இவன் எதை பத்தியும் கவலைப்பட மாட்டான். எவனாது நொண்டின்னு கூப்டாம்னா சும்மா ஒரு பார்வை. அதுல கோவம் இருக்கா? அன்பு இருக்கா? எரிச்சல் இருக்கான்னு தெரியாது. கூப்டவனுக்கு ஒரு மாதிரி ஆயிப்போவும். ஏண்டா கூப்டம்னு தோணும்.
அதுக்கு பெறவு கூப்டுவானுவலா... மாட்டனுவோ.
நொய்யனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு குத்தால நம்பியாரு ஊருக்குள்ள சொல்லிட்டு அலைஞ்சாரு. பெத்தவா இருந்தாலே, 'என்ன சேத்து வச்சிருக்காம் கல்யாணம் பண்ணன்'னு கேப்பாவோ. இவனுக்கு யாரும் இல்லை. வளத்த முத்தையா கோனாரு, உம்பாட்டை நீ பாத்துக்கோன்னு விட்டுட்டாரு. இனும எவன் பொண்ணு கொடுப்பாம்? கொடுக்க வந்தாலும் இவங்கிட்ட என்ன இருக்கு நாலஞ்சு மாட்டைத் தவிர? இருக்குத குச்சிலு, முத்தையா கோனாரு கொடுத்தது. அதுவும் எழுதியா கொடுத்திருக்காரு. இல்லை. நாளைக்கு அவரு மவனுவோ வில்லங்கத்தை கெளப்பி, இருக்கத வீட்டையும் காலி பண்ண சொல்லிட்டானுவோன்னா? ஊர்ல வில்லங்கத்தை உசுப்பி விடவே ஆயிரம் பேரு இருக்கானுவோ. இதுல, வலதுகாலை வேற இழுத்து இழுத்து நடக்காம்.
குத்தால நம்பியாரு, முத்தையா கோனார்ட்ட கல்யாணம் பத்தி சொன்னதும், அவரு ஒண்ணும் சொல்லலை. நொய்யன் கூட சேந்த பயலுவோலுக்கெல்லாம் ஏற்கனவே கல்யாணமாயி புள்ளைக் குட்டியலு இருக்கு. இவன் அதை பத்திலாம் நினைக்காம இருக்கானேன்னு ஊருக்குள்ள சொல்லுதாவோ.
ஒரு நாளு முத்தையா கோனாரு அவன்ட்ட கேட்டாரு. 'ஏய்...கீழ புலியூர்ல சொந்தக்கார புள்ள இருக்கு. கஷ்டப்படுத குடும்பம்தான். கெட்டிக்கிடுதியா? சொன்னா நாளைக்கே போய் பேசிட்டு வந்துருவேன்'ன்னார்.
'இங்க பாருங்க. நானுண்டு மாடுண்டுன்னு இருக்கேன். எனக்கு கல்யாணமும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம். கேட்டேளா?'ன்னான் நொய்யன். அதோட முடிஞ்சு போச்சு. பெறவு யாரும் கல்யாணத்தைப் பத்தி பேசுதது இல்ல.
ஆனா, கொஞ்ச நாளா நொய்யங்கிட்ட மாறுதலு தெரியுது. மாடு மேய்க்க போற எடத்துல சரியா யாருகிட்டயும் பேசமாட்டக்காம். வழக்கமா ஒரு வாரம் ஒரு எடத்துல மாடு மேய்க்க போனா, அடுத்த வாரம் வேற எடத்துக்குப் போறதுதான் வழக்கம். இப்பம் பூவங்குறிச்சி கொளத்து பக்கத்துலதான் அடிக்கடி மாட்டை உடுதாம். ஆடு மாடு மேய்க்குத எல்லா பயலுவோலையும் ஒண்ணா கூட்டிக்கிட்டு அலையுத பய, இப்ப தனியா போறததைதான் விரும்புதானாம். ரயில்வே கேட் தாண்டி மாடுலாம் போவும்போது, 'ஏலே நீங்க எங்கயாவது போய் மேயுங்க; நான் கொளத்து பக்கம் போறேன்'ன்னு சொல்லுதானாம். சொல்லிட்டு அவன் பாட்டுக்குப் போய்ட்டிருக்காம். இப்படி சொன்ன பெறவு யாராவது அவங்கூட போவ முடியுமா?
இருந்தாலும் சூச்சமாடனுக்கு சந்தேகம். கூட்டாளியட்ட, 'அப்படி என்னல ஆச்சு இந்த பயலுக்கு?'ன்னு பேச்சு.
வழக்கமா பூவங்குறிச்சி கொளத்து பக்கம் சராயம் காய்ச்சுவாவோ. அதுக்கும் இந்த பயலுக்கும் சம்பந்தமில்லையே... வேறெதுக்கு அங்க போறாம்?
இவனுவோலுக்கு இருக்க முடியல.
'மூதி நல்லாத்தானல இருந்தாம். என்னாச்சுல'
'யார் கண்டா? சும்மாவே வல்லுனு விழுவாம். இப்பம் அவங்கிட்ட பேச முடியுமா சொல்லு?'
'அதுக்காவ விட்டுரமுடியுமால; ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா...'
'என்ன ஆவுங்க?'
'ஏல, நயினாரு மவன் இப்படித்தான் திடீர்னு பைத்தியக்காரன் மாதிரி அலைஞ்சாம். என்னாச்சு பாத்தல்லா?'
'என்னாச்சு?'
'மேட்டுத்தெரு புள்ளைய கூட்டிட்டுப் போயி, கேவலப்பட்டது தெரியாதால'
'அதுக்கு அவனயும் இவனையும் ஒண்ணா சேத்துர முடியுமால'
'இங்கேரு...இப்பலாம் எந்த பயலையும் நம்ப முடியல'
பேச்சு போய்க்கிட்டிருந்தது. பயலுவோலாம் ஒரு ஐடியா பண்ணுனானுவோ. அதாவது, நொய்யன் மாடு பத்திட்டு கொளத்து பக்கம் போவுத வரை பேசாம இருக்கணும். நம்ம மாட்டை வேலு கோனாரு வெளையில மேய்க்க பத்திட்டு, ஒருத்தன் அங்க நின்னுக்கிடணும். மத்தவங்க எல்லாரும் இவன் என்ன செய்தான்னு கொளத்துல இருக்குத பொத்தையில மறைஞ்சு பாக்கணும். இதுதான் திட்டம்.
அதே போல போனானுவோ. கொளத்துக்கு போற ரோட்டு பாதியில சின்ன வாய்க்கா இருக்கு. ரோட்டோடி நேரா போனா வேலுக்கோனாரு வெளை. அதுக்கு கீழ்ப் பக்கம் திரும்புனா பாபநாசம் போற ரோடு.
நொய்யன் வழக்கமா என்ன பண்ணுவான்னா...சின்ன வாய்க்காலுக்குள்ள மாட்டை விட்டுருவாம். அதை தாண்டி தென்ன மர கரையோரம் மாடு ஒத்தையடி பாதையில போவும். சுத்தி முள்ளுக்காடு. கொஞ்ச தூரம் போனதும் ரயிலு பாதை இருக்கு. அதை தாண்டி செம்மண் தரை. அந்த பாதை பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூருக்குப் போவும். அந்த பாதையில ஏறுனா கீழ்ப்பக்கம் எள்ளு வெளை. அதுக்கு பக்கத்துல புல்லு காடு. சும்மா கின்னுன்னு வளந்து கிடக்கும். அதுக்கு மேக்க கொளம். கொளத்து கரையில துண்டு துண்டா நிறைய பாறையோ இருக்கு. எள்ளு காட்டுக்குப் பக்கத்துல சின்னதா ஒரு பனையோலை குச்சிலு. மாட்டை அங்ஙன மேய்க்க விட்டுட்டு, நொய்யன் அதுல போயி, துண்டை உதறிட்டு கட்டைய சாத்துவான் வழக்கமா. இப்பம் என்ன செய்வான்னு பாக்கணும்லா.
ஐடியா படி போயாச்சு. எள்ளு காட்டுப் பக்கத்துல மாடுவோ மேய்ஞ்சுட்டு இருக்கு. இவனுவோ கொளத்து பாறை மேல மறைஞ்சிருந்துகிட்டு குச்சிலை பாக்காணுவோ. அதுல ஈ, எறும்பு இல்ல. சந்தேகம் வலுத்து போச்சு. அர்தலி எங்க போய் தொலைஞ்சாம்?
அந்தானி, தூரத்துல என்னமோ சத்தம் கேக்கு. சுத்தி சுத்திப் பாக்கணுவோ. எங்கயும் ஆள் இல்லை. சத்தம் மட்டும் குசு குசுன்னு வருது. கூடவே சிரிப்பு சத்தம். நாய்க்குட்டி குரை வேற கேக்கு.
சூச்சமாடன்தான் தலைய குனிஞ்சுக்கிட்டு பாறைய விட்டு வெளிய வந்தான். பூனை மாதிரி நடந்தான். குச்சில்ல யாரும் இல்ல. கழுத்தை தூக்கி எள்ளுக்காட்டுக்குள்ள பாத்தா ரெண்டு தலை தெரியுது. திக்குன்னு ஆயிப்போச்சு அவனுக்கு.
நாளை முடிக்கிறேன்.
Thursday, September 27, 2007
Saturday, September 22, 2007
நொய்யன் 3
சூச்ச மாடனுக்கு இதைக் கண்காணிக்கிறதோட சரி. வயல்ல விழுந்த மாடுவோ எவன் பேச்சுக்கும் நிக்காது. என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும் 'போடா நீயும் ஒன் சத்தமும்'ங்கற மாதிரி தான் இருக்கும். சூச்ச மாடனாலும் சரி, பரம்சம்னாலும் சரி. ஒண்ணும் பண்ண முடியாது.
