கொண்டே இடக்கு பண்ணுவார்கள்.
'ஏக் கெழவி ஒன் வயசென்ன, என் வயசென்ன,எங்கிட்ட போயி இப்படி பேசுத ? 'என்று ரோஷம் காட்டுவான்.
சொந்தக்காரர்கள் என்று வீட்டுக்கு யார் வந்தாலும் விடுவதில்லை சடச்சான். 'நானும் ஊருக்கு வாரன், என்னையும் கூட்டிட்டுப் போங்க ' என்று அரற்றிவிடுவான்.அவன் மீது பரிதாபபடுவார்களே தவிர யாரும் கூட்டிக்கொண்டு செல்லாமாட்டார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஒரு முறை மெட்ராஸ் அத்தை அவனைச் சிகிச்சைக்காக அங்கு அழைத்துச்சென்றிருந்தாள். கிண்டி அருகே உள்ளே ஒரு மருத்துவமனைக்குப் போகும்போது ,விமானம் ஒன்று தாழ்வாக பறக்க அதையே பார்த்துக்கொண்டு 'ஐ ப்ளேனு ' என்று போய்விட்டான்.
அத்தைக்கும் மாமாவுக்கும் உயிர் போய்விட்டது. ஊரில் என்ன பதில் சொல்லுவது ? அங்கே இங்கே என்று தேடி அலைந்ததில் ஏதோ ஒரு ஜவுளிக்கடை முன்பு பொம்மைகளை அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது பிடித்துவந்தார்களாம்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சடச்சானை எங்கும் அனுப்புவதில்லை. பக்கத்திலிருக்கிற ஆழ்வார்க்குறிச்சி,கடையத்துக்குக்கூட அவனைக் கூட்டிக்கொண்டுப் போவதில்லை.
வெய்க்காலிப்பட்டி சித்தப்பா வந்திருந்தார் நேற்று.
'ஒருவாரம் அங்க வந்து இருக்கட்டும்.எத்தனை நாளைக்குதான் இங்கனயே சுத்திட்டு இருப்பான். கூட்டிட்டுப் போறேன் ' என்றார் அப்பாவிடம்.
'வேண்டாம் வீணா தொல்லை ' என்று தடுத்துப் பார்த்தாள் அம்மா. வழக்கத்துக்கு மாறாக சடச்சானும் சத்தமாகக் கத்தி அழுது அடம் பிடிக்க, 'போய்த் தொலை ' என்று அனுமதியளித்தாள் அம்மா.
சந்தோஷம் தாங்கவில்லை அவனுக்கு. உற்சாகத்தில் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். தூக்கக் கலக்கம் தீரும் முன்பே வாய்க்கால் கரைக்கு வந்தான்.
வாயில் கொடுவாய் நீட்டமாக இருந்தது. அடிக்கடி கொட்டாவி வேறு. கரை நிரம்பி தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. செத்த நேரம் நின்று கொண்டிருந்தவன் கரையில் அப்படியே உட்கார்ந்தான்.இலேசான குளிர். தண்ணீரிலிருந்து மீன்கள் மேலே துள்ளி,மீண்டும் தண்ணிக்குள் விழுந்தன. துணி துவைக்க போடப்பட்டிருந்த கருங்கல்லின் அடியில் தண்ணீர் பாம்பொன்று தலையை நீட்டிக்கொண்டிருந்தது.
சடச்சான் அதைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அதன் தலையைப் பிடித்து இழுத்து இரண்டு சுற்று சுற்றி பளீரென்று தரையில் அடித்திருப்பான். பாம்புக்கு ஆயுசு கெட்டி.
சிவசைலத்திலிருந்து பெருமாள் கோயிலுக்குப் பால் கொண்டு வரும் கோபாலன் இவனைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி, 'என்ன சடச்சான் விடியதுக்குள்ள இங்க வந்துட்ட ' என்று கேட்டான்.
'ஒண்ணுமில்ல மாமா, சித்தப்பா ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச்சு. அதான் பல் தேய்ச்சிட்டுப் போலாம்னு வந்தேன் ' என்றான்.
'அப்டியா பாத்து இருந்துக்கோல, 'என்று சொல்லிவிட்டுப் போனான்.
இடுப்புப்பகுதியில் சாரத்துக்குள் சொருகி வைத்திருந்த வேப்பங்குச்சியை எடுத்து தூக்கக் கலக்கத்துடனேயே பல் தேய்த்தான். கரையில் இருந்து கொண்டு எச்சிலைப் புளிச்சென்று தண்ணிக்குள் துப்பினான். துப்பப்பட்ட இடத்தில் மீன்கள் துள்ளி விழுந்தன. அவனுக்கு அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தது. தண்ணீரின் அருகில் சென்றான். கால் நனையாமல், காற்றடித்து தண்ணீரடினால் நனைந்துவிடுமளவுக்கான தூரத்தில் குத்த வைத்துக்கொண்டு துப்பிக்கொண்டிருந்தான்.
எதிரில் வயலுக்குப் போகும் இடும்பனிடம், ' 'ஏய் இடும்பா நான் ஊருக்குப் போறேன் 'என்றான்.
'உன்னைய யாருல கூட்டிட்டுப்போறா '
'சித்தப்பா '
'அங்க போய் ஒழுங்கா இரி, ஆத்துக்கு போறேன்,வாய்க்கலுக்குப் போறேன்னு அவருக்கு இழுத்து வச்சிராத '
'அது எனக்கு தெரியும் உஞ்சோலிய பாத்துட்டுப் போ '
' சும்மா போறவன கூப்புட்டு சோலியப் பாத்துட்டுப் போங்க. உனக்கு கொஞ்சமாவா கொழுப்பு இருக்கு ? '
திட்டிக்கொண்டே சென்றான்.
துப்புவதையும் மீன்கள் துள்ளுவதையும் அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருந்தான். பிறகு ஒரு கையால் தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவினான். தண்ணீர் குளிர்ந்திருந்தது.இன்னொரு முறை தண்ணீரை அள்ள முயன்ற போது வலது கால் இலேசாக வழுக்க, முஞ்சிக்குப்புற விழுந்தான் சடச்சான். முகம் மட்டும் தண்ணிக்குள் கிடக்க உடல் முழுவதும் கரையில் கிடந்தது. ஒரு முறை கையை ஊன்றி முகத்தை மேலே தூக்கியவன் பொத்தென்று தண்ணீருக்குள்ளேயே விழுந்தான்.
வலிப்பு வந்தது அவனுக்கு.
----
திண்ணையில் வெளியான என் கதை
Sunday, December 16, 2007
சாமி சண்ட
வாய்க்காலுக்கு வந்த புனமாலைக்கு தீப்பெட்டியில் குச்சிகள் இல்லாதது இப்போதுதான் தெரிந்தது. பீடியை வைத்துக் கொண்டு சிறிது நேரம் பாலத்தில் உட்கார்ந்திருந்தான் யாராவது கொண்டுவருவார்கள் என்று.
’பீடி குடிக்கலைன்னா உக்காரவே முடியாது. அப்பலயே பாத்து தொலைச்சிருக்கணும்’ பொசமுட்டிக்கொண்டு வந்தது. நமநமத்தது வாய். உதடும் வாயும் உள்ளே இறங்கும் புகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தன.
அஹ்ரகாரத்திலிருந்து வாய்க்காலுக்கு வரும் முடுக்கில், கொய்யா மரத்தின் பின்னால் யாரோ வருவது போலிருந்தது. இன்னும் சொளேரென விடியாததால் கூர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. பார்த்தான். பிடிபடவில்லை. வருபவருக்குப் பின்னால் தலப்பா கட்டிக்கொண்டு வருபவர் பீடி பற்றவைத்திருப்பது தெரிந்தது. ஆள் அடையாளம் தெரியாவிட்டாலும் புகை வருவது தெரிந்தது. தீ கிடைக்க போகும் ஆவலில் இருந்தான். நெருங்கி வர வர, முதலில் வருவது கொண்டை ஐயரென்றும், பின்னால் வருவது கொம்பன் என்பதும் தெரிந்தது.
ஐயர் பிள்ளையார் கோயிலுக்கு செல்கிறார். அவரிடம் தீப்பெட்டி இருக்காது. கொம்பனிடம் நேற்று முன் தினம் வரை உறவு இருந்தது. சொந்தக்காரப் பயதான். நேற்றிலிருந்து நிலைமை வேறு. பகையாளியாகிப்போனான். அவன் மட்டுமல்ல. அவன் குடும்பமும். அவனிடம் தீப்பெட்டி கேட்க முடியாது. முடியாது என்பதல்ல; கூடாது.
கொண்டை ஐயர் அருகில் வந்தார். அவருக்கு கண்கள் தெளிவாகத் தெரியாது. காதும் சரியாக கேட்காது. கையை வலது கண்ணருகில் வைத்து உற்றுப் பார்த்தார்.
‘‘பொனமாலையாடா?’’
‘‘ஆமா...சாமி"என்று அவன் சொன்னதும் நின்று விட்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து அவன் கையில் வைத்துக் கொண்டான். ஐயர், பின்னால் வரும் கொம்பனைக் கவனிக்காமல். '‘ஏண்டா நேத்து வரை தாயும் புள்ளயுமா பழகிட்டு, இப்படி திடீர்னு அடிதடியில இறங்கிட்டேளே... உங்களுக்குள்ளயே அடிச்சுக்கிறது நல்லாவாடா இருக்கு?’’என்றார்.
புனமாலைக்குத் தர்மசங்கடமாகியது. இப்போது ஏதாவது சொல்ல, பதிலுக்கு பொந்தனும் சொன்னானென்றால் விவகாரம் சிக்கலாகிவிடும் என்பதால்,
''அதெல்லாம் பொறவு பேசுவோம் சாமி. எங்க போறியோ?’’ என்று பேச்சை மாற்றினான்.
பின்னால் வந்த கொம்பனும், நான் வரும்போது ஏதும் பேச வேண்டாம் என்பது போல சத்தமாக இருமினான். திரும்பிப்பார்த்த ஐயர், அவன் சொன்னது சரிதான் என்று கணைத்துகொண்டு, ‘‘வர்றேண்டா, போய் மாலை கட்டணும். வேலை இருக்கு’’ என்று கிளம்பப் போனார்.
புனமாலைக்கு இருப்புக்கொள்ளவில்லை. இதுக்கு மேலும் தீபெட்டிக்காக இங்கே இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. நாப்பதடி நடந்தால் பிள்ளையார் கோயில். பேசாமல் ஐயருடன் கோயிலுக்கு சென்று தீப்பெட்டி வாங்கலாமென்று நினைத்தான்.
‘‘ஏஞ்சாமி...கோயில்ல தீப்பெட்டி இருக்குமா?’’
‘‘ஏண்டா?‘’
‘‘பீடி பத்த வைக்கணும்...’’
‘‘இதுக்கு கோயிலுக்கு எதுக்கு? இந்தா மடியிலேயே வச்சிருக்கேன்’’ என்று கொடுத்தார்.
‘‘இடுப்புல தீப்பெட்டிய வச்சுட்டு அலையிதியோ... ஆரம்பிச்சிட்டேளா?’’
‘‘என்னையும் உன்ன போல ஆக்க பாக்கியா? கோயிலுக்குள்ள வெளிச்சம் இருக்காது. உள்ள தீப்பெட்டிய வச்சா தேட முடியாது. அதான் இடுப்புலயே வச்சுக்கிறது’ என்று விளக்கம் தந்தார்.
இவரது விளக்கத்தை ஏதோ கேட்டுவிட்டு கருவ மூட்டுக்குள் போனான்.
வாய்க்காலில் கால் கழுவிவிட்டு அவன் வந்தபோது எதிரிலிருந்த தெப்பக்குள திண்டில் வன்னிய நம்பியும் கேசரி பயலும் உட்கார்ந்து இவ் விவகாரம் தொடர்பாக நீட்டி முழங்கிக்கொண்டிருந்தனர். அருகில் மேல பட்றையை சேர்ந்த பொன்னன் மகன் சோம்பல் முறித்துகொண்டு நின்றிருந்தான்.மாடு மேய்க்க வரும் சேக்காளி.
‘‘ஏல என்ன இங்ஙன உக்காந்துட்டியோ?"
‘‘வேற போக்கெடம் எங்க இருக்கு?’’
‘‘சர்தான், தீப்பெட்டி இல்லைன்னு வாய்க்கா பாலத்துல உக்காந்திருந்தேன். கொண்ட ஐயரு வந்தாரு பாத்துக்கோ. போனவரு சும்மா போவாண்டமா? ஏன்டா இப்டி அடிச்சுக்கிடுதியோன்னாரு. பின்னாலயே கொம்பன் வாராம்...’’
‘‘வந்தான்ன?’’
‘‘எதுக்கு போட்டு சனியன வெலகொடுத்து வாங்கணும்?’’
‘‘இது என்னமோ சொன்னாப்ல இருக்கே’’
‘‘அதில்லலா.. நாம ஒண்ணு சொல்ல, அவன் ஒண்னு சொல்ல...எதுக்குனுதான்’’என்றான்.
பொன்னன் மகன், புனமாலை பக்கம் திரும்பி, ‘ஏண்ணே நீதான் ஊனி கம்ப தூக்கிகிட்டு நாராயாண கோனை அடிக்க போனியாம்’ என்று கேட்டான்.
‘‘ஆமா.. கழுதய விடு"
‘‘என்ன விடுங்க... வெவாரம் என்னனு சொல்லு"
‘‘உனக்கு ஒண்ணுமே தெரியாதோல..."
‘‘தெரிஞ்சா ஏன் அர்தலி ஒங்கிட்ட தொங்குதேன். தோப்பு வெவாரமா?"
‘‘மண்ணாங்கட்டி’’
‘‘பெறவு’’
‘‘கோயில் வெவாரம்ல’’
‘‘கருசாமி கோயில்லயா?’’
‘‘புள்ள பூச்சி மாதிரி கொடஞ்சிட்டே இருல’’
‘‘என்னன்னுதான் சொல்லித் தொலைங்களேன்’’
‘‘மந்திரமூர்த்தி கோயிலு எடப் பிரச்னை’’
ஊர் மத்தியில் இருக்கும் குறுகலான சந்தின் இடப் பக்கத்தில் இருக்கிறது மந்திரமூர்த்தி கோயில். நான்கு தலைமுறைக்கு முன்பு வரை, இது பிரம்மராட்சதை கோயிலாக இருந்தது. பிரம்மராட்சதை மந்திரமூர்த்தி கோயிலானதற்கு பெரும் கதை இருக்கிறது. பல கதைகளை ஊறப் போட்டிருக்கும் மண், இதுக்கொரு கதை வைத்திருப்பதில் வியப்பேதும் இல்லை. சாமிகளுக்கும் கோயில்களுக்கும் வரலாறு இருப்பது மாதிரி இதுக்கும் வரலாறு இருக்கிறது.
ஊரில் பெரும்வசதி படைத்த சொள்ளமுத்து குடும்பத்துக்கும், கருப்பு சுப்பையா குடும்பத்துக்குமான ஆளுமை போட்டி, முறுக்கிவிடப்பட்ட மீசையில் தெரிந்துகொண்டிருந்தது. இருவரும் ஒரே கொடியில் பிரிந்த கிளைகள் என்பதாகக் கொள்க.
சொ.மு. குடும்பத்தினருடையது பிரம்மராட்சதை. சொ.மு. அம்மாவுக்கு முதன்முதலில் அம்மன் இறங்கி சாமியாட ஆரம்பித்து பல வருடங்களுக்குப் பிறகு கோயில்கட்ட உத்தரவிட்டது.
சாமிகளின் உத்தரவு சக்திவாய்ந்ததென்பதால் சொ.மு. குடும்ப சொத்திற்குட்பட்ட ஏழு சென்ட் இடம் கோயிலுக்கென ஒதுக்கப்பட்டு பிம்மராட்சதைப் பூடமானாள். வெறும் பிரம்மராட்சதையை மட்டும் பூடமாக்கக்கூடாது என்பதால், அவளுக்குத் துணை சாமியாக தபசுநாதர், நாராயணன், பட்றயன் இன்னும் சில சாமிகளும் பூடமாயினர். குடும்பத்தில், ஆளுக்கு ஒருவர் பூடங்களுக்கு சாமியாடி வந்தனர்.
ஓவ்வொரு ஆடி மாதத்தின் மூன்றாம் செவ்வாய் புனித கிழமையாக கருதப்பட்டு அன்று கொடை கொடுக்கப்பட்டு வந்தது. கொடை கொடுப்பது வசதி வாய்ப்புகளின் வெளிப்பாடாக ஆகிப்போனதால் சொ.மு குடும்பம், அவரது பொண்ணு கொடுத்த, எடுத்த மற்றும் வெளியூர் உறவுகளின் படோபடத்தைக் காட்டும் விதமாக நடந்தப்பட்டு வந்தது கொடை.
இப்படியான நாளில்தான் க.சு.வின் கனவில் மந்திரமூர்த்தி உதயமானார். அவர் எந்த ஒளிவட்டத்துடன் வந்தாரென்பதையோ, கையில் எந்த ஆயுதத்தை வைத்தாரென்பதையோ அவர் சொல்லவில்லை.
‘‘ஊரெல்லாம் போயி சாமி கும்புடுத... எனக்கொரு பூடம் கொடுத்து கும்புட்டான்ன?’’என்பது மந்திர மூர்த்தியின் கேள்வியாக இருந்தது.
மந்திரமூர்த்திக்கு இப்படியரு ஆசை இருந்ததையும், அதைக் கனவில் தோன்றி சொன்னதையும் க.சு.வால் தாங்கி கொள்ள முடியவில்லை. சாமி வந்து கேட்கும் வரைக்கும் பூடம் கொடுக்காமல் இருந்தது எப்படி என்ற ஆழ் உணர்வு கேள்விக்குள் செல்லாமல், திட்டம் நிறைவேற்ற தயாரானார்.
பூடத்தை எங்கே கொடுப்பது என்று குழம்பம் முதலில் வந்தது.
இதற்காக பார்க்கப்பட்ட அவரது தோட்டம் குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு க.சு.வின் தாத்தா சமாதியாகி நடுகல்லாக நின்றார். ஒருவரை புதைத்த இடத்தில் மக்களை காக்கும் தெய்வத்துக்குப் பூடம் கொடுப்பது சாத்தியப்படாது.
பிறகு வைக்கோல் படப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த புளியமர பொட்டலில் இடம் பார்க்கப்பட்டு, அதுவும் நிராகரிக்கப் பட்டது. காரணம் மூன்று வருடங்களுக்கு முன் வயல் அறுவடை நாள் ஒன்றில் மூக்கன் மகன் நொடிஞ்சான் வலிப்பு வந்து இங்குதான் மண்டையை போட்டான்.
மாட்டு தொழுவின் ஓரத்தில் வில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கருகில் பூடம் கொடுக்கலாமென்று பக்கத்துவீட்டு பச்சை கொடுத்த ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டது.
‘‘மாட்டுத்தொழுவத்துல போயி, பூடம் கொடுப்பாவுளா?’’
இறுதியாக ஊரில் ஒண்ணுவிட்ட சொந்தங்களுக்குள் நடந்த கல்யாணமொன்றில் சொ.மு. காதுக்கு இவ்விஷயம் காற்று வாக்கில் விழுந்தது. ஏழு வெற்றிலையை சுண்ணாம்பு சேர்த்து ஒரே வாயில் அமுக்கி கொண்டு கொழ கொழவென்று சொன்னார்.
‘‘இந்தப் பய எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டானா? என்னடா பெரிய எடம்? எங்கோயிலுக்குள்ளயே பூடத்தை வச்சுட்டு போவ வேண்டியதான?’’ என்று உணர்ச்சி வெளிபாட்டில் சொல்லிவிட்டார். இப்படியரு விஷயம் இருப்பதையும் இப்போதுதான் க.சு. உணர்ந்தார். மீசையில் இருந்த கவுரவத்தை ஓரத்தில் வைத்துவிட்டு, சொ.மு.முன் நின்றார் க.சு..
உறவுகள் கைகோர்த்தன.
இந்த தாரள மனதுக்குப் பின், பிரம்மராட்சதை கோயிலில் சில விதிகளின் படி மந்திரமூர்த்தி பூடமானார். மற்ற பூடங்களை விட மிகமிக உயரமான அளவில் மந்திரமூர்த்தி பூடம் இருக்கவேண்டும் என்பது விதி. அதன்படி, ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை பூடம் நிறுவப்பட்டது. நாளாக ஆக மந்திரமூர்த்தியின் சக்தியறிந்து ஊர்க்காரர்கள் தந்த மரியாதையையடுத்து, பிரம்மராட்சதை கோயில் மந்திரமூர்த்தி கோயிலானது. மந்திரமூர்த்திக்கு கொடை கொடுக்கும் அதே நாளில் பிரம்மராட்சதைக்கும் கொடை.
போனவாரம் கொடை. சாமக் கொடையின் போது மேளக்காரர்கள் கொட்டடித்துக் கொண்டிருந்தனர். மேளச்சத்தம் கேட்க கேட்க சாமி
யாடிகள் ஆக்ரோஷமாகி கொண்டிருந்தனர்.
பிரம்மராட்சதைக்கும் அந்த சாமியின் வகையறா பூடங்களுக்கும் ஆடிக்கொண்டிருந்த சாமிகள் ஆங்காரம் அதிகமாகி, ‘அம்மனுக்கு அடிப்பா... மேளத்தை, அம்மனுக்கு அடிப்பா’ என்று கத்த தொடங்கினர். அதே நேரத்தில் பட்றயனுக்கு ஆடுபவர், ‘எனக்கு அடிப்பா’என்று ஆங்காரத்துடன் கத்த, மேளம் அடிப்பவர்களின் மேளம் தடுமாறிகொண்டிருந்தது.
இந்த சாமி, அந்த சாமி என்று மாறி மாறி தங்கள் சாமியின் தாளத்தை அடிக்க சொல்ல, பிரம்மராட்சதையைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் மேளக்காரர்கள். பிரச்னை இங்குதான் ஆரம்பித்தது.
ஒரு மாதிரியாக சாமக்கொடை முடிந்த நேரத்தில் பிரம்மராட்சதைக் குடும்பத்தினர் ரகசிய கூட்டம் நடத்தினர்.
‘‘கோயிலு நம்மகோயிலு. இவனுவோ சொல்லுததான் எல்லாரும் கேக்கானுவோ. இதுக்கு எதுக்கு நம்ம ஆடணும்? இதை இப்படியே விட்டா சரியாயிருக்காது. கொடை முடிஞ்சதும் வெவாரத்தை வைக்கணும்’’என்பது ரகசிய கூட்ட தீர்மானம்.
இந்த தீர்மானம் க.சு. வகையறாவான நட்டன் காதில் விழுந்து தொலைத்தது. அடுத்தடுத்த நிமிடங்களில் ஆளாளுக்கு கர் புர்ரென நிற்க, கோயில் கொடை முடிந்த மறுநிமிடமே அடிதடி ஆரம்பித்தது.
சொ.கோ குடும்பத்தினர் ஒரு பக்கமும், க.சு வகையறாக்கள் ஒரு புறமும் நின்று கொண்டு, ‘‘நீ இங்க வால, நீங்க இங்க வாங்கல’’என்று சவால் விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பிரம்மராட்சதைக்கு ஆடும் நாராயணன் மண்டையில் நச்சென்று விழுந்தது ஒரு செங்கல். அடுத்தடுத்த நிமிடங்கள் போர் காட்சிகளாயின. கவிஞர் ஜெயங்கொண்டார் இருந்திருந்தால், இந்தப் பரணியை என்னவென்று பாடியிருப்பாரோ?
பஞ்சாயத்து தலைவர் தலைமையில் வேறு பட்றை ஆட்கள் வந்து சண்டையை விலக்க, நான்கு பேர் மண்டை உடைந்திருந்தது. ஏழு பேருக்கு கன்னம் கை, கால், இடுப்பு உள்ளிட்ட உடலின் சில பாகங்கள் வீங்கியிருந்தன.
இன்று பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் விவகாரம் வந்தது. கோயிலுக்குப் பின் பக்கம் இருக்கும் வாதமடக்கி மரத்தின் கீழ், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.
இந்த திடீர் பஞ்சாயத்தை ஒட்டி பாதிக்கப்பட்ட மற்றும் கலவரத்தில் கலந்து கொண்ட உறவுக்காரர்கள் வேறு, வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தனர். இம்மாதிரி பஞ்சாயத்துகளுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லாத்ததால், பஞ்சாயத்து தெளிவாக தெரியும் முத்தையா வீட்டு வாசலில் கூடியிருந்தனர். மடியில் வறுத்த அரிசி, தண்ணியில் ஊற போட்ட அரிசி, பொறிகடலை உள்ளிட்ட கொறித்தல் வகையறாக்களை வைத்திருந்தனர்.
நான்கைந்து பேராக பஞ்சாயத்துக்கு வந்தவண்ணமிருந்தனர். வந்தவர்கள் பிரித்துவிடப்பட்ட மாதிரி எதிரெதிர் பக்கங்களில் அமர்ந்தனர். ‘‘நீங்களா பேசி ஏதாவது முடிவெடுங்கப்பா’’என்கிற மாதிரி ஓரத்தில் துண்டை விரித்து தூங்கினர் நான்கைந்து பேர்.
தலைவர் வந்தார். பெஞ்சில் உட்கார்ந்தார். க.சு குடும்பத்தில் மூத்தவரான வண்டி மந்திரமும் சு.கோ குடும்பத்தில் மூத்தவரான பலவேசமும் இட, வல புறங்களில் அமர்ந்திருந்தனர்.
‘‘நமக்குள்ளேயே அடிச்சிருக்கிடுதது நல்லாவாயா இருக்கு. கொடை கொடுத்தியோ சரி... அதுக்குள்ள ஒங்களுக்கு என்ன வந்தது? எவன் எப்படி போவான்னு ஊர்ல பாதி பேர் பாத்துகிட்டே இருக்காம். அவனுவோ சிரிக்க மாதிரியா இருப்பியோ...’’ தலைவர்தான் ஆரம்பித்தார்.
‘‘இல்ல... இந்த ஆக்கங்கெட்ட பயலுவோ...’’
‘‘யாரை ஆக்கங்கெட்டவங்க... ஏல எந்திரிங்கல...’’ படாரென்று பத்து பேர் எழுந்து முன்பக்கம் பாய, அவர்கள் மேல் நான்கைந்து பேர் ணங்கென்று போட, கொடைக்கு போடப்பட்டிருந்த பந்தக்கால்கள் உருவபட்டு ஆரம்பமானது அடி தடி.
மந்திரமூர்த்தியும், பிரம்மராட்சதையும் அமைதியாகவே இருந்தனர் களேபரத்தின் நடுவே.
’பீடி குடிக்கலைன்னா உக்காரவே முடியாது. அப்பலயே பாத்து தொலைச்சிருக்கணும்’ பொசமுட்டிக்கொண்டு வந்தது. நமநமத்தது வாய். உதடும் வாயும் உள்ளே இறங்கும் புகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தன.
அஹ்ரகாரத்திலிருந்து வாய்க்காலுக்கு வரும் முடுக்கில், கொய்யா மரத்தின் பின்னால் யாரோ வருவது போலிருந்தது. இன்னும் சொளேரென விடியாததால் கூர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. பார்த்தான். பிடிபடவில்லை. வருபவருக்குப் பின்னால் தலப்பா கட்டிக்கொண்டு வருபவர் பீடி பற்றவைத்திருப்பது தெரிந்தது. ஆள் அடையாளம் தெரியாவிட்டாலும் புகை வருவது தெரிந்தது. தீ கிடைக்க போகும் ஆவலில் இருந்தான். நெருங்கி வர வர, முதலில் வருவது கொண்டை ஐயரென்றும், பின்னால் வருவது கொம்பன் என்பதும் தெரிந்தது.
ஐயர் பிள்ளையார் கோயிலுக்கு செல்கிறார். அவரிடம் தீப்பெட்டி இருக்காது. கொம்பனிடம் நேற்று முன் தினம் வரை உறவு இருந்தது. சொந்தக்காரப் பயதான். நேற்றிலிருந்து நிலைமை வேறு. பகையாளியாகிப்போனான். அவன் மட்டுமல்ல. அவன் குடும்பமும். அவனிடம் தீப்பெட்டி கேட்க முடியாது. முடியாது என்பதல்ல; கூடாது.
கொண்டை ஐயர் அருகில் வந்தார். அவருக்கு கண்கள் தெளிவாகத் தெரியாது. காதும் சரியாக கேட்காது. கையை வலது கண்ணருகில் வைத்து உற்றுப் பார்த்தார்.
‘‘பொனமாலையாடா?’’
‘‘ஆமா...சாமி"என்று அவன் சொன்னதும் நின்று விட்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து அவன் கையில் வைத்துக் கொண்டான். ஐயர், பின்னால் வரும் கொம்பனைக் கவனிக்காமல். '‘ஏண்டா நேத்து வரை தாயும் புள்ளயுமா பழகிட்டு, இப்படி திடீர்னு அடிதடியில இறங்கிட்டேளே... உங்களுக்குள்ளயே அடிச்சுக்கிறது நல்லாவாடா இருக்கு?’’என்றார்.
புனமாலைக்குத் தர்மசங்கடமாகியது. இப்போது ஏதாவது சொல்ல, பதிலுக்கு பொந்தனும் சொன்னானென்றால் விவகாரம் சிக்கலாகிவிடும் என்பதால்,
''அதெல்லாம் பொறவு பேசுவோம் சாமி. எங்க போறியோ?’’ என்று பேச்சை மாற்றினான்.
பின்னால் வந்த கொம்பனும், நான் வரும்போது ஏதும் பேச வேண்டாம் என்பது போல சத்தமாக இருமினான். திரும்பிப்பார்த்த ஐயர், அவன் சொன்னது சரிதான் என்று கணைத்துகொண்டு, ‘‘வர்றேண்டா, போய் மாலை கட்டணும். வேலை இருக்கு’’ என்று கிளம்பப் போனார்.
புனமாலைக்கு இருப்புக்கொள்ளவில்லை. இதுக்கு மேலும் தீபெட்டிக்காக இங்கே இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. நாப்பதடி நடந்தால் பிள்ளையார் கோயில். பேசாமல் ஐயருடன் கோயிலுக்கு சென்று தீப்பெட்டி வாங்கலாமென்று நினைத்தான்.
‘‘ஏஞ்சாமி...கோயில்ல தீப்பெட்டி இருக்குமா?’’
‘‘ஏண்டா?‘’
‘‘பீடி பத்த வைக்கணும்...’’
‘‘இதுக்கு கோயிலுக்கு எதுக்கு? இந்தா மடியிலேயே வச்சிருக்கேன்’’ என்று கொடுத்தார்.
‘‘இடுப்புல தீப்பெட்டிய வச்சுட்டு அலையிதியோ... ஆரம்பிச்சிட்டேளா?’’
‘‘என்னையும் உன்ன போல ஆக்க பாக்கியா? கோயிலுக்குள்ள வெளிச்சம் இருக்காது. உள்ள தீப்பெட்டிய வச்சா தேட முடியாது. அதான் இடுப்புலயே வச்சுக்கிறது’ என்று விளக்கம் தந்தார்.
இவரது விளக்கத்தை ஏதோ கேட்டுவிட்டு கருவ மூட்டுக்குள் போனான்.
வாய்க்காலில் கால் கழுவிவிட்டு அவன் வந்தபோது எதிரிலிருந்த தெப்பக்குள திண்டில் வன்னிய நம்பியும் கேசரி பயலும் உட்கார்ந்து இவ் விவகாரம் தொடர்பாக நீட்டி முழங்கிக்கொண்டிருந்தனர். அருகில் மேல பட்றையை சேர்ந்த பொன்னன் மகன் சோம்பல் முறித்துகொண்டு நின்றிருந்தான்.மாடு மேய்க்க வரும் சேக்காளி.
‘‘ஏல என்ன இங்ஙன உக்காந்துட்டியோ?"
‘‘வேற போக்கெடம் எங்க இருக்கு?’’
‘‘சர்தான், தீப்பெட்டி இல்லைன்னு வாய்க்கா பாலத்துல உக்காந்திருந்தேன். கொண்ட ஐயரு வந்தாரு பாத்துக்கோ. போனவரு சும்மா போவாண்டமா? ஏன்டா இப்டி அடிச்சுக்கிடுதியோன்னாரு. பின்னாலயே கொம்பன் வாராம்...’’
‘‘வந்தான்ன?’’
‘‘எதுக்கு போட்டு சனியன வெலகொடுத்து வாங்கணும்?’’
‘‘இது என்னமோ சொன்னாப்ல இருக்கே’’
‘‘அதில்லலா.. நாம ஒண்ணு சொல்ல, அவன் ஒண்னு சொல்ல...எதுக்குனுதான்’’என்றான்.
பொன்னன் மகன், புனமாலை பக்கம் திரும்பி, ‘ஏண்ணே நீதான் ஊனி கம்ப தூக்கிகிட்டு நாராயாண கோனை அடிக்க போனியாம்’ என்று கேட்டான்.
‘‘ஆமா.. கழுதய விடு"
‘‘என்ன விடுங்க... வெவாரம் என்னனு சொல்லு"
‘‘உனக்கு ஒண்ணுமே தெரியாதோல..."
‘‘தெரிஞ்சா ஏன் அர்தலி ஒங்கிட்ட தொங்குதேன். தோப்பு வெவாரமா?"
‘‘மண்ணாங்கட்டி’’
‘‘பெறவு’’
‘‘கோயில் வெவாரம்ல’’
‘‘கருசாமி கோயில்லயா?’’
‘‘புள்ள பூச்சி மாதிரி கொடஞ்சிட்டே இருல’’
‘‘என்னன்னுதான் சொல்லித் தொலைங்களேன்’’
‘‘மந்திரமூர்த்தி கோயிலு எடப் பிரச்னை’’
ஊர் மத்தியில் இருக்கும் குறுகலான சந்தின் இடப் பக்கத்தில் இருக்கிறது மந்திரமூர்த்தி கோயில். நான்கு தலைமுறைக்கு முன்பு வரை, இது பிரம்மராட்சதை கோயிலாக இருந்தது. பிரம்மராட்சதை மந்திரமூர்த்தி கோயிலானதற்கு பெரும் கதை இருக்கிறது. பல கதைகளை ஊறப் போட்டிருக்கும் மண், இதுக்கொரு கதை வைத்திருப்பதில் வியப்பேதும் இல்லை. சாமிகளுக்கும் கோயில்களுக்கும் வரலாறு இருப்பது மாதிரி இதுக்கும் வரலாறு இருக்கிறது.
ஊரில் பெரும்வசதி படைத்த சொள்ளமுத்து குடும்பத்துக்கும், கருப்பு சுப்பையா குடும்பத்துக்குமான ஆளுமை போட்டி, முறுக்கிவிடப்பட்ட மீசையில் தெரிந்துகொண்டிருந்தது. இருவரும் ஒரே கொடியில் பிரிந்த கிளைகள் என்பதாகக் கொள்க.
சொ.மு. குடும்பத்தினருடையது பிரம்மராட்சதை. சொ.மு. அம்மாவுக்கு முதன்முதலில் அம்மன் இறங்கி சாமியாட ஆரம்பித்து பல வருடங்களுக்குப் பிறகு கோயில்கட்ட உத்தரவிட்டது.
சாமிகளின் உத்தரவு சக்திவாய்ந்ததென்பதால் சொ.மு. குடும்ப சொத்திற்குட்பட்ட ஏழு சென்ட் இடம் கோயிலுக்கென ஒதுக்கப்பட்டு பிம்மராட்சதைப் பூடமானாள். வெறும் பிரம்மராட்சதையை மட்டும் பூடமாக்கக்கூடாது என்பதால், அவளுக்குத் துணை சாமியாக தபசுநாதர், நாராயணன், பட்றயன் இன்னும் சில சாமிகளும் பூடமாயினர். குடும்பத்தில், ஆளுக்கு ஒருவர் பூடங்களுக்கு சாமியாடி வந்தனர்.
ஓவ்வொரு ஆடி மாதத்தின் மூன்றாம் செவ்வாய் புனித கிழமையாக கருதப்பட்டு அன்று கொடை கொடுக்கப்பட்டு வந்தது. கொடை கொடுப்பது வசதி வாய்ப்புகளின் வெளிப்பாடாக ஆகிப்போனதால் சொ.மு குடும்பம், அவரது பொண்ணு கொடுத்த, எடுத்த மற்றும் வெளியூர் உறவுகளின் படோபடத்தைக் காட்டும் விதமாக நடந்தப்பட்டு வந்தது கொடை.