அதுக்கெல்லாம் நொய்யன்தான். அடங்காத மாடுவோ கூட இவனோட சத்தத்துக்கு சரண்டராயிரும். அப்படியொரு அதிகார சத்தம். மாடுவோளுக்கு அவன் சத்தம் மட்டும் ரொம்ப புடிக்குதோ என்னவோ. வயல்ல விழுத மாடுவோ, இவன் ஒரு கத்து கத்துனா தலைய குனிஞ்சுகிட்டு வெளிய வந்துரும். ஒட்டாங்காளைலு சிலது எவனுக்கும் கட்டுப்படாது. தலைய சிலுப்பிக்கிட்டு பாடாப்படுத்திப் போடும். வீட்ல பொம்பளைலுவோ தண்ணி, வைக்கலு வைக்க போவ முடியாது. கோவமா பாய்ஞ்சு முட்டிப்போடும்.
இப்படித்தான் மாடசாமி புதுசா வாங்குன ஒட்டங்காளைல ஒண்ணு அடங்காமா அலைஞ்சது. அவனால வண்டியில கெட்ட முடியலை. இது வலப்பக்க காளை. வண்டி ஒட்டுதவனுக்கு வலப்பக்க காளை முக்கியம். இது இப்படி அடங்காம இருந்துச்சுன்னா என்ன பண்ண முடியும்? அன்னா இன்னான்னு என்னென்னமொ செஞ்சு பாத்தான். அடங்கலை.
ஒரு நாளு தற்செயலா மாட்டைப் பத்திட்டு போய்ட்டிருந்த நொய்யன், இந்த மாட்டை பாத்தான். போற போக்குல அது முதுவுல ஒரு தட்டு தட்டுனான். காளை, திரும்பி பாத்துட்டு பேசாம நின்னுது. மாடசாமிக்கு ஆச்சர்யம் தாங்கலை. ஒரு பயலையும் கிட்ட சேக்காத பய மாடு, இவனை மட்டும் ஒண்ணும் பண்ணலையேன்னு மூக்குல விரலை வச்சான்.
நொய்யனைக் கூப்ட்டு வெஷயத்தை சொன்னான்.
'ரெண்டு நாளு எங்கிட்ட மேய்ச்சலுக்கு பத்து; பாத்துக்கிடுதம்'னான். மொத நாளு அது போற போக்குல விட்டாம். ரெண்டாவது நாளு முதுவுல தடவி, அது இதுன்னு வசக்கிட்டாம்.
மாடசாமி வீட்ல விடும்போது, நாலஞ்சு கொடம் தண்ணிய வாங்கி, நல்லா குளிப்பாட்டுனாம். கூடவே மாடசாமியையும் நிக்க வச்சாம். இவன் ஒரு பக்கம், அவன் ஒரு பக்கம்னு மாட்டை தேச்சாவோ. இதே போல மறுநாளும். பய மாடு இப்ப வசங்கிப் போச்சு. மாடசாமிக்கு சந்தோஷம் தாங்க முடியலை. உடனே அம்பாசமுத்ரம் போயி, எட்டு முழ வேட்டி ரெண்டு, தேங்காப்பூ துண்டு ரெண்டுன்னு வாங்கிட்டு வந்து கொடுத்தாம்.
'இதுலாம் நமக்குள்ள எதுக்குன்னே'
'ச்சே...புடிடா...நான் என்னமோ மாடுதானேன்னு விட்டுட்டேன். இதுல நிறைய விஷயம் இருக்குன்னு இப்பலாடா தெரியுது. நெறய வெலை கொடுத்து வாங்குன மாடு, அடங்கமாட்டேங்க, வித்துரலாம்னுலா நெனச்சேன்'
'அதுலாம் ஒண்ணுமில்லனே...நம்ம கிட்ட வந்தது அடங்காம எங்க போயிரும்'னு சொல்லிட்டு அதை வாங்கிட்டு போனாம்.
இதே போல மணிமுத்தாறு பக்கத்துல இருந்து சீதைக்கா ஒரு எருமைய வாங்கிட்டு வந்தா. வந்த நாள்ல இருந்து அதுகிட்ட பால் கறக்க முடியல. போனா காலால ஒரே போடு. கீழ உக்காந்து காம்புல தண்ணிய ஊத்துனா அடுத்த நிமிஷமே அங்க இங்கன்னு கட்டுல நின்னு ஆட ஆரம்பிச்சுடுது. ஆனா, கன்னுகுட்டி வந்து குடிச்சா மட்டும் பேசாம நிக்கி. சீதைக்கா என்னென்னமோ பண்ணி பாத்தா. முடியல.
நொய்யனை கூப்டா. மொதல்ல கன்னுகுட்டிய பூரா குடிக்க விட்டாம். அந்தானி, கன்னுக்குட்டிய கெட்டிப் போடாம பக்கத்துலயே நிக்க வச்சுக்கிட்டு, முதுவுல தடவுனாம். பெறவு செத்த நேரம் அப்படியே நின்னுட்டு, கீழ குனிஞ்சு காம்பை மெதுவா தொட்டாம். அவளுக்கு ஆச்சரியம். மாடு ஒண்ணும் செய்யலை. இருக்கத பாலை கறந்தாம். கொஞ்சம்தான் இருந்ததுன்னாலும் அடுத்தாப்ல சீதைக்கா போனதும் பாலை கொடுக்க ஆரம்பிச்சுட்டு. இதை போல நொய்யனுக்கு ஏகப்பட்ட மாட்டு அனுபவம் இருக்கு.
நொய்யனுக்கு என்ன வயசிருக்கும்னு நினைக்கியோ. ஒரு நாப்பது, நாப்பத்தஞ்சு. ம்ஹூம். சிரிக்க கூடாது. இருபத்தஞ்சுதான். இளவட்ட பய. சின்னஞ்சிறுசுலயே மாட்டோட மாடா மேஞ்சு, இன்னைக்கு மாடு விஷயத்துல ஊருக்குள்ள பெரிய ஆளா இருக்காம். அவனுக்கு எந்த ஊரு, யாரு பெத்த பிள்ளைனெல்லாம் வயசான ஆளுங்களுக்கு மட்டும்தான் தெரியும். அவன் சின்ன வயசுல முத்தையா கோனார் வீட்ல மாடு மேச்சுட்டு இருந்தாம். சில பேரு என்ன சொல்வாவோன்னா... யார்ட்டயும் சொல்லாதீங்க.
முத்தையா கோனாரு தோப்புல வேலை பாக்க, ஒரு பொம்பளை இருந்தாளாம். தோப்புக்குள்ளேயே ஒரு குச்சிலு அவளுக்கு. இவரு போனார்னா அங்கதான் சாப்பிடுவாராம். அவளுக்கும் இவருக்கும் தொசுக்கு இருந்துச்சாம். அவளுக்கு பொறந்த பிள்ளைதான் நொய்யனாம். சாதி பிரச்னைல அவன் அம்மாவ முத்தையா பொண்டாட்டி விரட்டி உட்டுட்டாளாம். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது. ஆனா, ஊருக்குள்ள முன்னால பேசிக்கிடுவாவோ. இப்ப இவன் வளந்துட்டதால அவரு வீட்டு தொழுவுலயே தனியா சின்ன குச்சிலை கொடுத்து, 'இதுல இருந்துக்கோ. வீட்ல இருக்க மாட்டை மேய். கூட ஊர்ல யார் மாட்டையாவது மேச்சி சம்பாதிச்சுக்கோ'ன்னு பெரிய மனசு பண்ணி சொல்லிட்டாராம்.
ஒரு தடவை கடனாநதி ஆத்துல சரியான வெள்ளம். ஊருக்குள்ள தண்ணி வந்துட்டு. வயக்காட்டுல இருக்கத முத்தாரம்மன் கோயிலு முங்குத அளவுக்கு வெள்ளம். மஞ்சளும், காவியும் சேர்ந்த கலர்ல தண்ணி. எல்லாரும் வெள்ளம் பாக்க ஓடுதாவோ.
செடி, செத்தை, தென்னை, பனை மரம், குடிசை வீடுன்னு வெள்ளத்துல அடிச்சுட்டு போவுது. நல்ல பாம்புவோ தலைய தூக்கிட்டு தண்ணியில நீந்த முடியாம அது இழுக்குத இழுவைக்குள்ள போய்ட்டு இருக்கு. ஊரே அங்க இங்க நின்னு வேடிக்கை பாக்கு. அப்ப நொய்யன் சின்ன பய. முத்தையா கோனார் வீட்ல மாடு மேய்ச்சிட்டிருக்கான். சின்ன வாய்க்கா பக்கத்துல நின்னு வேடிக்கை பாக்க வந்தான். பாத்துக்கிட்டிருந்த பய திடீர்னு பாலத்துல இருந்து தண்ணிக்குள்ள விழுந்துட்டாம். சரியான ஆழம். கீழ கல்லு. முங்குன பயலை செத்த நேரம் ஆளை காணலை.
அந்தானி, வேடிக்கைப் பாத்துட்டிருந்த பட்சித்தேவரு மவன் முத்து, பரம்ச நம்பியாரு மவன் குட்டி, இன்னும் ரெண்டு பேருன்னு கரையில இருந்து வெள்ளத்துல இறங்கி தேடுனாவோ. என்னதான் வெள்ளம்னாலும் உசுரு போனா வருமா? அதுவும் ஊருக்கே வேண்டிய பய. தேடு தேடுனு தேடி, பெறவு கெழக்க தள்ளி ஒரு வாசமடக்கி மரத்தை புடிச்சுக்கிட்டு, பாதி செத்து போய் கெடக்காம். உடனே அவனை தூக்கிட்டு வந்து, மாட்டு வண்டியில போட்டு அம்பாசமுத்ரம் கொண்டு போனாவோ. பய மயங்கி போனாம். போன இடத்துலதான் தெரிஞ்சது. கால் எலும்பு முறிஞ்சு போச்சுன்னு. கட்டு போட்டு, வைத்தியம் பாத்தாரு முத்தையா கோனாரு. கொஞ்சம் கொஞ்மா தேறி வந்தான். ஆனாலும் பயலுக்கு இன்னும் சரியா நடக்க முடியாது. வலது காலை நொண்டி நொண்டிதான் நடப்பான். அதனால அவனுக்கு வேண்டாதவோ அவனை நொண்டின்னுதான் கூப்டுவாவோ.
நாளைக்கு முடிச்சிருவேன்.