இப்படியான நாளில்தான் க.சு.வின் கனவில் மந்திரமூர்த்தி உதயமானார். அவர் எந்த ஒளிவட்டத்துடன் வந்தாரென்பதையோ, கையில் எந்த ஆயுதத்தை வைத்தாரென்பதையோ அவர் சொல்லவில்லை.
‘‘ஊரெல்லாம் போயி சாமி கும்புடுத... எனக்கொரு பூடம் கொடுத்து கும்புட்டான்ன?’’என்பது மந்திர மூர்த்தியின் கேள்வியாக இருந்தது.
மந்திரமூர்த்திக்கு இப்படியரு ஆசை இருந்ததையும், அதைக் கனவில் தோன்றி சொன்னதையும் க.சு.வால் தாங்கி கொள்ள முடியவில்லை. சாமி வந்து கேட்கும் வரைக்கும் பூடம் கொடுக்காமல் இருந்தது எப்படி என்ற ஆழ் உணர்வு கேள்விக்குள் செல்லாமல், திட்டம் நிறைவேற்ற தயாரானார்.
பூடத்தை எங்கே கொடுப்பது என்று குழம்பம் முதலில் வந்தது.
இதற்காக பார்க்கப்பட்ட அவரது தோட்டம் குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு க.சு.வின் தாத்தா சமாதியாகி நடுகல்லாக நின்றார். ஒருவரை புதைத்த இடத்தில் மக்களை காக்கும் தெய்வத்துக்குப் பூடம் கொடுப்பது சாத்தியப்படாது.
பிறகு வைக்கோல் படப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த புளியமர பொட்டலில் இடம் பார்க்கப்பட்டு, அதுவும் நிராகரிக்கப் பட்டது. காரணம் மூன்று வருடங்களுக்கு முன் வயல் அறுவடை நாள் ஒன்றில் மூக்கன் மகன் நொடிஞ்சான் வலிப்பு வந்து இங்குதான் மண்டையை போட்டான்.
மாட்டு தொழுவின் ஓரத்தில் வில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கருகில் பூடம் கொடுக்கலாமென்று பக்கத்துவீட்டு பச்சை கொடுத்த ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டது.
‘‘மாட்டுத்தொழுவத்துல போயி, பூடம் கொடுப்பாவுளா?’’
இறுதியாக ஊரில் ஒண்ணுவிட்ட சொந்தங்களுக்குள் நடந்த கல்யாணமொன்றில் சொ.மு. காதுக்கு இவ்விஷயம் காற்று வாக்கில் விழுந்தது. ஏழு வெற்றிலையை சுண்ணாம்பு சேர்த்து ஒரே வாயில் அமுக்கி கொண்டு கொழ கொழவென்று சொன்னார்.
‘‘இந்தப் பய எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டானா? என்னடா பெரிய எடம்? எங்கோயிலுக்குள்ளயே பூடத்தை வச்சுட்டு போவ வேண்டியதான?’’ என்று உணர்ச்சி வெளிபாட்டில் சொல்லிவிட்டார். இப்படியரு விஷயம் இருப்பதையும் இப்போதுதான் க.சு. உணர்ந்தார். மீசையில் இருந்த கவுரவத்தை ஓரத்தில் வைத்துவிட்டு, சொ.மு.முன் நின்றார் க.சு..
உறவுகள் கைகோர்த்தன.
இந்த தாரள மனதுக்குப் பின், பிரம்மராட்சதை கோயிலில் சில விதிகளின் படி மந்திரமூர்த்தி பூடமானார். மற்ற பூடங்களை விட மிகமிக உயரமான அளவில் மந்திரமூர்த்தி பூடம் இருக்கவேண்டும் என்பது விதி. அதன்படி, ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை பூடம் நிறுவப்பட்டது. நாளாக ஆக மந்திரமூர்த்தியின் சக்தியறிந்து ஊர்க்காரர்கள் தந்த மரியாதையையடுத்து, பிரம்மராட்சதை கோயில் மந்திரமூர்த்தி கோயிலானது. மந்திரமூர்த்திக்கு கொடை கொடுக்கும் அதே நாளில் பிரம்மராட்சதைக்கும் கொடை.
போனவாரம் கொடை. சாமக் கொடையின் போது மேளக்காரர்கள் கொட்டடித்துக் கொண்டிருந்தனர். மேளச்சத்தம் கேட்க கேட்க சாமி
யாடிகள் ஆக்ரோஷமாகி கொண்டிருந்தனர்.
பிரம்மராட்சதைக்கும் அந்த சாமியின் வகையறா பூடங்களுக்கும் ஆடிக்கொண்டிருந்த சாமிகள் ஆங்காரம் அதிகமாகி, ‘அம்மனுக்கு அடிப்பா... மேளத்தை, அம்மனுக்கு அடிப்பா’ என்று கத்த தொடங்கினர். அதே நேரத்தில் பட்றயனுக்கு ஆடுபவர், ‘எனக்கு அடிப்பா’என்று ஆங்காரத்துடன் கத்த, மேளம் அடிப்பவர்களின் மேளம் தடுமாறிகொண்டிருந்தது.
இந்த சாமி, அந்த சாமி என்று மாறி மாறி தங்கள் சாமியின் தாளத்தை அடிக்க சொல்ல, பிரம்மராட்சதையைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் மேளக்காரர்கள். பிரச்னை இங்குதான் ஆரம்பித்தது.
ஒரு மாதிரியாக சாமக்கொடை முடிந்த நேரத்தில் பிரம்மராட்சதைக் குடும்பத்தினர் ரகசிய கூட்டம் நடத்தினர்.
‘‘கோயிலு நம்மகோயிலு. இவனுவோ சொல்லுததான் எல்லாரும் கேக்கானுவோ. இதுக்கு எதுக்கு நம்ம ஆடணும்? இதை இப்படியே விட்டா சரியாயிருக்காது. கொடை முடிஞ்சதும் வெவாரத்தை வைக்கணும்’’என்பது ரகசிய கூட்ட தீர்மானம்.
இந்த தீர்மானம் க.சு. வகையறாவான நட்டன் காதில் விழுந்து தொலைத்தது. அடுத்தடுத்த நிமிடங்களில் ஆளாளுக்கு கர் புர்ரென நிற்க, கோயில் கொடை முடிந்த மறுநிமிடமே அடிதடி ஆரம்பித்தது.
சொ.கோ குடும்பத்தினர் ஒரு பக்கமும், க.சு வகையறாக்கள் ஒரு புறமும் நின்று கொண்டு, ‘‘நீ இங்க வால, நீங்க இங்க வாங்கல’’என்று சவால் விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பிரம்மராட்சதைக்கு ஆடும் நாராயணன் மண்டையில் நச்சென்று விழுந்தது ஒரு செங்கல். அடுத்தடுத்த நிமிடங்கள் போர் காட்சிகளாயின. கவிஞர் ஜெயங்கொண்டார் இருந்திருந்தால், இந்தப் பரணியை என்னவென்று பாடியிருப்பாரோ?
பஞ்சாயத்து தலைவர் தலைமையில் வேறு பட்றை ஆட்கள் வந்து சண்டையை விலக்க, நான்கு பேர் மண்டை உடைந்திருந்தது. ஏழு பேருக்கு கன்னம் கை, கால், இடுப்பு உள்ளிட்ட உடலின் சில பாகங்கள் வீங்கியிருந்தன.
இன்று பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் விவகாரம் வந்தது. கோயிலுக்குப் பின் பக்கம் இருக்கும் வாதமடக்கி மரத்தின் கீழ், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.
இந்த திடீர் பஞ்சாயத்தை ஒட்டி பாதிக்கப்பட்ட மற்றும் கலவரத்தில் கலந்து கொண்ட உறவுக்காரர்கள் வேறு, வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தனர். இம்மாதிரி பஞ்சாயத்துகளுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லாத்ததால், பஞ்சாயத்து தெளிவாக தெரியும் முத்தையா வீட்டு வாசலில் கூடியிருந்தனர். மடியில் வறுத்த அரிசி, தண்ணியில் ஊற போட்ட அரிசி, பொறிகடலை உள்ளிட்ட கொறித்தல் வகையறாக்களை வைத்திருந்தனர்.
நான்கைந்து பேராக பஞ்சாயத்துக்கு வந்தவண்ணமிருந்தனர். வந்தவர்கள் பிரித்துவிடப்பட்ட மாதிரி எதிரெதிர் பக்கங்களில் அமர்ந்தனர். ‘‘நீங்களா பேசி ஏதாவது முடிவெடுங்கப்பா’’என்கிற மாதிரி ஓரத்தில் துண்டை விரித்து தூங்கினர் நான்கைந்து பேர்.
தலைவர் வந்தார். பெஞ்சில் உட்கார்ந்தார். க.சு குடும்பத்தில் மூத்தவரான வண்டி மந்திரமும் சு.கோ குடும்பத்தில் மூத்தவரான பலவேசமும் இட, வல புறங்களில் அமர்ந்திருந்தனர்.
‘‘நமக்குள்ளேயே அடிச்சிருக்கிடுதது நல்லாவாயா இருக்கு. கொடை கொடுத்தியோ சரி... அதுக்குள்ள ஒங்களுக்கு என்ன வந்தது? எவன் எப்படி போவான்னு ஊர்ல பாதி பேர் பாத்துகிட்டே இருக்காம். அவனுவோ சிரிக்க மாதிரியா இருப்பியோ...’’ தலைவர்தான் ஆரம்பித்தார்.
‘‘இல்ல... இந்த ஆக்கங்கெட்ட பயலுவோ...’’
‘‘யாரை ஆக்கங்கெட்டவங்க... ஏல எந்திரிங்கல...’’ படாரென்று பத்து பேர் எழுந்து முன்பக்கம் பாய, அவர்கள் மேல் நான்கைந்து பேர் ணங்கென்று போட, கொடைக்கு போடப்பட்டிருந்த பந்தக்கால்கள் உருவபட்டு ஆரம்பமானது அடி தடி.
மந்திரமூர்த்தியும், பிரம்மராட்சதையும் அமைதியாகவே இருந்தனர் களேபரத்தின் நடுவே.
Tuesday, December 11, 2007
புளியம் பிஞ்சுக் காதல்
இன்றைய நிலவரப்படி முத்துசாமி திருப்பூரில் இருப்பதாக தகவல். நேற்றைய தகவல்கள் அவன், புனலூரில் அலைந்து கொண்டிருப்பதாக வந்தது. இம்மாதிரியான தகவல்களின் உண்மையை, நீங்களோ நானோ கணிக்க முடியாதது. மேற்சொன்ன தகவல்கள் செல்லிடப் பேசிகள் செவிக்குள் வராத காலகட்டம்.
முத்துசாமி, மாடுகளில் இருபத்தி ஏழையும், பன்னிரெண்டு செம்மறிகளையும் மேய்ப்பதை தொழிலாகக் கொண்டவன். மாட்டின் பற்கள், கொம்புகள், பால்சுரக்கும் மடுக்கள், அவை நடக்கும், அசையும் முறைகள், இன்ன பிற விவரங்களை நாக்கு நுனியில் வைத்திருப்பவன். உதாரணத்துக்கு ஒரு பதமாக, ‘கப்பை கொம்பு மாடுகள் ஈனும் குட்டிகள், கிடாரியாகத்தான் இருக்கும்' என்பதைக் கொள்ளலாம்.
இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ மாட்டின் பிரசவங்களை பார்வையாலேயே அறிந்துவிடும் நோக்கன் அவன்.
மாடுகளைப் பற்றி இப்படியான உலகறிவை பெற்றிருந்த அவன், போன திங்கட்கிழமை அவற்றைத் தவிக்க விட்டுவிட்டு, பஜனை மடத் தெரு பொன்னம்மாளோடு ஓடிவிட்டான். ஓடி விட்டான் என்பது நிஜமே. நடு ஜாமமோ, அதிகாலையிலோ பயணிகளை அடைக்கும் பஸ் வசதி ஊரில் கிடையாது. அவர்களின் பேச்சுப்படி, நள்ளிரவு தொழுவத்தின் பின்பக்கமாக (அது கருவை முட்கள் வளர்ந்து காடாகி இருக்கும் இடம்) வந்துவிடுவது, கையை பிடித்துக்கொண்டு இருவரும் ரயிலடிக்கு ஓடி செல்வது, அங்கிருந்து அம்பாசமுத்திரம். பிறகு திருச்செந்தூர். (இத்தகவல்கள் நேற்றுமுன்தினம் கதைக்கப்பட்டவை)
முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில், வள்ளி, தெய்வானை சமேதரான திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்' என்று யார் வாழ்த்தினார்களோ?
‘‘அம்பாசமுத்ரம் கார்சான்டுல பாத்தம்ல. அந்தப் புள்ள தலையில முக்காடை போட்டுட்டு நின்னுட்டிருந்து. இந்தப் பய, கையில ஒரு பைய வச்சுகிட்டு பஸ்ல ஏறுனாம்.'
&இது முதல் நாள் தகவல்.
அடுத்த தகவல், ‘‘இந்தப் பயல மாதிரியே இருக்கே அப்டின்னு அப்பவே நெனச்சேன். இவன் ஏன் இங்க வரப்போறான்; வேற யாராவது இருப்பாவோன்னுட்டு வந்துட்டேன். இங்க வந்தப் பெறவுலா தெரியுது''என்பதாக இருந்தது. இத்தகவலைச் சொன்னவர் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு வந்தவர்.
இந்த தகவல்களினூடாக முத்துசாமி, பொன்னம்மா காதல் மலர்ந்த கதையைக் கேட்டாக வேண்டும்.
மாடுண்டு தானுண்டு என்றிருந்த முத்துசாமி, அன்று உச்சி வெயில் பேய்கள் உலவும், சுப்பையா தோப்புக்கருகில் மாடுகளை மேய விட்டிருந்தான். அருகில் குளம். மாடுகள், எல்லை தாண்டி எங்கும் போகாது என்ற தைரியத்தில் அரசமரத்தினடியில் பூடமாக வீற்றிருந்த பச்சத்தி மாடனுக்கருகில் துண்டை விரித்து, நித்திரையில் ஆழ்ந்தான். கொளுத்தும் வெயிலில் இப்படியானதொரு குளு குளு இடம் தூங்குவதற்கு கிடைப்பது ஊருக்குள் அரிது.
வேலை வெட்டி இல்லாத வம்பளந்தான்கள் தூங்குவதற்காக, கட்டு பீடிகள் சகிதமாக இங்கு வருவதை வழக்கமாக்கி வைத்திருந்தனர். அவர்களின் தூக்கத்தை ஆசிர்வதிப்பவராக, பச்சத்திமாடன் அருள்பாளித்துக் கொண்டிருந்தார்.
அன்று மஞ்சப்புளிச்சேரியில் சிறுகிழங்கு எடுக்கப்போன மேலத் தெரு பொம்பளைப் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். தலையில் கிழங்கு எடுத்ததற்கான கூலியை தென்னம்பொட்டியில் வைத்துகொண்டு வந்தவர்களுக்குப் புளியங்காய் ஆசை. காரணம் சுப்பையா தோப்பிலுள்ள புளியங்காய்கள் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையை இயற்கையாகப் பெற்றிருந்தது.
பேய்கள் உலவும் இடம் என்று ஊர்க்காரர்களால் வர்ணிக்கப்பட்டிருப்பதால் தனியாகச் செல்ல அவர்கள் பயம் கொண்டனர். இதன் காரணமாகத் தூங்கிகொண்டிருந்த முத்துசாமி எழுப்பப்பட்டான். இளம் பெண்களின் ஆசையை பூர்த்தி செய்யாமல் இருக்க, அவனால் முடியவில்லை. காரணம் அதுமட்டுமல்ல. அவனுக்குள் சின்னதாக கிறக்கத்தை ஏற்படுத்தும் பொன்னம்மாள் சகதி அப்பிய தாவணியோடு, தரையில் கோடு கிழித்துக்கொண்டிருந்தாள்.
கோடுகள், சிற்றின்ப மூளையின் நரம்புகளை உசுப்பேற்றியதன் விளைவாக, வேலி தாண்ட துணிந்தான். வேலி என்பது பெயருக்குத்தான். பலமுறை பலர் அந்த வழியை பயன்படுத்தி சென்று அது பாதையாகவே மாறியிருந்தது.
சுப்பையா தோப்பு பசுஞ்சோலைகளாலானது என்று நினைத்திருந்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்த தோப்பு பொத்தைக்காட்டுக்குள் புழுதிகளால் சூழ்ந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்னை, புளிய, மா மரங்கள். பம்பு செட் தண்ணீர் தொட்டி இருப்பதற்கு அருகில் நெல் விளையும் வயல்களும், உள்ளி, மிளகாய் உள்ளிட்டவை விளையும் வயல்களும் இருந்தன.
முத்துசாமிக்கு புளியங்காய்கள் பறிப்பது கை வந்த கலை. இடுப்பு சாரத்தை தூக்கி கட்டிக்கொண்டு மரத்தில் ஏறி உலுப்பினான். இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பது மாதிரி கொத்துக்கொத்தாக விழுந்தன. பக்கத்து புளிய மரத்திலிருந்து ஒரக்காய்கள் தானாக விழுந்து கிடந்தன. (ஒரக்காய்கள் என்பது பாதி புளி ஆகியும் பாதி ஆகாமலும் இருக்கின்ற ரெண்டுங்கெட்டான் பருவம்). பாதி பச்சை, பாதி காப்பிக் கலரினாலான அதன் சுவை வித்தியாசமானது. புளியம் பிஞ்சுகள், மற்றும் ஒரக்காய்களை சாரத்துக்குள் போட்டுக்கொண்டு வந்தான். பச்சத்தி மாடன் சந்நிதியில் ஆளாளுக்குப் பிரித்துக்கொடுத்தான்.