அதுக்கெல்லாம் நொய்யன்தான். அடங்காத மாடுவோ கூட இவனோட சத்தத்துக்கு சரண்டராயிரும். அப்படியொரு அதிகார சத்தம். மாடுவோளுக்கு அவன் சத்தம் மட்டும் ரொம்ப புடிக்குதோ என்னவோ. வயல்ல விழுத மாடுவோ, இவன் ஒரு கத்து கத்துனா தலைய குனிஞ்சுகிட்டு வெளிய வந்துரும். ஒட்டாங்காளைலு சிலது எவனுக்கும் கட்டுப்படாது. தலைய சிலுப்பிக்கிட்டு பாடாப்படுத்திப் போடும். வீட்ல பொம்பளைலுவோ தண்ணி, வைக்கலு வைக்க போவ முடியாது. கோவமா பாய்ஞ்சு முட்டிப்போடும்.
இப்படித்தான் மாடசாமி புதுசா வாங்குன ஒட்டங்காளைல ஒண்ணு அடங்காமா அலைஞ்சது. அவனால வண்டியில கெட்ட முடியலை. இது வலப்பக்க காளை. வண்டி ஒட்டுதவனுக்கு வலப்பக்க காளை முக்கியம். இது இப்படி அடங்காம இருந்துச்சுன்னா என்ன பண்ண முடியும்? அன்னா இன்னான்னு என்னென்னமொ செஞ்சு பாத்தான். அடங்கலை.
ஒரு நாளு தற்செயலா மாட்டைப் பத்திட்டு போய்ட்டிருந்த நொய்யன், இந்த மாட்டை பாத்தான். போற போக்குல அது முதுவுல ஒரு தட்டு தட்டுனான். காளை, திரும்பி பாத்துட்டு பேசாம நின்னுது. மாடசாமிக்கு ஆச்சர்யம் தாங்கலை. ஒரு பயலையும் கிட்ட சேக்காத பய மாடு, இவனை மட்டும் ஒண்ணும் பண்ணலையேன்னு மூக்குல விரலை வச்சான்.
நொய்யனைக் கூப்ட்டு வெஷயத்தை சொன்னான்.
'ரெண்டு நாளு எங்கிட்ட மேய்ச்சலுக்கு பத்து; பாத்துக்கிடுதம்'னான். மொத நாளு அது போற போக்குல விட்டாம். ரெண்டாவது நாளு முதுவுல தடவி, அது இதுன்னு வசக்கிட்டாம்.
மாடசாமி வீட்ல விடும்போது, நாலஞ்சு கொடம் தண்ணிய வாங்கி, நல்லா குளிப்பாட்டுனாம். கூடவே மாடசாமியையும் நிக்க வச்சாம். இவன் ஒரு பக்கம், அவன் ஒரு பக்கம்னு மாட்டை தேச்சாவோ. இதே போல மறுநாளும். பய மாடு இப்ப வசங்கிப் போச்சு. மாடசாமிக்கு சந்தோஷம் தாங்க முடியலை. உடனே அம்பாசமுத்ரம் போயி, எட்டு முழ வேட்டி ரெண்டு, தேங்காப்பூ துண்டு ரெண்டுன்னு வாங்கிட்டு வந்து கொடுத்தாம்.
'இதுலாம் நமக்குள்ள எதுக்குன்னே'
'ச்சே...புடிடா...நான் என்னமோ மாடுதானேன்னு விட்டுட்டேன். இதுல நிறைய விஷயம் இருக்குன்னு இப்பலாடா தெரியுது. நெறய வெலை கொடுத்து வாங்குன மாடு, அடங்கமாட்டேங்க, வித்துரலாம்னுலா நெனச்சேன்'
'அதுலாம் ஒண்ணுமில்லனே...நம்ம கிட்ட வந்தது அடங்காம எங்க போயிரும்'னு சொல்லிட்டு அதை வாங்கிட்டு போனாம்.
இதே போல மணிமுத்தாறு பக்கத்துல இருந்து சீதைக்கா ஒரு எருமைய வாங்கிட்டு வந்தா. வந்த நாள்ல இருந்து அதுகிட்ட பால் கறக்க முடியல. போனா காலால ஒரே போடு. கீழ உக்காந்து காம்புல தண்ணிய ஊத்துனா அடுத்த நிமிஷமே அங்க இங்கன்னு கட்டுல நின்னு ஆட ஆரம்பிச்சுடுது. ஆனா, கன்னுகுட்டி வந்து குடிச்சா மட்டும் பேசாம நிக்கி. சீதைக்கா என்னென்னமோ பண்ணி பாத்தா. முடியல.
நொய்யனை கூப்டா. மொதல்ல கன்னுகுட்டிய பூரா குடிக்க விட்டாம். அந்தானி, கன்னுக்குட்டிய கெட்டிப் போடாம பக்கத்துலயே நிக்க வச்சுக்கிட்டு, முதுவுல தடவுனாம். பெறவு செத்த நேரம் அப்படியே நின்னுட்டு, கீழ குனிஞ்சு காம்பை மெதுவா தொட்டாம். அவளுக்கு ஆச்சரியம். மாடு ஒண்ணும் செய்யலை. இருக்கத பாலை கறந்தாம். கொஞ்சம்தான் இருந்ததுன்னாலும் அடுத்தாப்ல சீதைக்கா போனதும் பாலை கொடுக்க ஆரம்பிச்சுட்டு. இதை போல நொய்யனுக்கு ஏகப்பட்ட மாட்டு அனுபவம் இருக்கு.
நொய்யனுக்கு என்ன வயசிருக்கும்னு நினைக்கியோ. ஒரு நாப்பது, நாப்பத்தஞ்சு. ம்ஹூம். சிரிக்க கூடாது. இருபத்தஞ்சுதான். இளவட்ட பய. சின்னஞ்சிறுசுலயே மாட்டோட மாடா மேஞ்சு, இன்னைக்கு மாடு விஷயத்துல ஊருக்குள்ள பெரிய ஆளா இருக்காம். அவனுக்கு எந்த ஊரு, யாரு பெத்த பிள்ளைனெல்லாம் வயசான ஆளுங்களுக்கு மட்டும்தான் தெரியும். அவன் சின்ன வயசுல முத்தையா கோனார் வீட்ல மாடு மேச்சுட்டு இருந்தாம். சில பேரு என்ன சொல்வாவோன்னா... யார்ட்டயும் சொல்லாதீங்க.
முத்தையா கோனாரு தோப்புல வேலை பாக்க, ஒரு பொம்பளை இருந்தாளாம். தோப்புக்குள்ளேயே ஒரு குச்சிலு அவளுக்கு. இவரு போனார்னா அங்கதான் சாப்பிடுவாராம். அவளுக்கும் இவருக்கும் தொசுக்கு இருந்துச்சாம். அவளுக்கு பொறந்த பிள்ளைதான் நொய்யனாம். சாதி பிரச்னைல அவன் அம்மாவ முத்தையா பொண்டாட்டி விரட்டி உட்டுட்டாளாம். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது. ஆனா, ஊருக்குள்ள முன்னால பேசிக்கிடுவாவோ. இப்ப இவன் வளந்துட்டதால அவரு வீட்டு தொழுவுலயே தனியா சின்ன குச்சிலை கொடுத்து, 'இதுல இருந்துக்கோ. வீட்ல இருக்க மாட்டை மேய். கூட ஊர்ல யார் மாட்டையாவது மேச்சி சம்பாதிச்சுக்கோ'ன்னு பெரிய மனசு பண்ணி சொல்லிட்டாராம்.
ஒரு தடவை கடனாநதி ஆத்துல சரியான வெள்ளம். ஊருக்குள்ள தண்ணி வந்துட்டு. வயக்காட்டுல இருக்கத முத்தாரம்மன் கோயிலு முங்குத அளவுக்கு வெள்ளம். மஞ்சளும், காவியும் சேர்ந்த கலர்ல தண்ணி. எல்லாரும் வெள்ளம் பாக்க ஓடுதாவோ.
செடி, செத்தை, தென்னை, பனை மரம், குடிசை வீடுன்னு வெள்ளத்துல அடிச்சுட்டு போவுது. நல்ல பாம்புவோ தலைய தூக்கிட்டு தண்ணியில நீந்த முடியாம அது இழுக்குத இழுவைக்குள்ள போய்ட்டு இருக்கு. ஊரே அங்க இங்க நின்னு வேடிக்கை பாக்கு. அப்ப நொய்யன் சின்ன பய. முத்தையா கோனார் வீட்ல மாடு மேய்ச்சிட்டிருக்கான். சின்ன வாய்க்கா பக்கத்துல நின்னு வேடிக்கை பாக்க வந்தான். பாத்துக்கிட்டிருந்த பய திடீர்னு பாலத்துல இருந்து தண்ணிக்குள்ள விழுந்துட்டாம். சரியான ஆழம். கீழ கல்லு. முங்குன பயலை செத்த நேரம் ஆளை காணலை.
அந்தானி, வேடிக்கைப் பாத்துட்டிருந்த பட்சித்தேவரு மவன் முத்து, பரம்ச நம்பியாரு மவன் குட்டி, இன்னும் ரெண்டு பேருன்னு கரையில இருந்து வெள்ளத்துல இறங்கி தேடுனாவோ. என்னதான் வெள்ளம்னாலும் உசுரு போனா வருமா? அதுவும் ஊருக்கே வேண்டிய பய. தேடு தேடுனு தேடி, பெறவு கெழக்க தள்ளி ஒரு வாசமடக்கி மரத்தை புடிச்சுக்கிட்டு, பாதி செத்து போய் கெடக்காம். உடனே அவனை தூக்கிட்டு வந்து, மாட்டு வண்டியில போட்டு அம்பாசமுத்ரம் கொண்டு போனாவோ. பய மயங்கி போனாம். போன இடத்துலதான் தெரிஞ்சது. கால் எலும்பு முறிஞ்சு போச்சுன்னு. கட்டு போட்டு, வைத்தியம் பாத்தாரு முத்தையா கோனாரு. கொஞ்சம் கொஞ்மா தேறி வந்தான். ஆனாலும் பயலுக்கு இன்னும் சரியா நடக்க முடியாது. வலது காலை நொண்டி நொண்டிதான் நடப்பான். அதனால அவனுக்கு வேண்டாதவோ அவனை நொண்டின்னுதான் கூப்டுவாவோ.
நாளைக்கு முடிச்சிருவேன்.