பொன்னம்மாள் தாவணியின் ஓரத்தில் புளியம் பிஞ்சுகளைக் கொட்டி, அதை முடிய போனாள். அப்போதுதான் கண்ணில் பட்டது. வளைந்து நெளிந்து கிடக்கும் புளியம்பிஞ்சுகளில் ஒன்று இருதய வடிவத்தில் வளைந்திருந்தது. அதை கையில் எடுத்துவிட்டு அவனைப் பார்த்தாள். அவன் வழக்கமான பல்லிளிப்பை உதிர்த்து, அவளது மேனி அளந்தான். எல்லோருக்கும் கொடுத்த அவன், நமக்கு மட்டும் இருதய வடிவிலான புளியம் பிஞ்சை கொடுத்திருப்பது அவனது உளக்கிடக்கையை வெளிப்படுத்தத்தான் என்பதாக அவளுக்குப் பட்டது. அடுத்த வினாடியிலிருந்து காதல் பிரவாகமெடுத்து ஓடத் தொடங்கியது. புன்னகைத்தாள். மனசுக்குப் பிடித்தவளின் இம்மாதிரியான புன்னகைகள் கிடைப்பது அரிதென்பதால் கனவுலகில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான் முத்துசாமி. அந்த சைக்கிளின் கேரியரில் பொன்னம்மாள் வெட்கப்பட்டுக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் போன மாதம்தான் புதிதாக டூரிங் தியேட்டர் வந்திருந்தது. அது தொடங்கி, திரையிடப்பட்ட ஏழெட்டு காதல் படங்களைப் பார்த்ததன் விளைவாக இருதய வடிவம் என்பது காதலின் அடையாளம் என்பதை அவள் அறிந்திருந்தாள். இப்படி தொடங்கிய அவர்கள் காதல், டூரிங் டாக்கிஸ், சின்ன வாய்க்கால், மாத்ராங்குளத்துப் பொத்தை, கடனாநதி ஆறு, சாணம் சுமந்து போகும் எருக்கெடங்குகள் என்று சந்தித்ததின் விளைவாக அதிகரித்தது. இந்தச் சந்திப்புகளுக்காக அவன் சில நாட்கள் மாடுமேய்க்க கட் அடித்திருந்தான். அந்த நாட்களில் மாடுகளை யார் மேய்த்திருப்பார் என்ற அதீத ஆவல் உங்களுக்குத் தேவையில்லாதது.
காதல் கண் மண் தெரியாமல் வளர்ந்த நேரத்தில்தான், செம்மறியான் மகள் பார்வதி, கப்பைக்காலன் மகன் கணேசனுடன் ஓடிப்போனாள். இந்த காதல் பற்றியும், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓடிப்போய் (இதுவும் திருச்செந்தூர்) திருமணம் செய்துகொண்டது பற்றியும் ஊரில் முக்குக்கு முக்கு உட்கார்ந்து பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர். முத்தையா டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், மேல கோயில் பூசாரி ஒரு விஷயத்தைச் சொன்னார்.
‘‘காலம் கலிகாலாம்னு சும்மாவாயா சொன்னான். பார்வதி யாரு? கணேசன் யாரு? பெத்தவளும் மகனும். இப்படி நடக்கலாமா?''
அவர் இப்படிச் சொன்னதும், பத்தாம் கிளாஸ் வரை படித்திருந்த முத்துப்பாண்டி, ‘‘அதுக்கும் இதுக்கும் ஏம்யா முடிச்சு போடுதீரு... ஒம்ம பொண்டாட்டி பேரு மீனாட்சி, உம்ம பேரு பாலசுப்ரமணியன். ரெண்டும் சரியான்னு நீரு பாத்திராவே''என்றான்.
சம்மந்தமில்லாமல் ஒரு உறவு குழப்பத்தை ஏற்படுத்தி மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்தாரோ என்னமோ, ‘என்னமோ போங்க' என்று சொல்லிவிட்டுக் கழன்றார்.
சரியாக நான்கு நாட்கள் கழித்து, திருக்குறுங்குடியில் கணேசனின் மாமா வீட்டில் தங்கியிருந்த புதுமண ஜோடி, உள்ளூர் சொந்தங்கள் முன்னிலையில் அழைத்து வரப்பட்டனர். பிறகு நெருங்கியவர்களை மட்டும் அழைத்து, திருமண வரவேற்பு நடந்தது. முட்டிக்கொண்டவர்கள் உறவுக்காரர்களானார்கள்.
இந்த பரபரப்பில்தான் முத்துசாமி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டான். முதலில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெற்றோர்கள், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் ஏற்றுக்கொள்வார்கள் என்ற உண்மை அது.
இந்த தைரியத்தில் இருக்கும்போதுதான், இவர்கள் காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்க்காரர்களுக்கு அவல் ஆனது. இந்த அவலின் உச்ச பட்சமாக வடக்குவா செல்வி அம்மன் கோயிலுக்கு கொடை கொடுப்பது பற்றி சங்கத்தில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்தின் போது நடந்தது அந்த சம்பவம்.
இரண்டு பாட்டில் பட்டை சாராயத்தை அவனின் சேக்காளி, பக்கத்து ஊரில் இருந்து வாங்கி வந்திருந்தான். இதை இவனுடன் மாடு மேய்க்கும் சேக்காளிகள் குடிப்பதற்கு தயாராக இருந்தனர். குடிப்பதற்கான சிறந்த இடத்தை தேர்வு செய்யும் பொறுப்பு முத்துசாமிக்கு விடப்பட்டிருந்தது. தெப்பக்குள திண்டு, பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்பக்கம், வடக்குத் தெரு புளிய மரம் என்பது உள்ளிட்ட இடங்கள் அலசப்பட்ட பின், சின்ன வாய்க்கால் ஓடும் சந்திரமய்யர் வீட்டின் பின்பக்க இடம் ஒரு மனதாக முடிவாகியது. அந்த இடம், வீட்டின் சுவரோடு சேர்ந்த வாய்க்கால் படித்துறை. பெண்கள் மட்டுமே குளிக்கும், துணி துவைக்கும் இடம்.
நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் குலாம் சம்பந்தப் பட்ட இடத்துக்குச் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாகப் போதை தலைக்கேற, முத்துசாமி காதல் வலியில் விழுந்தான். மற்றவர்களும் போதை தள்ளாட்டத்தில் இருந்த நேரம், அந்த சுவற்றைப் பார்த்தான். சிலரது பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அனைத்தும் தனித் தனிப் பெயர்கள். முத்துசாமியின் மூளை உடனே வேலை செய்தது. பக்கத்தில் இருந்த எருக்குழிக்குப் போய், அடுப்புக்கரித் துண்டை எடுத்து வந்து, எழுத ஆரம்பித்தான். தனது அறிவுக்கு எட்டிய வரையில் பொன்னம்மாளை ‘பென்னம்மள்' என்றும் அவனை சரியாகவும் எழுதி, அதற்கு கீழே ‘கதலி' என்று எழுதிவிட்டு, சுற்றி ‘ஆட்டின்' வடிவத்தை வரைந்தான்.
முழு திருப்தியில் படித்துறையிலேயே நண்பர்களுடன் தூங்கி, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான். பதினோரு மணி வாக்கில் மாடுகளை தெப்பக்குளத்தில் இறக்கிக்கொண்டிருக்கும் போது, மேலத்தெரு சங்கன் விஷயத்தைச் சொன்னான்.
‘‘ஏல, சந்திரமய்யர் வீட்டு சுவர்ல யாருல அப்படி எழுதுனா?''
‘‘என்ன எழுதியிருக்கு'' என்ற முத்துசாமிக்கு உணர்வு வந்து, அதை தான் எழுதவில்லை என்று எரியும் சூடத்தில் சத்தியம் செய்தும் வேறு யாரோ எழுதியிருப்பார்களென்றும் சொன்னான்.
அதற்குள் ஊருக்குள் பரவி, பேசத் தொடங்கியிருந்தனர். அப்பாவின் திட்டுக்கும், அம்மாவின் அடிக்கும் உட்பட்டிருந்தாள் பொன்னம்மாள்.
ஒரு பகல் முழுவதும் பொறுத்திருந்துவிட்டு, ஆட்கள் நடமாட்டமில்லாத நள்ளிரவில் வாய்க்காலுக்குப் போனான். தென்னங் கூந்தலில் தண்ணீர் மொண்டு, மனதால் அழிக்க முடியாததை சுவற்றில் ஊற்றி அழித்தான்.
விஷயம் அதற்கு பிறகுதான் வெவகாரமானது. பொன்னம்மாளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகள் நடந்தன. வழக்கமான எதிர்ப்பாக அவள் அதை எதிர்த்தாள்.
‘எந்தப் பயலாவது பொண்ணு கேட்டு வரட்டும்; வெளக்கு மாத்தால சாத்துதேன்' என்று அவளும், ‘பொட்ட செரிக்கி இப்டியாட்டி பேசுவே' என்று அவள் அம்மாவும் சுகமான சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவன் வீட்டில் வேறு விதமான பிரச்னை. ‘‘ஒனக்கு என்னல தெரியும். கருத்த பிள்ளையூர்ல கெடை போட்டிருக்கும்போது, ரெண்டு ஆட்டை களவாண்டுட்டு போன பயதான் அவன். அந்த வீட்டு கேணத்திய கல்யாணம் முடிக்கணுங்கியாக்கும். எனக்குலா கேவலமா இருக்கு'' என்றார் அப்பா.
இம்மாதிரியான பெற்றோர்களின் கவுரவ குறைச்சல்களை ஒரேடியாக கொன்று விடுவது என்ற முடிவுடன், இருவரும் நள்ளிரவில் முடிவெடுத்தனர் ஊரை விட்டு ஓடிவிடுவது என்று.
அதற்கு பிறகு நீங்கள் படித்ததுதான் இந்தக் கதையின் தொடக்கம். இன்றைய இரவு முடிந்ததும் நாளை மேலும் ஒரு தகவல் வரும். அவன் உங்கள் ஊரில் இருக்கலாம் என்று. தகவல்கள் காதலை விடவும் வலிமையானவை.
-குங்குமம் வார இதழில் வெளியான எனது சிறுகதை
முத்துசாமி, மாடுகளில் இருபத்தி ஏழையும், பன்னிரெண்டு செம்மறிகளையும் மேய்ப்பதை தொழிலாகக் கொண்டவன். மாட்டின் பற்கள், கொம்புகள், பால்சுரக்கும் மடுக்கள், அவை நடக்கும், அசையும் முறைகள், இன்ன பிற விவரங்களை நாக்கு நுனியில் வைத்திருப்பவன். உதாரணத்துக்கு ஒரு பதமாக, ‘கப்பை கொம்பு மாடுகள் ஈனும் குட்டிகள், கிடாரியாகத்தான் இருக்கும்' என்பதைக் கொள்ளலாம்.
இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ மாட்டின் பிரசவங்களை பார்வையாலேயே அறிந்துவிடும் நோக்கன் அவன்.
மாடுகளைப் பற்றி இப்படியான உலகறிவை பெற்றிருந்த அவன், போன திங்கட்கிழமை அவற்றைத் தவிக்க விட்டுவிட்டு, பஜனை மடத் தெரு பொன்னம்மாளோடு ஓடிவிட்டான். ஓடி விட்டான் என்பது நிஜமே. நடு ஜாமமோ, அதிகாலையிலோ பயணிகளை அடைக்கும் பஸ் வசதி ஊரில் கிடையாது. அவர்களின் பேச்சுப்படி, நள்ளிரவு தொழுவத்தின் பின்பக்கமாக (அது கருவை முட்கள் வளர்ந்து காடாகி இருக்கும் இடம்) வந்துவிடுவது, கையை பிடித்துக்கொண்டு இருவரும் ரயிலடிக்கு ஓடி செல்வது, அங்கிருந்து அம்பாசமுத்திரம். பிறகு திருச்செந்தூர். (இத்தகவல்கள் நேற்றுமுன்தினம் கதைக்கப்பட்டவை)
முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில், வள்ளி, தெய்வானை சமேதரான திருச்செந்தூர் முருகன் ஆசிர்வாதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்' என்று யார் வாழ்த்தினார்களோ?
‘‘அம்பாசமுத்ரம் கார்சான்டுல பாத்தம்ல. அந்தப் புள்ள தலையில முக்காடை போட்டுட்டு நின்னுட்டிருந்து. இந்தப் பய, கையில ஒரு பைய வச்சுகிட்டு பஸ்ல ஏறுனாம்.'
&இது முதல் நாள் தகவல்.
அடுத்த தகவல், ‘‘இந்தப் பயல மாதிரியே இருக்கே அப்டின்னு அப்பவே நெனச்சேன். இவன் ஏன் இங்க வரப்போறான்; வேற யாராவது இருப்பாவோன்னுட்டு வந்துட்டேன். இங்க வந்தப் பெறவுலா தெரியுது''என்பதாக இருந்தது. இத்தகவலைச் சொன்னவர் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு வந்தவர்.
இந்த தகவல்களினூடாக முத்துசாமி, பொன்னம்மா காதல் மலர்ந்த கதையைக் கேட்டாக வேண்டும்.
மாடுண்டு தானுண்டு என்றிருந்த முத்துசாமி, அன்று உச்சி வெயில் பேய்கள் உலவும், சுப்பையா தோப்புக்கருகில் மாடுகளை மேய விட்டிருந்தான். அருகில் குளம். மாடுகள், எல்லை தாண்டி எங்கும் போகாது என்ற தைரியத்தில் அரசமரத்தினடியில் பூடமாக வீற்றிருந்த பச்சத்தி மாடனுக்கருகில் துண்டை விரித்து, நித்திரையில் ஆழ்ந்தான். கொளுத்தும் வெயிலில் இப்படியானதொரு குளு குளு இடம் தூங்குவதற்கு கிடைப்பது ஊருக்குள் அரிது.
வேலை வெட்டி இல்லாத வம்பளந்தான்கள் தூங்குவதற்காக, கட்டு பீடிகள் சகிதமாக இங்கு வருவதை வழக்கமாக்கி வைத்திருந்தனர். அவர்களின் தூக்கத்தை ஆசிர்வதிப்பவராக, பச்சத்திமாடன் அருள்பாளித்துக் கொண்டிருந்தார்.
அன்று மஞ்சப்புளிச்சேரியில் சிறுகிழங்கு எடுக்கப்போன மேலத் தெரு பொம்பளைப் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். தலையில் கிழங்கு எடுத்ததற்கான கூலியை தென்னம்பொட்டியில் வைத்துகொண்டு வந்தவர்களுக்குப் புளியங்காய் ஆசை. காரணம் சுப்பையா தோப்பிலுள்ள புளியங்காய்கள் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையை இயற்கையாகப் பெற்றிருந்தது.
பேய்கள் உலவும் இடம் என்று ஊர்க்காரர்களால் வர்ணிக்கப்பட்டிருப்பதால் தனியாகச் செல்ல அவர்கள் பயம் கொண்டனர். இதன் காரணமாகத் தூங்கிகொண்டிருந்த முத்துசாமி எழுப்பப்பட்டான். இளம் பெண்களின் ஆசையை பூர்த்தி செய்யாமல் இருக்க, அவனால் முடியவில்லை. காரணம் அதுமட்டுமல்ல. அவனுக்குள் சின்னதாக கிறக்கத்தை ஏற்படுத்தும் பொன்னம்மாள் சகதி அப்பிய தாவணியோடு, தரையில் கோடு கிழித்துக்கொண்டிருந்தாள்.
கோடுகள், சிற்றின்ப மூளையின் நரம்புகளை உசுப்பேற்றியதன் விளைவாக, வேலி தாண்ட துணிந்தான். வேலி என்பது பெயருக்குத்தான். பலமுறை பலர் அந்த வழியை பயன்படுத்தி சென்று அது பாதையாகவே மாறியிருந்தது.
சுப்பையா தோப்பு பசுஞ்சோலைகளாலானது என்று நினைத்திருந்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்த தோப்பு பொத்தைக்காட்டுக்குள் புழுதிகளால் சூழ்ந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்னை, புளிய, மா மரங்கள். பம்பு செட் தண்ணீர் தொட்டி இருப்பதற்கு அருகில் நெல் விளையும் வயல்களும், உள்ளி, மிளகாய் உள்ளிட்டவை விளையும் வயல்களும் இருந்தன.
முத்துசாமிக்கு புளியங்காய்கள் பறிப்பது கை வந்த கலை. இடுப்பு சாரத்தை தூக்கி கட்டிக்கொண்டு மரத்தில் ஏறி உலுப்பினான். இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பது மாதிரி கொத்துக்கொத்தாக விழுந்தன. பக்கத்து புளிய மரத்திலிருந்து ஒரக்காய்கள் தானாக விழுந்து கிடந்தன. (ஒரக்காய்கள் என்பது பாதி புளி ஆகியும் பாதி ஆகாமலும் இருக்கின்ற ரெண்டுங்கெட்டான் பருவம்). பாதி பச்சை, பாதி காப்பிக் கலரினாலான அதன் சுவை வித்தியாசமானது. புளியம் பிஞ்சுகள், மற்றும் ஒரக்காய்களை சாரத்துக்குள் போட்டுக்கொண்டு வந்தான். பச்சத்தி மாடன் சந்நிதியில் ஆளாளுக்குப் பிரித்துக்கொடுத்தான்.
பொன்னம்மாள் தாவணியின் ஓரத்தில் புளியம் பிஞ்சுகளைக் கொட்டி, அதை முடிய போனாள். அப்போதுதான் கண்ணில் பட்டது. வளைந்து நெளிந்து கிடக்கும் புளியம்பிஞ்சுகளில் ஒன்று இருதய வடிவத்தில் வளைந்திருந்தது. அதை கையில் எடுத்துவிட்டு அவனைப் பார்த்தாள். அவன் வழக்கமான பல்லிளிப்பை உதிர்த்து, அவளது மேனி அளந்தான். எல்லோருக்கும் கொடுத்த அவன், நமக்கு மட்டும் இருதய வடிவிலான புளியம் பிஞ்சை கொடுத்திருப்பது அவனது உளக்கிடக்கையை வெளிப்படுத்தத்தான் என்பதாக அவளுக்குப் பட்டது. அடுத்த வினாடியிலிருந்து காதல் பிரவாகமெடுத்து ஓடத் தொடங்கியது. புன்னகைத்தாள். மனசுக்குப் பிடித்தவளின் இம்மாதிரியான புன்னகைகள் கிடைப்பது அரிதென்பதால் கனவுலகில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான் முத்துசாமி. அந்த சைக்கிளின் கேரியரில் பொன்னம்மாள் வெட்கப்பட்டுக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் போன மாதம்தான் புதிதாக டூரிங் தியேட்டர் வந்திருந்தது. அது தொடங்கி, திரையிடப்பட்ட ஏழெட்டு காதல் படங்களைப் பார்த்ததன் விளைவாக இருதய வடிவம் என்பது காதலின் அடையாளம் என்பதை அவள் அறிந்திருந்தாள். இப்படி தொடங்கிய அவர்கள் காதல், டூரிங் டாக்கிஸ், சின்ன வாய்க்கால், மாத்ராங்குளத்துப் பொத்தை, கடனாநதி ஆறு, சாணம் சுமந்து போகும் எருக்கெடங்குகள் என்று சந்தித்ததின் விளைவாக அதிகரித்தது. இந்தச் சந்திப்புகளுக்காக அவன் சில நாட்கள் மாடுமேய்க்க கட் அடித்திருந்தான். அந்த நாட்களில் மாடுகளை யார் மேய்த்திருப்பார் என்ற அதீத ஆவல் உங்களுக்குத் தேவையில்லாதது.