Friday, September 21, 2007
நொய்யன் 2
என்னதான் காடு, கரைன்னாலும் வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கும்லா. சூச்சமாடனுக்கு லெட்சுமி புள்ள மேல ஒரு இது. என்னதான் தூரத்து மொறன்னாலும் இவனுக்கு அவளைப் பாத்தா உதறல் எடுக்கத்தான் செய்யும். ஏம்னு தெரியாது. அவ்வோ வீட்ல நாலு மாடு. இவன் மாட்டோடதான் மேய விட்டுருக்காவோ. ஒரு நாளு அம்மங்கோயிலுக்கு கீழ்ப் பக்கம் மாடு மேய்ச்சுட்டு நின்னான் நொய்யனோட. ரெண்டு பேரும் நல்லாதான் பேசிட்டு இருந்தாவோ. திடீர்னு பாத்தா சூச்சமாடனுக்கு காலு கையெல்லாம் நடுங்க ஆரம்பிக்கு. மொகம் கோணுது. திடீர்னு திரும்பி நின்னுக்கிடுதாம். தலைய கீழ பாத்துக்கிடுதாம். எங்கயிருந்துதான் வெக்கம் வந்து தொலைக்கோ மூதிக்கு.
'ஏம் இப்படி ஆவுதாம்?னு நொய்யனுக்கு புடிபடலை.
'ஏல என்னாச்சு'ங்கான்.
'ஒண்ணுமில்ல. சும்மா இருல'ன்னு பதில் சொல்லுதான்.
ஆனா, அதே நடுக்கம்.
அந்தானி, எதுத்தாப்ல பாத்தா இந்த புள்ள வருது.
அதுவும் இவனை பாத்தும் பாக்காத மாதிரிதான் போவுது. தலை கீழ போய் கிடக்கு. இடுப்பு கொடத்தை கொஞ்சமா சாய்ச்சி, இவன் மொகத்தை மெல்ல பாக்கு. வரப்புக்குள்ள தத்தக்கா பித்தக்கான்னு அது நடந்து வரும்போதே புள்ளைக்கு பேய் கீய் புடிச்சிருக்குமோன்னுதான் தோணும்.
அப்பதான் நொய்யனுக்கே வெஷயம் புரியுது.
'ஏல ஆம்பளையால நீ. பொம்பளை புள்ளைய பாத்ததும் இப்படி ஒதறல் எடுக்கு ஆக்கங் கெட்டவனே... மூஞ்சியில வக்கு'ன்னான்.
'என்னன்னே தெரியலைல அந்தப் புள்ளைய பாத்தா மட்டும் எனக்கு இப்படியாவுதுல'
இதுக்குப் பெறவுதான் வெஷயம் ஊருக்கு தெரிஞ்சு, அந்த புள்ள வீட்லயும் கண்டும் காணாமயும் வுட்டுட்டாவோ. இப்ப மூதியோ ரெண்டும் அங்க இங்க நின்னு யாருக்கும் தெரியாம பேசிக்கிடும்.
நொய்யனுக்கு இந்த காதலு கீதலு எதுவும் வந்ததில்லை.
முத்தாரம்மன் கோயில் கொடைக்கு கெரகாட்டம் ஆட வந்த தென்காசி காரிய பாத்துதான் ஒரு தடவை கெறங்கி இருக்காம்.
'ஏல அம்சமா இருக்கால. கெட்டுனா இவளை போல பிள்ளையதாம்டா கெட்டணும்'ன்னான்.
அவ அன்னைக்கு ஆட்டத்தோட போயிட்டா. பெறவு அவனுக்கு காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்லை. அவன் உண்டு மாடு மேய்க்கது உண்டுன்னு நிம்மதியா இருக்காம்.
அப்பத்தா டீக்கடையில கொஞ்ச வம்பளத்துட்டு, கெளம்புவானுவோ. வீட்டுக்கு போயி கொஞ்சம் நீத்தண்ணியோட கஞ்சிய குடிப்பானுவோ. வீட்ல இருக்குத ஆளு, தூக்கு சட்டியில பழைய சோறை போட்டு வச்சிருப்பாவோ. அந்தானி, தொழுவுக்கு போயி மாட்டை அவுத்துவிட்டு,
க்கியே...ன்னு ஒரு சத்தம். கிளம்பிரும் மாடுவோ.
யாரு யாரு வீட்டு மாட்டையெல்லாம் கூட சேத்துக்கிடணுமோ அந்தந்த மாடுவோ மந்தைக்கிட்ட வந்துரும். கீழ தெருவுலயிருந்தும் மேல தெருவுல இருந்தும் மாடுகளோட மேய்க்கிதவனுவோ வருவானுமோ. கீழ தெருவுல சுப்பையா கோனார் வீட்ல மட்டும்தான் அம்பது செம்மறி குட்டி இருக்கு. அதை மேய்க்கதுக்கு அவரு மவன் பரம்சம் வருவான்.
மந்தைல சின்னான் ஒரு பெட்டிக்கடை போட்டிருந்தான். மாட்டையெல்லாம் மந்தையில விட்டுட்டு இந்தக் கடையில உக்காந்துகிடுவானுவோ. ஊர்க்கதை, ஊர்வம்பு, இல்லாதது பொல்லாததுன்னு கதை நடக்கும். ஆளாளுக்கு கதையடிப்பானுவோ.
எல்லாரும் வந்த பெறவு, நொய்யன்தான் கெளம்பலாம்னு சொல்லணும். அவனுக்கு மட்டும்தான் உத்தரவு சொல்ல அதிகாரம். அவன் எப்ப சொல்லுதானோ அப்பதான் கெளம்பணும்.
கதை நடந்துக்கிட்டிருக்கும்போதே , 'எல்லாரும் வந்தாச்சாப்பாம்'பான் நொய்யன். எல்லாரும் ஒரு பார்வை பாத்துக்கிடுவாவோ. வந்தாச்சுன்னா கெளம்பல்தான். மாடுகளை ஒண்ணா சின்ன வாய்க்கால் வழியா உடுவானுவோ. தண்ணிக்குள்ள முங்கி கரையில ஏறும். இரண்டு கரையிலயும் தென்னம்பிள்ளைங்க. கீழ வயக்காடு. அதுல இருக்குத பச்சைய பாத்துட்டுவோன்னா, கள்ளப்பய மாடுவோ மாட்டுக்காரனை விட்டுட்டு தொப்புன்னு உள்ள குதிச்சு, வயக்காடை உண்டு இல்லைன்னு பண்ணிரும். அதனால அதை கவனிக்கது சூச்சமாடன் வேலை.
இன்றைய அரை மணி நேரம் முடிந்தது. நாளை முடிக்கிறேன்.
'ஏம் இப்படி ஆவுதாம்?னு நொய்யனுக்கு புடிபடலை.
'ஏல என்னாச்சு'ங்கான்.
'ஒண்ணுமில்ல. சும்மா இருல'ன்னு பதில் சொல்லுதான்.
ஆனா, அதே நடுக்கம்.
அந்தானி, எதுத்தாப்ல பாத்தா இந்த புள்ள வருது.
அதுவும் இவனை பாத்தும் பாக்காத மாதிரிதான் போவுது. தலை கீழ போய் கிடக்கு. இடுப்பு கொடத்தை கொஞ்சமா சாய்ச்சி, இவன் மொகத்தை மெல்ல பாக்கு. வரப்புக்குள்ள தத்தக்கா பித்தக்கான்னு அது நடந்து வரும்போதே புள்ளைக்கு பேய் கீய் புடிச்சிருக்குமோன்னுதான் தோணும்.
அப்பதான் நொய்யனுக்கே வெஷயம் புரியுது.
'ஏல ஆம்பளையால நீ. பொம்பளை புள்ளைய பாத்ததும் இப்படி ஒதறல் எடுக்கு ஆக்கங் கெட்டவனே... மூஞ்சியில வக்கு'ன்னான்.
'என்னன்னே தெரியலைல அந்தப் புள்ளைய பாத்தா மட்டும் எனக்கு இப்படியாவுதுல'
இதுக்குப் பெறவுதான் வெஷயம் ஊருக்கு தெரிஞ்சு, அந்த புள்ள வீட்லயும் கண்டும் காணாமயும் வுட்டுட்டாவோ. இப்ப மூதியோ ரெண்டும் அங்க இங்க நின்னு யாருக்கும் தெரியாம பேசிக்கிடும்.
நொய்யனுக்கு இந்த காதலு கீதலு எதுவும் வந்ததில்லை.
முத்தாரம்மன் கோயில் கொடைக்கு கெரகாட்டம் ஆட வந்த தென்காசி காரிய பாத்துதான் ஒரு தடவை கெறங்கி இருக்காம்.
'ஏல அம்சமா இருக்கால. கெட்டுனா இவளை போல பிள்ளையதாம்டா கெட்டணும்'ன்னான்.
அவ அன்னைக்கு ஆட்டத்தோட போயிட்டா. பெறவு அவனுக்கு காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்லை. அவன் உண்டு மாடு மேய்க்கது உண்டுன்னு நிம்மதியா இருக்காம்.
அப்பத்தா டீக்கடையில கொஞ்ச வம்பளத்துட்டு, கெளம்புவானுவோ. வீட்டுக்கு போயி கொஞ்சம் நீத்தண்ணியோட கஞ்சிய குடிப்பானுவோ. வீட்ல இருக்குத ஆளு, தூக்கு சட்டியில பழைய சோறை போட்டு வச்சிருப்பாவோ. அந்தானி, தொழுவுக்கு போயி மாட்டை அவுத்துவிட்டு,
க்கியே...ன்னு ஒரு சத்தம். கிளம்பிரும் மாடுவோ.
யாரு யாரு வீட்டு மாட்டையெல்லாம் கூட சேத்துக்கிடணுமோ அந்தந்த மாடுவோ மந்தைக்கிட்ட வந்துரும். கீழ தெருவுலயிருந்தும் மேல தெருவுல இருந்தும் மாடுகளோட மேய்க்கிதவனுவோ வருவானுமோ. கீழ தெருவுல சுப்பையா கோனார் வீட்ல மட்டும்தான் அம்பது செம்மறி குட்டி இருக்கு. அதை மேய்க்கதுக்கு அவரு மவன் பரம்சம் வருவான்.