காதல் கண் மண் தெரியாமல் வளர்ந்த நேரத்தில்தான், செம்மறியான் மகள் பார்வதி, கப்பைக்காலன் மகன் கணேசனுடன் ஓடிப்போனாள். இந்த காதல் பற்றியும், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓடிப்போய் (இதுவும் திருச்செந்தூர்) திருமணம் செய்துகொண்டது பற்றியும் ஊரில் முக்குக்கு முக்கு உட்கார்ந்து பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர். முத்தையா டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், மேல கோயில் பூசாரி ஒரு விஷயத்தைச் சொன்னார்.
‘‘காலம் கலிகாலாம்னு சும்மாவாயா சொன்னான். பார்வதி யாரு? கணேசன் யாரு? பெத்தவளும் மகனும். இப்படி நடக்கலாமா?''
அவர் இப்படிச் சொன்னதும், பத்தாம் கிளாஸ் வரை படித்திருந்த முத்துப்பாண்டி, ‘‘அதுக்கும் இதுக்கும் ஏம்யா முடிச்சு போடுதீரு... ஒம்ம பொண்டாட்டி பேரு மீனாட்சி, உம்ம பேரு பாலசுப்ரமணியன். ரெண்டும் சரியான்னு நீரு பாத்திராவே''என்றான்.
சம்மந்தமில்லாமல் ஒரு உறவு குழப்பத்தை ஏற்படுத்தி மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்தாரோ என்னமோ, ‘என்னமோ போங்க' என்று சொல்லிவிட்டுக் கழன்றார்.
சரியாக நான்கு நாட்கள் கழித்து, திருக்குறுங்குடியில் கணேசனின் மாமா வீட்டில் தங்கியிருந்த புதுமண ஜோடி, உள்ளூர் சொந்தங்கள் முன்னிலையில் அழைத்து வரப்பட்டனர். பிறகு நெருங்கியவர்களை மட்டும் அழைத்து, திருமண வரவேற்பு நடந்தது. முட்டிக்கொண்டவர்கள் உறவுக்காரர்களானார்கள்.
இந்த பரபரப்பில்தான் முத்துசாமி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டான். முதலில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெற்றோர்கள், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் ஏற்றுக்கொள்வார்கள் என்ற உண்மை அது.
இந்த தைரியத்தில் இருக்கும்போதுதான், இவர்கள் காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்க்காரர்களுக்கு அவல் ஆனது. இந்த அவலின் உச்ச பட்சமாக வடக்குவா செல்வி அம்மன் கோயிலுக்கு கொடை கொடுப்பது பற்றி சங்கத்தில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்தின் போது நடந்தது அந்த சம்பவம்.
இரண்டு பாட்டில் பட்டை சாராயத்தை அவனின் சேக்காளி, பக்கத்து ஊரில் இருந்து வாங்கி வந்திருந்தான். இதை இவனுடன் மாடு மேய்க்கும் சேக்காளிகள் குடிப்பதற்கு தயாராக இருந்தனர். குடிப்பதற்கான சிறந்த இடத்தை தேர்வு செய்யும் பொறுப்பு முத்துசாமிக்கு விடப்பட்டிருந்தது. தெப்பக்குள திண்டு, பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்பக்கம், வடக்குத் தெரு புளிய மரம் என்பது உள்ளிட்ட இடங்கள் அலசப்பட்ட பின், சின்ன வாய்க்கால் ஓடும் சந்திரமய்யர் வீட்டின் பின்பக்க இடம் ஒரு மனதாக முடிவாகியது. அந்த இடம், வீட்டின் சுவரோடு சேர்ந்த வாய்க்கால் படித்துறை. பெண்கள் மட்டுமே குளிக்கும், துணி துவைக்கும் இடம்.
நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் குலாம் சம்பந்தப் பட்ட இடத்துக்குச் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாகப் போதை தலைக்கேற, முத்துசாமி காதல் வலியில் விழுந்தான். மற்றவர்களும் போதை தள்ளாட்டத்தில் இருந்த நேரம், அந்த சுவற்றைப் பார்த்தான். சிலரது பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அனைத்தும் தனித் தனிப் பெயர்கள். முத்துசாமியின் மூளை உடனே வேலை செய்தது. பக்கத்தில் இருந்த எருக்குழிக்குப் போய், அடுப்புக்கரித் துண்டை எடுத்து வந்து, எழுத ஆரம்பித்தான். தனது அறிவுக்கு எட்டிய வரையில் பொன்னம்மாளை ‘பென்னம்மள்' என்றும் அவனை சரியாகவும் எழுதி, அதற்கு கீழே ‘கதலி' என்று எழுதிவிட்டு, சுற்றி ‘ஆட்டின்' வடிவத்தை வரைந்தான்.
முழு திருப்தியில் படித்துறையிலேயே நண்பர்களுடன் தூங்கி, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான். பதினோரு மணி வாக்கில் மாடுகளை தெப்பக்குளத்தில் இறக்கிக்கொண்டிருக்கும் போது, மேலத்தெரு சங்கன் விஷயத்தைச் சொன்னான்.
‘‘ஏல, சந்திரமய்யர் வீட்டு சுவர்ல யாருல அப்படி எழுதுனா?''
‘‘என்ன எழுதியிருக்கு'' என்ற முத்துசாமிக்கு உணர்வு வந்து, அதை தான் எழுதவில்லை என்று எரியும் சூடத்தில் சத்தியம் செய்தும் வேறு யாரோ எழுதியிருப்பார்களென்றும் சொன்னான்.
அதற்குள் ஊருக்குள் பரவி, பேசத் தொடங்கியிருந்தனர். அப்பாவின் திட்டுக்கும், அம்மாவின் அடிக்கும் உட்பட்டிருந்தாள் பொன்னம்மாள்.
ஒரு பகல் முழுவதும் பொறுத்திருந்துவிட்டு, ஆட்கள் நடமாட்டமில்லாத நள்ளிரவில் வாய்க்காலுக்குப் போனான். தென்னங் கூந்தலில் தண்ணீர் மொண்டு, மனதால் அழிக்க முடியாததை சுவற்றில் ஊற்றி அழித்தான்.
விஷயம் அதற்கு பிறகுதான் வெவகாரமானது. பொன்னம்மாளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகள் நடந்தன. வழக்கமான எதிர்ப்பாக அவள் அதை எதிர்த்தாள்.
‘எந்தப் பயலாவது பொண்ணு கேட்டு வரட்டும்; வெளக்கு மாத்தால சாத்துதேன்' என்று அவளும், ‘பொட்ட செரிக்கி இப்டியாட்டி பேசுவே' என்று அவள் அம்மாவும் சுகமான சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவன் வீட்டில் வேறு விதமான பிரச்னை. ‘‘ஒனக்கு என்னல தெரியும். கருத்த பிள்ளையூர்ல கெடை போட்டிருக்கும்போது, ரெண்டு ஆட்டை களவாண்டுட்டு போன பயதான் அவன். அந்த வீட்டு கேணத்திய கல்யாணம் முடிக்கணுங்கியாக்கும். எனக்குலா கேவலமா இருக்கு'' என்றார் அப்பா.
இம்மாதிரியான பெற்றோர்களின் கவுரவ குறைச்சல்களை ஒரேடியாக கொன்று விடுவது என்ற முடிவுடன், இருவரும் நள்ளிரவில் முடிவெடுத்தனர் ஊரை விட்டு ஓடிவிடுவது என்று.
அதற்கு பிறகு நீங்கள் படித்ததுதான் இந்தக் கதையின் தொடக்கம். இன்றைய இரவு முடிந்ததும் நாளை மேலும் ஒரு தகவல் வரும். அவன் உங்கள் ஊரில் இருக்கலாம் என்று. தகவல்கள் காதலை விடவும் வலிமையானவை.
-குங்குமம் வார இதழில் வெளியான எனது சிறுகதை
Thursday, December 6, 2007
கூனயன்
இன்னும் மழை நிற்கவில்லை. கூனயன் பனை மரத்தின் கீழ் பக்கம் சாய்ந்துகொண்டு ஒரு தட்டியை தலையில் வைத்துக்கொண்டிருந்தான். தட்டியைத் தாண்டியும் மழை அவனை நனைத்துக் கொண்டிருந்தது. நனைதல் அவனுக்குப் புதிதல்ல. ஆடுகள், ஒதுங்க இடம் தேடிக்கொண்டிருந்தன. எதிரில் குடில் இருக்கிறது. பனவோலைகளால் வேயப்பட்ட குடில். அந்த சின்னக் குடிலுக்குள் ஆடுகள் முண்டியடித்துக் கொண்டிருந்தன. நீண்ட கொம்பை கொண்ட கெடா ஒன்று குட்டிகளை முட்டுவதாக மிரட்டிக் கொண்டிருந்தது.
‘க்கியே... பய ஆடு... என்ன எடக்கா? சொட்டைய நொரிச்சுருவேன்’
கூனையன் இங்கிருந்து சத்தம் போட்டான். தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்த வேட்டி நனைந்து கொண்டிருந்தது. இடுப்பில் வைத்திருந்த பீடிகட்டும் தீப்பெட்டியும் இன்னும் சில நிமிடத்தில் நனையக்கூடும். ஒரு கையால் தட்டியைப் பிடித்துக்கொண்டே, பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். ஒரு பீடியை மட்டும் பற்ற வைத்தான். நெஞ்சுக்குள் உழன்று வெளியே வந்தது புகை. இப்போது அவனுக்கு இதமாக இருந்தது.
மழைநேரத்தில் குடிப்பதும் பிடிப்பதும் சுகமானவை.
குட்டிகளில் பாதி குடிலின் உள்ளேயும் வெளியேயும் நின்று கொண்டிருந்தன.
அந்த குடிலுக்குப் போனால் கூனையன் நனையாமல் இருக்கலாம். ‘ஏன் போகணும்?’ என்று கேட்டுக்கொண்டான். அது கோயிந்தபேரியானின் குடில். இந்தப் பனைமரக்காட்டை கொத்தகைக்கு எடுத்திருப்பவன்.
கூனையனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இங்குதான் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். சொந்த ஆட்டை மேய்ப்பவனுக்கும், அதை குழந்தைகளாக பாவிப்பவனுக்கும் மேய்த்தல் என்பது தொழிலல்ல. அது ஆதர்சம். மனிதனோடு பேசுவது மாதிரி அவனால் ஆடுகளுடன் பேச முடியும். அவன் அதன் சுக துக்கங்களை தோளில் சுமப்பவன். சிறு வாய் திறந்து ‘ம்மே...’ என்று ஒரு குட்டி கத்தும்போது அவன் தந்தையாக உணர்கிறான்.
காலையில் எழுந்து ஆட்டைத் திறந்துவிட்டதும் யார் அனுமதி இன்றியும் நேராக இந்தக் காட்டுக்கு வர அவை பழகியிருந்தன.
அவன் முதலில் ஆடு மேய்க்க வந்த போது சுப்பையா கோனார் இந்த காட்டை வைத்திருந்தார். காட்டின் ஒரு பகுதியில் கடலை, ஈராய்ங்கம், மிளகாய் போன்றவற்றை பயிரிட்டிருந்தார். மற்றப்பகுதிகள் அவரது ஆடுமாடுகள் மேய்க்கப்பட வேண்டும் என்பதற்காக கோரை புற்களை வளர்த்திருந்தார். இங்கு ஊரிலுள்ள எவரும் ஆடுமாடு மேய்த்துக்கொள்ள அனுமதி. அவரது ஒரே கோரிக்கை பயிர்க்காட்டுக்குள் மேய்த்துவிடக்கூடாது என்பது.
சுப்பையாவின் மூன்றவது மகன் பரமசிவத்துடன் சேர்ந்து கூனையன் ஆடு மேய்ப்பான். காட்டின் கீழ்ப்புறம் இருக்கும் புளிய மரத்தின் ஒரு கிளையில் மர ஊஞ்சல் இருக்கும். ஆடுகளை விட்டுவிட்டு இங்குதான் அவன் பொழுது கழியும். கட்டுப்பாட்டுக்குள் அடங்காத அந்த சிறுபிராய பொழுதுகள் அவனை சுகமாக்கவே செய்தன. எல்லாரும் பைக்கட்டை தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது இந்த ஊஞ்சல் தான் அவனை ஆடு மேய்க்க தூண்டியது. இதற்காகவே ஆடு மேய்க்க ஆரம்பித்தான் என்று சொல்வது கொஞ்சம் அதிகம்தான்.
சுப்பையா கோனாருக்குப் பிறகு அதை சோமுதேவர் வாங்கியிருந்தார். பெரும்பண்ணை சோமுதேவருக்கு இந்தக் காடு ஒரு பொருட்டல்ல என்பதால் சு.கோ. கொடுத்து வைத்திருந்த ஆடு மேய்க்கும் அதே அனுமதியை எல்லோரும் பெற்றிருந்தனர். பரமசிவன் மட்டும் சொந்த நில பாசம் துக்கம் தருவதால் மேய்க்கும் இடத்தை மாற்றினான். எப்போதாவது கூனையனுடன் மேய்க்க வேண்டுமென்றால் மட்டும் இங்கு வருவான். ஒரு முறை வந்தபோது கூனையன் அந்த யோசனையை சொன்னான்.
‘ஏல கோங்கு கன்னு வைப்பமா?’
மலைக்குத் தேன் எடுக்கச் சென்றிருந்த மீசைக்காரன் கோங்கு மர கன்று ஒன்றைக் கொண்டுவந்திருந்தான். அவன் வீட்டைச் சுற்றி மரம் இருந்ததால் கூனையனிடம் கொடுத்திருந்தான். கூனையனுக்கு மரம் வைப்பதில் ஆர்வமோ ஆசையோ இல்லாததால் இந்தக் காட்டில் வைக்க ஆசைப்பட்டான்.
பரமசிவனும் கூனையனும் சேர்ந்து அதை நட்டார்கள். கூடவே அதற்கு ஒரு வேலி. அங்கு மட்டும் எந்த ஆடும் வராமல் பார்த்துக்கொண்டான்.
இப்போது கோங்கு பெரும் மரமாகியிருந்தது, கூனையன் வயதாகி இருந்ததைப் போல. சோமுத்தேவரின் இறப்புக்கு பிறகு காடு கை மாறியது. உள்ளே இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. முதன்முதலாக வெட்டப்பட்டது கோங்கு. கூனையனுக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை. வீட்டுக்குப் போனதும்தான் துக்கமாக தெரிந்தது. கண்களை கசக்கி கசக்கி அழுதான். இப்படியரு அழுகையை அவன் அம்மா இறந்த போதுகூட அவன் அழவில்லை. இதையெல்லாம் தாண்டி கோயிந்தபேரியான் சொன்னான்.
‘ஏலே இந்த மாசத்தோட இங்க மேய்ச்சலை விட்டுக்கோ. அடுத்த மாசம் ஆடு வந்ததுன்னா கறி வச்சிருவேன்’
அதிகாரம். கூனையன் ஒன்றும் சொல்லவில்லை.
மழை அதிகமாகி குளிர் வந்தது. மரத்தோடு சாய்ந்துகொண்டிருந்தான். லேசான நடுக்கம். எல்லா பக்கமும் மழையின் பொருட்டு இருட்டி இருந்தது. தலையை தவிர உடல் முழுவதும் நனைந்துவிட்டது. நடுக்கத்துடன் மழையிலேயே சென்றுவிடுவது என்று தீர்மானித்தான். குடிலுக்குள் நிற்கும் ஆடுகளை பத்தினான். நனைந்துகொண்டே நடந்தன ஆடுகள்.
கேட் தாண்டி வெளியே வந்ததும் காட்டைப் பார்த்தான். பந்தல் போடப்பட்டிருக்கிற துக்க வீடாக அவனுக்கு காட்சியளித்தது.
‘நாளை வேறு இடம் பார்க்க வேண்டும்’.
‘க்கியே... பய ஆடு... என்ன எடக்கா? சொட்டைய நொரிச்சுருவேன்’
கூனையன் இங்கிருந்து சத்தம் போட்டான். தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்த வேட்டி நனைந்து கொண்டிருந்தது. இடுப்பில் வைத்திருந்த பீடிகட்டும் தீப்பெட்டியும் இன்னும் சில நிமிடத்தில் நனையக்கூடும். ஒரு கையால் தட்டியைப் பிடித்துக்கொண்டே, பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். ஒரு பீடியை மட்டும் பற்ற வைத்தான். நெஞ்சுக்குள் உழன்று வெளியே வந்தது புகை. இப்போது அவனுக்கு இதமாக இருந்தது.
மழைநேரத்தில் குடிப்பதும் பிடிப்பதும் சுகமானவை.
குட்டிகளில் பாதி குடிலின் உள்ளேயும் வெளியேயும் நின்று கொண்டிருந்தன.
அந்த குடிலுக்குப் போனால் கூனையன் நனையாமல் இருக்கலாம். ‘ஏன் போகணும்?’ என்று கேட்டுக்கொண்டான். அது கோயிந்தபேரியானின் குடில். இந்தப் பனைமரக்காட்டை கொத்தகைக்கு எடுத்திருப்பவன்.
கூனையனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இங்குதான் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். சொந்த ஆட்டை மேய்ப்பவனுக்கும், அதை குழந்தைகளாக பாவிப்பவனுக்கும் மேய்த்தல் என்பது தொழிலல்ல. அது ஆதர்சம். மனிதனோடு பேசுவது மாதிரி அவனால் ஆடுகளுடன் பேச முடியும். அவன் அதன் சுக துக்கங்களை தோளில் சுமப்பவன். சிறு வாய் திறந்து ‘ம்மே...’ என்று ஒரு குட்டி கத்தும்போது அவன் தந்தையாக உணர்கிறான்.
காலையில் எழுந்து ஆட்டைத் திறந்துவிட்டதும் யார் அனுமதி இன்றியும் நேராக இந்தக் காட்டுக்கு வர அவை பழகியிருந்தன.