மந்தைல சின்னான் ஒரு பெட்டிக்கடை போட்டிருந்தான். மாட்டையெல்லாம் மந்தையில விட்டுட்டு இந்தக் கடையில உக்காந்துகிடுவானுவோ. ஊர்க்கதை, ஊர்வம்பு, இல்லாதது பொல்லாததுன்னு கதை நடக்கும். ஆளாளுக்கு கதையடிப்பானுவோ.
எல்லாரும் வந்த பெறவு, நொய்யன்தான் கெளம்பலாம்னு சொல்லணும். அவனுக்கு மட்டும்தான் உத்தரவு சொல்ல அதிகாரம். அவன் எப்ப சொல்லுதானோ அப்பதான் கெளம்பணும்.
கதை நடந்துக்கிட்டிருக்கும்போதே , 'எல்லாரும் வந்தாச்சாப்பாம்'பான் நொய்யன். எல்லாரும் ஒரு பார்வை பாத்துக்கிடுவாவோ. வந்தாச்சுன்னா கெளம்பல்தான். மாடுகளை ஒண்ணா சின்ன வாய்க்கால் வழியா உடுவானுவோ. தண்ணிக்குள்ள முங்கி கரையில ஏறும். இரண்டு கரையிலயும் தென்னம்பிள்ளைங்க. கீழ வயக்காடு. அதுல இருக்குத பச்சைய பாத்துட்டுவோன்னா, கள்ளப்பய மாடுவோ மாட்டுக்காரனை விட்டுட்டு தொப்புன்னு உள்ள குதிச்சு, வயக்காடை உண்டு இல்லைன்னு பண்ணிரும். அதனால அதை கவனிக்கது சூச்சமாடன் வேலை.
இன்றைய அரை மணி நேரம் முடிந்தது. நாளை முடிக்கிறேன்.
Thursday, September 20, 2007
நொய்யன்... கேரக்டர் 1
சூரியன் வருதோ இல்லையோ, காலையில ஆறுமணினா டாம்னு சொல்லமாடன் கோயிலுக்கு வந்துருவான் நொய்யன். கன்னம் வரை கொடுவா இழுவி இருக்கும். தலை முடியெல்லாம் கன்னாபின்னான்னு சிதைஞ்சு போயி ஓ ன்னு நிக்கும். இடுப்பு சாரத்தை கரண்டை காலுக்கு மேல தூக்கி கட்டிக்கிட்டு வந்துருவான் கோயிலுக்கு. அதை சுத்தி மண்ணு சொவரு. கீழ படி மாதிரி பெரிய கருங்கல்லு. கல்லுக்கு கீழ பாம்பு, பல்லியோன்னு தூங்கிட்டு கெடக்கும். இவனுக்கு அதை பத்திலாம் கவலை இல்லை. மொத ஆளா போயி, கோயில் கல்லுல குத்த வச்சு உக்காந்துகிட்டு, ஆவ்வ்வ்...னு கொட்டாவி விடுவான்.
கொட்டாவி விடதுக்கா இந்த மூதி காலையிலேயே இங்க வாராம்?ன்னு கேக்காதியோ. ஒரு பீடிய எடுத்து பத்தவச்சுட்டு குப்பு குப்புனு பொகைய விடுவான்.
காலையிலேயே வயலுக்கு தண்ணிபாய்ச்ச, உழன்னு போறவோ போய்ட்டு இருப்பாவோ. யாராவது இவனை பாத்தாவோனா, 'ஏல என்னா.. கோயில்லயே தூங்கிட்டியால'ம்பாவோ. இவன் கல்லுளி மங்கம் மாதிரி, 'ம்ம்ம்...'னு ஒரு சத்தத்தை கொடுப்பாம்.
'என்ன... ம்ங்க...இங்ஙகன உக்காந்து பீடியை குடிக்கவால காலையிலயே வந்து தொலைக்கே' ம்பாவோ.
'ஆமா, தெனமும் கனவுல சொல்லமாடன் வந்து இங்க குத்த வச்சு பீடி குடிச்சா நல்லதுன்னு சொன்னாரு. அதான் உக்காந்திருக்கேன். போவியா...கேள்வி கேக்காம் பாரு'ம்பான்.
கேட்டவன், ஏ அர்தலிக்கு கோவத்தை பாரேன்"ன்னுட்டு போயிருவாவோ. செத்த நேரம் பீடியை சுண்ட இழுத்துட்டு இருக்கவன், கோயிலுக்கு கீழ்ப் பக்கம் இருக்கத வீட்டை பாப்பாம். அங்க தலை தெரியும்.
'யோய்"னு ஒரு சத்தம்.
'ஆங்... வாரேன் வாரேம்'பான் சூச்சமாடன்.
செத்த நேரத்துல வாயில வேப்பங்குச்சியை வச்சுக்கிட்டு வந்து சேருவான். ரெண்டு பேரும் ஒருத்தரு மொகத்தை ஒருத்தர் பாத்துட்டு அங்ஙனயே உக்காருவாவோ. சேக்காளியோ.
'ஏல இன்னைக்கு மாட்டுக்கு எங்க போவலாம்பாம்" சூச்சமாடன்.
'எங்க போவ சொல்லுத?'
'பாப்பாங்கொளத்து பாதையில மாட்டை பாத்திருவோமா?'
'அங்க ஒரு எழவும் இல்லய... வயல்ல உழுந்து போட்டுருக்கானுவோ. போய் வாயை வச்சுட்டுனா வம்பு"
'ஏன் ஆத்துக்குள்ள ஓரமா பத்திட்டு, மணல்ல உக்காந்துக்கிட வேண்டியதான்"
'ச்ச.. இந்த கப்பை கொம்பு எருமையையும், கொம்பு முறிஞ்சதையும் நம்ப முடியாது. செத்த கண்ணை மூடுனா கூட, எவன் வயல்லயாவது விழுந்து வம்பை இழுத்துட்டு வந்துருது. முந்தா நாளு வெவரம் தெரியும்லா'
'மாடுன்னா வயல்ல விழத்தாம்டே செய்யும். அதுக்கு வீட்லயா கெட்டிப் போட்டு வளர்க்க முடியும்?'
'பேசுததுக்கு நல்லாத்தாம்ல இருக்கு. நல்லகண்ணு வயல்ல லேசா வாயை வச்சுட்டு மாடு. மீசையை திருக்கிட்டு வந்துட்டாம். இனும வயல்ல மாடு விழுந்ததுன்னா வீட்டுல கெட்டிருவேன். வருத்தப்படாத'ன்னான். அவங்கிட்ட என்ன சொல்ல முடியுங்க'
'ஆமா, அது சொல்லத்தாம் செய்வாவோ. அதுலாம் பேச்சுக்குதாம்ல. அந்தானி கெட்டிப்போட்டுருவானோ வீட்ல. நாங்கலாம் உட்ருவமோல'.
'ஆங்...கிழிச்ச. ஆறுமாசத்துக்கு முன்னால நாத்துல வாயை வச்சுட்டுனு கன்னுகுட்டிய கெட்டிப்போட்டுட்டான் வயல்லயே. யாரு வந்தா? மயிரை பாரு சொக்கான்னு போயிட்டியோ. நாம்லா கால்ல கையில விழுந்து கொண்டாந்தேன்'
'ஏல அன்னைக்கு நெலமை வேற'
'என்ன வேற'
'அதை விடுல'
'இப்டியே சொல்லு'
சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேல வருவான். ரெண்டு பேரும் அப்பத்தா டீக்கடைக்கு கெளம்புவாவோ.
கோயிலைத்தாண்டி, கருவமுள்ளுக்காடு. பக்கத்துல ஒத்தையடி பாதை. சடங்கான பிள்ளைலுவோ இடுப்புல கொடத்தை வச்சுக்கிட்டு பெரியவாய்க்காலுக்கு தண்ணி எடுக்கப் போவும். இதுல பிள்ளைவோலுக்கு இருக்குத போட்டி இருக்கே சொல்லி மாளாது. ஆமா, ரெட்டை கொடம் போட்டு, பத்து நடை தண்ணி எடுத்தாதான் அவ பெரியாளு. சில பிள்ளைலால அது முடியாது. பத்து நடை தண்ணி ஏம்னு கேளுங்க. எல்லாரு வீட்லயும் ஆடு மாடு இருக்கு. மாட்டுவோலுக்கு தண்ணி வைக்க பெரிய தொட்டி. அதை நிறைக்கணும். காலையில தொழுவம் கழுவ, எவ்வளவு தண்ணி எடுத்தாலும் காணாது.
ரெண்டு பேரும் பொம்பளை பிள்ளைலுவோ தண்ணி எடுத்துட்டு போறதையே பாத்துக்கிட்டு நடப்பானுவோ. பஜனை மடம் வரும். மடத்தை தாண்டுனதும் பொன்னன் நிப்பான். நிக்கலைன்னா, அங்ஙனதான் அவன் வீடு. சத்தம் கொடுப்பானுவோ.வருவாம். மாடுமேய்க்கத கூட்டாளிதான். சேந்து போவானுவோ. இவனுவ போய் சேர்ந்ததும், மேல தெருக்காரனுவோ வருவானுவோ. அவனுவளும் மேய்க்கிறவனுவதான்.
அப்பத்தா இவனுவ வந்ததை பாத்ததும் டீயை போட்டுட்டு, 'ஏல சூச்ச மாடா, அஞ்சு லிட்டரு பால் வாங்கியிருக்கேன் உன் வீட்ல. ஏம்ல இவ்ளவு தண்ணியா இருக்கு?'னு ஆரம்பிப்பாம்.
சும்மா எடக்குக்குத்தான். இவனுக்கு சுள்ளுனு கோவம் வரும்.
ஒண்ணும் பேசாம இருப்பாம். மேலத்தெருக்காரனுவோ இதை வச்சு அவங்கிட்ட கிண்டலை ஆரம்பிப்பானுவோ. அவனுக்கு வேசடையா இருக்கும். அவனுவ கூட நொய்யனும் சேந்துக்கிடுவான். போட்டு பாடா படுத்துவானுவோ. இருந்து இருந்து பாப்பான். முடியாது. அந்தானி, துண்டை எடுத்து தோள்ல போட்டுட்டு,'போங்கலை, நான் தெப்பக்குளத்துக்குப் போயிட்டு வீட்டுக்குப் போறம்'னு சொல்லிட்டு நடைய கட்டிருவான்.
அவன் போனதும் கிண்டலு நிக்காது.
மேய்க்க போவும்போது, அவன் பண்ணுன கூத்தெல்லாம் சொல்லி சிரிப்பானுவோ.
(நாளை முடிப்பேன்).
கொட்டாவி விடதுக்கா இந்த மூதி காலையிலேயே இங்க வாராம்?ன்னு கேக்காதியோ. ஒரு பீடிய எடுத்து பத்தவச்சுட்டு குப்பு குப்புனு பொகைய விடுவான்.
காலையிலேயே வயலுக்கு தண்ணிபாய்ச்ச, உழன்னு போறவோ போய்ட்டு இருப்பாவோ. யாராவது இவனை பாத்தாவோனா, 'ஏல என்னா.. கோயில்லயே தூங்கிட்டியால'ம்பாவோ. இவன் கல்லுளி மங்கம் மாதிரி, 'ம்ம்ம்...'னு ஒரு சத்தத்தை கொடுப்பாம்.
'என்ன... ம்ங்க...இங்ஙகன உக்காந்து பீடியை குடிக்கவால காலையிலயே வந்து தொலைக்கே' ம்பாவோ.
'ஆமா, தெனமும் கனவுல சொல்லமாடன் வந்து இங்க குத்த வச்சு பீடி குடிச்சா நல்லதுன்னு சொன்னாரு. அதான் உக்காந்திருக்கேன். போவியா...கேள்வி கேக்காம் பாரு'ம்பான்.
கேட்டவன், ஏ அர்தலிக்கு கோவத்தை பாரேன்"ன்னுட்டு போயிருவாவோ. செத்த நேரம் பீடியை சுண்ட இழுத்துட்டு இருக்கவன், கோயிலுக்கு கீழ்ப் பக்கம் இருக்கத வீட்டை பாப்பாம். அங்க தலை தெரியும்.
'யோய்"னு ஒரு சத்தம்.
'ஆங்... வாரேன் வாரேம்'பான் சூச்சமாடன்.
செத்த நேரத்துல வாயில வேப்பங்குச்சியை வச்சுக்கிட்டு வந்து சேருவான். ரெண்டு பேரும் ஒருத்தரு மொகத்தை ஒருத்தர் பாத்துட்டு அங்ஙனயே உக்காருவாவோ. சேக்காளியோ.
'ஏல இன்னைக்கு மாட்டுக்கு எங்க போவலாம்பாம்" சூச்சமாடன்.
'எங்க போவ சொல்லுத?'
'பாப்பாங்கொளத்து பாதையில மாட்டை பாத்திருவோமா?'
'அங்க ஒரு எழவும் இல்லய... வயல்ல உழுந்து போட்டுருக்கானுவோ. போய் வாயை வச்சுட்டுனா வம்பு"
'ஏன் ஆத்துக்குள்ள ஓரமா பத்திட்டு, மணல்ல உக்காந்துக்கிட வேண்டியதான்"
'ச்ச.. இந்த கப்பை கொம்பு எருமையையும், கொம்பு முறிஞ்சதையும் நம்ப முடியாது. செத்த கண்ணை மூடுனா கூட, எவன் வயல்லயாவது விழுந்து வம்பை இழுத்துட்டு வந்துருது. முந்தா நாளு வெவரம் தெரியும்லா'
'மாடுன்னா வயல்ல விழத்தாம்டே செய்யும். அதுக்கு வீட்லயா கெட்டிப் போட்டு வளர்க்க முடியும்?'
'பேசுததுக்கு நல்லாத்தாம்ல இருக்கு. நல்லகண்ணு வயல்ல லேசா வாயை வச்சுட்டு மாடு. மீசையை திருக்கிட்டு வந்துட்டாம். இனும வயல்ல மாடு விழுந்ததுன்னா வீட்டுல கெட்டிருவேன். வருத்தப்படாத'ன்னான். அவங்கிட்ட என்ன சொல்ல முடியுங்க'
'ஆமா, அது சொல்லத்தாம் செய்வாவோ. அதுலாம் பேச்சுக்குதாம்ல. அந்தானி கெட்டிப்போட்டுருவானோ வீட்ல. நாங்கலாம் உட்ருவமோல'.
'ஆங்...கிழிச்ச. ஆறுமாசத்துக்கு முன்னால நாத்துல வாயை வச்சுட்டுனு கன்னுகுட்டிய கெட்டிப்போட்டுட்டான் வயல்லயே. யாரு வந்தா? மயிரை பாரு சொக்கான்னு போயிட்டியோ. நாம்லா கால்ல கையில விழுந்து கொண்டாந்தேன்'
'ஏல அன்னைக்கு நெலமை வேற'
'என்ன வேற'
'அதை விடுல'
'இப்டியே சொல்லு'
சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேல வருவான். ரெண்டு பேரும் அப்பத்தா டீக்கடைக்கு கெளம்புவாவோ.
கோயிலைத்தாண்டி, கருவமுள்ளுக்காடு. பக்கத்துல ஒத்தையடி பாதை. சடங்கான பிள்ளைலுவோ இடுப்புல கொடத்தை வச்சுக்கிட்டு பெரியவாய்க்காலுக்கு தண்ணி எடுக்கப் போவும். இதுல பிள்ளைவோலுக்கு இருக்குத போட்டி இருக்கே சொல்லி மாளாது. ஆமா, ரெட்டை கொடம் போட்டு, பத்து நடை தண்ணி எடுத்தாதான் அவ பெரியாளு. சில பிள்ளைலால அது முடியாது. பத்து நடை தண்ணி ஏம்னு கேளுங்க. எல்லாரு வீட்லயும் ஆடு மாடு இருக்கு. மாட்டுவோலுக்கு தண்ணி வைக்க பெரிய தொட்டி. அதை நிறைக்கணும். காலையில தொழுவம் கழுவ, எவ்வளவு தண்ணி எடுத்தாலும் காணாது.
ரெண்டு பேரும் பொம்பளை பிள்ளைலுவோ தண்ணி எடுத்துட்டு போறதையே பாத்துக்கிட்டு நடப்பானுவோ. பஜனை மடம் வரும். மடத்தை தாண்டுனதும் பொன்னன் நிப்பான். நிக்கலைன்னா, அங்ஙனதான் அவன் வீடு. சத்தம் கொடுப்பானுவோ.வருவாம். மாடுமேய்க்கத கூட்டாளிதான். சேந்து போவானுவோ. இவனுவ போய் சேர்ந்ததும், மேல தெருக்காரனுவோ வருவானுவோ. அவனுவளும் மேய்க்கிறவனுவதான்.
அப்பத்தா இவனுவ வந்ததை பாத்ததும் டீயை போட்டுட்டு, 'ஏல சூச்ச மாடா, அஞ்சு லிட்டரு பால் வாங்கியிருக்கேன் உன் வீட்ல. ஏம்ல இவ்ளவு தண்ணியா இருக்கு?'னு ஆரம்பிப்பாம்.
சும்மா எடக்குக்குத்தான். இவனுக்கு சுள்ளுனு கோவம் வரும்.
ஒண்ணும் பேசாம இருப்பாம். மேலத்தெருக்காரனுவோ இதை வச்சு அவங்கிட்ட கிண்டலை ஆரம்பிப்பானுவோ. அவனுக்கு வேசடையா இருக்கும். அவனுவ கூட நொய்யனும் சேந்துக்கிடுவான். போட்டு பாடா படுத்துவானுவோ. இருந்து இருந்து பாப்பான். முடியாது. அந்தானி, துண்டை எடுத்து தோள்ல போட்டுட்டு,'போங்கலை, நான் தெப்பக்குளத்துக்குப் போயிட்டு வீட்டுக்குப் போறம்'னு சொல்லிட்டு நடைய கட்டிருவான்.
அவன் போனதும் கிண்டலு நிக்காது.
மேய்க்க போவும்போது, அவன் பண்ணுன கூத்தெல்லாம் சொல்லி சிரிப்பானுவோ.
(நாளை முடிப்பேன்).
Saturday, September 15, 2007
மாடு மேய்ப்பது ஈசியா?
'நீயெல்லாம் மாடுமேய்க்கத்தான் லாயக்கு' என்கிற இந்த வார்த்தை எல்லோருக்கும் சுலபமாக வந்துவிடுகிறது. ஒரு சின்ன ஆரஞ்சுமிட்டாய் மேட்டருக்கு கூட இதை சொல்வது வாடிக்கையாகி விட்டது. நான் 5 ம் வகுப்பு படிக்கும்போது, வகுப்பை கட் அடித்துவிட்டு கிணற்றில் குளித்ததற்காக, வகுப்பாசிரியர் கொடுத்த சாபம். 'நீயெல்லாம் மாடு மேய்க்கத்தாம்ல போற'. அவர் வாக்கு மெய்யானதில் கொஞ்சம் சந்தோஷம். கொஞ்சம் வருத்தம். மாடுமேய்த்துக்கொண்டே ஏழாம் வகுப்பு படித்த போது, 'நீ சயின்ஸ்ல பெரிய ஆளா வருவேடா' என்றார் அதே வாத்தியார். அறிவியலுக்கும் என் அறிவுக்கும் வந்த கத்திக்குத்தில் இந்த வாக்குப் பொய்த்துப் போனது. ஒரே வாய். ஒன்று நிஜமாகிறது. மற்றொன்று பொய்யாகிறது.
இந்த மேட்டர் அதை பற்றியல்ல. மாடு மேய்ப்பது அவ்வளவு ஈசியா என்பதை பற்றியது.
ஒரு மாட்டுக்கும் உங்களுக்குமான உறவு மேம்பட குறைந்தது மூன்று மாதம் தேவை. கம்ப்யூட்டர் பற்றி பெரிய அறிவில்லாத என்னை போன்றவர்களை அதுபற்றிய வேலையில் விடுவது போலத்தான் இதுவும். எந்த ஒரு வேலைக்கும் குறைந்த பட்சம் அதுபற்றிய அறிவு கட்டாயம் தேவை. மாடு மேய்ப்பதற்கு இது அதிகம் தேவை என்பதுதான் என் கருத்து. ஒரு மாடு உங்களோடு பழகினால்தான் அதை உங்கள் சொல்படி ஆட்டுவிக்க முடியும். கையில்தான் கம்பு இருக்கிறேதே என நீங்கள் வீராப்பாக விளாசினால் அந்த நிமிடம் மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அடுத்தடுத்து நடக்கும் மாடுகளின் விஷப் பரீட்சைகளில் நொந்து நூடுல்ஸாகிவிடுவீர்கள்.