அவன் முதலில் ஆடு மேய்க்க வந்த போது சுப்பையா கோனார் இந்த காட்டை வைத்திருந்தார். காட்டின் ஒரு பகுதியில் கடலை, ஈராய்ங்கம், மிளகாய் போன்றவற்றை பயிரிட்டிருந்தார். மற்றப்பகுதிகள் அவரது ஆடுமாடுகள் மேய்க்கப்பட வேண்டும் என்பதற்காக கோரை புற்களை வளர்த்திருந்தார். இங்கு ஊரிலுள்ள எவரும் ஆடுமாடு மேய்த்துக்கொள்ள அனுமதி. அவரது ஒரே கோரிக்கை பயிர்க்காட்டுக்குள் மேய்த்துவிடக்கூடாது என்பது.
சுப்பையாவின் மூன்றவது மகன் பரமசிவத்துடன் சேர்ந்து கூனையன் ஆடு மேய்ப்பான். காட்டின் கீழ்ப்புறம் இருக்கும் புளிய மரத்தின் ஒரு கிளையில் மர ஊஞ்சல் இருக்கும். ஆடுகளை விட்டுவிட்டு இங்குதான் அவன் பொழுது கழியும். கட்டுப்பாட்டுக்குள் அடங்காத அந்த சிறுபிராய பொழுதுகள் அவனை சுகமாக்கவே செய்தன. எல்லாரும் பைக்கட்டை தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது இந்த ஊஞ்சல் தான் அவனை ஆடு மேய்க்க தூண்டியது. இதற்காகவே ஆடு மேய்க்க ஆரம்பித்தான் என்று சொல்வது கொஞ்சம் அதிகம்தான்.
சுப்பையா கோனாருக்குப் பிறகு அதை சோமுதேவர் வாங்கியிருந்தார். பெரும்பண்ணை சோமுதேவருக்கு இந்தக் காடு ஒரு பொருட்டல்ல என்பதால் சு.கோ. கொடுத்து வைத்திருந்த ஆடு மேய்க்கும் அதே அனுமதியை எல்லோரும் பெற்றிருந்தனர். பரமசிவன் மட்டும் சொந்த நில பாசம் துக்கம் தருவதால் மேய்க்கும் இடத்தை மாற்றினான். எப்போதாவது கூனையனுடன் மேய்க்க வேண்டுமென்றால் மட்டும் இங்கு வருவான். ஒரு முறை வந்தபோது கூனையன் அந்த யோசனையை சொன்னான்.
‘ஏல கோங்கு கன்னு வைப்பமா?’
மலைக்குத் தேன் எடுக்கச் சென்றிருந்த மீசைக்காரன் கோங்கு மர கன்று ஒன்றைக் கொண்டுவந்திருந்தான். அவன் வீட்டைச் சுற்றி மரம் இருந்ததால் கூனையனிடம் கொடுத்திருந்தான். கூனையனுக்கு மரம் வைப்பதில் ஆர்வமோ ஆசையோ இல்லாததால் இந்தக் காட்டில் வைக்க ஆசைப்பட்டான்.
பரமசிவனும் கூனையனும் சேர்ந்து அதை நட்டார்கள். கூடவே அதற்கு ஒரு வேலி. அங்கு மட்டும் எந்த ஆடும் வராமல் பார்த்துக்கொண்டான்.
இப்போது கோங்கு பெரும் மரமாகியிருந்தது, கூனையன் வயதாகி இருந்ததைப் போல. சோமுத்தேவரின் இறப்புக்கு பிறகு காடு கை மாறியது. உள்ளே இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. முதன்முதலாக வெட்டப்பட்டது கோங்கு. கூனையனுக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை. வீட்டுக்குப் போனதும்தான் துக்கமாக தெரிந்தது. கண்களை கசக்கி கசக்கி அழுதான். இப்படியரு அழுகையை அவன் அம்மா இறந்த போதுகூட அவன் அழவில்லை. இதையெல்லாம் தாண்டி கோயிந்தபேரியான் சொன்னான்.
‘ஏலே இந்த மாசத்தோட இங்க மேய்ச்சலை விட்டுக்கோ. அடுத்த மாசம் ஆடு வந்ததுன்னா கறி வச்சிருவேன்’
அதிகாரம். கூனையன் ஒன்றும் சொல்லவில்லை.
மழை அதிகமாகி குளிர் வந்தது. மரத்தோடு சாய்ந்துகொண்டிருந்தான். லேசான நடுக்கம். எல்லா பக்கமும் மழையின் பொருட்டு இருட்டி இருந்தது. தலையை தவிர உடல் முழுவதும் நனைந்துவிட்டது. நடுக்கத்துடன் மழையிலேயே சென்றுவிடுவது என்று தீர்மானித்தான். குடிலுக்குள் நிற்கும் ஆடுகளை பத்தினான். நனைந்துகொண்டே நடந்தன ஆடுகள்.
கேட் தாண்டி வெளியே வந்ததும் காட்டைப் பார்த்தான். பந்தல் போடப்பட்டிருக்கிற துக்க வீடாக அவனுக்கு காட்சியளித்தது.
‘நாளை வேறு இடம் பார்க்க வேண்டும்’.
Monday, December 3, 2007
மஞ்சனக்காரரு மவன் 2: கேரக்டர் 6
இவ்வளவு வெவாரம் நடந்திருக்கே... எதுலயாவது நான் பண்ணல, எனக்கு அதுக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லிருப்பானா இந்தப் பய. துணிஞ்சு ஒத்துக்கிடுவாம் பாத்துக்கிடுங்கோ. அதுலயெல்லாம் நல்ல பயதான். செய்தது தப்புன்னு உணருவானோ மாட்டோனா? என்ன நடந்தாலும் உம்முனு மூஞ்சிய வச்சுக்கிட்டு உக்காந்துக்கிடுவாம். யாராவது கோவத்துல அடிச்சாவோன்னு வையுங்களேன், அதை வாங்கிக்கிட்டு மரம் மாதிரி நிப்பாம்.
கொஞ்ச நாளா வீட்டு பக்கம் போறதில்ல. அவ அம்மக்காரி மட்டும் ராத்திரி போல எங்கயாது இருந்தாம்னா தேடி கூட்டிட்டு வந்து, கஞ்சிதண்ணி கொடுப்பா. பகல்ல வீட்டுக்கு வந்துட்டாம்னா மஞ்சனக்காரரு வெளியில போயிருவாரு. அம்மாக்காரி என்னவெல்லாமோ சொல்லி பாத்துட்டா. ரொம்ப கேவலமா இருக்குல. ஒழுங்கா கொத்த வேலைக்கு போ. உருப்டியா வேலை ஏதாவது செய்யுன்னு சொல்வா. கேக்குதப் பயலா இவன்? எல்லாத்துக்கு ம் தாம் பதிலு. கல்லுளி மங்கம் மாதிரி இருப்பாம். அவன் சிரிக்கதும் கெடயாது. அழுததும் கெடயாது. அப்டியொரு பய.
மஞ்சனக்காரரு கல்யாணம் காட்சின்னு வெளியூருக்குப் போனா ‘உம்ம மவன் இப்ப என்னவே பண்ணுதாம்’னு கேட்டா மானம் போயிரும். என்ன சொல்லுததுன்னு தெரியாம சமாளிப்பாரு. ‘ஊர சுத்துதாம்’னு சொல்ல முடியுமா? வயக்காட்டைத்தாம் பாத்துக்கிட்டிருக்காம்பாரு. ஆனா, இந்தப் பய ஊருகாரம் தோப்பு, தொரவுன்னு அலைவான தவிர சொந்த வயலுக்கு இதுவர போனது கெடயாது.
‘புதுக்குடில உம்ம தங்கச்சி மவா இருக்காலவே, கல்யாணத்த பண்ணி வச்சாயென்னா? நாலு நாளு அவ சேல பின்னால கெடந்தாம்னா, தன்னால திருந்திருவாம்யா’ன்னு புத்திமதி வேற வரும். அவருக்கு அவமானமா போவும். ஊருக்கெல்லாம் புத்தி சொல்லுதவருட்ட போயி, இப்டி ஒருத்தம் சொன்னா எப்டி இருக்கும்?
ஆனா மஞ்சனக்காராரு அதுல மட்டும் கரீட்டா இருந்தாரு. இவன நம்பி இன்னொரு பொண்ணு புள்ளைய கெடுக்க விரும்பலன்னு மனசுக்குள்ளேயே சொல்லிட்டு இருப்பாரு. அவரு பொண்டாட்டியும் கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்வா. ‘கோட்டிக்காரியாட்டி நீ. இவனே தெனமும் ஒவ்வொரு கூத்தப் பண்ணிட்டு வாராம். இதுல இன்னொருத்திய கெட்டிவச்சு கேவலப்படணுமா’ம்பாரு.
இப்படியரு கொரங்கு பயல எங்கயாவது பாத்திருக்கேளாயா?
வெவாரம் பேசிட்டே இருக்கும் போது, பொந்தன் கந்தயா, மஞ்சனக்காரரு மவன, குறுக்கோட மிதிச்சாரு. அவரும் அவனுக்கு வேற யாருமில்ல. சொந்தந்தாம். அந்தானி, கடுக்கான் வந்தாம், அவன் ரெண்டு மிதி. உடன எல்லாரும் வந்து புடிச்சாவோ. அதுக்குள்ள சங்காபீச சுத்தி பொம்பளைளுவோ சத்தம் போட்டாவோ. ஏய்ய்யா... அடிக்காத, அடிக்காதன்னு கத்துதாவோ.
சங்காபீசுக்கும், மஞ்சனக்காரு வீட்டுக்கும் ரொம்ப தூரமில்ல. இங்கயிருந்து பொம்பளைளுவோ சத்தம் போட்டது அவரு காதுக்கும் கேட்டுது. அந்த பய, அம்மாக்காரி மனசு கேட்காம, சங்காபீசுக்கு ஓடி வர போனா. மஞ்சனக்காரு, ‘அங்க போனா, வீட்டுக்குள்ள நடையேற கூடாது’ன்னு பொண்டாட்டிய சொன்னாரு. அவா நெஞ்சு நெஞ்சுன்னு அடிச்சுட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா.
‘இப்டி போட்டு ஆளாளுக்கு மிதிக்கவாடா இங்க வெவாரத்துக்கு வந்திருக்கோம்’னு தலைவரு சொன்னதும், பாதி பேரு அவங்களை பிரிச்சாங்க. விடிய விடிய வெவாரம் நடக்கு. இன்னைக்கு ஒரு முடிவு தெரியாம விடக்கூடாதுன்னு இருக்காவோ. விடிய விடிய இந்த மாதிரி கூட்டம் நடந்தா அங்ஙனயே கருப்பட்டி காப்பிக்கு ஏற்பாடு நடக்கும். நடு ராத்திரில கணபதியா பிள்ள கடய தெறக்க சொல்லி, கருப்பட்டியும், தூளும் வாங்கிட்டு வந்தானுவோ. கொஞ்சமா பொறிகடலயும். காபிய போட்டு குடிச்சுட்டு வெவாரம் நடக்கு, முடிஞ்ச பாடில்ல.
விடிஞ்சு போச்சு. தென்காசில இருந்து வார மொத பஸ்சு வந்துட்டு. பஸ்லயிருந்து இறங்கி வந்த நடுத்தெரு பொனமால, நேரா சங்காபீசுக்கு வந்தாம். வெவாரம் நடந்துட்டு இருக்கத பாத்துட்டு தலைய வெளிய இழுத்துட்டாம். தலைவரு இத பாத்துட்டு, ‘ஏய், வாடா’ன்னாரு. அவன், ‘நீரு இங்க வாரும்’ன்னான்.
வெளிய போனாரு.
என்னாமோ தலைவரு காதுல சொன்னாம்.
அவருக்கு மொகம் ஒரு மாதிரியாயிட்டு. உடனே, ‘வெவாரத்த பெறவு பேசலாம்ல, எல்லாரும் எங்கூட வாங்க’ன்னு கூப்டாரு. என்ன ஏதுன்னு தெரியாம எல்லாரும் அவரு பின்னாலயே ஓடுதாவோ. தலைவரு, வயசானவங்கிட்ட மட்டும் ஏதோ குசுகுசுன்னு சொல்லுதாரு. மத்தவங்கயெல்லாம் என்ன என்னன்னு கேட்டுட்டே வாரனுவோ. இவனுவ கூட ஒண்ணும் நடக்காத மாதிரி மஞ்சனக்காரரு மவனும் ஓரமா வாராம். சின்ன வாய்க்கா பாலம் தாண்டி, ஆத்தை பாத்து நடக்காவோ. இன்னும் நல்லா விடியல. பால் கொண்டு போற பாவூர்ச்சத்திரத்தானுவோ சைக்கிளு அங்க இங்கயும் பறந்துட்டு இருக்கு.
ஆத்துகிட்ட வந்த பெறவுதான் கொஞ்சம் புடிபட்டுது. ஆமா. சுடுகாட்டுல ஒரு ஆளு...
‘ஏல அது யாரு’ன்னு கேட்டுட்டு எளவட்ட பயலுவோல்லாம் கிட்டத்துல ஓடுதானுவோ.
போய் பாத்தா... திக்குனு ஆயி போச்சு!
சுடுகாட்டுல இருந்த வேப்ப மரத்துல, வேட்டிய அவுத்து தூக்கு போட்டு தொங்கிட்டிருந்தாரு மஞ்சனக்காரரு!
மொதமொதலா அவரு மவன் அழுதத, அப்பதான் எல்லாரும் பாத்தாவோ.
அவ்வளவுதான்.
கொஞ்ச நாளா வீட்டு பக்கம் போறதில்ல. அவ அம்மக்காரி மட்டும் ராத்திரி போல எங்கயாது இருந்தாம்னா தேடி கூட்டிட்டு வந்து, கஞ்சிதண்ணி கொடுப்பா. பகல்ல வீட்டுக்கு வந்துட்டாம்னா மஞ்சனக்காரரு வெளியில போயிருவாரு. அம்மாக்காரி என்னவெல்லாமோ சொல்லி பாத்துட்டா. ரொம்ப கேவலமா இருக்குல. ஒழுங்கா கொத்த வேலைக்கு போ. உருப்டியா வேலை ஏதாவது செய்யுன்னு சொல்வா. கேக்குதப் பயலா இவன்? எல்லாத்துக்கு ம் தாம் பதிலு. கல்லுளி மங்கம் மாதிரி இருப்பாம். அவன் சிரிக்கதும் கெடயாது. அழுததும் கெடயாது. அப்டியொரு பய.
மஞ்சனக்காரரு கல்யாணம் காட்சின்னு வெளியூருக்குப் போனா ‘உம்ம மவன் இப்ப என்னவே பண்ணுதாம்’னு கேட்டா மானம் போயிரும். என்ன சொல்லுததுன்னு தெரியாம சமாளிப்பாரு. ‘ஊர சுத்துதாம்’னு சொல்ல முடியுமா? வயக்காட்டைத்தாம் பாத்துக்கிட்டிருக்காம்பாரு. ஆனா, இந்தப் பய ஊருகாரம் தோப்பு, தொரவுன்னு அலைவான தவிர சொந்த வயலுக்கு இதுவர போனது கெடயாது.
‘புதுக்குடில உம்ம தங்கச்சி மவா இருக்காலவே, கல்யாணத்த பண்ணி வச்சாயென்னா? நாலு நாளு அவ சேல பின்னால கெடந்தாம்னா, தன்னால திருந்திருவாம்யா’ன்னு புத்திமதி வேற வரும். அவருக்கு அவமானமா போவும். ஊருக்கெல்லாம் புத்தி சொல்லுதவருட்ட போயி, இப்டி ஒருத்தம் சொன்னா எப்டி இருக்கும்?
ஆனா மஞ்சனக்காராரு அதுல மட்டும் கரீட்டா இருந்தாரு. இவன நம்பி இன்னொரு பொண்ணு புள்ளைய கெடுக்க விரும்பலன்னு மனசுக்குள்ளேயே சொல்லிட்டு இருப்பாரு. அவரு பொண்டாட்டியும் கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்வா. ‘கோட்டிக்காரியாட்டி நீ. இவனே தெனமும் ஒவ்வொரு கூத்தப் பண்ணிட்டு வாராம். இதுல இன்னொருத்திய கெட்டிவச்சு கேவலப்படணுமா’ம்பாரு.
இப்படியரு கொரங்கு பயல எங்கயாவது பாத்திருக்கேளாயா?
வெவாரம் பேசிட்டே இருக்கும் போது, பொந்தன் கந்தயா, மஞ்சனக்காரரு மவன, குறுக்கோட மிதிச்சாரு. அவரும் அவனுக்கு வேற யாருமில்ல. சொந்தந்தாம். அந்தானி, கடுக்கான் வந்தாம், அவன் ரெண்டு மிதி. உடன எல்லாரும் வந்து புடிச்சாவோ. அதுக்குள்ள சங்காபீச சுத்தி பொம்பளைளுவோ சத்தம் போட்டாவோ. ஏய்ய்யா... அடிக்காத, அடிக்காதன்னு கத்துதாவோ.
சங்காபீசுக்கும், மஞ்சனக்காரு வீட்டுக்கும் ரொம்ப தூரமில்ல. இங்கயிருந்து பொம்பளைளுவோ சத்தம் போட்டது அவரு காதுக்கும் கேட்டுது. அந்த பய, அம்மாக்காரி மனசு கேட்காம, சங்காபீசுக்கு ஓடி வர போனா. மஞ்சனக்காரு, ‘அங்க போனா, வீட்டுக்குள்ள நடையேற கூடாது’ன்னு பொண்டாட்டிய சொன்னாரு. அவா நெஞ்சு நெஞ்சுன்னு அடிச்சுட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா.
‘இப்டி போட்டு ஆளாளுக்கு மிதிக்கவாடா இங்க வெவாரத்துக்கு வந்திருக்கோம்’னு தலைவரு சொன்னதும், பாதி பேரு அவங்களை பிரிச்சாங்க. விடிய விடிய வெவாரம் நடக்கு. இன்னைக்கு ஒரு முடிவு தெரியாம விடக்கூடாதுன்னு இருக்காவோ. விடிய விடிய இந்த மாதிரி கூட்டம் நடந்தா அங்ஙனயே கருப்பட்டி காப்பிக்கு ஏற்பாடு நடக்கும். நடு ராத்திரில கணபதியா பிள்ள கடய தெறக்க சொல்லி, கருப்பட்டியும், தூளும் வாங்கிட்டு வந்தானுவோ. கொஞ்சமா பொறிகடலயும். காபிய போட்டு குடிச்சுட்டு வெவாரம் நடக்கு, முடிஞ்ச பாடில்ல.