நான்கைந்து மாடுகளை மேய்க்கும் போது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும். இதில் ஒரு மாட்டுக்கு குஷி வந்து துள்ளாட்டம் போட ஆரம்பித்தால் அதனதன் போக்கில் எல்லாமே குஷியாகி ஆளுக்கு ஒரு இடமாக பிய்க்கும். உங்கள் கையில் கம்பு இருந்தும் கூட அதை விரட்டுவதற்குள் உடல் எடை ஐந்து கிலோ குறைந்துவிடும். பிறகு எப்படி மாடு மேய்ப்பது. அதற்கும் பக்குவம் இருக்கிறது. முதல்முறையாக மாடுமேய்க்க போகிறவர்கள் குறைந்தபட்சம் இரண்டு மாதமாவது மாடு மேய்ப்பவர்களுடன் செல்ல வேண்டும். அவர்களோடு பழகி, மாடுகளோடு பழகி அதுவொரு பிராசஸ். இப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, மேய்ப்பர்கள் இருக்கும்போதே அவர்களை ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு, புதிதாக மேய்க்க வந்தவர்கள் அவற்றைப் பத்த வேண்டும். மேய்க்க விடவேண்டும்.
இதன் தொடர்ச்சியாக மாடுகளை எந்தப் பக்கம் அடிக்க வேண்டும். வாலை எப்படி திருக்க வேண்டும் என்கிற டெக்னிக்கான விஷயங்களும் இருக்கிறது. இதை தெரிந்துகொள்ள வேண்டும். மாடுகளுக்கு சுகம் கொடுக்கும் இந்த முறைகளைத் தெரிந்துகொண்டால்தான் ஒழுங்காக மாடுமேய்க்க முடியும். ஆதலால்...இனி யாராவது உங்களை, 'மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்று திட்டினால், அது சாதாரண வேலையல்ல என்பதை திருப்பிச் சொல்லுங்கள்.
இந்த மேட்டர் அதை பற்றியல்ல. மாடு மேய்ப்பது அவ்வளவு ஈசியா என்பதை பற்றியது.
ஒரு மாட்டுக்கும் உங்களுக்குமான உறவு மேம்பட குறைந்தது மூன்று மாதம் தேவை. கம்ப்யூட்டர் பற்றி பெரிய அறிவில்லாத என்னை போன்றவர்களை அதுபற்றிய வேலையில் விடுவது போலத்தான் இதுவும். எந்த ஒரு வேலைக்கும் குறைந்த பட்சம் அதுபற்றிய அறிவு கட்டாயம் தேவை. மாடு மேய்ப்பதற்கு இது அதிகம் தேவை என்பதுதான் என் கருத்து. ஒரு மாடு உங்களோடு பழகினால்தான் அதை உங்கள் சொல்படி ஆட்டுவிக்க முடியும். கையில்தான் கம்பு இருக்கிறேதே என நீங்கள் வீராப்பாக விளாசினால் அந்த நிமிடம் மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அடுத்தடுத்து நடக்கும் மாடுகளின் விஷப் பரீட்சைகளில் நொந்து நூடுல்ஸாகிவிடுவீர்கள்.
நான்கைந்து மாடுகளை மேய்க்கும் போது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும். இதில் ஒரு மாட்டுக்கு குஷி வந்து துள்ளாட்டம் போட ஆரம்பித்தால் அதனதன் போக்கில் எல்லாமே குஷியாகி ஆளுக்கு ஒரு இடமாக பிய்க்கும். உங்கள் கையில் கம்பு இருந்தும் கூட அதை விரட்டுவதற்குள் உடல் எடை ஐந்து கிலோ குறைந்துவிடும். பிறகு எப்படி மாடு மேய்ப்பது. அதற்கும் பக்குவம் இருக்கிறது. முதல்முறையாக மாடுமேய்க்க போகிறவர்கள் குறைந்தபட்சம் இரண்டு மாதமாவது மாடு மேய்ப்பவர்களுடன் செல்ல வேண்டும். அவர்களோடு பழகி, மாடுகளோடு பழகி அதுவொரு பிராசஸ். இப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, மேய்ப்பர்கள் இருக்கும்போதே அவர்களை ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு, புதிதாக மேய்க்க வந்தவர்கள் அவற்றைப் பத்த வேண்டும். மேய்க்க விடவேண்டும்.
இதன் தொடர்ச்சியாக மாடுகளை எந்தப் பக்கம் அடிக்க வேண்டும். வாலை எப்படி திருக்க வேண்டும் என்கிற டெக்னிக்கான விஷயங்களும் இருக்கிறது. இதை தெரிந்துகொள்ள வேண்டும். மாடுகளுக்கு சுகம் கொடுக்கும் இந்த முறைகளைத் தெரிந்துகொண்டால்தான் ஒழுங்காக மாடுமேய்க்க முடியும். ஆதலால்...இனி யாராவது உங்களை, 'மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்று திட்டினால், அது சாதாரண வேலையல்ல என்பதை திருப்பிச் சொல்லுங்கள்.
Thursday, September 13, 2007
எருமை புராணம்
கொஞ்சமல்ல...ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. கண்ணனின் புல்லாங்குழலை இரவல் வாங்கி, ராகமற்ற ராகத்தில் ஓர் இசையை கொடுத்தால் உங்கள் செவிகள் கேட்குமா? கேட்காதா?
கண்ணனின் புல்லாங்குழலை ஒரு காகம் இசைத்தால் கூட அதிலிருந்து வரும் ஒலி செவிக்கு இனிக்கிற இசையாகத்தான் இருக்கும் என்பவர்களையும் எனக்குத் தெரியும். இப்படியாக உணருகிற தருணத்தில் உங்கள் மேனி புல்லரித்திருக்கலாம்.
இல்லையென்றால், 'அட' என்கிற ஒரு புருவ உயர்த்தலையாவது காட்டி இருக்கலாம். நீங்கள் எப்படியோ? நான் ஏதேதோ உணர்ந்தேன்.
எருமை பற்றி 'எட்டேகால் லட்சணமே...'என்று ஒளவையார் பாடிப்போனப் பிறகு, நிலவு, வானம், காதல் பற்றி போதும் போதும் என்கிற அளவுக்கு எழுதி தீர்த்துவிட்டார்கள் கவிதை என்ற பெயரில். இன்னும் எழுதி'கொன்றி'ருக்கிறார்கள். அது அவரவர்களுக்கான (கொலை) உரிமை.
மயிலாப்பூரில் ஆழ்வார் பழைய புத்தகக் கடையில், 'என்னை படியுங்களேன்' என்று ஒவ்வொரு செவியாய் கேட்கும் புத்தங்களை மேய்ந்துகொண்டிருந்தேன். மேய்தல் ஆடுமாடுகளுக்கு மட்டுமல்ல. நமக்கும்தான். (இந்த பதிவு எழுத ஆரம்பித்த பிறகு எழுவதற்கு அடிமையாகி விட்டேன். தினமும் ஏதாவது எழுதிவிட வேண்டும் என்கிற ஆவலில் இப்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறேனாக்கும்) அப்போதுதான் அந்தப் புத்தகம் கண்ணுக்குள் குத்தி, நெஞ்சுக்குள் தைத்தது.
இதை பார்த்த பிறகுதான் நீங்கள் படித்த முதல் பாராவின் முதல் வரியை எழுதினேன்.
இதுதான் தலைப்பு: எருமையின் மருத்துவ பண்பு
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை வெறும் 15 ரூபாய்.
முதல் பக்கத்தில்
இறை நாமம்
நாலுகால் நாலுவேதம் நயனவும் இரவி திங்கள்
ஓதுவார் நமசிவாயம் உடம்பெலாம் லிங்கமாகும்
ஆலமாஞ் செவியும் கொம்பும் அரசனுட ரூபமாகும்
சீலமா மனிதனின் சாணி சிவமெனும் செப்பலாமே!
இதுக்குப் பிறகு புரட்டிக்கொண்டே சென்றால் உள்ளே எல்லாம் எருமை புராணம்தான். அதன் தோல், கொம்பு, எருமை பால், வெண்ணெய் எல்லாம் என்னென்ன நன்மை தீமைகள் தருமென்பதை சிறு சிறு குறிப்புகளால் விளக்கம்.
ஓர் உதாரணம்
எருமையின் பாலினை உபயோக மாக்கிடில்
வரும் மெய்யாம் புத்திக் கூர்மை குறைந்திடும்
அருமையாம் மருந்தானதின் வீறு போம்
வருமே வாய்வும் வாதத் திமிருமே....
அதாவது, எருமைப்பாலை தினமும் குடித்தால் புத்திக்கூர்மை குறையுமாம். சாப்பிடும் மருந்தின் வேகம் குறையுமாம். வாய்வும், வாதமும், திமிரும் எழுமாம்.
இப்படி கவிதைகளால் எழுதி அதற்கு விளக்கமும்.
கண்ணனின் புல்லாங்குழலை ஒரு காகம் இசைத்தால் கூட அதிலிருந்து வரும் ஒலி செவிக்கு இனிக்கிற இசையாகத்தான் இருக்கும் என்பவர்களையும் எனக்குத் தெரியும். இப்படியாக உணருகிற தருணத்தில் உங்கள் மேனி புல்லரித்திருக்கலாம்.
இல்லையென்றால், 'அட' என்கிற ஒரு புருவ உயர்த்தலையாவது காட்டி இருக்கலாம். நீங்கள் எப்படியோ? நான் ஏதேதோ உணர்ந்தேன்.
எருமை பற்றி 'எட்டேகால் லட்சணமே...'என்று ஒளவையார் பாடிப்போனப் பிறகு, நிலவு, வானம், காதல் பற்றி போதும் போதும் என்கிற அளவுக்கு எழுதி தீர்த்துவிட்டார்கள் கவிதை என்ற பெயரில். இன்னும் எழுதி'கொன்றி'ருக்கிறார்கள். அது அவரவர்களுக்கான (கொலை) உரிமை.
மயிலாப்பூரில் ஆழ்வார் பழைய புத்தகக் கடையில், 'என்னை படியுங்களேன்' என்று ஒவ்வொரு செவியாய் கேட்கும் புத்தங்களை மேய்ந்துகொண்டிருந்தேன். மேய்தல் ஆடுமாடுகளுக்கு மட்டுமல்ல. நமக்கும்தான். (இந்த பதிவு எழுத ஆரம்பித்த பிறகு எழுவதற்கு அடிமையாகி விட்டேன். தினமும் ஏதாவது எழுதிவிட வேண்டும் என்கிற ஆவலில் இப்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறேனாக்கும்) அப்போதுதான் அந்தப் புத்தகம் கண்ணுக்குள் குத்தி, நெஞ்சுக்குள் தைத்தது.
இதை பார்த்த பிறகுதான் நீங்கள் படித்த முதல் பாராவின் முதல் வரியை எழுதினேன்.
இதுதான் தலைப்பு: எருமையின் மருத்துவ பண்பு
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை வெறும் 15 ரூபாய்.
முதல் பக்கத்தில்
இறை நாமம்
நாலுகால் நாலுவேதம் நயனவும் இரவி திங்கள்
ஓதுவார் நமசிவாயம் உடம்பெலாம் லிங்கமாகும்
ஆலமாஞ் செவியும் கொம்பும் அரசனுட ரூபமாகும்
சீலமா மனிதனின் சாணி சிவமெனும் செப்பலாமே!
இதுக்குப் பிறகு புரட்டிக்கொண்டே சென்றால் உள்ளே எல்லாம் எருமை புராணம்தான். அதன் தோல், கொம்பு, எருமை பால், வெண்ணெய் எல்லாம் என்னென்ன நன்மை தீமைகள் தருமென்பதை சிறு சிறு குறிப்புகளால் விளக்கம்.
ஓர் உதாரணம்
எருமையின் பாலினை உபயோக மாக்கிடில்
வரும் மெய்யாம் புத்திக் கூர்மை குறைந்திடும்
அருமையாம் மருந்தானதின் வீறு போம்
வருமே வாய்வும் வாதத் திமிருமே....
அதாவது, எருமைப்பாலை தினமும் குடித்தால் புத்திக்கூர்மை குறையுமாம். சாப்பிடும் மருந்தின் வேகம் குறையுமாம். வாய்வும், வாதமும், திமிரும் எழுமாம்.
இப்படி கவிதைகளால் எழுதி அதற்கு விளக்கமும்.
செவ்வாரம்
தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ சங்க இலக்கிய மேட்டர் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஆடு மேட்டர்தான். உங்களிடம் நான்கு ஆடுகள் இருக்கிறது. வேலைக்குச் செல்கிறீர்கள். வளர்க்க முடியவில்லை. அதை பராமரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஆசையாக வளர்த்ததை விற்க மனமில்லை. என்ன செய்யலாம்? அதற்காகத்தான் இருக்கிறது செவ்வாரம்.
இதற்கு இந்தப் பெயர் எப்படி வந்ததென்று தெரியவில்லை. ஆனால், இன்றும் கிராமங்களில் இந்த முறை இருக்கிறது.
அதாவது ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் மேய்ப்பரிடம் ஏற்கனவே நாற்பது ஐம்பது ஆடுகள் இருக்கும். அதோடு உங்கள் ஆடுகளையும் கொண்டு விட்டு விடுவது. அவரே அதன் 'நல்லது பொல்லது'களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காகக் கூலி இல்லை. ஆனால், நீங்கள் ஒரு ஆட்டு குட்டி கொடுத்தால் அதற்கு பிறக்கும் (குறைந்தது இரண்டு குட்டிகள் என்றால்) குட்டிகளில் ஒன்று ஆடு மேய்ப்பவருக்கு. மற்றொன்று ஆடு கொடுத்தவருக்கு. இப்படிப் பெருகும் ஆடுகளில் இவருக்குப் பாதி அவருக்குப் பாதி. இதற்கு செவ்வாரம் என்கிறார்கள்.
நண்பன் கோசல் இப்போது சென்னையில் இருக்கிறான். (அவன் தயவில்தான் நான் சென்னை வந்தேன் என்பது செப்பரேட் ஸ்டோரி). அவனுக்கும் ஆடுமாடு, கோழிகளுக்குமான ப்ரியம் வித்தியாசமானது. நாமெல்லாம் எதிரில் வரும் மனிதர்களை, ஏதோ விரோதியை போல முறைத்துவிட்டு (சென்னையில இப்படித்தான் இருக்காங்க) போய்க்கொண்டிருக்கிறோம். ஆனால், அவனது பார்வை எதிரில் வருபவர்களை விட்டுவிடும். பக்கத்தில், ஓரத்தில் செல்லும், மேயும் ஆடுமாடு, கோழிகள் என்றால் ஒரு நிமிடம் நின்று, 'பாவம்ல, அந்த சேவலுக்குக் கொண்டையில புண்' என்பான். அதுவரை சேவலும் நம் கண்ணுக்குத் தெரியாது. கொண்டையும் தெரியாது. ஆடுகள் சென்றால், 'இதுக்கு ஏன் இவ்வளவு கோழை வடியுது? ஏதாவது நோயா இருக்குமோ?' என்று பரிதாபப்படுவான். எதிரில், கையில் கட்டுடன் யாராவது சென்றால் கூட நலம் விசாரிக்காத பார்ட்டி, இம்மாதிரியான இனங்கள் மீது கொண்டுள்ள பிரியத்தை கண்டு வியந்திருக்கிறேன்.
ஒரு நாள் ஒரு சேவலின் காலில் அடிபட்டிருக்க, அதை கால்நடை மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் அதை விரட்டி பிடிக்க போய், பிறகு சேவலுக்கு சொந்தக்காரர் கோழி திருடன் என நினைத்து பஞ்சாயத்து வைத்தது காமெடி கதை.
இப்போது பிழைப்புக்காகச் சென்னையில் இருக்கிறான். அவனுக்கு ஆடுகள் மீது பிரியம். இப்போதும் எட்டு ஆடுகள் இருக்கிறது. அவனால் வளர்க்க முடியாததால் இந்த செவ்வாரம் முறையில் வளர்க்கிறான்.
ஒரு சின்ன உதாரணத்துக்குத்தான் நண்பனின் கதை.
உங்களுக்கும் அப்படியொரு ஆசை இருந்தா சொல்லுங்க.
வேறொரு விஷயத்தோடு சந்திப்போம்.
இதற்கு இந்தப் பெயர் எப்படி வந்ததென்று தெரியவில்லை. ஆனால், இன்றும் கிராமங்களில் இந்த முறை இருக்கிறது.
அதாவது ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் மேய்ப்பரிடம் ஏற்கனவே நாற்பது ஐம்பது ஆடுகள் இருக்கும். அதோடு உங்கள் ஆடுகளையும் கொண்டு விட்டு விடுவது. அவரே அதன் 'நல்லது பொல்லது'களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காகக் கூலி இல்லை. ஆனால், நீங்கள் ஒரு ஆட்டு குட்டி கொடுத்தால் அதற்கு பிறக்கும் (குறைந்தது இரண்டு குட்டிகள் என்றால்) குட்டிகளில் ஒன்று ஆடு மேய்ப்பவருக்கு. மற்றொன்று ஆடு கொடுத்தவருக்கு. இப்படிப் பெருகும் ஆடுகளில் இவருக்குப் பாதி அவருக்குப் பாதி. இதற்கு செவ்வாரம் என்கிறார்கள்.
நண்பன் கோசல் இப்போது சென்னையில் இருக்கிறான். (அவன் தயவில்தான் நான் சென்னை வந்தேன் என்பது செப்பரேட் ஸ்டோரி). அவனுக்கும் ஆடுமாடு, கோழிகளுக்குமான ப்ரியம் வித்தியாசமானது. நாமெல்லாம் எதிரில் வரும் மனிதர்களை, ஏதோ விரோதியை போல முறைத்துவிட்டு (சென்னையில இப்படித்தான் இருக்காங்க) போய்க்கொண்டிருக்கிறோம். ஆனால், அவனது பார்வை எதிரில் வருபவர்களை விட்டுவிடும். பக்கத்தில், ஓரத்தில் செல்லும், மேயும் ஆடுமாடு, கோழிகள் என்றால் ஒரு நிமிடம் நின்று, 'பாவம்ல, அந்த சேவலுக்குக் கொண்டையில புண்' என்பான். அதுவரை சேவலும் நம் கண்ணுக்குத் தெரியாது. கொண்டையும் தெரியாது. ஆடுகள் சென்றால், 'இதுக்கு ஏன் இவ்வளவு கோழை வடியுது? ஏதாவது நோயா இருக்குமோ?' என்று பரிதாபப்படுவான். எதிரில், கையில் கட்டுடன் யாராவது சென்றால் கூட நலம் விசாரிக்காத பார்ட்டி, இம்மாதிரியான இனங்கள் மீது கொண்டுள்ள பிரியத்தை கண்டு வியந்திருக்கிறேன்.
ஒரு நாள் ஒரு சேவலின் காலில் அடிபட்டிருக்க, அதை கால்நடை மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் அதை விரட்டி பிடிக்க போய், பிறகு சேவலுக்கு சொந்தக்காரர் கோழி திருடன் என நினைத்து பஞ்சாயத்து வைத்தது காமெடி கதை.
இப்போது பிழைப்புக்காகச் சென்னையில் இருக்கிறான். அவனுக்கு ஆடுகள் மீது பிரியம். இப்போதும் எட்டு ஆடுகள் இருக்கிறது. அவனால் வளர்க்க முடியாததால் இந்த செவ்வாரம் முறையில் வளர்க்கிறான்.
ஒரு சின்ன உதாரணத்துக்குத்தான் நண்பனின் கதை.
உங்களுக்கும் அப்படியொரு ஆசை இருந்தா சொல்லுங்க.
வேறொரு விஷயத்தோடு சந்திப்போம்.
Subscribe to:
Posts (Atom)