விடிஞ்சு போச்சு. தென்காசில இருந்து வார மொத பஸ்சு வந்துட்டு. பஸ்லயிருந்து இறங்கி வந்த நடுத்தெரு பொனமால, நேரா சங்காபீசுக்கு வந்தாம். வெவாரம் நடந்துட்டு இருக்கத பாத்துட்டு தலைய வெளிய இழுத்துட்டாம். தலைவரு இத பாத்துட்டு, ‘ஏய், வாடா’ன்னாரு. அவன், ‘நீரு இங்க வாரும்’ன்னான்.
வெளிய போனாரு.
என்னாமோ தலைவரு காதுல சொன்னாம்.
அவருக்கு மொகம் ஒரு மாதிரியாயிட்டு. உடனே, ‘வெவாரத்த பெறவு பேசலாம்ல, எல்லாரும் எங்கூட வாங்க’ன்னு கூப்டாரு. என்ன ஏதுன்னு தெரியாம எல்லாரும் அவரு பின்னாலயே ஓடுதாவோ. தலைவரு, வயசானவங்கிட்ட மட்டும் ஏதோ குசுகுசுன்னு சொல்லுதாரு. மத்தவங்கயெல்லாம் என்ன என்னன்னு கேட்டுட்டே வாரனுவோ. இவனுவ கூட ஒண்ணும் நடக்காத மாதிரி மஞ்சனக்காரரு மவனும் ஓரமா வாராம். சின்ன வாய்க்கா பாலம் தாண்டி, ஆத்தை பாத்து நடக்காவோ. இன்னும் நல்லா விடியல. பால் கொண்டு போற பாவூர்ச்சத்திரத்தானுவோ சைக்கிளு அங்க இங்கயும் பறந்துட்டு இருக்கு.
ஆத்துகிட்ட வந்த பெறவுதான் கொஞ்சம் புடிபட்டுது. ஆமா. சுடுகாட்டுல ஒரு ஆளு...
‘ஏல அது யாரு’ன்னு கேட்டுட்டு எளவட்ட பயலுவோல்லாம் கிட்டத்துல ஓடுதானுவோ.
போய் பாத்தா... திக்குனு ஆயி போச்சு!
சுடுகாட்டுல இருந்த வேப்ப மரத்துல, வேட்டிய அவுத்து தூக்கு போட்டு தொங்கிட்டிருந்தாரு மஞ்சனக்காரரு!
மொதமொதலா அவரு மவன் அழுதத, அப்பதான் எல்லாரும் பாத்தாவோ.
அவ்வளவுதான்.
Sunday, December 2, 2007
மஞ்சனக்காரரு மவன் 1: கேரக்டர் 6
அடுத்த மூணு நாளுல கையும் களவுமா புடிச்சுட்டு வந்து பகல்லயே வெவாரம். என்னன்னா... ஆண்டிக்கோன் வீட்டு மாட்டுல விடியுத முன்னாலயே யாரோ ஒரு பய, பால கறந்துட்டு போயிடுதாம்னு பேச்சு. பல நாளா நடந்திருக்கு. கண்ணி வச்சு அமுக்குத மாதிரி அமுக்கிட்டாவோ.
ராமரு கோயிலுக்கு பின்னால ஆண்டிக்கோன் வீடு. வீட்டுக்குப் பொறவாசல்ல தொழுவு. பேருதான் தொழுவு. ஆனா சுத்தி கருவ முள்ளுக்காடு. பாம்பு, பல்லின்னு அலைஞ்சுட்டிருக்குத ஏரியா. ராத்திரியானா லைட்டு கெடயாது. கும்முனு இருட்டா இருக்கும். அதுக்குள்ள போவவே பயமா இருக்கும். பயத்துக்கு காரணம் என்னன்னா தொழுவுக்கு பின்னால இருக்குத ரோட்டுல கருநாகம் கடிச்சு மேலத்தொரு பொன்னம்மாக்கா செத்துப்போனா. இதனால அந்தப் பக்கம் ராத்திரியானா யாருமே போவமாட்டாவோ. இதுவுமில்லா பக்கத்துல எசக்கி அம்மன் பூடமிருக்கு. கோவக்கார அம்மன்.
வீட்டுக்காரவோ விடியதுக்கு முன்னாலயே பாலு கறக்க சிம்னி வெளக்க தூக்கிட்டு போவவோ.
இந்தப் பய என்ன பண்ணிருக்காம்னா, பால ஒரு சொம்புல கறந்துட்டு, நொர பொங்கி பொங்கி வரும்லா, அப்டியே சூட்டோட மடக் மடக்குனு குடிச்சிட்டு, கன்னுட்டிய அவுத்து விட்டுட்டு போயிருக்காம். பெறவு எப்டி பாலு இருக்கும். ஆண்டிக்கோன் பொண்டாட்டி பாலு கரக்க உக்காந்தான்னா ஒரு மண்ணும் இருக்காது. செல மாடுவோ தெரியாத ஆளுவோ கறந்தா பாலு தராது. இது பசு வெருவாகெட்டது. மடுவுல யாரு கைய வச்சாலும் வாய அசச்சுட்டு செவனேன்னு இருக்கும்.
கறந்த பால சூட்டோட குடிச்சா பலந்தான். அதுக்கு இப்டியா களவாங்கணும்? தெனமும் இப்டி ஆவதால, ஐயமாரு வீட்டுக்கு பதிவு பால் கொடுக்குதவளால முடியல. பாவூர்சத்திரத்துக்காரன்கிட்ட துட்டு கொடுத்து வாங்கி, ஐயமாரு வீட்டுக்கு கொடுத்துக்கிட்டிருக்கா. அன்னைக்கு ஆண்டிக்கோன் பொண்டாட்டி தற்செயலா ஒண்ணுக்கு வந்திருக்குன்னு பின்னால வந்திருக்கா.
தொழுவுல யாரோ நடமாடுத சத்தம் கேக்குதேன்னுட்டு பாத்திருக்கா. புடிபடல. வீட்டுக்காரனை எழுப்புனா. அந்த வீட்டுக்கு கீழ வீடுதாம் ஆண்டிக்கோன் தம்பி வீடு. அவனையும் சத்தம் போடாம எழுப்பிட்டு பூனை மாதிரி பின்னால வந்து, மொதுவா முள்ளு மறைவுல உக்காந்தாவோ. இந்தப் பய, சுத்தி சுத்திப் பாத்துட்டு மாட்டு மடுவுக்கு கீழ உக்காந்தாம் பாருங்கோ... ஆண்டிக்கோன் பச்ச மட்டைய எடுத்து, நடு மண்டையிலயே போட்டாம். எந்திரிச்சு ஓடப்போனவை அவரு தம்பி விடல. கைய கெட்டி வச்சுக்கிட்டு வெளக்குல மூஞ்சிய பாத்தா இந்தப் பய.
அந்தானி, ஆண்டிக்கோனும் அவன் பொண்டாட்டியும் வந்த கோவத்துல சமட்டி எடுத்துட்டாவோ. விடியதுக்குள்ள ஊருல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. ஆண்டிக்கோன் வீட்டுக்கு முன்னால இருக்குத வேப்ப மரத்துல அவனை கெட்டிப்போட்டிருந்தாம்.
இதுதான் மஞ்சனக்காரருக்கு அவமானமா போச்சு. என்னதாம் தப்பு பண்ணிருந்தாலும் பெத்த புள்ளய, ஊராம் பய அடிக்கதுக்கு மனசு வருமா சொல்லுங்கோ? வெஷயத்தை கேள்வி பட்டு கண்ணீர் விட்டாராம் மஞ்சனக்காரரு.
இதுக்கும் வெவராம் வச்சாவோ. முடிவுல சாதிக்காரனுவோ எல்லாரு கால்லயும் விழந்து கும்புடணும்னு. கும்புட்டான் அந்தப் பய.
புத்தி வந்ததா?
இந்தா அடுத்த வெவாரம் வந்தாச்சு.
இது என்ன பிரச்னைன்னா...
பொந்தன் கந்தயா, வாழ போட்டுருந்தாம் வயல்ல. வாழ கொலயெல்லாம் வித்துட்டாம். வாங்குனவனுவோளும் பறிச்சுட்டு போயிட்டாம். ஒரு நாலு கொல மட்டும் மரத்துல பழுக்கட்டும்னு விட்டு வச்சிருந்தாம். என்னதான் பழம்னாலும் தானா பழுத்தா ருசியே தனிதான. அதுக்காக போட்டுருந்தாம். இத எப்டியோ கண்டுகிட்ட இந்த பய, நாலு கொலயையும் வெட்டி, அரவமில்லாம, நடு ராத்திரி பொட்டலுபுதூர் சந்தக்கு கொண்டு போயிருக்காம்.
இங்கயிருந்து அங்க போவ அர மணி நேரமாவும். ராத்திரிபூரா அங்ஙனயே சுத்திட்டு விடிய கருக்கல்ல வித்துட்டு வந்துட்டாம். இத, சுரண்டைக்கு சுண்டக்கா வெத வித்துட்டு மாட்டு வண்டில திரும்புன மஞ்சப்புளிசேரிக்காரன், தற்செயலா பாத்திருக்காம். இவன் வயலும் கந்தய்யா வயலும் பக்கத்து பக்கத்துல.
மறுநாளு காலைல வயலுக்கு வந்த கந்தையாவுக்கு திக்குனு ஆயிபோச்சு. கொலகள காணும். எவனோ களாவாண்டுட்டு போயிட்டானன்னு கண்டமேனிக்கு ஏசிட்டு இருந்திருக்காம். அந்தாப்ல மஞ்சபுளிச்சேரிக்காரன் வந்திருக்காம் பாருங்க. அவனுக்குப் புடிபட்டுபோச்சு. பொட்டல்புதூர்ல பாத்த விஷயத்தை சொல்லியிருக்காம். இந்தா... ஆள அமுக்கி வெவாரம் வச்சாச்சு.
இன்னும் சொல்லுதேன்.
ராமரு கோயிலுக்கு பின்னால ஆண்டிக்கோன் வீடு. வீட்டுக்குப் பொறவாசல்ல தொழுவு. பேருதான் தொழுவு. ஆனா சுத்தி கருவ முள்ளுக்காடு. பாம்பு, பல்லின்னு அலைஞ்சுட்டிருக்குத ஏரியா. ராத்திரியானா லைட்டு கெடயாது. கும்முனு இருட்டா இருக்கும். அதுக்குள்ள போவவே பயமா இருக்கும். பயத்துக்கு காரணம் என்னன்னா தொழுவுக்கு பின்னால இருக்குத ரோட்டுல கருநாகம் கடிச்சு மேலத்தொரு பொன்னம்மாக்கா செத்துப்போனா. இதனால அந்தப் பக்கம் ராத்திரியானா யாருமே போவமாட்டாவோ. இதுவுமில்லா பக்கத்துல எசக்கி அம்மன் பூடமிருக்கு. கோவக்கார அம்மன்.
வீட்டுக்காரவோ விடியதுக்கு முன்னாலயே பாலு கறக்க சிம்னி வெளக்க தூக்கிட்டு போவவோ.
இந்தப் பய என்ன பண்ணிருக்காம்னா, பால ஒரு சொம்புல கறந்துட்டு, நொர பொங்கி பொங்கி வரும்லா, அப்டியே சூட்டோட மடக் மடக்குனு குடிச்சிட்டு, கன்னுட்டிய அவுத்து விட்டுட்டு போயிருக்காம். பெறவு எப்டி பாலு இருக்கும். ஆண்டிக்கோன் பொண்டாட்டி பாலு கரக்க உக்காந்தான்னா ஒரு மண்ணும் இருக்காது. செல மாடுவோ தெரியாத ஆளுவோ கறந்தா பாலு தராது. இது பசு வெருவாகெட்டது. மடுவுல யாரு கைய வச்சாலும் வாய அசச்சுட்டு செவனேன்னு இருக்கும்.
கறந்த பால சூட்டோட குடிச்சா பலந்தான். அதுக்கு இப்டியா களவாங்கணும்? தெனமும் இப்டி ஆவதால, ஐயமாரு வீட்டுக்கு பதிவு பால் கொடுக்குதவளால முடியல. பாவூர்சத்திரத்துக்காரன்கிட்ட துட்டு கொடுத்து வாங்கி, ஐயமாரு வீட்டுக்கு கொடுத்துக்கிட்டிருக்கா. அன்னைக்கு ஆண்டிக்கோன் பொண்டாட்டி தற்செயலா ஒண்ணுக்கு வந்திருக்குன்னு பின்னால வந்திருக்கா.
தொழுவுல யாரோ நடமாடுத சத்தம் கேக்குதேன்னுட்டு பாத்திருக்கா. புடிபடல. வீட்டுக்காரனை எழுப்புனா. அந்த வீட்டுக்கு கீழ வீடுதாம் ஆண்டிக்கோன் தம்பி வீடு. அவனையும் சத்தம் போடாம எழுப்பிட்டு பூனை மாதிரி பின்னால வந்து, மொதுவா முள்ளு மறைவுல உக்காந்தாவோ. இந்தப் பய, சுத்தி சுத்திப் பாத்துட்டு மாட்டு மடுவுக்கு கீழ உக்காந்தாம் பாருங்கோ... ஆண்டிக்கோன் பச்ச மட்டைய எடுத்து, நடு மண்டையிலயே போட்டாம். எந்திரிச்சு ஓடப்போனவை அவரு தம்பி விடல. கைய கெட்டி வச்சுக்கிட்டு வெளக்குல மூஞ்சிய பாத்தா இந்தப் பய.
அந்தானி, ஆண்டிக்கோனும் அவன் பொண்டாட்டியும் வந்த கோவத்துல சமட்டி எடுத்துட்டாவோ. விடியதுக்குள்ள ஊருல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. ஆண்டிக்கோன் வீட்டுக்கு முன்னால இருக்குத வேப்ப மரத்துல அவனை கெட்டிப்போட்டிருந்தாம்.
இதுதான் மஞ்சனக்காரருக்கு அவமானமா போச்சு. என்னதாம் தப்பு பண்ணிருந்தாலும் பெத்த புள்ளய, ஊராம் பய அடிக்கதுக்கு மனசு வருமா சொல்லுங்கோ? வெஷயத்தை கேள்வி பட்டு கண்ணீர் விட்டாராம் மஞ்சனக்காரரு.
இதுக்கும் வெவராம் வச்சாவோ. முடிவுல சாதிக்காரனுவோ எல்லாரு கால்லயும் விழந்து கும்புடணும்னு. கும்புட்டான் அந்தப் பய.
புத்தி வந்ததா?
இந்தா அடுத்த வெவாரம் வந்தாச்சு.
இது என்ன பிரச்னைன்னா...
பொந்தன் கந்தயா, வாழ போட்டுருந்தாம் வயல்ல. வாழ கொலயெல்லாம் வித்துட்டாம். வாங்குனவனுவோளும் பறிச்சுட்டு போயிட்டாம். ஒரு நாலு கொல மட்டும் மரத்துல பழுக்கட்டும்னு விட்டு வச்சிருந்தாம். என்னதான் பழம்னாலும் தானா பழுத்தா ருசியே தனிதான. அதுக்காக போட்டுருந்தாம். இத எப்டியோ கண்டுகிட்ட இந்த பய, நாலு கொலயையும் வெட்டி, அரவமில்லாம, நடு ராத்திரி பொட்டலுபுதூர் சந்தக்கு கொண்டு போயிருக்காம்.
இங்கயிருந்து அங்க போவ அர மணி நேரமாவும். ராத்திரிபூரா அங்ஙனயே சுத்திட்டு விடிய கருக்கல்ல வித்துட்டு வந்துட்டாம். இத, சுரண்டைக்கு சுண்டக்கா வெத வித்துட்டு மாட்டு வண்டில திரும்புன மஞ்சப்புளிசேரிக்காரன், தற்செயலா பாத்திருக்காம். இவன் வயலும் கந்தய்யா வயலும் பக்கத்து பக்கத்துல.
மறுநாளு காலைல வயலுக்கு வந்த கந்தையாவுக்கு திக்குனு ஆயிபோச்சு. கொலகள காணும். எவனோ களாவாண்டுட்டு போயிட்டானன்னு கண்டமேனிக்கு ஏசிட்டு இருந்திருக்காம். அந்தாப்ல மஞ்சபுளிச்சேரிக்காரன் வந்திருக்காம் பாருங்க. அவனுக்குப் புடிபட்டுபோச்சு. பொட்டல்புதூர்ல பாத்த விஷயத்தை சொல்லியிருக்காம். இந்தா... ஆள அமுக்கி வெவாரம் வச்சாச்சு.
இன்னும் சொல்லுதேன்.
Saturday, December 1, 2007
மஞ்சனக்காரரு மவன்; கேரக்டர் 6
‘வெவாரம்னு வந்துட்டப் பெறவு மாமென் மச்சாம்னு பாக்க முடியுமாவே?'
‘சர்தான்'
‘என்ன சர்தாங்கியோ? ஏல அவன தூண்ல புடிச்சு கட்டுங்க‘ -தலைவரு சொன்னதும் வாயபொத்தீட்டு இருந்த கொடுக்கு ராசு எந்திரிச்சாம்.
‘தூண்ல கட்டுத வேலலாம் வேண்டாம், பாத்துகிடுங்கோ.'
‘ஏம்ல, நீ குதிக்க?'ன்னாரு தலைவரு.
‘அது என்ன மொறவே. தூண இங்க எதுக்கு வச்சிருக்கு? பெரிய தப்பு செஞ்ச பயலுவோல கெட்டணும்னுதான்'
‘ஆமா. என்ன வந்தது இப்பம்?'
‘போன மாசம் அடுக்கூட்டா மவன், மாரியம்மா புள்ளய கைய புடிச்சு இழுத்தான். வெவாரத்துல என்ன சொன்னியோ... அது எவ்வளவு பெரிய தப்பு? அவனை புடிச்சு இதுல கெட்டுனீயளா? இது திருட்டு வெவாரம். இதுக்கு ஏம்யா கெட்டணும்ங்கியோ?'
‘அந்த வெவாரத்தை இப்பம் ஏம்ல இழுக்க?'
‘நாயம்னா எல்லாத்துக்கும் பொதுதாம்'
‘இப்பம் அதுக்கென்னல வந்தது?'
‘தூண்ல கெட்டுன்னு எப்டியா சொல்லலாம்...தலவரா இருந்தா கொம்பா மொளச்சிருக்கு...நீ வச்சதுக்கலாம் இங்க ஆட முடியாது'
அந்தாப்ல ஆரம்பிச்சுது சனி. இவனுக்கு ஆதரவா கொஞ்ச பேரு, தலைவருக்கு ஆதரவா கொஞ்ச பேருன்னு கிளம்பிட்டானுவோ. ஆளாளுக்கு முண்டுதானுவோ. ஒரே காட்டு சத்தமா இருக்கு. சங்காபீச சுத்தி பொம்பளைலுவோ வேற கூடிட்டாவோ. சும்மாவே வீரத்தையெல்லாம் இங்க வந்துதாம் காட்டுவானுவோ. பொம்பளைலுவோ வேற வந்துட்டாவுளா. கேக்காண்டாம். அவளுவ முன்னால சண்டித்தனத்த காட்டணும்னே குதிச்சாணுவோ. சும்மா இருக்குத பயல ஒருத்தம் மிதிக்காம். மிதிச்சவனை இன்னொருத்தம் குத்துதாம்னு எறச்சலா இருக்கு.
சங்காபீச புதுசா கட்டுன பெறவு மொத மொத நடக்குத வெவாரம் இது. இதுக்கு முன்னால என்னன்னா இங்ஙன, பெரிய வேப்ப மரமும், வாசமடக்கி மரமும் இருக்கும். கொஞ்சம் தள்ளி 3 புளியமரம். இந்த மரத்துலருந்து எலயோ விழுந்து கெடக்கும். மாடு கன்னு குட்டின்னு வேற மரத்து மூட்டுல கெட்டிட்டு போயிருவாவோ. சாணி, மூத்ரம்னு ஒரே நாத்தமா இருக்கும். மாசாமாசம் நடக்குத கூட்டத்தன்னைக்கு சாய்ந்தரம் தலைவரு வீட்டுக்காரி வந்து, சாணிய தொளிச்சு தூத்து கோலம் போட்டுட்டு போவா. என்னதாம் தூத்து தொளிச்சாலும் நாத்தம் மட்டும் போவாது. ஆடு மாடுவோளோட வாழுதவோளுக்கு இது என்ன பெரிய வெஷயமா? நாத்தம் ஒண்ணும் செய்யாது. அங்ஙனயே கூட்டம் நடக்கும்.
வாசமடக்கி மரத்துக்கு கீழ தலைவரு உக்காந்துகிடுவாரு. சுத்தி அங்கங்க எல்லாரும் உக்காந்துகிடணும். கூட்டம் இல்லாத நாளு சின்ன பயலுவோலும், மாட்டுக்கு போவுத பயலுவோளும் இங்ஙன கிடந்து சொரணாவிட்டே இருப்பானுவோ. எல்லா பட்றை (சாதி சங்கம்) யிலயும் புதுசா சங்காபீசு கட்டிட்டதை பாத்து இவங்களும் கெட்டுனாவோ. தலைகெட்டு வரி போட்டு இன்னா அன்னான்னு இழுத்து இழுத்துக் கெட்டுனது. உள்ள சின்னதா கிருஷ்ணரு செல வேற இருக்கு. கையில புல்லாங்கொழலை வச்சுக்கிட்டு ஊதுத மாதிரி செல. கொஞ்சம் தூரமா சொவத்துல அனுமாரு கையில பழத்தை வச்சுக்கிட்டிருக்குத மாதிரி சின்ன செல. சாமி இருக்கதால கூட்டத்துக்கு பொம்பளைலுவோ வர மாட்டோவோ. புதுசா இதை கெட்டி பாலுகாச்சுன பெறவு நடக்குது மொத கூட்டம் இதுதான்.
வெவாரம் என்னன்னா நம்ம மஞ்சனக்காரரு மவனப் பத்தி. பய சுழியன். பொழுதன்னைக்கும் எவன்ட்டயாவது வம்பு தும்புக்கு போவலனா மூதிக்கு தூக்கம் வராது. அப்பன் பேர கெடுக்கதுக்கு வந்த பய. மஞ்சனக்காரரு, ஊருல மானம், மருவாதி உள்ளவரு. எல்லா சாதி கோயிலுக்கும் போயி, அவர்தான் மஞ்சனம் பூசுவாரு. மஞ்சனம்னா நீங்க என்னமோன்னு நெனக்காதீய. குங்குமத்தையும் மஞ்சனத்தையும் ஒண்ணா கலந்து, அதுல ஆமணக்கு எண்ணெய விட்டு கலக்கிட்டா மஞ்சனம். இது சாமி சம்பந்தப்பட்ட வெஷயங்கறதால இதுக்காகவே பாதி நாள வெரதத்துல கழிப்பாரு மனுஷன்.
கோயில் பூடத்துல செப்பு வச்சு, சாமிய வீராவேசமா வரைவாவோ. அதுல மஞ்சனத்த வச்சுதான் வரையணும்.
இது மேலதான் சாமியோட கண்ணு, மூக்கு, வாய், மீசைன்னு வெள்ளில செஞ்சத ஒட்ட வப்பாவோ. இதப் பண்ணி முடிச்சதும் சாமியாடியளுக்கு மொகம், கை, நெஞ்சுனு இத பூசணும். பெறவு சாமிக்கு ஆங்காரம் வாரத பாக்க பயமா இருக்கும். ஊர்ல எல்லா கோயிலுக்கும் இவருதாம் அத செய்வாரு. எல்லாரும் மரியாதயாத்தாம் பேசுவாவோ. அவரும் தங்கமானவரு. சத்தம் போட்டுக்கூட பேசமாட்டாரு.
இவ்ளவு மருவாதயான மனுஷனுக்கு இப்படியரு கொள்ளி வந்து வாச்சிருக்கேன்னு பேசாதவோ கெடயாது. வாத்தியாரு புள்ள மக்குங்கத மாதிரி இப்டி வந்து வாச்சிருக்காம். திமுறுல இப்டி செய்தானா? இல்ல... புத்தி பெரண்டு போச்சான்னு ஒரு எழவும் புரியல. புத்தி பெரண்டு கோட்டியா அலையுத பய எவங்கிட்ட சரியா பேசமாட்டாம். ஆனா, இவந்தாம் சேக்காளிமார்ட்டயும் கடைகாட்டுலயும் நல்லாத்தான பேசிட்டு இருக்காம்?
பாதி பிரச்னைல மஞ்சனக்காரரு மூஞ்சுக்காவ, சின்ன தண்டனையா கொடுத்து விட்டுருவாவோ. ஆனா மறுநாளே இன்னொரு வில்லங்கத்தை இழுத்துட்டு வந்து நிப்பாம். கோட்டிக்கார பய. இந்த மாசத்துல மட்டும் இது நாலாவது வெவாரம்னா பாத்துக்கிடுங்கோ.
ரெண்டு வாரத்துக்கு முன்னால பெருமா கோயில்ல சொக்கப்பன வச்சிருந்தாவோ. கருக்கல்ல ஐயரு வந்து தீபாரண காட்டிட்டு வந்த பெறவு, தீய வப்பாவோ. ஊர்க்காரவயெல்லாம் கோயில்ல இருக்கும் போது, இந்த அர்தலி, சொக்கப்பன பக்கத்துல வந்து பீடி பத்த வச்சிருக்காம். பக்கத்துல ஆளுவோ இல்ல. சொக்கப்பனய பாத்துக்கிட்டு நின்னுருக்காம். பெறவு என்ன நெனச்சானோ தெரியல. டமார்னு யாருக்கும் தெரியாம அதுல தீய வச்சுட்டு, மயிரே போச்சுன்னு போயிட்டாம். விளையாண்டுட்டு இருந்த ஒரு சின்ன பய வந்து சொன்ன பெறவுதான் தெரிஞ்சுது. எல்லரும் ஓடி வந்து பாக்கதுக்குள்ள குப்புனு தீ பிடிச்சு கொழுந்துவிட்டு எரியுது.
பயல புடிச்சு வெவராம் வச்சாவோ. மஞ்சனக்காரரு வந்தாரு. எல்லாரு முன்னாலயும் கையெடுத்து கும்புட்டாரு. ‘இதோட சரி, இனும அந்த நாயீ, என்ன தப்பு செஞ்சாலும் எனக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. என்னய கூப்புடாதியோ‘ன்னு சொல்லிட்டாரு. அவரும் மனுஷன்தான. வர மொற வேண்டாம். இப்படியரு புள்ளய பெத்ததுக்கு பல நாளு கண்ணீரு விட்டிருக்காரு. பெறவு கோயிலுக்கு எண்ணெய் வாங்கி ஊத்த சொல்லிட்டு வெவராத்தை முடிஞ்சுட்டாவோ.
சொல்லுதேன்.
‘சர்தான்'
‘என்ன சர்தாங்கியோ? ஏல அவன தூண்ல புடிச்சு கட்டுங்க‘ -தலைவரு சொன்னதும் வாயபொத்தீட்டு இருந்த கொடுக்கு ராசு எந்திரிச்சாம்.
‘தூண்ல கட்டுத வேலலாம் வேண்டாம், பாத்துகிடுங்கோ.'
‘ஏம்ல, நீ குதிக்க?'ன்னாரு தலைவரு.
‘அது என்ன மொறவே. தூண இங்க எதுக்கு வச்சிருக்கு? பெரிய தப்பு செஞ்ச பயலுவோல கெட்டணும்னுதான்'
‘ஆமா. என்ன வந்தது இப்பம்?'
‘போன மாசம் அடுக்கூட்டா மவன், மாரியம்மா புள்ளய கைய புடிச்சு இழுத்தான். வெவாரத்துல என்ன சொன்னியோ... அது எவ்வளவு பெரிய தப்பு? அவனை புடிச்சு இதுல கெட்டுனீயளா? இது திருட்டு வெவாரம். இதுக்கு ஏம்யா கெட்டணும்ங்கியோ?'
‘அந்த வெவாரத்தை இப்பம் ஏம்ல இழுக்க?'
‘நாயம்னா எல்லாத்துக்கும் பொதுதாம்'
‘இப்பம் அதுக்கென்னல வந்தது?'
‘தூண்ல கெட்டுன்னு எப்டியா சொல்லலாம்...தலவரா இருந்தா கொம்பா மொளச்சிருக்கு...நீ வச்சதுக்கலாம் இங்க ஆட முடியாது'
அந்தாப்ல ஆரம்பிச்சுது சனி. இவனுக்கு ஆதரவா கொஞ்ச பேரு, தலைவருக்கு ஆதரவா கொஞ்ச பேருன்னு கிளம்பிட்டானுவோ. ஆளாளுக்கு முண்டுதானுவோ. ஒரே காட்டு சத்தமா இருக்கு. சங்காபீச சுத்தி பொம்பளைலுவோ வேற கூடிட்டாவோ. சும்மாவே வீரத்தையெல்லாம் இங்க வந்துதாம் காட்டுவானுவோ. பொம்பளைலுவோ வேற வந்துட்டாவுளா. கேக்காண்டாம். அவளுவ முன்னால சண்டித்தனத்த காட்டணும்னே குதிச்சாணுவோ. சும்மா இருக்குத பயல ஒருத்தம் மிதிக்காம். மிதிச்சவனை இன்னொருத்தம் குத்துதாம்னு எறச்சலா இருக்கு.
சங்காபீச புதுசா கட்டுன பெறவு மொத மொத நடக்குத வெவாரம் இது. இதுக்கு முன்னால என்னன்னா இங்ஙன, பெரிய வேப்ப மரமும், வாசமடக்கி மரமும் இருக்கும். கொஞ்சம் தள்ளி 3 புளியமரம். இந்த மரத்துலருந்து எலயோ விழுந்து கெடக்கும். மாடு கன்னு குட்டின்னு வேற மரத்து மூட்டுல கெட்டிட்டு போயிருவாவோ. சாணி, மூத்ரம்னு ஒரே நாத்தமா இருக்கும். மாசாமாசம் நடக்குத கூட்டத்தன்னைக்கு சாய்ந்தரம் தலைவரு வீட்டுக்காரி வந்து, சாணிய தொளிச்சு தூத்து கோலம் போட்டுட்டு போவா. என்னதாம் தூத்து தொளிச்சாலும் நாத்தம் மட்டும் போவாது. ஆடு மாடுவோளோட வாழுதவோளுக்கு இது என்ன பெரிய வெஷயமா? நாத்தம் ஒண்ணும் செய்யாது. அங்ஙனயே கூட்டம் நடக்கும்.
வாசமடக்கி மரத்துக்கு கீழ தலைவரு உக்காந்துகிடுவாரு. சுத்தி அங்கங்க எல்லாரும் உக்காந்துகிடணும். கூட்டம் இல்லாத நாளு சின்ன பயலுவோலும், மாட்டுக்கு போவுத பயலுவோளும் இங்ஙன கிடந்து சொரணாவிட்டே இருப்பானுவோ. எல்லா பட்றை (சாதி சங்கம்) யிலயும் புதுசா சங்காபீசு கட்டிட்டதை பாத்து இவங்களும் கெட்டுனாவோ. தலைகெட்டு வரி போட்டு இன்னா அன்னான்னு இழுத்து இழுத்துக் கெட்டுனது. உள்ள சின்னதா கிருஷ்ணரு செல வேற இருக்கு. கையில புல்லாங்கொழலை வச்சுக்கிட்டு ஊதுத மாதிரி செல. கொஞ்சம் தூரமா சொவத்துல அனுமாரு கையில பழத்தை வச்சுக்கிட்டிருக்குத மாதிரி சின்ன செல. சாமி இருக்கதால கூட்டத்துக்கு பொம்பளைலுவோ வர மாட்டோவோ. புதுசா இதை கெட்டி பாலுகாச்சுன பெறவு நடக்குது மொத கூட்டம் இதுதான்.
வெவாரம் என்னன்னா நம்ம மஞ்சனக்காரரு மவனப் பத்தி. பய சுழியன். பொழுதன்னைக்கும் எவன்ட்டயாவது வம்பு தும்புக்கு போவலனா மூதிக்கு தூக்கம் வராது. அப்பன் பேர கெடுக்கதுக்கு வந்த பய. மஞ்சனக்காரரு, ஊருல மானம், மருவாதி உள்ளவரு. எல்லா சாதி கோயிலுக்கும் போயி, அவர்தான் மஞ்சனம் பூசுவாரு. மஞ்சனம்னா நீங்க என்னமோன்னு நெனக்காதீய. குங்குமத்தையும் மஞ்சனத்தையும் ஒண்ணா கலந்து, அதுல ஆமணக்கு எண்ணெய விட்டு கலக்கிட்டா மஞ்சனம். இது சாமி சம்பந்தப்பட்ட வெஷயங்கறதால இதுக்காகவே பாதி நாள வெரதத்துல கழிப்பாரு மனுஷன்.
கோயில் பூடத்துல செப்பு வச்சு, சாமிய வீராவேசமா வரைவாவோ. அதுல மஞ்சனத்த வச்சுதான் வரையணும்.
இது மேலதான் சாமியோட கண்ணு, மூக்கு, வாய், மீசைன்னு வெள்ளில செஞ்சத ஒட்ட வப்பாவோ. இதப் பண்ணி முடிச்சதும் சாமியாடியளுக்கு மொகம், கை, நெஞ்சுனு இத பூசணும். பெறவு சாமிக்கு ஆங்காரம் வாரத பாக்க பயமா இருக்கும். ஊர்ல எல்லா கோயிலுக்கும் இவருதாம் அத செய்வாரு. எல்லாரும் மரியாதயாத்தாம் பேசுவாவோ. அவரும் தங்கமானவரு. சத்தம் போட்டுக்கூட பேசமாட்டாரு.
இவ்ளவு மருவாதயான மனுஷனுக்கு இப்படியரு கொள்ளி வந்து வாச்சிருக்கேன்னு பேசாதவோ கெடயாது. வாத்தியாரு புள்ள மக்குங்கத மாதிரி இப்டி வந்து வாச்சிருக்காம். திமுறுல இப்டி செய்தானா? இல்ல... புத்தி பெரண்டு போச்சான்னு ஒரு எழவும் புரியல. புத்தி பெரண்டு கோட்டியா அலையுத பய எவங்கிட்ட சரியா பேசமாட்டாம். ஆனா, இவந்தாம் சேக்காளிமார்ட்டயும் கடைகாட்டுலயும் நல்லாத்தான பேசிட்டு இருக்காம்?
பாதி பிரச்னைல மஞ்சனக்காரரு மூஞ்சுக்காவ, சின்ன தண்டனையா கொடுத்து விட்டுருவாவோ. ஆனா மறுநாளே இன்னொரு வில்லங்கத்தை இழுத்துட்டு வந்து நிப்பாம். கோட்டிக்கார பய. இந்த மாசத்துல மட்டும் இது நாலாவது வெவாரம்னா பாத்துக்கிடுங்கோ.
ரெண்டு வாரத்துக்கு முன்னால பெருமா கோயில்ல சொக்கப்பன வச்சிருந்தாவோ. கருக்கல்ல ஐயரு வந்து தீபாரண காட்டிட்டு வந்த பெறவு, தீய வப்பாவோ. ஊர்க்காரவயெல்லாம் கோயில்ல இருக்கும் போது, இந்த அர்தலி, சொக்கப்பன பக்கத்துல வந்து பீடி பத்த வச்சிருக்காம். பக்கத்துல ஆளுவோ இல்ல. சொக்கப்பனய பாத்துக்கிட்டு நின்னுருக்காம். பெறவு என்ன நெனச்சானோ தெரியல. டமார்னு யாருக்கும் தெரியாம அதுல தீய வச்சுட்டு, மயிரே போச்சுன்னு போயிட்டாம். விளையாண்டுட்டு இருந்த ஒரு சின்ன பய வந்து சொன்ன பெறவுதான் தெரிஞ்சுது. எல்லரும் ஓடி வந்து பாக்கதுக்குள்ள குப்புனு தீ பிடிச்சு கொழுந்துவிட்டு எரியுது.
பயல புடிச்சு வெவராம் வச்சாவோ. மஞ்சனக்காரரு வந்தாரு. எல்லாரு முன்னாலயும் கையெடுத்து கும்புட்டாரு. ‘இதோட சரி, இனும அந்த நாயீ, என்ன தப்பு செஞ்சாலும் எனக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. என்னய கூப்புடாதியோ‘ன்னு சொல்லிட்டாரு. அவரும் மனுஷன்தான. வர மொற வேண்டாம். இப்படியரு புள்ளய பெத்ததுக்கு பல நாளு கண்ணீரு விட்டிருக்காரு. பெறவு கோயிலுக்கு எண்ணெய் வாங்கி ஊத்த சொல்லிட்டு வெவராத்தை முடிஞ்சுட்டாவோ.
சொல்லுதேன்.
Subscribe to:
Posts (Atom)